<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-17T15:08:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (18-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-18-2026-1784292704"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-18-2026-1784292704</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 இவர்களுக்கு குழந்தைகள் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:
</h3><p> இவர்களுக்கு குழந்தைகள் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். </p><h3>
ரிஷபம்:
</h3><p> வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவைப்பெறும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள்.
</p><h3> மிதுனம்:
</h3><p> குடும்பத்தினருடன் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்கின்ற முயற்சி கைக்கூடி வரும். தொலைதூரத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். </p><h3>
கடகம்:
</h3><p> விடாப்படியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடிகள் வரலாம்.தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> வேலையில் திடீர் இடமாற்றம் பெறலாம். தாய் வழி உறவினர்களால் சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். சகோதரர்கள் பற்றிய புரிதல் கிடைக்கும். பண பிரச்சினை விலகும்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> இன்று தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள் விலை உயர்ந்த பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அரசு தொடர்பான வேலையில் சில பின்னடைவு சந்திக்கலாம்.
</p><h3> துலாம்:
</h3><p> இன்று பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்ச்சியில் முன்னேற்றம் உண்டு.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக முடிவுகளில் மிகுந்த கவனம் வேண்டும். விவசாய பணிகளில் நல்ல லாபம் உண்டு.</p><p></p><p>
</p><h3> தனுசு:</h3><p> 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. </p><h3>
மகரம்:
</h3><p> தேவை இல்லாத சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். </p><h3>
கும்பம்:
</h3><p> இன்று வரவுகளால் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வலியை மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் யோகம். கைகூடிவரும்.
</p><h3> மீனம்:
</h3><p> வேலை தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுடைய முன்கோபத்தால் திடீர் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறருடைய கருத்தை ஆலோசனை செய்வது அவசியம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைப் பேறு வழங்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thirukoshtiyur-temple-in-tamil-1733122196"></link>
            <id>https://ibcbakthi.com/article/thirukoshtiyur-temple-in-tamil-1733122196</id>
            <summary type="text">சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் விளக்கு நேர்த்திக் கடனுக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும். இங்கு மூலவர் சௌமிய நாராயண பெருமாள் ஆவார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் விளக்கு நேர்த்திக் கடனுக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும்.</p><p> இங்கு மூலவர் சௌமிய நாராயண பெருமாள் ஆவார். இத்தலம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். </p><p>இக்கோவில் பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். </p><p>தாயார் மகாலட்சுமி தனிச் சன்னதி கொண்டுள்ளார். இவரை நிலமா மகள், குலமா மகள், திருமா மகள் என்றும் அழைப்பர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752dd8d5-4e23-4492-a469-50eb4f8e9201/24-674d5c51eb134.webp' /></p><h2>பெருமாள் அருளும் பிள்ளை வரம்
</h2><p>திருக்கோஷ்டியூருக்கு இரண்டு வித சிறப்புகள் உண்டு. ஒன்று இங்கு பிள்ளை வேண்டுவோர் விளக்கு பிரார்த்தனை செய்வர். இரண்டு, பிள்ளை இருந்தும் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்கள் பிள்ளையைப் பெருமாளுக்கு தத்தாகக் கொடுத்து திரும்பப் பெற்றுச் செல்வர்.</p><p> தங்கள் பிள்ளையைத் தத்துக் கொடுக்கக் கருவறை முன்பு நிறுத்தும்போது கோவில் பட்டர் குழந்தைக்கு பெருமாளின் ஒரு பெயரைச் சூட்டி அவர்களிடம் பிள்ளையைத் திரும்ப கொடுப்பார். அன்று முதல் அக்குழந்தை பட்டர் சூட்டிய பெயரால் அழைக்கப்படும். </p><p>10, 15 வயது சிறுவர் சிறுமிகளையும் இவ்வாறு தத்து கொடுக்கும் வழக்கம் உண்டு. பெருமாளுக்கே பிள்ளையைத் தத்து கொடுத்து திரும்பப் பெறுகின்ற இந்நடைமுறைவேறு எந்தக் கோவிலிலும் கிடையாது. &nbsp;</p><p></p><h2>கருவறைக் கடவுளர்
</h2><p>திருக்கோஷ்டியூர் கருவறையில் சௌமிய நாராயணப் பெருமாளைத் தவிர மது கைடபர், இந்திரன், புத பகவானின் மகன் புரூரவச் சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோர் உள்ளனர். </p><p>பெருமாளை வணங்கி அருள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் காணப்படும் கோவில் இதுவாகும்.&nbsp;&nbsp;</p><h2>பிள்ளைவரம் தரும் பிரார்த்தனை கண்ணன்</h2><p>
கருவறையில் மூலவருக்கு அருகில் சந்தானகிருஷ்ணன் தொட்டிலில் ஆடிக் கொண்டிருப்பார். பிள்ளை வரம் அருளும் இவரைப் இவரை பிரார்த்தனை கண்ணன் என்பர்.&nbsp;&nbsp;</p><h2>அஷ்டாங்க விமானம்</h2><p> 
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் அஷ்டாங்க விமானத்தை கொண்டது ஒரு விமானத்தில் பொதுவாக ஆறு அங்கங்கள் (ஸடாங்கம்) உண்டு. </p><p>அவை அடித்தளம், சுவர், கூரை, கழுத்து, சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகியவை. இந்த ஆறு அங்கங்களுடன் பெருமாள் தாயார் கருவறைகளையும் சேர்த்து அஷ்டாங்க விமானம் என்பர். அதாவது பிரஸ்தரம் எனப்படும் கூரைக்கும் கிரீவம் எனப்படும் கழுத்துக்கும் இடையில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சன்னதிகள் அமைக்கப்படும். </p><p>இந்த அமைப்பை அஷ்டாங்க விமானம் என்பர். அஷ்டாங்க விமானம் இருக்கும் கோவில்களில் பெருமாள் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று பல கோலங்களில் காட்சியளிப்பார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59d6d8b-6c10-4acd-b75e-ecd091f22ef7/24-674d5c51378dc.webp' /></p><p>சேரன்மாதேவியில் உள்ள இராம சுவாமி கோவில், மதுரை கூடல்ழகப் பெருமாள் கோவில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜர் கோவில் ஆகியவை அஷ்டாங்க விமானங்களைக் கொண்டவை.</p><p>பல கோலங்களில் பெருமாள் திருக்கோஷ்டியூரில் பல கோலங்களில் பெருமாளைத் தரிசிக்கலாம். கீழ்த்தளத்தில் பெருமாள் நர்த்தன கிருஷ்ணராக காட்சி தருவார். முதல் தளத்தில் பாற்கடலில் சயனிக்கும் தேவலோகப் பெருமாள் ஆகக் காட்சியளிப்பார். இரண்டாம் தளத்தில் இந்திரனின் தம்பி உபேந்திரன் பெயரில் உபேந்திரநாராயணனாக நின்ற கோலத்தில் தோன்றுவார். மூன்றாம் தலத்தில் வைகுண்ட லோகத்தில் இருக்கும் வைகுண்ட நாதர் ஆக பரமபதக் காட்சி அளிப்பார்.</p><h2>'நான் செத்து வா'
</h2><p>நாராயண பக்தர்களுக்கு வைகுந்தம் செல்லும் வழியைக் காட்ட விடும் என்று விரும்பிய இராமானுஜர் அவர்கள் இவ்வூரில் உள்ள சிறந்த விஷ்ணு பக்தரான திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டிற்கு வந்தார். திருக்கோஷ்டியூர் நம்பி வீட்டுக் கதவை இராமானுஜர் தட்டவும் 'யார் அங்கே' என்று உள்ளே இருந்த படி நம்பி கேட்டார். இராமானுஜர் 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்ரு பதில் கூறினார். நம்பி உள்ளே இருந்தபடி 'நான் செத்து வா' என்று சொல்லிவிட்டார். </p><p>இராமானுஜரும் திரும்பிப் போய்விட்டார் மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். இவ்வாறு 17 முறை வந்தவர் 18-வது முறை யார் அங்கே என்று கேட்டதும் 'அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். சரி உள்ளே வா என்று சொல்லிய திருக்கோஷ்டியூர் நம்பி வைகுந்தம் செல்லும் வழி அஷ்ட எழுத்து மந்திரத்தை ஜெபிப்பதாகும் என்று இ ராமானுஜரிடம் சொன்னார்.&nbsp;</p><p></p><p>இராமானுஜர் அகமகிழ்ந்து திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து 'இதை நான் எல்லோருக்கும் சொல்லப் போகிறேன்' என்றார். நீ வேத ரகசியத்தை பிராமணர் அல்லாத மற்றவர்களுக்குச் சொன்னால் அவர்கள் வைகுந்தம் சேர்வர். அவர்களுக்குச் சொன்ன பாவத்துக்காக நீ நரகம் புகுவாய் என்றார். </p><p>தெய்வ ரகசியத்தை மற்ற சாதியினருக்கு சொல்லக்கூடாது என்பது ஐதீகம். இராமானுஜர் சிறந்த மனித நேயராக இருந்த காரணத்தினால் 'நான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் வைகுந்தம் அடைய வேண்டும்' என்ற நல்லெண்ணத்துடன் சரி என்று தலையாட்டி விட்டு தன் சீடர்களுடன் வந்தார்.</p><p>திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டில் இருந்து கோவிலை நோக்கி இராமனுஜர் தன் சீடர்களுடன் வரும்போது அங்கிருந்த ஒரு கிணற்றை (சிம்மக் கிணற்றை) எட்டிப் பார்த்தார். கிணற்று நீரில் பகவான் தெரிந்தார். பெருமாளை பார்த்ததே பெரும் புண்ணியம் என்று கருதிய ராமானுஜர் தன்னுடைய கருத்து சரி தான் நினைத்ததைச் செய்ய பெருமாள் அனுமதி அளித்து விட்டார் என்ற எண்ணத்துடன் கோபுரத்தின் மேல் ஏறினார். சீடர்கள் இவர் கோபுரத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ என்று அஞ்சினர். </p><p>ஏனென்றால் அந்த காலத்தில் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்தும் கோபுரத்தில் இருந்தும் மதுரையில் சுந்தரபாண்டியன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்தும் ஆட்கள் கீழே விழுந்து உயிர் துறந்த நிகழ்வுகள் நடந்ததுண்டு. எனவே சீடர்கள் அஞ்சினர். ஏன் எதற்கு என்று கேட்கவும் அஞ்சினர். இருந்தாலும் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
</p><p>இராமானுஜர் கோவில் கோபுரத்தின் உச்சிக்குப் போய் எல்லோரையும் இங்கு வாருங்கள் என்று ஊர் மக்களை அழைத்தார். ஊர் மக்கள் வந்து கீழே கூடியதும் 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஜெபித்து வந்தால் உங்களுடைய பாவங்கள் தொலைந்து நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்' என்று சொன்னார். இவ்வாறு ஊர் மக்களுக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு இடமளித்த கோவில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f8d12dc-52de-4fd3-9942-97a6ea7cab2c/24-674d5c52679c0.webp' /></p><p>
</p><h2>கதை ஒன்று
</h2><h3>புரூரவன் கங்கை கொணர்ந்த கதை</h3><p>
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் கோவிலில் புதன் பகவானின் மகனான புருரவச் சக்கரவர்த்தி பற்றிய கதை ஒன்று உண்டு புருறவன் புதன் மற்றும் இலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவன் இவன் கே சி என்ற அசுரனிடம் சிக்கி இருந்த ஊர்வசியை மீட்டான் ஊர்வசியுடன் இல்லறம் நடத்தி ஆய்வு என்ற மகனை பெற்றெடுத்தான் அதன் பின்பு ஊர்வசி இவனை பிரிந்து இந்திரலோகம் சென்றதால் இவன் மனம் வெறுத்து துறவியாக வாழ்ந்தான் ஊர்வசி புருஉறவு சக்கரவர்த்தி பற்றி நாட்டுப்புறக் கதைகள் வில்லுப்பாட்டு போன்றவை தமிழ்நாட்டில் நிறைய உண்டு . </p><p>அக்கறைகளில் ஊர்வசிக்கும் பரூர் அவளுக்கும் ஒன்பது குழந்தைகள் பிறக்கின்றன அவற்றில் எட்டு குழந்தைகளை விலங்குகள் தின்று விடுகின்றன மிஞ்சி இருக்கும் ஒரே குழந்தையின் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டவர்களும் கௌரவர்களும் இவன் பிரிந்து சென்ற தன் மனைவியை மீண்டும் பிரிந்து சென்ற தன் மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று தவமிருந்து நோன்பு நோற்றான் என்ற நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டில் இடம் பெற்று இருக்கின்றன அவ்வாறு அவன் தவம் இருந்த இடங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர் ஆகும்.&nbsp;&nbsp;</p><p></p><p>புரூரவன் திருக்கோஷ்டியூரில் தங்கி இருந்து இக்கோவிலில் பல திருப்பணிகளைச் செய்தான். அவ்வாறு திருப்பணிகள் செய்து கொண்டிருக்கும் காலத்தில் மகா மகம் வந்தது. மகா மகத்தன்று கங்கையில் நீராடுவதே தனிச் சிறப்பு. ஆனால் அவன் இங்கிருந்து கங்கைக்குச் செல்ல இயலாததால் பெருமாளிடம் முறையிட்டான். அப்போது வடகிழக்கு மூலையான ஈசானியத்தில் திடீரென நீரூற்று பொங்கியது. அவ்வாறு பொங்கி வந்த கங்கையில் பெருமாள் காட்சியளித்தார். </p><p>தான் நீராடுவதற்காக கங்கை இங்கு வந்துவிட்டால் என்று மகிழ்ந்து புரூரவச் சக்கரவர்த்தி அந் நன்னாளில் புனித நீரில் குளித்துப் பெருமாளை வழிபட்டான். அந்த ஊற்று கோயில் தீர்த்தமாக இன்றும் விளங்குகிறது.</p><p>தீர்த்தத்தைச் சுற்றிலும் உள்ள அழகான படித்துறையில் நேர்த்திக்கடன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பிள்ளை வரம் வேண்டுவோர் அல்லது திருமணம் நடக்க வேண்டும் என்ற நேர்ச்சை செய்பவர்கள் ஆறு விளக்குகளை கொண்டு வந்து பட்டரிடம் கொடுக்க வேண்டும். அவர் மூன்றை மட்டும் அவர்களிடம் திருப்பிக் கொடுப்பார். அந்த மூன்று விளக்கை பத்திரமாகக் கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து தினமும் ஏற்றி வர வேண்டும். தங்களுடைய நேர்ச்சை நிறைவேறியதும் அந்த மூன்று விளக்குகளை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போய்க் கூடுதலாக மூன்று விளக்குகள் வாங்கி படிக்கட்டில் ஏற்றி வர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/655099ab-9d7d-4745-b3ac-1c79c430ab91/24-674d5c52e0c00.webp' />&nbsp; &nbsp;</p><p>இவர்கள் ஏற்றிய ஆறு விளக்குகள் அணைந்ததும் அணைந்த பழைய விளக்குகளில் மூன்றை புதிதாக நேர்ச்சைக்கு வருபவர்கள்
எடுத்துக் கொண்டு தன் வீட்டில் தினமும் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவர். இவ்வாறு மகா மகத்தன்று இக்கோவில் தீர்த்தத்தின் படித்துறைகள் முழுக்க விளக்குகளாக இருப்பதைப் பார்க்கலாம். </p><p>மகாமகத்தன்றுஅதிகாலை முதல் இரவு 10, 11 மணி வரை அன்றைக்குப் பக்தர்கள் படிக்கட்டில் விளக்குகளை ஏற்றி வைப்பதைக் காண முடியும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கதை இரண்டு</span></h2><h3> 
நரசிம்மரின் மந்திராலோசனை</h3><p>

இரண்யகசிபு ஹரி என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்று தன் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டான். விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனுக்கு பல கொடுமைகளைச் செய்தான். இவ்ற்றைக் கண்டு பொறுக்காமல் அவனை வதம் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் நரசிம்மர் இத்தலத்திற்கு வந்து தேவர்களை அழைத்து அவர்களோடு ஆலோசித்தார். அதனால் அவரது சிற்பம் விமானத்தில் இடம் பெற்றுள்ளது. 
&nbsp; &nbsp;</p><h2>கதை 3 </h2><h3>
இந்திரன் வணங்கிய மூர்த்தம்</h3><p></p><p>

இந்திரன் தான் தேவலோகத்தில் வைத்து பூஜித்த சௌமிய நாராயணத் திருமேனியை கதம்ப மகரிஷிக்கு கொடுத்து அவரை இத் திருத்தலத்தில் இருந்து இறைவனை நோக்கித் தவம் செய்யும்படி கூறினான். </p><p>இந்திரனின் வழிகாட்டுதலின்படி இங்குத் தவம் செய்து கொண்டிருந்த கதம்பமுனிக்குத் திருமால் தனது. நின்ற கோலம், நடந்த கோலம், இருந்த கோலம், அமர்ந்த காலம் என்று நான்கு கோலத்தையும் காட்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்நான்கு கோலங்களில் இங்கே மற்ற பக்தர்களின் குறைதீர்க்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.&nbsp;</p><h2>விழாக்கள்
</h2><p>எல்லா வைணவக் கோவில்களில் நடப்பது போலவே இங்கும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தாயாருக்குரிய நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசி மகம் சௌமிய நாராயணருக்கு தனிச்சிறப்புடைய நாள் என்பதனால் மாசி மகத் திருவிழா பக்தர்களின் பேராதரவோடு கோலாகலமாக நடைபெறும். </p><p>புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து பெருமாளைச் சேவித்து திரும்புவர். அப்போது திருமஞ்சனம் நடைபெறும் சர்க்கரை பொங்கல் சிறப்பு தளிகையாக இறைவனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு உலகக்ஷேமத்துக்காக சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இணைந்து கொள்ளுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாதம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aadi-month-12-rasi-palangal-1784292301"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aadi-month-12-rasi-palangal-1784292301</id>
            <summary type="text">மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவே இருக்கப்போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 
ரிஷபம்:
ரிஷ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவே இருக்கப்போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். </p><h3>
ரிஷபம்:
</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடைய உறவுகள் மேம்படும். இருப்பினும் பயணங்களில் எச்சரிக்க வேண்டும்.
</p><h3>மிதுனம்:
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.</p><p></p><p> </p><h3>
கடகம்:
</h3><p>இவர்களுக்கு இந்த காலகட்டம் உடல் நலம் மற்றும் குடும்ப விஷயங்களை சற்று கவனத்தை செலுத்த வேண்டும். கோபம் அகங்காரத்தை தவிர்ப்பது நல்லது.
</p><h3>சிம்மம்:</h3><p>
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலகட்டம். இருப்பினும் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படலாம்.
</p><h3>கன்னி:
</h3><p>இவர்களுக்கு இந்த காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் வரப்போகிறது. பொருளாதாரத்தில் மிகச்சிறந்து விளங்குவீர்கள். வேலையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.</p><h3> 
துலாம்:</h3><p>
இவர்களுக்கு இந்த காலகட்டம் குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேர போகிறது. குருபகவானால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் காலமாகும். </p><h3>
விருச்சிகம்:
</h3><p>தொழில் தொடர்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த மாதம் முடிந்தவரை இந்த வேலையிலும் ரிஸ்க் எடுத்து செய்வதை தவிர்ப்பது நல்லது.</p><h3>
தனுசு:
</h3><p>வேலை ரீதியாக முடிந்தவரை நீங்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தள்ளிப் போடுவது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><p> </p><h3> 
மகரம்:
</h3><p>இவர்களுக்கு இந்த காலம் திருமண வாழ்க்கை தொடர்பான சவால்களை கொடுக்கலாம். உடல் நலம் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><h3> 
கும்பம்:</h3><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகவும் அனுகூலமான நன்மைகளை கொடுக்கப்போகிறது. அரசு வழியாக நன்மைகளை பெறப்போகிறீர்கள்.</p><h3> 
மீனம்:
</h3><p>குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் சற்று கவனமாக இருப்பது அவசியம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த ஆண்டவனே நினைத்தாலும் இந்த 3 ராசிகளை தோற்கடிக்கவே முடியாதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-who-has-strong-mentality-to-defeat-1784291870"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-who-has-strong-mentality-to-defeat-1784291870</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியினர் மிகுந்த பிடிவாதமும் எதையும் சாதிக்கக்கூடிய திறனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியினர் மிகுந்த பிடிவாதமும் எதையும் சாதிக்கக்கூடிய திறனும் கொண்டு இருப்பார்கள். மேலும், ஒரு சில ராசியினரை இறைவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களிடம் வலிமை இருக்குமாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4095edce-0e7c-4613-ac45-a69d5682c79c/26-6a5a221fdd5e1.webp' /></p><p>
</p><h3>ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசியினர் எவ்வளவு முறை தோற்றாலும் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இவர்களுடைய பொறுமையையும் தன்னம்பிக்கையை மட்டும் இவர்கள் இழப்பதே இல்லை. இவர்கள் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்கள்.</p><h3>
 விருச்சிகம்:
</h3><p> இவர்கள் ஒவ்வொரு தடவையும் தோற்றுப் போகும் பொழுது இவர்களை சுற்றி இருப்பவர்கள் இவர்களை ஏளனம் செய்வது உண்டு. ஆனால் அவ்வாறு ஏளனம் செய்பவர்களுக்கு முன்னால் இவர்கள் மிகப்பெரிய அளவில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை எடுத்து இவர்கள் வாழ்ந்து காட்டி விடுகிறார்கள்.</p><p></p><p>
</p><h3> மகரம்:
</h3><p> இவர்களுடைய உழைப்பை உதாசீனம் செய்யாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இருப்பினும் இவர்கள் அதற்கெல்லாம் தலைகுனிவதில்லை. அதற்கெல்லாம் அஞ்சுவதும் இல்லை. நடப்பது நடக்கட்டும் என்று தனக்குப் பிடித்ததை செய்வதில் இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் நினைத்ததை முடித்துவிடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளா? விநாயகருக்கு இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/lord-ganesh-cocnut-remedies-for-life-struggles-1784288885"></link>
            <id>https://ibcbakthi.com/article/lord-ganesh-cocnut-remedies-for-life-struggles-1784288885</id>
            <summary type="text">இந்து மத வழிபாடுகளில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை கொடுக்கும். அப்படியாக, நாம் விநாயகப் பெருமானுக்கு எந்த எண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மத வழிபாடுகளில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது நமக்கு மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை கொடுக்கும். அப்படியாக, நாம் விநாயகப் பெருமானுக்கு எந்த எண்ணிக்கையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
</p><p>11 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு விரைவில் திருமணம் நடக்கிறது.</p><p>
9 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.</p><p>
7 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது கடன் தொல்லை விலகுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08abe9a8-20f4-4084-9471-f355ade36611/26-6a5a16774cfaf.webp' /></p><p></p><p> 5
 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது சிறந்த கல்வியை பெறுகின்றோம்.</p><p> 3 தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்ற பொழுது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதை போல் நாம் தொழிலில் வளர்ச்சி அடைவதற்கும் 3 தேங்காய் உடைத்து விநாயகர் வழிபாடு செய்யலாம்.</p><p> 1 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்க்கையில் தடைகளும் துன்பங்களும் விலகி மன அமைதி கிடைக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T11:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாதத்தில் முக்கியமான விசேஷங்கள் விரதம் மற்றும் சுப முகூர்த்த நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aadi-month-important-festival-and-fasting-day-1784284151"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aadi-month-important-festival-and-fasting-day-1784284151</id>
            <summary type="text">&amp;nbsp;படங்களில் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் தெய்வீகமாக கருதக்கூடிய மாதத்தில் ஆடி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் சூரிய பகவான் மிதுன ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;படங்களில் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் தெய்வீகமாக கருதக்கூடிய மாதத்தில் ஆடி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறுகிறார். தட்சிணாயன காலம் எனப்படும் தேவர்களின் மாலை பொழுதாக கருதப்படும் ஆடி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கும் அம்மன் வழிபாட்டிற்கும் மிகவும் உகந்த மாதம். </p><p>அதோடு நம்முடைய முன்னோர்களின் அருளாசியை பெற்று பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு சிறந்த மாதம். அதோடு தேவர்களின் இரவு நேரம் துவங்கு மாதம் என்பதால் இந்த மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை நாம் தவிர்ப்பது வழக்கம். </p><p>அதாவது திருமணம் நிச்சயதார்த்தம் புது வீட்டிற்கு குடியேறுதல் வளைகாப்பு புதிய முயற்சிகள் துவங்குதல் குழந்தைகளுக்கு மொட்டை போடுவது போன்ற சுபகாரியங்களை இந்த மாதத்தில் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படியான ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷம் சுபமுகூர்த்தம் மற்றும் விரத நாட்களை பற்றி பார்ப்போம்.&nbsp; &nbsp;</p><p></p><h3>ஆடி மாதம் 2026 முக்கிய விசேஷங்கள் :</h3><p>&nbsp;ஜூலை 29	ஆடி 13	புதன்	சங்கரன்கோவில் ஆடி தபசு
</p><p>ஆகஸ்ட் 03	ஆடி 18	திங்கள்	ஆடிப்பெருக்கு
</p><p>ஆகஸ்ட் 06	ஆடி 21	வியாழன்	ஆடிக் கிருத்திகை
</p><p>ஆகஸ்ட் 12	ஆடி 27	புதன்	ஆடி அமாவாசை
</p><p>ஆகஸ்ட் 16	ஆடி 31	ஞாயிறு	நாக சதுர்த்தி
</p><p>ஆகஸ்ட் 17	ஆடி 32	திங்கள்	கருட பஞ்சமி,நாக பஞ்சமி</p><h3>ஆடி மாதம் 2026 விரத நாட்கள் :&nbsp;</h3><p>அமாவாசை	ஆகஸ்ட் 12	புதன்	ஆடி 27
</p><p>பெளர்ணமி	ஜூலை 29	புதன்	ஆடி 13
</p><p>கிருத்திகை	ஆகஸ்ட் 06	வியாழன்	ஆடி 21
</p><p>திருவோணம்	ஜூலை 30	வியாழன்	ஆடி 14</p><p>சங்கடஹர சதுர்த்தி	ஆகஸ்ட் 02	ஞாயிறு	ஆடி 17
</p><p>சிவராத்திரி	ஆகஸ்ட் 11	செவ்வாய்	ஆடி 26</p><p></p><h3>ஆடி மாதம் 2026 வாஸ்து நாள் :</h3><p>ஜூலை 27	ஆடி 11	திங்கள்	காலை 07.44 முதல் 08.20 வரை</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T10:29:22+00:00</updated>
        </entry>
    </feed>
