இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் துரோகிகள் இருப்பார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதத்தின் அடிப்படையில் நாம் ஒருவருடைய குண நலன்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக, ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் மாறுபடும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் துரோகிகள் இருப்பார்களாம். இவர்கள் எவ்வளவுதான் ஒருவருக்கு நிறைய விஷயங்கள் செய்து கொடுத்தாலும் அந்த நபர்கள் இவர்களுக்கு இறுதியில் துரோகத்தை மட்டுமே பரிசாக அளிப்பார்களாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.

தேதிகள்: 2, 11, 20, 29:(கூட்டு எண் - 2) :
இந்த தேதியில் பிறந்தவர்களை ஆளக்கூடிய கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். இவர்கள் இயல்பாகவே மிகவும் மென்மையான குணமும் அதிக அளவில் தேவை இல்லாத விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும்.
இருப்பார்கள் இருப்பினும் இவர்களுக்கு கற்பனை திறன் அதிகம். அதை போல் இவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஒரு குறை இவர்கள் ஒருவரை எளிதில் நம்பி விடுவார்கள். அதை போல் யாராவது இவர்களிடத்தில் கஷ்டம் என்று சொன்னால் உண்மையில் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை பற்றி யோசிக்காமல் இறங்கி அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இந்த ஆலோசிக்க கூடிய தன்மை இல்லாத காரணத்தினால் இந்த நபர்களுக்கு அதிக அளவில் துரோகம் நடக்கிறது.

தேதிகள்: 7, 16, 25 (கூட்டு எண் - 7) :
இந்த தேதியில் பிறந்தவர்களை ஆளக்கூடிய கிரகமாக கேது பகவான் இருக்கிறார். இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் ஆன்மீக சிந்தனையும் தனிமை உணர்வும் இருக்கும். இவர்கள் எப்பொழுதும் தன்னுடைய சொந்த உலகத்தில் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால் இவர்கள் உடன் இருப்பவர்களை கவனிக்க தவறிவிடுகிறார்கள்.
சில நேரங்களில் காலம் கடந்த ஒருவருடைய சுய உருவம் தெரிவதால் இவர்கள் துன்பப்படுவதற்கு ஆளாக நேருகிறது. அதிலும் குறிப்பாக கூட்டுத் தொழிலில் இவர்கள் மிகவும் கவனமாக இல்லை என்றால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |