<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-10T16:25:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசி பலன் (11-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-11-2026-saturday-1783687806"></link>
            <id>https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-11-2026-saturday-1783687806</id>
            <summary type="text">1. மேஷம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட காரியம் கைக்கூடி ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>1. மேஷம்:
</h3><p>உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட காரியம் கைக்கூடி வரும். குடும்பத்துடன் வெளியே சென்று மகிழ்வீர்கள்.
</p><h3>2. ரிஷபம்:
</h3><p>பொருளாதாரத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்வீர்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
</p><h3>3. மிதுனம்:</h3><p>
உங்கள் திறமை வெளிப்படும். உறவுகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த குழப்பங்கள் விலகும். மன குழப்பம் வரலாம். அமைதி காப்பது நல்லது.</p><p></p><p>
</p><h3>4. கடகம்:
</h3><p>புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களுக்காக நீங்கள் நேரம் செலவு செய்வீர்கள். புதிய ஆடை மற்றும் பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
</p><h3>5. சிம்மம்:
</h3><p>ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பொற்காலம். உடன் பிறந்தவர்கள் இடையே நல்ல புரிதல் உண்டாகும். தாய் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
</p><h3>6. கன்னி:</h3><p>
நட்புகள் இடையே சிறு சிறு சண்டை வந்து செல்லும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டிய நாள். தேவை இல்லாத செலவுகள் வரலாம். கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம்.
</p><h3>7. துலாம்:
</h3><p>உங்களுக்காக சில விஷயம் வாங்கி கொள்வீர்கள். உங்கள் மீது நம்பிக்கை மலரும். புதிய நட்புகள் அறிமுகம் கிடைக்கும். வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
</p><h3>8. விருச்சிகம்:
</h3><p>குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையும். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.</p><p></p><h3>9. தனுசு:
</h3><p>பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் சரி ஆகும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது அவசியம்.
</p><h3>10. மகரம்:</h3><p>
காலை முதல் மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து செல்லும். நெருங்கியவர்களிடம் இருந்து நினைத்த உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். பெயர் புகழ் கிடைக்கும் நாள்.
</p><h3>11. கும்பம்:</h3><p>
தொழில் ரீதியாக சில போட்டி பொறாமைகள் சந்திக்கலாம். நிதானம் கடைபிடிப்பது அவசியம். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். வெளிநாடு தொடர்பான தொழில் சிறந்து விளங்கும்.</p><h3>
12. மீனம்:
</h3><p>திடீர் பணவரால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளுக்காக நீங்கள் முக்கிய விஷயங்கள் செய்துகொடுப்பீர்கள். வியாபாரம் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நன்மையான நாள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் பொழிந்ததால் பாலமலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/palamalai-ranganathar-temple-in-tamil-1732597447"></link>
            <id>https://ibcbakthi.com/article/palamalai-ranganathar-temple-in-tamil-1732597447</id>
            <summary type="text">கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று பாலமலை ஆகும். கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் போகும் வழியில் பெரியநாயக்கன்பாளையத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு குன்று பாலமலை ஆகும். கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் போகும் வழியில் பெரியநாயக்கன்பாளையத்திற்கு மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் பாலமலை உள்ளது. இம்மலையின் மேலே ரங்கநாதருக்கு என்று ஒரு கோயில் சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.</p><h3>ரங்கநாதரும் கோதை நாச்சியர்களும்</h3><p>
பால மலை ரங்கநாதர் கோயிலின் கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பூங்கோதை நாச்சியாரும் செங்கோதை நாச்சியாரும் இரண்டு தனித் தனி சந்நிதிகளில் இடம் பெற்றுள்ளனர். மகா மண்டபத்தில் இருக்கும் ஊஞ்சலில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதரின் அருகில் பூதேவியின் ஸ்ரீதேவியும் உள்ளனர். </p><p>ராமானுஜர் பரமவாசுதேவர் மற்றும் காளிதாசருக்கு னு உப சந்நிதிகள் உண்டு. இப்பகுதியில் வாழும் வேளாண் குடியினருக்கு பாசனக் கால்வாய் வெட்டிக் கொடுத்த காளியண்ணன் அவர்களுக்கும் தனிச் சன்னதி உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94aa815-8b61-4fb7-b3a2-1b5c63e88655/24-6745587ee8fe0.webp' /></p><h3>பிள்ளை வரமருளும் பிள்ளையார்
</h3><p>கருவறையின் பின்புறத்தில் வைணவத்தில் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படும் விநாயகர் பூவரச மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். பக்தர்கள் இம்மரத்தில் மாங்கல்ய பலம் வேண்டி மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டுகின்றனர்.&nbsp;&nbsp;</p><h3>காராம்பசு பால் சுரந்த ரகசியம்
</h3><p>காரை மரம் தலவிருட்சமாக விளங்குகின்றது. பத்ம தீர்த்தமும் பால் சுனையும் புனித தீர்த்தங்களாக உள்ளன. மலைப்பகுதி என்பதால் இங்கு இயற்கையான சுனை ஒன்று உள்ளது. நீரின் சுவை கருதி அதனை பால் சுனை என்று அழைக்கின்றனர். பால் என்ற பெயரிலேயே இம்மலை பாலமலை என்று அழைக்கப்படுகிறது.</p><p></p><p> ஒரு காலத்தில் இம்மலையில் ஆடு மாடு மேய்த்தவர்கள் ஒரே ஒரு பசு மாடு மட்டும் ஒரு மரத்தடியில் பால் சுரந்ததைக் கண்டு அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு பெருமாளின் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெருமாளுக்கு கோயில் கட்டி கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பால் சுரந்த மலை என்பதால் இம்மலை பாலமலை எனப்பட்டது.&nbsp;&nbsp;</p><p>கோயிலின் அர்த்தமண்டபத்தில் கிழக்கு நோக்கி சக்கரத்தாழ்வாரும் அச்சிலையின் பின் பகுதியில் மேற்கு நோக்கி யோக நரசிம்மரும் உள்ளனர். பெருமாள் அலங்கார பிரியர் என்பதால் கருவறையில் இருக்கும் ரங்கநாதருக்கு ஆள் உயர மாலைகள் தினமும் சாத்தப்படுகின்றன. அவருக்கு நித்தமும் பட்டும் பீதம்பரமும் மாலையகளும் சார்த்துகின்றனர். இக்கோயிலில் பஞ்சராத்ர முறைப்படி மூன்று கால பூஜை நடைபெறுகின்றது</p><h3>சித்ரா பௌர்ணமி</h3><p>
இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைக்குத் பத்ம தீர்த்தத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். தேரோட்டமும் அதே நாளில் சிறப்பாக நடக்கும். இது தவிர புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் உண்டு. </p><p>கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் காலத்தால் பிந்தியது எனினும் தல புராணக் கதைகள் நிறைய உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4750676d-be8d-465c-bf7e-7a96154a4dee/24-6745587e0073a.webp' /></p><h3>கதை 1</h3><p>
கோயில் கட்ட உதவிய வெடிப்பு
ஒரு காலத்தில் கன்வ மகரிஷியின் வழியில் வந்த காளிதாச மகரிஷி என்பவர் இவ் ஊரில் குடில் அமைத்து தவம் செய்தார். இப்பகுதியில் காராம்பசு ஒரு ஒரு மரத்தடியில் தினமும் போய்ப் பாலை சுரந்தது. </p><p>அங்கு போய் மக்கள் பார்த்த போது ஒரு இறை பக்தருக்கு அருள் வந்து இங்கு நான், இனித் பூமிக்குள் இருக்கிறேன் எனக்கு இந்த இடத்தில் கோயில் கட்டி வணங்கி வாருங்கள் என்றார். 

அடுத்து, கீலக வருஷம் வைகாசி மாதம் 15 ஆம் தேதி இரவு 12 மணிக்கு திடீரென்று இப்பகுதியில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது.</p><p> பாறைகள் பாளம் பாளமாக வெடித்தன. அப்போது உங்கன கவுடர் வம்சத்தில் தோன்றிய ஒருவரின் கனவில் இறைவன் தோன்றி கன்னி மூலையில் மணல் நிறைய இருக்கிறது, ஈசானிய மூலையில் பாறை வெடித்துக் கிடக்கின்றது, அவற்றை எடுத்து எனக்குக் கோவில் கட்டுங்கள் என்றார்.</p><p> அதன்படி ரங்கநாதர் கோவில் கட்டப்பட்டது பின்பு உங்கன கவுடர் வழியில் தோன்றிய நஞ்சுண்ட கவுடர் என்பவர் அஸ்தகிரி, கோபகிரி கருடஸ்தம்பம் ஆகியவற்றை இங்குப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். பின்பு வனவிலங்கு அதிகாரியாக இருந்த முனியப்ப பிள்ளை கோவிலுக்கு ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு படிக்கட்டுகளை அமைத்தார்.</p><p></p><h3>கதை 2</h3><p> 
கல்லாய் சபிக்கப்பட்ட தீயவள்
விசுவாமித்திர மகரிஷி தவத்தில் இருந்த போது அவரது தவத்தை கலைக்க ரம்பா அவர் முன்பு நடனமாடினாள். அவளது தொந்தரவு தாங்க இயலாது அவளை கல்லாய்ப் போகும்படி ரிஷி சபித்தார். சில ஆண்டுகள் கழிந்ததும் வேறொரு முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு தேவ கன்னி கிருதசி என்ற பெயரில் ராட்சசியாக இந்த மலையில் அலைந்து திரிந்தாள். </p><p>அவளும் விசுவாமித்திரருக்கு பெரிய தொந்தரவாக இருந்தாள். இதனால் தியானத்திலிருந்து கண் விழித்த விசுவாமித்திரர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அரக்கின் மீது எறிந்தார். அவர் எறிந்த கல் ரம்பை ரிஷியின் சாபத்தால் உரு மாறி கிடந்த கல். </p><p>ராட்சசியும் கல்லும் எதிரே இருந்த குளத்தில் விழுந்தனர். பத்மதீர்த்தக் குளத்தில் விழுந்ததால் சாப விமோசனம் பெற்று இருவரும் தேவலோகம் திரும்பினர். பத்ம தீர்த்தம் என்று தற்போது அழைக்கப்படும் குளத்தின் பழைய பெயர் சக்கர தீர்த்தம் ஆகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d768f087-55a8-45a2-afd7-8391365e219f/24-6745587e7373c.webp' /></p><h3>கதை 3
</h3><p>துரோகி பைத்தியம் ஆவான்
சோம வம்சத்தைச் சேர்ந்த நந்த பூபாலன் என்ற மன்னன் சந்நியாசம் நாடி வனப்பிரஸ்த வாழ்க்கை மேற்கொள்ள காட்டுக்குச் செல்ல முடிவு செய்தான். தன் ஒரே மகனான இளவரசனை அமைச்சர் தர்ம குப்தரிடம் விட்டுச் சென்றான். 
இளவாசனும் மகுடாபிஷேகம் செய்து தர்மத்தின் வழியில் ஆட்சி செய்து வந்தான் 

ஒரு நாள் மன்னன் காட்டுக்கு வேட்டைக்கு சென்றான்.</p><p> தண்ணீர் தேடி தனியாக வெகு தூரம் வந்துவிட்டான். பொழுதும் இருட்டத் தொடங்கியது. அப்போது அங்கு ஒரு கரடி வருவதைப் பார்த்து மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குத் திடீரென்று ஒரு சிங்கம் கரடியை அடித்துத் தின்னும் நோக்கில் வந்தது. இதைப் பார்த்ததும் கரடியும் மன்னன் இருந்த மரத்தில் ஏறிவிட்டது. சிங்கம் கீழேயே சுற்றி வந்தது.&nbsp;&nbsp;</p><p></p><h3>&nbsp;இரவு வெகு நேரம் ஆனதும்</h3><p> கரடிக்கும் மன்னனுக்கும் உறக்கம் கண்ணைச் சுழற்றியது. மன்னன் கரடியை பார்த்து 'எனக்குத் தூக்கம் வருகின்றது. நான் சற்று நேரம் உறங்குகின்றேன். நீ எனக்கு காவலாக இரு. பின்பு நீ உறங்கலாம். நான் உனக்குக் காவலாக இருப்பேன்' என்றான். கரடியும் ஒப்புக்கொண்டது. </p><p>மன்னன் உறங்கினான் இப்போது சிங்கம் கரடியைப் பார்த்து 'அந்த மனிதனை கீழே தள்ளிவிடு. நான் அவனை சாப்பிட்டு விட்டுப் போகிறேன். நீ பிழைத்துப் போ' என்றது. அதற்கு கரடி 'நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அது நம்பிக்கை துரோகம். நம்பிக்கை துரோகத்திற்கு பிராயச்சித்தமே கிடையாது. </p><p>நான் அந்தத் தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்' என்று சொல்லிவிட்டது.

 மன்னன் சில மணி நேரம் உறங்கிவிட்டுக் கண்விழித்தான். கரடியைப் பார்த்து 'நீ இப்போது தூங்கு' என்றான். கரடி உறங்கத் தொடங்கியது. இப்போது சிங்கம் அவனைப் பார்த்து 'ஏ மானிடனே அந்த கரடியைக் கீழே தள்ளி விடு. நான் பசியாறிவிட்டுப் போகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460a9d28-c199-4251-9b3a-2e91acf2bbd6/24-6745587d6472e.webp' /></p><p> நீ பிழைத்து போ: என்றது. மன்னன் யோசித்தான். இதுவும் நல்ல ஏற்பாடு தானே. சிங்கத்தின் பசி தீர்ந்தால் அது போய்விடும் அல்லவா! இங்கு நிற்காது, என்று எண்ணி கரடியை தள்ளி விட முயன்றான். ஆனால் கரடி கீழே விழவில்லை. மரத்தின் கிளையை பற்றிக் கொண்டு மேலே சென்று விட்டது.</p><p> அது நம்பிக்கை துரோகம் செய்த மன்னனைப் பார்த்து 'உனக்கு அறிவு இல்லையா? இப்படி உன்னை நம்பிக் கண்ணுறங்கிய என்னை கீழே தள்ளி விட பார்த்தாயே. நீ உன் புத்தி பிறழ்ந்து விட்டதா? நீ பைத்தியமா? நீ என்று சொல்லி 'நீ கிறுக்காகவே போ பைத்தியமாகவே திரி ' என்று சாபம் கொடுத்து விட்டது

மன்னனுக்கு மெல்ல மெல்ல சித்தம் கலங்கியது.</p><p> பைத்தியம் ஆகிவிட்டான். இவனுக்கு சித்த சுவாதீனம் திரும்ப வேண்டும் என்று அரசரும் அமைச்சரும் ஜைமினி சித்தரிடம் அழைத்துச் சென்றனர். அவர் மலையில் உள்ள குளத்தில் தினமும் நீராடி வாருங்கள். பித்த நிலை மாறும்' என்றார். </p><p> மன்னனை அந்தக் குளத்தில் அவன் தந்தையும் அமைச்சரும் ஒரு ஆண்டு காலம் நீராட வைத்தனர். அதன் பின்பு அவனுக்குப் பிடித்திருந்த பைத்தியம் விலகியது. இந்த குளமே நோய் தீர்க்கும் பத்ம தீர்த்தம் ஆகும்.</p><h3>கதை 4
</h3><p>ராட்சதன் மனிதனாக மாறினான்
 வசிஷ்ட மகரிஷி கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை கண்டு வணங்கித் திரும்பி வரும்போது விசுவாவசு என்ற மன்னன் என் மகன் தர்மாதன் தன் மனைவிகளுடன் பத்ம தீர்த்த குளத்தில் ஜலக்கிரீடையில் ஈடுபட்டிருந்தான். ரிஷி அவ்வழியே வருவதைக் கண்ட பெண்கள் கரையேறி அவரை வணங்கி நின்றனர்.</p><p> ஆனால் தர்மதன் குளத்தை விட்டு வெளியே வரவில்லை. அவரை வணங்கவும் இல்லை. வசிஷ்டருக்கு மன்னனது இச்செயல் கோபத்தை மூட்டியது. அதனால் அவர் அவனை ராட்சதனாக போகும்படி சபித்தார்.

 அரசனின் மனைவிமார் வதிஷ்டரிடம் மன்னனுக்கு சாப விமோசனம் வேண்டி அவர் காலில் விழுந்து வணங்கினர்.</p><p> தக்க காலம் வரும்போது அவனுடைய சாபம் விலகும் என்று கூறிச் சென்று விட்டார். பல ஆண்டுகள் கழித்து காலவ முனிவர் இம்மலைப் பகுதியில் கடும் தவம் மேற்கொண்டார். அப்போது இங்கு வாழ்ந்த ராட்சதன் ஒருவன் காலவ மகரிஷிக்கு மிகவும் தொல்லை கொடுத்தான். </p><p>அவர் நாராயணப் பெருமாளை அணுகி தனக்குத் தொந்தரவு கொடுத்து தன் தியானத்தையும் தவத்தையும் குறைக்கும் ராட்சதனை அழிக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவனை கொன்று அவன் ராட்சத குணத்தைத் தொலைத்து அவனை அமைதியான மனிதனாக மாற்றினார். துஷ்டர்கள் சாதுவாகஆறும் தலம் இத்திருத்தலம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5c3217-a0e6-46ec-b17a-db0b76779fc8/24-6745587f69ff3.webp' /></p><h3>வைணவமாக மாறிய பௌத்த மடம்
</h3><p>பாலமலை ரங்கநாதர் கோயிலில் உள்ள விநாயகர் வழிபாடு, பத்ம தீர்த்தம் மற்றும் சித்ரா பௌர்ணமி வழிபாடுகள் இத்திருத்தலம் இதற்கு முன்பு பௌத்தத் தலமாக இருந்ததை உறுதி செய்கிறது. பௌத்த மடாலயங்களில் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிள்ளை இல்லாதவர்களுக்கு இயற்கை முறையிலும் மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p> கௌதமர் சிறந்த நாயகர் என்ற பொருளில் வி நாயகர் எனப்பட்டார். சென்னை மியூசியத்தில் உள்ள அவரது செப்புத் திருமேனிகளும் இப்பெயரை உறுதி செய்கின்றன. பௌத்தக் கோயிலை வைணவ கோயிலாக மாற்றும்போது அங்கு ஏற்கெனவே இருந்த வி நாயகரை தும்பிக்கை ஆழ்வார் என்று பெயர் ஆற்றினார்.</p><p></p><p> </p><p> சித்ரா பௌர்ணமி (தெப்பத் திருவிழா, தேரோட்டம்) விழா பௌத்தர்கள் தம் தெய்வத்துக்குக் கொண்டாடிய இந்திர விழாவின் மறு உருவாகும். சக்கரம் (சக்கர தீர்த்தம்) என்ற பெயர் தேவலோகத்தை ஆட்சி செய்த இந்திரனின் அதிகாரத்தைக் குறித்தது.</p><p> பத்மம் என்பது பௌத்த சமயத்தின் 'பத்மம் மணி ஹியும்' என்ற தாரக மந்திரத்தைக் குறித்தது. பத்மாசனம் புத்தரின் இருக்கை (ஆசன) முறை ஆகும். அவரது சிற்பங்களில் தாமரை மீது அவர் நின்ற கோலத்தையும் அமர்ந்த கோலத்தையும் காணலாம். </p><p>பத்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்ற பெயர்கள் பால மலையின் மேல் ஆரம்பத்தில் பௌத்த மதம் இருந்ததைத் தெளிவாக்குகின்றன. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை இன்று மாற்றங்களைப் பெற்று ஸ்தல புராணக் கதைகளாக உலா வருகின்றன. இன்று இக்கோயில் சிறந்த வைணவத் தலமாக விளங்குகின்றது.&nbsp; </p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-10T14:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அமைப்பை கொண்ட ஜாதகர் பிறர் பொறாமைப்படும் அளவு வாழ்வார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-planets-in-5th-place-make-other-people-jealous-1783685662"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-planets-in-5th-place-make-other-people-jealous-1783685662</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த உலகத்தில் போட்டி பொறாமை இவை எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களை மற்றவர்கள் பார்த்தால் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த உலகத்தில் போட்டி பொறாமை இவை எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியாக, ஜோதிட ரீதியாக எந்த அமைப்பு கொண்ட ஜாதகர்களை மற்றவர்கள் பார்த்தால் மிகுந்த அளவில் பொறாமை கொள்வார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.</p><h3>
1. ஐந்தாம் வீட்டில் சூரியன் :</h3><p>
ஒருவர் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சூரியன் இருந்தால் அவர்கள் மிகுந்த படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் தலைமைத்துவத்தில் சிறந்தவர்களாகவும் விளங்குவார்கள். இது மற்றவர்களுடைய கவனத்தை இருப்பதோடு பொறாமை குணத்தையும் உண்டு செய்கிறது.</p><p></p><p>
</p><h3>2. ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்:
</h3><p>இவர்கள் காதல் கவர்ச்சி மற்றும் கலைத்திறன் அழகிய ரசனை ஆகியவற்றில் மிகுந்த ஆளுமை திறனோடு இருப்பார்கள். </p><h3>3. மூன்றாம் வீட்டில் செவ்வாய்:</h3><p> இவர்களுடைய தொழில் மற்றும் பேச்சில் தைரியமான கருத்துக்கள், எதற்கும் அஞ்சாமல் துணியக்கூடிய அந்த குணம் மற்றவர்களை பொறாமைப்படும் அளவிற்கு செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4119d24-d542-44cf-a42a-dadd0c403bea/26-6a50e22205473.webp' /></p><p>
</p><h3>4. ஒன்றாம் வீட்டில் புதன்:</h3><p>
 இவர்கள் நண்பர்களுக்கு அதிக அளவில் உதவி செய்வார்கள். நட்பு வட்டாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும். அதனால் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். இது ஒருவரை பொறாமை அடைய செய்கிறது.</p><p></p><p>
</p><h3>5. ஐந்தாம் வீட்டில் குரு:
</h3><p> இவர்களுடைய தன்னம்பிக்கை படைப்பாற்றல் அதிர்ஷ்டம் மற்றும் எல்லோருடைய பாராட்டுகளும் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்த அந்தஸ்தை கொடுக்கும். அதனால் மற்றவர்கள் எளிதில் பொறாமை கொள்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 7 பாரம்பரிய வழிமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-things-women-must-follow-according-hindu-shastra-1783684893"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-things-women-must-follow-according-hindu-shastra-1783684893</id>
            <summary type="text">&amp;nbsp;ஆன்மீகம் என்பது ஒரு பெரிய கடல் இதில் நாம் நிறைய விஷயங்களை தேடி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆன்மீகம் என்பது ஒரு பெரிய கடல் இதில் நாம் நிறைய விஷயங்களை தேடி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான எட்டு பாரம்பரிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
</p><p>1. வீடுகளில் பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கு பார்த்த நின்றவாறு கோலம் போடக்கூடாது.</p><p>
2. அதேபோல் திருமணம் ஆன பெண்கள் கால்களில் ஒரு விரல் மட்டும் மெட்டி அணிய வேண்டும். ஒரு சிலர் 3 விரல்களில் மெட்டி அணிந்து இருப்பார்கள். அவ்வாறு அணிவதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள் காரணம் அதிக அளவில் மெட்டி அணிகின்ற பொழுது கணவனின் ஆரோக்கியத்திலும் தொழில் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டு செய்யும்.</p><p>3. கர்ப்பிணி பெண்கள் ஒரு பொழுதும் உக்கிரமான தெய்வங்கள் வழிபாடு செய்வது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.</p><p>4. பெண்கள் முடிந்தவரை தவறாமல் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இவை லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்வதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f9e2b-684e-4ca6-a4f1-de54754066f0/26-6a50df1f32061.webp' /></p><p>5. முக்கியமாக வீடுகளில் அம்மாவாசை தவசம் போன்ற நாட்களில் ஒருபொழுதும் கோலம் போடக்கூடாது.
</p><p>6. கோவில்களில் கொடுக்கப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.</p><p>
7. அதேபோல் பெண்கள் கோவிலுக்குள் செல்லும் பொழுது அல்லது வீடுகளிலும் முடிந்து வரை முந்தானையை தொங்க விட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினம் ஒரு திருமணம் செய்யும் நித்திய கல்யாணப் பெருமாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/nithya-kalyana-perumal-temple-in-tamil-1732450588"></link>
            <id>https://ibcbakthi.com/article/nithya-kalyana-perumal-temple-in-tamil-1732450588</id>
            <summary type="text">செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எம்பெருமான் நித்திய கல்யாணப் பெருமாளாக, ஆதி வராக மூர்த்தியாக எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எம்பெருமான் நித்திய கல்யாணப் பெருமாளாக, ஆதி வராக மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். இதனால் இவ்வூர் வராகபுரி என்றும் அழைக்கப்பட்டது. </p><p>இங்கு எழுந்தருளியிருக்கும் வராக பெருமாள் லட்சுமி வராக மூர்த்தியாக அன்யோன்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் அகிலவல்லி தவிர கோமளவல்லி நாச்சியார் என்னும் தாயாரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c05c74-b719-48aa-84ff-88c3f8b9ad87/24-6743191e0d214.webp' /></p><h3>பெருமாளின் திருக்கோலம்
</h3><p>நித்யகல்யாண பெருமாள் தனது இடது மடியில் அகில வல்லி என்னும் நாச்சியாரை இருத்தி வலது கையால் அவரை அனைத்து படி, இடது கையால் அன்னையின் திருப்பாதத்தைத் தாங்கிய படி காட்சி அளிக்கின்றார். பெருமாளின் வலது கால் பூமியில் பதிந்திருக்க அக்காலின் கீழே ஆதிசேஷன் காணப்படுகின்றான். </p><p>வலது மேல் கையில் சக்கரமும் இடது மேல் கையில் சங்கும் உள்ளது இத்தகைய அன்யோன்ய கோலத்துடன் ஆதி வராக மூர்த்தி காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு பிரிந்த தம்பதியர் வந்து வேண்டிக் கொண்டால் முன்பை விட பிரியமாகவும் சிநேகமாகவும் அந்யோந்யமாகவும் இருப்பார்கள்.&nbsp;</p><p></p><h3>கோஷ்டத்தில் விநாயகர்
</h3><p>நித்திய கல்யாண பெருமாள் கோவில் கோஷ்டத்தில் விநாயகரும் வைஷ்ணவியும் காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும். பொதுவாக வைணவக் கோயில்களில் விநாயகரைப் பார்ப்பது அரிது. ஓரிரு கோவில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் தூணில் இருப்பார். இக்கோவிலில் கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ளார்.இக்கோவிலில் 12 ஆழ்வார்களுக்கும் மணவாள மாமுனிகளுக்கும் ராமானுஜருக்கும் சன்னதிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0741ce8-e007-4235-a773-0cd3f94720db/24-6743191e89f43.webp' /></p><h3>கல்யாணக் கதை
</h3><p>ஆதி வராக மூர்த்திக்கு தினமும் ஒரு கல்யாணம் நடப்பதால் நித்திய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். காலவ ரிஷி என்பவருக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர் தன்னுடைய அனைத்துப் பெண் குழந்தைகளையும் பெருமாளே மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் இருந்தார். </p><p>அவருடைய தவத்தின் உறுதியைக் கண்ட பெருமாள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். இத்தலத்தில் எழுந்தருளி காலவ ரிஷியின் மகள்களை அங்கு அழைத்து வரச் செய்து தினம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆக 360 நாட்களும் இவருக்கு இங்குத் திருமணக் கொண்டாட்டம் தான். இவர் மணமகன் கோலத்தில் இருப்பதால் அவரது தாடையில் இயற்கையிலேயே திருஷ்டி போட்டு உள்ளது. எனவே கண் திருஷ்டி உள்ளவர்கள் இங்கு வந்தால் கண் திருஷ்டி விலகும்.&nbsp;</p><p>&nbsp;</p><h3>திருமணத் தடை விலக</h3><p>கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு திருமணத்தடை உள்ளவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறும். திருமண தோஷம் உள்ளவர்கள் இரண்டு மாலைகளை வாங்கி வந்து ஒன்றைப் பெருமாளுக்கு சாத்தி வணங்கவேண்டும். </p><p>மற்றொன்றை பட்டர் பெருமாளிடம் வைத்து தோஷம் உள்ளவரின் கையில் கொடுப்பார். அவர் அந்த மாலையுடன் கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்த பின்பு கொடி மரத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின்பு மாலையுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும். </p><p>திருமணம் ஆனதும் தம்பதி சமேதராய் இங்கு வந்து அந்த மாலையை இங்கே உள்ள புன்னை மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும். கோவிலை மூன்று முறை வலம் வந்து பெருமாளையும் தாயாரையும் சேவிக்க வேண்டும்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb6563e-d89e-4edb-bda0-bdf3e39ab73f/24-6743191f0af4d.webp' /></p><h3>மணமகனுக்குப் பஞ்சம்</h3><p>
திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள வராக மூர்த்தியும் திருவிடந்தை வராக மூர்த்தியும் ஒருவரே என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. திருமலையில் பல்லவ மன்னன் ஒருவன் தினம் ஒரு ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தான். </p><p>ஒரு நாள் பெண் கிடைத்து விட்டாள். ஆனால் அவளுக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று அவன் கலங்கி நிற்கையில் எளிவந்த பிரானாகிய எம்பெருமான் இரக்கம் கொண்டு அவனுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற விரும்பி மணமகன் கோலத்தில் அங்கு வந்தார். அவனுடைய பிரார்த்தனை நிறைவேறியது.&nbsp;</p><p></p><h3>சுக்கிர தோஷம் </h3><p>நீங்கும்
திருவிடந்தையில் வராக மூர்த்திக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அபிஷேகம் செய்பவருக்கு சகல தோஷங்களும் நிவர்த்தி அடையும். இது சுக்கிர தோஷம் தீரும் தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். </p><p>வெளிப்பிரகாரத்தில் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. அங்கே ரங்கநாதன் ரங்கநாயகிக்கும் சன்னதிகள் உள்ளன. சுக்ர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்க நாதனை போல் திருவிடந்தை ரங்கநாதனும் திருமண தோஷத்தை நீக்குவார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35bcbe0-9276-4346-8726-631d23cf06b0/24-6743191f7df06.webp' /></p><h3>நாகதோஷம் நீங்கும்</h3><p>
திருவிடந்தைக்கு வந்து ரெங்கநாதனையும் வராக மூர்த்தியையும் வந்து வணங்கினால் நாகதோஷமும் நீங்கிவிடும். ஜாதகத்தில் ஏழு எட்டாம் இடங்களில் ராகு கேது இருப்பதால் நாக தோஷம் காரணமாக திருமணத் தடை ஏற்படும். இவர்களுக்கு இத்திருத்தலம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். மக நட்சத்திரமன்ற இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. அன்றைக்கு இக்கோவிலுக்கு வந்து வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பதும் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.</p><h3>புராணக்கதை 2.
</h3><p>மேகநாதன் என்ற அசுரனின் மகன் பெயர் பலி என்பதாகும். இவன் மிகச் சிறந்த நீதிமான். மாலி, மாலியவான், சோமாலி என்ற மூன்று அசுரர்களும் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தனர் ஆனால் தேவர்கள் இம்மூவரையும் போரில் தோற்கடித்து விரட்டி விட்டனர். </p><p>தோற்றுப் போன மூவரும் பலியிடம் வந்து சரணாகதி அடைந்து தேவர்களை வெற்றி கொள்ள தங்களுக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். பலியும் இவர்களோடு சேர்ந்து தேவர்களோடு போரிட்டு அவர்களை வென்றான்.</p><p> தேவர்களுடன் போரிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க பலி இத்திருத்தலத்திற்கு வந்து வராக தீர்த்தத்தில் குளித்து தினமும் எம்பெருமானுக்கு பூஜை செயதான். மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று எம்பெருமான் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சமும் அருளினார் என்பது இத்தல புராணக் கதை ஆகும்&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e337317-937e-4ebc-ad07-43e38ec44c9d/24-6743192000ca2.webp' />&nbsp;</p><h3>திருத் தலப் பெருமை</h3><p>
நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் கோவிலில் வைகாணச ஆகமப்படி நான்கு கால பூஜை நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அழகிய மணவாளதாசர் 108 திருத்தலங்களையும் போற்றும் வகையில் 108 திருப்பதி அந்தாதி பாடினார்.</p><p> அதில் 'தொண்டானேன் திருவிடை என்றைக்குமே தெரிந்து' என்று இத்தலத்திற்குத் தான் தொண்டனாகியதைக் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப்போல் குரவை ராமானுஜ தாசரும் 108 திருத்தலங்களைப் பற்றி 108 திருப்பதி திருப்புகழ் என்ற நூலை இயற்றினார். </p><p>இந்நூலில் 92 ஆவது பாசுரத்தில் திருவிடந்தையைக் குறிப்பிட்டுள்ளார். 'விட எந்தை பதிவாழ் மேவிய பெருமாளே' என்று பெருமாளை அழைத்து வணங்குகின்றார். 

கோவில் விழாக்கள் திருவிடந்தையில் மாதந்தோறும் ஒரு விழா நடைபெறுகின்றது.</p><p></p><p> </p><p>சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்தோற்சவம், ஆனி மாதம் கருட சேவை, ஆடிப்பூரத்தில் நாச்சியாருக்கு விழா, ஆவணியில் கஜேந்திர மோட்சம், கண்ணனின் பிறப்பைக் கொண்டாடும் போது உறி அடி திருவிழா, புரட்டாசி மாதம் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் தனுர் மாச பூசை, மாசி மாதம் மாசி மகம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் என்று 12 மாதமும் இங்குக் கோயில் விழாக் கோலம் கொண்டிருக்கும்.</p><p> இக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு வீடு கட்டுதல், மனையடி வாங்குதல் ,பதவி உயர்வு, நல்ல சம்பள உயர்வு, நல்ல வேலை கிடைத்தல், விருப்பப்பட்ட வாகனங்கள் வாங்குதல் என்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற நல்ல பலன்கள் கிடைக்கும்</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.. வீடு கார் வாங்கி மகிழப் போகும் ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-venus-transit-in-puram-natchiram-prediction-1783679182"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-venus-transit-in-puram-natchiram-prediction-1783679182</id>
            <summary type="text">ஜூலை 16ஆம் தேதி சுக்கிர பகவான் அவருடைய சொந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்திற்கு நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை திடீர் வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 16ஆம் தேதி சுக்கிர பகவான் அவருடைய சொந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்திற்கு நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை திடீர் வீடு, கார் வாங்கக்கூடிய யோகம், தொழிலில் முன்னேற்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம். </p><p>


ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்டு சில ராசிகள் ஒரு சில கால நேரத்தில் அவர்களுடைய ராசிகளின் இடத்தை மாற்றுவார்கள். </p><p>அந்த வகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சுக்கிர பகவான் ஜூலை 16ஆம் தேதி காலை 7.11 மணிக்கு பூர நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். பூரம் சுக்கிர பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd6b4551-3532-4274-a99e-546f788dac39/26-6a50c8d53f33e.webp' /></p><p> </p><h3>

ரிஷபம்:</h3><p>
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கொடுக்கப்போகிறது. பணவரவு எதிர்பார்த்த இடங்களில் இருந்து இவர்கள் கைகளுக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் இவர்களுடைய பெயர், புகழ் உயரும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகமும், வீடு வாங்கக்கூடிய அமைப்பு உருவாகும்.</p><h3>

 சிம்மம்:
</h3><p> இந்த காலகட்டம் நீங்கள் உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வாய்ப்புகள் வேலையில் தேடி வரும். உங்களுடைய பேச்சில் இனிமை காணப்படும். உங்களுடைய பேச்சு திறனால் முக்கிய காரியத்தை நிறைவேற்றுவீர்கள். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை சேர்க்கை உருவாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.</p><p></p><h3>துலாம்:
</h3><p> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த விஷயங்கள் கைக்கூடி வரப்போகிறது. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் பிறப்பதற்கான யோகம் உருவாகும். திருமண பலன் கைகூடிவரும், எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு உதவியும் ஆடம்பரமான வாழ்க்கையும் அமையப் போகிறது, ஒரு சிலருக்கு இந்த கா.லகட்டங்களில் கைகளுக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:26:40+00:00</updated>
        </entry>
    </feed>
