<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-18T15:59:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன்(19-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-19-2026-sunday-1784377055"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-rasi-palan-july-19-2026-sunday-1784377055</id>
            <summary type="text">மேஷம்: 

இவர்களுக்கு இன்று தேவை இல்லாத மன குழப்பங்கள் வரலாம். வழக்கு தொடர்பாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். பண பற்றாக்குறை விலகும். மதியம் நற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்: </h3><p>

இவர்களுக்கு இன்று தேவை இல்லாத மன குழப்பங்கள் வரலாம். வழக்கு தொடர்பாக முக்கியமான நபர்களை சந்திப்பீர்கள். பண பற்றாக்குறை விலகும். மதியம் நற்செய்தி வந்து சேரும். </p><h3>

ரிஷபம்: </h3><p> 

இன்று உங்கள் வெளிவட்டாரம் விரிவடையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள். </p><h3>

மிதுனம்:
</h3><p> காலை முதல் திருமண வாழ்க்கை தொடர்பான மன குழப்பங்கள் ஏற்படலாம். தாயின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வேலைக்காக செய்யும் இடம் மாற்றும் சாதகமாக அமையும்.</p><p></p><p>
</p><h3> கடகம்:</h3><p>
 இன்று நண்பர்களை பற்றி புரிதல் உண்டாகும். யாரிடமும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாதீர்கள். வாழ்க்கை துணை உங்களுடைய பேச்சை கேட்டு நடப்பார்கள்.</p><h3>
 சிம்மம்:
</h3><p> இன்று ரியல் எஸ்டேட் செய்பவர்கள் தேவையில்லாத ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம். முடிந்தவரை எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஆலோசனை செய்வது அவசியம்.
</p><h3> கன்னி:
</h3><p> இன்று மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை வரலாம். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று பொறுமையாக முடிவெடுப்பது அவசியம்.</p><h3>
 துலாம்:</h3><p>
 உங்கள் வீடுகளில் உங்களைப் பற்றிய மதிப்பு உயரும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p>யாருடைய வாழ்க்கையை பற்றியும் நீங்கள் விமர்சனம் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நாள்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> இன்று பிள்ளைகள் வாழ்க்கையின் மீது உங்களுக்கு அதீத கவனமும் அக்கறையும் உண்டாகும். வாழ்க்கை துணையின் வீட்டாரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை வைத்துக் கொள்ள வேண்டாம்.
</p><h3> மகரம்:
</h3><p> இன்று காலை முதல் மணம் சற்று விரக்தியான நிலையில் காணப்படும். சொந்தங்களிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.</p><h3>
 கும்பம்:
</h3><p> வேலைக்காக ஒரு சிலர் திடீர் வெளியூர் செல்ல நேரலாம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கைகூடி வரும்.
</p><h3> மீனம்:
</h3><p> இன்று உங்களுக்கு வாழ்க்கையை பற்றிய ஒரு புரிதல் உண்டாகும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சினை உள்ளது. ஆன்மீக பயணங்களில் கலந்து கொள்வீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்தரவு பெட்டி உள்ள சிவன்மலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/sivanmalai-murugan-temple-in-tamil-1733287682"></link>
            <id>https://ibcbakthi.com/article/sivanmalai-murugan-temple-in-tamil-1733287682</id>
            <summary type="text">&amp;nbsp;அருணகிரிநாதரின் பாடல் பெற்ற சிவன்மலை முருகன் கோவில்
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது. 
 இங்கு சிவவாக்கியர் தவமிருந்து மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அருணகிரிநாதரின் பாடல் பெற்ற சிவன்மலை முருகன் கோவில்
திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது. 
 இங்கு சிவவாக்கியர் தவமிருந்து முருகன் சிலையை செய்து வைத்து வழிபட்டார். பின்பு சுரங்கப்பாதை வழியாக பழனிக்குச் சென்று அங்கு உள்ள முருகனை வழிபட்டார். </p><p>சிவன்மலையின் மூலவர் வள்ளி மணாளனாகிய ஸ்ரீ முருகன் ஆவார். 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கந்தபுராணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பின்பே தெய்வானை திருமணம் இங்கே பிரபலம் ஆயிற்று. அதன் பின்பு கட்டப்பட்ட கோயில்களிலும் முருகனுக்கு எழுப்பிய சந்நிதிகளிலும் வள்ளி தெய்வானை சமேதராகிய கந்தன் என்ற சுப்பிரமணியர் இடம்பெற்றார்.&nbsp;</p><h3>தமிழ்க் காதல் தலம்</h3><p>
தமிழ்ச் சமய வரலாற்றில் முருகனுக்கு ஒரே ஒரு மனைவி வள்ளி மட்டுமே உண்டு. முருகன் மலைக் கடவுள். வள்ளியும் மலையில் பிறந்தவள். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொல்காப்பியம் காதல் களிறு தரு புணர்ச்சி, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி என்று மூன்று வழிகளில் காதல் தோன்றும் என வகைப்படுத்துகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/badb1d63-45fa-4b71-91d6-00ce93729ddd/24-674fdf03b215e.webp' /></p><h3>தொல்காப்பியத்தின் காதல் வகைகள்</h3><p>
மலைக் காட்டில் கன்னி.பெண்கள்
யானையைக் கண்டு மிரண்டு பயந்து ஓடும் போது யாரேனும் ஓர் இளைஞன் வந்து காப்பாற்றினால் அவனது வீரத்தைக் கண்டு வியந்து காதலிப்பது முதல் வகை. இதுவே வள்ளி திருமணத்திலும் நடந்தது. </p><p>அடுத்தது அரிய பூவைக் கண்டு ஒருத்தி ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயற்சி செய்யும்போது அவ்வழியே வந்த ஒரு இளைஞன் அவளுக்காக அந்தப் பூவை பறித்துத் தந்தால் அவன் மீது அவளுக்கு காதல் தோன்றலாம். இது பூத்தது புணர்ச்சி ஆகும்.</p><p>அடுத்தது, ஒரு இளம்பெண் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது அங்கு துணிச்சல் உள்ள ஓர் இளைஞன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஆற்றில் குதித்து அப்பெண்ணைக் காப்பாற்றினால் அவன் வீரத்தைக் கண்டு அவள் காதல் கொள்வாள். இது புனல் தரு புணர்ச்சியாகும். மதுரை வீரன் பொம்மி காதல் கதை இவ்வகையைச் சார்ந்தது.&nbsp; &nbsp;</p><p></p><h3>வள்ளி திருமணம்
</h3><p>பண்டையத் தமிழ் இலக்கண முறைப்படி நடந்த காதல் நிகழ்வாகும். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளியை முருகன் காப்பாற்றியதால் தோன்றிய காதல் கதை. இம்மலையில் வள்ளியும் முருகனும் கோவில் கொண்டுள்ளனர். </p><p> எனவே தமிழ்ச் சமய வரலாற்றில் மிகவும் பழைய கோவில் ஆகும் எனவே இக்கோவிலில் முதல் பூசை முருகனுக்கே செய்யப்படுகின்றது. இங்கு முருகனே முழுமுதல் வழிபடு கடவுள். மற்ற கோவில்களில் விநாயகருக்கு முதல் பூசை நடைபெறும். இக்கோவிலில் சனீஸ்வரனுக்கும் காலபைரவருக்கு தனி சன்னதிகள் உண்டு. நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடி உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09de4a5-5c6a-4360-aaf8-1b3a6ba1e78e/24-674fdf043a17e.webp' />&nbsp;</p><h3>புதிய தெய்வ சந்நிதிகள்
</h3><p>சிவன் மலை முருகன் கோவிலில் சைவ சயப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் புதிய சிவாலயம் நிர்மானிக்கப்பட்டது. சிவன் கோயிலுக்குரிய அனைத்து அம்ஸங்களும் இக்கோவிலில் இடம்பெற்றன. தெற்கு பிரகாரத்தில் சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.</p><p> கன்னி மூலையில் விநாயகர் குபேர மூலையில் தண்டபாணி சன்னிதிகளும் உள்ளன. வாயிலில் சுமுகர், சதேகர் என்ற துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. . தல விருட்சமாக தொரட்டி மரம் உள்ளது</p><p></p><h3>கதை 1
</h3><p>கி.மு.3ஆம் நூற்றாண்டில் பௌத்தர்கள் இம்மலையில் தங்கள் மடாலயத்தை அமைத்து மருத்துவ சேவை செய்தனர். கௌதம புத்தர் வணங்கப்பட்டதற்கான அடையாளமாக இங்கு கௌதமரிஷி முசுகுந்த சக்கரவர்த்தியின் நோய் தீர்த்த கதை வரலாறு தலபுராணக் கதையாக சொல்லப்படுகிறது</p><h3>சிலப்பதிகாரத்தில் முசுகுந்தன் </h3><p>
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம் கொண்டவன் என்பது பொருள் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது சிலப்பதிகாரத்தில் 'அமரனில் பெற்று தமர் தந்து' என்ற வரி இவன் அமரலோகத்துத் தலைவனாகிய இந்திரனிடமிருந்து நாளங்காடிப் பூதத்தை பெற்று தன் உறவினர்களான பூம்புகார் சோழனுக்குக் கொடுத்தான் என்பதை உணர்த்துகின்றது. சோழர்கள் முசுகுந்தனோடு தொடர்புடையவர்கள் நாளங்காடி பூதம் என்பது பகலில் திறந்திருக்கும் சந்தை தெருவில் சந்தை கடையில் இருக்கும் பூத சிலை ஆகும்&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c709f33d-4a19-4a2b-901a-602083fd447e/24-674fdf04b7bdc.webp' /></p><h3>சப்தவிடங்கத் தலங்கள் </h3><p>
முசுகுந்தன் தேவலோகத்தில் இந்திரன் பூசித்து வந்த 7 லிங்கங்களைப் பெற்று அவற்றை திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காராயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு இடங்களில் கோயில் கொள்ளச் செய்தான். </p><p>அந்த ஏழு இடங்களும் சப்த விடங்க தலங்கள் என்று பெயர் பெற்றன 
என்று திருவாரூர் நான்மணிமாலை குறிப்பிடுகின்றது. எனவே புதிதாக சிவாலயம் தோற்றுவித்த ஊர்களில் முசுகுந்தன் கதையும் சேர்ந்துகொண்டது.&nbsp;</p><h3>முசுவின் சிவ பூசை</h3><p>
முசுகுந்தன் முற்பிறவியில் குரங்காக இருந்தான். அந்த குரங்கு ஒரு நாள் இரவு ஒரு மரத்தின் மீது அமர்ந்தபடி இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது. கீழே தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் மீது மரத்தின் இலைகள் விழுந்து மூடிவிட்டன. </p><p>கண்விழித்துப் பார்த்த சிவபெருமான் தன்னை வில்வ இலைகளால் சிவராத்திரி அன்று விடிய விடிய அர்ச்சித்து மூடியவர் யார் என்று அண்ணாந்து பார்த்தார். அங்கு ஒரு குரங்கு இருந்தது. அவனது குரங்குப் பிறவியை மாற்றி மனிதனாக்கினார். </p><p> ஆனால் மனிதப் பிறவி சூதுவாது நிறைந்தது என்பதால் தான் குரங்கு முகத்துடனேயே இருக்க விரும்புகிறேன் என்று முசுமுந்தன் வேண்டினான். குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு சூரிய குலத்தில் உதித்த சோழச் சக்கரவர்த்தியாக புதுப்பிறவி எடுத்தான். அவன் திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.&nbsp;</p><p></p><h3>கௌதமரும் முசுகுந்தனும்</h3><p> 
முசுகுந்தச் சோழன்ன் சுர நோயால் அவதிப்பட்டான். இந்நோயைத் நிற்கும்படி கௌதம ரிஷியிடம் தீர்க்கும் படி வேண்டினான். அவர் 'சிவன் மலைக்குப் போ. அங்கு உன் நோய் தீரும்' என்றார் . இதுவும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
</p><p>இக்கதை இம்மலையில் பௌத்தர்களின் மருத்துவ சேவை நடந்ததை உணர்த்துகின்றது. கௌதம ரிஷி என்பது கௌதம புத்தர் நிலையை அடைந்த அவலோகதீஸ்வரரைக் குறிக்கின்றது. முசுகுந்தச் சோழன் இம்மலைக்கு வந்து நோய் தீர்ந்து நலம் அடைந்தான்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f75141-7ccf-4760-a596-7656e8951c3c/24-674fdf0538541.webp' /></p><h3>மிளகு ரசம் மருந்து
</h3><p>பௌத்தர்கள் காலத்துக்குப் பின் இம்மலையில் சிவாலயம் வந்தபோது மூலவருக்கு சுரநாதர் என்றும் அம்மனுக்கு சுரலோக நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டது. கைலாசநாதர் என்றும் ஞானாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.</p><p>இன்றைக்கும் காய்ச்சலால் வாடுகின்றவர்கள் மிளகு ரசம் வைத்து இங்கு வந்து பூசாரியிடம் கொடுத்து வாங்கி அருந்தினால் அவர்களுக்கு சுரம் நீங்கும். பொதுவாக சுரநாதருக்கு சந்தனக் காப்பு நேர்ச்சை செய்து கொண்டால் சுரம் நீங்கிவிடும்</p><h3>எட்டு அம்மை</h3><p>
சிவன் மலை அருகே உள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வ வழிபாடு சிறப்பாக இருந்தது. எட்டு ஊர்களின் அம்மனை எட்டு அம்மை என்றும் வடமொழியில் அஷ்ட மாத்ரிகா என்றும் சிவன் மலை குறவஞ்சி தெரிவிக்கின்றது. எட்டு துர்கை என்று அழைக்கப்படுகின்றனர். </p><p>
அஷ்ட மாத்ரிகா என்ற எட்டு பேங்ளுடன் பார்வதியையும் சேர்த்து நவகன்னியருக்கு சிவன் தரிசனம் தந்தார். அஷ்டமாத்திரிகா பற்றிய தகவல் தேவி பாகவதம், லிங்க புராணம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. சப்த கன்னியருடன் மகாலட்சுமி / ருத்ராணி/ நரசிம்மி/ மகாலட்சுமி/ ஆஞ்நேயிகா ஆகியோரில் ஏதேனும் ஒருவரை சேர்த்து அஷ்ட மாத்ரிகா என்று அழைக்கின்றனர்.&nbsp;</p><p></p><h3>படிகளும் பாதையும்</h3><p>
சிவன் மலை மேல் இருக்கும் கோவிலுக்குச் செல்ல படிகளும் உண்டு. வாகனங்கள் செல்கின்ற பாதையும் உண்டு. படிகளில் ஏறி செல்பவர்கள் இளைப்பாறிச் செல்ல வழியெங்கும் கல் மண்டபங்கள் உண்டு.</p><p> அமனலிங்கேஸ்வரர் கோவிலின் முன் வாயிலில் இருப்பது போல சிவன்மலை முருகன் கோவில் வாயிலிலும் தீபத் தூண் உண்டு. இத் தூணின் தண்டு பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகரும் தெற்கில் சூலாயுதமும் வடக்கில் மயிலும் மேற்கே தண்டபாணி சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b26a22f-050d-4b09-9924-25385cbb6f2e/24-674fdf05b20da.webp' /></p><h3>கதை 2<br><h3>
சிவன் மலையின் தோற்றம் </h3></h3><p>
சிவன் திரிபுரத்தை அழிக்க மேரு மலையை வில்லாக வளைத்த போது மேருமலையிலிருந்து சிதறிய துண்டு தான் சிவன்மலை என்று நம்பப்படுகின்றது. இதே கதை இப்பகுதியில் உள்ள மற்ற மலைகளில் உள்ள மற்ற மலைகளுக்கும் சொல்லப்படுகிறது.</p><h3>உத்தரவுப் பெட்டி</h3><p> 
மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் சிவன்மலையில் காணப்படும் உத்தரவு பெட்டியாகும். இங்கு யாரேனும் ஒருவருக்கு கனவில் வந்து ஒரு பொருளை உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கும்படி இறைவன் கூறுவார்.</p><p> மறுநாள் அவர் கோவிலுக்கு வந்து தகவலைத் தெரிவித்ததும் கோவிலில் அவர் சொல்வது உண்மையா என்று பூ கட்டி போட்டு பார்ப்பர். உண்மை என்று தெரிந்ததும் அவர் சொன்ன பொருளை கண்ணாடி பெட்டியில் வைப்பதுண்டு. அந்தப் பொருளின் மகத்துவம் அந்த ஆண்டு அதிகரிக்கும். சேலை வைத்தால் சேலை விலை கூடும். அடுத்த தகவல் வரும் வரை அதே பொருள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும்.&nbsp;</p><p></p><h3>மறைந்து வாழும் சித்தர்கள்
</h3><p>சிவன் மலையில் ஏராளமான சித்தர்கள் இருப்பதாகவும் அவர்கள் உண்மையான பக்தர்களுக்கு மட்டுமே கண்ணில் தென்படுவர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. இதே நம்பிக்கை திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற மலைகளிலும் உண்டு. </p><p>சித்தர்கள் விலங்கு, பறவை ரூபமாக மக்கள் கண்களில் தென்படுவர் என்ரம் கூறுவர். இந் நம்பிக்கைக்குக் காரணம் சித்தர்கள் (துறவிகள்) யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்வதாகும். இவர்கள் மறைந்து வாழ்ந்ததற்கு ஓர் காரணம் உண்டு.</p><p> வாதங்களில் தோற்ற பௌத்தத் துறவிகளை நாக்கை வெட்டியும் ஊரை விட்டு விரட்டியும் கடுமையான தண்டனைகள் கொடுத்ததனால் பல பௌத்த துறவிகள் மேற்கு மலைத்தொடர்களில் சென்று மறைந்து வாழ்ந்தனர்.</p><p> இவர்கள் பொது மக்களைக் காண அஞ்சி மேலே மலைக்குகைகளில் ரசவாதம், மருத்துவம், வானவியல் சாஸ்திர நூல்களைப் பரிபாஷையில் எழுதினர். இவர்களில் சிவவாக்கியர் இச் சிவன் மலையிலும் போகர் பழனி மலையில் முருகன் சிலையைச் செய்து வணங்கியதாக வரலாறுகள் உள்ளன. எனவே மலைகளில் இவர்களைப் பார்த்தால் புண்ணியம் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee3057e-fd8a-453e-a347-86cd71ac3ce7/24-674fdf0634920.webp' /></p><h3>காசி தீர்த்தத்தில் வரலாறு
</h3><p>சிவன்மலையில் உள்ள தீர்த்தத்தின் பெயர் காசி தீர்த்தம். முருகனின் பக்தையான ஒரு பெண் காசிக்கு போய்க் கருமத்தை தொலைக்க வேண்டும். ஆனால் அங்கு போக வசதி இல்லையே என்று வருந்தி வாடி முருகனிடம் வேண்டிய போது, முருகன் அருளால் இங்கு ஒரு ஊற்று கிளம்பியது.</p><p> அந்த ஊற்று நீர் காசி நீர் என்று நம்பப்பட்டதால் இத்தீர்த்தம் காசி தீர்த்தம் ஆயிற்று. அவள் தீர்த்தத்தில் நீராடி காசிக்குப் போன புண்ணியத்தைப் பெற்றாள்.</p><h3>வழிபாட்டின் பலன்</h3><p> 
சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலுக்குத் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் திடீர் இழப்பை சந்தித்தவர்கள், தீராத நோயினால் தாக்கப்பட்டவர்கள் வந்து வணங்குகின்றனர் வழிபாட்டுக்குப் பின்பு அவர்களின் துன்பங்கள் தீர்க்கப்பெற்று நல்ல நிலையை அடைகின்றனர். </p><p>திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெறுகின்றது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கின்றது. தொழிலில் நஷ்டத்தை சந்தித்தவர்களுக்குத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கின்றது. </p><p>தீராத நோயையும் தீர்க்கும் மலையாக சிவன் மலை விளங்குகின்றது. இக்கோவில் முருகன் கோயில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இடைப்படட காலத்தில் இங்கு பௌத்த துறவிகளில் மடாலயம் இருந்து மருத்துவ சேவைகள் செய்திருக்கும்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாதகத்தில் 2ஆம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருக்கவே கூடாதாம்.. என்ன தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-2-house-in-astrology-reveals-about-life-1784377567"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-2-house-in-astrology-reveals-about-life-1784377567</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் இரண்டாம் வீடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரண்டாம் வீடு தான் ஒருடைய செல்வம், குடும்பம், பேச்சு, உணவு, கண்கள் முகம் ஆகிவற்றை கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் இரண்டாம் வீடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரண்டாம் வீடு தான் ஒருடைய செல்வம், குடும்பம், பேச்சு, உணவு, கண்கள் முகம் ஆகிவற்றை குறிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.</p><p> அந்த வகையில், ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் இந்த கிரகம் மட்டும் இருந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு உண்டாகுமாம். அதை பற்றி பார்ப்போம்.
 இரண்டாம் வீட்டில் ராகு பகவான் இருந்தால் அவர்களுக்கு பணபிரச்னை, குடும்பத்தில் குழப்பம் தவறான பழக்கவழக்கங்கள் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் வரக்கூடும். </p><p>அதேபோல் கேது பகவான் இருந்தால் குடும்பத்தை விட்டு விலகி இருப்பது பணத்தில் நிலையற்ற தன்மை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5d85ae-82ee-4b70-be61-8e8af2d3f444/26-6a5b70e5b2571.webp' /></p><p></p><p>மேலும், இவர்கள் குறைவாக பேசி அதை தவறாக பிறர் புரிந்து கொள்ளக்கூடிய நிலை வரலாம். சனி இரண்டாம் வீட்டில் இருக்க இவர்களுக்கு பணம் சேர்வதில் சில தாமதம் வரலாம். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். </p><p>பேச்சில் கடினத்தன்மை இருக்கும். அதுவே, சனி பலமாக இருந்தால் மெதுவாக நல்ல செல்வத்தையும் கொடுக்கலாம்.</p><p> செவ்வாய் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற பொழுது கோபமான பேச்சு குடும்பத்தில் அடிக்கடி தகராறு செலவுகள் அவசர முடிவுகள் எடுக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள், இரண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் அகங்காரம் கலந்த பேச்சு தந்தை அல்லது குடும்பத்துடன் கருத்து வேறுபாடு கண், முகம் தொடர்பான சிறிய பிரச்சனைகள் வரலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T14:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-festivals-in-aadi-month-we-shouldnt-miss-1784377333"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-festivals-in-aadi-month-we-shouldnt-miss-1784377333</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷமான தினம் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். ஆடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷமான தினம் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். </p><h3>ஆடிப்பெருக்கு: (ஆடி 18) </h3><p>
தமிழ்நாட்டில் காவிரி கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூடி ஆடிப்பெருக்கு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதாவது நீர் வளத்தை போற்றும் விதமாகவும் விவசாயம் செழிப்பாக வளரவும் குடும்பத்தினுடைய நல் வாழ்க்கைப் பெருகவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a511b5-0178-40cf-b2bc-c674a4473fa4/26-6a5b6ff75ba4c.webp' /></p><p></p><h3>
 ஆடிப்பூரம்:</h3><p>
 ஆடிப்பூரம் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அம்மன் கோவில்களில் வளையல் சாற்றுதல், கூழ் படைத்தல் போன்ற வழிபாடுகள் நடைபெறும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்கு மிக உகந்த நாள். இராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொள்வார்கள்.</p><p>
</p><h3> ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய்:</h3><p>
 ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் மிகச் சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த நாளில் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் மிக உகந்ததாக இருக்கிறது. மேலும், மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff82b40-d1ef-4ff4-b35a-19e6094e7fd6/26-6a5b6ff8162d1.webp' /></p><p></p><h3>
 வரலட்சுமி விரதம்:</h3><p>
 ஆடி மாதத்தில் பெண்கள் தவறக்கூடாத முக்கியமான நாட்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. சுமங்கலி பெண்கள் தங்களுடைய கணவர்களுடைய ஆரோக்கியம் பெருகவும் குடும்பத்தினுடைய மகிழ்ச்சி நிலைக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் இந்த வருடத்தை கடைபிடிப்பார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/madurakaliamman-temple-thottiyam-in-tamil-1733207175"></link>
            <id>https://ibcbakthi.com/article/madurakaliamman-temple-thottiyam-in-tamil-1733207175</id>
            <summary type="text">மதுர காளியம்மன் கோவில் என்ற பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் உள்ளது. மதுர காளியம்மன் வடக்கு நோக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுர காளியம்மன் கோவில் என்ற பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் உள்ளது. மதுர காளியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இதற்கு வடக்காக சோனை முத்தையா கோவில் உள்ளது.</p><p> சோனை முத்தையா மதுர காளியம்மனுக்கும் இங்கு ஏற்கனவே கோயில் கொண்டிருந்த செல்லியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். அகோர வீரபத்திரர் சிலையும் இங்கு காணப்படுகின்றது. அகோர வீரபத்திரரும் சிவனின் அம்சமாக காவல் தெய்வமாக இருக்கின்றார்.</p><p>சோனை முத்தையாவும் செல்லியம்மனும் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். மதுர காளி கண்ணகி என்று நம்பப்படுகின்றது. அகோர வீரபத்திரர் சேர்க்கை காலத்தால் பிந்தியது. மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த கண்ணகி சிறுவாச்சூரில் மதுர காளியாக அமர்ந்து விட்டாள் என்று கதைகள் சொல்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a6c16b1-3862-4a5d-ba0d-54115f93692a/24-674ea488b389a.webp' /></p><h3>கண்ணகி செல்வி சேர்க்கை</h3><p>
சிறுவாச்சூரில் ஆதியில் இருந்த தனிப்பெண் தெய்வம் செல்லியம்மன். ஊர்களில் வடக்கு வாய் செல்வி என்ற பெயரில் வடக்கு நோக்கிய கன்னித் தெய்வ வழிபாடு ஆதியில் இருந்து வந்தது. கண்ணகி வந்த பின்பு செல்வியையும் கண்ணகியையும் பல ஊர்களில் இணைத்து ஒரே தெய்வமாக்கினர்.</p><p> இதை ஆங்கில சம்யவியல் அறிஞர்கள் synchronisation என்பர். ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே மலை குகைகளில் வைத்து வணங்கிய ஆக்னேஸ், மடோனா, பியாட்ரிஸ் போன்ற தெய்வங்களை ஒரே கன்னி மேரி என்று ஒரே தெய்வமாகினர்.</p><p></p><p>

மதுரையில் இருக்கும் கண்ணகியின் கோவிலுக்கு தற்போதைய பெயர் செல்லத்தம்மன் கோயில். வடக்கு வாய்ச் செல்வி என்று வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வத்தோடு கண்ணகி வழிபாடும் இங்கு இணைந்துள்ளது. </p><p>செல்வி அம்மன், செல்லியம்மன், செல்லாயி அம்மன்,, செல்லத்தம்மன் என்று பல பெயர்களில் தமிழகமெங்கும் கன்னித்த தெய்வ வழிபாடு இருந்துள்ளது. அவற்றில் சில கண்ணகி வழிபாட்டுடன் இணைந்தன.</p><h3>கண்ணகி வழிபாடு
</h3><p> மதுரையில் மேற்கு நோக்கி கோபமாக புறப்பட்ட கண்ணகி இங்கு வந்ததும் தெய்வம் ஆனாள். இக்கதையைப் போலவே கேரளாவில் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலைக் கண்ணகி வந்து தங்கிய கோவில் என்பர்.</p><p> ஏற்கனவே இருந்த பெண் தெய்வ வழிபாட்டு கோவில்களில் காலத்திற்கு ஏற்ப கதைகளை மாற்றி பழைய பெயரில் புதிய தெய்வங்களை இணைத்து நவீனப்படுத்தும் முறைகளைக் காணலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d76073-1c0e-4358-95a6-716ef49e473e/24-674ea4893d945.webp' /></p><h3>மதுர காளி தெய்வமான கதை
</h3><p>சிறுவச்சூர் கோவிலில் இன்னொரு கதையும் உலவுகின்றது. இங்கு செல்லியம்மன் என்ற தெய்வம் இருந்து வந்தாள் அவளை ஒரு மந்திரவாதி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். மதுரையில் இருந்து வந்த காளியம்மன் செல்லியம்மனிடம் இன்று ஒரு நாள் இங்கு தங்கிப் போகிறேன் என்று இடம் கேட்டாள்.</p><p> ஆனால் செல்லியம்மன் மந்திரவாதிக்குப் பயந்து கொண்டு தன்னை மந்திரவாதியிடமிருந்து காப்பாற்றினால் மதுர காளிக்குத் தங்க இடம் தருவதாகக் கூறினாள். மதுர காளி மந்திரவாதியை அழித்து விட்டாள். செல்லியம்மன் காளியை பார்த்து 'இனி நீயே இங்கு கோயில் கொண்டிரு. </p><p>இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கு' என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் பெரியசாமி மலைக்குச் சென்று விட்டாள். ஒக்கும் முன்பு ' எப்பொழுதும் இந்த கோவில் வழிபாட்டில் எனக்கு தான் முதல் மரியாதை தரவேண்டும்' என்றாள்.</p><p></p><p> </p><p> இவ்வாறு செல்லியம்மன் கூறியதால் சூட தீபாராதனைகள் காட்டும் போது பெரியசாமி மலையை நோக்கி முதலில் அங்கு இருக்கும் செல்லியம்மனுக்கு காட்டிய பிறகுதான் சன்னதிக் கு உள்ளே இருக்கும் மதுர காளிக்கு சூட தீபாராதனை காட்டுகின்றார்கள். </p><p>இக்கதைகள் ஏற்கனவே இருந்தவள் செல்லியம்மன் அங்குப் புதிதாய் வந்து சேர்ந்தவள் மதுர காளி என்னும் கண்ணகி என்ற தகவலை உறுதி செய்கின்ற்ன. தெய்வம் மாற்றத்தை உணர்த்துகின்றன. இதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை என்போம்.
</p><p>
 வெளியில் இருந்து வரும் தெய்வங்கள் ஊருக்குள்ளேயே இருக்கும் தெய்வங்களின் சக்தியை குறைத்துவிட்டு தானே சர்வ சக்தி படைத்த தெய்வமாகத் தங்கி விடுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e571ea-428a-436d-bf02-f88968d9d683/24-674ea489b7a18.webp' />&nbsp;</p><h3>மங்கலதேவிக் கோயில் </h3><p>
கண்ணகிக்கு இலங்கை, தமிழ்நாடு, கேரளா என பல இடங்களிலும் கோவில்கள் உண்டு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மங்கல தேவிக் கோவில் என்ற பெயரில் தனி கோயில் உள்ளது. </p><p>இது தமிழ்நாட்டுக்குள் கேரளாவுக்கும் இடையே எல்லை பகுதியில் உள்ளது. தேனி மாவட்டத்தில் கூடலூர் வனப்பகுதியில் பளியர்கள் அதிகம் வாழும் பளியங்குடி என்னும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. </p><p>இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் திறக்கப்படும். அன்று மட்டும் இக்கோவிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இக்கோவிலைச் சேரன் செங்குட்டுவன் கட்டியதாக சொல்வர். 
மதுரையை எரித்தபின் மேற்கே புறப்பட்டுச் சேர நாட்டுக்கு வந்த கண்ணகி இங்கிருந்த வேங்கை மரத்தடியில் நின்றாள். கோவலன் புஷ்ப விமானத்தில் வந்து அழைத்து சென்றான்</p><p></p><h3>கொடுங்களூர் பகவதி கோயில் </h3><p>
கேரளாவில் கொடுங்கலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடுங்களூர் பகவதி கோயிலில் வணங்கப்படும் பகவதியம்மை கண்ணகியே என்றும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கொடுங்கலூர் அரச குடும்பத்தார் கொடுங்கல்லூர் பகவதியை தமது குலதெய்வமாகக் கருதுகின்றனர்.</p><p> ஆதிசங்கரர் இங்கு 6 ஸ்ரீ சக்கரங்களை நிறுவினார் என்றும் கூறுகின்றனர். இங்கு காளி ரூபத்தில் எட்டுத் கைகளுடன் மஅம்மை கோயில் கொண்டுள்ளாள். இங்குத் தொடக்கத்தில் உயிர்ப் பலி தரப்பட்டது. பின்பு அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டது.</p><p> இத் தெய்வத்திற்கு சிவப்பு சாயம் நனைத்த சிவப்பு துணிகளை மட்டும் உடுத்துகின்றனர். சிறுவாச்சூர் மதுர காளிக்கு தலை முதல் பாதம் வரை குங்குமம் சாத்தப்படுகிறது. ஆக இவ்விரு தெய்வங்களும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63da389b-cb84-4dea-995a-8354305a3ced/24-674ea48a3afa3.webp' /></p><p> </p><p>

திங்கள், வெள்ளி மட்டும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படும். மதுர காளி சிறுவாச்சூர் வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமையும் அவள் அங்கே தங்குவதற்குக் கோவில் கிடைத்த திங்கட்கிழையும் மட்டுமே இவ் ஆலயம் திறந்திருக்கும். </p><p>இவ்விரு நாட்களும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் போய் பெரியசாமி மலையில் தங்கி விடுவாள். மதுரை காளி என்ற பெயரே மதுர காளி என்று இனிமையான ஒரு பெயரராக மாற்றம் பெற்றது என்று இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><h3>பூச்சொரிதல் விழா
</h3><p>மதுர காளியம்மன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் விழா தொடங்கும். அடுத்த செவ்வாய் அன்று காப்பு கட்டு நடைபெறும்.மொத்தம் 13 நாட்கள் திருவிழா நடத்துவார்கள். எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டியதும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து மக்கள் பெரியசாமி கோவில் மலை அடிவாரத்தில் கூடுவார்கள்.</p><p> அங்கு இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உயிர் பலிகள் கொடுக்கப்படும். அது தான் ஆதி கோயில் என்பதால் அங்கேயே மக்கள் செல்கின்றனர். 

மலைக்கோயில் பூஜை முடிந்த மறு நாள் புதன்கிழமை அன்று மதுர காளியம்மன் கோவில் முன் பொங்கல் வைத்து கொண்டாடுவர்.</p><p> வியாழக்கிழமை அன்று மழை பெரியசாமிக்கும் செல்லியம்மனுக்கும் மதுர காளிக்கும் தேர்ப்பவனி நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று மதுர காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் பூச்சொரிதல் விழா நிறைவு பெறும்.
</p><p>
 இது தவிர ஆடி பதினெட்டாம் பெருக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி போன்ற மற்ற விழாக்களும் மற்ற சிவன் கோவிலில் நடைபெறுவது போல இங்கும் நடைபெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ade09-cecb-4269-a463-70400ac09eeb/24-674ea48ab0527.webp' /></p><h3>அமாவாசை &amp;பௌர்ணமி </h3><p>
மதுர காளியம்மன் திருக்கோயில் வாரத்தில் இரண்டு நாட்கள் திறந்து வைத்திருப்பதை போலவே மாதத்தில் இன்னும் இரண்டு நாட்கள் திறந்து வைக்கப்படுகின்றன. அவை அமாவாசையும் பௌர்ணமியும் ஆகும் இவ்விரு நாட்களிலும் பக்தர்கள் மதுரகாளியைத் தரிசனம் செய்யலாம்.&nbsp;</p><h3>நேர்த்திக் கடன்கள்</h3><p> மதுர காளியம்மன் கோவிலில் பெருமளவில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். மாவிளக்குக்குப் பொதுவாக வீட்டில் இருந்தே மா இடித்துக் கொண்டு வருவர். சிலர் இங்கு வந்து அரிசியை ஊறப் போட்டு மாவை இடித்து விளக்கு ஏற்றுகின்றனர். இவர்களுக்காக இங்கு கல் உரல்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h3>
திருமணம் நடக்க, பிள்ளை பிறக்க</h3><p> 
மதுர காளியம்மன் கோவிலில்
திருமணத்தடை குழந்தை பேறின்மை ஆகியவற்றுக்காக காளியை வணங்கினால் புத்திர தோஷம் களத்திர தோஷம் தீரும். </p><p>பொருள் காணாமல் போய்விட்டால் மதுர காளியிடம் வந்து வேண்டிக் கொள்கின்றனர். திடீர் நஷ்டம் ஏற்படும் போது எதிர்பாராத இன்னல்கள் ஏற்படும் போது பலரும் மதுர காளியம்மன் நேரில் தரிசித்து தங்கள் துன்பம் தீர முறையிடுகின்றனர்.</p><h3>பில்லி சூனியம் விலக
</h3><p>மதுர காளியம்மன் கோவிலில் பில்லி சூனியம் ஏவல் போன்ற தீய சக்திகளில் தங்களை காத்துக் கொள்ளவும் பக்தர்கள் ஏராளமாக வந்து வேண்டிக் கொள்கின்றனர். மதுர காளி மந்திரவாதியை தோற்கடித்தவள் என்பதால் மந்திர தந்திரங்களை அவள் அழித்து ஒழிப்பாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காத்து, கருப்பு, கண் திருஷ்டி போன்றவற்றால் துன்புறுவோரும் இங்கு வந்து காளியை வணங்கி தீர்வு காணகின்றனர்</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆகஸ்ட் மாதம் கட்டாயம் ரிஷப ராசியினருக்கு இது நடந்தே தீருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-taurus-astrology-zodiac-prediction-1784374218"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-taurus-astrology-zodiac-prediction-1784374218</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
 ரிஷப ராசிக்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. </p><p>இந்த காலகட்டம் இவர்களுக்கு பதவி உயர்வு, அங்கீகாரம், கௌரவம் ஆகியவை தேடி வரும். இவர்களுக்கு 11 குடைய சனி பகவான் வக்கிரம் பெற்று நற்பலன்களை கொடுக்கப் போகிறார். </p><p>7 குடைய செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையால் அல்லது தொழில் கூட்டாளிகளால் நல்ல லாபம் உண்டாகும்.</p><p></p><p> </p><p>மேலும், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்சமாவதால் ஆரோக்கிய மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்கம் சார்ந்த விஷயங்கள் மற்றும் பங்கு சந்தையில் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம். </p><p>ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம். செவ்வாய் மற்றும் கிருத்திகை நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வதும் நன்மை தரும்.</p><p> இவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரக்கூடிய வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/og5jSPRcPTA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளில் அதிக ஞாபகம் மறதி உள்ள ராசிகள் யார் தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/4-zodiac-sign-who-forgots-everything-easily-1784370410"></link>
            <id>https://ibcbakthi.com/article/4-zodiac-sign-who-forgots-everything-easily-1784370410</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் தான் மனதைகுறிக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அதிக அளவில் ஞாபக மறதி இருக்கும் என்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் தான் மனதைகுறிக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அதிக அளவில் ஞாபக மறதி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><h3>

மீனம்:
</h3><p> இவர்கள் ஒரு பொருளை வைக்கும் இடம் ஒன்றாக இருக்கும் ஆனால் தேடுவது வேறு ஒரு இடமாக இருக்கும். காரணம், இவர்கள் எப்பொழுதும் ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பதால் பல நேரங்களில் இவர்கள் முக்கியமான விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
</p><h3>தனுசு:</h3><p>
 தனுசு ராசியிடம் ஒரு விஷயத்தை சொன்ன நிமிடத்தில் மறக்க கூடியவர்களாக இருக்கிறார். அவர்களிடம் இதை நீ ஞாபகமாக வைத்துக் கொள் என்று ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர்கள் முற்றிலுமாக மறந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0965fe-e9cb-462b-aabc-fa3f5dc5147e/26-6a5b54eb8c5e1.webp' /></p><p></p><h3>
 மிதுனம்:
</h3><p> மிதுன ராசியினர் ஒரு விஷயத்தை கட்டாயம் நாம் மறந்து விடக்கூடாது என்று மனதில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இவர்கள் ஒருநாள் தூங்கி எழுந்ததும் மறுநாள் அதை மறந்து விடுவார்கள். காரணம் இவர்கள் எப்பொழுதும் எதையும் முக்கியத்துவமாக எடுத்துக் கொள்வதில்லை.</p><h3>
 கடகம்:</h3><p>
 கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் ஒரு விஷயத்தை பேசும் பொழுதே அதை மறந்து விடக் கூடிய தன்மை கொண்டவர்கள். அதாவது மிக எளிதாக ஒரு விஷயத்தை மறக்கக் கூடிய தன்மை இந்த கடக ராசியினருக்கு உண்டு. இவர்களால் எதையும் எப்பொழுதும் நிறைய மெனக்கிடல்களோடு செய்ய பிடிப்பதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:27:04+00:00</updated>
        </entry>
    </feed>
