<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-16T12:39:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிற்குள் தெய்வீக சக்தி நுழைய வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயம் செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-to-bring-divine-energy-into-our-home-1789560549"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-to-bring-divine-energy-into-our-home-1789560549</id>
            <summary type="text">ஒரு வீடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தெய்வத்தினுடைய அருள் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டிற்குள் தெய்வீக சக்தி நுழைவது என்பது அவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு வீடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தெய்வத்தினுடைய அருள் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டிற்குள் தெய்வீக சக்தி நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமல்ல.</p><p> மேலும், நம் வீடு கட்டுவதற்கு முன்பாக அந்த மண் மீது என்ன இருந்தது? அந்த மண் மீது யார் வாழ்ந்தார்கள்? மண்ணுக்கு அடியில் என்ன புதைந்து கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஞானம் மனிதர்களுக்கு கட்டாயம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9dd16e9-b65a-4dfa-b0f3-6fd43c313dee/26-6aaa86e752992.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், அவை பறவைகளுக்கு உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அனில் இவைகளுக்கெல்லாம் தெய்வீக கலை ஆற்றலை உணரக்கூடிய சக்தி உண்டு. அதனால், இவ்வாறான பறவைகளை நம்முடைய வீட்டிற்கு கொண்டு வருவது அவசியம். இதற்கு நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டி தொங்க விடுகிறார்கள். </p><p>அதை சாப்பிட குருவி வருகின்ற பொழுது மீண்டும் மீண்டும் வர துவங்குகிறது. அதை போல், அணில் கூடு கட்டிருப்பதை பார்க்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae915b4f-8486-43bb-ab67-2e05edf6a3bc/26-6aaa86e80e613.webp' /></p><p></p><p> </p><p>இவை எல்லாம் நாம் அந்த தெய்வீக ஆற்றல் நம்முடைய வீட்டிற்கு வருவதற்கு நாம் செய்யக்கூடிய ஒரு மெனக்கிடல்கள் ஆகும் என்றாலும் அது அந்த பறவைகளுக்கான ஒரு உணவும் பாதுகாப்போம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.</p><p> </p><p>
இவ்வாறு நீங்கள் எந்த ஒரு மெனக்கிடல் இல்லாமலே இந்த குருவிகள் அணில் போன்றவை உங்களுடைய வீடுகளில் குட்டி போடுவதும், குஞ்சு பொரிப்பதும் கூடு கட்டுவதுமாக இருந்தால் அதை கலைத்து விடாதீர்கள். வீடுகளில் அவை நல்ல நன்மையை கொடுக்கும். இவை விரட்டுவதால் நாமே நம் வீட்டுக்கு வரக்கூடிய தெய்வத்தை விரட்டுவதற்கு சமம்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிமேல் உங்கள் குழந்தை இந்த விஷயங்களை சொன்னால் அதைக் கேட்க மறுக்காதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/never-refuse-when-childrens-says-this-1789554476"></link>
            <id>https://ibcbakthi.com/article/never-refuse-when-childrens-says-this-1789554476</id>
            <summary type="text">ஒரு நன்றாக கவனித்து இருந்தால், கீழ்க்காணும் விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடியும். அதாவது நாம் செய்யக்கூடிய காரியங்களுக்கு குழந்தைகள் சரி வேண்டாம் என்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நன்றாக கவனித்து இருந்தால், கீழ்க்காணும் விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடியும். அதாவது நாம் செய்யக்கூடிய காரியங்களுக்கு குழந்தைகள் சரி வேண்டாம் என்கின்ற ஒரு அசைவுகளை அவர்களுக்கே தெரியாமல் கொடுப்பது உண்டு. </p><p> குழந்தை நாம் வெளியே கிளம்புகின்ற வேளையில் செல்லவே வேண்டாம் என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் அவர்களை விட்டு வேலைக்கு கிளம்பும் பொழுது செய்வது உண்டு என்றாலும், அந்த ஒரு நாள் விசித்திரமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affe07b1-706f-4b43-be00-9fe3108128f2/26-6aaa6f2de6580.webp' /></p><p> </p><p>அதையும் மீறி அவர்கள் வெளியே சென்று வருகின்ற பொழுது ஏதேனும் தடங்களையும் தாமதங்களையும் சந்தித்திருப்பார். இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கலியுக நியதியாகவே மூன்று வயது வரை குழந்தைகளுக்கு தேவதைகளுடைய காட்சிகள் கிடைக்கிறது. </p><p> அந்த காரணத்தினால் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களுடைய எதிர்காலத்தை உணரக்கூடியவர்களாகவும், அவ்வப்போது நடக்க இருக்கக்கூடிய சம்பவங்களை தங்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கக் கூடியவர்களாகவும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து தங்களை காப்பதற்கு முயல் பவர்களாகவும் செயல்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ae4b4b7-c274-46d8-8706-c946acccdd22/26-6aaa6f2ea0be7.webp' /></p><p> </p><p>ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் குழந்தைகளுடைய செய்கைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஆனால், உண்மையாகவே அந்த குழந்தைகள் நம்முடைய எதிர்காலத்தை கணித்து நடப்பவற்றிலிருந்து நம்மை காக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் நிச்சயம் நல்ல மாற்றம் பிறக்கும்.</p><p> இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறினார்கள். ஆக, முடிந்தவரை குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் என்றால் அதனை கவனிக்க தவறாதீர்கள். அதில் நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சனி பகவான் இருந்தால் வாழ்க்கை போராட்டமா இருக்குமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/does-saturn-in-12th-house-bring-struggle-in-life-1789549469"></link>
            <id>https://ibcbakthi.com/article/does-saturn-in-12th-house-bring-struggle-in-life-1789549469</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுவாக, சனி பகவான் என்றாலே கர்ம காரகன் என்று சொல்வது உண்டு. அந்த வகையில், ஜோதிடத்தில் பனிரெண்டாம் இடம் என்பது ஒருவருடைய தூக்கம் மற்றும் நிம்மதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுவாக, சனி பகவான் என்றாலே கர்ம காரகன் என்று சொல்வது உண்டு. அந்த வகையில், ஜோதிடத்தில் பனிரெண்டாம் இடம் என்பது ஒருவருடைய தூக்கம் மற்றும் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கக்கூடியது. </p><p>அந்த இடங்களில் சனி பகவான் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவும் கடினமானதாகவும் நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருக்க கூடும் என்று ஒரு கருத்தும் உண்டு. அப்படியாக, பனிரெண்டாம் வீட்டில் சனி பகவான் இருந்தால் அந்த நபருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e86b24f3-1480-46b0-b86c-28fa3a16f4ec/26-6aaa5ba4c7501.webp' /></p><p>
</p><p>
ஜாதகத்தில் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவான் இருக்கின்ற பொழுது அவர்கள் வெளியூர், வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வேலை பார்க்கக் கூடிய அமைப்பு அங்கு சென்று அவர்கள் வேலை பார்த்து உயர்ந்த நிலைக்கு வர கூடிய அமைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. </p><p>அது மட்டும் அல்லாமல் இவர்கள் எப்பொழுதும் கட்டாயமாக நான்கு நபர்கள் தெரிந்து இருக்கும் படியான ஒரு பிரபலமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளும் தேடி வருவதற்கான நிலை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53303f6-2cca-4c9f-a0b5-a41c9c452225/26-6aaa5ba582127.webp' /></p><p> </p><p>அதிலும் 12 ஆம் வீட்டு சனி ஆட்சி உச்சம் அடைந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பலன் இருக்கும். </p><p>ஒரு சிலர் சொல்வது உண்டு நான் என் சொந்த ஊரையே தாண்டவில்லை என்று எண்ணினாலும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தன் இடத்தை விட்டு பிற மாநிலங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்யக்கூடிய ஒரு ஆன்மீகப் பயணம் ஆவது அமையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T10:24:32+00:00</updated>
        </entry>
    </feed>
