<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-26T13:38:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடப்பதின் ரகசியம் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-kumbabishegam-happening-in-temple-for-12-years-1785069503"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-kumbabishegam-happening-in-temple-for-12-years-1785069503</id>
            <summary type="text">நாம் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவதை பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை பற்றி பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவதை பார்த்திருக்கின்றோம். அந்த வகையில் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை பற்றி பார்ப்போம்.
</p><p> முதல் மூன்று ஆண்டுகள் சுவாமி நமக்கு கருவறையில் இருந்து நமக்கு அருள் பாலிக்கிறார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலி பீடத்தில் இருந்து நமக்கு அருள் புரிவதாக சொல்லப்படுகிறது.</p><p> அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்திலிருந்து நமக்கு அருள் புரிவதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபுர கலசத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b94c9ed-b240-4824-aeff-bff1eabd1891/26-6a65ffc140420.webp' /></p><p></p><p> </p><p>கோபுர கலசத்தில் இருக்கக்கூடிய தெய்வத்தை நாம் மீண்டும் கருவறைக்கு அழைத்து வரவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. </p><p>மேலும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய இந்த கும்பாபிஷேகங்களில் நாம் கலந்து கொள்ளும் பொழுது நம் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு திருப்பு முனையும் மாறுதலும் நடப்பதை நாம் காணலாம். </p><p>அதிலும் குறிப்பாக நம் வாழ்க்கையில் உள்ள தீய சக்திகள் விலகி ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </a>இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: சனி வக்கிர பெயர்ச்சி.. சவாலை சந்திக்க போகும் முக்கிய ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/july-26-sanivakra-peyarchi-3zodiac-must-be-careful-1785066954"></link>
            <id>https://ibcbakthi.com/article/july-26-sanivakra-peyarchi-3zodiac-must-be-careful-1785066954</id>
            <summary type="text">வேத ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் கடக ராசியில் இருக்கிறார். குரு பகவானும் கடக ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார். சந்திர பகவான் தனுசு ராசியில் நுழை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் கடக ராசியில் இருக்கிறார். குரு பகவானும் கடக ராசியில் உச்சம் பெற்று இருக்கிறார். சந்திர பகவான் தனுசு ராசியில் நுழைகிறார். அதை போல், செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் பகவான் மிதுன ராசியிலும், சுக்கிர பகவான் சிம்ம ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் இருக்கின்றனர். </p><p>மேலும், ஜூலை 27ஆம் தேதி காலை மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் சனி வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மீண்டும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05f6bc2a-9947-4e35-aab7-d2e689bf20ff/26-6a65f5cc8385a.webp' /></p><p></p><h3>

 மேஷம்:
</h3><p> மேஷ ராசியினருக்கு நான்காம் வீட்டில் குரு உச்சத்தில் இருப்பதால் வீடு மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் இவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். </p><p>சந்திர பகவானுடைய மாற்றத்தால் இவர்களுக்கு மன உறுதி மேம்படும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. இருப்பினும் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டமாக உள்ளது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். </p><h3>
மிதுனம்:</h3><p>


 மிதுன ராசிக்காரர்களுக்கு எழுத்து அறிவு மற்றும் பயணத்திற்கான மிகவும் சாதகமான பலன்களாக இருக்க போகிறது. இருப்பினும் பொருளாதாரதம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். </p><p>தொழில் தொடங்குவதை பற்றியும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். இருந்தாலும் ஒரு சில சூழ்ச்சிகள் காரணமாக நீங்கள் பிரச்சனை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.</p><p></p><h3>

 துலாம்:
</h3><p> இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கப் போகிறது. சமுதாயத்தில் நற்பலன்கள் உண்டாகும். </p><p>நோய் கடன் தீரும் என்றாலும் வழக்கு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரடையை விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். தேவை இல்லாத வாக்குவாதங்கள் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[துன்பம் தீர ஆடி மாதத்தில் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-offering-color-saree-to-goddess-amman-1785062264"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-offering-color-saree-to-goddess-amman-1785062264</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் இந்த ஆடி மாதம் மிகவும் விசேஷமான பூஜைகளும் திருவிழாக்களும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் இந்த ஆடி மாதம் மிகவும் விசேஷமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறும். அப்படியாக, ஆடி மாதம் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.</p><p>
1. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை சாற்றினால் இவர்களுக்கு தைரியம் மற்றும் வெற்றி வந்து சேரும். மேலும் இவர்களுக்கு எதிரியை வெல்லக்கூடிய மன வலிமை கிடைக்கும்.</p><p>
2. மஞ்சள் நிற புடவையை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு விரைவில் திருமண யோகம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். மங்களமான விஷயங்கள் வீடுகளில் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1952a3b3-978d-44b4-bcc9-0afe84b09104/26-6a65e379ceac5.webp' /></p><p></p><p>
</p><p>3. பச்சை புடவை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு செல்வ வளம் மற்றும் தொழில் வளர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.
</p><p>4. வெள்ளை நிற புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு மன அமைதி, ஆன்மீகத்தில் உயர்வு, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
</p><p>5. இளஞ்சிவப்பு சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு அன்பு தம்பதிகள் இடையே ஒற்றுமை, உறவு மேம்பாடு உண்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f902b9-408f-46e6-9784-e89beaba16f8/26-6a65e37a90105.webp' /></p><p></p><p>
</p><p>6. காவி நிறத்தில் புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இறையருள் பக்தி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான வழி வகுக்கும்.
</p><p>7. ஊதா நிறத்தில்புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது மதிப்பு மற்றும் கௌரவம் உயர்ந்த வாய்ப்புகள் இவர்களை தேடி வரும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T10:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய பதிகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/shivan-pathigam-to-remove-black-magic-from-home-1785056342"></link>
            <id>https://ibcbakthi.com/article/shivan-pathigam-to-remove-black-magic-from-home-1785056342</id>
            <summary type="text">நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு சக்திகளும் சூழ்ந்து ஆட்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், எதிர்மறை என்பது ஒரு மனிதன் நமக்கு தீங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு சக்திகளும் சூழ்ந்து ஆட்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், எதிர்மறை என்பது ஒரு மனிதன் நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய எண்ணத்தை, பொறாமை, குணங்கள் குறிக்கக் கூடியதாக உள்ளது. </p><p>இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று தனக்கு பிடிக்காதவர்களுக்கு செய்வினை வைக்கக்கூடிய நிலையும் உருவாகிறது. அந்த வகையில் வீடுகளில் செய்வினை மற்றும் தீய சக்திகள் விலக பாட வேண்டிய முக்கியமான திருஞானசம்பந்தர்அருளிய திருநீலகண்ட பதிகம் பற்றி பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc830323-c9d9-450b-a29d-986b4dcf3005/26-6a65cc57edf34.webp' /></p><h3>&nbsp;திருநீலகண்டப்பதிகம்:
</h3><blockquote class="blockquote"><p>அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்,<br> 
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே,<br>
கைவினை செய்து எம்பிரான் கழல், 
போற்றுதும் நாமடியோம்,<br> 
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்,<br>
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்,<br> 
ஏவினையால் எயில் மூன்றெறித்தீர் என்று இருபொழுதும்,<br> 
பூவினைக் கொய்து மலரடி போற்றதும் நாமடியோம்.</p></blockquote><p>இந்த பதிகத்தை வீடுகளில் தினமும் பாராயணம் செய்து வர நம்முடைய செய்வினை மற்றும் ஒருவருடைய தீய வினைகள் யாவும் விலகி நம்மை சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வலைகள் உருவாகுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T08:59:08+00:00</updated>
        </entry>
    </feed>
