<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-11T10:32:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதியை வெல்ல பாட வேண்டிய சக்தி வாய்ந்த பாடல்.. நிச்சயம் மாற்றம் உண்டு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/40th-abirami-anthathi-mantras-for-good-life-1789117124"></link>
            <id>https://ibcbakthi.com/article/40th-abirami-anthathi-mantras-for-good-life-1789117124</id>
            <summary type="text">திருக்கடையூரில் அருள்பாலிக்கக்கூடிய அபிராமி அம்மன் மீது அளவு கடந்த அன்பின் காரணமாக அபிராமி பட்டர் இயற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாகவே இந்த அபிராமி அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருக்கடையூரில் அருள்பாலிக்கக்கூடிய அபிராமி அம்மன் மீது அளவு கடந்த அன்பின் காரணமாக அபிராமி பட்டர் இயற்றிய நூறு பாடல்களின் தொகுப்பாகவே இந்த அபிராமி அந்தாதி விளங்குகிறது.</p><p> அம்மனின் பரிபூரண அருள், பக்தியின் மகிமை சரணாகதி, இறை நம்பிக்கை, ஆன்மீக ஞானம் போன்ற பல்வேறு கருத்துகளை கொண்ட இந்த அபிராமி அந்தாதி பக்தர்களால் மனம் உருகி பாராயணம் செய்கின்ற பொழுது அபிராமியின் அருளால் அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா செல்வமும் கிடைக்கிறது. </p><p>குறிப்பாக துன்பப்படும் வேளையில் எவர் ஒருவர் மனம் உருகி அபிராமி அந்தாதியை பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு இறைவனுடைய அருளாசியால் துன்பம் நொடிப்பொழுதில் விலகும். அந்த வகையில், விதியை மாற்றக்கூடியமாற்றக்கூடிய அபிராமி அந்தாதி பாடலை பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981d381e-6680-42df-8250-0e3da669f09e/26-6aa3c2c626af5.webp' /></p><p></p><p> </p><p>இதை தினமும் மனம் உருகி அபிராமி அன்னையை மனதில் நினைத்து பாராயணம் செய்து வர நிச்சயம் கர்ம வினையும் விதியின் தீய தாக்கம் குறையும். </p><h3>


பாடல்கள்:</h3><blockquote class="blockquote"><p>
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்<br>

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்<br>
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும்<br> அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.</p></blockquote><p></p><blockquote class="blockquote"><p> </p></blockquote><p>

இந்த பாடலை நீங்கள் தினமும் மனம் உருகி பாடி வரும் பொழுது மனதில் ஒரு எளிமையை உணர முடியும், அன்னை உங்கள் அருகில் வந்து அமர்ந்து உங்களிடமே பேசுவதைப் போல் நிச்சயமாக உணர முடியும். அதைவிட, முக்கியமாக விதி சூழ்ந்து துன்பப்படுகின்ற பொழுது அன்னையினுடைய அருட்பார்வை உங்கள் மீது விழுந்து எல்லாம் நொடிப்பொழுதில் மாறுகின்ற அந்த மாயாஜாலத்தையும் பார்க்க முடியும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T08:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் ரீதியாக கொடிக்கட்டி பறப்பதற்கு நியூமராலஜி டிப்ஸ் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/numerology-tips-to-succeed-in-business-1789112477"></link>
            <id>https://ibcbakthi.com/article/numerology-tips-to-succeed-in-business-1789112477</id>
            <summary type="text">&amp;nbsp; தொழில் தொடங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒவ்வொரு தொழிலையும் துவங்குவதற்கு முன்னால் பல யோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ய வேண்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தொழில் தொடங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒவ்வொரு தொழிலையும் துவங்குவதற்கு முன்னால் பல யோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம். அந்த வகையில், தொழில் தொடங்கும் பொழுது ஜோதிட ரீதியாக நாம் சில விஷயங்களை பின்பற்றினால் நிச்சயம் அவை நமக்கு கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம். </p><p>



ஒரு தொழில் நிறுவனத்தின் அடையாளமாக அவர்களுடைய பெயர் மற்றும் லோகோ விளங்குகிறது. ஆதலால், அதனை சரியான எண் கணித மதிப்புகளின் படி அமைப்பது மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றுக் கொடுக்கும். </p><p>அதே போல், வணிகங்களுக்கு எண் ஐந்து மிகவும் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட தொழில்களுக்கு இந்த எண் வெற்றியை கொடுக்கும். இந்த இடங்களில் 26, 29, 38 போன்ற எண்களை தவிர்ப்பது 

நல்லது.</p><p></p><p> </p><p>தொழில் ரீதியாக நாம் லோகோவில் மஞ்சள் நிறங்களை பயன்படுத்துவது நமக்கு சிறப்பை பெற்றுக் கொடுக்கும். அதனை சிவப்பு நிறத்துடன் இணைப்பது இன்னும் கூடுதல் பலம் உண்டாக்கும். முடிந்தவரை குடும்ப உறுப்பினர்களுடைய பெயரையோ அல்லது குழந்தைகளின் உடைய பெயர்களையோ நிறுவனங்களுக்கு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.</p><p> 

பொதுவாக, தொழில் தொடங்கும் பொழுது அல்லது வங்கி கணக்கு துவங்கும் பொழுது அந்த தேதியும் எண் கணிதப்படி சரியாக இருக்கிறதா என்று ஆலோசித்துக் கொள்வது அவசியம். மேலும், சில விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IcZwFwXEb14" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T07:41:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரிகளையும் தீய சக்திகளையும் அடியோடு விரட்டும் கருட காயத்ரி மந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/powerful-karuda-gayatri-mantra-for-life-struggle-1789106546"></link>
            <id>https://ibcbakthi.com/article/powerful-karuda-gayatri-mantra-for-life-struggle-1789106546</id>
            <summary type="text">வைணவ வழிபாடுகளில் கருடாழ்வார் என்பவர் மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் அவருடைய பக்தராகவும் இவரை &quot;பெரிய திருவடி&quot; என்ற சிறப்புகளோடு வழிபாடு செய்யக்கூடியவர். அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வைணவ வழிபாடுகளில் கருடாழ்வார் என்பவர் மகாவிஷ்ணுவின் வாகனமாகவும் அவருடைய பக்தராகவும் இவரை "பெரிய திருவடி" என்ற சிறப்புகளோடு வழிபாடு செய்யக்கூடியவர்.</p><p> அந்த வகையில், நாம் நம்முடைய வேண்டுதலை கருடாழ்வார் இடம் சமர்ப்பிக்க அவர் நமக்காக பகவான் விஷ்ணுவிடம் நம் வேண்டுதலை எடுத்து சொல்லி நம்முடைய வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி கொடுக்கக் கூடியவர் என்பது ஐதீகம்.
</p><p>
மேலும், நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் தடைகள் வருகிறது. சுற்றிலும் எதிரிகள் இருக்கிறார்கள். உங்கள் மீது வளர்ச்சி பொறுக்காமல் போட்டி பொறாமையின் காரணத்தால் நிறைய பழிவாங்கல் உங்களை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது. செய்வதறியாது தனித்து நிற்கின்ற வேலையில் நீங்கள் கவலையே கொள்ள வேண்டாம் "கருடாழ்வாரை" சரணடையுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03b6b6ff-e73d-49cc-bd58-29a9873d6eaa/26-6aa39973b9e95.webp' /></p><p> </p><p>அவர் உங்களுக்கு எப்பேர்பட்ட எதிரிகள் தொல்லையையும் ஜாதகத்தில் "ராகு, கேது" தோஷங்களையும் போக்கி ஒரு நல்ல வாழ்க்கை அருள்பவர். கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்வது மட்டும் அல்லாமல் அவர் கூறிய கருட காயத்ரி மந்திரத்தை நாம் பாராயணம் செய்வது என்பது நிச்சயம் பெரிய வகையில் நமக்கு கைகொடுக்கும்.
</p><h3>
கருட காயத்ரி மந்திரம்:
</h3><blockquote class="blockquote"><p>
ஓம் தத்புருஷாய வித்மஹே<br>

ஸ்வர்ண பக்ஷாய தீமஹி<br>தன்னோ கருட ப்ரசோதயாத் </p></blockquote><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a175f4-f22a-4872-81c8-4ea4c39e0f41/26-6aa399747b634.webp' /></p><blockquote class="blockquote"><p>
</p></blockquote><p>
இந்த கருட காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு 11, 27, 108 ஆகிய எண்ணிக்கையில் மனதார அமர்ந்து தன் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சினைகளும் விலக வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்கின்ற பொழுது நமக்கு கருடாழ்வாரின் முழு அருளால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும், கடன் நெருக்கடிகள் குறையும், இறைவனுடைய அருள் நமக்கு கிடைக்கும், எதிரிகளை போராடி வெல்லக்கூடிய வலிமை உண்டாகும், வேலையில் இருந்த தொந்தரவுகள் விலகும், கல்வி தடை விலகும், திருமண தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பெயர் புகழ் ஆகியவற்றை நாம் பெறலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு இளம் வயதிலே திருமணம் நடக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/who-will-get-early-marriage-according-12-zodiac-1789101393"></link>
            <id>https://ibcbakthi.com/article/who-will-get-early-marriage-according-12-zodiac-1789101393</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். மேலும், அந்த ராசியை பொறுத்து தான் அவர்களுடைய திருமண வாழ்க்கை படிப்பு போன்றவை அமைகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். மேலும், அந்த ராசியை பொறுத்து தான் அவர்களுடைய திருமண வாழ்க்கை படிப்பு போன்றவை அமைகிறது. அந்த வகையில், எந்த ராசிகள் பிறந்தவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p>

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து இருந்தால் அவர்களுக்கு ஒரு இனிமையான இல்லற வாழ்க்கை அமையும். ஆதலால், இவர்களுக்கு பெரும்பாலும் இளம் வயதிலேயே திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டு. </p><p>அதேபோல், சுக்கிரன் அல்லது செவ்வாய் போன்ற கிரகங்கள் வக்கிரம் பெற்றிருந்தாலும் அவை 5,7, 3 இடங்களில் தொடர்பு கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு விரைவில் திருமண நடக்கும். மேலும், ஜோதிடத்தில் மூன்றாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது.</p><p></p><p> </p><p>இந்த மூன்றாம் இடத்தில் ராகு செவ்வாய் சனி போன்ற கிரகங்கள் சுக்கிரனுடன் சேரும் பொழுது இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் உண்டாகுவதற்கான வாய்ப்பு உண்டு. </p><p>

மேலும், மேஷ ராசிக்கு மிதுனத்தில் சுக்கிரன் இருப்பதும் ரிஷப ராசிக்கு விருச்சிகத்தில் சுக்கிரன் இருப்பதும் இவர்களுக்கு இளம் வயதில் திருமணம் தொடர்பான விஷயங்கள் விரைவில் கைக்கூடிவரும். </p><p>அதைவிட முக்கியமாக ஏழாம் வீட்டில் குரு மற்றும் ராகு சேரும்போது உருவாகக்கூடிய குரு சண்டாள யோகம் சொந்த ஊரை விட்டு வெளியே அல்லது வெளிநாடுகளில் திருமணம் நடப்பதற்கான வழி வகுக்கும்.

மேலும், யாருக்கு ஜோதிடத்தை ரீதியாக விரைவில் திருமணம் நடக்கும் என்பதை பற்றி இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Y-84xLIRknA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T04:37:02+00:00</updated>
        </entry>
    </feed>
