<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-09T13:00:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-is-true-lord-krishna-devotee-1786279265"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-is-true-lord-krishna-devotee-1786279265</id>
            <summary type="text">துவாரகையில் ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ண பகவானை சந்திக்க வருகிறார். வழக்கம்போல் கிருஷ்ண பகவானுடைய லீலைகளை பாடி மகிழ்ந்த அவர் ருக்மணி தேவியிடம் ஒரு கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>துவாரகையில் ஒரு நாள் நாரத முனிவர் கிருஷ்ண பகவானை சந்திக்க வருகிறார். வழக்கம்போல் கிருஷ்ண பகவானுடைய லீலைகளை பாடி மகிழ்ந்த அவர் ருக்மணி தேவியிடம் ஒரு கேள்வி கேட்கிறார். தாயே உலகம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் உடைய பக்தர்கள் கோடிக்கணக்கான இருக்கிறார்கள். </p><p>ஆனால், அவர்களில் யார் பகவானுக்கு மிகவும் பிரியமானவர் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். புன்னகையுடன் ருக்மணி பகவான் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்தக் கூடியவர். இருந்தாலும் பாண்டவர்கள் மீது அவருக்கு தனி அன்பும் பாசமும் இருப்பதை நான் உணர்கிறேன் என்று கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae4da0c9-2291-45a4-9854-6f554b480950/26-6a78756386f5a.webp' /></p><p></p><p> நாரதர் சிரித்தபடி அப்படி என்றால் ஒரு சிறிய சோதனை செய்து பார்க்கலாமா என்கிறார். அதற்கு ருக்குமணியும் சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு சில தினங்கள் கழித்து கிருஷ்ணர் பகவான் திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிப்பது போல நடிக்க துவங்குகிறார்.</p><p> துவாரகை முழுவதும் பரபரப்பு ஏற்படுகிறது. அரச வைத்தியர்கள், முனிவர்கள் யாராலும் கிருஷ்ண பகவானுடைய அந்த வயிற்று வலியை போக்க முடியவில்லை. அப்போது நாரதர் இந்த வலிக்கு ஒரே ஒரு மருந்து தான் உள்ளது. </p><p>பகவானை நேசிக்கக் கூடிய அந்த ஒரு பக்தரின் பாத தூசியை அவரது தலையில் வைத்தால் மட்டுமே இந்த வலி நீங்கும் என்கிறார். அப்பொழுது, இந்த செய்தி துவாரகை முழுவதும் பரவத் தொடங்குகிறது. ஆனால், யாரும் முன் வரவில்லை. </p><p>எங்களுடைய பாத தூசியை பகவானுடைய தலையில் வைப்பதா? இது மிகப்பெரிய பாவம் அல்லவா? நாங்கள் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்று அவர்கள் பின்வாங்குகிறார்கள். நாரதர் தேவர்களுடமும் முனிவர்களிடமும் பல அரசர்களிடமும் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbf0f85a-0719-41da-8a5f-91dc03ba7757/26-6a7875643ff3a.webp' /></p><p></p><p> </p><p>அனைவரும் இதே பதிலை தான் சொல்கிறார்கள். இறுதியாக அவர் விருந்தாவனத்தில் இருந்த கோபிகைகளிடம் செல்கிறார். அவர்கள் கிருஷ்ணருக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியை கேட்டவுடன் பதறிப் போகிறார்கள். நாரதர் அவர்களிடம் உங்களுடைய பாத தூசியை கிருஷ்ண பகவருடைய தலையில் வைக்க வேண்டும். </p><p>ஆனால், அப்படி செய்தால் நீங்கள் நரகத்திற்கு கூட செல்ல நேரலாம் என்றார். அதை கேட்ட கோபிகைகள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. நாங்கள் நரகத்திற்கு சென்றாலும் பரவாயில்லை. எங்கள் கிருஷ்ண பகவான் நலமோடு இருக்க வேண்டும். அதுவே எங்களுக்கு போதுமானது என்கிறார்கள். </p><p>பிறகு அவர்களுடைய பாத தூசியை ஒரு துணியில் சேகரித்து நாரதர் இடம் கொடுத்தனர். நாரதர் உடனே அதை எடுத்துக்கொண்டு துவாரகைக்குத் திரும்ப, அந்த தூசியை கிருஷ்ணனுடைய தலையில் வைக்கிறார். </p><p>அடுத்த கனமே கிருஷ்ண பகவான் புன்னகையுடன் எழுந்து அமர்ந்து விடுகிறார். அவருடைய வயிற்று வலி மறைந்து விட்டது. அப்போது ருக்மணியும் அங்கிருந்து அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7da99246-e82a-4aa2-88af-bf7f5474bec6/26-6a787564ef7e5.webp' /></p><p> </p><p>கிருஷ்ணர் மெதுவாக சொல்கிறார்" இதுதான் உண்மையான பக்தி". சொர்க்கம், நரகம், புண்ணியம், பாவம் என்று எதையும் பாராமல் தன்னை மறந்து தங்களையே இறைவனுக்கு ஒப்படைக்க கூடிய அந்த வாழ்க்கை தான் பரமபக்தி என்கிறார். </p><p>அப்போது, ருக்மணி கோபிகை களின் பக்தியின் ஆழத்தை உணர்ந்து மனமார்ந்த அவர்களை போற்றுகிறாள்.
 குறிப்பு: இந்த கதை வைணவ பக்தி மரபுகளில் பரவலாக செல்லக்கூடியது மகாபாரதத்தில் முதன்மை உரையில் இடம் பெறுவதில்லை. இது பக்தியை எடுத்துரைக்கும் பாரம்பரிய கதையாகவே கருதப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-7-navapanjama-yoga-astroloy-prediction-1786275610"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-7-navapanjama-yoga-astroloy-prediction-1786275610</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தான் தன்னம்பிக்கை, மரியாதை தலைமைத்துவ பொறுப்புகள் ஆகிவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சனி பகவான் ஒழுக்கம், நீதி நேர்மை, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் தான் தன்னம்பிக்கை, மரியாதை தலைமைத்துவ பொறுப்புகள் ஆகிவற்றுக்கு காரணியாக இருக்கிறார். சனி பகவான் ஒழுக்கம், நீதி நேர்மை, கட்டுப்பாடு ஆகிவற்றை குறிக்கக் கூடியவராக இருக்கிறார். </p><p>அந்த வகையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு கடக ராசியில் உள்ள சூரிய பகவானும் மீன ராசியில் இருக்கின்ற சனிபகவானும் மங்களகரமான நவபஞ்ச யோகத்தை உருவாக்கியிருக்கின்றனர்.</p><p> இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 5 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இதனால் யாருக்கு அதிக அளவில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5669705b-1d7d-4079-aad6-626b3a73901f/26-6a78671c4b1ef.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> நவபஞ்சமா யோகத்தால் இவர்களுக்கு சிந்தனையில் ஒரு புதிதான மாற்றம் பிறக்கும். நிறைய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் உண்டாகும். தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் உயர்ந்த இடத்தை பெற போகிறீர்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.</p><h3>
 மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு இரண்டாம் வீடான செல்வம் மற்றும் பேச்சு உரிமைக்குரிய இடம் என்பதால் இவர்களுக்கு தங்களுடைய பேச்சுக்களால் ஒரு மிகப்பெரிய அளவில் வியாபாரத்தில் வெற்றி அடைவார்கள். எழுத்து மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> இவர்களுக்கு இந்த யோகத்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையப்போகிறது. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான வருமானமும் இருக்கும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள். தலை நிமிர்ந்து வாழக்கூடிய அமைப்பு உண்டாக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் அதிக தங்கம் சேர செய்ய வேண்டிய பின்பற்ற விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-things-to-do-to-attract-more-gold-and-wealth-1786271099"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-things-to-do-to-attract-more-gold-and-wealth-1786271099</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய எல்லோருக்கும் தங்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை கனவுகள் இருக்கும். அந்த வகையில், வீடுகளில் அதிக அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களாகிய எல்லோருக்கும் தங்கு நகைகளை சேர்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை கனவுகள் இருக்கும். அந்த வகையில், வீடுகளில் அதிக அளவில் தங்கம் சேர வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். </p><p>பொதுவாக, வெள்ளி தங்கம் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு வியாழக்கிழமை உகந்தது. வியாழக்கிழமை அன்று பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் வாங்கினால் நமக்கு மென்மேலும் தங்கம் வெள்ளி ஆடைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். </p><p>அதைப்போல், சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாம் ஒருபோதும் தங்கம் வாங்க கூடாது. அவ்வாறு வாங்கினால் தங்கம் நம்மிடம் தங்காது. அவை காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d8ea5e-4d87-43db-8cc4-1851e6f700fc/26-6a78557d354e7.webp' /></p><p></p><p> </p><p>அதேபோல் சனிக்கிழமைகளில் நாம் எப்போதும் புது ஆடைகள் வாங்குவது உடுத்துவதையும் நாம் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒரு சில விஷயங்களை மட்டும் நான் பின்பற்றினாலே வீடுகளில் தங்கு நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். </p><p>அதே போல், எப்பொழுதும் நம்மிடம் இருக்கக்கூடிய ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் அதை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. நாம் பணத்தையும் பொருட்களையும் உதாசீனம் செய்கின்ற பொழுது நம் வீடுகளை சில பொருள் இழப்புகள் வரலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T10:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 1 முதல் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. முழு விவரங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sept-1-no-mobiles-allowed-in-temple-tamilnadu-1786266761"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sept-1-no-mobiles-allowed-in-temple-tamilnadu-1786266761</id>
            <summary type="text">தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் முதல் நிலை கோயில்களுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. அந்த வகையில், தற்பொழுது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் முதல் நிலை கோயில்களுக்குள் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார். </p><p>ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறையின் பிரபலங்கள் அமைச்சர்கள் கோயில்களுக்குள் வரும் பொழுது வீடியோ எடுப்பதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ed12795-f9d2-4a2a-bb44-22c597f36874/26-6a78448a8bc4b.webp' /></p><p></p><p> </p><p>

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்கள் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு சூழல் காரணமாக தாமதம் ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது நடந்து வருகின்ற ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், அமைச்சர் ரமேஷ் கோயில் சொத்துக்களாக இருந்தாலும், கோயிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும் என்றும் கைவிடப்படாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.</p><p>மேலும், திருக்கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் கருவறை உள்ள பல வீடியோக்கள் வருவதை பார்க்கிறோம். கடந்த ஆட்சியில் அதனை சரிவர செயல்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a139c759-0900-40df-9740-da0ecc91f67c/26-6a78448b46f88.webp' /></p><p>&nbsp;</p><p> </p><p>அதனால், முதல் நிலை திருக்கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுண்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் சொல்லியிருக்கிறார்.</p><p> </p><p>அதேபோல், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்பொழுது கோவிலுக்கு வெளியே பேட்டி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கை எடுத்து கும்பிட்டு அவர் வேண்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T09:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-your-lucky-numbers-according-to-12-zodiac-1786260191"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-your-lucky-numbers-according-to-12-zodiac-1786260191</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் வைத்து நாம் ஒருவருடைய வேலை, குடும்பம், குணநலன்கள் எல்லாவற்றையும் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் வைத்து நாம் ஒருவருடைய வேலை, குடும்பம், குணநலன்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், 12 ராசிகளுக்கும் பலம் சேர்க்கக் கூடிய அதிர்ஷ்ட எண்கள் என்னவென்று பார்ப்போம். </p><p>ஒருவருடைய ராசி நட்சத்திரம் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானத்தை விடாது. அதனுடன் சேர்ந்து பிறந்த தேதியும் சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். அதாவது, தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 11 அல்லது இரண்டாம் தேதி பிறந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.</p><p> ஆனால், சமயங்களில் சில தேதியில் பிறந்தவர்கள் தொழில் செய்வதை தவிர்த்து முதலீடு இல்லாமல் வேலையை செய்வது மட்டுமே அவர்களுக்கு நஷ்டங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு பலனை கொடுக்கும்.</p><p></p><p> </p><p>சிம்ம ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 1ஆம் தேதி அல்லது 11ஆம் தேதிகளில் பிறந்தால் அவர்கள் அரசியல் அல்லது பொது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று விடுவார்கள்.</p><p> 

மேலும், தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுடைய சாதகமான எண்கள் என்ன என்பதை சரி பார்த்து அதற்கேற்றவாறு முதலீடு செய்து தொழில் செய்கின்ற பொழுது நல்ல லாபத்தை பெறலாம்.</p><p> குறிப்பாக, தொழில் செய்யும் பொழுது ஆஞ்சநேயர் வழிபாடு செய்கின்ற பொழுது தொழில் ரீதியாக சந்திக்கக்கூடிய தடைகளை நீக்கி நமக்கு ஒரு நல்ல வெற்றிகரமான வாழ்வை கொடுக்கிறது. </p><p>மேலும், எண் கணிதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? ஒவ்வொரு ராசிக்கும் பலம் சேர்க்கக்கூடிய எண்கள் என்ன என்பதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1M9Febmp4Bk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:23:16+00:00</updated>
        </entry>
    </feed>
