<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-12T10:47:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-and-lucky-color-according-born-day-1783852669"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-and-lucky-color-according-born-day-1783852669</id>
            <summary type="text">ஒவ்வொருவர் பிறந்த கிழமை அடிப்படையில் நாம் அதற்குரிய ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்கின்ற பொழுது நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக, எந்த கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொருவர் பிறந்த கிழமை அடிப்படையில் நாம் அதற்குரிய ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்கின்ற பொழுது நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக, எந்த கிழமையில் பிறந்தவர்கள் என்ன பரிகாரங்கள் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><h3>1. ஞாயிற்றுக்கிழமை:
</h3><p> இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும். </p><p>அதே போல் இவர்கள் இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். அரசு வழியில் வெற்றி பெற இவர்கள் சூர்ய ஹோரை காலத்தில் முயற்சிகள் செய்தால் பலன் உண்டு.</p><p></p><h3>
2. திங்கட்கிழமை:
</h3><p>இவர்கள் அதிகாலையில் தாயை வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று வெள்ளி நிற பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நெய்வேத்தியம் படைப்பது சிறப்பு பெற்றுக் கொடுக்கும். </p><p>இவர்கள் சந்தன நிறம், வெள்ளை ஆகிய ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட வாய்ப்புகளை தேடி கொடுக்கும்.
</p><h3>3. செவ்வாய்:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் அரளி பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபாடு செய்து மாலை பைரவருக்கு துவரம் பருப்பு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் கோபம், எரிச்சல், மனப்பதட்டம் குறையும். சிவப்பு, மஞ்சள், நிற ஆடைகளை இவர்கள் அணியும் பொழுது வெற்றிகள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fdc7d6e-753f-4b28-8fed-2d93140f5273/26-6a536e861e2b2.webp' /></p><p>
</p><h3>4. புதன்:
</h3><p> இந்த கிழமையில் பிறந்தவர்கள் துளசி, கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மகாவிஷ்ணுவை சரணடைவது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும். </p><p>இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வாழ்க்கையில் நல்ல உயரத்தை உருவாக்கும். இள நீலம் நிற ஆடைகள் அணிவது இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்.
</p><h3>5. வியாழன்:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.</p><p> இவர்கள் தங்க நிற ஆடைகளை அணிவது சாதகமான பலனை கொடுக்கும். இவர்கள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் முக்கியமான விஷயங்கள் தொடங்கும் பொழுது அதில் வெற்றி உண்டு.</p><p></p><p> </p><h3>
6. வெள்ளிக்கிழமை: </h3><p>
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் மல்லிகை பூக்கள் கொண்டு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபாடு செய்யலாம். இவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது வெற்றி வாய்ப்புகள் பெற்று கொடுக்கும்.</p><h3>
7. சனிக்கிழமை:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ சாற்றி சிவபெருமானை சரண் அடைவது தோஷங்களை போக்கும்.</p><p> இவர்கள் ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. அதேபோல் இவர்கள் நீல நிற ஆடைகளை அணிவது நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானை சாந்தப்படுத்தும் எளிய முக்கிய பரிகாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/easy-remedies-for-ezharai-sani-and-ashtama-sani-1783846677"></link>
            <id>https://ibcbakthi.com/article/easy-remedies-for-ezharai-sani-and-ashtama-sani-1783846677</id>
            <summary type="text">சனிபகவான் ஒருவர் செய்த தவறுகளை நினைத்து அதற்கு வருந்தி திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். சனிபகவான் தான் 9 கிரகங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிபகவான் ஒருவர் செய்த தவறுகளை நினைத்து அதற்கு வருந்தி திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். சனிபகவான் தான் 9 கிரகங்களில் நீதிமானாகவும் தர்மத்தின் தலைவனாகவும் விளங்க கூடியவர்கள். </p><p>ஆகையால், ஒருவர் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு விட்டால் சனி பகவான் அவர்களுக்கு உயரத்தையே கொடுக்கிறார்.</p><p> அப்படியாக, ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த காலகட்டங்களில் பலரும் பல பரிகாரங்களை தேடிச் செல்வார்கள்.</p><p> அப்படியாக, இவ்வாறான கடின காலகட்டங்களில் நாம் அன்னதானம் செய்வது சனி பகவானுடைய மனதை குளிர் செய்கிறது. அதைப்போல் சிவ வழிபாடும் இவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.</p><p></p><p> குறிப்பாக சிவபெருமானுடைய நாமங்களை சொல்லி வழிபாடு செய்வது இவர்களுக்கு எல்லா பாதிப்புகளிலும் விடுதலையை பெற்றுக் கொடுக்கும். </p><p>

ஜாதகத்தில் சனிபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து விட்டால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருந்தால் பெண்களுக்கு களத்திர தோஷம் உண்டாகிறது. இவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு மனதார உதவி செய்கின்ற பொழுது அந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். </p><p>மேலும், சனிக்கிழமை மாலை நேரத்தில் நவகிரகங்களை வழிபாடு செய்வதும் நல்ல பலன்களை கொடுக்கும். மேலும், சனி பாதிப்பிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iMaKW-WIvUs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T08:58:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவின் ஆட்டம் ஆரம்பம்.. ஜூலை 19க்கு பிறகு இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-july-19-guru-peyarchi-bring-luck-for-3-zodiac-1783841578"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-july-19-guru-peyarchi-bring-luck-for-3-zodiac-1783841578</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாக கருதக்கூடிய குருபகவானின் பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாக கருதக்கூடிய குருபகவானின் பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம். </p><p>அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் தேதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார். </p><p>இந்த நட்சத்திர பெயர்ச்சி பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறது. இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3afb83c1-7ce3-4531-8924-e1c46a21371e/26-6a53432bf377a.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள். </p><p>முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
</p><h3> கடகம்:
</h3><p> இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </p><p>புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> இந்த ராசியின் அதிபதி குரு பகவான். ஆதலால், இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T07:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்காரர்கள் மனதில் இடம் பிடிக்க இப்படி பேசினாலே போதுமாம்.. என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-one-thing-12-zodiac-must-expect-from-others-1783837381"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-one-thing-12-zodiac-must-expect-from-others-1783837381</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிக்காரர்களுக்கும் ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர்களிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிக்காரர்களுக்கும் ஒருவரை பிடிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் இந்த அணுகுமுறை இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள். </p><p>அப்படியாக, 12 ராசிக்காரர்களுக்கு எப்படி பேசினால் மிகவும் பிடிக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><h3>
 மேஷம்:
</h3><p> இவர்களுக்கு உங்களை பிடிக்க வேண்டும் என்றால் இவர்கள் என்ன பேசினாலும் நீங்கள் என்ன சொன்னாலும் சரி ஆகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டால் மிகவும் பிடித்தமானவர்களாக மாறிவிடுவீர்கள்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்களிடம் அவர்களைப் போலவே அமைதியாகவும் மென்மையாகவும் பேசினால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு ஒருவர் சிக்கனமாக இருப்பது மிகவும் பிடிக்கும். ஆதலால் பொருளாதார கணக்கு வழக்குகளை இவர்களுடன் பேசும்பொழுது இவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
</p><h3> கடகம்:
</h3><p> இவர்களிடம் மிகவும் அன்பாக பாசமாக நடந்து கொண்டால் இவர்கள் அந்த நபர்களுக்கு அடிமையாக விடுகிறார்கள். </p><h3>சிம்மம்: </h3><p>இவர்களிடம் பேசும் பொழுது எதிர்வாதம் வைக்காமல் அவர்கள் பேசுவதை கேட்டாலே இவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது. </p><h3>கன்னி: </h3><p>இவர்களிடம் மிகவும் டீசன்டாக பேசுவது இவர்களுக்கு பிடிக்கிறது. அநாகரிகமான பேச்சுக்களை இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d619513-91aa-423d-ad28-f722b7b9de2c/26-6a5332c700662.webp' /></p><p></p><p> </p><h3>துலாம்:</h3><p> இவர்களிடம் பேசும் பொழுது இவர்கள் பேசுவதை நாம் முழுமையாக கவனித்தாலே அவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது. </p><h3>விருச்சிகம்: </h3><p>இவர்கள் சொல்லும் விஷயத்திற்கு ஒரே வார்த்தைகளில் நாம் பதில் சொல்லினால் அவர்களுக்கு நம்மை மிகவும் பிடிக்கிறது. தனுசு: இவர்களுடன் அக்கறையாக பேசும் பொழுது அவர்களுக்கு நம்மை பிடிக்கிறது. </p><h3>மகரம்:</h3><p> இவர்களுக்கு செய்யும் செயல்களில் மிகுந்த சுறுசுறுப்போடும் நேர்மறையான சிந்தனைகளோடு இருந்தாலும் அவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது. </p><h3>கும்பம்: </h3><p>இவர்கள் தனிமையில் இருக்கும் பொழுது நாம் அவர்களை ஒருபோதும் தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு இருந்தாலே இவர்களுக்கு நம்மை பிடித்து விடுகிறது. </p><h3>மீனம்: </h3><p>இவர்களிடம் பேசும் பொழுது இவர்களுக்கு உடனடியாக பதில் கொடுத்தாலே இவர்களுக்கு நம்மை மிகவும் பிடிக்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T06:23:19+00:00</updated>
        </entry>
    </feed>
