<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-29T18:31:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசி பலன் (30-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-raasi-palangal-august-30-2026-sunday-1788008410"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-raasi-palangal-august-30-2026-sunday-1788008410</id>
            <summary type="text">மேஷம்:
இன்று உங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் பெரியவரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. சமூதாதயத்தில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>இன்று உங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் பெரியவரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. சமூதாதயத்தில் நற்பெயர் கிடைக்கும்.
</p><h3>ரிஷபம்:
</h3><p>இன்று தொழில் ரீதியாக ஒரு சில எதிரிகள் உருவாகலாம். வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாய் உடல் நிலையில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.</p><h3> மிதுனம்:
</h3><p> இன்று உங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய குழப்பமும் பயமும் வரலாம். உங்களின் சிந்தனைகளில் தெளிவாக இருக்க வேண்டும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசிப்பீர்கள்.</p><p></p><h3> 
கடகம்:
</h3><p> உங்களுடைய வாழ்க்கையில் திடீர்னு திருப்புமுனை உண்டாகும். மனக் கவலைகள் விலகும். கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.</p><h3> 
சிம்மம்:</h3><p> இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பூர்விக இடத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் வரும்.
</p><h3> கன்னி: </h3><p>
வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள்.</p><p></p><p> </p><h3>துலாம்; </h3><p>எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.</p><h3> விருச்சிகம்:</h3><p> சொந்தங்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகும். வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவையும் தெரிவிப்பார். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். </p><h3>தனுசு: </h3><p>உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். பிடித்த விஷயங்களை செய்வீர்கள். </p><h3>மகரம்: </h3><p>இன்று உங்களுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் விலகும். </p><h3>
கும்பம்: </h3><p>திடீர் திருப்பங்களை சந்திப்பீர்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப பிரச்சனை விலகும்.</p><h3> 
மீனம்:</h3><p>
 எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்தால் சங்கடம் விலகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியில் பிறந்தவர்கள் யாருக்காகவும் அவர்களை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/zodiac-in-this-character-never-change-for-anyone-1788008113"></link>
            <id>https://ibcbakthi.com/article/zodiac-in-this-character-never-change-for-anyone-1788008113</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில், யார் ஒருவர் தங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த வகையில், யார் ஒருவர் தங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><b>சிம்மம்- மேஷம் -கும்பம் </b>ஆகிய ராசியில் பிறந்தவர்கள் யாராவது ஒருவர் சொன்னால் நான் அதை உடனடியாக கேட்டுக்கொள்ள வேண்டுமா என்கின்ற ஒரு குணாதிசயம் இருக்கும். இவர்களுக்கு பிடித்தால் மட்டுமே ஒருவரிடம் பழகுவார்கள். இல்லையென்றால் விட்டு விலகிவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/025b625b-99ee-40ce-8b30-03adab3a6943/26-6a92d6b372e77.webp' /></p><p></p><h3> மிதுனம் -துலாம்- கடகம்:</h3><p> இவர்கள் யாருக்காகவும் எதற்காகவும் அவர்களுடைய குணாதிசயத்தை மாற்றிக் கொள்வது கிடையாது. பிடித்தால் மட்டுமே அவர்களிடம் பேசுவார்கள். போட்டி பொறாமைகள் இருக்கின்ற இடத்தில் இவர்கள் தங்குவதில்லை. </p><p><b>விருச்சிகம்-மகரம்-மீனம் </b>ஆகிய ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் கேட்பார்கள். இவர்களிடம் சென்று நாம் சில விஷயங்களை சொல்லி நம் வழிக்கு கொண்டுவர முடியும் என்று நினைத்தால் கட்டாயம் அது நடக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42763137-8b38-4533-8770-bd3ac82980ea/26-6a92d6b42e67c.webp' /></p><p></p><p> </p><h3>ரிஷபம்- கன்னி- தனுசு:</h3><p> இந்த ராசியில் பிறந்தவர்கள் பிறருடைய பேச்சுக்களை எப்பொழுதும் எந்த நேரத்திலும் கேட்க மாட்டார்கள். அதிலும் ஒருவர் நல்லது சொன்னால் மட்டும்தான் இவர்கள் மனம் பலமுறை ஆராய்ந்து ஏற்றுக்கொள்கிறது. அதுவரை இவர்கள் எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T14:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறரிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? உங்கள் கர்மா உங்களை காப்பாற்றி விட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/karma-says-losssig-money-is-sometimes-save-us-1788007686"></link>
            <id>https://ibcbakthi.com/article/karma-says-losssig-money-is-sometimes-save-us-1788007686</id>
            <summary type="text">சில நேரங்களில் நாம் ஒரு சில பொருட்களையோ அல்லது ஒருவரிடம் ஏமாந்து நிற்கக்கூடிய ஒரு அவநிலை ஏற்படுகிறது. பலரும் இறைவனிடம் எதற்காக இந்த கஷ்டம் என்று இறைவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நேரங்களில் நாம் ஒரு சில பொருட்களையோ அல்லது ஒருவரிடம் ஏமாந்து நிற்கக்கூடிய ஒரு அவநிலை ஏற்படுகிறது. பலரும் இறைவனிடம் எதற்காக இந்த கஷ்டம் என்று இறைவனை மண்டியிட்டு கேட்டு அழுவது உண்டு. உண்மையில் நம் உயிரை விட பொருட்களுக்கு மதிப்பு அதிகமா என்று கேட்டால் கட்டாயமாக இல்லை. </p><p>அந்த வகையில், நீங்கள் யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்து விட்டாலோ அல்லது உங்களுடைய பணத்தை நீங்கள் தொலைக்க நேர்ந்தாலும் உங்களுடைய கர்மா உங்களை காப்பாற்றியது என்று சொல்கிறார்கள். </p><p>இந்த உலகத்தில் மிகப்பெரிய துயரத்தில் ஒன்று நம்முடைய உயிர் பிரிவது. அடுத்ததாக நம்முடைய உழைத்த பணத்தை ஒருவர் திருடுவது அல்லது யாரிடமாவது பணத்தை கொடுத்து நாம் ஏமாந்து நிற்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37decb3c-8f03-4277-988f-cbc130ced30e/26-6a92d5085cac8.webp' /></p><p></p><p> இந்த விஷயங்கள் தான் மிகப்பெரிய துயரங்களாக இருக்கிறது. அந்த வகையில், நாம் செய்த நல்ல கர்மாக்கள் நம்மை பல நேரங்களில் காப்பாற்றுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அது போன்று தான் நாம் பணத்தை தொலைக்க நேரும் அந்த காலகட்டமும். </p><p>அதாவது, பணம் தொலைந்து நமக்கு உயிர் சேதம் ஏற்படாமல் அந்த குடும்பத்தை காப்பாற்றது அந்த நல்ல கர்மா. ஆனால், ஏமாற்றியவர்களுக்கு நிச்சயம் அவர்களுக்குரிய கர்மாவும் சென்று சேரும் என்றாலோ அந்த காலகட்டம் நமக்கு உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றியது அந்த கர்ம வினை என்று சொல்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T12:48:22+00:00</updated>
        </entry>
    </feed>
