<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-22T12:33:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 3 கனவுகள் வந்தால் புறக்கணிக்காதீர்கள்.. பிரபஞ்சம் சொல்லும் செய்தியாக இருக்கலாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-dreams-we-should-never-ignore-in-life-1787396331"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-dreams-we-should-never-ignore-in-life-1787396331</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயமும் காரணம் காரியம் இல்லாமல் நடப்பதில்லை. அப்படியாக, ஒருவருக்கு கனவு வருகிறது என்றால் அது பல நேரங்களில் நம்முடைய ஆழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயமும் காரணம் காரியம் இல்லாமல் நடப்பதில்லை. அப்படியாக, ஒருவருக்கு கனவு வருகிறது என்றால் அது பல நேரங்களில் நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என்றாலும் அந்த கனவுகள் பிரபஞ்சத்தினால் நமக்கு அனுப்பக்கூடிய ஒரு செய்தியாக கூட இருக்கலாம்.
 அப்படியாக, நமக்கு வரக்கூடிய இந்த மூன்று கனவுகளை மட்டும் எப்பொழுதும் புறக்கணிக்க கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157b7107-d14f-41b4-a158-66cf67f3554d/26-6a8980f508fa8.webp' /></p><p></p><p>
</p><h3> 
1. கீழே விழுவது போன்ற கனவு:
</h3><p>பலருக்கும் அடிக்கடி தங்களுடைய கனவுகளில் கீழே விழுவது போல் வருவதை பார்க்கலாம். அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மன அழுத்தம் அல்லது நிறைவேறாத ஆசைகள் பயம் காரணமாக இவ்வாறான கனவுகள் வருகிறது. </p><p>கனவுகள் வரும் பொழுது அந்த பயத்தை போக்கி நாம் அதனுடன் போராடி முன்னேறி செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலாக காணப்படுகிறது. எதையும் எப்பொழுதும் இறுக்கமாக பற்றிக்கொள்வதால் பிரச்சனை இன்னும் பெரிதாக தான் செய்யும். அதனால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு முன்னேறி செல்ல வேண்டும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
</p><h3> 
2. யாரோ துரத்துவது போன்ற கனவு:</h3><p>
அதேபோல், யாராவது கனவில் துரத்துவது போல் வருவதை கண்டால் மறுநாள் நிச்சயம் நமக்கு ஒரு பயம் வந்துவிடும். ஆக, இந்த கனவு நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் புறக்கணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதாவது, பிரச்சனை வருகிறது என்றால் அதை தைரியமாக சமாளிக்க கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவை நமக்கு உணர்த்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85880c57-ed7d-4e8b-9762-456aed82931f/26-6a8980f5b229d.webp' />&nbsp;</p><p></p><h3>
 
3. பற்கள் விழுவது போன்ற கனவு:
</h3><p>கனவில் பற்கள் கீழே விழுவது போல் வரும் பொழுது கட்டாயம் நமக்கு ஒரு பயத்தை கொடுக்கலாம். அந்த வகையில், நாம் அந்த நேரத்தில் தன்னம்பிக்கை இழந்தும் பிறருடைய மதிப்பை எதிர்பார்த்தும் வாழ்கின்றோம் அதை தவிர்க்க வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலை அவை நமக்கு சொல்கிறது. ஆக, எதற்கும் பயப்படாமல் யாருடைய அங்கீகாரம் எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் நிச்சயம் முன்னேறி செல்லலாம் என்று அவை நமக்கு அறிவுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்னத்தில் கேது இருப்பவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும் அதிர்ஷ்டமாகவும் இருப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/characterstics-of-person-who-have-kethu-in-laknam-1787388403"></link>
            <id>https://ibcbakthi.com/article/characterstics-of-person-who-have-kethu-in-laknam-1787388403</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் ஒருவருடைய லக்னம் பொறுத்துதான் ஒருவருடைய வாழ்க்கை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், லக்னத்தில் ஒருவருக்கு கேது இருந்தால் அவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் ஒருவருடைய லக்னம் பொறுத்துதான் ஒருவருடைய வாழ்க்கை தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், லக்னத்தில் ஒருவருக்கு கேது இருந்தால் அவர்கள் தனித்துவமான சிந்தனை கொண்டுவராக இருக்கிறார்கள். அதாவது, லக்னத்தில் கேது இருப்பவர்கள் எதையும் ஆழமாக யோசித்து செயல்படக் கூடியவர்கள். </p><p>மற்றவர்கள் எளிதில் கவனிக்காத விஷயங்களையும் இவர்கள் கவனித்து செயல்படுவார்கள். அதே போல், இவர்கள் எப்பொழுதும் தங்களை அதிகமாக பேசி வெளி காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d30f365-329d-4f63-99ab-be45c7e94e94/26-6a8961f53aa45.webp' /></p><p></p><p> </p><p>மனதில் எப்பொழுதும் ஆழமான சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுதும் அதனுடைய நோக்கத்தை இவர்கள் சரியாகப் புரிந்து கொண்டு செய்வார்கள். தேவையில்லாத செயல்களுக்காக நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.</p><p></p><p> </p><p>எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒருவர் வெளிப்படையாக சொல்லாத விஷயங்களையும் இவர்கள் உணரக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். புத்தகங்கள் படித்த அறிவை காட்டிலும் வாழ்க்கை அனுபவத்தின் வழியாக இவர்கள் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள். </p><p>
தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் அதிகமாக தலையிடுவதை இவர்கள் விரும்புவதே இல்லை. தங்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி வாழக்கூடியவர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவபெருமானுடைய கோபத்தில் இருந்து தப்பிக்கவே முடியாத 8 பாவங்கள் என்ன தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-mistakes-lord-shivan-will-never-forgive-1787388181"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-mistakes-lord-shivan-will-never-forgive-1787388181</id>
            <summary type="text">&amp;nbsp;சிவபெருமான் கருணை கடவுள் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கோபமும் வருகிறது. அந்த வகையில், ஒரு மனிதர் இந்த 12 பாவங்களை செய்தால் அவர்கள் சிவபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிவபெருமான் கருணை கடவுள் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கோபமும் வருகிறது. அந்த வகையில், ஒரு மனிதர் இந்த 12 பாவங்களை செய்தால் அவர்கள் சிவபெருமானுடைய கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாதாம். அந்த வகையில், அந்த 12 பாவங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p>1. அடுத்தவரின் மனைவி அல்லது கணவன் மீது ஆசைப்படுவது பெரிய பாவம் ஆகும்.
</p><p>2. அதேபோல், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களுடைய சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மிகப் பெரிய அளவில் பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.</p><p></p><p> </p><p>3. ஒருவருடைய சுயநலத்திற்காக எளியவர்களின் கனவையோ வாழ்க்கையோ அழிப்பது அல்லது அவர்கள் மீது வீண் பழி சுமத்துவது சிவபெருமானுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று. அவர்களால் அந்த பாவத்திலிருந்து தப்பிக்கவே முடியாது.</p><p> 4.ஒருவர் தீய வழியில் தொடர்ந்து செல்வது அல்லது ஒருவருக்கு சிறிதளவு கூட நன்மையை செய்யாமல் இருப்பது இந்த இரண்டும் சிவபெருமானுடைய கோபத்திற்கு ஆளாக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/294aaf97-2424-407f-bb97-f79d6fabee3d/26-6a89611a7158d.webp' /></p><p> </p><p>5. கர்ப்பிணிகளிடம் மிக மோசமாக நடந்து கொள்வது அல்லது அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவது மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் மிகப் பெரிய பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.</p><p> 6.இன்னொருவர் மீது தேவையில்லாத பொய் சொல்லி வீழ்த்துவது தப்பிக்கவே முடியாத பாவத்தை சம்பாதித்து கொடுக்கும்.</p><p></p><p> 7. ஒருவருடைய செய்கையால் ஒருவருடைய வாழ்க்கை நாசமானால் அது மிகப் பெரிய பாவமாகும். அதிலிருந்தும் அவர்கள் தப்பிக்கவே முடியாது.</p><p> 8. ஒருவரை கொலை செய்வது அழிப்பது போன்றவையும் அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வாங்கி கொடுக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T08:43:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்பிறவி வாழ்க்கைத் துணையை சந்தித்து விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/7-sign-that-you-have-met-already-your-soul-mate-1787383083"></link>
            <id>https://ibcbakthi.com/article/7-sign-that-you-have-met-already-your-soul-mate-1787383083</id>
            <summary type="text">இந்த பூமியில் எல்லா விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. அந்த வகையில், பல நேரங்களில் நமக்கு இவரை நாம் ஏற்கனவே பார்த்தது உண்டு என்பதை போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த பூமியில் எல்லா விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. அந்த வகையில், பல நேரங்களில் நமக்கு இவரை நாம் ஏற்கனவே பார்த்தது உண்டு என்பதை போல் ஒரு உணர்வுகள் தோன்றும். </p><p>அதிலும், குறிப்பாக வாழ்க்கை துணையுடன் இந்த எண்ணம் நமக்கு அதிக அளவில் வருகிறது. இதற்கு காரணம் முன் ஜென்ம தொடர்பு என்று சொல்கிறார்கள். அந்த வகையில், நம்முடைய முற்பிறவி வாழ்க்கை துணையை நாம் சந்தித்து விட்டோம் என்பதை உணர்த்தும் ஏழு அறிகுறிகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/718ee983-bf38-4afa-9e2a-28085cbcfab6/26-6a894d2d92ee0.webp' /></p><p></p><p> 


1.இவர் தான் நம்முடைய முற்பிறவி வாழ்க்கை துணை என்பதை உணர்த்தக்கூடிய முதல் அறிகுறியாக அவர்களை பார்த்தவுடன் நாம் ஏற்கனவே அவர்களை தெரிந்தது போலும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் ஒரு உணர்வை கொடுக்கும்.</p><p>
 
2. உங்களை அறியாமலே நீங்கள் இருவரும் உங்களைப் பற்றி அதிக அளவில் பகிர்ந்து கொள்வீர்கள்.</p><p>

3. நீங்கள் இருவரும் பேசிக் கொள்கின்ற பொழுது அது வெறும் சாதாரண பிணைப்பாக மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாக மிகப்பெரிய அளவில் ஒரு பிணைப்பு உண்டாகும்.</p><p> 

4.அதுமட்டுமல்லாமல் அந்த உறவு உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வை நோக்கி கூட்டிச் செல்லும். நீங்கள் முன்பை விட இன்னும் அதிக அளவில் சிறப்பானவர்களாக இருப்பீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b70ecf-d5e9-4c3e-b36f-e016e5c14055/26-6a894d2e4a9f8.webp' /></p><p></p><p> </p><p>

5. உங்களிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் விஷயத்தை இதை ஏற்கனவே கேட்டது போல் உணர்வீர்கள். </p><p>

6. அதைவிட முக்கியமாக இருவரும் எந்த ஒரு வார்த்தைகளும் பேசாமல் உணர்வு ரீதியாக யார் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை உருவாகும்.</p><p> 

7.இருவருக்கும் இடையே எவ்வளவு சிக்கல் இருந்தாலும் அதை தாண்டி உங்களுடைய உறவு நீண்ட காலம் தொடர்வதை பார்க்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:18:23+00:00</updated>
        </entry>
    </feed>
