<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-15T12:06:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமாள் பிரமசாரியாக அருள்பாலிப்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..எங்கு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thiruvallam-parasuraman-temple-in-tamil-1732776374"></link>
            <id>https://ibcbakthi.com/article/thiruvallam-parasuraman-temple-in-tamil-1732776374</id>
            <summary type="text">கேரளாவில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் மணிமாலா நதிக்கரையில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் திருக்கோவில் உள்ளது. இப் பெருமாளுக்கு நேர் எதிரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் மணிமாலா நதிக்கரையில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் திருக்கோவில் உள்ளது. இப் பெருமாளுக்கு நேர் எதிரே கருடன் காணப்படவில்லை. 54 அடி உயர கருட ஸ்தம்பம் சற்று தொலைவில் இருக்கின்றது. </p><p>இரண்டு இறக்கைகளையும் விரித்த படி பெருமாளை ஏற்றிக் கொண்டு பறப்பதற்குத் தயாராக நிற்கும் கருட ஸ்தம்பம் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டது. இக்கோவிலில் சுதர்சன மூர்த்தி முக்கிய வழிபடு தெய்வமாக விளங்குகிறார்.

 திருவல்லா திருத்தலம் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.</p><p></p><p> </p><p>108 வைணவ திருத்தலங்களில் திருவல்லாவும் ஒன்று. இதன் விமானம் சதுரங்க கோல விமானம் ஆகும். கண்ட கர்ண தீர்த்தம் மற்றும் பம்பை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

திருமகள் திருமாலின் மார்பில் உறைந்திருப்பதால் இறைவன் திருவாழ் மார்பன் என்றும் ஸ்ரீவல்லவன் என்றும் கோலபிரான் என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>ஸ்ரீ வல்லபப் பெருமாளை பற்றி கருட புராணத்திலும் மச்ச புராணத்திலும் குறிப்புகள் உண்டு. இங்கு செல்வத் திருக்கொழுந்து நாச்சியார் மற்றும் வாத்சல்ய தேவி என்ற பெயரில் இரண்டு நாச்சியார்கள் பெருமாள் அருகே உள்ளனர். செல்வக் கொழுந்து நாச்சியார் பெரிய பிராட்டி என்றும் அழைக்கப்படுவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dcd65ad-b2b8-4ccc-879b-f255f872e0f9/24-674811b73ad90.webp' /></p><h3>கதகளி நேர்ச்சை </h3><p>
ஸ்ரீவல்லப பெருமாள் கோவிலில் தினமும் கதகளி நடனம் நடைபெறும். இங்குக் கதகளி நடனம் நடத்துவதாக
பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர். இங்குக் கதகளி கற்பிக்கும் கலாச்சேத்திரமும் உண்டு. இதில் நடனம் படிக்கும் மாணவர்கள் இக்கோவிலில் தினமும் கதகளி நடத்துவர்.
</p><h3>
பிரசாதம்</h3><p> 
திருவல்லபப் பெருமாள் கோவிலின் பிரசாதம் சற்று வினோதமானது. பாக்கு மட்டையில் வெண் சாதமும் உப்பு மாங்காவும் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றது. பிரசாதமும் பாக்கு மட்டையில் வைத்தே வழங்கப்படுகிறது. விதவிதமான வாழைப்பழங்கள் இங்கே இறைவனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படும்.</p><p> மாசி மாதப் பூசத் திருவிழாவென்று சுமார் பன்னீராயிரம் வாழைப்பழங்கள் இங்கு வந்து குவியும்.துர்வாசர் இக் கோயிலுக்கு வந்த போது படத்தி பழம் என்ற வாழைப்பழத்தை இறைவனுக்குப் படைத்தார். அன்று முதல் இந்த வகை வாழைப்பழமே இறைவனுக்கு படைக்கப்படுகின்றது.</p><h3>மார்பு தரிசனம்</h3><p>
பொதுவாக கேரளத்துக் கோயில்களில் பெண் தெய்வங்களுக்குக் கூட மார்பை மூடி சேலை உடுத்துவது கிடையாது. திருவல்லாவில் கோயில் கொண்டுள்ள பெருமாள் பிரம்மச்சாரி என்பதால் மேலாடை உடுத்தக் கூடாது என்ற சமூக வழக்கத்தின்படி கருவறையில் அவர் திறந்த மார்புடன் தோன்றுவார். அவர் திருவாழ் மார்பன் என்பதால் அவரது திறந்த மார்பைப் பார்க்கும்போது திருமாகளையும் தரிசித்த பாக்கியம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d94a564-d525-47dd-babc-ed5f6b913020/24-674811b7b6037.webp' /></p><h3> 

பெண்களுக்கு அனுமதி இல்லை</h3><p>
திருவல்லாவில் பெருமாள் பிரமசாரியாக சேவை சாதிப்பதால் இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.</p><h3>கோவில் வரலாறு </h3><p>
மன்னன் சேரமான் பெருமாள் ஆட்சியில் இக்கோவில் பௌத்தக் கோவிலாக இருந்தது. இங்கு தர்மசக்கரம் வழிபடு பொருளாக இருந்தது. பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இங்கு ஸ்ரீ வல்லபப் பெருமாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.</p><p> சேரமான் பெருமாள் மன்னரின் மனைவி தீவிர விஷ்ணு பக்தை ஒரு நாள் அவளது கனவில் கருட வடிவில் வந்த திருமால், சுதர்சன சக்கரம் இருக்கும் இடத்தில் தன்னுடைய சிலை புதைந்திருப்பதாகக் கூறி அதனை எடுத்து கோவிலில் வைக்கும்படி கூறினார். </p><p>அரசி மன்னரிடம் இத்தகவலை தெரிவிக்கவும் எட்டடி உயர சிலை புதைந்திருப்பதைக் கண்டெடுத்து கிழக்கு நோக்கி அச்சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். இச்சிலையின் தலையைப் பார்ப்பவரால் காலை பார்க்க இயலாது காலை பார்க்கும்போது முகத்தை பார்க்க இயலாது அத்தகைய சிறப்பு அம்சமுடைய வகையில் இச்சிலையை பிரதிஷ்டை செய்தனர்.</p><p> பௌத்தர்களின் தர்மச் சக்கரம் சுதர்சன மூர்த்தியாக வணங்கப்படுகிறது. இம் மாற்றத்திற்கு ஒரு ஸ்தல புராணக் கதையும் உண்டு.&nbsp;&nbsp;</p><p></p><h3>வேத பாடசாலை </h3><p>
கேரளாவில் வடக்கே இருந்து அதிக எண்ணிக்கையில் பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பௌத்தர்களோடு வாதம் இட்டு அவர்களை வெளியேற்றினார். பல ஊர்களை அவர்களுக்கு மன்னன் பிரம்மதேயமாக (இலவசமாக) வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட ஊர்களுள் ஒன்று சங்கரமங்கலம். இங்கு
3000 பிராமணர்கள் குடியேற்றப்பட்டதும் ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன.</p><p> நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். பௌத்தர்களுடன் வாதிட்டு வென்று மன்னர் மூலமாக அவர்களுக்குக் கொலை தண்டனைபெற்றுத் தந்தனர். . மன்னரின் ஆதரவை இழந்த பௌத்தர்ர்கள் தம் செல்வாக்கு குறைந்ததால் முற்றிலுமாக இங்கிருந்து வெளியேறி விட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c37f102d-5ad6-4442-ae05-147afb268cd1/24-674811b8368b8.webp' /></p><h3>&nbsp;ஊரும் பேரும்</h3><p>
சங்கமங்கை என்பது இந்திராணியைக் குறிக்கும். எனவே இவ்வூர் முதலில் சங்க மங்கை என்று அழைக்கப்பட்டு பின்னர் வைதிக மரபுக்கு ஏற்ப சங்கர மங்கலம் ஆகியிருக்கும். துகளன் ஆட்சியின் கீழ் இருக்கும்போது இப்பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்
சங்கரமங்கலம் என்ற இந்த கிராமம் முன்பு மல்லிகா வனம் என்று அழைக்கப்பட்டது.</p><p> இங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான பிராமணர்கள் வசித்தனர். அப்போது இங்கு அரசனாக இருந்தவன் சிவ பக்தனான துகளன். அவன் திருமால் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்தான். இதனால் பலர் இங்கிருந்து குடி பெயர்ந்து வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். பௌத்தர்களிடம் வென்று பெற்ற ஊரை சிவபக்தனான மன்னனிட.ம் இழந்தனர்.&nbsp;</p><p></p><h3>சைவ வைணவப் பூசல் </h3><h3>
கதை 1</h3><p>
இவ்வூரில் ஏராளமான பிராமணர்கள் வந்து குடியேற்றப்பட்டதும் இங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர் பௌத்தர்களின் செல்வாக்கு குறைந்ததும் அவர்கள் முற்றிலுமாக வெளியேறி விட்டனர் 

சமண, பௌத்த சமயங்களுக்கும் சைவ, வைணவ சமயங்களுக்கும் இடையிலான பூசல் குறைந்ததும் சைவமும் வைணவமும் தமக்குள் சண்டையிட்டன.</p><p> நாராயண பட்டாத்திரி என்பவரும் அவர் மனைவி ஸ்ரீதேவி அந்தர்ஜனமும் தொடர்ந்து திருமால் பக்தர்களாக இருந்து கோவிலுக்குத் தினமும் போய் திருமாலைச் சேவித்து வந்தனர். ஒரு நாள் பட்டாத்திரி அவர்கள் காலமானார். </p><p> பட்டாத்திரியின் மனைவி சங்கரமங்கலத்து அம்மை (சங்கரோத்தம்மை) மட்டும் ஏகாதசி விரதம் இருந்து அதிகாலையில் பெருமாள் கோவிலுக்குப் போய் விரதம் இருந்தவர்களுக்கு துவாதசி விரதம் விட அன்னதானம் செய்வார். </p><p>பின்னர் தன் வீட்டுக்கு வந்து அவர் விரதம் விடுவார், கணவர் இறந்ததும் விதவையான இந்தப் பெண்ணிடம் உணவைப் பெற (அன்னதானம் பெற) விஷ்ணு பக்தர்கள் தயங்கினர். அப்போது ஒரு பிரம்மச்சாரி அங்கு வந்து தனக்கு உணவிடுமாறு வேண்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a11203-8846-4b45-ade2-3ad1355486e2/24-674811b8afccc.webp' /></p><h3>பிரம்மசாரிக்கு உணவிட்ட கதை
</h3><p> சங்கர மங்கலத்தன்மை உணவிடும்படி தன்னிடம் கேட்ட பிரம்மச்சாரியை அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு வா என்றாள். அந்த ஆற்றில் மன்னன் துகளன் விஷ்ணுபக்தர் எவரையும் குளிக்க விடமாட்டான். அவர்கள் குளித்துவிட்டு விஷ்ணு சேவை செய்வது அவனுக்கு பிரியம் இல்லாத செயலாகும். </p><p>ஆனால் இந்த பிரம்மச்சாரி துகளனைக் கொன்று சக்கராயுதத்தை ஆற்றில் கழுவி விட்டு வந்தான். சக்ராயுதம் இப்போது வழிபடு பொருளாயிற்று. 

பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து அவருக்கு அம்மையார் உணவு படைத்தார்.</p><p> அப்போது அவர் அம்மா 'நீங்கள் விரதம் விட வைத்திருக்கும் உப்பு மாங்காய் எனக்கு கொடுங்கள்' என்று கேட்டார். அந்த அம்மையாரும் பாக்கு மரத்து இலையில் கொஞ்சம் உப்பு மாங்காய் வைத்து கொடுத்தார். அதன் பிறகு பிரம்மச்சாரியாக வந்தவர் ஸ்ரீ வல்லபப் பெருமாளே என்பதை சங்கரமங்கலத்தம்மை உணர்ந்து கொண்டார். </p><p>அன்று முதல் சங்கரமங்கலத்தில்உள்ள ஸ்ரீவல்லப கோவிலில் பாக்கு மரத்தின் இலையில் சாதமும் உப்பு மாங்காயும் நைவேத்தியமாகப் பெருமாளுக்குப் படைக்கப்படுகின்றது&nbsp;&nbsp;</p><p></p><h3>திருநீறு பிரசாதம் </h3><p>
மார்கழி திருவாதிரை திருவிழா இங்கு நடைபெறும் போது மன்னன் துகளன் வணங்கி வந்த சிவபெருமான் இக்கோவிலுக்கு வந்தார். அன்று முதல் திருநீறு இக்கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அத்துடன் சந்தனமும் வழங்கப்படும். </p><p>மன்னன் துகளன் வணங்கி வந்த சிவலிங்கம் மலை உச்சியில் அவனது அரண்மனை இருக்கும் துகளச்சேரிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் துகளச்சேரி மகாதேவன் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e2eaca-b36d-4f3d-bb80-7ce256d977d7/24-674811b92bd85.webp' /></p><h3>சைவ வைணவப் பூசல்</h3><h3>
கதை 2
</h3><p>சைவ வைணவப் பூசலை உணர்த்தும் வகையில் இன்னொரு கதையும் இங்கு வழங்குகின்றது சிவபக்தனாக இருந்த கந்தகரன் என்பவன் சிவபெருமானுக்கு நரபலி கொடுக்கத் துணிந்தான். அப்போது தனக்கு நரபலி கூடாது என்று அவனுக்குக் கட்டளையிட்டு சாந்த சொரூபியாக இருக்கும் திருமாலை வணங்குமாறு கூறினார்.</p><p> சிவபெருமானின் வார்த்தையை கேட்ட அவன் திருவல்லாவுக்கு வந்து பெருமாளைத் தரிசித்து ஓம் நமோ நாராயணாய என்ற அட்டெழுத்து மந்திரத்தைத் தினமும்
சொல்லி அவரை வணங்கி வந்தான் தீவிர வைணவப் பக்தனாக மாறிவிட்ட இவன் ஓம் நமசிவாய என்ற சிவனது மந்திரம் தன் காதில் விழக்கூடாது என்பதற்காக இரண்டு காதுகளிலும் சிறிய மணிகளை கட்டிக் கொண்டான். இவ்வாறு தீவிர வைணவனாக மாறிய ஒரு சிவபக்தனின் கதையும் இங்கு வழங்குகின்றது.</p><h3>கோயில் விழாக்கள்</h3><p> 
மற்ற பெருமாள் கோவில்களில் நடைபெறுவது போல இங்கும் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது&nbsp;</p><p></p><h3>உத்ர ஸ்ரீ பலி</h3><p> 
வடக்கே இருந்து முப்பெரும் தேவியர் உத்தர ஸ்ரீ பலி அன்று மங்களகரமான திருநாள் என்று முடிவு செய்து ஸ்ரீவல்லபரையும் சுதர்சன மூர்த்தியையும் தரிசிக்க கோவிலுக்குள் வருவர். அன்று மட்டும் வடக்கு வாசல் தேவியர் வருகைக்காக திறக்கப்படும். </p><h3>

ஏகாதசி பெருவிழா</h3><p> 
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்று திருவல்லா கோவிலில் சிறப்பு பூசனைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தின் கைசிக ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாகும்.
</p><h3>
மாசிப் பூச உற்சவம் 
மாசி </h3><p>மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும். பத்தாவது நாளான பூச நட்சத்திரத்தன்று இவ்விழா ஆராட்டுடன் நிறைவு பெறும்.</p><h3>மார்கழி திருவாதிரை
</h3><p>சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை திருநாளும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் திருவாதிரை கொண்டாடும்போதும் சித்திரை மாத முதல் நாளான விசு திருநாளின் போதும் பெண்கள் இக்கோவிலுக்குள் வந்து போகலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி கண்டு இனி பயப்படத்தேவை இல்லை.. காரணம் தெரிந்தால் வியந்துபோவீர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-must-know-about-sanibagavan-in-horoscope-1784115553"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-must-know-about-sanibagavan-in-horoscope-1784115553</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் இடம் மற்றும் அவர் அமர்ந்து இருக்கும் இடம் பொறுத்து நமக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் இடம் மற்றும் அவர் அமர்ந்து இருக்கும் இடம் பொறுத்து நமக்கு பலன் மாறுகிறது. </p><p>அந்த வகையில், ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இடம் வைத்து நாம் அவர் செயல்பாடுகள் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, சனி பகவான் எப்பொழுதும் தாமதப்படுத்துவார் ஆனால் மறுப்பதில்லை. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415cf3d7-e86a-4510-abbf-b992bf20c9f4/26-6a57716369981.webp' /></p><p></p><p>
 1-ம் பாவம் – சனி பகவான் ஜாதகருக்கு தன்னம்பிக்கையை தாமதமாக கொடுத்தாலும் வலிமையான ஆளுமையை கொடுக்கிறார். </p><p>
 2-ம் பாவம் – செல்வம், பொருள் சேர்க்கை தாமதமாக கிடைத்தாலும் நிலையானதாகவும், கிடைக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். </p><p>
 3-ம் பாவம் – வெற்றி தாமதமாக கிடைக்கும். ஆனால், விடாமுயற்சியும் துணிந்து போராடக்கூடிய தன்மையும் அதிகரிக்கும்.</p><p> 
 4-ம் பாவம் –குடும்பத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்கு தாமதமானாலும், காலம் கடந்தாலும் குடும்பத்தில் நல்ல புரிதல் அமையும்.
</p><p> 5-ம் பாவம் – இந்த இடத்தில் சனி பகவான் குழந்தை பாக்கியம் தாமதமானாலும் காலம் கடந்து நல்ல மகிழ்ச்சியான நல்ல குழந்தையை கொடுக்கிறார்.</p><p> 
 6-ம் பாவம் – இங்கு வெற்றிகள் மற்றும் எதிரிகளை ஜெயிப்பதற்கு கால தாமதம் ஆனாலும் எதிரிகளே இல்லாத அளவிற்கு நம்மை வாழ வைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b9c2dc-8863-4ecb-af4c-825ee7964517/26-6a577162a91a1.webp' /></p><p></p><p> 
 7-ம் பாவம் – திருமணத்தை தாமதப்படுத்தலாம். ஆனால், நல்ல புரிதல் கொண்ட உறுதியான வாழ்க்கை துணையை கொடுக்கிறார்.
</p><p> 8-ம் பாவம் – வாழ்க்கையில் மாற்றங்கள் நடப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், மன வலிமை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கும்.</p><p> 
 9-ம் பாவம் – அதிர்ஷ்ட வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். ஆனால், நல்ல அனுபவமும் ஞானமும் சேர்ந்து நம்மை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும். </p><p>
 10-ம் பாவம் – தொழில் ரீதியாக உயர்வு மற்றும் நிலைத்தன்மை தாமதம் ஆகலாம். ஆனால், நிலைத்த பெயரும் புகழையும் பெற்று கொடுக்கிறார். </p><p>
 11-ம் பாவம் – வியாபாரத்தில் லாபம் கிடைப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், நீண்ட கால செல்வத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.</p><p>12-ம் பாவம் – மன அமைதியை பெறுவதற்கு தாமதமாகலாம் ஆனால் ஆழமான ஆன்மீக வளர்ச்சியை கொடுத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T11:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் மிதுன ராசியா? உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமைப்படும் சிறந்த குணம் இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/one-unique-quality-of-gemini-zodiac-sign-1784109872"></link>
            <id>https://ibcbakthi.com/article/one-unique-quality-of-gemini-zodiac-sign-1784109872</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மிதுன ராசியினர் மிகவும் புத்திசாலியாக இருக்க கூடியவர்கள். அந்த வகையில் மிதுன ராசியிடம் பல நல்ல குணங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மிதுன ராசியினர் மிகவும் புத்திசாலியாக இருக்க கூடியவர்கள். அந்த வகையில் மிதுன ராசியிடம் பல நல்ல குணங்கள் இருக்கிறது. </p><p>அந்த வகையில், மிதுன ராசியின் பெருமைப்பட வைக்கும் முக்கியமான நல்ல குணங்கள் என்னவென்று பார்ப்போம்.
 மிதுன ராசியினர் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அந்த இடத்தில் அவர்கள் கலகலப்பாக புத்திசாலித்தனமாக பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவார்கள்.</p><p> எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை மறந்து அவர்களை இயல்பான நிலைக்கு திரும்ப செய்து விடுவார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48f795b-7e74-4c9a-a46e-4720946e402a/26-6a575b3198b43.webp' /></p><p></p><p>அதே போல், இவர்கள் புதுப்புது விஷயங்களை எளிதல் கற்றுக்கொண்டு அதை அவர்கள் வாழ்க்கையில் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.</p><p> </p><p>இவர்கள் எவ்வளவு பெரிய கடினமான காலங்களாக இருந்தாலும் அந்த கடின காலத்திற்கு ஏற்ப இவர்களை மாற்றிக் கொள்வார்கள். இவர்களை சுற்றி யாரேனும் மிகவும் சோர்ந்து காணப்பட்டால் அவர்களிடம் கலகலப்பாக பேசி அந்த சோகத்தை இவர்கள் மறக்கச் செய்வார்கள்.</p><p> மிதுன ராசியை பொறுத்தவரை ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்வதில் இவர்கள் கில்லாடிகள். இவர்களிடம் எப்பொழுதும் குழந்தைத்தனமான மனமிருப்பதை பார்க்கலாம். அதோடு இவர்கள் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட கூடியவர்களாக இருக்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u><b>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </b></u></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T10:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 ஆனி அமாவாசை? எந்த வருடமும் இல்லாத பக்தர்கள் கூட்டம் இந்த வருடம் ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aani-amavasai-worship-in-all-over-tamilnadu-1784106634"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aani-amavasai-worship-in-all-over-tamilnadu-1784106634</id>
            <summary type="text">ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை மிகச் சிறந்தது என்றாலும் ஆனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை மிகச் சிறந்தது என்றாலும் ஆனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆனிமாத சர்வ அமாவாசை முன்னிட்டு கோவில்களில் அதிகாலை முதலில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
</p><p>
இந்த நாளில் பக்தர்கள் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். குறிப்பாக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமங்கலம் கோயில் ஆனி அமாவாசையை அடுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.</p><p></p><p> </p><p>இங்கு கடந்த 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பனிரெண்டாம் தேதி முதல் காலையிலிருந்து பக்தர்கள் மலை ஏறி சென்று வழிபாடு செய்யப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7802d837-9ecb-4e59-9e4a-1b75c04e45c8/26-6a574e8bb8efc.webp' /></p><p> </p><p>அதேபோல், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆனி சர்வம் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் புரோகிதர்கள் மூலம் எள் பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். </p><p>அதேபோல் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்கள் ஹிருதாபநாசினி தீர்த்தக்குளம் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். இந்த நேரத்தில் குளத்தில் சுமார் இரண்டு டன் துணிகள் மற்றும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.</p><p> அமாவாசையை முன்னிட்டு முக்கிய கோவில்களில் காவல்துறை பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதோடு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T09:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான 5 விஷயங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-should-do-and-donts-on-aadi-month-1784100309"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-should-do-and-donts-on-aadi-month-1784100309</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 15ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மற்றும் இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 15ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மற்றும் இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. பலரும் இந்த ஆடி மாதத்தில் குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள். </p><p>அப்படியாக, ஆடி மாதத்தில் நாம் கட்டாயம் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். 
ஆடி மாதத்திற்கு ஒரு பழமொழி உண்டு. ஆடி காற்று அம்மியும் பறக்கும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள்.</p><p>அதாவது, பெரும்பாலும் அந்த காலத்தில் வாழ்க்கை முறை விவசாயம் செய்யும் தொழில்கள் மற்றும் பருவ காலத்தின் அடிப்படையில் நிர்ணிக்கப்பட்டவை. </p><p>மேலும், ஆடி மாதம் அதிக அளவில் வெயில் மற்றும் மழை இருக்காது. ஆனால், இந்த காலகட்டங்களில் காற்றில் பரவக்கூடிய நோயின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் ஆடி மாதம் முழுவதும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a80b14-487d-4137-94ef-7ac75957615a/26-6a5735d71bf88.webp' /></p><p></p><p> </p><p> மேலும், ஆடி மாதம் விதை விதைப்பதற்கான மாதமாகவும் இருக்கிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருப்பதால் பிற சுப காரியங்களுக்கு நாம் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.</p><p> மேலும், ஆடி மாத தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் குறைய துவங்கும். அதனால், பருவநிலை மாற்றம் நமக்கு ஒரு சில நோய் தொற்றுகளை கொடுக்கக்கூடும். அப்படியாக, ஆடி மாதத்தில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><p> 

1. ஆடி மாதம் நாம் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது.</p><p> 
2.ஆடி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகளையும் இந்த காலகட்டங்களில் நடத்தக்கூடாது.</p><p>
3. ஆடி மாதம் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க கூடாது.
</p><p>4. ஆடி மாதத்தில் கட்டாயமாக நாம் புதிய வீடு புகுதல் புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
</p><p>5. ஆடி மாதத்தை பொறுத்தவரை பெண் பார்க்க செல்வதையும் தவிர்ப்பது நன்மை தரும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T07:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு தலைவிதியே மாற போகிறதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-july-13-yama-nakshatra-transit-prediction-1784095788"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-july-13-yama-nakshatra-transit-prediction-1784095788</id>
            <summary type="text">வேத ஜோதிட சாஸ்திரத்தில் புளூட்டோ என்பது எமகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் அசுப விளைவுகளை தரக்கூடியதாகவும் கருதப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிட சாஸ்திரத்தில் புளூட்டோ என்பது எமகிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகம் அசுப விளைவுகளை தரக்கூடியதாகவும் கருதப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களை போல் குறிப்பிட்ட சில கால நேரத்தில் அவருடைய ராசி நட்சத்திரத்தை மாற்றிகிறார்.</p><p> இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு தீமையான பலன்களும் கொடுக்கிறது. அந்த வகையில், ஜூலை 13ஆம் தேதி எம பகவான் உத்திராட நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சூரிய பகவானின் அதிபதியாக கொண்ட நட்சத்திரத்திற்கு எமன் செல்வதால் சில ராசிகளுக்கு மிகச் சிறப்பான சுப பலன்களை கொடுக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bb4e488-10bc-40d8-ab5d-7b7de0103a2b/26-6a57242e80a7d.webp' /></p><h3>ரிஷபம்:</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு எமனின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகச்சிறப்பான பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு எடுத்து காரியங்களில் எல்லாம் வெற்றியை பெற போகிறார்கள்.</p><p> அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இவர்கள் பக்கம் இருக்கப் போகிறது. நீண்ட நாட்களாக முடிவடையாத விஷயங்கள் இவர்களை எதிர்பாராத நேரத்தில் முடிவிற்கு வரும். வேலை தொடர்பாக முக்கியமான நபர்களில் ஆதரவை பெறுவார்கள். </p><h3>


கடகம்:
</h3><p>
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு இந்த காலகட்டம் அதிக அளவு வியாபாரத்தில் லாபத்தை பெறுவார்கள். </p><p>வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் விலகும். தம்பதிகள் இடையே அன்பும் ஒற்றுமையும் இந்த காலகட்டங்களில் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.</p><p></p><p> </p><h3>


கன்னி:
</h3><p>கன்னி ராசிக்காரர்களுக்கு எமனின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கப்போகிறது. புதிய ஒப்பந்தங்கள் இவர்களுக்கு கைகளுக்கு வந்து சேரும். பணியிடங்களில் நல்ல பெயரை இவர்கள் பெறுவார்கள். </p><p>பதவி உயர்வு, சம்பள உயர்வு இவர்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் இந்த காலகட்டங்களில் வரும். பழைய கடன்களை அடைத்து மன நிம்மதியை பெறுவீர்கள்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T06:09:56+00:00</updated>
        </entry>
    </feed>
