<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-09T06:23:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் ஒரு ரூபாய் இருந்தால் அடைத்து விடலாம்.. எப்படி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-for-financial-loss-and-struggles-1788934610"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-for-financial-loss-and-struggles-1788934610</id>
            <summary type="text">நேரம் சரியில்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் நாம் கடனாளியாகக் கூடிய நிலை உண்டாகிவிடும். அந்த வகையில், எவ்வளவு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அதை நாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேரம் சரியில்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் நாம் கடனாளியாகக் கூடிய நிலை உண்டாகிவிடும். அந்த வகையில், எவ்வளவு கோடி ரூபாய் கடன் இருந்தாலும் அதை நாம் இறைவழிபாட்டாலும் நல்ல உழைப்பு இருந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடலாம்.</p><p> அப்படியாக, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வதன் வழியாக நம்முடைய கடன் தீருவதோடு மனவலிமையும் புதிய பாதையும் நமக்கு பிறக்கும்.</p><p> அதே போல், மைத்திர முகூர்த்தம் என்பது ஒரு சிறந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் ஒரு சிறிய அளவிலாவது நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை நாம் கடன் தொகையாக திரும்ப செலுத்துவது விரைவில் கடன் அடைவதற்கான பாக்கியத்தை உருவாக்கும்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54504cd7-9df4-42e7-92f6-153e78bea738/26-6aa0fa7aae772.webp' />&nbsp;</p><p> மேலும், சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றுவது அல்லது தேய்பிறை அஷ்டமி அன்று மிளகு தீபம் ஏற்றுவது நமக்கு தேவையற்ற பண விரயங்களை தடுக்கவும், கடன் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.</p><p> அதோடு, சிவபெருமானுக்கு தேன் அல்லது அரிசி மாவு அபிஷேகம் செய்வதும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்குவதோடு மன உறுதி கொடுக்கும். </p><p>மிக முக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நிச்சயம் வீடுகளில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும். முடிந்த வரை பசியால் வாடும் நபர்களுக்கு உணவளிப்பதும் கடன் சுமையை குறைக்கக்கூடிய ஒரு நல்ல வழியாக அமையும். </p><p>வீட்டின் அருகில் இருக்கக்கூடிய உயிரினங்களுக்கு உதவுவது கர்ம வினையானது படிப்படியாக குறையும். மேலும், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு நாம் என்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DNGRPi_5238" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசி பலன் (09-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-09-2026-wednesday-1788928432"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-09-2026-wednesday-1788928432</id>
            <summary type="text">மேஷம்:
மனதில் சில குழப்பங்களும் கவலைகளும் வரலாம். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். திடீர் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மாலை மேல் புத்துணர்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>மனதில் சில குழப்பங்களும் கவலைகளும் வரலாம். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். திடீர் முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மாலை மேல் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
</p><h3>ரிஷபம்:</h3><p>வெளியுலக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வேலை ரீதியாக காலை முதல் பதட்டமான நிலை காணப்படலாம். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகலாம். நினைத்ததை சாதிப்பீர்கள்.
</p><h3>மிதுனம்:
</h3><p>கடந்த கால நினைவுகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆலய வழிபாடுகளில் கலந்துக் கொள்வீர்கள். தாய்மாமன் உடன் கருத்து வேறுபாடு வரலாம்.</p><p></p><p>
</p><h3>கடகம்:
</h3><p>இன்று உணர்ச்சிவசப்பட்டு எந்த வாக்குறுதிகளும் கொடுக்காதீர்கள். வேலை ரீதியாக பாராட்டுக்கள் கிடைக்கும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.</p><h3>
சிம்மம்:
</h3><p>உங்கள் சொந்தங்களிடம் இன்று தேவை இல்லாத வாக்கு வாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.
</p><h3>கன்னி:
</h3><p>இன்று மனதில் சிலகுழப்பங்களும் கவலையும் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆறுதலும் உறுதுணையும் கொடுப்பார்கள்.</p><h3>
துலாம்:
</h3><p>இன்று சிலர் உண்மையின் முகத்தை புரிந்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். </p><h3>
விருச்சிகம்:
</h3><p>திருமணம் தொடர்பான பேச்சுக்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.</p><h3>
தனுசு:
</h3><p>பிள்ளைகள் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். தொழில் ரீதியாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
</p><h3>மகரம்:
</h3><p>இன்று சொந்தங்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் வைத்துக் கொள்ளவேண்டாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் நினைத்த காரியமும் தேடி வரும்.
நம்பிக்கையான நாள்.</p><p></p><p>
</p><h3>கும்பம்:
</h3><p>அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நினைத்த வேலை செய்து முடிக்க சில தடைகள் வரலாம். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள்.</p><h3>
மீனம்:
</h3><p>உங்கள் வீடுகளில் எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளிடம் கசப்பான செய்திகள் கேட்பீர்கள். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T04:33:56+00:00</updated>
        </entry>
    </feed>
