<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-17T19:10:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீலமணி நாகராஜன் வணங்கிய திருநாகேஸ்வரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thirunageswaram-temple-in-tamil-1733041357"></link>
            <id>https://ibcbakthi.com/article/thirunageswaram-temple-in-tamil-1733041357</id>
            <summary type="text">இந்திரன், ரிஷிகள் மற்றும் நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட திருநாகேஸ்வரம் கும்பகோணத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் 
 காவிரியின் தென்கரையில் உள்ள 29ஆவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திரன், ரிஷிகள் மற்றும் நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட திருநாகேஸ்வரம் கும்பகோணத்திற்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில் 
 காவிரியின் தென்கரையில் உள்ள 29ஆவது சிவத்தலமாகும். இது மூவர் பாடிய புகழை உடைய சிவத்தலம். </p><p>இங்கு மூலவரை நாகநாதர், செண்பகாரண்யேஸ்வரர்
என்றும் அம்மனை கிரிகுஜாம்பாள்,பிறை அணி நுதலாள் என்றும் அழைக்கப்பர். . செண்பகம் இங்கு தலவிருட்சமாகும். இங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம்.</p><h3>&nbsp;பெரிய கோவில் </h3><p>
திருநீலக்குடி சப்தஸ்தானம் என்று அழைக்கப்படும் ஏழு திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தேவரடியார்கள் இருந்த மடவார் வளாகம் உள்ளது. 630 க்கு 200 அடி நீள அகலத்தில் மிகப்பெரிய பரப்பளவில் இக்கோவில் அமைந்துள்ளது. </p><p>கோவிலுக்குள் நான்கு வீதிகளும் மதில் சுவரும் நான்கு கோபுர வாயில்களும் உள்ளன. மதில் சுவரை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது.

திருநாகேஸ்வரம் கோயிலின் வடக்கே பூந்தோட்டம் அமைந்திருக்கின்றது.</p><p> கிழக்குக் கோபுர வாசல் வழியாக உள்ளே போகும்போது முதலில் விநாயகர், அடுத்து பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. தெற்கே தீர்த்தக் குளம் இருக்கின்றது. வடக்கில் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று அழகிய சிற்பங்களுடன் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db40b05c-ff47-4528-bc3d-bfddc0fbd098/24-674c1ccf8a537.webp' /></p><h3>முப்பெருந்தேவியர்
</h3><p>திருநாகேஸ்வரம் கோவிலில் அம்பாள் சன்னதியில் அவளுக்கு இருபுறமும் சரஸ்வதியும் லட்சுமியும் உள்ளனர். இம்முப்பெரும் தேவியர் சிலைகளும் காலத்தால் பிற்பட்டவவை ஆகும். இவை கற்சிலைகள் அல்ல. சுதை சிற்பங்கள். எனவே இவற்றிற்கு அபிஷேகம் கிடையாது. </p><p> தை மாசம் 48 நாட்கள் சன்னதி அடைக்கப்பட்டு திரை தொங்க விடப்பட்டிருக்கும். அக்காலத்தில் இச்சிற்பங்களுக்கு புனுகு சாத்தப்படும். தை மாத கடைசி வெள்ளி அன்று அம்மன் சந்நிதியின் முன் மண்டபத்தில் அம்மனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள் ஆகியவை படைக்கப்படும். 
அம்மன் கோவிலில் முப்பெரும் தேவியரோடு பால சாஸ்தா, சங்க நிதி, பதுமநிதி ஆகியோரும் உள்ளனர்.</p><p></p><h3>சேக்கிழாருக்கு சிலை</h3><p>
திருநாகேஸ்வரம் கோவிலில்
பெரிய புராணம் எழுதிய சேக்கிழாருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இங்கே சிலைகள் உள்ளன. சேக்கிழார் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். அவர் தம்பி பாலறாவாயருக்கும் அவர் தாயாருக்கும் உருவச் சிலைகள் உள்ளன. சேக்கிழார் தொண்டு செய்த திருத்தலம் இது என்ற பெருமை. இத்திருத்தலத்துக்கு உண்டு.&nbsp;&nbsp;</p><h3>நாகங்கள் வழிபட்ட தலம்
</h3><p>ராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி என்ற 
பல நாகங்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளன. இப்பகுதியில் அஷ்ட நாகங்கள் சிவராத்திரி வழிபாடு நடத்துவது இயல்பு. அவை சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் வழிபடும். </p><p>இரண்டாம் காலத்தில் இங்கே திரு நாகேஸ்வரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபடுகின்றன. மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபடுகின்றன பின்பு நான்காம் காலத்தில் நாகூரில் உள்ள சிவபெருமானை வழிபடுகின்றன.</p><p> நாகங்கள் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் மூலவர் நாகேஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றார். இத்தலமும் திரு நாகேஸ்வரம் எனப்படுகின்றது. 

நாகங்கள் தவிர இங்கு பல ரிஷிகளும் சிவனை வழிபட்டனர். லட்சுமி, பார்வதி, சரஸ்வதி, விநாயகர் போன்ற தெய்வங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/580406b5-19b7-4aa9-9080-3ee0da165831/24-674c1cd00ae4b.webp' /></p><h3>மனித முகத்துடன் ராகுபகவான்
</h3><p>திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் பெரிய பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் கோவில் உள்ளது. இங்கு அவர் மனித முகத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகத்துடன் காட்சியளிக்கின்றார். இருபுறமும் நாகவல்லி நாகராணி என்று இரு தேவியரும் உள்ளனர். </p><p>ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ராகு காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது பாலாபிஷேகம் செய்யப்படும். ராகு பகவான் சிலையின் மீது ஊற்றப்படும் பால் நீல நிறத்தில் கீழே இறங்கும். </p><h3>வழிபாட்டின் பலன்
</h3><p>திருமணத்தடை உள்ளவர்களும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் நாகநாதர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர் .ஜாதகத்தில் ஒன்று, இரண்டு, ஏழு, எட்டு, ஐந்து, பதினோராம் இடங்களில் ராகு கேது இருப்பவர்களுக்கு திருமணத் தடையும் புத்திர தோஷமும் இருக்கும். இவர்கள் நாகநாதர் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபாடு செய்தால் நல்ல திருமணமும் நல்ல குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.</p><p></p><h3>அனுகூல ராகு
</h3><p> ராகுவால் யோகம் கிடைக்கவும் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் ராகு யோகமான இடத்தில் அனுகூல ராகுவாக இருந்தால் அவர் அந்நிய மொழி, அந்நிய மனிதர், அந்நிய நாட்டில் வேலை அல்லது தொழில் செய்வதன் மூலமாக . லாபம் அடைவார். இதை பரதேசி யோகம் என்பார்கள். </p><p>அடுத்த நாட்டிற்கு போய் கல்வி பெறுவது, தொழில் செய்வது அல்லது இங்கிருந்தே அடுத்த நாட்டினருடன் ஏற்றுமதி இறக்குமதி போன்ற வாணிபத் தொடர்புகளை மேற்கொள்வது போன்ற பரதேசி யோகம் அனுகூல ராகுவால் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade9e730-c973-4004-99fb-a2aead14d11d/24-674c1cd07fb0f.webp' /></p><p> </p><p>மேலும் இக்கிரக அமைப்புடைய ஜாதகர் பிற மொழி, பிற சாதி, பிற மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்வதற்கும் இந்த அனுகூல ராகு உதவும்.

ராகுவைப் போல் கொடுப்பவன் இல்லை கேது வைப்போல் கெடுப்பவன் இல்லை என்று ஒரு பழமொழி ஜோதிட உலகில் வழங்குகின்றது. </p><p>ராகு அதிகளவில் உலக இன்பங்களை அள்ளி அள்ளி கொடுக்கும். சொத்து, சுகம், கார், பங்களா, பெண் சுகம் போன்றவற்றை ஏராளமாகக் கொடுத்துவிட்டுப் பின்பு அவற்றையெல்லாம் ஏமாற்றி பறித்துக் கொள்ளும். அதனால் ராகு திசையில் சிலர் தன்னுடைய தொழிலின் உச்சத்தைத் தொடுவர். </p><p>செல்வாக்காக இருப்பர். பின்பு ராகு திசை முடிந்து குரு திசை ஆரம்பித்ததும் உலக சுகங்களால் காயப்பட்டு தெய்வ பக்தர்களாக மாறி புண்ணிய ஸ்தல யாத்திரைகளை மேற்கொள்வர்.&nbsp;</p><h3>விழாக்கள்</h3><p> 
திருநாகேஸ்வரம் கோவிலில்
மற்ற சிவன் கோவிலில் நடப்பது போல ஆண்டுதோறும் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். சிவனின் பிறந்த நாளான மார்கழி திருவாதிரையும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும். பங்குனி உத்திரத் திருநாள் தெய்வத் திருமணத் திருநாளாகும். திருக்கார்த்திகையில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.</p><p></p><h3>கதை 1
</h3><h3>இந்திரனின் ரகசியப்</h3><p> பூஜை
திருநாகேஸ்வரம் கோவிலிலும்
மற்ற சிவன் கோவிலில் வழங்குவது போல சாபம் தீர்த்த கதைகள் உண்டு. இத்தலமும் மற்ற சிவன் கோவில்களைப் போலவே இந்திரன் சாபம் தீர்த்த தலமாகக் கருதப்படுகின்றது. அம்மனுக்கு இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்த பிறகு இந்திரன் சந்நிதிக்குள் வந்து அம்மனுக்குப் பிறர் எவரும் அறியாமல் ரகசியமாகப் பூஜை செய்வதாக ஐதீகம்.</p><p>இதே கதை சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலய சுவாமி கோயிலிலும் சொல்லப்படும். அங்கு இரவில் வந்து இந்திரன் சிவனை வணங்குவார். அவர் கருவறைக்குள் பூஜை செய்த அடையாளங்கள் காலையில்
காணப்படும். திருநாகேஸ்வரத்
திருத்தலத்தில் இந்திரன் இரவில் அம்மனுக்கு பூஜை செய்ததால் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bdceb81-7dff-445f-b06b-97c548c6b233/24-674c1e4384393.webp' /></p><h3>கதை 2</h3><p> 
பிருங்கிக்குக் காட்சியளித்த தேவியர்
பிருங்கி முனிவர் திருநாகேஸ்வரம் வந்து முப்பெரும் தேவியரை நோக்கி தவம் செய்தார். மூன்று தேவியரும் அவருக்குக் காட்சி அளித்தனர். பின்பு பிருங்கியின் வேண்டுகோளை ஏற்று மூவரும் இங்கேயே கோயில் கொண்டு இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கினறனர்.&nbsp;</p><h3>கதை 3</h3><p> 
ஏழரைச் சனி விலகிய தலம்
நள மகாராஜா சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்து தன் மனைவி தமயந்தியுடன் காட்டுக்குச் சென்றான். அவன் வேதனையைப் புரிந்து கொண்ட தமயந்தி அவன் தன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்று விடுவானோ என்ற அச்சத்தில் தன் சேலை நுனியுடன் அவனது வேட்டி நுனியையும் சேர்த்து முடிந்து கொண்டு உறங்கினாள். </p><p>அந்நிலையிலும், நளன், அவள் உறங்கியதும் தன்னுடைய வேட்டி நுனியை அவிழ்த்து அவள் அருகிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டான். அப்படிச் சென்றவனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் வந்தது.

 ஒரு நாள் நளன் தன் குதிங்காலைச் சரியாக தேய்த்துக் கழுவவில்லை. </p><p> தண்ணீர் படாத அந்த குதிங்கால் பகுதியில் சனி போய் இருந்து கொண்டான். பாதச் சனியாக அமர்ந்தான். சனி பிடித்ததும் கார்கோடகன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. நளனில் உருவம், நிறம் எல்லாம் கறுத்து உருமாறிவிட்டது.</p><p>&nbsp;</p><p> </p><p>அவனுடைய தேகப் பொலிவும் மறைந்தது. . மடப்பள்ளியில் சமைக்கும் சமையல்காரனைப் போல கருத்து மெலிந்து தோன்றினான். அந்த வேலை தான் அவனுக்கு
ஓர் அரண்மனையில் கிடைத்தது. அவனது சமையல் அருமை கண்டு உலகமே வியந்து நளபாகம் என்று போற்றியது. </p><p> 

நளன் சமையல்காரனாக இருந்து ஜென்மச்சனி காலத்தில் மிகவும் துன்பப்பட்டான். சனி அடுத்த இரண்டரை ஆண்டுகளும் அவனை ஆட்டிப் படைத்தது. இத்தலத்திற்கு அவன் வந்ததும் அவனை விட்டு சனி நீங்கியது. உடனே கார்கோடகன் பாம்பும் அவனிடமிருந்து தன்னுடைய விஷத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டது. </p><p> எனவே திருநாகேஸ்வரம் திருக்கோயில் 
நாக விஷம் நீங்கிய இடம் என்று போற்றப்படுகிறது. இங்கே நவக்கிரக சந்நிதியோடு ராகு பகவானுக்கும் உண்டு. சனி பகவானுக்கும் தனி சந்நிதிகள் உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da1c25db-3d3e-4960-8800-6e976e1d7e0d/24-674c1cd175d35.webp' /></p><h3>கல்லும் கட்டுமானமும்</h3><p> 
தமிழகத்தில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானக் கலைநுட்பம் பற்றி தமிழக மக்கள் அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. சிற்பிகள் ஏழு இசை தூண்களுக்கு ஒரு கல், மணி ஓசை கேட்பதற்கு மணிகண்டக்கல், நீர் துளிப்பதற்கு சந்திரகாந்தக்கல், நீலமாக மாறுவதற்கு நீலமணிக்கல், பச்சையாகத் தோன்றுவதற்கு மரகதக்கல் என்று பலவகைக் கற்களைக் கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தினர்.</p><p> இங்கு ராகு கிரகம் செய்யப்பட்ட கல் நீலமணிக்கல் ஆகும். இதனை ஆங்கிலத்தில் (jasper) ஜஸ்பர் என்பர். Lapis lazuli என்ற கல்லும் நீல நிறத்தில் உள்ள கல் ஆகும் இக்கற்கள் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><h3>ராகு மீது பால் நீலமாவது ஏன்?</h3><p> 
பச்சை நிற மரகதக் கல்லை பாலுக்குள் வைத்தால் மரகத பச்சை ஒளி பரவி பால் பச்சையாகத் தெரியும். அது போல நீல மணி கல்லைப் பாலுக்குள் வைத்தால் நீல ஒளி பரவி பால் வெளிர் நீலமாகத் தெரியும். ராகு பகவான் மீது அபிஷேகம் செய்யப்படும் பால் நீலமணிக்கல்லின் மீது பரவி வரும் போது நீல நிற ஒளியைப் பிரதிபலிக்கின்றது. </p><p>எனவே பால் நீல நிறமாகத் தெரிகின்றது. இந் நீல நிறம் விஷத்தின் நிறம் அல்ல சிலை செய்த கல்லின் நிறம் ஆகும். தமிழகக் கோயில் கட்டுமான அறிவியல் திறனைப் பற்றிய அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.</p><p></p><h3>நாக தெய்வங்கள்</h3><p> 
வடநாட்டில் நாகங்களைத் தமது சமயத்திற்குள் கொண்டு வந்தவர்கள் பௌத்தர்கள் ஆவர். வடநாட்டில் நாகம் என்பது தீய சக்தி ஆகும். நாகத்தைக் கொல்லும் மயிலும் கருடனும் தெய்வ சக்தி உடையன. ஆனால் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் நாகத்தைத் தமது குல முதுவர் (forefather) என்றும் குல மரபுச் சின்னம் (totem) என்றும் கருதி வழிபடு தெய்வங்களாகப் போற்றினர்.</p><p>இவர்கள் நாகர்கள் எனப்படும் இனத்தவர். 

குமரிக் கண்டத்தவர் அல்லது ஆப்பிரிக்க, தென்னிந்திய பகுதிகளில் வாழ்ந்த குடிகள் அனைத்தும் நாகர் எனப்பட்டனர். இவர்களின் எழுத்து நாகரி என்றும் வாழ்க்கைமுறை நாகரிகம் என்றும் அழைக்கப்பட்டது. </p><p>நாகர்கள் தம் தலையில் நாக படம் சூடினர். சமய வாதங்களில் தோற்ற பௌத்தர்களின் நாக்குகள் வெட்டப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்ட போது சைவ சமயம் புதிய எழுச்சியைக் கண்டது. அப்போது சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு நாகாபரணம் சூட்டப்பட்டது. பூர்வ குடிகள் நாகம் சூடிய இறைவனைத் தமது கண்கண்ட கடவுளாகக் கருதினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0903bb28-0386-48ca-9c2f-8fb61e5a50f6/24-674c1cd1ed230.webp' /></p><h3>நாகங்களும் உறையூரும்
</h3><p>பௌத்தர்கள் நாகர்களை ராகு, தட்சகன், கார்க்கோடகன், ஆதிசேஷன், வாசுகி, ஆனந்தன், சங்கபலன், பதுமன் என்று அஷ்ட நாகங்களாகப் போற்றினர். தாமரை சுலோகம் போதித்த போது அஷ்ட நாகங்களும் அருகில் இருந்து கேட்டதாக பௌத்த சமய வரலாறு தெரிவிக்கின்றது.</p><p> உரக புரம் (உறையூர்) பௌத்தர்களினின் நாக நகரமாக விளங்கியது. உரகம் என்றால் நாகம். உறையூரில் ஆச்சாரிய புத்த தத்த தேரர் அபிதம்மாவதாரம் என்ற நூலை இயற்றினார் உரகபுரம் (உறையூர்) மடாலயம் பௌத்தப் பள்ளியாகத் திகழ்ந்தது.
</p><p>
பௌத்தர்கள் போற்றிய நாகங்கள் பின்பு வந்த புராணங்களில் குறிப்பாக பரீட்சித்து கதையில் தீயில் சாகடிக்கப்பட்டன. இவர்கள் தெய்வமாகப் போற்றிய நாகங்கள் புராணத்தில் சாபம் பெற்றவையாக சிவன் கோயில்கள் உருவான பல ஊர்களில் வந்து சாப விமோசனம் பெற்ற கதைகள் தோன்றின.&nbsp;</p><h3>இந்திரன் பூஜித்த தலம்
</h3><p>கௌதம் புத்தருக்கு ஞான ஒளி கிடைத்த போது திருமுழுக்குச் செய்த இந்திரனுக்கு பௌத்தர்கள் லிங்க பானம் (கந்து) வைத்து வழிபட்டனர். இந்திரன் இந்திரியத்தின் குறியீடாக விளங்கினான். சிலப்பதிகார. இந்திரன் கோயிலை 'கந்துடைப் பொதியில்' என்றது. </p><p>பௌத்த சமயம் தோற்கடிக்கப்பட்ட பின்பு பௌத்தர்களின் தெய்வமான இந்திரனும் சாபம் பெற்றவண் ஆனான். அவனை வழிபட்ட தலங்கள் அவனுக்கு சாபவிமோசனம் கொடுத்த சிவத்தலங்கள் ஆயின. சாப விமோசனம் பெறுவதற்காக இந்திரன் திருநாகேஸ்வரம் அம்மன் சந்நிதிக்கு இரவில் வந்து வழிபட்டுச் சென்றான்.&nbsp;</p><p></p><h3>குபேரன் மனைவியர் சங்க நிதி, பதும நிதி</h3><p>
சங்கம், பத்மம் ஆகியவை பௌத்த சமயத்தின் முக்கிய கருத்தியல்கள் ஆகும். சங்க நிதி, பதும நிதி குபேரனின் மனைவியர். பௌத்த சமயத்தில் ஏழு மன்னர்களில் ஒருவனாக குபேரனை வைசிரவணன் என்று அழைப்பர். இவர் எட்டு தர்மபாலர்களில் ஒருவராவார். </p><p>உலகெங்கும் தோளில் செல்வத்தையும் யோகத்தையும் மூட்டையாகக் கட்டி போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் Laughing Buddha சிலைகள் குபேரனின் சிலைகள் ஆகும். </p><p>ஜப்பான், சீனா, திபெத் போன்ற பௌத்தம் செழித்திருக்கும் நாடுகளில் இன்றும் குபேரன் பௌத்தக் கடவுளாக வணங்கப்படுகிறான். 
ஜைன சமயத்தில் குபேரனை சர்வானுபகதி என்பர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e73cc9-82f6-4c99-81a0-0c33b2ec13e6/24-674c1cd26d948.webp' /></p><h3>இந்து சமயத்தில் குபேரன்
</h3><p>இந்து மதத்தில் பிரம்மாவின் பேரனான விஷ்ரவனுவுக்கும் சப்தரிஷிகளில் ஒருவரான பரத்வாஜரின் மகள் இலவிதாவுக்கும் பிறந்தவன் குபேரன். அதே விஷ்வரவனுக்கும் அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகதிக்கும் பிறந்தவர்கள் ராவணன் கும்பகர்ணன் , சூர்ப்பநகை, விபீஷணன் ஆகியோர். </p><p>குபேரனும் இராவணனும் ஒரு தந்தையின் பிள்ளைகள். 

வைணவத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு கடன் உதவி செய்தவன் குபேரன் என்று ஒரு கதை உண்டு. </p><p> சைவத்தில் சிவபக்தி காரணமாக குபேரனை சிவபெருமான் சொர்ண பைரவர் ஆக்கினார் என்றொரு கதை உள்ளது. தங்கம் வைத்திருக்கும் குபேரனை வைதீகச் சமயங்கள் தங்களின் பக்தர்களுக்குக் கதை மாற்றி கொடுத்தன.&nbsp;&nbsp;</p><h3>நவ நிதி நாயகன்
</h3><p>மொத்தத்தில் எல்லா சமயங்களிலும் குபேரன் பத்மம், மகா பத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி ஆகிய நவநிதிகளுக்கும் அதிபதி என்பது மாற்றப்படவில்லை. </p><p>கதைகள் மாற்றப்பட்டாலும் கடவுளின் இயல்பு மாற்றப்படவில்லை 

நாகநாதர் கோவில் ஆதியில் பௌத்த கோவிலாக இருந்தது என்பதற்கு நாக வழிபாடு, சங்கநிதி பதுமநிதி, இந்திரன் சாபம் தீர்த்த கதை, சுதை வடிவிலான அம்பாள், ராகு என்ற நாகராஜன் வழிபாடு, சண்பக வனம் (ஆராகமம்)ஆகியவை சான்றாக விளங்குகின்றன.&nbsp;&nbsp;</p><h3>சிறப்பு மாறா திருத்தலம்</h3><p> 
திருநாகேஸ்வரத்தில் அன்று முதல் இன்று வரை விஷம் இறங்கவும் விஷக்கிருமிகளால் ஏற்படும் நோய் திறவும் கருப்பைக் கோளாறுகள் தீர்ந்து குழந்தை பிறக்கவும் சனி மற்றும் ராகு தோஷம் நீங்கவும் பக்தர்கள் வந்து வணங்கிப் பயன் பெறுகின்றனர். திருத்தலத்தின் சிறப்பு அதன் தோற்றம் முதல் இன்று வரை எவ்வித மாற்றமும் அடையவில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-17T16:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (18-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-18-2026-1784292704"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-july-18-2026-1784292704</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 இவர்களுக்கு குழந்தைகள் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:
</h3><p> இவர்களுக்கு குழந்தைகள் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். </p><h3>
ரிஷபம்:
</h3><p> வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவைப்பெறும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள்.
</p><h3> மிதுனம்:
</h3><p> குடும்பத்தினருடன் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்கின்ற முயற்சி கைக்கூடி வரும். தொலைதூரத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். </p><h3>
கடகம்:
</h3><p> விடாப்படியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் வழியாக நெருக்கடிகள் வரலாம்.தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> வேலையில் திடீர் இடமாற்றம் பெறலாம். தாய் வழி உறவினர்களால் சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். சகோதரர்கள் பற்றிய புரிதல் கிடைக்கும். பண பிரச்சினை விலகும்.</p><p></p><p>
</p><h3> கன்னி:
</h3><p> இன்று தேவை இல்லாத வாக்குவாதங்களை செய்யாதீர்கள் விலை உயர்ந்த பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அரசு தொடர்பான வேலையில் சில பின்னடைவு சந்திக்கலாம்.
</p><h3> துலாம்:
</h3><p> இன்று பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்ச்சியில் முன்னேற்றம் உண்டு.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் தொடர்பாக முடிவுகளில் மிகுந்த கவனம் வேண்டும். விவசாய பணிகளில் நல்ல லாபம் உண்டு.</p><p></p><p>
</p><h3> தனுசு:</h3><p> 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. </p><h3>
மகரம்:
</h3><p> தேவை இல்லாத சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். </p><h3>
கும்பம்:
</h3><p> இன்று வரவுகளால் நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வலியை மகிழ்ச்சி உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் யோகம். கைகூடிவரும்.
</p><h3> மீனம்:
</h3><p> வேலை தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உங்களுடைய முன்கோபத்தால் திடீர் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பிறருடைய கருத்தை ஆலோசனை செய்வது அவசியம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளைப் பேறு வழங்கும் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thirukoshtiyur-temple-in-tamil-1733122196"></link>
            <id>https://ibcbakthi.com/article/thirukoshtiyur-temple-in-tamil-1733122196</id>
            <summary type="text">சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் விளக்கு நேர்த்திக் கடனுக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும். இங்கு மூலவர் சௌமிய நாராயண பெருமாள் ஆவார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில் விளக்கு நேர்த்திக் கடனுக்கு புகழ்பெற்ற கோவில் ஆகும்.</p><p> இங்கு மூலவர் சௌமிய நாராயண பெருமாள் ஆவார். இத்தலம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். </p><p>இக்கோவில் பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். </p><p>தாயார் மகாலட்சுமி தனிச் சன்னதி கொண்டுள்ளார். இவரை நிலமா மகள், குலமா மகள், திருமா மகள் என்றும் அழைப்பர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752dd8d5-4e23-4492-a469-50eb4f8e9201/24-674d5c51eb134.webp' /></p><h2>பெருமாள் அருளும் பிள்ளை வரம்
</h2><p>திருக்கோஷ்டியூருக்கு இரண்டு வித சிறப்புகள் உண்டு. ஒன்று இங்கு பிள்ளை வேண்டுவோர் விளக்கு பிரார்த்தனை செய்வர். இரண்டு, பிள்ளை இருந்தும் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்போர் தங்கள் பிள்ளையைப் பெருமாளுக்கு தத்தாகக் கொடுத்து திரும்பப் பெற்றுச் செல்வர்.</p><p> தங்கள் பிள்ளையைத் தத்துக் கொடுக்கக் கருவறை முன்பு நிறுத்தும்போது கோவில் பட்டர் குழந்தைக்கு பெருமாளின் ஒரு பெயரைச் சூட்டி அவர்களிடம் பிள்ளையைத் திரும்ப கொடுப்பார். அன்று முதல் அக்குழந்தை பட்டர் சூட்டிய பெயரால் அழைக்கப்படும். </p><p>10, 15 வயது சிறுவர் சிறுமிகளையும் இவ்வாறு தத்து கொடுக்கும் வழக்கம் உண்டு. பெருமாளுக்கே பிள்ளையைத் தத்து கொடுத்து திரும்பப் பெறுகின்ற இந்நடைமுறைவேறு எந்தக் கோவிலிலும் கிடையாது. &nbsp;</p><p></p><h2>கருவறைக் கடவுளர்
</h2><p>திருக்கோஷ்டியூர் கருவறையில் சௌமிய நாராயணப் பெருமாளைத் தவிர மது கைடபர், இந்திரன், புத பகவானின் மகன் புரூரவச் சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோர் உள்ளனர். </p><p>பெருமாளை வணங்கி அருள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் காணப்படும் கோவில் இதுவாகும்.&nbsp;&nbsp;</p><h2>பிள்ளைவரம் தரும் பிரார்த்தனை கண்ணன்</h2><p>
கருவறையில் மூலவருக்கு அருகில் சந்தானகிருஷ்ணன் தொட்டிலில் ஆடிக் கொண்டிருப்பார். பிள்ளை வரம் அருளும் இவரைப் இவரை பிரார்த்தனை கண்ணன் என்பர்.&nbsp;&nbsp;</p><h2>அஷ்டாங்க விமானம்</h2><p> 
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் அஷ்டாங்க விமானத்தை கொண்டது ஒரு விமானத்தில் பொதுவாக ஆறு அங்கங்கள் (ஸடாங்கம்) உண்டு. </p><p>அவை அடித்தளம், சுவர், கூரை, கழுத்து, சிகரம் மற்றும் ஸ்தூபி ஆகியவை. இந்த ஆறு அங்கங்களுடன் பெருமாள் தாயார் கருவறைகளையும் சேர்த்து அஷ்டாங்க விமானம் என்பர். அதாவது பிரஸ்தரம் எனப்படும் கூரைக்கும் கிரீவம் எனப்படும் கழுத்துக்கும் இடையில் ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு சன்னதிகள் அமைக்கப்படும். </p><p>இந்த அமைப்பை அஷ்டாங்க விமானம் என்பர். அஷ்டாங்க விமானம் இருக்கும் கோவில்களில் பெருமாள் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று பல கோலங்களில் காட்சியளிப்பார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59d6d8b-6c10-4acd-b75e-ecd091f22ef7/24-674d5c51378dc.webp' /></p><p>சேரன்மாதேவியில் உள்ள இராம சுவாமி கோவில், மதுரை கூடல்ழகப் பெருமாள் கோவில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜர் கோவில் ஆகியவை அஷ்டாங்க விமானங்களைக் கொண்டவை.</p><p>பல கோலங்களில் பெருமாள் திருக்கோஷ்டியூரில் பல கோலங்களில் பெருமாளைத் தரிசிக்கலாம். கீழ்த்தளத்தில் பெருமாள் நர்த்தன கிருஷ்ணராக காட்சி தருவார். முதல் தளத்தில் பாற்கடலில் சயனிக்கும் தேவலோகப் பெருமாள் ஆகக் காட்சியளிப்பார். இரண்டாம் தளத்தில் இந்திரனின் தம்பி உபேந்திரன் பெயரில் உபேந்திரநாராயணனாக நின்ற கோலத்தில் தோன்றுவார். மூன்றாம் தலத்தில் வைகுண்ட லோகத்தில் இருக்கும் வைகுண்ட நாதர் ஆக பரமபதக் காட்சி அளிப்பார்.</p><h2>'நான் செத்து வா'
</h2><p>நாராயண பக்தர்களுக்கு வைகுந்தம் செல்லும் வழியைக் காட்ட விடும் என்று விரும்பிய இராமானுஜர் அவர்கள் இவ்வூரில் உள்ள சிறந்த விஷ்ணு பக்தரான திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டிற்கு வந்தார். திருக்கோஷ்டியூர் நம்பி வீட்டுக் கதவை இராமானுஜர் தட்டவும் 'யார் அங்கே' என்று உள்ளே இருந்த படி நம்பி கேட்டார். இராமானுஜர் 'நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்' என்ரு பதில் கூறினார். நம்பி உள்ளே இருந்தபடி 'நான் செத்து வா' என்று சொல்லிவிட்டார். </p><p>இராமானுஜரும் திரும்பிப் போய்விட்டார் மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். மீண்டும் வந்தார். இவ்வாறு 17 முறை வந்தவர் 18-வது முறை யார் அங்கே என்று கேட்டதும் 'அடியேன் வந்திருக்கிறேன்' என்றார். சரி உள்ளே வா என்று சொல்லிய திருக்கோஷ்டியூர் நம்பி வைகுந்தம் செல்லும் வழி அஷ்ட எழுத்து மந்திரத்தை ஜெபிப்பதாகும் என்று இ ராமானுஜரிடம் சொன்னார்.&nbsp;</p><p></p><p>இராமானுஜர் அகமகிழ்ந்து திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து 'இதை நான் எல்லோருக்கும் சொல்லப் போகிறேன்' என்றார். நீ வேத ரகசியத்தை பிராமணர் அல்லாத மற்றவர்களுக்குச் சொன்னால் அவர்கள் வைகுந்தம் சேர்வர். அவர்களுக்குச் சொன்ன பாவத்துக்காக நீ நரகம் புகுவாய் என்றார். </p><p>தெய்வ ரகசியத்தை மற்ற சாதியினருக்கு சொல்லக்கூடாது என்பது ஐதீகம். இராமானுஜர் சிறந்த மனித நேயராக இருந்த காரணத்தினால் 'நான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் வைகுந்தம் அடைய வேண்டும்' என்ற நல்லெண்ணத்துடன் சரி என்று தலையாட்டி விட்டு தன் சீடர்களுடன் வந்தார்.</p><p>திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களின் வீட்டில் இருந்து கோவிலை நோக்கி இராமனுஜர் தன் சீடர்களுடன் வரும்போது அங்கிருந்த ஒரு கிணற்றை (சிம்மக் கிணற்றை) எட்டிப் பார்த்தார். கிணற்று நீரில் பகவான் தெரிந்தார். பெருமாளை பார்த்ததே பெரும் புண்ணியம் என்று கருதிய ராமானுஜர் தன்னுடைய கருத்து சரி தான் நினைத்ததைச் செய்ய பெருமாள் அனுமதி அளித்து விட்டார் என்ற எண்ணத்துடன் கோபுரத்தின் மேல் ஏறினார். சீடர்கள் இவர் கோபுரத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ என்று அஞ்சினர். </p><p>ஏனென்றால் அந்த காலத்தில் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்தும் கோபுரத்தில் இருந்தும் மதுரையில் சுந்தரபாண்டியன் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்தும் ஆட்கள் கீழே விழுந்து உயிர் துறந்த நிகழ்வுகள் நடந்ததுண்டு. எனவே சீடர்கள் அஞ்சினர். ஏன் எதற்கு என்று கேட்கவும் அஞ்சினர். இருந்தாலும் அவரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
</p><p>இராமானுஜர் கோவில் கோபுரத்தின் உச்சிக்குப் போய் எல்லோரையும் இங்கு வாருங்கள் என்று ஊர் மக்களை அழைத்தார். ஊர் மக்கள் வந்து கீழே கூடியதும் 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் ஜெபித்து வந்தால் உங்களுடைய பாவங்கள் தொலைந்து நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்' என்று சொன்னார். இவ்வாறு ஊர் மக்களுக்கு நல்வழி காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு இடமளித்த கோவில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f8d12dc-52de-4fd3-9942-97a6ea7cab2c/24-674d5c52679c0.webp' /></p><p>
</p><h2>கதை ஒன்று
</h2><h3>புரூரவன் கங்கை கொணர்ந்த கதை</h3><p>
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் கோவிலில் புதன் பகவானின் மகனான புருரவச் சக்கரவர்த்தி பற்றிய கதை ஒன்று உண்டு புருறவன் புதன் மற்றும் இலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவன் இவன் கே சி என்ற அசுரனிடம் சிக்கி இருந்த ஊர்வசியை மீட்டான் ஊர்வசியுடன் இல்லறம் நடத்தி ஆய்வு என்ற மகனை பெற்றெடுத்தான் அதன் பின்பு ஊர்வசி இவனை பிரிந்து இந்திரலோகம் சென்றதால் இவன் மனம் வெறுத்து துறவியாக வாழ்ந்தான் ஊர்வசி புருஉறவு சக்கரவர்த்தி பற்றி நாட்டுப்புறக் கதைகள் வில்லுப்பாட்டு போன்றவை தமிழ்நாட்டில் நிறைய உண்டு . </p><p>அக்கறைகளில் ஊர்வசிக்கும் பரூர் அவளுக்கும் ஒன்பது குழந்தைகள் பிறக்கின்றன அவற்றில் எட்டு குழந்தைகளை விலங்குகள் தின்று விடுகின்றன மிஞ்சி இருக்கும் ஒரே குழந்தையின் வம்சத்தில் வந்தவர்கள் தான் பாண்டவர்களும் கௌரவர்களும் இவன் பிரிந்து சென்ற தன் மனைவியை மீண்டும் பிரிந்து சென்ற தன் மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று தவமிருந்து நோன்பு நோற்றான் என்ற நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டில் இடம் பெற்று இருக்கின்றன அவ்வாறு அவன் தவம் இருந்த இடங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர் ஆகும்.&nbsp;&nbsp;</p><p></p><p>புரூரவன் திருக்கோஷ்டியூரில் தங்கி இருந்து இக்கோவிலில் பல திருப்பணிகளைச் செய்தான். அவ்வாறு திருப்பணிகள் செய்து கொண்டிருக்கும் காலத்தில் மகா மகம் வந்தது. மகா மகத்தன்று கங்கையில் நீராடுவதே தனிச் சிறப்பு. ஆனால் அவன் இங்கிருந்து கங்கைக்குச் செல்ல இயலாததால் பெருமாளிடம் முறையிட்டான். அப்போது வடகிழக்கு மூலையான ஈசானியத்தில் திடீரென நீரூற்று பொங்கியது. அவ்வாறு பொங்கி வந்த கங்கையில் பெருமாள் காட்சியளித்தார். </p><p>தான் நீராடுவதற்காக கங்கை இங்கு வந்துவிட்டால் என்று மகிழ்ந்து புரூரவச் சக்கரவர்த்தி அந் நன்னாளில் புனித நீரில் குளித்துப் பெருமாளை வழிபட்டான். அந்த ஊற்று கோயில் தீர்த்தமாக இன்றும் விளங்குகிறது.</p><p>தீர்த்தத்தைச் சுற்றிலும் உள்ள அழகான படித்துறையில் நேர்த்திக்கடன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. பிள்ளை வரம் வேண்டுவோர் அல்லது திருமணம் நடக்க வேண்டும் என்ற நேர்ச்சை செய்பவர்கள் ஆறு விளக்குகளை கொண்டு வந்து பட்டரிடம் கொடுக்க வேண்டும். அவர் மூன்றை மட்டும் அவர்களிடம் திருப்பிக் கொடுப்பார். அந்த மூன்று விளக்கை பத்திரமாகக் கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து தினமும் ஏற்றி வர வேண்டும். தங்களுடைய நேர்ச்சை நிறைவேறியதும் அந்த மூன்று விளக்குகளை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போய்க் கூடுதலாக மூன்று விளக்குகள் வாங்கி படிக்கட்டில் ஏற்றி வர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/655099ab-9d7d-4745-b3ac-1c79c430ab91/24-674d5c52e0c00.webp' />&nbsp; &nbsp;</p><p>இவர்கள் ஏற்றிய ஆறு விளக்குகள் அணைந்ததும் அணைந்த பழைய விளக்குகளில் மூன்றை புதிதாக நேர்ச்சைக்கு வருபவர்கள்
எடுத்துக் கொண்டு தன் வீட்டில் தினமும் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவர். இவ்வாறு மகா மகத்தன்று இக்கோவில் தீர்த்தத்தின் படித்துறைகள் முழுக்க விளக்குகளாக இருப்பதைப் பார்க்கலாம். </p><p>மகாமகத்தன்றுஅதிகாலை முதல் இரவு 10, 11 மணி வரை அன்றைக்குப் பக்தர்கள் படிக்கட்டில் விளக்குகளை ஏற்றி வைப்பதைக் காண முடியும்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கதை இரண்டு</span></h2><h3> 
நரசிம்மரின் மந்திராலோசனை</h3><p>

இரண்யகசிபு ஹரி என்ற பெயரை உச்சரிக்கக் கூடாது என்று தன் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டான். விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனுக்கு பல கொடுமைகளைச் செய்தான். இவ்ற்றைக் கண்டு பொறுக்காமல் அவனை வதம் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் நரசிம்மர் இத்தலத்திற்கு வந்து தேவர்களை அழைத்து அவர்களோடு ஆலோசித்தார். அதனால் அவரது சிற்பம் விமானத்தில் இடம் பெற்றுள்ளது. 
&nbsp; &nbsp;</p><h2>கதை 3 </h2><h3>
இந்திரன் வணங்கிய மூர்த்தம்</h3><p></p><p>

இந்திரன் தான் தேவலோகத்தில் வைத்து பூஜித்த சௌமிய நாராயணத் திருமேனியை கதம்ப மகரிஷிக்கு கொடுத்து அவரை இத் திருத்தலத்தில் இருந்து இறைவனை நோக்கித் தவம் செய்யும்படி கூறினான். </p><p>இந்திரனின் வழிகாட்டுதலின்படி இங்குத் தவம் செய்து கொண்டிருந்த கதம்பமுனிக்குத் திருமால் தனது. நின்ற கோலம், நடந்த கோலம், இருந்த கோலம், அமர்ந்த காலம் என்று நான்கு கோலத்தையும் காட்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்நான்கு கோலங்களில் இங்கே மற்ற பக்தர்களின் குறைதீர்க்க பெருமாள் எழுந்தருளியுள்ளார்.&nbsp;</p><h2>விழாக்கள்
</h2><p>எல்லா வைணவக் கோவில்களில் நடப்பது போலவே இங்கும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தாயாருக்குரிய நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாசி மகம் சௌமிய நாராயணருக்கு தனிச்சிறப்புடைய நாள் என்பதனால் மாசி மகத் திருவிழா பக்தர்களின் பேராதரவோடு கோலாகலமாக நடைபெறும். </p><p>புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து பெருமாளைச் சேவித்து திரும்புவர். அப்போது திருமஞ்சனம் நடைபெறும் சர்க்கரை பொங்கல் சிறப்பு தளிகையாக இறைவனுக்குப் படைக்கப்பட்டு பிரசாதமாகவும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு உலகக்ஷேமத்துக்காக சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இணைந்து கொள்ளுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-17T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாதம் 12 ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aadi-month-12-rasi-palangal-1784292301"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aadi-month-12-rasi-palangal-1784292301</id>
            <summary type="text">மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவே இருக்கப்போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 
ரிஷபம்:
ரிஷ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகவே இருக்கப்போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். </p><h3>
ரிஷபம்:
</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுடைய உறவுகள் மேம்படும். இருப்பினும் பயணங்களில் எச்சரிக்க வேண்டும்.
</p><h3>மிதுனம்:
</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.</p><p></p><p> </p><h3>
கடகம்:
</h3><p>இவர்களுக்கு இந்த காலகட்டம் உடல் நலம் மற்றும் குடும்ப விஷயங்களை சற்று கவனத்தை செலுத்த வேண்டும். கோபம் அகங்காரத்தை தவிர்ப்பது நல்லது.
</p><h3>சிம்மம்:</h3><p>
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலகட்டம். இருப்பினும் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படலாம்.
</p><h3>கன்னி:
</h3><p>இவர்களுக்கு இந்த காலகட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் வரப்போகிறது. பொருளாதாரத்தில் மிகச்சிறந்து விளங்குவீர்கள். வேலையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.</p><h3> 
துலாம்:</h3><p>
இவர்களுக்கு இந்த காலகட்டம் குழந்தைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேர போகிறது. குருபகவானால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் காலமாகும். </p><h3>
விருச்சிகம்:
</h3><p>தொழில் தொடர்பாக நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த மாதம் முடிந்தவரை இந்த வேலையிலும் ரிஸ்க் எடுத்து செய்வதை தவிர்ப்பது நல்லது.</p><h3>
தனுசு:
</h3><p>வேலை ரீதியாக முடிந்தவரை நீங்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தள்ளிப் போடுவது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.</p><p></p><p> </p><h3> 
மகரம்:
</h3><p>இவர்களுக்கு இந்த காலம் திருமண வாழ்க்கை தொடர்பான சவால்களை கொடுக்கலாம். உடல் நலம் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.</p><h3> 
கும்பம்:</h3><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் மிகவும் அனுகூலமான நன்மைகளை கொடுக்கப்போகிறது. அரசு வழியாக நன்மைகளை பெறப்போகிறீர்கள்.</p><h3> 
மீனம்:
</h3><p>குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் சற்று கவனமாக இருப்பது அவசியம்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T14:00:15+00:00</updated>
        </entry>
    </feed>
