<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-19T13:22:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் மிகுந்த சுயமரியாதையோடு வாழ்வார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/laknapathy-in-10-place-astrology-prediction-1784464528"></link>
            <id>https://ibcbakthi.com/article/laknapathy-in-10-place-astrology-prediction-1784464528</id>
            <summary type="text">ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் அவர்களுடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் கணித்து விடலாம். அந்த வகையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் அவர்களுடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் கணித்து விடலாம். </p><p>அந்த வகையில், ஒருவருடைய லக்னாதிபதி பத்தாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அந்த ஜாதகர் எந்த நிலையில் யாரையும் எதிர்பார்த்து நிற்க மாட்டார் "தன் கையே தனக்கு உதவி" என்று வாழக் கூடியவர்.</p><p> மிகவும் வைராக்கியமான குணம் இருக்கும். சுயமரியாதையோடு வாழக்கூடியவர்கள். மேலும் பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் என்பதால் தொழில், உழைப்பு, வாழ்க்கை உயர்வு ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. இந்த இடத்தில் லக்னாதிபதி அமர்கின்ற பொழுது ஜாதகர் ஒருவரை எதிர்பார்த்து வாழ விரும்ப மாட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524fd45a-3e3a-415e-8369-3a984b7db9ba/26-6a5cc4920b067.webp' /></p><p></p><p> </p><p>இவர் எப்பொழுதும் தன்னுடைய உழைப்பாலே உயர வேண்டும் என்று எண்ணக் கூடியவர். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் இவர்கள் கைநீட்டி ஒருவரிடம் உதவி கேட்பதை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உழைத்து பணத்தை சம்பாதித்து விடலாம் என்கின்ற ஒரு நம்பிக்கை இவர்களிடத்தில் இருக்கும். </p><p>இவர்கள் சுகமான வாழ்க்கையை விட சுயமரியாதை ஆன வாழ்க்கையை தான் அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் உழைப்பை வெறும் தொழிலாக மட்டும் பார்ப்பதில்லை. அவர்கள் ஒரு வாழ்க்கையின் ஒழுக்கமாக கருதுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff20ac28-c0c9-47c7-b302-7eacb94927d0/26-6a5cc492c40a4.webp' /></p><p></p><p> </p><p>அதேபோல், எந்த வேலையையும் அவர்கள் சிறியதாக நினைக்க மாட்டார்கள் உழைத்து உண்பதே உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணத்தோடு செயல்பட கூடியவர்கள். அதிலும் குறிப்பாக சனி பகவானுடைய பார்வை கிடைத்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள்.</p><p> வருமானம் குறைவாக இருந்தாலும் உழைத்து சம்பாதித்த அந்த மன திருப்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கையை விட மன நிறைவான வாழ்க்கையை தான் விரும்புகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/life-prediction-of-people-born-on-leo-zodiac-1784461772"></link>
            <id>https://ibcbakthi.com/article/life-prediction-of-people-born-on-leo-zodiac-1784461772</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சூரிய பகவானுடைய வீட்டை சொந்தமாக கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் ஆளுமையாக விளங்க கூடியவர்கள். ஆனால்,, சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சூரிய பகவானுடைய வீட்டை சொந்தமாக கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் ஆளுமையாக விளங்க கூடியவர்கள். ஆனால்,, சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவானுடைய ஒரு பாடம் இருக்கிறது. </p><p>அதாவது, சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசிக்கு சனியின் பாவத்துவம் அமைந்திருப்பதால் இவர்கள் புத்திசாலி அற்ற குடும்ப தலைவன் என்று பெயர் எடுக்க கூடலாம். இவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் குடும்பத் தலைவியால் மட்டுமே உயரக்கூடிய நிலைமை வருகிறது.</p><p> இவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் மனைவியின் துணையால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சிம்மம் என்பது சூரிய பகவானுடைய வீடு, தலைமை, கவுரவம் சுயமரியாதை, ஆணவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87cb4958-4da8-4066-9297-7242d6e04626/26-6a5cb9ce8913f.webp' /></p><p></p><p> </p><p>இந்த அமைப்பில் சனிபகவான் கடுமையாக செயல்பட்டால் தான் வைத்ததே சட்டம் என்றும் பிறருடைய அறிவுரையை கேட்க மறுக்கக் கூடிய குணமும் பிறக்கிறது. மேலும், குடும்பத்தை காப்பாற்றும் சக்தியாக இந்த இடத்தில் மனைவி மாறுகிறார். </p><p>குடும்பத்தை இவர்கள்தான் ஒற்றுமையாக வைத்திருப்பதும், பொருளாதாரத்தை மேம்பட உயர்த்துவதும் உறவுகளை பாதுகாத்து பேணுவதும் மனைவியாகவே இருக்கிறார்கள். ஆதலால், ஊர் போற்றும் வகையில் இவர்களுடைய குடும்பம் இந்த நபர் மனைவி வந்து பிறகு உயர்ந்த நிலைக்கு சென்றார் என்று பெயர் எடுத்து விடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd97a0a-0415-4d4b-ab8f-57e878aef8f0/26-6a5cb9cf40d6e.webp' /></p><p></p><p> </p><p>இவர்கள் ஆரம்ப காலகட்டங்களில் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்காமல் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். </p><p>ஆனால், எப்பொழுது இவர்கள் மனைவியின் பேச்சை மெதுவாக கேட்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுது இருந்து அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறக்கூடியதாகவும் அமைகிறது. அதே போல், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையோடும் இவர்கள் வாழ்கிறார்கள்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T11:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-should-one-do-thanam-tharmam-says-mahabaratham-1784458066"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-should-one-do-thanam-tharmam-says-mahabaratham-1784458066</id>
            <summary type="text">மகாபாரதத்தில் போருக்கு பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார்கள். அப்படியாக, அஸ்வமேத யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்திற்கு நாடெங...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாபாரதத்தில் போருக்கு பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார்கள். அப்படியாக, அஸ்வமேத யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்திற்கு நாடெங்கிலும் இருந்து மன்னர்கள், முனிவர்கள், அந்தணர்கள் என ஆயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டனர். </p><p>அன்னதானமும், தான தர்மமும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த யாகத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் இவ்வளவு சிறப்பான யாகம் செய்ததே இல்லை. தர்ம புத்திரனின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் என்று பாராட்டினார். அந்த நேரத்தில் திடீரென ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை யாகசாலைக்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3a4cc9-88c5-417f-ac77-96eb9e5d2f0e/26-6a5cab5755cec.webp' /></p><p></p><p> அதன் உடலில் ஒரு பக்கம் முழுவதும் தங்க நிறமாக இருக்க, மற்றொரு பக்கம் சாதாரணமாகவே இருந்தது. அது யாகசாலையின் தரையில் புரண்டு எழுந்து வந்து, இல்லை இந்த யாகம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறியது. </p><p>அது பேசுவதை கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுத்திரன் அந்த கீரிப்பிள்ளையிடம் நீ எப்படி இப்படி கூறுகிறாய் என்று கேட்கிறார்? அப்போது ஒரு பழைய நிகழ்வை அந்த கீரிப்பிள்ளை பேச தொடங்கியது. ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான ஒரு பிராமண குடும்பம் வாழ்ந்து வந்த வந்தார்களாம். </p><p>அவர்கள் பல நாட்களாக உணவு உண்ணாமல் பட்டினியாக இருந்திருக்கின்றார்கள். ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு சிறிதளவு மாவைப் பெற்று அதை நால்வரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். </p><p>அப்போது அவர்கள் சாப்பிட அமர்ந்த பொழுது வாசலில் ஒரு விருந்தினர் வந்து எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.</p><p></p><p> </p><p>உடனே அந்த பிராமணர் அவருடைய பங்கை அவருக்கு கொடுத்திருக்கிறார். இருப்பினும் விருந்தினரின் பசி அடங்கவில்லை. அதன் பிறகு அவரது மனைவியும் மகனும் மருமகளும் தங்களுடைய பங்கை ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்திருக்கிறார்கள்.</p><p> </p><p>இறுதியில் அவர்கள் நால்வரும் பட்டினியாக இருந்தாலும் விருந்தினர் முழு வயிற்றுடன் சென்றார்கள் என்று மனத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். அந்த விருந்தாளியாக வந்தவர் சாதாரண மனிதர் அல்ல தர்ம தேவன். அவர்களின் தியாகத்தை சோதிக்க வந்திருக்கிறார். </p><p>அந்த குடும்பத்தின் தன்னலமற்ற அன்பை கண்டு மகிழ்ந்த அவர் அந்த குடும்பத்திற்கு மோட்சம் அருளினார். அப்பொழுது நான் அந்த வீட்டில் தரையிலிருந்து உணவு துகள்களில் புரண்டு போது என் உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91cb39d-7304-40ef-bda1-e5e57674973d/26-6a5cab580c810.webp' /></p><p> </p><p>அதன் பிறகு அதே அளவுக்கு உயர்ந்த தானம் எங்காவது நடந்தால் என் உடல் முழுவதும் தங்கம் ஆகிவிடும் என்று எண்ணி பல யாகங்களுக்கு சென்றேன். ஆனால், எந்த யாகமும் தங்களின் கடைசி உணவை கூட பிறருக்காக தியாகம் செய்த அந்த ஏழை குடும்பத்தின் தியாகத்திற்கும் ஈடாக வரவில்லை. </p><p>அதனால், தான் என் உடலின் மீதி பகுதி தங்கமாக மாறவில்லை என்று அந்த கீரிப்பிள்ளை சொல்லியது. இதை கேட்டதும் யுதிஷ்டிரன் தலைகுனிந்தார். செல்வங்களை வழங்குவது மட்டுமே உயர்ந்த தானம் என்று ஆகிவிடாது. தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் பிறருக்காக தானம் செய்யக்கூடிய மனமே உண்மையான தர்மம் என்று அவர் உணர்கிறார். </p><p>அப்போது கிருஷ்ண பகவான் புன்னகையுடன் தானத்தின் மதிப்பு அதன் அளவில் இல்லை, நாம் வழங்கக்கூடிய மனத்தூய்மையில் தான் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக, இந்த நிகழ்வு நமக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை எடுத்துக்காட்டுகிறது.</p><p> இறைவன் நம்மை எப்பொழுதும் நம்மிடம் உள்ள செல்வத்தையும் பார்ப்பது இல்லை. நம்மிடம் இருக்கக்கூடிய அன்பு, தியாகம், தூய மனம் இவற்றை மட்டுமே பார்த்து நமக்கு அருளாசி வழங்குகிறார். </p><p>


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளின் நிஜமான கேரக்டர் இதுதானாம்... என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-the-true-character-of-12-zodiac-sign-1784451664"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-the-true-character-of-12-zodiac-sign-1784451664</id>
            <summary type="text">12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக அவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
 மேஷம்:
 இவர்களுக்கு எதிர்பாரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக அவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் கோபமடைந்து விடுவார்கள். அதேபோல் அவர்களுக்கு பாசமும் அதிகம் இருக்கும்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்கள் வெளியே பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.</p><p></p><p>
</p><h3> மிதுனம்:</h3><p>
 ஒருவரிடம் கலகலப்பாக பேச வேண்டும் என்றால் இவர்களை தவிர வேற யாரையும் நீங்கள் பிடிக்கவே முடியாது.
</p><h3> கடகம்:
</h3><p> ஒருவர் கஷ்டப்படுகிறார்கள் என்றால் உடனே அவர்களுக்காக இவர்கள் உருகி விடுவார்கள்.</p><h3>
சிம்மம்:</h3><p>
எங்கிருந்தாலும் இவர்கள்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
</p><h3> கன்னி:</h3><p>
 இவர்கள் எல்லா விஷயங்களும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.
</p><h3> துலாம்:
</h3><p> இவர்கள் யார் மனதையும் புண்படுத்த விரும்ப மாட்டார்கள். நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> இவர்களுடைய மனதில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு பொழுதும் அறிந்து கொள்ளவே முடியாது.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்கள் ஒரு இடத்தில் அமரவே மாட்டார்கள். ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே இருப்பார்கள்.</p><p></p><p>
</p><h3> மகரம்:</h3><p>
 இவர்கள் வேலை என்று வந்துவிட்டால் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். கடின உழைப்பாளிகள் இவர்கள்.
</p><h3>
 கும்பம்:
</h3><p> இவர்கள் யாரும் யோசிக்காத அளவு வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் கனவு உலகத்திலேயே மிதக்க கூடியவர்கள். ஆதலால் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T09:01:15+00:00</updated>
        </entry>
    </feed>
