<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-30T06:40:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்கள் காலில் இந்த ராசிகள் கட்டாயம் விழக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-signs-should-never-fall-at-others-feet-1785392174"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-signs-should-never-fall-at-others-feet-1785392174</id>
            <summary type="text">நம்முடைய இந்து மத மரபில் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது என்பது ஒரு மரமாகவே கடைப்பிடித்து வருகின்றோம். அதாவது பெரியவர்களுடைய அல்லது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய இந்து மத மரபில் பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது என்பது ஒரு மரமாகவே கடைப்பிடித்து வருகின்றோம். அதாவது பெரியவர்களுடைய அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது என்பது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. </p><p>இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒரு சிலர் ஒருவருடைய காலில் விழக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

 27 நட்சத்திரங்களில் உத்திரட்டாதி, அனுஷம், பூசம் என சனி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் யாரும் பிறருடைய காலில் விழக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb1b112-09d4-48e1-85f4-229d675cedf2/26-6a6aec2fce8ad.webp' /></p><p></p><p> </p><p>அது போன்று பிறர் இவர்கள் கால்களில் விழுவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களும் கும்பம் மகர லக்னத்தில் பிறந்தவர்களும் மற்றவர் கால்களில் விழுவதோ அல்லது மற்றவர் உங்கள் காலில் விழுவதும் கூடாது.</p><p>இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி பகவானுடைய ஆதிக்கத்தை அதிகம் கொண்டவர்கள். இவர்கள் பிறர் கால்களில் விழுவதை காட்டிலும் தாய் காலில் தொட்டு வணங்கும் பொழுது இவர்களுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158672c8-0349-48e3-a913-3f60e34f3ea4/26-6a6aec3084ffa.webp' /></p><p></p><p>இவர்கள் தாயை மகிழ்ச்சியாக வைக்கின்ற பொழுது இவர்களுக்கு சனி பகவான் கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் தாய் தந்தையை தவிர பிறருடைய கால்களில் விழுவதை தவிர்த்துக் கொள்ளலாம். </p><p>இவர்கள் மற்றவர் காலில் விழும் பொழுது அவர்கள் ஜாதகத்தில் உள்ள புண்ணிய பலன் குறையும் என்று சொல்லப்படுகிறது. காரணம் சனி பகவானுக்கு உரிய பகுதி பாதம் என்பதால் இவர்களுக்கு கர்மபலனைக் கொடுக்கக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசி பலன் (30-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-30-2026-thursday-1785330183"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-30-2026-thursday-1785330183</id>
            <summary type="text">மேஷம்:
வீண் விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முதுகு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>வீண் விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். முதுகு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
</p><h3>ரிஷபம்:
</h3><p>வியாபாரத்தில் வீண் செலவுகளை சந்திக்கும் நிலை வரலாம். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். தந்தை உடல்நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
</p><h3>மிதுனம்:
</h3><p>வெளியூர் செல்லும் நிலை வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு தலைவலி உண்டாகலாம். அமைதி காப்பது அவசியம்.
</p><h3>கடகம்:</h3><p>
உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் தேவதை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விலங்கு வேண்டும். திடீர் வெளியூர் பயணம் செல்லும் நிலை வரலாம்.
</p><h3>சிம்மம்:
</h3><p>குடும்பத்தில் உங்களுக்கு மதிப்புகள் உயரும். அரசியலில் இருப்பவர்கள் முடிவுகள் எடுக்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு விஷயங்களில் இருந்து வந்த சங்கடம் குறையும்.</p><h3>
கன்னி:</h3><p>
இன்று குடும்பத்தில் காலை முதல் சில சிக்கலான சூழ்நிலை உண்டாகலாம். வழக்கு தொடர்பாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். காதல் வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலை உண்டாகும்.</p><p></p><p>
</p><h3>துலாம்:</h3><p>
மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பமும் கவலையும் உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இசை துறையில் இருப்பவர்களுக்கு விரைவில் நற்செய்தி வந்து சேரும் அமைப்பு உண்டாகும்.</p><h3>
விருச்சிகம்:
</h3><p>மனதில் திடீர் குழப்பமும் பயமும் உண்டாகும். உறவுகள் இடையே தேவை இல்லாத வாக்கு வாதங்கள் செய்யாதீர்கள். உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள்.</p><h3>
தனுசு:
</h3><p>கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும் எதையும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகும். குடும்பத்தினர் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.</p><p></p><p>
</p><h3>மகரம்:</h3><p>
இன்று காலை முதல் உடல் சோர்வு உண்டாகலாம். நினைத்த காரியம் நடக்க சில தாமதம் ஆகலாம். வீடுகளில் உங்களுக்கு மதிப்பு உயரும். உயர் கல்வியில் இருந்து வந்த தடை விலகும்.</p><h3>
கும்பம்:
</h3><p>அரசு வழியே சந்தித்த பிரச்சனை விலகும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் உள்ள கசப்புகள் விலகும்.
நன்மையான நாள்.
</p><h3>மீனம்:
</h3><p>வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் நற்செய்தியும் வந்து சேரும். பெண் பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த கஷடங்கள் விலகும். குலதெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருடைய சாபத்திற்கு அதிக சக்தி உள்ளது? சாஸ்திரம் சொல்வது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/whose-curse-is-most-effective-according-sashtra-1785385306"></link>
            <id>https://ibcbakthi.com/article/whose-curse-is-most-effective-according-sashtra-1785385306</id>
            <summary type="text">சாபம் என்பது ஒருவர் தீங்கு விளைவிக்கின்ற பொழுது அதை அல்லது கோபத்தை ஏற்படுத்துகின்ற பொழுது அல்லது நமக்கு ஏற்றவாறு அவர்கள் நடக்காத பொழுது நம் மனமானது நொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாபம் என்பது ஒருவர் தீங்கு விளைவிக்கின்ற பொழுது அதை அல்லது கோபத்தை ஏற்படுத்துகின்ற பொழுது அல்லது நமக்கு ஏற்றவாறு அவர்கள் நடக்காத பொழுது நம் மனமானது நொந்து ஒருவருக்கு ஒரு சாபத்தை வழங்குகிறது. </p><p>இது சில நேரங்களில் மனவலியால் ஒருவருக்கு கொடுக்கக்கூடிய சாபமாக இருந்தாலும் சில நேரங்களில் ஒருவர் வெறும் கோபத்தின் வெளிப்பாடாக அவர்களுடைய சாபத்தை கொடுக்கிறார்.</p><p></p><p> இருப்பினும் அவர்கள் கோபமாக இருந்தாலும் மனம் நொந்து அந்த கோபம் வெளிப்பட்டால் நிச்சயமாக அந்த சாபமும் பலித்து விடும் என்று சொல்கிறார்கள். </p><p>அதனால், முடிந்தவரை நாம் எவருடைய மனமும் துன்பப்படாமல் வாழ்ந்து விடுவது அவசியம். இந்த உலகத்தில் ஒருவரின் நேரம் சரி இல்லை என்றால் அவர்களால் பாவம் என்பது நிறுத்தப்படாமல் நடந்தேற கூடிய ஒரு நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce578361-2d33-44d5-a060-40018c9c1188/26-6a6ad15bce55a.webp' /></p><p> </p><p>இறுதியில் அவர்கள் நிம்மதியாக அமரும் முன் அதற்கான முழு பலனை பிரபஞ்சம் கொடுத்து விடும். ஆனால் அதிலிருந்து விடுதலை பெறுவது என்பது எத்தனை ஜென்மங்கள் கடக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய மாட்டோம். </p><p>ஆதலால் பிறர் நமக்கு தீங்கு செய்ய முயன்றாலும் நாம் நம்முடைய பாதையில் சரியாக நடக்கின்ற பொழுது இறைவன் துன்பத்திலும் நமக்கு இறுதியில் இன்பத்தை வழங்குவார்.</p><p></p><p> வாழ்கின்ற இந்த சிறிய காலங்களில் தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக மனைவியாக, கணவனாக, குழந்தைகளாக இறைவனால் விதிக்கப்பட்ட உறவுகளிடம் நாம் அன்பு பாராட்டி யாருடைய மனதையும் புண்படுத்தாமல் அவர்களுடைய மன வலியின் உச்சக்கட்டத்திற்கு அவர்கள் சென்ற சாபம் விடும் அளவிற்கு நாம் ஒரு அமைப்பை உருவாக்காமல் வாழ்வது அவசியமாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:21:51+00:00</updated>
        </entry>
    </feed>
