<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-24T17:48:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (25-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-rasi-palan-jan-25-2026-saturday-1784896540"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-rasi-palan-jan-25-2026-saturday-1784896540</id>
            <summary type="text">மேஷம்:
 இன்று எதிர்காலம் தொடர்பாக பயம் உண்டாகலாம். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் திடீர் வெளியூர் பயணம் செல...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p> இன்று எதிர்காலம் தொடர்பாக பயம் உண்டாகலாம். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர் திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் நாள்.
</p><h3> ரிஷபம்:
</h3><p>இன்று வேலை சார்ந்த முக்கிய பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். சுபகாரிய செலவுகளை சந்திப்பீர்கள். குழந்தைகளால் உங்களுடைய மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். </p><h3>
மிதுனம்:
</h3><p> வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். அனுபவங்கள் வழியாக நல்ல முடிவு எடுப்பீர்கள். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.</p><p></p><p>
</p><h3>கடகம்:
</h3><p>பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது அவசியம்.</p><h3>
சிம்மம்: </h3><p>
குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.
</p><h3>கன்னி:</h3><p>
மாணவர்கள் வீடுகளில் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட முயற்சிகள் உங்களு எடுக்கும் பொழுது பெரியவர்களின் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது.</p><h3>
துலாம்:</h3><p>
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய புகழ் மற்றும் செல்வாக்கு உயரும் நாள். முக்கிய காரியத்தை நீங்கள் தடை இன்றி முடிப்பீர்கள். </p><h3>
விருச்சிகம்:
</h3><p>குடும்பத்தில் உங்களின் மதிப்பு உயரும். பொன் பொருள் சேர்க்கையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளிவட்டாரம் விரிவடையும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். </p><h3>
தனுசு:</h3><p>
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் சந்திப்பீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களால் முக்கிய காரியம் முடிவடையும்.</p><p></p><p>
</p><h3>மகரம்:
</h3><p>இன்று புதிய நட்புகலின் அறிமுகம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான தனி அங்கீகாரம் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.
</p><h3>கும்பம்:
</h3><p>பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மனதில் உள்ள கவலைகளை நெருங்கிய நபரிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.
</p><h3>மீனம்;
</h3><p>சொந்தங்களால் உங்களுக்கு சில மனக்கசப்புகள் வரலாம். பிள்ளைகளை பற்றிய விஷயங்களை ரகசியம் காப்பது அவசியம். காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும் நாள்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி 18 மறந்தும் செய்யக்கூடாத 5 தவறுகள்.. என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-5-mistakes-we-shouldnt-do-on-aadi-18-1784896153"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-5-mistakes-we-shouldnt-do-on-aadi-18-1784896153</id>
            <summary type="text">&amp;nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி 18 மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாளாக ஆடி 18 இருக்கிறது அந்த வகையில் ஆடி பதினெட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி 18 மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாளாக ஆடி 18 இருக்கிறது அந்த வகையில் ஆடி பதினெட்டாம் தேதி அன்று நான் முக்கியமாக சில தவறுகள் செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது அதைப்பற்றி பார்ப்போம்.</p><p>1. ஆடி 18 அன்றைய நாளில் தேவை இல்லாத நீரை அளவிற்கு அதிகமாக செலவு செய்தல் கூடாது.
காரணம் அன்றைய தினம் முப்பெரும் தேவியர் நீரில் வாசம் செய்யும் நாள்.
</p><p>2.&nbsp; ஆடி பதினெட்டாம் தேதி அன்று நாம் தவறியும் கடன் வாங்குவது அல்லது பிறருக்கு கடன் கொடுப்பது கூடாது. ஆடி பதினெட்டு நாம் என்ன விஷயங்கள் செய்கின்றோமோ அதுதான் அந்த நாளில் பெருகும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb2cb87-2143-468b-80f2-dc100af468be/26-6a635a9b69c27.webp' /></p><p></p><p> </p><p>3. அதைப்போல், எந்த காரணத்தை கொண்டும் வீட்டை பூட்டி விட்டு மாலை நேரத்தில் எங்கும் செல்லக்கூடாது. ஆடி பதினெட்டாம் தேதி அன்று மகாலட்சுமி வீட்டிற்கு வருவதாக சொல்லப்படுகிறது. வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது அவசியம்.</p><p>4. ஆடி 18 ஆம் தேதி அன்று தாலி கயிறு மாற்றும் பொழுது அந்த தாலி கயிற்றை நம்முடைய கால்களில் படும் படி செய்தல் கூடாது, அதேபோல் குப்பையில் போடுவதும் கூடாது. இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
</p><p>5. மறந்தும் ஆடி 18 ஆம் தேதி அன்று அசைவம் உணவு சாப்பிடுவதும் சமைப்பதும் தவிர்க்க வேண்டும். இந்த நாள் நீர் வழிபாட்டிற்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் ஆன்மீக நாளாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவாமிக்கு சமர்ப்பித்த பூ கீழே விழுந்தால் சகுனம் சொல்வது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/is-a-fallen-offering-flower-is-a-divine-sign-1784895492"></link>
            <id>https://ibcbakthi.com/article/is-a-fallen-offering-flower-is-a-divine-sign-1784895492</id>
            <summary type="text">&amp;nbsp;நாம் பூஜையின் பொழுது சுவாமிக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது உண்டு. ஒவ்வொரு முறையும் நாம் சுவாமியை வழிபாடு செய்கின்ற பொழுது ஏதேனும் வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாம் பூஜையின் பொழுது சுவாமிக்கு பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்வது உண்டு. ஒவ்வொரு முறையும் நாம் சுவாமியை வழிபாடு செய்கின்ற பொழுது ஏதேனும் வேண்டுதல் வைப்பது உண்டு.</p><p> அப்பொழுது இறைவன் நம் வேண்டுதலுக்கு உடனடியாக சில அறிகுறிகள் கொண்டு சில நேரங்களில் பதில் சொல்வதை காணலாம். </p><p>அந்த வகையில் சுவாமிக்கு வைக்க கூடிய பூக்கள் கீழே விழுந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b62ce0c4-bf12-432c-9d2a-d38278ed2f0c/26-6a6358058f121.webp' /></p><p></p><p>
1. இப்பொழுது நாம் சாமி கும்பிடும் பொழுது சுவாமிக்கு வலது பக்கத்திலிருந்து பூ கீழே விழுந்தால் நாம் வேண்டிய காரியம் உடனடியாக நிறைவேறும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.</p><p>
2. அதுவே சுவாமிக்கு படைத்த பூ இடது புறத்தில் விழுந்தால் நாம் வேண்டிய காரியம் நிறைவேறும். ஆனால் கொஞ்சம் காலதாமதம் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p> 3. நாம் சுவாமிக்கு சமர்ப்பித்த பூ நேரடியாக கீழே விழுந்தால் நாம் எடுக்கக்கூடிய காரியங்களில் சிறிது கவனமும் அதிக முயற்சியும் தேவை என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் இருக்க வேண்டிய பணத்தை ஈர்க்கும் 6 முக்கிய வாஸ்து செடிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/vastu-plants-should-keep-at-home-for-wealthy-life-1784894323"></link>
            <id>https://ibcbakthi.com/article/vastu-plants-should-keep-at-home-for-wealthy-life-1784894323</id>
            <summary type="text">&amp;nbsp;நம்முடைய வீடுகளில் வைக்கக்கூடிய செடி கொடிகளும் நம்முடைய வாஸ்து மற்றும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் தருகிறது. அந்த வகையில் வீட்டில் இருக்க வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்முடைய வீடுகளில் வைக்கக்கூடிய செடி கொடிகளும் நம்முடைய வாஸ்து மற்றும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் தருகிறது. அந்த வகையில் வீட்டில் இருக்க வேண்டிய பணத்தை ஈர்க்கும் ஆறு முக்கிய செடிகள் பற்றி பார்ப்போம். </p><h3>
1.நெல்லிக்காய்: </h3><p>நெல்லிக்காயில் லட்சுமி கடாட்சம் அதிகம் நிறைந்து உள்ளது. இதை வீடுகளில் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைக்கிறது.</p><p></p><p>
</p><h3>2. சங்குப்பூ: </h3><p>சங்குப்பூ பெருமாளையும் மஹாலட்சுமி தேவியையும் குறிக்கிறது. இதனை வீடுகளில் வைக்கும் பொழுது பெருமாளின் பரிபூர்ண அருளால் நமக்கு தடை இல்லாத பணவரவு கிடைக்கிறது.
</p><h3>3. துளசி: </h3><p>வீடுகளில் தினமும் துளசி செடி வைத்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு மகாலக்ஷ்மியின் அருளும், நினைத்த காரியம் நிறைவேறுவதோடு நமக்கு பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2711d26c-80da-4e9b-99d8-53db7233154a/26-6a63537515fd0.webp' /></p><p></p><h3> 
4. கற்றாழை: </h3><p>இந்த செடியை வீடுகளில் வைக்கும் பொழுது கண் திருஷ்டி குறைத்து நமக்கு செல்வதை அதிகரிக்கிறது. </p><h3>
5. மணி பிளான்ட்: </h3><p>நமக்கு அட்டகாசமான செல்வவளத்தையும் கடன் சுமை குறைத்து நல்ல நேரம் வழங்குகிறது.</p><h3> 
6. மல்லிகை: </h3><p>இந்த செடி அமைதி மற்றும் நல்ல நறுமணத்தை குறிப்பதால். நமக்கு மன அமைதி கிடைப்பதோடு நிம்மதி கொடுக்கிறது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T11:58:58+00:00</updated>
        </entry>
    </feed>
