<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-20T09:38:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த நபர்களை பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமே நெருங்க முடியாதாம்.. யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/no-black-magic-can-do-any-bad-to-this-person-1787212578"></link>
            <id>https://ibcbakthi.com/article/no-black-magic-can-do-any-bad-to-this-person-1787212578</id>
            <summary type="text">இந்த உலகத்தில் எவ்வாறு நல்ல விஷயம் என்று ஒன்று இருக்கிறதோ, அதை போல் தீய விஷயங்களும் நிறைந்து இருக்கிறது. அப்படியாக, கெட்ட நேரம் நம்மை சூழ்ந்து விட்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் எவ்வாறு நல்ல விஷயம் என்று ஒன்று இருக்கிறதோ, அதை போல் தீய விஷயங்களும் நிறைந்து இருக்கிறது. அப்படியாக, கெட்ட நேரம் நம்மை சூழ்ந்து விட்டால் பில்லி, சூனியம், வசியம் இவை எல்லாம் உண்மை என்று நம்ப தோன்றுவிடும். </p><p>இருப்பினும், அது உண்மையாக இருந்தாலும் உண்மையாக இல்லாவிடிலும் இந்த ஒரு சில விஷயங்களை செய்பவர்களை இது எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாதாம். அதை பற்றி பார்ப்போம். </p><p>

ஒருவர் குலதெய்வ வழிபாடு மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு, காமாட்சியம்மன் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு ஆகியவை மேற்கொள்கிறார் என்றால் அவரை மாந்திரீகம் கொண்டு எதுவும் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3aeb00-9622-4bce-9daf-7be7eb1a5d27/26-6a86b3238220c.webp' /></p><p></p><p> </p><p>மேலும், மாந்திரீகம் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பில்லி சூனியம்தான். ஒரு மனிதனை அவை குழப்பி சிந்தனை மற்றும் செயல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடும். பிறகு அந்த நபர் நாம் என்ன சொல்கின்றோமோ அதைத்தான் செய்வார். அதோடு ஒருவர் மனதை கட்டுப்படுத்தக்கூடிய கிரகமாக ஜோதிடத்தில் சந்திரன் இருக்கிறார்.</p><p> ஆக, ஒருவர் ஜாதகத்தில் சந்திர பகவான் பலம் இழந்து இருக்கின்ற நேரத்தில் அவருக்கு வசியம் போன்றவை எளிதாக ஒட்டிக் கொள்கிறது.
 
இருப்பினும் கிரகம் பலம் இழந்து காணப்பட்டாலும் ஒருவர் யோகா, தியானம், காயத்ரி மந்திரம் ஜெபிக்க கூடியவர்களாக இருக்கிறார் என்றால் கட்டாயம் அவரை எந்த தீய சக்திகளும் நெருங்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bacc84b-dd96-445a-8ef3-8a2167e40daa/26-6a86b32440748.webp' /></p><p> </p><p>அதோடு, ரத்த சொந்தம் இல்லாத இடங்களை தாண்டி மற்ற இடங்களில் சாப்பிடாதவர்களை இந்த பில்லி சூனியம் எதுவும் செய்வதில்லை. 

 ஒரு மனிதனை அழிப்பதற்கு செய்யக்கூடிய இந்த சூனியமானது அவர்களுடைய ஆடை அணிகலன், முடி, காலடி மண் கொண்டு செய்யப்படுகிறது.</p><p> அதோடு ஒருவர் செய்யவே விரும்பாத ஒரு செயலை செய்ய தூண்டுவதே ஏவல் எனப்படுகிறது. இந்த ஏவல் ஒருவருக்கு பூஜை செய்து உணவு பொருட்களை கொடுத்து அதனால் நிறைவேற்றப்படுகிறது.</p><p> ஆக, மொத்தத்தில் ஒரு மனிதனின் செயல் தங்களுக்கு விருப்பப்படி ஆட்டி வைப்பது இத்தகைய நிகழ்வாகும். 

இவ்வாறு கெட்ட நேரம் நம்மை சூழ்ந்த பொழுதிலும் நாம் இறைவழிபாடு மேற்கொண்டால் நிச்சயம் இவையெல்லாம் தவிடுபொடி ஆகிடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T07:56:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த உலகத்தில் காரணமே இல்லாமல் யாரும் இங்கு யாரையும் சந்திப்பதே இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/as-karma-why-we-meet-certain-people-in-life-1787204968"></link>
            <id>https://ibcbakthi.com/article/as-karma-why-we-meet-certain-people-in-life-1787204968</id>
            <summary type="text">இந்த உலகத்தில் நிறைய விஷயங்கள் வியக்கத்தக்கதாகத் தான் இருக்கும். ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நம்முடைய மனத் தேடுதலுக்கான விடை கட்டாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் நிறைய விஷயங்கள் வியக்கத்தக்கதாகத் தான் இருக்கும். ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நம்முடைய மனத் தேடுதலுக்கான விடை கட்டாயம் எங்கிருந்தாலும் அது நம்மை வந்து அடையும் அல்லது நம்மை அந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கும். </p><p>அப்படியாக, பலருக்கும் பல நேரங்களில் நான் மனதில் நினைத்தது அவ்வாறே நடந்து விட்டதே என்கின்ற ஒரு ஆச்சரியம் வருவது உண்டு. இந்த சின்ன இடத்தில் தான் இறைவன் நிறைந்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d30f152-cfbd-41d1-8584-2f851130f43c/26-6a86956a9cee3.webp' /></p><p>
</p><h3>

பல ஜென்ம தொடர்புகள்:
</h3><p>
 இந்த பிரபஞ்சம் பல்லாயிரம் ஆண்டு காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் எத்தனை முறை பிறந்து இறந்திருக்கின்றோம் என்று தெரியாது. அவ்வாறு நாம் பிறந்து இறந்து இருந்தால் இந்த பூமியில் தான் அவை நடந்து இருக்கக்கூடும். அந்த தொடர்ச்சியால் பல விஷயங்களை நான் முன்பே பார்த்தது போல் போன்ற அனுபவம் பெறுகின்றோம். </p><p>இதைத்தான் பல நேரங்களில் நாம் கர்ம வினை என்று சொல்கின்றோம். இதையே தான் நாம் பல நேரங்களில் நாம் உள்ளுணர்வு என்று சொல்கின்றோம். அப்படி இருக்க இந்த பூமியில் நடக்கும் எந்த சந்திப்பும் சாதாரணமாக நடப்பதே இல்லை. ஒவ்வொரு சந்திப்பிற்கு பின்னாலும் நம் கர்மவினைகளும், ஒரு பாடமும், ஒரு ஆறுதலும், பல தேடுதலுக்கான விடையும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a56d64d-dd97-4ac7-81fa-b28027aba400/26-6a86956b55ba1.webp' /></p><p></p><p>
</p><h3>
 
சந்திப்புகள் சாதாரணமாக நிகழ்வது அல்ல:
</h3><p>

இந்த உலகத்தில் நம்முடைய ஒவ்வொரு சந்திப்புகளும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு அவமானங்களும், ஒவ்வொரு வெற்றியும், ஒவ்வொரு தோல்விக்கு பின்னாலும் பல காரணங்கள் புதைந்து கிடக்கின்றது. அப்படியாக, சந்திப்புகள் எப்பொழுதும் சாதாரணமாக இருப்பதில்லை என்பதற்கான ஒரு உண்மை கதையை பார்க்கலாம்.
</p><p>

ஒரு ஊரில் ஒரு எழுத்தாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஜோதிடரும் கூட. ஆனால், நெருங்கியவருக்கு மட்டுமே கணிப்புகள் சொல்வது உண்டு. அப்படியாக, அந்த எழுத்தாளரை சந்திக்க ஒரு நபர் வருகிறார். </p><p>அவர் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். இரண்டரை வருடம் முன்பு இந்த எழுத்தாளர் அந்த&nbsp;தொழில் அதிபரை நெருங்கியவரின் அறிமுகத்தோடு ஒரு ஆலோசனைக்காக்க சந்தித்து இருக்கிறார்.</p><p>இப்படி இருக்க சுமார் இரண்டரை ஆண்டு கழிந்தது. இருவரும் மிகப்பெரிய அளவில்&nbsp;சந்திப்பதோ அல்லது பேசிக்கொண்டதோ இல்லை. ஆனால், ஒரு நாள் அந்த தொழிலதிபர் அந்த எழுத்தாளரின் ஊரை கடந்து செல்ல நேரும் பொழுது அவர் மனதிற்குள் இந்த எழுத்தாளரை சந்தித்துவிட்டு சென்றால் என்ன? என்பது போல் ஒரு எண்ணம் தோன்றி இருக்கிறது. </p><p>
அவர் முன்பு பலமுறை அந்த ஊரை கடந்து சென்று இருக்கிறார். ஆனால், ஏன்? அந்த நாள் மட்டும் அவருக்கு இந்த எழுத்தாளர் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது? இங்கு தான் அந்த தொழில் அதிபருக்கு பிரபஞ்சம் காட்டிய வழி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63abdb8e-1fd0-468e-80c2-532773f42326/26-6a86956c10d7b.webp' /></p><p> </p><p>
அங்கு நடந்த சந்திப்பு நிச்சயம் சாதாரணமானதல்ல. இப்படியாக சந்திப்புகளும் நிகழ்ந்து விட்டது. இருவரும் பல்வேறு விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்ற பொழுது எழுத்தாளர் சொல்கிறார் நானும் ஜாதகம் பார்ப்பது உண்டு என்று.</p><p> உடனே அந்த தொழில் அதிபரும் எனக்கும் ஜோதிடத்தின் மீது அதிக ஆர்வம் உண்டு. நான் வீட்டிற்கு சென்று என்னோட ஜாதகம் அனுப்புகின்றேன். கட்டாயம், நீங்கள் பார்த்த சொன்னால் வழிகாட்டுதலாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டு கிளம்பி விடுகிறார். </p><p>அந்த தொழில் அதிபரும் வீட்டிற்கு சென்று வாட்ஸப்பில் அவர் ஜாதகம் அனுப்ப, அதை பார்த்த பிறகு தான் எழுத்தாளர் உணர்கிறார் அன்று நடந்த சந்திப்பு நிச்சயம் சாதாரண சந்திப்பு இல்லை என்று.</p><p>

அந்த தொழில் அதிபருக்கு தெரியாது அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு ஒரு முக்கியமான கடினமான காலக்கட்டத்தில் இருக்கிறார்? இன்னும் சொல்லப்போனால் அவர் வாழ்க்கையில் மீண்டும் நிச்சயம் அப்படி ஒரு கடினமான ஒரு காலக்கட்டம் இனி அவர் சந்திக்க போவது இல்லை.&nbsp;இரண்டரை வருடம் முன்பாக சந்திப்புகள் நிகழ்ந்து இருந்தாலும் அதன் உண்மை காரணம் இப்பொழுதே வெளிப்பட தொடங்குகிறது என்று எழுத்தாளர் உணரந்துக்கொள்கிறார். 
</p><p></p><p> </p><p>
அப்பொழுது, அந்த எழுத்தாளர் முடிவு செய்தார் இவருக்கு தான் நம் துணை இப்பொழுது தேவை. அவர் கடினமான காலங்களில் அவருக்கு உடன் இருந்து வழிகாட்டி விட்டால் பிறகு அவர் வாழ்க்கையில் இனி பிரச்சனை வரப்போவது இல்லை எல்லாம் மாறிவிடும். </p><p>ஆக, அங்கு காலம் கொடுத்த கடமையால் ஒரு நட்பு உருவாகியது. அந்த நட்பு அவரின் பாரத்தை பகிர்ந்துக்கொள்ள நிச்சயம் கடவுளால் அனுப்பப்பட்டது.&nbsp; இன்று அந்த தொழில் அதிபர் கடின காலத்தை கடந்து மகிழ்ச்சியாக உள்ளார். </p><p>அந்த தொழில் அதிபர் இதுவரை வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்கள் சிக்கல்கள் கடந்து வந்திருக்கலாம். ஆனால், அன்றைய காலம் அந்த எழுத்தாளர் அவருடன் கடின காலங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்பது விதி.</p><p>ஆக, துன்பம் மற்றும் போராட்டம் கொடுக்கும் கடவுள் அதை கடந்து செல்ல நல்ல மனிதரையும் கொடுப்பார். அதைவிட முக்கியமாக அந்த எழுத்தாளரும் வாழ்க்கையின் சந்தித்த பல சூழ்ச்சி, துன்பம் காரணமாக அவரை அறிந்துக் கொள்ள ஜோதிடம் கற்றுக் கொள்ள தொடங்கியவர். </p><p>அவர் வாழ்க்கை துன்பத்தின் எல்லையில் இருந்த பொழுது உதவிய சில ஜோதிடரும் கற்றுக் கொடுத்த ஆசிரியருமே கண் முன் வந்து சென்றனர். கடின காலங்களில் நமக்கு ஒருவர் இருந்தார்கள், அதைபோல் இன்று நாம் இன்னொருவருக்கு.&nbsp;</p><p> அதோடு எழுத்தாளர் கடினமான காலத்தில் இருந்த பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இரவு பகல் பாராமல் அவருடன் இருந்து ஆறுதல் சொல்லியவர் பலர். ஆக, அவர் அதை ஓரு கடமையின் தொடர்ச்சியாகவும் காலத்தின் கணக்கையும் நன்கு உணர்ந்து அவருடன் பயணிக்க தொடங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16e9aad3-14da-4e3e-9832-54d9e488dbf9/26-6a86956cbe344.webp' /></p><p> </p><p>இது தான் காலத்தின் அழகு. நமக்கு வாழ்க்கையில் எப்பொழுது என்ன கொடுக்க வேண்டும்? எப்பொழுது யாரை சந்திக்க வேண்டும்? என்று காலமே முடிவு செய்கிறது. ஆதலால், நம் கடமை செய்வோம், மனதில் நல்லதை நினைப்போம். அதுவே நம்மை சரியான மனிதரின் சந்திப்பதை ஏற்படுத்திக் கொடுக்கும். </p><p>ஆக, பிரச்சனை நம் முன் வருகிறது என்றால் அதற்கான ஆறுதலும் பதில்களும் நம் பின்னாலே காலத்தால் அனுப்படும். எதற்கும் கலங்க வேண்டாம். இந்த உலகம் அதிசயமும் அற்புதமும் நிறைந்தது.&nbsp; நம்பிக்கையோடு பயணம் செய்தால் நிச்சயம் நாம் அதை உணரலாம்.</p><p>எல்லாம் கடந்து போகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T05:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ணர் உபதேசம்: வெற்றிகரமான வாழ்க்கை எப்பொழுது அமையும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/bagavad-gita-krishnas-teachings-for-a-better-life-1787200398"></link>
            <id>https://ibcbakthi.com/article/bagavad-gita-krishnas-teachings-for-a-better-life-1787200398</id>
            <summary type="text">கிருஷ்ண பகவான் ஒவ்வொரு மனிதனுடைய நண்பனாகவும் ஒவ்வொரு மனிதனுடைய வழிகாட்டுதலாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில். கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதை கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிருஷ்ண பகவான் ஒவ்வொரு மனிதனுடைய நண்பனாகவும் ஒவ்வொரு மனிதனுடைய வழிகாட்டுதலாகவும் இருந்து வருகிறார். அந்த வகையில். கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதை காலம் முழுவதும் ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு ஒரு துணையாக அமைகிறது.</p><p> மேலும், பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தேடுதலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கின்றோம். அதில் ஒரு சிலருக்கு அவர்கள் தேடியது கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் தேடியதற்கான விடையே இல்லாமல் போகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc11808c-749b-41e5-9fb9-fe3cf1e13be2/26-6a8683901d929.webp' /></p><p></p><p> </p><p>அப்படியாக, நாம் எப்படி வாழ்ந்தால் நம்முடைய தேடுதலுக்கான விடை கிடைக்கும்? நம்முடைய தேடுதல் எப்போது அர்த்தமுள்ளதாக மாறும் என்பதை பற்றி பார்ப்போம். அதாவது நோக்கம் இல்லாமல் ஒரு வேலையை செய்யும் பொழுது அந்த இடத்தில் நமக்கு சோர்வு உண்டாகிறது. </p><p>நாம் நோக்கத்துடன் செய்யக்கூடிய வேலை நமக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுக்கிறது. ஆதலால், நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அப்பொழுது தான் செய்கின்ற காரியம் உங்களுக்கு மன திருப்தியை கொடுக்கும்.</p><p> அதைப்போல், வெற்றி என்பது உடனடியாக வரக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் அல்ல. தெளிவான நல்ல நோக்கத்துடனும், திட்டம் மற்றும் தொடர் முயற்சியுடன் நாம் பற்றி கொள்ளக்கூடியதாகும். ஆக, நோக்கம் இருக்க வேண்டும். விடாமுயற்சி இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e02351-36a2-4b7e-a79d-47d8aacec31e/26-6a868390d0f1c.webp' /></p><p></p><p> </p><p>அப்பொழுதுதான் வாழ்க்கை அழகாகும். நோக்கமே இல்லாமல் வாழ்கின்ற பொழுது வாழ்க்கை அர்த்தமற்றதாகும். நோக்கம் இல்லாமல் வாழும் பொழுது நம்முடைய மனமும் சோர்வடைந்து விடும். மீண்டும் எழுந்து போராடுவதற்கான ஒரு ஆற்றல் பிறப்பதில்லை. </p><p>ஆக, தினமும் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வோம். இறை அருளால் வாழ்க்கையின் சரியான நோக்கத்தை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து வெற்றி பெற அவருடைய முழு அருளையும் பெறுவோம். </p><p>"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (20-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-august-20-2026-1787142832"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-august-20-2026-1787142832</id>
            <summary type="text">மேஷம்:
 எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
 எதிலும் அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.</p><h3> ரிஷபம்: </h3><p> விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவதற்கான சூழல் அமையும். தந்தை வழி உறவுகளால் இருந்து வந்த கசப்புகள் விலகும். ஆறுதலும் நட்பும் கிடைக்கும்.</p><h3> மிதுனம்: </h3><p>வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். வியாபாரம் தொடர்பாக நீங்கள் புத்திசாலித்தனத்தோடு செயல்படுவீர்கள். இடப்பிரச்சினை விலகும்.</p><h3> 
கடகம்: </h3><p>
இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். பெற்றோர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம்.</p><p></p><p> </p><h3>சிம்மம்: </h3><p>பொருளாதாரத்தில் மந்தமான நிலை உண்டாகலாம். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வேலையில் கூடுதல் பொறுப்பு தேடி வரும்.
</p><h3> கன்னி:
</h3><p> சிறு தூர பயணங்களால் மனதில் தெளிவு உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அமைதியான நாள்.
</p><h3> துலாம்:
</h3><p> முடிவிற்கு வராத காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். </p><h3>விருச்சிகம்:
</h3><p> நீண்ட நாள் எதிர்பார்த்த உதவிகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சார்ந்த முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். விற்பனை துறையில் இருப்பவர்களுக்கு பொறுமை அவசியம்.
</p><h3> தனுசு:</h3><p> சுபகாரிய தொடர்பான அலைச்சல் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். வெளியே உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.</p><p></p><p>
</p><h3> மகரம்:
</h3><p> நீண்ட நாட்கள் சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களை இன்று சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.
</p><h3> கும்பம்:
</h3><p> கற்பனை சார்ந்த சிந்தனைகள் உயரும். குழந்தைகளை பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் விலகும்.
</p><h3> மீனம்:
</h3><p> மனதளவில் இருந்து வந்து குழப்பங்கள் விலகும். நீண்ட நாட்கள் தள்ளிப்போன காரியம் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட பணிகள் நீங்கள் நினைத்தது போல் நடக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T04:05:21+00:00</updated>
        </entry>
    </feed>
