<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-19T07:57:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நீக்கும் முருகப்பெருமானின் கந்தர் அநுபூதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/kandar-anubhoothi-to-overcome-financial-struggles-1789803517"></link>
            <id>https://ibcbakthi.com/article/kandar-anubhoothi-to-overcome-financial-struggles-1789803517</id>
            <summary type="text">அருணகிரிநாதர் அருளிய இந்த கந்தர் அனுபூதி நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துயரங்களையும் போக்கக்க்கூடியதாக இருக்கிறது. அதிலும், கடுமையான பொருளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அருணகிரிநாதர் அருளிய இந்த கந்தர் அனுபூதி நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துயரங்களையும் போக்கக்க்கூடியதாக இருக்கிறது. அதிலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் வறுமையை நீக்குவதற்கு அவர் ஒரு பாடலை பாடியிருக்கிறார், அதை நாம் பாடுகின்ற பொழுது நிச்சயம் அந்த வறுமை நீங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bf49fad-a05c-47d3-9009-419abf0d5286/26-6aae3bff75a9e.webp' /></p><p></p><h3> கந்தர் அநுபூதி – பாடல் 19:
</h3><blockquote class="blockquote">“வடிவும் தனமும் மனமும் குணமும்,<br>
குடியும் குலமும் குடிபோ கியவா,<br>
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே,<br>
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.”
</blockquote><p>இந்த ஒரு பாடலில் அருணகிரிநாதர் வறுமையினுடைய கொடுமையை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இங்கு வறுமை என்பது வெறும் கையில் பணம் இல்லாத நிலை மட்டுமல்ல. </p><p>அது ஒருவருடைய தோற்றம், மனநிலை, நற்குணம் சமூக அந்தஸ்து மரியாதை வாழ்க்கையில் நிம்மதி என பல விஷயங்களை பாதிக்க கூடிய ஒரு துயரமான சூழ்நிலையை அவர் அனுபவத்தின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறார். </p><p>அதனால் தான் "மிடி' என்ற ஒரு பாவி வெளிப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 அதாவது, வறுமையை மிகப்பெரிய கொடிய சக்தியாக காட்டி அது மனிதனை எவ்வாறு பலவீனப்படுத்துகிறது என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae966a6c-7515-4c01-adc9-3fa0cf18f417/26-6aae3c00303d8.webp' /></p><p></p><p> அருணகிரிநாதர் நல்ல குடியிலும் குளத்திலும் பிறந்தவர். நல்ல குணங்களுடன் வாழக்கூடிய நிலை அவரை சூழ்ந்து இருந்தது. </p><p>ஆனால், வாழ்க்கையில் ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களும், ஆசைகளும் வழி தவறிய செயல்களும் அவரை வறுமையின் பிடியில் தள்ளியது.
 அதனை அவர் இந்த திருப்புகழ் பாடல்கள் மூலம் சொல்வதை நம்மால் உணர முடியும். </p><p>அது மட்டுமல்லாமல் அவர் கடந்த கால வாழ்க்கையை மறைத்து வைக்காமல் அதில் இருந்த அனுபவத்தை வைத்து ஆன்மீக பாடமாக மாற்றியவர். மேலும், இந்த பாடலை வறுமை நீக்குவதற்காக மட்டும் பாடாமல் எந்த ஒரு நிலை வந்தாலும் நான் மாற மாட்டேன் அந்த நிலையில் உன்னை நான் வழிபாடு செய்வதற்கு தவற மாட்டேன் என்கின்ற ஒரு மனநிலையை நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T07:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமாள் கோவிலில் கொடுக்கும் மந்திர விபூதியை பூசினால் தீராத நோய் தீருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/purttasi-vempathur-sundararaja-perumal-temple-1789798552"></link>
            <id>https://ibcbakthi.com/article/purttasi-vempathur-sundararaja-perumal-temple-1789798552</id>
            <summary type="text">&amp;nbsp;பெருமாள் என்றாலே அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தர்மத்தை நிலை நாட்டுபவர். அந்த வகையில், பக்தர்களை &quot;வா&quot; என அழைத்து அருளக்கூடிய சுந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெருமாள் என்றாலே அவர் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தர்மத்தை நிலை நாட்டுபவர். அந்த வகையில், பக்தர்களை "வா" என அழைத்து அருளக்கூடிய சுந்தரராஜ பெருமாளாக சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார்.
</p><p> இந்த கோயிலினுடைய விசேஷம் என்னவென்றால் இங்கு கொடுக்கக்கூடிய மந்திர விபூதியை பூசினால் தீராத வியாதிகளும் தீரும் என்பதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54aee90e-1612-4151-91f2-8efd0b0350c1/26-6aae289a42cc5.webp' /></p><p></p><p> கவி கால ருத்ரர் என்ற புலவரின் கனவில் தோன்றிய பெருமாள் அடி எடுத்துக் கொடுத்து அவருக்கு பாடுவதற்கு அருள் புரிந்திருக்கிறார்.
 இதன் அடிப்படையில் மன்னர் ஜடா வர்ம குலசேகரன் கோயிலை எழுப்பினார். பிறகு சுந்தரராஜப் பெருமாள் என சுவாமிக்கு திருநாமம் சூடப்பட்டது. </p><p>இங்கு பெருமாள் இடது கையால் பக்தர்களை "வா" என அழைத்து வலது கையால் அருள் புரிபவர் என பொருள்.
 அதாவது இடது கை விரல்களை வளைத்து பக்தர்களை அருகில் அழைத்து வலது கையால் வரம் தருபவராக இங்கு நமக்கு காட்சி கொடுக்கிறார். பிறகு மேலிரு கைகளில் சங்கு சக்கரம் இருக்கிறது. அவருடைய மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார். பூமி தேதி நீலாதேவி அருகில் இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77e25f41-7667-421e-992e-2e1fcb9106b9/26-6aae289b09bd3.webp' /></p><p></p><p>
</p><p> இந்த ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்யக்கூடியவர்களுக்கு வைகுண்ட தரிசனம் செய்த புண்ணியம் வந்து சேர்கிறது. அதனாலே, இந்த ஆலயத்திற்கு விண்ணகரம் என்று சொல்கின்றனர். இங்கு சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம் சுதர்சன மந்திரங்களை ஜெபிக்கின்றனர். </p><p>மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமை திரு கார்த்திகை மற்றும் வைகுண்ட ஏகாதசியில் மிக சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் நிச்சயம் இங்கு வந்து வழிபாடு செய்ய அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் உண்டாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T06:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் கிடைக்கும் 3 பலன்கள் பற்றி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-benefits-of-purattasi-saturday-vratham-1789792582"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-benefits-of-purattasi-saturday-vratham-1789792582</id>
            <summary type="text">சனிக்கிழமை என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பெருமாள் வழிபாடுதான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பெருமாளை வழிபடுவது நமக்கு பலவகையான பிரச்சனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிக்கிழமை என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பெருமாள் வழிபாடுதான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் பெருமாளை வழிபடுவது நமக்கு பலவகையான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும். </p><p>அந்த வகையில், புரட்டாசி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம்.


இந்த மாதத்தில் நாம் எந்த சுப காரியங்களும் செய்வதில்லை. பெருமாளை மட்டுமே நினைத்து விரதம் இருந்து நாம் வழிபாடு செய்கின்றோம்.</p><p> அந்த வகையில். இன்று 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் புரட்டாசி சனிக்கிழமை வருகிறது. இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கு கிடைக்கும் 3 பலன்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbd5103-073c-4a6a-aa1f-fa7ab6eab713/26-6aae114dabfe2.webp' /></p><p></p><p>
</p><h3>

1. செல்வ வளம்:
</h3><p> சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபாடு செய்கின்ற பொழுது குடும்பத்தில் வறுமை நீங்கி நல்ல பொருளாதாரமும் முன்னேற்றமும் கிடைக்கிறது. செல்வம் என்பது பணம் மட்டுமல்ல, உயர்ந்த செல்வம் என்பது நிம்மதியும் பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் நமக்கு பெருமாளின் அருளால் கிடைக்கிறது.
</p><h3>2. ஆயுள் மற்றும் ஆரோக்கியம்:
</h3><p> ஒருவர் மிகுந்த பக்தையுடன் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்களுடைய ஆயுள் நீடிப்பதாகவும் ஆரோக்கியம் நலம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9710b697-06d4-4935-afcd-76e665f225b2/26-6aae114e7b456.webp' /></p><p></p><p> </p><h3>
3. துன்பங்களிலிருந்து விடுதலை பெற: </h3><p>

சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்து தீபம் ஏற்றி மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் சிந்திக்கக்கூடிய சங்கடங்கள், எதிரிகள் தொல்லை போன்ற எல்லா பிரச்சனைகளிலும் இருந்து விடுதலை கிடைக்கிறது.</p><p>
அது மட்டும் இல்லாமல் சனிக்கிழமை பெருமாளின் வழிபாடு செய்வதால் நமக்கு சனி பகவானுடைய தோஷமும் நீங்குகிறது. சனிபகவானால் நமக்கு நடக்கக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறைத்து நல்ல காலம் பிறக்க செய்கிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T04:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (19-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-19-2026-saturday-1789734020"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-19-2026-saturday-1789734020</id>
            <summary type="text">மேஷம்:
 தொழில் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p> தொழில் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். சுப காரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.</p><h3> ரிஷபம்:</h3><p>
 இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரலாம். முக்கிய நபரை சந்திப்பீர்கள்.</p><h3> மிதுனம்:
</h3><p> வேலை ரீதியாக இன்று நீங்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும்.</p><p></p><p>
</p><h3> கடகம்:
</h3><p> தாய்வழி உறவுகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
</p><h3> சிம்மம்:
</h3><p> உடன்பிறந்தவர் வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நினைத்தது போல் நடக்கும். வியாபாரம் நல்ல லாபம் பெறும்.
</p><h3> கன்னி:
</h3><p> வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தை வழி உறவுகளால் சில மனக்கசப்புகள் வரலாம்.
</p><h3>துலாம்:
</h3><p> உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். உங்களைப் பற்றி புரிந்து கொள்ளக்கூடிய நாள். ஒரு முக்கியமான வேலை எந்த தடையும் இன்றி சரியாக முடிப்பீர்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு சில குழப்பங்களும் தடைகளும் வரலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.</p><p></p><h3>
 தனுசு:
</h3><p> குழந்தைகள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாத விமர்சனங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
</p><h3> மகரம்:
</h3><p> இன்று உயர் பதவியில் இருந்தவர்களுடைய நட்பு கிடைக்கும். அரசியல் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். வேலையில் நல்ல முன்னேற்றமும் ஆதாயமும் பெறுவீர்கள்.
</p><h3> கும்பம்:
</h3><p> வெளிவட்டாரங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். சினிமா துறையில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேறு மொழி பேசும் நபர்களை சந்திப்பீர்கள்.</p><h3>
 மீனம்:
</h3><p> இன்று வழக்கு விஷயமாக நீங்கள் ஒரு முக்கியமான நபரை சந்திக்க நேரலாம். வேலையில் மன அமைதியை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையால் சந்தித்த பிரச்சனை விலகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u><b> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</b> </u></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T03:45:18+00:00</updated>
        </entry>
    </feed>
