<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-26T09:38:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்ல வேலை கிடைக்க தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த 3 மந்திரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-powerful-mantras-for-job-success-career-growth-1787733812"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-powerful-mantras-for-job-success-career-growth-1787733812</id>
            <summary type="text">இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. இவ்வாறு வருந்துபவர்களுக்கு தினமும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய காலகட்டங்களில் ஒரு சிலருக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. இவ்வாறு வருந்துபவர்களுக்கு தினமும் மனதார இறைவழிபாடு செய்து இந்த மூன்று சக்தி வாய்ந்த மந்திரங்களை பாராயணம் செய்கின்ற பொழுது நிச்சயம் நீங்கள் நினைத்த வேலை உங்களை வந்து சேரும்.</p><p></p><p> </p><h3>

1. கணபதி மந்திரம்:</h3><p><b>&nbsp; "ஓம் கீம் கூம் கணபதே நமஹ ஸ்வாஹா"</b>
இது ஒரு எளிய கணபதி மந்திரம் இதனை நீங்கள் தினமும் அல்லது தொடர்ந்து 11 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வருகின்ற பொழுது நல்ல வேலை கிடைக்கும். அதிலும், குறிப்பாக மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து புதன்கிழமை வடக்கு நோக்கி இந்த மந்திரத்தை பாராயணம் செய்வது சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/932993a9-174c-49cb-85a0-0aeba509e19a/26-6a8ea736284bc.webp' /></p><h3> 

2. அனுமன் மந்திரம்:</h3><p><b> 
"ஓம் ஶ்ரீ வஜ்ரதேஹாய ராமபக்தாய"
</b>
ஒருவருக்கு மிகப்பெரிய அளவில் பதிவு உயர்வு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது நீங்கள் இந்த அனுமன் மந்திரத்தை மனதார நினைத்து 21 நாட்கள் 11 முறை பாராயணம் செய்து வர நிச்சயம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் தேடி வந்து சேரும்.</p><p></p><h3>
 
3. சூரிய மந்திரம்:</h3><p><b>&nbsp; "ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஸஹ ஸூர்ய நமக"</b>

ஒருவருக்கு பதவி உயர்வு ஆளுமை தன்மை மற்றும் சமுதாயத்தில் அந்தஸ்து பெற வேண்டும் என்றால் சூரிய பகவான் உடைய அருள் வேண்டும். அந்த வகையில் வெண்ணிற ஆடை அணிந்து கிழக்கு நோக்கியவாறு இந்த மந்திரத்தை 41 நாட்கள் 108 முறை பாராயணம் செய்து வர வெகு விரைவில் நீங்கள் நினைத்த காரியங்களும் நினைத்த வேலைகளும் வெற்றி வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-mistakes-we-shouldnt-do-on-temple-worshiping-1787729301"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-mistakes-we-shouldnt-do-on-temple-worshiping-1787729301</id>
            <summary type="text">&amp;nbsp;எல்லோருமே இந்த வாழ்க்கையில் தெரிந்து தவறுகளை செய்வதில்லை. பல நேரங்களில் அறியாமையால் தவறுகளை செய்து விடுகின்றோம். ஆனால் அதை திருத்திக் கொள்வதே ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எல்லோருமே இந்த வாழ்க்கையில் தெரிந்து தவறுகளை செய்வதில்லை. பல நேரங்களில் அறியாமையால் தவறுகளை செய்து விடுகின்றோம். ஆனால் அதை திருத்திக் கொள்வதே ஒரு நல்ல மனிதனுக்கு உரிய குணமாகும். அந்த வகையில், கோயில் மற்றும் பூஜை செய்யும்பொழுது செய்யக்கூடாத 8 தவறுகளை பற்றி பார்ப்போம்.</p><p></p><p>

1. ஒருவர் சூடு படுத்திய எண்ணெயில் கடவுளுக்கு எப்பொழுதும் தீபம் ஏற்றக்கூடாது. </p><p>2. அதை போல், காமாட்சி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் வைக்காமல் ஏற்றக்கூடாது. </p><p>3. விளக்கு அணையும் போது அதனை பார்க்க கூடாது.</p><p>
4. கோயிலுக்கு சென்று அமராமல் அவசர அவசரமாக வீடு திரும்புதல் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1cbc368-a83d-4041-9d50-cca197dce751/26-6a8e9596c5dfa.webp' /></p><p></p><p> </p><p>5. கோயில் குளங்களில் கல் எரிந்து எப்பொழுதும் விளையாட கூடாது. சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>6. திருவிழாவை மட்டும் பார்த்துவிட்டு கடவுளை தரிசிக்காமல் நிச்சயம் நாம் வீடு திரும்புதல் கூடாது.</p><p>7. கடவுளை வணங்கும் பொழுது ஏதாவது நாம் சாப்பிட்டுக் கொண்டே தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
</p><p>8. கோயில் கோபுரத்தின் நிழலை நாம் தவறியும் மிதிக்க கூடாது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T07:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 3 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-things-we-should-do-on-onam-to-get-blessings-1787724799"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-things-we-should-do-on-onam-to-get-blessings-1787724799</id>
            <summary type="text">ஓணம் பண்டிகை 2026 :


2026 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை 12. 28 மணி துவங...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஓணம் பண்டிகை 2026 :
</h3><p>

2026 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை 12. 28 மணி துவங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை 2.20 மணி வரை திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது.</p><p> இதனால், பெருமாளுடைய மந்திரங்களை பாராயணம் செய்வதும் பெருமாளை வழிபாடு செய்வதும் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. கட்டாயம் இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நம் வாழ்க்கையில் எல்லா செல்வ வளங்களையும் பெற்றுக் கொடுக்கும். </p><p>

கேரள மாநிலத்தில் கொண்டாடக்கூடிய மிக முக்கிய மற்றும் பெரிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இது மலையாள புத்தாண்டான சிங்க மாதத்தில் விமர்சையாக கொண்டாட கூடிய ஒரு பண்டிகையில் ஒன்று. அஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.</p><p> இதில் திருவோணம் தினம் மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது மலையாள மக்களின் செல்வ வளம், ஒற்றுமை உற்சாகம், ஆனந்தம், மகிழ்ச்சி ஆகியவற்றை பல மடங்காக பெறுகச்செய்யும் பண்டிகையில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9690add3-2505-4875-bf5f-8cc2e44fb07a/26-6a8e8401e5184.webp' /></p><p></p><p> </p><h3>

ஓணம் கொண்டாட காரணம் :
</h3><p>புராண கதைகளின் அடிப்படையில் மகாபலியின் பக்தி மற்றும் வேள்வி ஆகியவற்றால் பயந்து நடுங்கிய தேவர்கள் அவர்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அன்றி மகாவிஷ்ணுவை சரணடைகிறார்கள்.

 அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மகாவிஷ்ணுவும் குள்ளமான அந்தண சிறுவனாக வாமனர் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகை தருகிறார்.</p><p> தினமும் தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் கேட்பவற்றை தானமாக கொடுக்கும் வழக்கத்தைக் கொண்ட மகாபலியடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்கிறார்.
 அசுர குருவான சுக்ராச்சாரியார் தடுத்தும் நிலத்தை தானமாக தர ஒப்புக்கொள்கிறார்.</p><p> மகாபலி அவர் தானம் தருவதற்காக கமண்ட்லத்தில் இருக்கும் தண்ணீரை வாமனரின் கையில் ஊற்றியதும், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆக திரிவிக்ரமராக வளர்ந்து நின்ற வாமனர், அவருடைய முதல் அடியால் விண்ணுலகையும் இரண்டாவது அடியில் பூமியையும் அளந்த பிறகு மூன்றாவது அடி என மகாபலியிடம் கேட்கிறார்.</p><p></p><p>
</p><p>
 பிறகு அவரும் வந்திருப்பது திருமலையான் என்பதை உணர்ந்து கொண்டு மகாபலி மூன்றாவது அடியை தன்னுடைய தலைமீது வைக்கும் படி வேண்டிக் கொள்கிறார். அவரது, தலை மீது தனது திருவடி வைத்த மகாவிஷ்ணு மகாபலி பாதாள உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். </p><p>மகாபலிக்கு சிரஞ்சீவி வரம் அளித்த திருமால் அவரது வேண்டுகோளுக்கு ஏற்று வருடத்திற்கு ஒரு முறை பூமிக்கு வந்து தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க கூடிய வரத்தையும் தருகிறார். அவ்வாறு, மகாபலி தன்னுடைய மக்களை காண வரக் கூடிய அந்த திருநாளையே நாம் ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். </p><h2>


ஓணம் பண்டிகை அன்று செய்ய வேண்டிய 3 விஷயங்கள் :</h2><p>
1. ஓணம் பண்டிகை என்று வீடுகளில் மலர்கள் கொண்டு பூக்கோலம் இட்டு வீடுகளை அலங்கரிக்க வேண்டும். இது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. </p><p>
2. அதோடு, இந்த ஓணம் பண்டிகை அன்று புதிய ஆடைகள் உடுத்தி நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சிகளையும் வாழ்த்துகளையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது நம்முடைய ஒற்றுமை மற்றும் உற்சாகத்தில் அடையாளமாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f53525-ea10-4d62-af4b-022485614873/26-6a8e84013776f.webp' /></p><p> </p><p>
3. மேலும், ஒவ்வொருவர் வீடுகளிலும் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப ஓணம் சத்யாவிருந்து படைக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் பாரம்பரிய முறையில் 64 உணவு வகைகளையும் தலைவாழை இலைகள் பரிமாறி விருந்து ஏற்பாடு செய்யலாம். </p><p>முடியாதவர்கள் கவலை கொள்ளாமல் தங்களுடைய வசதிக்கேற்ப என்ன செய்ய முடியுமோ அதை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடலாம். 

 இந்த மூன்று விஷயங்களை நாம் ம் ஓணம் பண்டிகை எஅன்று செய்கின்ற பொழுது மகாபலி மன்னன் நமக்கு அருள் செய்வார் என்பது நம்பிக்கை. அதனால் நம்முடைய குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி ஆனந்தம் ஆகியவை பெருகும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (26-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/12-rasi-palangal-august-26-2026-wednesday-1787718607"></link>
            <id>https://ibcbakthi.com/article/12-rasi-palangal-august-26-2026-wednesday-1787718607</id>
            <summary type="text">மேஷம்:
 இன்று வீடுகளில் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும். பிள்ளைகள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். தாயார் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டு....</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p> இன்று வீடுகளில் எதிர்பார்த்த விஷயங்கள் கைக்கூடி வரும். பிள்ளைகள் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். தாயார் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டு.</p><h3> ரிஷபம்:</h3><p>
 நீண்ட நாட்கள் முடிவுக்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். மற்றவர்களுடைய ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.</p><h3> 

மிதுனம்: </h3><p>

இன்று பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.
</p><h3> கடகம்:
</h3><p> கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சி கைகூடும். </p><h3>
சிம்மம்:
</h3><p> எதிர்பாராத நபரை சந்திப்பீர்கள். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் நாளாக அமையப் போகிறது. மனநிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அடமான பொருட்களை மீட்டெடுப்பீர்கள்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">துலாம்:</span></p><p> இன்று பொது வாழ்க்கையில் உங்களுடைய செல்வாக்கு உயரும். உடலில் ஒரு விதமான சோர்வை சந்திப்பீர்கள். உறவினர்களுடைய வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மாணவர்களுக்கு உடற்கல்வி தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும்.</p><h3>
 தனுசு:
</h3><p> கணவன் மனைவி இடையே நல்ல நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் வழியே தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.</p><p></p><h3>
 மகரம்:
</h3><p> வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்ல முடிவை தரும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
</p><h3> கும்பம்:
</h3><p> உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது அவசியம். குழந்தைகள் வழியில் எதிர்பாராத அலைச்சல் வரலாம். விவசாய பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு.</p><h3> மீனம்:
</h3><p> குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். சிந்தனைகளில் இருந்து குழப்பங்கள் விலகும். வரவுக்கு ஏற்ற செலவுகளை வைத்துக் கொள்வது அவசியம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T04:30:14+00:00</updated>
        </entry>
    </feed>
