<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-03T18:58:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாங்கல்ய தோஷம் போக்கும் திருமங்கலக்குடி(அதிசய புருஷாமிருகமும் உண்டு)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thirumangalakudi-prananatheswarar-temple-1735119794"></link>
            <id>https://ibcbakthi.com/article/thirumangalakudi-prananatheswarar-temple-1735119794</id>
            <summary type="text">திருமங்கலக்குடி என்ற ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போகும் வழியில் திருப்பனந்தாளுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமங்கலக்குடி என்ற ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போகும் வழியில் திருப்பனந்தாளுக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது. </p><p>இவ் ஊரில் அம்பாளின் பெயரால் வழங்கும் கோவில் மங்கலேஸ்வரி பிராண நாகேஸ்வரர் கோவில் ஆகும். மங்களேஸ்வரி தன் வலது கையில் மங்கலநாணுடன் காட்சி தருகின்றாள். தேவாரத் திருத்தலங்கள் 275இல் காவிரி வட கரையில் இருக்கும் 38 வது திருத்தலம் ஆகும். </p><p>இக்கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல அம்மனின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு மங்களாம்பிகை அம்மனே வரப்பிரசாதியாக அருள்கின்றாள். அவள் கையில் இருக்கும் திருமாங்கல்ய கயிறு பெண்களின் மாங்கல்ய தோஷம் போக்க வல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a7d0fc-5417-432c-a550-673023e6ed98/24-676bd6ade9a4a.webp' /></p><h2>பஞ்ச மங்கல சேத்திரம் </h2><p>
மங்கலாம்பிகை எழுந்தருளியிருக்கும் இத்தலம் மங்கல திருத்தலம் ஆகும் . இங்கு ஐந்து மங்களகரமான விஷயங்கள் உண்டு. 1.மங்களேஸ்வரர் 2.மங்களேஸ்வரி 3. மங்கள விநாயகர் 4.மங்கள விமானம் 5. மங்கள தீர்த்தம் ஆகும். இதனால் இச்சேத்திரம் பஞ்சமங்கல சேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>மூலஸ்தானம்
</h2><p>திருமங்கலக்குடி பிராண நாதஸ்வரர் கோவிலின் மூலஸ்தானத்தில் காணப்படும் லிங்கம் சுயம்புலிங்கம் ஆகும். இதன் லிங்க பாணம் ஆவுடையை விட மிக உயரமாகக் காணப்படுகின்றது. வேறு தலங்களில் இவ்வாறான உயரமான லிங்க பானத்தை காண்பது அரிது. இங்கு அகத்தியர் சிவலிங்க பூஜை செய்தபோது லிங்கத்தின் உச்சியில் பூவை வைப்பதற்கு எட்டிக் குதித்து வைத்தார் என்று கூறுகின்றனர். அகத்தியர் குள்ள முனிவர் என்பதால் அவருக்கு லிங்கத்தின் உயரம் எட்டவில்லை.&nbsp;</p><p></p><p>&nbsp;மூலஸ்தானத்தில் இரண்டு புறமும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பெண் தெய்வங்கள் உள்ளன. துவாரக பாலகி என்று இன்றைக்கு அழைக்கப்படும் இப்பெண் தெய்வங்களை மகாலட்சுமி என்றும் சரஸ்வதி என்றும் குறிப்பிடுகின்றனர். இவர்களில் சரஸ்வதி கையில் வீணை எதுவும் இல்லை. இவ்விரு தெய்வங்களும் (இக்கோயில் முன்பு பௌத்த கோயிலாகி இருந்ததை உறுதி செய்கின்றன. மேலும் கருவறையில் உள்ள உயரமான லிங்க பாணமும் அது இந்திரனின் 'கந்துடைப் பொதியில்' என்பதைச் சுட்டுகின்றன)</p><h2>உப சன்னதிகள்</h2><p> 
மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோயிலில் இரண்டு நடராஜர்களும் சிவகாமியும் காணப்படுகின்றனர். அதில் ஒரு நடராஜரின் காலுக்கு அடியில் அசுரனின் வதைபட்ட உருவம் காணப்படுகின்றது. இங்கு நவக்கிரகத்திற்குத் சனி சன்னதி உண்டு. தனிக் கதையும் உள்ளது. 
இங்கு மான் மழு ஆயுதங்களை ஏந்திய சிவ துர்க்கை காணப்படுகின்றது. </p><p>பொதுவாக சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு துர்க்கையை சிவன் சன்னதியின் கோஷ்டத்தில் காணலாம். ஆனால் இத்தலத்தில் சிவதுர்க்கையைக் கண்டு தரிசிக்கலாம். அவள் காலடியில் மகிஷாசுரன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு அருகில் காவேரி அம்மனும் தெய்வமாக காணப்படுகின்றாள் ஆடிப்பெருக்கு நாளன்று காவேரி அம்மனுக்கு சிறப்புப் பூசைகள் நடைபெறும். புருஷா மிருகத்தை இங்குக் காணலாம்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798f2a00-9eb9-4f78-8efc-fe6248e59648/24-676bd7b470e7e.webp' /></p><p>மரகதலிங்கம்மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோயிலில் மரகதலிங்கம் உள்ளது. இம் மரகதலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை மட்டும் தினந்தோறும் நடைபெறும். அப்போது வலம்புரி சங்கினால் பால், பன்னீர், தேன், சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்கின்றனர்.</p><p> விருட்சமும் தீர்த்தமும் மங்களாம்பிகை பிராணநாதர் கோயிலுக்கு கோங்குமரமும் வெள்ளருக்கும் தலவிருட்சமங்கள் ஆகும். வெள் எருக்கு என்பது சிவபெருமானுக்கு உரியது. 'வெள் எருக்கஞ்சடை முடியுயோன் வெற்பெடுத்த திருமேனி' என்று கம்பராமாயணத்தில் இராவணனை கம்பர் குறிப்பிடுகின்றார். எருக்க இலையில் தயிர் சாதம் வழங்குவது இங்குப் பிரசாதமாக கருதப்படுகின்றது.
</p><h2>தீர்த்தங்கள்</h2><p> 
மற்ற பல சிவன் கோவில்களில் இருப்பதை போலவே இங்கும் சூரிய சந்திர தீர்த்தங்கள் உள்ளன. சூரியனும் சந்திரனும் இறைவனின் இரண்டு கண்களாக இருப்பதனால் இறைவனைக் குளிர்விக்க இவ்விரு தீர்த்தங்களும் இங்கு இருப்பதாக ஸ்தல புராணக் கதை கூறுகின்றது.</p><p>
</p><p>ஒளி வழிபாட்டின் தொடர்ச்சியாக பௌத்தர்கள் சூரிய சந்திர வழிபாட்டை வலியுறுத்தி வந்தனர். அவர்களின் மடாலயங்களில் வெட்டிய குளத்துக்கு சூரிய சந்திரன் பிரமன் இந்திரன் பெயர்களைச் சூட்டினர். இரண்டும் மங்களநாதர் மங்களாம்பிகை கோவிலிலும் சூரிய சந்திர தீர்த்தங்கள் உள்ளன.&nbsp; &nbsp;</p><p>சிவன் கோவில்கள் புதிதாக உருவான இடங்களில் அவ் இடங்களை மகிமைப்படுத்த புதிய ஸ்தல புராணக் கதைகளைத் தோற்றுவித்தனர். அவ்வாறு உருவாக்கிய கதைகளில் இரண்டு கதைகள் இனி வருமாறு.</p><h2>கதை 1
</h2><h3>உடலும் உயிரும் ஒட்டிய கதை</h3><p>
சோழ மன்னர் காலத்தில் அவரது அமைச்சர் ஒருவர் மக்களிடம் இருந்து வசூலித்த வரிப்பணத்தை மன்னரிடம் சேர்ப்பிக்காமல் அப்பணத்தைக் கொண்டு தான் இக்கோயிலை கட்டினார். அரிமரத்ன பாண்டியனின் அமைச்சரும் (மாணிக்கவாசகர்) 
மன்னன் குதிரை வாங்க கொடுத்த பணத்தில் கோயில் கட்டிய கதை திருவிளையாடல் புராணத்திலும் சற்று வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றது.</p><p> </p><p>
</p><p>
திருமங்கலக்குடி கதையில் அமைச்சர் மக்கள் வரிப்பணத்தை மன்னரிடம் செலுத்தாத காரணத்தினால் அம் மன்னன் தன் அமைச்சரை சிரச்சேதம் செய்யும்படி உத்தரவிட்டான். சிரச்சேதம் என்றால் சிரத்தை (தலையை) வெட்டிக் கொலை தண்டனையை நிறைவேற்றுவதாகும். &nbsp;&nbsp;</p><p>அமைச்சர் தனக்கு இட்ட தண்டனையை கேட்டறிந்த சிவபெருமானை வணங்கி என் தலையை வெட்டிய பிறகு என் உடலைத் தான் கோவில் கட்டி இருக்கும் ஊரிலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றார். கொலைத் தண்டனையை நிறைவேற்றிய பிறகு அவர் உடம்பையும் முண்டத்தையும் அவருடைய சொந்த ஊருக்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்தனர். </p><p>தண்டனை அறிவிக்கப்பட்டதும் அமைச்சரின் மனைவி அவர் கட்டிய சிவபெருமான் கோவிலுக்குச் சென்று அழுது தனக்கு மாங்கல்யப் பிச்சை வழங்கும்படி அங்கிருந்த அம்பாளிடம் வேண்டினாள் அம்பாளும் அவளுடைய கண்ணீருக்கு இரங்கி அவளுடைய மாங்கல்ய தோஷத்தை நீக்கி மாங்கல்ய பாக்கியத்தை அருளினாள்.</p><p> </p><p>அமைச்சரின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டதும் தலையும் உடலும் ஒட்டிக்கொண்டதால் உடல் உயிர் பெற்றது. அவரும் அவர் மனைவியும் நீண்ட காலம் சீரும் சிறப்புமாக பேரும் புகழுமாக வாழ்ந்தனர். இக்கதை இங்கு எழுந்தருளியிருக்கும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷத்தை நீக்குபவள். பெண்களுக்கு தீர்க்கசுமங்லி யோகமும் ஆண்களுக்கு தீர்க்காயுசும் வழங்குவாள் என்பதை உறுதி செய்கிறது.</p><h2>கதை 2 </h2><h3>
நவக்கிரகங்களுக்கு நோய் நீங்கியது
&nbsp;</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e22010-661c-45a4-9579-47284eca68e9/24-676bd7b50e567.webp' />&nbsp;&nbsp;</p><p>ஒரு சமயம் காலமா முனிவருக்கு நோய் தாக்கி அவதிப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது நவக்கிரகங்கள் அவருக்கு நோய் ஏற்படாமல் அந்த நோயைத் தடுக்க முன்வந்தன. இது முற்றிலும் வியப்பான ஒரு சூழ்நிலையாகும். அவரது விதிப்படி அவர் நோயாளியாக ஆகி அவதிப்படும் துயரத்தை அவர் அனுபவிக்க விடாமல் தடுக்க நவக்கிரகங்கள் முன் வந்ததால் பிரம்ம தேவனுக்கு கோபம் வந்தது. பிரம்மதேவன் சினம் கொண்டு காலமாமுனிவரை காப்பாற்ற நீங்கள் முன்வந்தால் அவருக்கு வரக்கூடிய நோய் உங்களுக்கு வந்து விடும் என்று நவக்கிரகங்களைச்சபித்து விட்டார். இப்போது நவக்கிரகங்கள் நோயினால் அவதிப்படலாயின.</p><p>பிரம்மன் கொடுத்த சாபத்தை சிவபெருமானால் மட்டுமே நீக்க முடியும் என்று எண்ணிய, முடிவு செய்த ஒன்பது கிரகங்களும் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தன. இவர்களின் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் ஒரு நாள் இவர்களுக்குக் காட்சி கொடுத்து இவர்களின் நோயை நீக்கினார். நோயின் துன்பத்தை அறவே அகற்றினார். சாபம் நீங்கிய ஒன்பது கிரகங்களும் இங்கேயே தங்கி சிவபெருமானை பூஜித்து வருகின்றன. இங்கு நவக்கிரகத்திற்கு தனி சன்னதி உண்டு.</p><h2>
தயிர்சாதப் பிரசாதம்</h2><p> 
பிராண நாதஸ்வரர் மங்களாம்பிகை கோவிலில் குழந்தை இல்லாதவர்கள் வந்து நவக்கிரக தோஷத்தை கழித்து எருக்க இலையில் தயிர் சாதம் படைத்து
பின்பு அதனைப் பிரசாதமாக வழங்குகின்றனர்.</p><p> </p><p> </p><p> 

இவ்வாறு 11 ஞாயிற்றுக்கிழமைகள் உச்சிப் பொழுதில் 12 முதல் 12 அரை மணிக்குள் தயிர்சாத பூஜை செய்து பிரசாதமாக வழங்கி வந்தால் திருமணத் தடை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். செவ்வாய் தோஷம், நாக தோஷம் என நவக்கிரக தோஷம் எதுவாக இருந்தாலும் விலகும். தயிர்சாத பிரசாத முறை இக்கோவிலில் மட்டுமே காணக்கூடிய ஒரு தனிச்சிறப்பாகும்.&nbsp;&nbsp;</p><h2>விழாக்கள் </h2><p>
பிராண நாதஸ்வரர் மங்களாம்பிகை கோவிலில் மற்ற சிவன் கோவில்களில் நடப்பது போல பங்குனி மாதத்தில் திருக்கல்யாணமும் பத்து நாள் திருவிழாவும் நடைபெறும். ஆனால் இங்கு சற்று வினோதமாக சிவனுக்கும் பார்வதிக்கும் இரவில் திருக்கல்யாணம் நடக்கும். திருமண விருந்து மதியம் நடைபெறும்.&nbsp;</p><p>(இதுவும் இக்கோயில் முன்பு இந்திரன் கோவிலாக இருந்ததை உறுதி செய்கிறது. அப்போது பங்குனி உத்திரம் முதல் சித்ரா பௌர்ணமி வரை இந்திர விழா நடந்தது. இந்நாட்களில் ஆணும் பெண்ணும் நீர் நிலைகளுக்கு அருகில் கூடிமகிழ்ந்து ஆடிப் பாடி களித்தனர் என்பதை சிலம்பும் மேகலையும் செப்புகிறது. பங்குனி உத்திரம் காமன் பண்டிகையாக தொடர்ந்தது. காமன் விழா காமதகனமாக சைவத்தில் மாற்றம் பெற்றது.</p><h2>புருஷா மிருகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a870638f-45d1-40da-b1cf-363641ec28c1/24-676bd7b5832c0.webp' />&nbsp;&nbsp;</p><p> 
மங்களாம்பிகை பிராண நாகேஸ்வரர் கோவிலில் குருஷா மிருகம் காணப்படுகின்றது. புருஷா மிருகம் அதிகமான கோவில்களில் காணப்படுவதில்லை.திருமழபாடியில் உள்ளது. திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் ஏரிக்குள் புருஷா மிருகம் இருப்பதை காணலாம். </p><p>சில கோவில்களில் புருஷா மிருகம் வாகனமாக சிவபெருமானுக்கு வீதி வலம் வரும்போது பயன்படுத்தப்படுகின்றது.சாமிக்கு காட்டும் தீபாராதனைகளில் புருஷா மிருக தீபமும் ஒன்றாகும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கரி பூசும் சடங்கு</span></h2><p>
புருஷா மிருகம் என்பது மனித முகமும் சிங்க உடலும் இரு பக்கமும் சிறகுகளும் கொண்டதாகும். இவன் குபேரனுக்கு காவலனாக இருந்தவன் என்று நம்பப்படுகின்றது. திருவாதவூரில் புருஷா மிருகம் சிலை நிறுவப்பட்டுள்ள ஏரியைப் புருஷாமிருக தீர்த்தம் என்பர். இதனை ஏரி காவல் தெய்வமாக அவ்வூரில் கருதுகின்றனர். மழை இல்லாத பஞ்சகாலத்தில் தேங்காயைசிஜ் சுட்டு எரித்து கருக்கி அதன் கரித் தூளைப் புருஷா மிருகத்தின் மீது பூசுவது மழைச்சடங்குகளில் ஒன்றாகும்.</p><h2>கதை 1
</h2><h3>பீமனின் ஓட்டம்</h3><p> 
புருஷா மிருகத்திற்கும் ஒரு புராணக்கதை வழங்குகின்றது. பாண்டவர்கள் ராஜசூயயாகம் தொடங்கிய போது கண்ண பரமாத்மா பீமனிடம். புருஷா மிருகம் வந்தால் ராஜசூய யாகம் சிறப்பாக நடந்தேறும் என்ற காரணத்தினால் அதனை அழைத்து வரும்படி கூறினார். பீமன் போய் புருஷா மிருகத்தை அழைத்தான். </p><p>புருஷாமிருகம் பீமனிடம் 'யாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக நான் வருகிறேன். ஆனால் நான் எப்பொழுதும் முப்பொழுதும் சிவ தியானத்தில் இருப்பவன். நான் விரைவாக ஓடுவேன். எனக்கு முன்பாக நீ வழி காட்டிக் கொண்டே ஓட வேண்டும்.வழியில் எனக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது ஏற்பட்டால் என்னுடைய சிவ தியானம் தடைபடும்' என்றது. சரி என்று சம்மதித்து பீமன் முன்னே ஓடத் தொடங்கினான். வழியை சீர்படுத்திக் கொண்டே அவன் விரைவாக ஓட புருஷா மிருகம் அவனைவிட விரைவாக அவன் பின்னே ஓடி வந்தது.&nbsp;</p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p>ஒரு கட்டத்தில் புருஷாமிருகத்துக்கு ஈடு கொடுத்து பீமனால் ஓட முடியவில்லை. அவன் தன் தரையில் கிடந்த சிறிய கல்லை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்தான். சிவாய நம என்று சொன்னதால் அந்த கல் சிவலிங்கமாக உருவெடுத்தது. உடனே புருஷா மிருகம் நின்று சிவனைத் தியானித்த பின்பு ஓட தொடங்கியது. இப்போது புருஷா மிருகத்திற்கும் பீமனுக்கும் ஒரு தூரம் ஏற்பட்டதால் பீமன் சற்று நிதானமாகவே ஓடினான். </p><p>மீண்டும் புருஷாமிருகம் தன்னை நெருங்கி விட்டதை அறிந்ததும் அடுத்தடுத்து கற்களை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்து கொண்டே வந்தான். இவ்வாறு பல இடங்களில் கல்லை எறிந்து அதனுடைய வேகத்தை கட்டுப்படுத்தி தன்னிடத்திற்கு அழைத்து வந்தான். ராஜசூய யாகம் சிறப்பாக நடந்தேறியது. தர்மரும் மற்றவர்களும் கண்ணபரமாத்மாவும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தனர்.</p><p>புருஷா மிருகத்தை பூலோகத்தில் திருவாதவூரில் இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக வைம்பாயனர், சௌமியர், ரோமஸர், பிருக்குட்சர், கவுண்டனியர், ஆகிய ரிஷிகளும் கண்ண பரமாத்மாவிடம் அனுமதி கேட்டனர். அவர் சம்மதித்தார். அளித்து அவரும் உடன் வந்து ஆறு பேருமாக புருஷா மிருகத்தை மதுரை திருவாதவூரில் ஏரியில் நிலை நிறுத்தினர்.&nbsp;&nbsp;</p><h2>12 சிவாலயங்கள்</h2><p> 
பீமனுக்குப் பின்னால் புருஷா மிருகம் வேகமாக ஓடி வந்த போது பீமன் பன்னிரெண்டு இடங்களில் கல்லை எடுத்து சிவாய நம என்று சொல்லி பின்னால் எறிந்ததும் புருஷா மிருகம் ஆங்காங்கே நின்று சிவ தியானம் செய்து மீண்டும் ஓடிவந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9c2e83-93cf-4e25-8965-b6504a275745/24-676cf46eb3a49.webp' /></p><p>அந்தப் பன்னிரு தலங்களும் இன்று கேரளாவில் உள்ளன அவை திருமலை மகாதேவர் ஆலயம், திக்குறிச்சி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் ஆலயம், பொன்மனை தீம்பிலாங்குடி ஆலயம் ,திருபன்னிப் பாகம் சிவாலயம், கல்குளம் நீலகண்ட சாமி சிவன் கோவில், மேலாங்கோடு சிவாலயம், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றி கோவில், திரு நட்டாலம் சங்கரநாராயணன் கோவில் ஆகியன.</p><h2>வழிபாட்டின் பலன்</h2><p>
மங்களாம்பிகை பிராண நாதஸ்வரர் கோவிலில் மாங்கல்ய தோஷம் மட்டுமல்லாது நவ கிரக தோஷங்களும் நீங்கும். முன்னோருக்கு முறையாக தர்ப்பணம் கொடுக்காதவர்கள் இங்கு வந்து தர்ப்பணம் கொடுக்கலாம். இறந்த ஆத்மாக்கள் முக்தி அடையும். திருமங்கலக்குடியில் உள்ள புருஷா மிருகத்தையும் பக்தர்கள் வணங்கி வந்தால் 12 சிவாலயங்களை தரிசித்த புண்ணியத்தைப் பெறலாம்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இணைந்து கொள்ளுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T16:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகார பதவிகள் அருளும் ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/andarkuppam-balasubramanya-swami-temple-1734948795"></link>
            <id>https://ibcbakthi.com/article/andarkuppam-balasubramanya-swami-temple-1734948795</id>
            <summary type="text">ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் சென்னையிலிருந்து பொன்னேரி போகும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எழும்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் சென்னையிலிருந்து பொன்னேரி போகும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எழும்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டார் குப்பம் முதலில் ஆண்டியார் குப்பம் என்று அழைக்கப்பட்டது. இங்குப் பல துறவிகள் தங்கி இருந்ததால் ஆண்டிகளின் குப்போம் எனப்பட்டது.</p><h3>&nbsp;முருகனின் மூன்று நிலைகள்
</h3><p>
ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் முருகனை பாலமுருகன் என்றோ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் என்றோ தண்டாயுதபாணி என்றோ அழைக்க இயலாது. ஏனெனில் அவர் மனித வாழ்வின் மாறி வரும் மூன்று நிலைகளில் காட்சி அளிக்கின்றார். </p><p>
அதிகாலையில் பாலமுருகனை போல குழந்தை முக பாவத்துடனும் மதியம் குமரப் பருவத்தில் இருக்கும் இளைஞனின் முக பாவத்துடனும் மாலையில் வயோதிகரின் தளர்ந்த முகத்துடனும் காட்சி அளிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1da249a-cfb0-4f39-99cb-697316e23eb5/24-676937bcebd68.webp' /></p><p>
</p><h3>
அதிகார முருகன்
</h3><p>ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி வேல், மயில், ஆறு முகங்கள் 12 கண்கள், கரங்கள் என முருகனுக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல் இங்கு இடுப்பின் இரண்டு பக்கமும் கை வைத்து அதிகார தோரணையில் காட்சியளிக்கின்றார். </p><p>எனவே இவரை அதிகார முருகன் என்று அழைக்கின்றனர். இவ்வூர் முருகன் பிரம்மனின் அகம்பாவம் தொலைந்த முருகனாக வணங்கப்படுகிறான்.</p><p></p><h3>உப சந்நிதிகள்</h3><p> 
ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமியின் இணையர் வள்ளியும் தெய்வானையும் அவருக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். 
இக்கோவிலில் வேறு பல தெய்வங்களுக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. </p><p>காசி விஸ்வநாதன் காமாட்சியம்மனும் தனிச் சன்னதியில் காட்சி தருகின்றனர். ஆடலரசன் நடராஜர் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளார். பக்தர்களுக்கு வரம் தரும் வர சக்தி விநாயகராக அவரும் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
</p><p>
 விருட்சமும் தீர்த்தமும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை ஆகும் சரக்கொன்றை ஆகும். இம்மரம் பௌத்தர்களுக்கு உரிய விசேஷ மரமாகும். சொர்ண புஷ்பம் என்று பௌத்தர்கள் இம்மரத்தின் மலர்களைக் குறிப்பிடுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/605365b6-3310-4f3b-90ab-c016867a3a59/24-676937bd71009.webp' /></p><p> </p><p> இம்மலர் தாய்லாந்தின் தேசிய மலராகும். பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த கேரளாவின் மாநில மலர் சரக்கொன்றை என்பதால் ஆண்டு தொடக்கத்தில் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் விஷு அன்று எல்லோரும் பூஜையில் இம்மலரை கண்ணாடி மற்றும் சித்திரை கனி வர்க்கங்களோடு வைத்து வணங்குவர்.</p><p> ஸ்ரீலங்காவின் வலது பகுதியில் குறிப்பாக பௌத்த கோவில்களில் மடாலயங்களில் இம்மரங்கள் அதிகமாக வளர்க்கப்படும். தூய்மையையும் செல்வத்தையும் குறிக்கும் சரக்கொன்றை பௌத்த துறவிகளின் சமயச் சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. </p><p>பத்ம புத்தரும் நாரத புத்தரும் சரக்கொன்றை மரத்தின் கீழ் ஞானோதயம் பெற்றனர். எனவே இம்மரத்தை போதி மரத்துக்கு நிகராக போற்றினர். இதனை ஸ்வர்ண புஷ்பம் என்றே அழைத்தனர். (இதுவும் இக்கோயில் முதலில் பௌத்த கோயிலாக இருந்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது).&nbsp;</p><p></p><h3>கதை 1</h3><p>
பிரமன் குட்டுப்பட்ட கதை
சைவ சமய புரட்சி ஏற்பட்ட காலத்தில் பெயர் மாற்றப்பட்ட கோவில்களுக்குப் புதிய தலபுராணங்கள் உருவாக்கப்படும். அப்புராணக் கதைகளில் பழைய பௌத்த கடவுளரான இந்திரனும் பிரமனும் வழிபாட்டுத் தகுதியை இழப்பர். </p><p>இக்கோவிலுக்குரிய ஸ்தலபுராணத்தில் பிரம தேவன் பாலமுருகனால் குட்டுப்படுகிறார். 

கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை கண்டுகொள்ளாமல் அவரை வணங்கிச் செல்லாமல் சிறுவன் தானே என்று அலட்சியம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59f8e97-d879-477d-987e-66bb1e59b274/24-676937bded999.webp' /></p><p> </p><p>முருகன் அவரை நிறுத்தி 'பிரம்மதேவா பிரணவத்திற்கு பொருள் சொல்லுங்கள், கேட்போம்' என்றார். பிரம்ம தேவனுக்கு பிரணவத்திற்கு பொருள் சொல்லத் தெரியவில்லை. முருகன் மக்குச் சிறுவர்களுக்கு தலையில் குட்டுவது போல பிரமனின் தலையில் குட்டி அவரை சிறையில் அடைக்கச் சொன்னார்.</p><p> முருகப்பெருமான் பிரம்ம தேவனை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டபோது இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அதிகார தோரணையோடு நின்றார் அந்த உருவத்தில் இக்கோவிலில் அவர் காட்சியளிக்கின்றார். இச்சம்பவம் நடைபெற்ற தலம் இத்தலம் ஆகும்.&nbsp;</p><h3>அறு உருவாய் விளங்கும் பிரமதேவன்
</h3><p>பிரம்மனுக்கு எங்குமே கோயில் கிடையாது என்ற சாபம் அவருக்கு உண்டு. பிரமதேவன் குட்டுப்பட்ட இடம் என்பதை குறிக்கும் வகையில் 
இங்கு பிரம்மதேவன் சிவன் முருகனுக்கு நேர் எதிரே கல் வடிவில் காட்சி தருகின்றார். அவருக்கு உருவம் இல்லை என்ற சாபத்தின் காரணமாக அறு உருவாக (உருவமற்ற) இருக்கின்றார்.</p><p> அவருடைய அட்சர மாலை, கமண்டலம், தாமரை மலர் ஆகியவை அந்த நீள் வட்டக் கல்லில் காணப்படுகிறது. 

(பிரமன் கல்லும் இதில் காணப்படும் பொருட்களும் யாரோ ஒரு பவுத்த துறவிக்கான நினைவுக்கல்லாகத் தோன்றுகிறது. சுல்தான் கொடுத்த நிலத்தில் கோயில் கட்டப்பட்டது. </p><p>இந்தக் கல் இங்கு வாழ்ந்த புத்த துறவியை/ ஆண்டியைக் குறிக்கின்றது. இங்குப் பவுத்தர்கள் மொட்டையடித்து துறவு மேற்கொண்டிருப்பர். துறவுக்குரிய சரக் கொன்றையும் இங்கு வளர்க்கப்பட்டுள்ளது.)&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e8aadb-c517-449d-954e-a49ed73c9e25/24-676937be6ed79.webp' /></p><h3>கதை இரண்டு </h3><p>
தீர்த்தம் உருவான கதை
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில்
வேலாயுத தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உள்ளது. இதற்கும் ஒரு கதை உள்ளது. சம் வர்த்தனர் என்ற பக்தர் இப்பகுதிக்கு வந்து இங்கே உள்ள இறைவனைத் தரிசிக்க விரும்பினார். </p><p> அதற்கு முன்பு குளித்துவிட்டு சுத்தமாக வந்துவிடலாம் என்று நினைத்து அங்கே இருந்த ஒரு சிறுவனிடம் 'தம்பி இங்கே குளிக்க நல்ல குளம் எங்கே இருக்கின்றது? கோவில் தீர்த்தம் எங்கே இருக்கின்றது' என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் 'இங்கே குளம் என்றும் தீர்த்தம் என்றும் எதுவும் இல்லை என்னுடன் வாருங்கள்' என்று சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டித் தன்னிடம் இருந்த வேலாயுதத்தை ஊன்றினான். அங்கே ஊற்றுக் கிளம்பியது. </p><p>சமவர்த்தனர் அவ் ஊற்று நீரில் குளித்துக் கோயிலுக்கு வந்தார். 

மக்கள் ஊற்று நீரை அழகான ஒரு குளம் வெட்டி சேகரித்தனர். அந்த குளத்துக்குப் பெயர் வேலாயுத தீர்த்தம் ஆகும். சிலர் இதனை பால நதி என்றும் அழைக்கின்றனர்.&nbsp;</p><p></p><h3>வரலாறு </h3><p>
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலுக்குப் புராண கதைகளுடன் உண்மை வரலாறும் உள்ளது. இஸ்லாமிய சுல்தான் மன்னர் தன் படை பரிவாரங்களுடன் போருக்கு புறப்பட்டு போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு இடத்தில் பாசறை அமைத்து தங்கினார். </p><p>அங்கு ஒரு சிறிய முருகன் கோவில் இருந்தது. முருகன் வீரத்தின் தெய்வம் என்பதாலும் தேவர்களின் சேனாதிபதி என்பதாலும் அவனை வணங்கிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்று படை வீரர்கள் சுல்தானிடம் எடுத்துரைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454dad45-6aac-4a3a-8df0-5b71699e656d/24-676937bee6c2a.webp' /></p><p> </p><p>அவரும் உடன்பட்டார். 'சரி வணங்கி செல்வோம் நமக்கு வெற்றி கிடைத்தால் இந்த முருகனுக்கு கோவில் கட்ட நிலம் தருவோம்' என்று சொல்லி வணங்கிச் சென்றார். அந்தப் போரில் சுல்தான் மாமன்னருக்கு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. </p><p>உடனே அவர் சொன்ன சொல்லை காப்பாற்ற முருகன் கோவிலுக்கு நிலம் வழங்கினார். அந்த நிலத்தில் கட்டப்பட்டது தான் ஆண்டி குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இது உண்மை வரலாறாக இங்கு பெரியவர்களால் சொல்லப்படுகின்றது.</p><h3>நேர்த்திக்கடன்கள் </h3><p>
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் 
மற்ற முருகன் கோவில்களில் இருப்பதைப் போலவே பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை தருகின்றனர். காவடி எடுப்பதாகவும் நேர்ந்து கொள்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><h3>வழிபாட்டின் பலன்
</h3><p>ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் 
பரணி நட்சத்திரத்தன்று வந்து இரவில் தங்கி மறுநாள் காலையில் கார்த்திகை பூஜையை முருகனுக்கு சிறப்பாக நடத்தி வீடு திரும்பினால் தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும்.</p><p> இக்கோயிலில் முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் பாலபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் ஆகும். இவற்றைச் செய்த பக்தர்களுக்குப் பழவினை, புதுவினை என இருவினையும் அண்டுவதில்லை.&nbsp;</p><h3>இழந்த அதிகாரத்தைப் பெற</h3><p>
ஆண்டார்குப்பத்தில் முருகன் இரண்டு கையையும் இடுப்பில் வைத்த படி அதிகார தோரணையுடன் நிற்பதால் இவரைத் தொடர்ந்து வணங்கி வந்தால் அதிகாரத்தை அருள்வார். நல்ல அதிகார பதவிகளை இழந்து அதிகாரமற்ற 'டம்மி போஸ்ட்களுக்கு' பதவி மாற்றம் அல்லது பதவி இறக்கம் பெற்றவர்கள் (டி பிரமோஷன்) ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்கினால் மீண்டும் பழைய அதிகாரம் உள்ள பதவியைப் பெறுவார்கள் அல்லது புதிய அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T15:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (04-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-2026-august-04-tuesday-1785759517"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-2026-august-04-tuesday-1785759517</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 உங்களை விட்டு விலகி சென்றவர்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கலாம். வேலையில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நினைத்த உதவிகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:</h3><p>
 உங்களை விட்டு விலகி சென்றவர்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கலாம். வேலையில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும் நாள். </p><h3>ரிஷபம்: </h3><p>ஆன்மீக பணிகளில் அதிகம் ஈடுபாடு செலுத்துவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். மனதில் நல்ல தெளிவு பிறக்கும். வேலையில் புதிய வாய்ப்பு உண்டாகும். </p><h3>மிதுனம்: </h3><p>வியாபாரம் தொடர்பாக கடன் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். சில சவால்களை கடந்து செல்வீர்கள். </p><h3>கடகம்:</h3><p> தொழில் ரீதியாக பொறுமையாக இருப்பது அவசியம். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்.</p><p></p><h3>சிம்மம்: </h3><p>குடும்பத்தினரை அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது நல்லது. நெருக்கடியான நாள். </p><h3>கன்னி:</h3><p> வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் முற்றிலும் விலகும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள்.</p><h3> துலாம்: </h3><p>கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடைய வருகையால் சில குழப்பங்களை சந்திக்கலாம். மாற்றமான நாள். </p><h3>விருச்சிகம்: </h3><p>இன்று உங்களுக்கு ஒரு புது விதமான சிந்தனைகள் தோன்றும். வழக்கு விஷயங்களில் மிகவும் பொறுமையாக இருப்பது அவசியம். அனுபவங்கள் பெறக்கூடிய நாள். </p><h3>தனுசு: </h3><p>இவர்களுக்கு உறவினர்கள் வழியாக நற்செய்தி வந்து சேரும். விவசாயம் சார்ந்த வேலையில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். பயணங்களில் இருந்து வந்த தாமதம் விலகி நினைத்த காரியம் நிறைவேறும்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மகரம்:</span></p><p>புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் விலகி செல்லும். சொத்து விற்பதிலும் வாங்குவதிலும் நல்ல லாபங்களை பெறுவீர்கள். </p><h3>கும்பம்: </h3><p>குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்ல தெளிவு பிறக்கும். முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். </p><h3>மீனம்: </h3><p>மனதிற்கு மகிழ்ச்சிக்கான செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத சில சந்திப்புகளை பெறுவீர்கள். பிடிவாத குணத்தை விட்டு விட்டால் நன்மை உண்டாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாதம் கொண்டாடக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் என்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-month-important-festival-fasting-dates-1785759015"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-month-important-festival-fasting-dates-1785759015</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் ஆங்கில நாட்காட்டியின் படி எட்டாவது மாதமாக உள்ளது. தமிழில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்து வரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாதம் உள்ளது. இந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் ஆங்கில நாட்காட்டியின் படி எட்டாவது மாதமாக உள்ளது. தமிழில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்து வரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாதம் உள்ளது. </p><p>இந்த மாதத்தில் நிறைய ஆன்மீக விழாக்கள், விசேஷங்கள், விரதங்கள் வர உள்ளது. இந்த மாதத்தில் தான் வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என வழிபாட்டிற்கு உரிய முக்கிய தினங்கள் வருகிறது. </p><p>அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் விசேஷ நாட்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3d4dc5-7cd4-4f02-905d-78e31df5a36d/26-6a708528be6da.webp' /></p><p></p><h3>ஆகஸ்ட் 2026 விசேஷங்கள் :
</h3><p>ஆகஸ்ட் 03	ஆடி 18	திங்கள்	ஆடிப்பெருக்கு
</p><p>ஆகஸ்ட் 12	ஆடி 27	புதன்	ஆடி அமாவாசை
</p><p>ஆகஸ்ட் 14	ஆடி 29	வெள்ளி	ஆடிப்பூரம்</p><p>
ஆகஸ்ட் 15	ஆடி 30	சனி	இந்திய சுதந்திர தினம்
</p><p>ஆகஸ்ட் 16	ஆடி 31	ஞாயிறு	நாக சதுர்த்தி</p><p>ஆகஸ்ட் 17	ஆடி 32	திங்கள்	கருட பஞ்சமி,நாக பஞ்சமி
</p><p>ஆகஸ்ட் 21	ஆவணி 04	வெள்ளி	வரலட்சுமி விரதம்
</p><p>ஆகஸ்ட் 26	ஆவணி 09	புதன்	ஓணம் பண்டிகை</p><p>ஆகஸ்ட் 27	ஆவணி 10	வியாழன்	ஆவணி அவிட்டம்
</p><p>ஆகஸ்ட் 28	ஆவணி 11	வெள்ளி	காயத்ரி ஜபம்
</p><p>ஆகஸ்ட் 31	ஆவணி 14	திங்கள்	மகா சங்கடஹர சதுர்த்தி</p><p></p><h3>ஆகஸ்ட் 2026 விரத நாட்கள் :</h3><p>அமாவாசை	ஆகஸ்ட் 12	புதன்	ஆடி 27
</p><p>பெளர்ணமி	ஆகஸ்ட் 27	வியாழன்	ஆவணி 10
</p><p>கிருத்திகை	ஆகஸ்ட் 06	வியாழன்	ஆடி 21</p><p>
திருவோணம்	ஆகஸ்ட் 26	புதன்	ஆவணி 09</p><h4>ஏகாதசி</h4><p>ஆகஸ்ட் 09,ஞாயிறு, ஆடி 24, 
</p><p>ஆகஸ்ட் 23 ஞாயிறு&nbsp; ஆவணி 06</p><h3>சஷ்டி</h3><p>ஆகஸ்ட் 04, செவ்வாய்,&nbsp;ஆடி 19, </p><p>ஆகஸ்ட் 18 செவ்வாய் ஆவணி 01</p><p>சிவராத்திரி ஆகஸ்ட் 11	செவ்வாய்	ஆடி 26</p><h3>பிரதோஷம்</h3><p>ஆகஸ்ட் 10,திங்கள்,ஆடி 25, 
</p><p>ஆகஸ்ட் 25&nbsp; செவ்வாய் ஆவணி 08</p><p>சதுர்த்தி	ஆகஸ்ட் 16	ஞாயிறு	ஆடி 31</p><h3>ஆகஸ்ட் 2026 சுப முகூர்த்த நாட்கள் :</h3><p>ஆகஸ்ட் 23	ஆவணி 06	ஞாயிறு	வளர்பிறை முகூர்த்தம்</p><p>
ஆகஸ்ட் 30	ஆவணி 13	ஞாயிறு	தேய்பிறை முகூர்த்தம்
</p><p>ஆகஸ்ட் 31	ஆவணி 14	திங்கள்	தேய்பிறை முகூர்த்தம்</p><h3>ஆகஸ்ட் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம்:</h3><p>ஆகஸ்ட் 23	ஆவணி 06	ஞாயிறு	காலை 07.23 முதல் காலை 07.59 வரை</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/can-married-women-shave-their-head-1785758017"></link>
            <id>https://ibcbakthi.com/article/can-married-women-shave-their-head-1785758017</id>
            <summary type="text">பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் தலை தூக்குகிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வேண்டுதல் செய்து கொள்வது உண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் தலை தூக்குகிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வேண்டுதல் செய்து கொள்வது உண்டு.</p><p> அந்த வகையில், அவர்கள் விரத்தியால் மிகப்பெரிய அளவில் ஒரு பிரார்த்தனை ஒரு வேண்டுதலை வைத்து விடுகிறார்கள்.</p><p> அதில் முக்கியமான ஒன்று மொட்டை அடிப்பது. அப்படியாக, சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afcaded-5120-4f04-aa4b-c0a7c44dd596/26-6a708143585d7.webp' /></p><p></p><p>
</p><p> சாஸ்திரப்படி சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரை இவ்வாறான வேண்டுதலை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.</p><p> ஒருவேளை இவ்வாறான வேண்டுதல்கள் அவர்கள் வைத்துவிட்டாலும் மொட்டை அடிப்பதற்கு பதிலாக பூ முடி அதாவது முடியை பாதியை இறைவனுக்கு சமர்ப்ப கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். </p><p>இல்லையென்றால் வேண்டுதல் நிறைவேறி விட்டு மீண்டும் இவ்வாறு வேண்டுதல் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
