<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-19T16:25:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்புகள் வந்து வழிபடும் அதிசய கோவில் - திருப்பாம்புரம் சென்றால் திருப்பம் நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thirupampuram-temple-in-tamil-1735192960"></link>
            <id>https://ibcbakthi.com/article/thirupampuram-temple-in-tamil-1735192960</id>
            <summary type="text">திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் கொல்லுமாங்குடி எனும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவில் கற்கத்தி எனும் கிராமத்தில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் கொல்லுமாங்குடி எனும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவில் கற்கத்தி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. </p><p>காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள திருப்பாம்புரம் ராகு கேது கோயில் என்று அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cecf67af-854a-4b4f-99fe-951cb32e73d0/24-676cf1819ddbb.webp' /></p><p>
</p><p>
திருப்பாம்புரம் ஊர் ஊரகபுரம் என்றும் சேஷபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றியும், மனிதர்களின் எத்தகைய தோஷங்களை இக்கோவில் போக்குகிறது என்பதையும் அறிந்துக் கொள்வோம்.</p><h3>&nbsp;கட்டிடக்கலை</h3><p>

3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படும் இந்த கோயில் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. </p><p>சோழப் பேரரசின் 59வது தேவாரத் தலமாகக் கருதப்படுகிறது. நீண்ட நடைபாதைகளுடன் கூடிய பெரிய மண்டபங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் 28 கல்வெட்டுகள் உள்ளன.</p><p>

திருப்பாம்புரம் கோவிலின் ராஜகோபுரம், மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. </p><p>ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் காணப்படுகிறது. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.</p><p>

சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகள் தவிர, ராஜராஜ விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் நடராஜர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, சட்டநாதர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4806a8c0-4a2b-4fa9-97d5-9a2ffa5dd837/24-676cf1821d6f9.webp' /></p><p>
</p><p>
மலையேசுவரருக்கு மாடக்கோயில் வடிவில் தனி சன்னதி உள்ளது. ஆதி பாம்புரேசுவரர் சன்னதி ஸ்தல விருக்ஷத்தின் கீழ் உள்ளது.

ராகு மற்றும் கேதுவிற்கும் தனி சன்னதி உள்ளது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், ஆதிசேஷன், பைரவர், சனீஸ்வரன், ஐந்து சிவலிங்கங்கள் மற்றும் தேவார நால்வர் சிலைகள் உள்ளன.</p><h3>கோவில் தல வரலாறு </h3><p>சோழர்கள் எழுப்பிய தேவாரத் திருத்தலங்களில் 59 வதாக இருக்கிறது திருப்பாம்புரம் கோவில். சைவம் வளர்த்த நால்வரில் திருஞானசம்பந்தர் இத்தல ஈசன் மீது பாடலியற்றியுள்ளார். புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e4b845-12f3-45dd-8122-aebf9eef7fe2/24-676cf18295837.webp' /></p><p>இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார். ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு சர்பபுரி என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை பாம்புரநாதர் என்றும் சேஷபுரீஸ்வரர் மற்றும் சர்பேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.&nbsp;</p><h3>தல சிறப்பு
</h3><p>
இக்கோயிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாசி மகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் இங்கு முக்கியமானவை. மகா சிவராத்திரி இங்கு மிகவும் போற்றப்படுகிறது. வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8ec1a20-590e-483f-9ffe-0b4d4a63f731/24-676cf1831a673.webp' /></p><p> </p><p>ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஊரில் இந்நாள் வரை அகத்தி பூ பூப்பதில்லை. ஆழம் விழுதுகள் தரை தொடுவதில்லை. இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டியதில்லை என்கின்றனர்.</p><p>

திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் ஆகிய 5 தலங்களில் பெருமையை இக்கோயில் ஒருங்கே பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><h3>ராகு, கேது சன்னதி</h3><p>பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e40a7e85-23d3-449d-99eb-10c1cf6ad07b/24-676cf18394250.webp' /></p><h3>தல வழிபாடு
</h3><p>
இந்த கோவிலில் ராகு கேது பகவானை வழிபட்டால் இந்த கிரக தோஷம் நீங்கும். இந்த கோவில் பரிகார ஸ்தலங்களில் ஒன்றாகும், இங்கு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இங்குள்ள மக்கள் திருமணம் தாமதம், பிரச்சனையில்லா தாம்பத்திய வாழ்வு, குழந்தை இல்லாமை, கால சர்ப்ப தோஷம் , சர்ப்ப தோஷம் போன்றவற்றால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டிக் கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a8421b-b9ed-4a06-85f5-2719cc055a76/24-676cf184178e5.webp' /></p><p> </p><p>

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.&nbsp;</p><h3>வழிபட்டோர்</h3><p> 

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.&nbsp;</p><h4>கோவில் நடை திறப்பு நேரம்: </h4><p>வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7.30 லிருந்து மதியம் 12.30 வரையிலும் மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-19T16:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aishwarya</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் கைகூட வேண்டுமா?அப்போ வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/valli-malai-murugan-temple-in-tami-1733980837"></link>
            <id>https://ibcbakthi.com/article/valli-malai-murugan-temple-in-tami-1733980837</id>
            <summary type="text">முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இதற்கு வள்ளிமலை என்ற பெயர் வந்துள்ளது. இந்த ஊரிலேயே வள்ளி பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இதற்கு வள்ளிமலை என்ற பெயர் வந்துள்ளது. இந்த ஊரிலேயே வள்ளி பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் வள்ளிமலை என அழைக்கப்படுகிறது.</p><p> 9-ம் நூற்றாண்டில் உருவானதாக சொல்லப்படும் இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அருணகிரிநாதராலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த வள்ளிமலை முருகன் கோயில் குறித்து மிக விரிவாக தெரிந்துகொள்ளலாம்.&nbsp;</p><p></p><h3>தலம் அமைந்துள்ள இடம்:</h3><p>

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வள்ளிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து நீங்கள் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் 25 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இதற்கு வேலூர் - பொன்னை செல்லும் பேருந்துகளில் பயணிக்க வேண்டும். </p><p>ஒருவேளை நீங்கள் ராணிப்பேட்டையில் இருந்து செல்ல வேண்டுமானால் உங்களுடைய பயண தூரம் 18 கிலோமீட்டர் மட்டுமே. சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும்.</p><p> சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். இதனால் நீங்கள் எளிதாக வள்ளிமலை சென்று முருகன், வள்ளி, தெய்வானை அருளை பெற்று வரலாம். இப்போது தல வரலாற்றினை பற்றி தெரிந்துகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b6428c-ab39-4d70-a211-1f56b199b24d/24-675a72a6dc30c.webp' />&nbsp;</p><h3>தல வரலாறு:
</h3><p>
வேடர் குலத்தில் வளர்ந்து வந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளார். அவருடைய கன்னிப்பருவத்தில் தினைப்புனம் காக்கும் பணியினை வள்ளி செய்துள்ளார். </p><p>அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பியதை அறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.</p><h3>பத்மாவதி அல்லது இசக்கியம்மன் வழிபாடு:
</h3><p>
வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று என்பது உங்களுக்கு தெரியுமா. இங்கு குடவரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சமண சமயத்தினை குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். மகாவீரர் சமண சமயத்தினை உருவாக்கினார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அத்தகைய சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர்.</p><p></p><p> </p><p>இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக இந்த தலத்தில் வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாக அமைந்துள்ள வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இசக்கியம்மனும், இசக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இசக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. </p><p>தனது வலது கையை அபய முத்திரையுடன், இடது காலின் மேல் வைத்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளார். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71bc76a8-2804-4553-b84b-7054db312064/24-675a72a76917a.webp' />&nbsp;</p><h3>தல அமைப்பு:</h3><p>

மலையின் அடிவாரத்தில் குமரி பருவத்தில் இருந்த வள்ளிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போகும் போது அங்கு செல்ல மறாந்துவிடாதீர்கள். நீங்கள் அங்குள்ள வள்ளியை காணும் போது அதில் ஒரு சிறப்பு உள்ளது தெரியுமா. </p><p>வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளி உண்டி வில், கவண் கல்லுடன் காட்சியளிக்கிறார்.

கோயிலின் முன் அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் காட்சியளிக்கிறார். கோயிலின் முன் மண்டபத்தில் நவவீரர்களும் வள்ளியின் தந்தையான நம்பிராஜனும் உள்ளனர்.</p><p> வள்ளி மலையில் அமைந்துள்ள வனத்தில், வள்ளி பறவைகளை விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் வனத்தினுள் அமைந்துள்ளார்.</p><p> இதனை மக்கள் யானைக்குன்று என அழைக்கிறார்கள். வள்ளி மலையில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை எனப் பெயரிடப்பட்டுள்ளது. சரவண பொய்கையின் அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. முருகப்பெருமானை நீங்கள் வழிபட வேண்டும் என்றால் குளத்தை தொடர்ந்து அமைக்கப்பட்டுள படிகட்டுகளில் ஏறி சென்று தான் வழிபட முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f324153e-8057-4657-902f-2645b8bf0008/24-675a72a7e1236.webp' /></p><h3>குடைவரை கோயில்:
</h3><p>
அங்கிருந்து படிகளைக் கடந்து கோயிலுக்கு சென்றால் அங்கு நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் ஒரே கல்லில் குடைந்து கட்டப்பட்ட கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் நுழைவாயிலில் வள்ளி அம்மன் உருவம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. </p><p>அவரை வணங்கி விட்டு கோயிலுக்கு நுழையும் போது சிறிது கவனம் தேவை. ஏனெனில் நுழைவாயில் மிகவும் தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். </p><p>குறவர் வேடர் குலத்தில் வள்ளி வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. 
நுழைவாயிலை கடந்து உள்ளே சென்று தலையை நிமிர்ந்து பார்த்தால் மேலே இருக்கும் பாறைகள் நம் தலை மேல் விழுந்து விடுமோ என்ற அச்சம் எழாமல் இருக்காது. அச்சத்தினூடே நிற்கும் போது சித்தர்கள் வந்து செல்ல பயன்படுத்தும் வழியாக கோயில் கருவறைக்குள் ஒரு துளை உள்ளது.</p><p> இன்றளவும் சித்தர்கள் அங்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முருகன் கோயிலை குகையை குடைந்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி எழுந்தது என்பது தெரியவில்லை. பார்க்க அவ்வளவு அற்புதமாகவும் பிரம்மிக்க வைக்கும் வகையிலும் உள்ளது.</p><p></p><h3>விருட்ச மரம்:</h3><p>

இந்த தலத்தில் விருட்ச மரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விருட்ச மரம் தனித்துவமானது என்றே கூற வேண்டும். வள்ளி மலையில் வள்ளியை முருகப்பெருமான் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது வள்ளியின் வளர்ப்பு தந்தையான நம்பிராஜன் அங்கு வந்துள்ளார். வள்ளியின் தந்தையை கண்ட முருகப் பெருமான் வேங்கை மரமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டார். இந்த மரமே தற்போது இந்த தலத்தின் விருட்சமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12c5ef12-5ee5-4085-99fe-0dee6a77bb6b/24-675a72a864b26.webp' /></p><h3>ஆசிரமம்:
</h3><p>
கோயிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால அங்கே சுவாமில் சட்சிதானந்தர் ஜீவ சமாதி அடைந்த ஆசிரமும் உள்ளது. அதன் அருகே உள்ள மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் அமைந்துள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சுனையினை சூரியன் காணாத சுனை என மக்கள் அழைக்கின்றனர்.&nbsp;</p><h3>சூரியன் காணாத சுனை:</h3><p>

அந்த சுனையின் மீது சூரிய கதிர்களே விழுந்ததே இல்லை என்பதே அதற்கான காரணமாகும். இதற்கான புராணக்கதையை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம. வள்ளியை தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தில், முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிக்கிறது எனவும் உள்ள தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுள்ளார். </p><p>உடனடியாக வள்ளியும் அதனை அளித்துள்ளார். அதனை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது முருக பெருமானுக்கு விக்கல் எடுத்ததால் வள்ளி ஓடோடி சென்று இந்த சுனையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு குடிக்க கொடுத்துள்ளார். </p><p>இத்தகைய சிறப்புமிக்க சுனை பல அற்புதங்களையும் செய்கிறது. திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் எனவேண்டிக்கொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a01df10a-7c55-4fb3-9486-a1c88d7f4083/24-675a72a8e5c9c.webp' /></p><h3>விநாயகர் பாறை:
</h3><p>
அந்த பகுதியில் அமைந்துள்ள பாறையானது யானையின் வடிவத்தை கொண்டுள்ளது. அதனை விநாயகர் என மக்கள் கூறுகின்றனர். வள்ளியை தன் பக்கம் கவர செய்ய உதவிய விநாயகர் தான் அந்த பாறையின் வடிவம் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனை பக்தர்கள் கணேச கிரி எனக் கூறுகின்றனர்.
</p><h3>
8 கால் மண்டபம்:
</h3><p>
வள்ளி மலையில் அமைந்துள்ள 8 கால் மண்டபம் மக்களிடையே தனிச்சிறப்பை கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கா. வாங்க தெரிஞ்சுக்கலாம். வள்ளி மலைக் கோயிலில் புனரமைப்பு பணிகள் தொடங்கிய போது 8 கால் மண்டபத்தின் இருந்து ஒரு கல்லை அகற்றினர். </p><p>அப்போது அதில் இருந்து வாசனை நிறைந்த புகை வெளியாகியுள்ளது. அதோடு அதற்குள் சித்தர்கள் தியான நிலையிலும் இருந்துள்ளனர். அதனால் 8 கால் மண்டபத்தினை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இப்போதும் அங்கே சித்தர்கள் தியானம் செய்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.</p><p> என்ன ஆச்சரியமா இருக்கா. நீங்களும் வள்ளி மலை கோயில் போனால் 8 கால் மண்டபத்தை மறக்காம போய் பாருங்க.</p><p></p><h3>கோயில் நேரம்:
</h3><p>
வள்ளிமலை கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் மாலை 4 மணிக்குள் நீங்கள் சென்று விட்டீர்கள் என்றால் ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம்.</p><p> கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது என்பது கூடுதல் தகவல். 

அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டீர்களா. </p><p>வள்ளி வாழ்ந்த இடத்தையும் முருகன் வள்ளியை காதல் செய்த இடத்தினையும் காணும் ஆவல் உங்களுக்குள் இப்போது கண்டிப்பாக எழுந்திருக்கும். நீங்களும் வள்ளி மலை கோயில் சென்று முருகப்பெருமான் அருளை பெற்று வாருங்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சனி வக்ர பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sani-vakra-peyarchi-palan-for-mesham-to-kani-1784466132"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sani-vakra-peyarchi-palan-for-mesham-to-kani-1784466132</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு சனி வக்கிர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு சனி வக்கிர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.</p><h3>
 
மேஷம்:
</h3><p>மேஷ ராசியினருக்கு தொழில் மற்றும் கௌரவத்தை சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனங்கள் தொடர்பாக சில செலவுகள் வரலாம். கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படலாம். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். </p><h3>

ரிஷபம்:</h3><p>குடும்ப உறவுகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பண வரவு மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். இருப்பினும் நிதானமாக பேசுவது வெற்றியை கொடுக்கும்.</p><p></p><p> </p><h3>
மிதுனம்: </h3><p>
நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த மனக்குழப்பங்கள் விலகும். வேலையில் உங்களுக்கு நினைத்த அங்கீகாரம் கிடைக்கும். கடன் தொல்லை குறையும்.
</p><h3> 
கடகம்:
</h3><p>செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். கோயில் மற்றும் ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டும்.</p><p>
 மேலும். சனியின் வக்கிர பெயர்ச்சி மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z4v76bNaK38" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (20-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-20-2026-monday-1784465004"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-20-2026-monday-1784465004</id>
            <summary type="text">மேஷம்:
இன்று கலகலப்பான பேச்சுகளால் உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை துணை இடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பு குறித்த சிந்தனை உயரும். கல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>இன்று கலகலப்பான பேச்சுகளால் உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். வாழ்க்கை துணை இடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பு குறித்த சிந்தனை உயரும். கல்வியில் தெளிவு உண்டாகக்கூடிய நாள்.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> இன்று ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். புதுவிதமான இலக்குகளை நோக்கி மனம் பயணம் செல்லும். பொருளாதார உயர்த்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> மாணவர்களுக்கு இன்று மறதி சார்ந்த பிரச்சனைகள் வரலாம். கல்வியில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் வழியே ஒத்துழைப்பை பெறுவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.</p><p></p><p> </p><h3>
கடகம்:
</h3><p> எதிர்பாராத சில விஷயங்கள் வழியாக உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
</p><h3> சிம்மம்:
</h3><p> பழக்கவழக்கங்களில் இன்று முக்கிய மாற்றங்கள் காணப்படும். மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வந்த செல்லும். வழக்கு விஷயங்களில் நீங்கள் பொறுமையை கையாள்வது அவசியம்.</p><h3>
 கன்னி:
</h3><p> இன்று வேலையில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.</p><h3>
 துலாம்:
</h3><p> வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வீர்கள். பழைய விஷயங்களால் மனம் குழப்பம் அடையலாம்.</p><h3>
விருச்சிகம்:</h3><p>
 இன்று பணவரவால் சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்களில் அனுபவம் உயரும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் நாள்.</p><p></p><h3>
 தனுசு:
</h3><p> இன்று அரசு தொடர்பான வேலைகளில் சில தடைகளை சந்திக்கலாம். உறவினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
</p><h3> மகரம்:
</h3><p> இன்று ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புதிய முயற்சிகள் மற்றும் எதிர்பார்த்த முடிவுகள் பெறுவீர்கள். திடீர் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும் நாள்.
</p><h3> கும்பம்:
</h3><p> இன்று உங்கள் செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாத நிலை காணப்படலாம். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் வேண்டும். எளிதில் முடியக்கூடிய விஷயங்கள் கூட நீண்ட நாள் தள்ளிப்போகலாம்.</p><h3>
 மீனம்:</h3><p>
 இன்று போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.&nbsp; </p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் மிகுந்த சுயமரியாதையோடு வாழ்வார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/laknapathy-in-10-place-astrology-prediction-1784464528"></link>
            <id>https://ibcbakthi.com/article/laknapathy-in-10-place-astrology-prediction-1784464528</id>
            <summary type="text">ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் அவர்களுடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் கணித்து விடலாம். அந்த வகையில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவருடைய ஜாதகத்தை பார்த்தவுடன் அவர்களுடைய லக்னாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய வாழ்க்கையில் கணித்து விடலாம். </p><p>அந்த வகையில், ஒருவருடைய லக்னாதிபதி பத்தாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அந்த ஜாதகர் எந்த நிலையில் யாரையும் எதிர்பார்த்து நிற்க மாட்டார் "தன் கையே தனக்கு உதவி" என்று வாழக் கூடியவர்.</p><p> மிகவும் வைராக்கியமான குணம் இருக்கும். சுயமரியாதையோடு வாழக்கூடியவர்கள். மேலும் பத்தாம் பாவம் கர்ம ஸ்தானம் என்பதால் தொழில், உழைப்பு, வாழ்க்கை உயர்வு ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. இந்த இடத்தில் லக்னாதிபதி அமர்கின்ற பொழுது ஜாதகர் ஒருவரை எதிர்பார்த்து வாழ விரும்ப மாட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524fd45a-3e3a-415e-8369-3a984b7db9ba/26-6a5cc4920b067.webp' /></p><p></p><p> </p><p>இவர் எப்பொழுதும் தன்னுடைய உழைப்பாலே உயர வேண்டும் என்று எண்ணக் கூடியவர். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் இவர்கள் கைநீட்டி ஒருவரிடம் உதவி கேட்பதை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உழைத்து பணத்தை சம்பாதித்து விடலாம் என்கின்ற ஒரு நம்பிக்கை இவர்களிடத்தில் இருக்கும். </p><p>இவர்கள் சுகமான வாழ்க்கையை விட சுயமரியாதை ஆன வாழ்க்கையை தான் அதிகம் விரும்புகிறார்கள். இவர்கள் உழைப்பை வெறும் தொழிலாக மட்டும் பார்ப்பதில்லை. அவர்கள் ஒரு வாழ்க்கையின் ஒழுக்கமாக கருதுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff20ac28-c0c9-47c7-b302-7eacb94927d0/26-6a5cc492c40a4.webp' /></p><p></p><p> </p><p>அதேபோல், எந்த வேலையையும் அவர்கள் சிறியதாக நினைக்க மாட்டார்கள் உழைத்து உண்பதே உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணத்தோடு செயல்பட கூடியவர்கள். அதிலும் குறிப்பாக சனி பகவானுடைய பார்வை கிடைத்தால் அவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள்.</p><p> வருமானம் குறைவாக இருந்தாலும் உழைத்து சம்பாதித்த அந்த மன திருப்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் ஆடம்பரமான வாழ்க்கையை விட மன நிறைவான வாழ்க்கையை தான் விரும்புகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/life-prediction-of-people-born-on-leo-zodiac-1784461772"></link>
            <id>https://ibcbakthi.com/article/life-prediction-of-people-born-on-leo-zodiac-1784461772</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சூரிய பகவானுடைய வீட்டை சொந்தமாக கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் ஆளுமையாக விளங்க கூடியவர்கள். ஆனால்,, சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சூரிய பகவானுடைய வீட்டை சொந்தமாக கொண்ட சிம்ம ராசியினர் எப்பொழுதும் ஆளுமையாக விளங்க கூடியவர்கள். ஆனால்,, சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிபகவானுடைய ஒரு பாடம் இருக்கிறது. </p><p>அதாவது, சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசிக்கு சனியின் பாவத்துவம் அமைந்திருப்பதால் இவர்கள் புத்திசாலி அற்ற குடும்ப தலைவன் என்று பெயர் எடுக்க கூடலாம். இவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் குடும்பத் தலைவியால் மட்டுமே உயரக்கூடிய நிலைமை வருகிறது.</p><p> இவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் மனைவியின் துணையால் மட்டுமே உயர்ந்த நிலைக்கு செல்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் சிம்மம் என்பது சூரிய பகவானுடைய வீடு, தலைமை, கவுரவம் சுயமரியாதை, ஆணவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87cb4958-4da8-4066-9297-7242d6e04626/26-6a5cb9ce8913f.webp' /></p><p></p><p> </p><p>இந்த அமைப்பில் சனிபகவான் கடுமையாக செயல்பட்டால் தான் வைத்ததே சட்டம் என்றும் பிறருடைய அறிவுரையை கேட்க மறுக்கக் கூடிய குணமும் பிறக்கிறது. மேலும், குடும்பத்தை காப்பாற்றும் சக்தியாக இந்த இடத்தில் மனைவி மாறுகிறார். </p><p>குடும்பத்தை இவர்கள்தான் ஒற்றுமையாக வைத்திருப்பதும், பொருளாதாரத்தை மேம்பட உயர்த்துவதும் உறவுகளை பாதுகாத்து பேணுவதும் மனைவியாகவே இருக்கிறார்கள். ஆதலால், ஊர் போற்றும் வகையில் இவர்களுடைய குடும்பம் இந்த நபர் மனைவி வந்து பிறகு உயர்ந்த நிலைக்கு சென்றார் என்று பெயர் எடுத்து விடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd97a0a-0415-4d4b-ab8f-57e878aef8f0/26-6a5cb9cf40d6e.webp' /></p><p></p><p> </p><p>இவர்கள் ஆரம்ப காலகட்டங்களில் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்காமல் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். </p><p>ஆனால், எப்பொழுது இவர்கள் மனைவியின் பேச்சை மெதுவாக கேட்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுது இருந்து அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும் நல்ல முன்னேற்றம் பெறக்கூடியதாகவும் அமைகிறது. அதே போல், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையோடும் இவர்கள் வாழ்கிறார்கள்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T11:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-should-one-do-thanam-tharmam-says-mahabaratham-1784458066"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-should-one-do-thanam-tharmam-says-mahabaratham-1784458066</id>
            <summary type="text">மகாபாரதத்தில் போருக்கு பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார்கள். அப்படியாக, அஸ்வமேத யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்திற்கு நாடெங...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாபாரதத்தில் போருக்கு பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார்கள். அப்படியாக, அஸ்வமேத யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்திற்கு நாடெங்கிலும் இருந்து மன்னர்கள், முனிவர்கள், அந்தணர்கள் என ஆயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டனர். </p><p>அன்னதானமும், தான தர்மமும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த யாகத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் இவ்வளவு சிறப்பான யாகம் செய்ததே இல்லை. தர்ம புத்திரனின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் என்று பாராட்டினார். அந்த நேரத்தில் திடீரென ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை யாகசாலைக்குள் வந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa3a4cc9-88c5-417f-ac77-96eb9e5d2f0e/26-6a5cab5755cec.webp' /></p><p></p><p> அதன் உடலில் ஒரு பக்கம் முழுவதும் தங்க நிறமாக இருக்க, மற்றொரு பக்கம் சாதாரணமாகவே இருந்தது. அது யாகசாலையின் தரையில் புரண்டு எழுந்து வந்து, இல்லை இந்த யாகம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறியது. </p><p>அது பேசுவதை கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுத்திரன் அந்த கீரிப்பிள்ளையிடம் நீ எப்படி இப்படி கூறுகிறாய் என்று கேட்கிறார்? அப்போது ஒரு பழைய நிகழ்வை அந்த கீரிப்பிள்ளை பேச தொடங்கியது. ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான ஒரு பிராமண குடும்பம் வாழ்ந்து வந்த வந்தார்களாம். </p><p>அவர்கள் பல நாட்களாக உணவு உண்ணாமல் பட்டினியாக இருந்திருக்கின்றார்கள். ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு சிறிதளவு மாவைப் பெற்று அதை நால்வரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். </p><p>அப்போது அவர்கள் சாப்பிட அமர்ந்த பொழுது வாசலில் ஒரு விருந்தினர் வந்து எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.</p><p></p><p> </p><p>உடனே அந்த பிராமணர் அவருடைய பங்கை அவருக்கு கொடுத்திருக்கிறார். இருப்பினும் விருந்தினரின் பசி அடங்கவில்லை. அதன் பிறகு அவரது மனைவியும் மகனும் மருமகளும் தங்களுடைய பங்கை ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்திருக்கிறார்கள்.</p><p> </p><p>இறுதியில் அவர்கள் நால்வரும் பட்டினியாக இருந்தாலும் விருந்தினர் முழு வயிற்றுடன் சென்றார்கள் என்று மனத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். அந்த விருந்தாளியாக வந்தவர் சாதாரண மனிதர் அல்ல தர்ம தேவன். அவர்களின் தியாகத்தை சோதிக்க வந்திருக்கிறார். </p><p>அந்த குடும்பத்தின் தன்னலமற்ற அன்பை கண்டு மகிழ்ந்த அவர் அந்த குடும்பத்திற்கு மோட்சம் அருளினார். அப்பொழுது நான் அந்த வீட்டில் தரையிலிருந்து உணவு துகள்களில் புரண்டு போது என் உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91cb39d-7304-40ef-bda1-e5e57674973d/26-6a5cab580c810.webp' /></p><p> </p><p>அதன் பிறகு அதே அளவுக்கு உயர்ந்த தானம் எங்காவது நடந்தால் என் உடல் முழுவதும் தங்கம் ஆகிவிடும் என்று எண்ணி பல யாகங்களுக்கு சென்றேன். ஆனால், எந்த யாகமும் தங்களின் கடைசி உணவை கூட பிறருக்காக தியாகம் செய்த அந்த ஏழை குடும்பத்தின் தியாகத்திற்கும் ஈடாக வரவில்லை. </p><p>அதனால், தான் என் உடலின் மீதி பகுதி தங்கமாக மாறவில்லை என்று அந்த கீரிப்பிள்ளை சொல்லியது. இதை கேட்டதும் யுதிஷ்டிரன் தலைகுனிந்தார். செல்வங்களை வழங்குவது மட்டுமே உயர்ந்த தானம் என்று ஆகிவிடாது. தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் பிறருக்காக தானம் செய்யக்கூடிய மனமே உண்மையான தர்மம் என்று அவர் உணர்கிறார். </p><p>அப்போது கிருஷ்ண பகவான் புன்னகையுடன் தானத்தின் மதிப்பு அதன் அளவில் இல்லை, நாம் வழங்கக்கூடிய மனத்தூய்மையில் தான் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக, இந்த நிகழ்வு நமக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை எடுத்துக்காட்டுகிறது.</p><p> இறைவன் நம்மை எப்பொழுதும் நம்மிடம் உள்ள செல்வத்தையும் பார்ப்பது இல்லை. நம்மிடம் இருக்கக்கூடிய அன்பு, தியாகம், தூய மனம் இவற்றை மட்டுமே பார்த்து நமக்கு அருளாசி வழங்குகிறார். </p><p>


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:48:00+00:00</updated>
        </entry>
    </feed>
