<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-07T10:17:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/insured-703-crore-for-ganesh-chathurthi-in-mumbai-1788772380"></link>
            <id>https://ibcbakthi.com/article/insured-703-crore-for-ganesh-chathurthi-in-mumbai-1788772380</id>
            <summary type="text">மும்பையில் 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க கூடிய மும்பையின் மிகுந்த பணக்கார ஜிஎஸ்பி மண்டல் விநாயக சிலை ரூபாய் 703 கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையில் 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க கூடிய மும்பையின் மிகுந்த பணக்கார ஜிஎஸ்பி மண்டல் விநாயக சிலை ரூபாய் 703 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.</p><p> மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலாகக் கருதப்படும் கிங்ஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி. சேவா மண்டல், அவர்கள் தங்களுடைய 72 ஆவது ஆண்டு விநாயக சதுர்த்தி வருகின்ற 2026 ஆம் ஆண்டு 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மிக விமர்சையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.</p><p>
</p><p>

 இந்த விழாவின் பொழுது இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் மகா கணபதி சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39821e59-504e-4263-a8f8-586a5e907110/26-6a9e801e6430f.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், கடந்த ஆண்டு இந்த மண்டல சார்பில் ரூபாய் 474 கோடி காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் வசதிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில் ரூபாய் 703 கோடி 27 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
</p><p>

 அதன்படி விநாயகருக்கு பிரதிஷ்டை செய்யக்கூடிய சிலை மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த ரத்தின கற்களுக்கு இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதைவிட, முக்கியமாக விழாவிற்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p><p>இது குறித்து மண்டலின் செய்தி தொடர்பாளர் அமித் பை கூறுகையில் பொறுப்புள்ள ஒரு அமைப்பாக விழாவிற்கு வருகின்ற ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்புகளுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எங்களுடைய கடமையாகும் என்றும், அதனால் இந்த மெகா காப்பீடு திட்டத்தை எடுத்துள்ளோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae32bfdf-ac2c-40a5-9c06-2e7a1b8d3c87/26-6a9e801f33f28.webp' /></p><p></p><p>
</p><h3>டிஜிட்டல் ரசீதுகள்:
</h3><p>
 மேலும், இந்த விழாவில் காகித பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு முதல் அவர்கள் பாரம்பரிய காகித ரசீதுகளுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். </p><p>அதே போல், இந்த ஐந்து நாள் விழாவில் தினமும் 40 பக்தர்களுக்கு அன்னதானமும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரசாதமும் வழங்கப்பட உள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளை தீய சக்திகள் நெருங்காமல் இருக்க சொல்ல வேண்டிய முனீஸ்வரர் மந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/muneeswaran-mantra-to-remove-negative-energy-1788766282"></link>
            <id>https://ibcbakthi.com/article/muneeswaran-mantra-to-remove-negative-energy-1788766282</id>
            <summary type="text">&amp;nbsp; காவல் தெய்வங்களில் முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நீதி நியாயத்தை நிலை நாட்டி கொடுப்பவர். பக்தர்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிக்கு முனீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காவல் தெய்வங்களில் முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நீதி நியாயத்தை நிலை நாட்டி கொடுப்பவர். பக்தர்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிக்கு முனீஸ்வரனை சரண் அடைந்தால் 48 நாட்களில் அவர்களுக்கான தீர்வை வாங்கி கொடுப்பவர். </p><p>அப்படியாக, முனீஸ்வரரின் மந்திரத்தை வீடுகளில் பாராயணம் செய்ய நம் வீடுகளில் சூழ்ந்து இருக்கும் தீய சக்திகளும், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளும், உடல் நலக்குறைவு, பொருளாதார நெருக்கடிகள் யாவும் விலகும். </p><p>

அந்த வகையில் கீழ்கண்ட முனீஸ்வரர் மந்திரத்தை தினமும் 3 முறை வீடுகளில் அமர்ந்து முனீஸ்வரர் நினைத்து வழிபாடு செய்ய நினைத்த காரியம் நடக்கும். உங்களை சூழந்து உள்ள தீயசக்திகள் யாவும் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/447e34f5-fdad-49e9-adc2-94827aac5ec1/26-6a9e684c5d379.webp' /></p><p></p><p>
</p><h3>
மந்திரம்:
</h3><blockquote class="blockquote">"ஓம் ஹம் ஜடா மகுடதராய உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய சத்ரு சம்ஹாரனாய ஜடா முனீஸ்வராய நமஹ"</blockquote><h3>
பொருள்:</h3><p> ஜடா முடியைத் தரித்தவரும், உக்கிர ரூபம் கொண்டவரும், தீயவர்களை தேடி சென்று அழிப்பவரும், எதிரிகளை சம்ஹாரம் செய்பவருமான ஜடா முனீஸ்வரருக்கு எனது வணக்கங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eff801c-70e6-4754-a149-0a52d84d7697/26-6a9e684d51609.webp' /></p><p></p><p>
</p><p>
அதேபோல், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையில் அருகில் இருக்கும் முனீஸ்வரன் ஆலயம் சென்று அங்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் குடும்பத்திற்கு முனீஸ்வரன் கேட்ட வரங்களை தருவதோடு, குடும்பத்திற்கு பாதுகாவலராக அமைவார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T07:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-to-trust-someone-says-krishna-bagvan-1788757961"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-to-trust-someone-says-krishna-bagvan-1788757961</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சங்கடமான நிலை யாரை நம்புவது? எப்படி நம்புவது? எப்பொழுது நம்புவது? இந்த தடுமாற்றம் தான் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய சங்கடமான நிலை யாரை நம்புவது? எப்படி நம்புவது? எப்பொழுது நம்புவது? இந்த தடுமாற்றம் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. </p><p>இந்த ஒரு நுணுக்கமான விஷயத்தை நாம் அறிந்து விட்டால் பல பிரச்சனைகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 

முக்கியமாக நம்முடைய மனமானது உடைந்து போகாமல் நாம் பார்த்துக் கொள்ள முடியும்.</p><p> அப்படியாக, கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதையில் நாம் இந்த உலகத்தைப் பற்றிய தெரிந்து கொள்ளக்கூடிய எல்லா விஷயங்களும் நிறைந்து இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3c0db4b-c699-4ad1-8681-67f07f4d7b6e/26-6a9e47ca6d708.webp' /></p><p></p><p> 

பகவத் கீதை ஒன்று மட்டுமே போதும் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாகவும் அமைதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வதற்கும். அப்படியாக, கிருஷ்ண பகவான் நமக்கு இனிமையாக பேசக்கூடிய எல்லோரும் நமக்கு நன்மை செய்வார்களா? என்பதை பற்றி எடுத்து சொல்கிறார். அதை நாம் தெரிந்து கொள்வோம்.</p><p> ஒருமுறை அர்ஜுனன் கிருஷ்ண பகவானிடம் கேட்கிறார், கிருஷ்ணா! இனிமையாக பேசும் எல்லோரும் நமக்கு நன்மை செய்யக்கூடியவர்களா என்று? சந்தேகத்தை கேட்கிறார். அதற்கு கிருஷ்ணன் அழகாக பதில் அளிக்கிறார். 

இந்த ஒரு பதில் நம் மனதில் பதிந்து விட்டால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் இனி துன்பம் என்பது இல்லை. </p><p>கிருஷ்ணர் சொல்கிறார்! இங்கு யார் வேண்டுமானாலும் இனிமையாக பேசலாம். ஆனால், இனிமையாக பேசும் எல்லோரையும் நம்பி விடாதே. 

அவர்களுடைய செயல்களை கவனித்துப் பார். துரியோதனன் இனிமையாக பேசினான். ஆனால், அவனுடைய மனதில் பாண்டவர்களை பற்றிய பொறாமை சூழ்ந்து இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b7b3d47-4494-48b7-8595-e56101dca62e/26-6a9e47cb34f51.webp' /></p><p></p><p> </p><p>ஆக, ஒருவருடைய சொல்லை விடவும் அவர்களுடைய எண்ணமே அவர்கள் யார் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியது. கர்ணன் துரியோதனன் நட்புக்கு நன்றியுடன் இருந்தான். 

ஆனால், அது அவனை தர்மத்தை விட்டு வழிதவறி நடக்கச் செய்தது. ஆகையால், அர்ஜுனா அன்பாக பேசுபவர் எல்லோரிடமும் மதிப்பளி. </p><p>ஆனால், அவர்களுடைய செயல்களை பார்த்து அவர்களுக்கு நம்பிக்கை கொடு என்று கிருஷ்ணர் சொல்கிறார். 

மேலும், கிருஷ்ணர் நமக்கு இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறார். </p><p>இனிமையான வார்த்தைகள் நம்முடைய மனதை அந்த நேரத்தில் மகிழ்விக்கும்.உண்மை யான செயல்களே அவர்களுடைய அன்பை நிரூபிக்கும்.
</p><p>
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயுடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் தொழிலில் ஜாக்பாட் அடிப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/astrology-prediction-of-planet-conjuction-withmars-1788755855"></link>
            <id>https://ibcbakthi.com/article/astrology-prediction-of-planet-conjuction-withmars-1788755855</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக நாம் நம்மைப் பற்றியும் எதிர்கால கணிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் எந்த கிரகங்களோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக நாம் நம்மைப் பற்றியும் எதிர்கால கணிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் எந்த கிரகங்களோடு இணைந்து இருக்கிறார்? அந்த கிரக இணைவுகள் நம்முடைய தொழில் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் உருவாக்கும் என்பதை பற்றி பார்ப்போம். </p><h3>
செவ்வாய் - கேது சேர்க்கை:
</h3><p> ஜோதிட சாஸ்திர ரீதியாக செவ்வாயும் கேதுவும் எதிர்மறை இணைவு என்று கருதப்பட்டாலும் இந்த சேர்க்கை ஒருவருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வெற்றிகளை பெறக்கூடிய வாய்ப்புகளையும் ஆன்மீகத்தில் முன்னேற்றமும் புகழையும் பெற்றுக் கொடுக்கும்.</p><h3> 
செவ்வாய் - சனி சேர்க்கை: </h3><p>
இந்த சேர்க்கை பூர்வீகத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று தொழில் செய்து அங்கு மிகப்பெரிய அளவில் வெற்றியையும் ஜாக்பாட் அடிக்கக்கூடிய யோகத்தையும் பெற்றுக் கொடுக்கும். மேலும், இது கர்ம வினைகளையும் குடும்பப் பின்னணியையும் குறிக்கக் கூடியதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dec870e7-8bfb-46c8-9f99-23bf5031954b/26-6a9e3f913a64d.webp' /></p><p></p><p>
</p><h3> 
செவ்வாய் - சூரியன் சேர்க்கை:</h3><p>
இந்த சேர்க்கை வேலை செய்யும் இடங்களில் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல், உயர் அதிகாரிகளிடம் மோதல், அடிக்கடி கல்வி அல்லது வேலையை மாற்றக்கூடிய அமைப்பை உண்டாக்கும். ஒரு சிலருக்கு உடல் நல குறைபாடுகளை உண்டு செய்யும்.</p><h3>
 
பரிகாரங்கள்:
</h3><p>இந்த சேர்க்கை கொண்டவர்களுக்கு சில நேரங்களில் கடன் விபத்து போன்ற பிரச்சனை வரலாம். ஆதலால், ரத்த தானம் செய்வது சிறந்தது. </p><p>மேலும், இவர்கள் செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் கடல் ஆறு அல்லது மலை சார்ந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் சிறப்பான பலன் கொடுக்கும்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dPGH9LHRfXo?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T04:37:40+00:00</updated>
        </entry>
    </feed>
