<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-09T16:48:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (10-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-august-10-2026-monday-1786279843"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-august-10-2026-monday-1786279843</id>
            <summary type="text">மேஷம்: 
தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கலாம். வீடுகளில் காலை முதல் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் வழியே நற்செய்திகள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்: </h3><p>
தொழில் ரீதியாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கலாம். வீடுகளில் காலை முதல் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள் வழியே நற்செய்திகள் வந்து சேரும்.</p><h3> ரிஷபம்: </h3><p>வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். நண்பர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். </p><h3>மிதுனம்: </h3><p>வேலை பளு அதிகரிக்கும். முக்கியமான பொறுப்புகளை யாரிடமும் நம்பி ஒப்படைக்காதீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சில மன குழப்பங்களை கொடுக்கலாம். </p><h3>கடகம்: </h3><p>சேமிப்பு மிகவும் அவசியம். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். நெருங்கிய வட்டாரங்களை சந்தித்து நேரம் செலவிடுவீர்கள். </p><h3>சிம்மம்: </h3><p>உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். வியாபாரத்தில் சில முன்னேற்றங்களை பெறுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.</p><p></p><p> </p><h3>கன்னி:</h3><p> அரசியல் தொடர்பாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். கணவன் வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள்.</p><h3> துலாம்: </h3><p>எதிர்பாராத முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வழக்கு தொடர்பாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். </p><h3>விருச்சிகம்: </h3><p>குடும்பத்தினர் உடைய ஒத்துழைப்பால் முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் தொடர்பாக நீங்கள் முக்கியமான நபர்களை சந்திக்கலாம். கவலைகள் விலகும். </p><h3>தனுசு: </h3><p>சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான காலம். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.</p><p></p><h3> மகரம்: </h3><p>இன்று நீங்கள் நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். குலதெய்வம் ஆலயம் சென்று வழிபடுவீர்கள்.</p><h3> கும்பம்: </h3><p>தாய் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். இன்று நீங்கள் புதிய உடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கையில் அதிக ஆர்வம் உண்டாகும். மனக்குழப்பம் விலகும். </p><h3>மீனம்: </h3><p>நீண்ட நாள் மனதில் உள்ள கவலைகளுக்கு ஒரு நல்ல விடை கிடைக்கும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை ஏன் மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில் செல்ல வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-worshiping-mathimuktheeswarar-temple-1786280220"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-worshiping-mathimuktheeswarar-temple-1786280220</id>
            <summary type="text">&amp;nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் பூ உலகத்திற்கு அவர்களுடைய குடும்பத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் பூ உலகத்திற்கு அவர்களுடைய குடும்பத்தினரை ஆசீர்வதிக்க வருகிறார்கள். அந்த வகையில், ஆடி அமாவாசை அன்று செல்ல வேண்டிய முக்கியமான ஆலயம் என்னவென்று பார்ப்போம்.
</p><p>திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதிமுக்தீஸ்வரர் திருக்கோவில் முன்னோர்களின் சாபம் மற்றும் தோஷங்களை போக்கக்கூடிய முக்கியமான பரிகார தலமாக இருக்கிறது. இங்கு அமைந்திருக்கக் கூடிய அரிசிலாற்றங்கரைநீராடி தர்ப்பணம் செய்வதன் வழியாக பித்ருக்கள் ஆசீர்வாதத்தை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. </p><p>
மேலும், வனவாசத்தின் பொழுது ஸ்ரீ ராமர் அவருடைய தந்தை தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் இறுதி சடங்குகளை செய்த போது பல இடங்களில் அவருக்கு கிடைக்காத மனநிறைவு இந்த ஆலயத்தில் கிடைத்ததாக புராணங்கள் சொல்கிறது.</p><p></p><p> மேலும், அவர் பிடித்து வைத்த பிண்டங்கள் சிவலிங்காமாக மாறியதாக நம்மப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் பொழுது நாம் எந்த ஒரு அமாவாசை அல்லது திதி நாளையும் பார்க்க வேண்டாம். </p><p>மனதார முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மேலும், ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? இந்த கோயில் சிறப்புகளை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5i9IVH-f5Ms?start=38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-09T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-is-true-lord-krishna-devotee-1786279265"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-is-true-lord-krishna-devotee-1786279265</id>
            <summary type="text">துவாரகையில் ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ண பகவானை சந்திக்க வருகிறார். வழக்கம்போல் கிருஷ்ண பகவானுடைய லீலைகளை பாடி மகிழ்ந்த அவர் ருக்மணி தேவியிடம் ஒரு கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>துவாரகையில் ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ண பகவானை சந்திக்க வருகிறார். வழக்கம்போல் கிருஷ்ண பகவானுடைய லீலைகளை பாடி மகிழ்ந்த அவர் ருக்மணி தேவியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். தாயே உலகம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் உடைய பக்தர்கள் கோடிக்கணக்கான இருக்கிறார்கள். </p><p>ஆனால், அவர்களில் யார் பகவானுக்கு மிகவும் பிரியமானவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். புன்னகையுடன் ருக்மணி பகவான் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்தக் கூடியவர். இருந்தாலும் பாண்டவர்கள் மீது அவருக்கு தனி அன்பும் பாசமும் இருப்பதை நான் உணர்கிறேன் என்று கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4da0c9-2291-45a4-9854-6f554b480950/26-6a78756386f5a.webp' /></p><p></p><p> நாரதர் சிரித்தபடி அப்படி என்றால் ஒரு சிறிய சோதனை செய்து பார்க்கலாமா என்கிறார். அதற்கு ருக்குமணியும் சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு சில தினங்கள் கழித்து கிருஷ்ணர் பகவான் திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிப்பது போல நடிக்க துவங்குகிறார்.</p><p> துவாரகை முழுவதும் பரபரப்பு ஏற்படுகிறது. அரச வைத்தியர்கள், முனிவர்கள் யாராலும் கிருஷ்ண பகவானுடைய அந்த வயிற்று வலியை போக்க முடியவில்லை. அப்போது நாரதர் இந்த வலிக்கு ஒரே ஒரு மருந்து தான் உள்ளது. </p><p>பகவானை நேசிக்கக் கூடிய அந்த ஒரு பக்தரின் பாத தூசியை அவரது தலையில் வைத்தால் மட்டுமே இந்த வலி நீங்கும் என்கிறார். அப்பொழுது, இந்த செய்தி துவாரகை முழுவதும் பரவத் தொடங்குகிறது. ஆனால், யாரும் முன் வரவில்லை. </p><p>எங்களுடைய பாத தூசியை பகவானுடைய தலையில் வைப்பதா? இது மிகப்பெரிய பாவம் அல்லவா? நாங்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்று அவர்கள் பின்வாங்குகிறார்கள். நாரதர் தேவர்களுடமும் முனிவர்களிடமும் பல அரசர்களிடமும் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf0f85a-0719-41da-8a5f-91dc03ba7757/26-6a7875643ff3a.webp' /></p><p></p><p> </p><p>அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள். இறுதியாக அவர் விருந்தாவனத்தில் இருந்த கோபிகைகளிடம் செல்கிறார். அவர்கள் கிருஷ்ணருக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியை கேட்டவுடன் பதறிப் போகிறார்கள். நாரதர் அவர்களிடம் உங்களுடைய பாத தூசியை கிருஷ்ண பகவருடைய தலையில் வைக்க வேண்டும். </p><p>ஆனால், அப்படி செய்தால் நீங்கள் நரகத்திற்கு கூட செல்ல நேரலாம் என்றார். அதை கேட்ட கோபிகைகள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. நாங்கள் நரகத்திற்கு சென்றாலும் பரவாயில்லை. எங்கள் கிருஷ்ண பகவான் நலமோடு இருக்க வேண்டும். அதுவே எங்களுக்கு போதுமானது என்கிறார்கள். </p><p>பிறகு அவர்களுடைய பாத தூசியை ஒரு துணியில் சேகரித்து நாரதர் இடம் கொடுத்தனர். நாரதர் உடனே அதை எடுத்துக்கொண்டு துவாரகைக்குத் திரும்ப, அந்த தூசியை கிருஷ்ணனுடைய தலையில் வைக்கிறார். </p><p>அடுத்த கனமே கிருஷ்ண பகவான் புன்னகையுடன் எழுந்து அமர்ந்து விடுகிறார். அவருடைய வயிற்று வலி மறைந்து விட்டது. அப்போது ருக்மணியும் அங்கிருந்து அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da99246-e82a-4aa2-88af-bf7f5474bec6/26-6a787564ef7e5.webp' /></p><p> </p><p>கிருஷ்ணர் மெதுவாக சொல்கிறார்" இதுதான் உண்மையான பக்தி". சொர்க்கம், நரகம், புண்ணியம், பாவம் என்று எதையும் பாராமல் தன்னை மறந்து தங்களையே இறைவனுக்கு ஒப்படைக்க கூடிய அந்த வாழ்க்கை தான் பரமபக்தி என்கிறார். </p><p>அப்போது, ருக்மணி கோபிகை களின் பக்தியின் ஆழத்தை உணர்ந்து மனமார்ந்த அவர்களை போற்றுகிறாள்.
 குறிப்பு: இந்த கதை வைணவ பக்தி மரபுகளில் பரவலாக செல்லக்கூடியது மகாபாரதத்தில் முதன்மை உரையில் இடம் பெறுவதில்லை. இது பக்தியை எடுத்துரைக்கும் பாரம்பரிய கதையாகவே கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-7-navapanjama-yoga-astroloy-prediction-1786275610"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-7-navapanjama-yoga-astroloy-prediction-1786275610</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தான் தன்னம்பிக்கை, மரியாதை தலைமைத்துவ பொறுப்புகள் ஆகிவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சனி பகவான் ஒழுக்கம், நீதி நேர்மை, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தான் தன்னம்பிக்கை, மரியாதை தலைமைத்துவ பொறுப்புகள் ஆகிவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சனி பகவான் ஒழுக்கம், நீதி நேர்மை, கட்டுப்பாடு ஆகிவற்றை குறிக்கக் கூடியவராக இருக்கிறார். </p><p>அந்த வகையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு கடக ராசியில் உள்ள சூரிய பகவானும் மீன ராசியில் இருக்கின்ற சனிபகவானும் மங்களகரமான நவபஞ்ச யோகத்தை உருவாக்கியிருக்கின்றனர்.</p><p> இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 5 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இதனால் யாருக்கு அதிக அளவில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5669705b-1d7d-4079-aad6-626b3a73901f/26-6a78671c4b1ef.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> நவபஞ்சமா யோகத்தால் இவர்களுக்கு சிந்தனையில் ஒரு புதிதான மாற்றம் பிறக்கும். நிறைய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் உண்டாகும். தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் உயர்ந்த இடத்தை பெற போகிறீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.</p><h3>
 மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு இரண்டாம் வீடான செல்வம் மற்றும் பேச்சு உரிமைக்குரிய இடம் என்பதால் இவர்களுக்கு தங்களுடைய பேச்சுக்களால் ஒரு மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் வெற்றி அடைவார்கள். எழுத்து மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> இவர்களுக்கு இந்த யோகத்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான வருமானமும் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள். தலை நிமிர்ந்து வாழக்கூடிய அமைப்பு உண்டாக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:40:21+00:00</updated>
        </entry>
    </feed>
