<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-14T13:23:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/people-born-this-4-zodiac-suffered-alot-in-life-1784028804"></link>
            <id>https://ibcbakthi.com/article/people-born-this-4-zodiac-suffered-alot-in-life-1784028804</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தை பொருத்தவரையும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசியினுடைய தன்மையால் அந்த குறிப்பிட்ட நபர் வாழ்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தை பொருத்தவரையும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசியினுடைய தன்மையால் அந்த குறிப்பிட்ட நபர் வாழ்க்கையில் சில பிடிவாதம் மேற்கொள்வார்கள். </p><p>அந்த பிடிவாதம் ஒரு சிலருக்கு நன்மையாகவும் சிலருக்கு தீமையாகவும் அமைகிறது. அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக அளவில் துன்பத்தை அனுபவிப்பவர்கள் என்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h3> ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசி பொறுத்த வரை யார் மாறினாலும் நான் இந்த ஒரு விஷயத்திற்கும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் மேற்கொள்கிறார்கள். இந்த பிடிவாதமே இவர்களுக்கு வாழ்க்கையில் அதிக அளவிலான துன்பத்தை பெற்றுக் கொடுத்து விடுகிறது.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இவர்களுடைய சுயமரியாதைக்கு தான் அதிகளவிலான சோதனையை சந்திக்கிறார்கள். அதிலும் குடும்பத்தில் இவர்களுக்கு அதிக அளவிலான சோதனைகள் வருவது உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e018400f-aed6-418c-8788-a25fec7c24fd/26-6a561e8ed082c.webp' /></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> மேஷ ராசி பொருத்தவரை இவர்கள் எல்லோருக்கும் முன் வந்து நிறைய உதவிகளை செய்யக்கூடியவர்கள். ஆனால், பல நேரங்களில் இவர்களுடைய மனதில் எனக்காக யாரும் இல்லை என்கின்ற ஒரு விரக்தி இருக்கிறது. அந்த விரக்தி இவர்களை பல நேரங்களில் துன்பத்தில் தள்ளுகிறது.</p><p>&nbsp;</p><p> </p><h3>
கன்னி:
</h3><p>கன்னி ராசியை பொறுத்தவரை எப்பொழுதும் குழப்பத்துடன் இருக்கக்கூடியவர்கள். நான் யாருக்காவது தீங்கு செய்து விட்டேனா அதனால் நான் இப்பொழுது துன்பப்படுகிறேனா என்கின்ற குழப்பம் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அந்த குழப்பமே இவர்களுக்கு பல நேரங்களில் மிகப்பெரிய வேதனையை கொடுத்து விடுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஜூலை 16 நடக்கும் சூரியன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் காவனமாக இருக்க வேண்டுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aadi-month-suriyan-peyarchi-prediction-1784028288"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aadi-month-suriyan-peyarchi-prediction-1784028288</id>
            <summary type="text">சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் பொழுதும் அவருடைய வீட்டை மாற்றுகிறார். அப்படியாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் பொழுதும் அவருடைய வீட்டை மாற்றுகிறார். அப்படியாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். இந்த சூரியன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.</p><p> கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் உச்சமாக இருக்கிறார். அதனோடு சேர்ந்து சூரிய பகவான் இணைகின்ற பொழுது ஒரு சக்தி வாய்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் சுப பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c49507-1c9a-47af-a99a-49c7698a1bdf/26-6a561c81e4ea2.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு கலவையான பலனாக இருக்க போகிறது. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் வேலை பளு இவர்களுக்கு அதிகரிக்கப் போகிறது.</p><p> முதலீடுகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவை இல்லாத நபர்களிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
</p><h3>
 ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி இவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கட்டாயம் பெற்றுக் கொடுக்கப் போகிறது. </p><p>திருமண வாழ்வில் இருந்து வந்த விரிசல் விலகி கணவன் மனைவி ஒற்றுமையாக வாழக்கூடிய யோகத்தை உருவாக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் வருகையால் வியாபாரம் செழிப்பாக வளரும்.</p><p></p><p>
</p><h3> 
துலாம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக பெயரும் புகழும் கிடைத்தாலும் வருமானத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். </p><p>இருப்பினும் கைகளில் பணம் பற்றாக்குறை இல்லாமல் இவர்கள் சம்பாதிக்கக்கூடிய நிலை உருவாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய முழு ஆதரவால் நீங்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை பெற போகிறீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aishwarya</name>
            </author>
            <title type="text"><![CDATA[பில்லி சூனியம் அகல ஒருமுறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/putlur-amman-temple-in-tami-1734499455"></link>
            <id>https://ibcbakthi.com/article/putlur-amman-temple-in-tami-1734499455</id>
            <summary type="text">திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ ஒருமுறை திருவள்ளூரில் அமைந்துள்ள புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. நிச்சயமாக அங...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ ஒருமுறை திருவள்ளூரில் அமைந்துள்ள புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. நிச்சயமாக அங்காளம்மன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவாள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய புட்லூர் அங்காளம்மன் கோயில் வரலாற்றையும் சிறப்புகளையும் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.</p><p></p><h3>&nbsp;தல அமைவிடம்: </h3><p>

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். </p><p>சென்னையில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் செல்லலாம். புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e399a9a-696c-4407-84ca-60a6c57686e3/24-67625c8090482.webp' /></p><h3>தல வரலாறு 1: </h3><p>

பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையில் இருந்து மீண்டு வர மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பொன்மேனியால் நிலத்தை திருப்பவே முடியவில்லை. </p><p>கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். பொன்மேனியால் கொடுக்க முடியாமல் போகவே மகிசுரனுக்கு கோபம் வந்தது.

இதனால் கோபமடைந்த மகிசுரன் ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு பொன்மேனிக்கு கட்டளையிட்டான். </p><p>ஒரே இரவில் இதை அனைத்தையும் செய்ய முடியுமா என யோசித்தவாறே பொன்மேனி பூங்காவனத்திற்கு சென்றான். அன்றைய நாள் சிவராத்திரி என்பதால் அய்யோ கோயிலுக்கு சென்று சிவனை வழிபட முடியவில்லையே என பொன்மேனி மிகவும் வருந்தினான்.</p><p></p><p> அவனுடைய இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கியவாறு இரவில் நிலத்தை உழத் தொடங்கினான்.

அப்போது ஏர் கலப்பை ஏதோ ஒன்றின் மீது மோதுவது போல அவனுக்கு தோன்றியது. என்னவென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. </p><p>அங்கே ரத்தம் பீறிட்டுக்கொண்டு வழிந்துக் கொண்டிருந்தது. அதை கண்ட பொன்மேனியின் கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி விழுந்தான். அப்போது அவனுக்கு ஒரு குரல் கேட்டது. “நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். </p><p>நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். (அதனால் தான் இந்த ஊர் புற்றூர் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி புட்லூர் ஆகிவிட்டது). அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். </p><p>அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.” என அந்த குரல் ஒலித்தது.இவை நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பூங்காவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பொன்மேனியிடம் ஒரு ஆணும் ஒரு கர்ப்பிணியும் தண்ணீர் கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218572e-4b98-4186-9e96-47e3c9cb1142/24-67625c810bf8e.webp' /></p><p> </p><p>தண்ணீர் எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கே இல்லை. தொடர்ந்து பொன்மேனி அவன் வேலையை பார்க்க தொடங்கி இருந்தான். அப்போது தான் மேற்கூறிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், “கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. </p><p>நீ நல்லதையே செய்திருக்கிறாய். என்னை இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய்” என அந்த குரல் கூறியது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியுடைய குரல் என்பதை புரிந்து பரவசமடைந்தான். </p><p>அவனது மகிழ்விற்கு எல்லையே இல்லை என்றே கூற வேண்டும். தொடர்ந்து இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்தனர். </p><p>அவ்வாறே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்ற சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>&nbsp;</p><h3>தல வரலாறு 2:</h3><p>

ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது களைப்படைந்த பார்வதி தேவி வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். தாகமாக இருப்பதாக கூறி சிவபெருமானிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார்.</p><p> அருகில் இருந்த கூவம் நதியில் இருந்து சிவபெருமான் புனித நீர் எடுத்து வந்தார். அப்போது பெய்த கனமழையால் சிவபெருமானால் உடனடியாக பார்வதியிடம் வர இயலவில்லை. பசி தாகத்துடன் இருந்த பார்வதி தேவி மயங்கி தரையில் படுத்து விட்டார்.</p><p> அவரை சுற்றி மண் குவிந்து புற்றாக மாறி விட்டது. புற்றுக்குள் இருந்த பார்வதி தேவியை கண்ட சிவபெருமான் அங்கேயே நின்று விட்டார். அங்கேயே தாண்டவமும் ஆடினார். அதனால் அங்குள்ள சிவபெருமான் தாண்டவராயன் என அழைக்கப்படுகிறார். பார்வதி தேவியை கண்டு கவலையுற்றதால் புட்லூரில் உள்ள சிவபெருமான் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27fa1025-ba2f-4da9-97ed-a634c352ac9a/24-67625c818586b.webp' /></p><h3>தலத்தின் சிறப்புகள்:
</h3><p>
புட்லூரில் இருக்கும் புற்று இன்றைய நாள் வரையிலும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தன்னை தேடி வரும் பக்தர்களில் சிலருக்கு பாம்பாகவும் சிலருக்கு மூதாட்டியாகவும் இன்னும் சிலருக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போலவும் காட்சியளக்கிறார். </p><p>இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவே தான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.&nbsp;&nbsp;</p><h3>தல அமைப்பு:</h3><p>

கோயிலின் கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக வானத்தை பார்த்தப்படி பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறார். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்தப்படி பார்வதி தேவி அருள்பாலிக்கிறார்.</p><p> அந்த சன்னதியில் கால் வைத்த அடுத்த நொடியே உடம்பில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்.மண்புற்று தேவிக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம் பழ மாலைகளுடனும் பூ அலங்காரங்களுடனும் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள்.</p><p></p><p> </p><p>சன்னதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேப்பம் மரம் இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் மற்றுமொரு மண்புற்று உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அமுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது. </p><p>இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். அவ்வாறு முடிச்சிடுவதன் மூலம் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4147e7-90c0-4c43-8322-3409a38ff9bd/24-67625c820b304.webp' /></p><h3>தல அற்புதங்கள்:
</h3><p>
அம்மனின் சன்னதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும். வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும் விலகும். இத்தலத்தின் நாயகியான புட்லூர் அங்காள பரமேசுவரி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறார். </p><p>தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங்களையும் விரட்டுகிறார். பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் வந்து சேரும். </p><p>குழந்தை வரம் கிடைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.</p><h3>கோயில் நேரம்:
</h3><p>
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.</p><p> செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும். மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோதிடம்: சந்தோஷமாக இருந்த தம்பதிகள் பிரிய முக்கிய காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/reason-for-sudden-separation-between-couples-1784024501"></link>
            <id>https://ibcbakthi.com/article/reason-for-sudden-separation-between-couples-1784024501</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான பிரதிபலிப்பை கொடுக்கிறது. அப்படியாக, ஒரு சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான பிரதிபலிப்பை கொடுக்கிறது. அப்படியாக, ஒரு சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆனால், திடீர் என்று பிரிந்து விடுவார்கள். இவர்களா பிரிந்து சென்றார்கள் என்பது போல் எல்லோருக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். </p><p>அப்படியாக, ஜாதகத்தில் தம்பதிகள் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம். </p><p>

ஜோதிடத்தை பொருத்தவரை செவ்வாய் கணவனைக் குறிப்பவராகவும், சுக்கிரன் மனைவியை குறிக்கப்பவராகவும் இருக்கிறார்.</p><p> இந்த இரு கிரகங்களுடன் கேது நெருக்கமாக இருக்கின்ற பொழுது அவர்களை இடையே பிரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக ஏழாம் இடம் என்கின்ற களத்திர ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சிக்கல்களை கொடுக்கிறது.</p><p></p><p> </p><p>ஒரு சில கிரக இணைப்புகள் அவர்கள் கணவன் மனைவியாக தூரத்திலிருந்து வாழக்கூடிய அமைப்பை கொடுக்கிறது. </p><p> அதாவது வேலைக்காக கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய நிலையை பெறுகிறார்கள். இவ்வாறான அமைப்பு கொண்டவர்கள் பெண்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானின் வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும் மிகச்சிறந்த பரிகாரமாக அமையும். </p><p>ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவியின் மனதார வழிபாடு செய்யும்பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கிறது. </p><p>அப்படியாக, மேலும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EYMz7OLqYH4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆஷாட நவராத்திரி எப்பொழுது? 9 நாட்கள் வழிபாடு செய்யும் முறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-how-to-worship-ashada-navratri-9-days-1784019974"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-how-to-worship-ashada-navratri-9-days-1784019974</id>
            <summary type="text">ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான நவராத்திரி என்றால் அது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த ஆஷாட நவராத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான நவராத்திரி என்றால் அது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை வாராகிதேவியை மனம் உருகி வழிபாடு செய்தால் எல்லா பயன்களும் பெறலாம்.
</p><p>
 அன்னை வாராகிய தேவி விவசாயம் மற்றும் வெற்றியின் அடையாளமாக இருக்கிறாள். லலிதாம்பிகையின் படைகளுக்கு சேனாதிபதியாக இருப்பதால் இவர் போர் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f59bc0bd-364f-490d-b68a-4f3009a8dff3/26-6a55fc07bc1c3.webp' /></p><p></p><p> </p><p>ஆகையால், அன்னை வாராகி தேவியை மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எதிரிகள் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை எல்லாம் விலகி அமைதி கிடைக்கிறது. அந்த வகையில், ஆஷாட நவராத்திரி 9 நாட்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். </p><p>


வீடுகளில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு கலசம் வைத்தோ அல்லது வாராகி அம்மன் சிலை படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு பால் கலந்த நாட்டு சர்க்கரை மிகவும் பிடித்தமானது என்பதால் அதை நெய்வேத்தியமாக படைப்பது சிறப்பு. ஆஷாட நவராத்திரி தஞ்சை பெரிய கோவில் உட்பட பல இடங்களில் ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
</p><h3>
 
நாள் 1:&nbsp;</h3><p>இந்த நாளில் அம்மனுக்கு இனிப்பு படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தொழிலில் முன்னேற்றம் குடும்ப ஒற்றுமை கிடைக்கிறது. </p><h3>



நாள் 2:&nbsp;</h3><p>இந்த நாளில் வராகி அம்மனுக்கு மஞ்சள் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது திருமண யோகம் கைகூடி வருகிறது.</p><p></p><h3>
நாள் 3: </h3><p>மூன்றாம் நாள் குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் தைரியமும், உடல் நலம் தொடர்பான பிரச்சனையும் விலகுகிறது.
</p><h3>நாள் 4: </h3><p>நான்காம் நாள் சந்தனம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனக்குழப்பம் விலகி தெளிவான சிந்தனை கிடைக்கிறது.
</p><h3>நாள் 5:
</h3><p> ஐந்தாம் நாள் தேங்காய் பூ சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது பித்துருக்களால் ஏற்படுகின்ற தோஷம் மற்றும் ராகு தோஷம் நீங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cacef99-6334-4100-8369-7e3ee98a38e8/26-6a55fc0871d52.webp' /></p><h3>
நாள் 6:</h3><p>
ஆஷாட நவராத்திரியில் ஆறாம் நாள் மாதுளம் பழம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் தலைமைத்துவ பண்புகள் சிறப்பாக கிடைக்கிறது.</p><h3>
நாள் 7: </h3><p>ஏழாம் நாள் நாம் அம்பாளுக்கு நவதானியம் படைத்த வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் சமநிலை கிடைக்கிறது. </p><h3>
நாள் 8: </h3><p>எட்டாம் நாள் அம்மனுக்கு வெண்ணெய் சமர்ப்பித்து வழிபாடு செய்யும் பொழுது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
</p><h3>நாள் 9: </h3><p>ஒன்பதாம் நாள் காய்கனி சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவு பெறுகிறது. </p><p>அதேபோல், ஆஷாட மாதத்தில் வராகி அம்மன் வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த தினத்தை தவிர விடாமல் வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6-spiritual-things-must-buy-on-2026-aadi-1st-day-1784014795"></link>
            <id>https://ibcbakthi.com/article/6-spiritual-things-must-buy-on-2026-aadi-1st-day-1784014795</id>
            <summary type="text">ஆன்மீகத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் செய்யக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்மீகத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் செய்யக்கூடிய எல்லா வழிபாடுகளுக்கும், பல மடங்கு பலம் உண்டு என்பது நம்பிக்கை. </p><p>அதனால், இந்த ஆடி மாத துவக்கத்திலிருந்து பெண்கள் பலரும் தங்களுடைய குடும்ப நலனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் ஆடி ஒன்றாம் தேதியை நாம் வரவேற்கும் வகையிலும் வீடுகளில் இறை அருள் நிலைத்து நிற்கவும் நாம் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f28406-a55f-4107-8234-c2baac597d3c/26-6a55e7cdbc197.webp' /></p><p>
</p><p>
 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அது 17 ஆகஸ்ட் திங்கட்கிழமை அன்று முடிவடைகிறது. இந்த ஆடி மாதத்தின் முக்கியத்துவம் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. 


 &nbsp;அந்த வகையில் ஆடி மாதத்தில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம். </p><p>


1. ஆடி மாதம் முதலில் அம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக துவங்குகிறது. ஆதலால், இந்த மாத துவக்கத்தின் பொழுது வீடுகளில் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு ஆகியவை பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டு செய்யும்.</p><p></p><p>
</p><p>2. ஆடி மாதத்தில் நம்முடைய குடும்பத்தில் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கு கல் உப்பு வாங்கி வைப்பது நன்மை தரும்.
</p><p>3. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் வெற்றிலை பாக்கு வாங்கி வைத்து குலதெய்வ வழிபாடு செய்வது குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.</p><p>
4. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு வெல்லம், ஏலக்காய் வாங்கி வைப்பது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de05b228-d956-47f9-876e-3e57629e8d2c/26-6a55e7ce7c245.webp' /></p><p></p><p>
</p><p>5. ஆடி மாதத்தில் அம்மனுடைய வழிபாடு சிறந்தது என்பதால் அம்மனுக்கு ஆடி மாதத்தில் பல ஆலயங்களில் கண்ணாடி வளையல் சாற்றி வழிபாடு மேற்கொள்வார்கள்.</p><p> அந்த வகையில், ஆடி மாதம் முதல் நாளில் அம்மனுக்கு பிடித்த கண்ணாடி வளையல் வாங்கி வைத்து வழிபாடு செய்வது மிக உகந்ததாக கருதப்படுகிறது.</p><p>
6. முக்கியமாக, ஆடி மாதம் முதல் நாள் நம்முடைய வசதிக்கு ஏற்ப தானம் செய்து வழிபாடு செய்வது பெரும் புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:40:02+00:00</updated>
        </entry>
    </feed>
