<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-06T13:19:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/krishnas-silent-lessons-from-mahabharatam-1788696828"></link>
            <id>https://ibcbakthi.com/article/krishnas-silent-lessons-from-mahabharatam-1788696828</id>
            <summary type="text">பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஒரு மனிதன் எவ்வாறு அவருடைய கடமையை செய்ய வேண்டும்? கர்மா என்றால் என்ன? உண்மை ஆகியவற்றை பற்றிய ஞானத்தை உலகிற்கு அருளியவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஒரு மனிதன் எவ்வாறு அவருடைய கடமையை செய்ய வேண்டும்? கர்மா என்றால் என்ன? உண்மை ஆகியவற்றை பற்றிய ஞானத்தை உலகிற்கு அருளியவர்.</p><p> அந்த வகையில், மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் எதுவும் பேசாமல் இருந்த தருணங்கள் இருக்கிறது. அந்த மௌனத்திற்கு பின்னால் பல காரணங்களும் பல ஞானமும் நமக்கான வாழ்க்கை பாடமும் ஒளிந்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். </p><p>

தர்மம் எங்கெல்லாம் தோற்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் வருவார் என்று நமக்கு தெரியும். ஆனால், அநீதி நடந்து போதும், துயரம் சூழ்ந்த போதும் கூட, சந்தேகங்கள் நீடித்த போதும் கூட கிருஷ்ண பகவான் ஏன் சில நேரங்களில் மௌனமாக இருந்தார்?</p><p>அது அவருடைய அலட்சியத்தால் ஏற்பட்ட மௌனமா? அல்லது அந்த மௌனத்திற்குள் ஒளிந்திருக்க கூடிய ஆழமான பாடம் என்ன ?

கிருஷ்ண பகவான் அவர் காத்த மௌனம் எப்பொழுதும் பலவீனத்தின் அடையாளம் அல்ல. சில நேரங்களில் அதுவே நம்முடைய ஞானத்தின் உச்சநிலையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1e1e8f1-2ab1-4bfd-afb5-32c1cd9f7f68/26-6a9d58fe21936.webp' /></p><p></p><h3>
திரௌபதியின் கேள்வி சபையில் எழுந்தபோது:
</h3><p>அரசர்கள் நிறைந்த சபையில் திரௌபதியை அவமானப்படுத்தப்பட்ட போது அங்கு வார்த்தைகளை விட மௌனமே அதிகமாக எதிரொலித்தது. அபொழுதுது திரௌபதி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார். தன்னை தானே முதலில் இழந்த யுதிஷ்டிரன், அதன் பிறகு எவ்வாறு என்னை பணயம் வைக்க முடியும். அப்பொழுது கிருஷ்ணன் பகவான் உடனடியாக அந்த சபைக்குள் வந்து தர்மம் குறித்து எதுவும் பேசவில்லை. </p><p>மாறாக, அந்த சபையில் இருந்தவர்களின் உண்மையான முகத்தை அவர்கள் காத்த மௌனம் வழியாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த அனுமதித்தார்.

 இறுதியாக, திரௌபதியின் மானத்தை காப்பாற்ற தெய்வீகமாக அவர் தலையிடுகிறார். </p><p>ஆனால் கிருஷ்ண பகவான் அவருடைய கரங்களை நீட்டுவதற்கு முன்பாக அந்த சபையில் நீண்ட அந்த மௌனம் தர்ம வீழ்ச்சிதை வெளிப்படுத்தியது. ஆனால், பல நேரங்களில் உண்மையை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காகவே மௌனம் அந்த நேரங்களிலும் தேவைப்படுகிறது. அதையே கிருஷ்ணர் நமக்கு உணர்த்துகிறார்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">காந்தாரியின் சாபம்:</span></p><p>
காந்தாரி தன்னுடைய மகன்களை இழந்த துயரத்தில் உடைந்து போன பொழுது கிருஷ்ணருக்கே சாபமிட்டாள். அதாவது யாதவ குலமும் ஒரு நாள் அழிந்து போகும் என்று அவள் சாபமிட்டபொழுது கிருஷ்ண பகவான் அவளுடன் வாதம் செய்யவில்லை. அவர் தன்னை தற்காத்துக் கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை. </p><p>அவர் அமைதியாக அந்த சாபத்தை ஏற்றுக் கொண்டார். அமைதி காத்ததால் அது தோல்வியின் மௌனம் என்று நாம் சொல்லிவிட முடியாது. விதி மற்றும் கர்மத்தின் தவிர்க்க முடியாத விதிகளை அவர் அதை ஏற்றுக்கொண்ட ஞானத்தின் மௌனமாக அது விளங்குகிறது.

 
இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். </p><p>காலத்தின் உடைய நடவடிக்கைகளையும், கர்ம விளைவுகளையும் அந்த தெய்வீக சக்தியும் மதிக்கிறது என்பதை கிருஷ்ண பகவான் அவருடைய அமைதியின் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">யாதவர்களின் வீழ்ச்சி:</span></p><p>மகாபாரதம் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு யாதவ குலத்தில் பிறந்தவர்கள் அவர்களுக்கு உள்ளேயே மோதல் செய்து இறுதியில் அழிவிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டது. அந்த காலகட்டங்களில் முடிவு நெருங்கி விட்டது என்று கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். ஆனால், அவர் அந்த அழிவை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. </p><p>காந்தாரி கொடுத்த சாபம் அதன் விளைவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை கிருஷ்ண பகவான் அறிந்திருந்தார். ஆதலால், அவர் விதியின் போக்கில் தலையிடாமல் அமைதியாக ஏற்றுக் கொண்டார். 

சில நேரங்களில் நாம் ஒரு சில நிகழ்வுகளை தடுப்பதாலயே அதனுடைய முடிவை நாம் முற்றிலும் மாற்றி விட முடியாது. </p><p>அந்த முடிவை சிறிது காலம் தாமதப்படுத்தலாம் அவ்வளவு தான். ஆக, ஒருவர் செய்கின்ற அங்காரம் மற்றும் தீராத ஆசை, கட்டுப்பாடற்ற செயல்கள் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து அவர்கள் எந்த காலமும் தப்பிக்க முடியாது என்பதை யாதவர்களை அழிவு இந்த இடத்தில் நமக்கு உணர்த்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcabf76-42dd-447c-8a0a-1907415b0ba5/26-6a9d596023613.webp' /></p><p>&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">வேடன் ஜராவின் அம்பு:</span></p><p>கிருஷ்ண பகவான் அவருடைய பூலோக வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் இருந்த பொழுது வேடன் ஜரா தவறுதலாக எய்த அம்பு கிருஷ்ண பகவான் பாதத்தில் பாய்ந்தது. அந்த நேரத்தில் கிருஷ்ணர் எந்த கோபமும் கொள்ளவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கவும் இல்லை. கிருஷ்ண பகவான் பாதத்தின் மீது எய்த அம்பினால் வேடன் அச்சமடைந்தார்.</p><p> ஆனால், கிருஷ்ண பகவான் அவரை அமைதி படுத்தினார். துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் தொடக்கமும் நெருங்கி இருந்த அந்த வேளையில் கிருஷ்ணர் அவருடைய முடிவை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார். இதுதான் பற்றின்மையின் உச்ச நிலை.
</p><h3>
கிருஷ்ணரின் மௌனம் சொல்லும் உண்மை:</h3><p>
கிருஷ்ண பகவானுடைய வாழ்க்கை நமக்கு ஒரு தெய்வீக உபதேசங்களால் நிறைந்தவை. அவர் எவ்வாறு நிறைய விஷயங்கள் பேசினாரோ அதற்கு இணையாக பேசாமல் இருந்த தருணங்களிலும் பல ஆழமான பாடங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது.</p><p> </p><p>கிருஷ்ண பகவான் அநீதி நடக்கும் போதும், துயரத்தில் தவித்த பொழுதும், கர்மத்தின் சுழற்சி சூழ்ந்த பொழுதும், விதி முன் நின்று தாக்கிய பொழுதும், மரணத்தின் அருகில் இருந்த பொழுதும் கிருஷ்ண பகவான் சில நேரங்களில் அமைதியாகவே இருந்தார். அந்த மௌனம் பலவீனம் அல்ல. அது நமக்கு சொல்லக்கூடிய விழிப்புணர்வு.
</p><p> 
கிருஷ்ண பகவான் நமக்கு சொல்லக்கூடிய ஒரு பெரிய உண்மை எல்லா கேள்விகளுக்கும் நாம் எல்லாம் நேரங்களிலும் வார்த்தைகளால் பதில் சொல்லி விடவே முடியாது. சில நேரங்களில் அதற்கு மௌனம் தான் சிறந்த பதிலாக இருக்கிறது. </p><p>சில நேரங்களில் நாம் சில விஷயங்களில் தலையிடாமல் இருப்பதாலே கர்மத்தின் உண்மை வெளிப்படும். வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதற்கு சில நேரங்களில் வருவதை எதிர்க்காமல் அவ்வாறே ஏற்றுக் கொள்வது சிறந்தது. அதுவே பற்றின்மையும் உச்ச நிலை. அதனால், தான் கிருஷ்ண பகவான் பேசிய வார்த்தைகளும் நம்மை சிந்திக்க வைக்கிறது. </p><p>பேசாத மௌனமும் நம்மை சிந்திக்க தூண்டுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் பேசிய ஆயிரம் வார்த்தைகளை விடவும் அவர் காத்த மௌனம் நமக்கு மிகப்பெரிய அளவில் பதில்களை விட்டுச் செல்கிறது.
</p><p> 
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</a></u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T12:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும் காலமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-mars-venus-bring-navapanjama-rajayoagam-1788684626"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-mars-venus-bring-navapanjama-rajayoagam-1788684626</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக கிரகங்களுடைய ஒவ்வொரு நிலையும் மனிதர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங்கள் ஒன்றுக்கொன்று குறிப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக கிரகங்களுடைய ஒவ்வொரு நிலையும் மனிதர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங்கள் ஒன்றுக்கொன்று குறிப்பிட்ட நிலையில் அமையும் பொழுது சில நேரங்களில் சுபயோகங்கள் உண்டாகும். அந்த வகையில், தற்போது மிதுன ராசியில் செவ்வாய் பகவானும் துலாம் ராசியில் சுக்கிரனும் சஞ்சரித்து வருகிறார்கள். </p><p>இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளுக்கு இடையே நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. அதாவது, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஐந்து மற்றும் ஒன்பதாவது இடங்களில் அமைந்த தொடர்பு கொள்ளும் பொழுது இந்த நவபஞ்ச யோகம் உருவாகிறது.</p><p> இந்த யோகத்தால் எல்லா ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த காலகட்டம் நிச்சயம் ஒரு பெரிய முன்னேற்றமாகவே அமையப் போகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a518795f-2188-4d8f-bbd4-38f2bbe157fd/26-6a9d295423d3f.webp' /></p><p></p><p> </p><h3>


ரிஷபம்:
</h3><p>

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம ராஜயோகமானது இவர்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக நல்ல சாதகமான பலன் கொடுக்கப் போகிறது. </p><p>நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வந்து சேரும். பதிவு உயர்வு நினைத்த சம்பள உயர்வு ஆகிய வாய்ப்புகள் உண்டு. புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையலாம். </p><h3>


கடகம்:
</h3><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு நல்ல சாதகமான பலன் கொடுக்கப் போகிறது. நீண்ட காலமாக கைகளுக்கும் வராத பணம் வந்து சேரும்.</p><p> எதிர்பாராத வகையில் இவர்களுக்கு ஒரு நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டு. உங்களுடைய திறமைக்கேற்ற வாய்ப்புகள் பெறுவீர்கள். வியாபார ரீதியாக வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதோடு நல்ல லாபமும் பெறுவீர்கள்.</p><p>&nbsp;</p><h3>


தனுசு:</h3><p>
 தனுசு ராசியினருக்கு இந்த நவப பஞ்சம ராஜயோகம் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. வேலை ரீதியாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். </p><p>நீண்ட காலமாக வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லை அடைவதற்கான சூழ்நிலையும் குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் இந்த காலகட்டங்களில் பெறுவீர்கள்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T08:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகள் படி அவர்களுடைய காதல் வெளிப்படுத்தும் விதம் எப்படி இருக்கும் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-12-zodiac-behave-in-love-life-1788679705"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-12-zodiac-behave-in-love-life-1788679705</id>
            <summary type="text">&amp;nbsp; ஜோதிட ரீதியாக சந்திரன் என்பவர்தான் ஒருவருடைய மனநிலையை குறிப்பவர். அந்த வகையில், சந்திர பகவானுடைய அந்த வெளிப்பாடு ஒவ்வொருவருடைய குண நலன்களிலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜோதிட ரீதியாக சந்திரன் என்பவர்தான் ஒருவருடைய மனநிலையை குறிப்பவர். அந்த வகையில், சந்திர பகவானுடைய அந்த வெளிப்பாடு ஒவ்வொருவருடைய குண நலன்களிலும் பிரதிபலிப்பதை நாம் பார்க்கலாம். 

நாம் அந்த வகையில், 12 ராசிகள் அடிப்படையில் அவர்களுடைய காதலை வெளிப்படுத்தக்கூடிய விதம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
</p><h3> சிம்மம்-கடகம்:</h3><p>

 இவர்களுடைய காதல் எப்பொழுதும் கோபத்திலும் சமாதானத்திலும் நிறைந்த காதலாக இருக்கும்.</p><h3>
 மிதுனம்- ரிஷபம்:</h3><p>
 ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய காதலாவும் அன்பான அற்புதமான காதலாகவும் இருக்கும்.</p><p></p><h3>
 மீனம்-விருச்சிகம்:
</h3><p> விட்டுக் கொடுத்து வாழக்கூடிய காதலாக வெளிப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee420664-953f-4383-b393-44c4167e8c58/26-6a9d161f974e2.webp' /></p><h3>
 மகரம்-தனுசு:
</h3><p> இவர்களை பார்த்து ஊரே பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுடைய காதல் வெளிப்படும்.
</p><h3> மேஷம்-மிதுனம்:
</h3><p> இவர்களுடைய காதல் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய காதலாக இருக்கும்.</p><p></p><h3> 
கன்னி- துலாம்:
</h3><p> இவர்களுடைய காதல் அமைதியான மற்றும் அன்பான காதலாக இருக்கும்.</p><h3>
 தனுசு-கும்பம்:
</h3><p> இவர்களுடைய காதல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழக்கூடிய உன்னதமான காதலாக இருக்கும்.</p><p>
</p><h3>விருச்சிகம்-துலாம்:
</h3><p> இவர்களுடைய காதல் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் இருக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<b><u>ற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</a></u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:28:34+00:00</updated>
        </entry>
    </feed>
