<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-20T11:52:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராமாயணம்: கணவன் வீழ்ந்ததும் மண்டோதரிக்கு நடந்த அதிசயம்.. என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-ravanan-wife-mandothari-is-important-1789903344"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-ravanan-wife-mandothari-is-important-1789903344</id>
            <summary type="text">கிருஷ்ண அவதாரங்களில் &quot;ஸ்ரீ ராம&quot; அவதாரம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில், ராவண வதம் முடிந்த பிறகு போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷ்ண அவதாரங்களில் "ஸ்ரீ ராம" அவதாரம் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. அந்த வகையில், ராவண வதம் முடிந்த பிறகு போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக அமர்ந்திருக்கிறார். </p><p>அப்போது அந்த இடத்தில் ஒரு பெண்ணினுடைய நிழல் தெரிகிறது. அந்த நிழலுக்கு சொந்தமான பெண் ஸ்ரீ ராமரின் உடைய திருப்பாதங்களைத் தொடர் முயற்சிப்பதை அவளுடைய நிழலின் வழியாக ஸ்ரீ ராமர் தெரிந்துக் கொள்கிறார். உடனடியாக அவர் தன்னுடைய காலை உள்ளே இழுத்துக் கொள்கிறார். </p><p>பிறகு ஸ்ரீ ராமர் அந்த பெண்ணை பார்த்து "யாரம்மா நீ" என்று கேட்கிறார். நான் ராவணனுடைய மனைவி மண்டோதரி என்கிறாள். பிறகு அவர் என்னுடைய கணவரை எவராலும் வெல்ல முடியாது என்று பெருமையில் இருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da3fc81-1aaa-44fe-97f2-dc53f5b244cc/26-6aafc1f1e8709.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், அவரையே ஒருவர் கொன்று விட்டார் என்றால் அந்த நபரிடம் உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன் என்கிறார் மண்டோதரி. மேலும், சத்திரிய குல தர்மத்தின் படி கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாகும். ஆனால் நீங்கள் வரவில்லை. </p><p>அதுவும் என்னை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதையும் கூட நீங்கள் விரும்பவில்லை. இவ்வளவு உயர்ந்த குணம் உங்களிடம் இருப்பதைக் கண்டு நான் வியக்கிறேன். நானும் என் கணவரிடம் ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதனே அல்ல. உலகத்தை காக்கக்கூடிய பரம்பொருள். </p><p>அவரே மகாவிஷ்ணு. அவர் தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகத்தையே தாங்கி நிற்கக் கூடியவர். ராமபிரான் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை. அவரிடம் பகையை ஒழித்து சீதையை விட்டு விடுங்கள் என்று நான் எவ்வளவோ மன்றாடினேன். ஆனால், என் கணவரும் கேட்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44eda2d2-fdf1-4e5c-b06a-cf6fb4d51a80/26-6aafc1f2aa117.webp' /></p><p>&nbsp;</p><p> </p><p>உங்களுடைய இன்றைய வெற்றிக்கு காரணம் என் கணவரிடம் இல்லாத நற்குணம் உங்களிடம் உள்ளது. அதுதான் உங்களுடைய ஏக பத்தினி விரத தன்மை. அதனால் தான் நீங்கள் ராவணனை வென்றீர்கள் என்றார். உடனடியாக ஸ்ரீ ராமபிரான் அவருடைய சுய வடிவான நாராயணாக விஸ்வரூபம் தரிசனம் கொடுக்கிறார். </p><p>ராமாயணத்தில் பாக்கியவதியாக திகழ்ந்துவள் மண்டோதரி ஆகிறாள். அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்றபோது மண்டோதரி ஒழுக்கமாக உடை அணிந்து இருந்ததை கண்டு இவள் சீதையாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம்படும் அளவிற்கு அவள் ஒழுக்கம் உள்ளவளாக இருந்திருக்கிறார். </p><p>கெட்டவனுக்கு வாக்கப்பட்டு இருந்தாலும் அவளுக்கு ஸ்ரீமன் நாராயணனுடைய தரிசனம் கிடைத்தது.</p><p>
 "ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்"&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T11:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-special-about-2026-purattasi-month-1789894135"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-special-about-2026-purattasi-month-1789894135</id>
            <summary type="text">புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த மாதத்தில் ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதம் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த மாதத்தில் ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடைகள் யாவும் நீங்கும். அவர்களுடைய பாவம் முற்றிலும் விலகி புண்ணியங்கள் வந்து சேரும். </p><p>புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உரிய விழாக்கள் மிகப்பெரிய அளவில் நடைபெறும். அதிலும், திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் ஆலயங்களில் வருடாந்திர திருவிழாக்களும் நடப்பது உண்டு. </p><p>திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக கொண்டுள்ள குடும்பங்கள் புரட்டாசி மாதம் மாவிளக்கேற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/124b0215-2e1e-4348-be26-812dbc4dceab/26-6aaf9df888113.webp' /></p><p></p><p>மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் தான் சனி பகவான் அவதரித்தார். அதனால் அவருடைய கெடு பலன் குறைய திருமாலை வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கொடுக்கும். </p><p>ஒரு சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி சென்று அவர்களுடைய நேர்த்திக்கடனையும் காணிக்கையும் செலுத்தி வருவார்கள்.</p><p> புரட்டாசி மாதத்தில் இருக்கக்கூடிய இன்னொரு முக்கியத்துவமான விஷயம். அது பித்ரு தேவதை வழிபாடு இறைவழிபாடு சக்தி வழிபாடு என எல்லா அம்சங்களையும் அடக்கி இருப்பதே ஆகும்.</p><p> புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட எதிரிகளும் விலகிச் செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23cb01e1-eb8c-4ff8-9589-4ac751c3c726/26-6aaf9df945c32.webp' /></p><p></p><p> </p><p>புரட்டாசி மாதத்தில் பிறந்த ஆன்மீக பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர்.</p><p> ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கக்கூடிய ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஸ்ரீ ரங்க நாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். </p><p>மேலும், புரட்டாசி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உரிய மாதம் அதனால் இந்த மாதத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்பது வாஸ்து குறிப்பு. </p><p>கல்வி தடை, திருமண தடை, நோய், பண பிரச்சனை போன்றவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது எல்லா பிரச்சனைகளையும் விடுதலை பெற்றுக் கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்பதி பெருமாள் பலருக்கும் குலதெய்வம்... அவருடைய குலதெய்வம் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-is-a-kuladeivam-for-tirupati-perumal-1789887091"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-is-a-kuladeivam-for-tirupati-perumal-1789887091</id>
            <summary type="text">பலர் குடும்பங்களுக்கு திருப்பதியில் வீற்றிருக்கக்கூடிய வேங்கடவன் குலதெய்வமாக இருக்கிறார். அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யார் தெரியுமா? அதைப்பற்றி பார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலர் குடும்பங்களுக்கு திருப்பதியில் வீற்றிருக்கக்கூடிய வேங்கடவன் குலதெய்வமாக இருக்கிறார். அந்த வேங்கடவனுக்கே குலதெய்வம் யார் தெரியுமா? அதைப்பற்றி பார்க்கலாம். திருப்பதியில் இருக்கக்கூடிய வெங்கடாசலபதிக்கு குலதெய்வம் ஸ்ரீ நரசிம்மராவார். </p><p>ஸ்ரீநிவாச கல்யாணத்திற்கான திருமண பத்திரிகையில் குலதெய்வம் என்ற காலத்தில் ஸ்ரீ நரசிம்மரை போடுமாறு ஸ்ரீநிவாசர் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da99b3e-3051-427e-99ed-3b17c6c4aa3a/26-6aaf8277863e6.webp' /></p><p></p><p> </p><p>அன்று தயாரிக்கப்பட்ட விருந்து முதலில் ஸ்ரீ நரசிம்மருக்கு நெய்வேத்தியம் செய்த பிறகு அனைவருக்கும் சாப்பிடுவதற்கு வழங்கப்படுகிறது. </p><p>திருமணம் முடிந்து ஸ்ரீனிவாசரும், லட்சுமி தேவியும் ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிபாடு செய்கின்றனர். இந்த விவரங்கள் எல்லாம் வெங்கடேச மஹாத்மியம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது.</p><blockquote class="blockquote"><p>
சத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்<br>
வ்யாப்தம்ச பூதேஷு அகிலேஷு சாத்மன<br>
அத்ருஷ்யதாத் அதியத்புத ரூபமுத்வஹன்<br>
ஸ்தம்பே சபாயாம் ந ம்ருகம் ந மானுஷம்</p></blockquote><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88ae8ee9-50df-4d07-8c55-6741b3198138/26-6aaf827841291.webp' /></p><p></p><p>ஸ்ரீமத் பாகவதத்தில் நரசிம்ம அவதாரத்தில் சொல்லப்பட்ட மிக மிக முக்கியமான ஸ்லோகமாகும். அதாவது நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையுடன் சொன்ன அந்த பக்தன் பிரகலாதனின் வாழ்க்கை காப்பாற்ற வேண்டி மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு உருவத்தில் நரசிம்மராக கம்பத்திலிருந்து தோன்றினார்.</p><p> ஆக, பெருமாள் என்றாலே பேரானந்தம். அவரை இந்த புரட்டாசி மாதத்தில் வழிபாடு செய்து மிகப் பெரிய அளவில் மாற்றங்களையும் அவருடைய அருள் ஆசியை பெறுவோம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T07:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் முதல் திருமணம் வரை பிரச்சனையை சந்திக்கும் தனுசு ராசியினர்.. காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-sagittarius-faced-challenges-love-to-marriage-1789884558"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-sagittarius-faced-challenges-love-to-marriage-1789884558</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை உண்டு. அந்த வகையில், ஒன்பதாவது ராசியான தனுசு ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனித்துவமான தன்மை உண்டு. அந்த வகையில், ஒன்பதாவது ராசியான தனுசு ராசியினர் குரு பகவானின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். இவர்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். தனுசு ராசியை பொறுத்த வரை இவர்கள் எப்பொழுதும் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்கள்.</p><p> அதேபோல், இவர்களை சுற்றியுள்ளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். யார் எவ்வாறு கஷ்டப்பட்டாலும் இவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. </p><p>இவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் சுயநலமாக எண்ணுவது உண்டு. இன்னும் சொல்லப்போனால் இந்த தனுசு ராசியில் பல நேரங்களில் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வது உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0c0b4b-e786-48ec-b4b3-5c323d290a76/26-6aaf788f8f412.webp' /></p><p></p><p> </p><p>அதிலும் திருமண காலகட்டங்களில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆதலால் இவர்கள் பொறுமையுடன் நல்ல புரிதலுடனும் வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்வது அவசியம். மேஷம் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்கள் நல்ல பொருத்தமாக இருக்கக்கூடியவர்கள்.&nbsp; &nbsp;ரிஷபம் மிதுனம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தனுசு ராசியினர் அவ்வளவாக பொருந்தாத ஒரு அமைப்பாக இருக்கிறார்கள். </p><p>இவர்கள் திருமண வாழ்க்கையில் செல்லும் பொழுது நிச்சியமாக குலதெய்வத்தினுடைய பரிபூரண அருளையும் முன்னோர்கள் கடைபிடித்த சம்பிரதாயங்களையும் தவறாமல் பின்பற்றுவது அவசியம். மேலும், தனுசு ராசியினர் அவர்களுடைய காதல் முதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த காணொளியில் நாம் பார்த்த தெரிந்து கொள்வோம்&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2rTm0CJoL8c?start=49" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:09:27+00:00</updated>
        </entry>
    </feed>
