<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-16T17:06:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசிக்கு காதலே செட் ஆகாதாம்.. ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/cancer-zodiac-love-and-marriage-prediction-1784204875"></link>
            <id>https://ibcbakthi.com/article/cancer-zodiac-love-and-marriage-prediction-1784204875</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சந்திர பகவானின் வீடான கடக ராசியினர் எப்பொழுது மென்மையான மற்றும் அதிக அளவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இவர்கள் சந்திரனுடைய ஆதிக்கத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சந்திர பகவானின் வீடான கடக ராசியினர் எப்பொழுது மென்மையான மற்றும் அதிக அளவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இவர்கள் சந்திரனுடைய ஆதிக்கத்தில் இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றத்துடன் மிகுந்த குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.</p><p> இருப்பினும் இவர்கள் எளிதில் ஏமாற்றப்படக்கூடியவர்களாகவும் உள்ளார்கள். அதிலும், குறிப்பாக காதல் என்று எடுத்துக்கொண்டால் இவர்கள் மிகவும் தீவிரமானவர்கள். ஒரு விஷயத்தை முடிவெடுத்துவிட்டால் மற்றவர்கள் என்ன நினைத்தாலும் அதிலிருந்து அவர்கள் எப்பொழுதும் பின் வாங்குவதில்லை.</p><p></p><p> </p><p>இவர்கள் தங்களுடைய துணையை மிகுந்த ரசனையோடு நேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் அதிக அன்பு கொண்டிருப்பதால் தங்களுடைய துணை செய்யக்கூடிய தவறுகளையும் முழுமையாக மன்னித்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள். </p><p>கடக ராசி பொருத்தவரை இவர்கள் திருமண வாழ்க்கையில் மிகுந்த புரிதலோடு இருப்பது அவசியம். இருப்பினும் இரவில் எப்பொழுதும் தங்களுடைய துணையின் புரிதலுக்கு துணை நிற்கிறார்கள்.</p><p> இவர்கள் முடிந்தவரை சிவபெருமானை வழிபாடு செய்வது குடும்பத்தில் நல்ல புரிதலை உண்டு செய்யும். மேலும், கடக ராசிக்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியில் தெரிந்து கொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/l1dGGd9pLew" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T16:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (17-06-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-17-2026-friday-1784204051"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-17-2026-friday-1784204051</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 வருமானத்தை மேம்படுத்த சில முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப நல...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:
</h3><p> வருமானத்தை மேம்படுத்த சில முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப நல்ல முன்னேற்றம் உண்டு.</p><h3> 
ரிஷபம்:
</h3><p> குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். புதிய வீடு வாங்கும் தொடர்பான சிந்தனை மேலோங்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.</p><h3> 
மிதுனம்:
</h3><p> இன்று மனதில் குழப்பமும் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆர்வமும் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புரிதல் உண்டாகும் நாள்.
</p><h3> கடகம்:
</h3><p> உணவு சார்ந்த துறைகளில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரின் அறிமுகம் பெறுவீர்கள்.</p><h3>
 சிம்மம்:
</h3><p> வியாபாரம் தொடர்பான பணிகளை நீங்கள் நிதானத்துடன் செயல்படுத்துவது அவசியம். சுபகாரிய பேச்சுக்களில் மிகவும் கவனம் வேண்டும். தெய்வீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> இன்று உடலும் மனமும் சற்றுசோர்வாக காணப்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களுடைய வார்த்தைக்கு குடும்பத்தினர் மதிப்பளிக்காமல் போகலாம்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">துலாம்:</span></p><p> உறவினர்களிடையே நல்ல ஆதாயம் உண்டாகும். அரசால் உங்களுக்கு நல்ல அணுகுலம் கிடைக்கும். அடுத்தவருக்கு ஆலோசனை செல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. </p><h3>
விருச்சிகம்:</h3><p>
 வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணம் செல்லலாம். எதிலும் பேராசை குறைத்துக் கொள்வது அவசியம். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். </p><h3>தனுசு:
</h3><p> உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். சமுதாயப் பணிகளில் உங்களுக்கு செல்வாக்கு உயரும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் தாமதங்களை சந்திக்கலாம்.</p><p></p><p>
</p><h3> மகரம்:</h3><p>
 இன்று துணைவியார் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.</p><h3>
 கும்பம்:
</h3><p> செயல்பாடுகளில் இருந்து வந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இன்று சமுதாயப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையாக செயல்படுவது அவசியம். ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் விலகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் 6 ஆம் பாவம்..தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6th-place-in-horoscope-and-secret-behind-it-1784203743"></link>
            <id>https://ibcbakthi.com/article/6th-place-in-horoscope-and-secret-behind-it-1784203743</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. அப்படியாக, ஆறாம் பாவம் என்பது மிகவும் முக்கியமானதாக இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. அப்படியாக, ஆறாம் பாவம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. </p><p>ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவம் வேலை செய்ய தொடங்குகிறது என்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் பிடித்தது மட்டும் கிடைப்பதில்லை நம்முடைய குண நலன்களை அவை மாற்றத்து தொடங்குகிறது. </p><p>அதாவது ஆறாம் பாவம் என்றால் ஜோதிடத்தில் எதிரி கடன், நோய் மட்டுமில்லை அவை தான் ஒழுக்கம், உழைப்பு, புதுமை, சுயகட்டுப்பாடு போன்ற குணங்களை குறிக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376da651-956b-454a-9ab1-c9dcffcc03d6/26-6a58c9e08d1e0.webp' /></p><p>ஆறாம் பாவத்தில் ஒருவருக்கு வக்கிர செவ்வாய் இருப்பவர்கள் வெளியில் இருக்கக்கூடிய எதிரிகளை ஜெயிப்பதை விட இவர்கள் உள்ளுக்குள் இருக்கின்ற கோபத்தை தான் முதலில் ஜெயிக்க கற்றுக் கொள்ள வேண்டும். </p><p>அதை போல், ஆறாம் பாவத்தில் புதன் பகவான் இருக்கிறார் என்றால் இவர்கள் எப்பொழுதும் பேசுகின்ற விதம் முடிவு எடுக்கின்ற விதத்தை கட்டாயம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். </p><p>அதேபோல், ஆறாம் பாவத்தை வக்கிர புதன் அமைந்திருந்தால் தேவையில்லாத ஒரு விஷயத்தை எப்பொழுதும் மீண்டும் மீண்டும் போட்டு குழப்பிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64502dc-78ba-499d-92d1-2abd1a08c5da/26-6a58c9e144820.webp' /></p><p> </p><p>ஒருவருக்கு ஆறாம் பாவத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால் அங்கு ஒழுக்கம் பொறுமை தினம் தொடர்ந்து உழைக்கிற பழக்கத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆறாம் பாவத்தில் வக்ரசனி இருக்கிறது என்றால் இவர்களுக்கு தாமதமாக வந்தாலும் மனம் தளராமல் இவர்கள் முயற்சி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஆக, ஆறாம் பாவம் நமக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய முக்கியமான பாடம் நம்முடைய ஜாதகத்தில் எதிரிகள் எப்பொழுதும் வெளியே இல்லை நம்மிடம் தான் இருக்கிறார். அதை முதலில் நாம் வென்று விட்டால் மற்ற எல்லாவற்றையும் நாம் எளிதாக வென்று விடலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகப்பெருமான் தமிழ் கடவுளா? இல்லையா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/is-murugar-is-tamil-god-what-history-says-about-it-1784202322"></link>
            <id>https://ibcbakthi.com/article/is-murugar-is-tamil-god-what-history-says-about-it-1784202322</id>
            <summary type="text">இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பரம்பொருள் என்பவர் ஒருவரே ஆனால் அவரே காலத்திற்கு தகுந்தார் போல் வெவ்வேறு இடங்களிலும் நேரத்திலும் அவதாரம் எடுத்து இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பரம்பொருள் என்பவர் ஒருவரே ஆனால் அவரே காலத்திற்கு தகுந்தார் போல் வெவ்வேறு இடங்களிலும் நேரத்திலும் அவதாரம் எடுத்து இருக்கிறார். ஆதலால், நாம் எப்பொழுதும் இறைவனை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் அடக்குவது தவறானது என்று சொல்லப்படுகிறது. </p><p>
மேலும், இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் மதச் சடங்குகள் என்பது வெறும் நம்பிக்கைக்கானது மட்டுமல்ல அதற்குப் பின்னால் நமக்கு நிறைய தத்துவங்களையும் உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.</p><p> மேலும், கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒரிசா, மகாராஷ்டிரா காஷ்மீர், இந்தோனேசியா போன்ற பல்வேறு இடங்களிலும் இருந்ததற்கான கல்வெட்டு மற்றும் நாணயச் சான்றுகள் இருக்கிறது.</p><p></p><p> </p><p>அதாவது படையெடுப்புகளால் பல கோவில்கள் சிதைக்கப்பட்டதால் பல ஆதாரங்கள் மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு பக்தர்கள் எப்பொழுதும் ஆன்மீகத்தை சினிமாவில் தேடுவதை நிறுத்த வேண்டும். </p><p>முருகப்பெருமான் பிரபஞ்சத்தின் தெய்வம் என்பதால் அவரை வெறும் மனித பார்வையோடு பார்ப்பது மட்டுமல்லாமல் பக்தி மார்க்கத்தோடு உயர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் பிரபல முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளர் ஆன விஜயகுமார் அவர்கள்.</p><p> அவர் முருகப்பெருமான் தமிழ் கடவுளா இல்லையா என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை விளக்குகிறார். அதை பற்றி பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dGgLv4U4n14" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதம் ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்யவேண்டிய சமயபுரம் மாரியம்மன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/samayapuram-temple-in-tamil-1732860294"></link>
            <id>https://ibcbakthi.com/article/samayapuram-temple-in-tamil-1732860294</id>
            <summary type="text">திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சர்வ வல்லமை படைத்தவளாக நோய் தீர்க்கும் தாயாக காவல் காக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சர்வ வல்லமை படைத்தவளாக நோய் தீர்க்கும் தாயாக காவல் காக்கும் கடவுளாக கோடிக்கணக்கான பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றாள்.</p><p> சமயபுரம் கொள்ளிடம் நதிக்கு வடக்கே பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற பல பெயர்கள் இவ்வூருக்கு உண்டு. கண்ணனூர் ஹொய்சள மன்னன் வீர சோமேஸ்வரன் ஆட்சியில் தலைநகரமாக விளங்கிற்று. </p><p> இவ்வூரில் செல்லாயி அம்மன் கோவில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், போஜிஸ்வரன் கோவில் ஆகியவை உள்ளன. இவை எல்லாவற்றையும் விட மாரியம்மன் கோவில் மிகுந்த சிறப்பும் செல்வாக்கும் பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6e3915-6e92-4dc9-b6d1-b16895807c0e/24-6749598789d5e.webp' /></p><h3>பிறந்த வீட்டுச் சீர்
</h3><p>மாரியம்மன் ஆண்டுதோறும் தை பூசத்தன்று காவிரி நதிக்கரைக்குப் சென்று தன் தமையனைச் சந்திப்பாள். ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் தங்கைக்கு அலங்காரச்சீர் கொண்டு வந்து கொடுப்பார். அன்றைக்கு ஸ்ரீரங்கம் ஊரில் இருக்கும் குடும்பங்கள் திருமணம் செய்து கொடுத்த தங்கள் மகள்களுக்கு சீர் கொண்டு போய் கொடுப்பார்கள். </p><p>தைப்பூசத்திற்கு முன்பு பத்து நாள் திருவிழா நடக்கும் தைப்பூசம் அன்று கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வட காவிரிக்கு வந்து திருவரங்கத்தின் ரங்கநாதரிடம் சீர் பெற்று இரவு முழுக்க அங்கேயே ஆற்றங்கரையில் தங்கியிருந்து பின்பு அதிகாலையில் தன் கோவிலுக்கு வருவாள். </p><p>விடிய விடிய அன்று மக்கள் கூட்டம் காவிரி நதிக்கரையில் அம்மனைப் பார்க்க வரும். பக்தர்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து குடும்பத்தோடு தை மாத முழு நிலா அன்று நிலவின் ஒளியை ரசித்து பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைத்து வீடு திரும்புவார்கள்.</p><p></p><h3>புலம்பெயர்ந்த அம்மன்</h3><p> 
ஆதியில் மாரியம்மன் வைஷ்ணவி தேவியாக ஸ்ரீரெங்கத்தில் இருந்தாள். அதன் உக்கிரம் தாங்க இயலாமல் அவளை அங்கிருந்து அகற்ற முடிவு செயதனர். இப்போது இனாம் மாரியம்மன் என்று அழைக்கும் இடத்தில் கொண்டு வந்து வைத்து இளைப்பாறினர். பின்பு அங்கிருந்து தற்போது கோயில் கொண்டுள்ள இடத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8f3142-8f45-4aa8-984d-3544bc5639db/24-674959880c4c2.webp' /></p><h3> 

கோயில் வரலாறு</h3><p>
விஜயநகர மன்னன் இங்கு படையெடுத்து வரும்போது கண்ணனூரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் வணங்கி இப்போரில் வெற்றி பெற்றால் அம்மையே உனக்கு பெரிய கோவில் கட்டுவேன் என்று வேண்டிக் கொண்டான். </p><p>அவன் வெற்றி பெற்றதும் அவனது பிரதிநிதியாக திருச்சியை ஆட்சி செய்து வந்த விஜய் ரங்க சொக்கநாதனால் 1706 இல் அம்மனுக்குப் பெரிய கோவிலைக் கட்டினார். கண்ணனுர் மாரியம்மன் காலப்போக்கில் சமயபுரம் மாரியம்மன் ஆகிவிட்டாள்.&nbsp;&nbsp;</p><h3>அம்மனின் தோற்றம்
</h3><p>மாரியம்மன் சிலை சுதையினாலும் மூலிகையினாலும் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. இங்கு மாரியம்மன் எட்டு கைகளும் சர்ப்பக் குடையும் காலில் அசுரர்களை மிதித்த படியும் காட்சியளிக்கின்றாள். அம்மன் கோபமாக இல்லாமல் அமைதி தவழும் முகத்துடன் விளங்குகின்றாள்.</p><p> ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு லலிதாசனத்தில் அரசியாக வீற்றிருக்கின்றாள். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை விரித்து இருக்கின்றது. எட்டு கைகளிலும் கத்தி உடுக்கை தாமரை மலர் திரிசூலம் கபாலம் பாசம் காண்டீபம் காண்டாமணி ஆகியவற்றை ஏந்தி இருக்கின்றாள். </p><p>இச்சிலை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் உண்டு. 1991 ஆம் ஆண்டு உற்சவர் சிலையை ஜி பாலமுருகன் ஜி முரளி குமார் என்ற சகோதரர்கள் தானமாக வழங்கினர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd94ba2-7e86-419e-ae04-378d9e9becba/24-67495988821ff.webp' /></p><h3>நேர்த்திக்கடன்</h3><p>
சமயபுரத்தில் மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற அம்மனுக்குரிய நேர்த்திக்கடன்கள் அதிக எண்ணிக்கையில் நிறைவேற்றப்படுகின்றன

சிலர் பச்சை மூங்கிலில் மஞ்சள் துணியில் தூளி கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து கோவிலை மூன்று சுற்று சுற்றி வருகின்றனர். </p><p>குழந்தைக்கு நோய் சுகமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் இத்தகைய நேர்ச்சையை செய்கின்றனர். சமயபுரம் அம்மனை வேண்டிக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு விடும். நோய் குணமாகும் என்று நம்பிக்கை நெடுங்காலமாக நிலவுகின்றது.</p><p>

தலைமுடி காணிக்கை அளிப்பவர்கள் இங்கு அதிகம். ஆண், பெண் வேறுபாடின்றி அம்மனுக்குத் தங்கள் தலை முடியைக் காணிக்கை ஆக்குகின்றனர். குறிப்பிட்ட சில குடும்பத்தினர் தொடர்ந்து முடி நீக்கும் இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h3>வேம்பின் சிறப்பு
</h3><p>சமயபுரத்தில் தலவிருட்சமாக வேப்பமரம் இருக்கின்றது. இவ்வேப்ப மரத்தில் பெண்கள் தங்கள் முந்தானையைக் கிழித்து ஒரு கல்லை வைத்து குழந்தை தொட்டில் போல கட்டி விடுகின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை ஒரு நேர்ச்சையாக செய்து அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.</p><p> குழந்தை பிறந்ததும் இதை நீக்கிவிடும் மரத்திலிருந்து நீக்கி விடுகின்றனர். மாங்கல்ய பெரு வேண்டுவோர் மஞ்சள் கயிறு காட்டுகின்றனர். 

தீர்த்தமாக மாரி தீர்த்தம் இருக்கின்றது. ஆடி வெள்ளிகளில் இங்கு நிறைய பக்தர்கள் வந்து இறைவியை வணங்கிச் செல்கின்றனர்.&nbsp;</p><h3>சித்திரைத் தேர்
</h3><p>சித்திரையில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. சித்திரை மாசம் தேர் திருவிழா விழாவின்போது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பிரசாதம் கொண்டு வரப்படுகின்றது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff6ac379-a1c8-4ad0-82f1-00b49dc9416c/24-6749598904673.webp' /></p><h3>

பச்சை பட்டினி விரதம்
</h3><p>சமயபுரத்தில் முக்கியமான நிகழ்வு அம்மன் உலக நன்மைக்காக பட்டினி கிடந்து விரட்ஜ்ம் இருக்கும் நிகழ்வாகும். மாசி கடைசி ஞாயிறு அன்று தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருக்கும் நாட்களாகும். அந்தக் காலங்களில் அம்மனுக்கு நைவேத்தியம் கிடையாது. அவள் உலக நன்மைக்காக விரதம் இருப்பதால் அவளுக்கு இளநீர், பால் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்படுகின்றது.</p><h3>பூச் சொரிதல் விழா</h3><p>
மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று பூச்சொரிதல் விழா நடைபெறும். அன்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வாள். அன்று பக்தர்கள் மேளதாளத்துடன் கூடை கூடையாகப் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்குப் படைக்கின்றனர் கருவறையில் அம்மன் கழுத்து வரை பூக்கள் குவிந்து விடும். </p><h3>
 
கோயில் திறப்பு&nbsp;</h3><p>இக்கோயில் காலை அதிகாலையில் திறக்கப்பட்டால் இரவு ஒன்பதரை மணிக்குத்தான் அடைக்கப் படுகின்றது. தினமும் நான்கு வேளை பூஜை நடைபெறுகின்றது. தொடர்ந்து பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருப்பதால் கோயிலை இடையில் பூட்டி வைப்பது கிடையாது.</p><p></p><p> </p><h3>பௌத்த கோயில்
</h3><p>சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆரம்பத்தில் பௌத்த கோவிலாக இருந்தது என்பதற்கு அங்கு முடி காணிக்கை வழங்குதல், தன்னை வருத்தும் நேர்த்திக்கடன்கள் செய்தல், சமயம் மற்றும் கண்ணனுர் என்ற பெயர்கள், நதிக்கரையில் பௌர்ணமி அன்று மக்கள் ஒன்றாக கூடி கட்டுச்சோறு உண்டு மகிழ்தல் ஆகியவை ஆதாரங்களாக உள்ளன. </p><p>சமயம் என்பது பௌத்த சமயக் கலைச் சொல்லாகும். இச்சொல் பௌத்த துறவிகள் தங்களுடைய மத நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜப்பானில் சொன்மையா என்றும் சீனாவில் சான் மேயே என்றும் இச்சொல் இன்றும் பொருள் மாறாமல் வழங்குகின்றது
 பின்னர் இச்சொல் வேறு பல மதங்களிலும் வேறு பல பொருள்களில் வழங்கியது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f8e207-754b-4c9b-a694-303411c70fce/24-6749598972e67.webp' />&nbsp;</p><h3>பல ஊர்களில் புத்தர் கோயில்கள்</h3><p>
திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் பௌத்த சமயம் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கியது. இந்திரனுக்கு கோவில் இருந்த ஊர்கள் கண்ணனூர், கண்ணபுரம், என்று தற்போது வழங்கப்படுகின்றன. சங்கமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம் ,கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பொன் பற்றி, புத்தக்குடி, உறையூர் கோட்டப்பாடி, மயூரப்பட்டணம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் இருந்த புத்தருக்கு கோவில்கள் இருந்தததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h3>தாரா சிலைகள் வைத்தல்
</h3><p>கண்ணனூர், சங்கமங்கை, புன்னைநல்லூர், பட்டீஸ்வரம் போன்ற ஊர்களில் இருக்கும் பெண் தெய்வங்கள் ஆரம்பத்தில் பௌத்த பெண் தெய்வம் ஆகும். பௌத்த சமயத்தில் தாரா பெண் புத்தராகப் பல ஊர்களிலும் தெய்வமாக வைத்து வழிபடப்பட்டாள்</p><p>. தாராவில் தாரா வகைகள் உண்டு. கண்ணனூரில் எழுந்தருளி இருப்பவள் மஞ்சள் தாரா. இவள் அமைதியான தோற்றம் உடையவள். அரசி போல லலிதாசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள். பச்சை தாரா என்பவள் பச்சைக்காளி ரூபமாக உக்ர ரூபத்தில் வழிபடப்பட்டாள். வெள்ளை தாரா சரஸ்வதியாக பேர் பெற்றாள்.&nbsp;&nbsp;</p><h3>தலைமுடி காணிக்கை
</h3><p>பௌத்தர் கோவில்கள் இருந்த இடங்களில் மட்டுமே இன்றைக்கும் தலைமுடி காணிக்கையாக கொடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது . புத்த துறவிகள் தங்கள் தலையைத் தாங்களே மொட்டை அடித்துகொள்வது அவர்களின் சமய நெறியாகும். </p><p>புத்த மடாலயங்களுக்கு சிகிச்சைக்காகவும் இந்திரன், தாரா போன்ற தெய்வங்களை வணங்க வந்த பொது மக்களும் துறவிகளைப் போல முடி காணிக்கை செலுத்தி தம்மை வருத்தும் நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர். 
மற்ற இந்து தெய்வக் கோவில்களில் தலைமுடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் கிடையாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae1a470-9349-4ad2-b833-acc0ec42a7e6/24-67495989e4fde.webp' /></p><h3>கடுமையான சமயப் பயிற்சிகள்
</h3><p>பட்டினி கிடப்பது, அலகு குத்திக் கொள்வது, தீச்சட்டி எடுப்பது, பூக்குழி இறங்குவது போன்ற கடும் பயிற்சிகள் பௌத்த துறவிகளிடம் காணப்பட்டன. இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இவற்றைச் செய்வது அவர்களின் சமய நெறிமுறைகளில் ஒன்றாக இருந்தது.</p><p> பின்னர் புத்தர் மீது பக்தி கொண்ட பொதுமக்களும் இத்தகைய சடங்குகளை நேர்ச்சையாக செய்யத் தொடங்கினர். புத்தர் வழிபாடு மறைந்த பிறகும் கூட வழிபாட்டுச் சடங்குகளை பின்பற்றி வந்த மக்கள் பிடிவாதமாக அவற்றை விட்டு விடாமல் தொடர்ந்து பற்று உறுதியோடு தொடர்ந்து செய்தனர். தெய்வங்களின் பெயர் மாறினாலும் தங்கள் வழிபாட்டுச் சடங்குகளை பொது மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை.&nbsp;</p><p></p><h3>நோய் தீர்க்கும் காவல் தெய்வங்கள்
</h3><p>பௌத்தர்களை முதன் முதலில் பெரிய பெரிய சிலைகளைத் தங்கள் கோவில்களில் வைத்தனர் புத்தருக்கு மிகப்பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. தாராவுக்கும் அவலோகதீஸ்வரருக்கும் பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. செப்புத் திருமேனிகளும் உருவாக்கப்பட்டன.</p><p> பெரிய தங்க புத்தர் சிலையை உடைத்து ஸ்ரீரங்க கோயிலின் திருமதில் கட்டியதாக குரு பரம்பரை எடுத்துரைக்கின்றது. நாகப்பட்டினத்தில் 300க்கும் அதிகமான புத்தர் சிலைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. எனவே புத்தர் கோயிலில் தெய்வச்சிலைகள் நான்கு கைகள் ஆறு கைகள் மூன்று முகம் என்று பல உருவங்களில் இருந்தன. </p><p>தாரா சிலைகள் ஒரே முகத்துடன் பல கைகளுடன் தண்டனை கொடுக்கும் காவல் தெய்வங்களாக ஆயுதங்களை ஏந்தி இருந்தன. வசுதாரா சிலைகள் சில தாமரை மலர்களைப் பிடித்த படி காட்சியளித்தன. பௌத்த மடங்களில் மருத்துவ சேவை நடந்ததனால் இங்குள்ள பௌத்த ஆண், பெண் தெய்வங்கள் நோய் தீர்க்க வல்ல தெய்வங்களாகப் போற்றப்பட்டன. </p><p>அவ்வாறே கண்ணனூர் என்ற சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மக்களை நோயில் இருந்து காக்கும் கடவுளாக காவல் தெய்வமாக இருந்து வருகிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341</id>
            <summary type="text">சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு மாதாந்திர பூஜைகளுக்காக ஜூலை 16 இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. </p><p>இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய் அபிஷேகம், உஷா பூஜை, உச்ச பூஜை தீபாரதனை, மலர் அபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகளும் நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d6d10aa-68de-4fe2-80ba-b94180f0f3bf/26-6a58c07f5d3f4.webp' /></p><p></p><p> </p><p>கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கும் சிறப்பு பூஜைகளும், தரிசனமும் நடைபெற உள்ளது.</p><p> பிறகு ஜூலை 21 ஆம் தேதி இரவு ஹரிவராசனத்துடன் கோவில் நடை சாற்றப்படுகிறது, மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்து அருள் ஆசி பெறுவதற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:29:31+00:00</updated>
        </entry>
    </feed>
