<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-18T13:04:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-festivals-in-aadi-month-we-shouldnt-miss-1784377333"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-festivals-in-aadi-month-we-shouldnt-miss-1784377333</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷமான தினம் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். ஆடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷமான தினம் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். </p><h3>ஆடிப்பெருக்கு: (ஆடி 18) </h3><p>
தமிழ்நாட்டில் காவிரி கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூடி ஆடிப்பெருக்கு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதாவது நீர் வளத்தை போற்றும் விதமாகவும் விவசாயம் செழிப்பாக வளரவும் குடும்பத்தினுடைய நல் வாழ்க்கைப் பெருகவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a511b5-0178-40cf-b2bc-c674a4473fa4/26-6a5b6ff75ba4c.webp' /></p><p></p><h3>
 ஆடிப்பூரம்:</h3><p>
 ஆடிப்பூரம் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அம்மன் கோவில்களில் வளையல் சாற்றுதல், கூழ் படைத்தல் போன்ற வழிபாடுகள் நடைபெறும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்கு மிக உகந்த நாள். இராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொள்வார்கள்.</p><p>
</p><h3> ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய்:</h3><p>
 ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் மிகச் சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த நாளில் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் மிக உகந்ததாக இருக்கிறது. மேலும், மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff82b40-d1ef-4ff4-b35a-19e6094e7fd6/26-6a5b6ff8162d1.webp' /></p><p></p><h3>
 வரலட்சுமி விரதம்:</h3><p>
 ஆடி மாதத்தில் பெண்கள் தவறக்கூடாத முக்கியமான நாட்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. சுமங்கலி பெண்கள் தங்களுடைய கணவர்களுடைய ஆரோக்கியம் பெருகவும் குடும்பத்தினுடைய மகிழ்ச்சி நிலைக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் இந்த வருடத்தை கடைபிடிப்பார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூனியம் விலக்கும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/madurakaliamman-temple-thottiyam-in-tamil-1733207175"></link>
            <id>https://ibcbakthi.com/article/madurakaliamman-temple-thottiyam-in-tamil-1733207175</id>
            <summary type="text">மதுர காளியம்மன் கோவில் என்ற பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் உள்ளது. மதுர காளியம்மன் வடக்கு நோக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுர காளியம்மன் கோவில் என்ற பெரம்பலூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் உள்ளது. மதுர காளியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இதற்கு வடக்காக சோனை முத்தையா கோவில் உள்ளது.</p><p> சோனை முத்தையா மதுர காளியம்மனுக்கும் இங்கு ஏற்கனவே கோயில் கொண்டிருந்த செல்லியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். அகோர வீரபத்திரர் சிலையும் இங்கு காணப்படுகின்றது. அகோர வீரபத்திரரும் சிவனின் அம்சமாக காவல் தெய்வமாக இருக்கின்றார்.</p><p>சோனை முத்தையாவும் செல்லியம்மனும் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். மதுர காளி கண்ணகி என்று நம்பப்படுகின்றது. அகோர வீரபத்திரர் சேர்க்கை காலத்தால் பிந்தியது. மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த கண்ணகி சிறுவாச்சூரில் மதுர காளியாக அமர்ந்து விட்டாள் என்று கதைகள் சொல்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a6c16b1-3862-4a5d-ba0d-54115f93692a/24-674ea488b389a.webp' /></p><h3>கண்ணகி செல்வி சேர்க்கை</h3><p>
சிறுவாச்சூரில் ஆதியில் இருந்த தனிப்பெண் தெய்வம் செல்லியம்மன். ஊர்களில் வடக்கு வாய் செல்வி என்ற பெயரில் வடக்கு நோக்கிய கன்னித் தெய்வ வழிபாடு ஆதியில் இருந்து வந்தது. கண்ணகி வந்த பின்பு செல்வியையும் கண்ணகியையும் பல ஊர்களில் இணைத்து ஒரே தெய்வமாக்கினர்.</p><p> இதை ஆங்கில சம்யவியல் அறிஞர்கள் synchronisation என்பர். ஐரோப்பிய நாடுகளில் ஆங்காங்கே மலை குகைகளில் வைத்து வணங்கிய ஆக்னேஸ், மடோனா, பியாட்ரிஸ் போன்ற தெய்வங்களை ஒரே கன்னி மேரி என்று ஒரே தெய்வமாகினர்.</p><p></p><p>

மதுரையில் இருக்கும் கண்ணகியின் கோவிலுக்கு தற்போதைய பெயர் செல்லத்தம்மன் கோயில். வடக்கு வாய்ச் செல்வி என்று வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வத்தோடு கண்ணகி வழிபாடும் இங்கு இணைந்துள்ளது. </p><p>செல்வி அம்மன், செல்லியம்மன், செல்லாயி அம்மன்,, செல்லத்தம்மன் என்று பல பெயர்களில் தமிழகமெங்கும் கன்னித்த தெய்வ வழிபாடு இருந்துள்ளது. அவற்றில் சில கண்ணகி வழிபாட்டுடன் இணைந்தன.</p><h3>கண்ணகி வழிபாடு
</h3><p> மதுரையில் மேற்கு நோக்கி கோபமாக புறப்பட்ட கண்ணகி இங்கு வந்ததும் தெய்வம் ஆனாள். இக்கதையைப் போலவே கேரளாவில் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலைக் கண்ணகி வந்து தங்கிய கோவில் என்பர்.</p><p> ஏற்கனவே இருந்த பெண் தெய்வ வழிபாட்டு கோவில்களில் காலத்திற்கு ஏற்ப கதைகளை மாற்றி பழைய பெயரில் புதிய தெய்வங்களை இணைத்து நவீனப்படுத்தும் முறைகளைக் காணலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d76073-1c0e-4358-95a6-716ef49e473e/24-674ea4893d945.webp' /></p><h3>மதுர காளி தெய்வமான கதை
</h3><p>சிறுவச்சூர் கோவிலில் இன்னொரு கதையும் உலவுகின்றது. இங்கு செல்லியம்மன் என்ற தெய்வம் இருந்து வந்தாள் அவளை ஒரு மந்திரவாதி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். மதுரையில் இருந்து வந்த காளியம்மன் செல்லியம்மனிடம் இன்று ஒரு நாள் இங்கு தங்கிப் போகிறேன் என்று இடம் கேட்டாள்.</p><p> ஆனால் செல்லியம்மன் மந்திரவாதிக்குப் பயந்து கொண்டு தன்னை மந்திரவாதியிடமிருந்து காப்பாற்றினால் மதுர காளிக்குத் தங்க இடம் தருவதாகக் கூறினாள். மதுர காளி மந்திரவாதியை அழித்து விட்டாள். செல்லியம்மன் காளியை பார்த்து 'இனி நீயே இங்கு கோயில் கொண்டிரு. </p><p>இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கு' என்று சொல்லிவிட்டு அருகில் இருக்கும் பெரியசாமி மலைக்குச் சென்று விட்டாள். ஒக்கும் முன்பு ' எப்பொழுதும் இந்த கோவில் வழிபாட்டில் எனக்கு தான் முதல் மரியாதை தரவேண்டும்' என்றாள்.</p><p></p><p> </p><p> இவ்வாறு செல்லியம்மன் கூறியதால் சூட தீபாராதனைகள் காட்டும் போது பெரியசாமி மலையை நோக்கி முதலில் அங்கு இருக்கும் செல்லியம்மனுக்கு காட்டிய பிறகுதான் சன்னதிக் கு உள்ளே இருக்கும் மதுர காளிக்கு சூட தீபாராதனை காட்டுகின்றார்கள். </p><p>இக்கதைகள் ஏற்கனவே இருந்தவள் செல்லியம்மன் அங்குப் புதிதாய் வந்து சேர்ந்தவள் மதுர காளி என்னும் கண்ணகி என்ற தகவலை உறுதி செய்கின்ற்ன. தெய்வம் மாற்றத்தை உணர்த்துகின்றன. இதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை என்போம்.
</p><p>
 வெளியில் இருந்து வரும் தெய்வங்கள் ஊருக்குள்ளேயே இருக்கும் தெய்வங்களின் சக்தியை குறைத்துவிட்டு தானே சர்வ சக்தி படைத்த தெய்வமாகத் தங்கி விடுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e571ea-428a-436d-bf02-f88968d9d683/24-674ea489b7a18.webp' />&nbsp;</p><h3>மங்கலதேவிக் கோயில் </h3><p>
கண்ணகிக்கு இலங்கை, தமிழ்நாடு, கேரளா என பல இடங்களிலும் கோவில்கள் உண்டு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மங்கல தேவிக் கோவில் என்ற பெயரில் தனி கோயில் உள்ளது. </p><p>இது தமிழ்நாட்டுக்குள் கேரளாவுக்கும் இடையே எல்லை பகுதியில் உள்ளது. தேனி மாவட்டத்தில் கூடலூர் வனப்பகுதியில் பளியர்கள் அதிகம் வாழும் பளியங்குடி என்னும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. </p><p>இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் திறக்கப்படும். அன்று மட்டும் இக்கோவிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இக்கோவிலைச் சேரன் செங்குட்டுவன் கட்டியதாக சொல்வர். 
மதுரையை எரித்தபின் மேற்கே புறப்பட்டுச் சேர நாட்டுக்கு வந்த கண்ணகி இங்கிருந்த வேங்கை மரத்தடியில் நின்றாள். கோவலன் புஷ்ப விமானத்தில் வந்து அழைத்து சென்றான்</p><p></p><h3>கொடுங்களூர் பகவதி கோயில் </h3><p>
கேரளாவில் கொடுங்கலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கொடுங்களூர் பகவதி கோயிலில் வணங்கப்படும் பகவதியம்மை கண்ணகியே என்றும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கொடுங்கலூர் அரச குடும்பத்தார் கொடுங்கல்லூர் பகவதியை தமது குலதெய்வமாகக் கருதுகின்றனர்.</p><p> ஆதிசங்கரர் இங்கு 6 ஸ்ரீ சக்கரங்களை நிறுவினார் என்றும் கூறுகின்றனர். இங்கு காளி ரூபத்தில் எட்டுத் கைகளுடன் மஅம்மை கோயில் கொண்டுள்ளாள். இங்குத் தொடக்கத்தில் உயிர்ப் பலி தரப்பட்டது. பின்பு அரசு உத்தரவால் நிறுத்தப்பட்டது.</p><p> இத் தெய்வத்திற்கு சிவப்பு சாயம் நனைத்த சிவப்பு துணிகளை மட்டும் உடுத்துகின்றனர். சிறுவாச்சூர் மதுர காளிக்கு தலை முதல் பாதம் வரை குங்குமம் சாத்தப்படுகிறது. ஆக இவ்விரு தெய்வங்களும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63da389b-cb84-4dea-995a-8354305a3ced/24-674ea48a3afa3.webp' /></p><p> </p><p>

திங்கள், வெள்ளி மட்டும் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படும். மதுர காளி சிறுவாச்சூர் வந்து சேர்ந்த வெள்ளிக்கிழமையும் அவள் அங்கே தங்குவதற்குக் கோவில் கிடைத்த திங்கட்கிழையும் மட்டுமே இவ் ஆலயம் திறந்திருக்கும். </p><p>இவ்விரு நாட்களும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் போய் பெரியசாமி மலையில் தங்கி விடுவாள். மதுரை காளி என்ற பெயரே மதுர காளி என்று இனிமையான ஒரு பெயரராக மாற்றம் பெற்றது என்று இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><h3>பூச்சொரிதல் விழா
</h3><p>மதுர காளியம்மன் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் விழா தொடங்கும். அடுத்த செவ்வாய் அன்று காப்பு கட்டு நடைபெறும்.மொத்தம் 13 நாட்கள் திருவிழா நடத்துவார்கள். எட்டாம் நாள் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டியதும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து மக்கள் பெரியசாமி கோவில் மலை அடிவாரத்தில் கூடுவார்கள்.</p><p> அங்கு இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உயிர் பலிகள் கொடுக்கப்படும். அது தான் ஆதி கோயில் என்பதால் அங்கேயே மக்கள் செல்கின்றனர். 

மலைக்கோயில் பூஜை முடிந்த மறு நாள் புதன்கிழமை அன்று மதுர காளியம்மன் கோவில் முன் பொங்கல் வைத்து கொண்டாடுவர்.</p><p> வியாழக்கிழமை அன்று மழை பெரியசாமிக்கும் செல்லியம்மனுக்கும் மதுர காளிக்கும் தேர்ப்பவனி நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று மதுர காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் பூச்சொரிதல் விழா நிறைவு பெறும்.
</p><p>
 இது தவிர ஆடி பதினெட்டாம் பெருக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி போன்ற மற்ற விழாக்களும் மற்ற சிவன் கோவிலில் நடைபெறுவது போல இங்கும் நடைபெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991ade09-cecb-4269-a463-70400ac09eeb/24-674ea48ab0527.webp' /></p><h3>அமாவாசை &amp;பௌர்ணமி </h3><p>
மதுர காளியம்மன் திருக்கோயில் வாரத்தில் இரண்டு நாட்கள் திறந்து வைத்திருப்பதை போலவே மாதத்தில் இன்னும் இரண்டு நாட்கள் திறந்து வைக்கப்படுகின்றன. அவை அமாவாசையும் பௌர்ணமியும் ஆகும் இவ்விரு நாட்களிலும் பக்தர்கள் மதுரகாளியைத் தரிசனம் செய்யலாம்.&nbsp;</p><h3>நேர்த்திக் கடன்கள்</h3><p> மதுர காளியம்மன் கோவிலில் பெருமளவில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வேண்டிக் கொள்கின்றனர். மாவிளக்குக்குப் பொதுவாக வீட்டில் இருந்தே மா இடித்துக் கொண்டு வருவர். சிலர் இங்கு வந்து அரிசியை ஊறப் போட்டு மாவை இடித்து விளக்கு ஏற்றுகின்றனர். இவர்களுக்காக இங்கு கல் உரல்கள் வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h3>
திருமணம் நடக்க, பிள்ளை பிறக்க</h3><p> 
மதுர காளியம்மன் கோவிலில்
திருமணத்தடை குழந்தை பேறின்மை ஆகியவற்றுக்காக காளியை வணங்கினால் புத்திர தோஷம் களத்திர தோஷம் தீரும். </p><p>பொருள் காணாமல் போய்விட்டால் மதுர காளியிடம் வந்து வேண்டிக் கொள்கின்றனர். திடீர் நஷ்டம் ஏற்படும் போது எதிர்பாராத இன்னல்கள் ஏற்படும் போது பலரும் மதுர காளியம்மன் நேரில் தரிசித்து தங்கள் துன்பம் தீர முறையிடுகின்றனர்.</p><h3>பில்லி சூனியம் விலக
</h3><p>மதுர காளியம்மன் கோவிலில் பில்லி சூனியம் ஏவல் போன்ற தீய சக்திகளில் தங்களை காத்துக் கொள்ளவும் பக்தர்கள் ஏராளமாக வந்து வேண்டிக் கொள்கின்றனர். மதுர காளி மந்திரவாதியை தோற்கடித்தவள் என்பதால் மந்திர தந்திரங்களை அவள் அழித்து ஒழிப்பாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காத்து, கருப்பு, கண் திருஷ்டி போன்றவற்றால் துன்புறுவோரும் இங்கு வந்து காளியை வணங்கி தீர்வு காணகின்றனர்</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆகஸ்ட் மாதம் கட்டாயம் ரிஷப ராசியினருக்கு இது நடந்தே தீருமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-taurus-astrology-zodiac-prediction-1784374218"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-taurus-astrology-zodiac-prediction-1784374218</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
 ரிஷப ராசிக்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. </p><p>இந்த காலகட்டம் இவர்களுக்கு பதவி உயர்வு, அங்கீகாரம், கௌரவம் ஆகியவை தேடி வரும். இவர்களுக்கு 11 குடைய சனி பகவான் வக்கிரம் பெற்று நற்பலன்களை கொடுக்கப் போகிறார். </p><p>7 குடைய செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையால் அல்லது தொழில் கூட்டாளிகளால் நல்ல லாபம் உண்டாகும்.</p><p></p><p> </p><p>மேலும், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்சமாவதால் ஆரோக்கிய மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்கம் சார்ந்த விஷயங்கள் மற்றும் பங்கு சந்தையில் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம். </p><p>ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம். செவ்வாய் மற்றும் கிருத்திகை நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வதும் நன்மை தரும்.</p><p> இவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரக்கூடிய வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/og5jSPRcPTA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T11:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளில் அதிக ஞாபகம் மறதி உள்ள ராசிகள் யார் தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/4-zodiac-sign-who-forgots-everything-easily-1784370410"></link>
            <id>https://ibcbakthi.com/article/4-zodiac-sign-who-forgots-everything-easily-1784370410</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் தான் மனதைகுறிக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அதிக அளவில் ஞாபக மறதி இருக்கும் என்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் தான் மனதைகுறிக்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில் ஜோதிட ரீதியாக எந்த ராசிகளுக்கு அதிக அளவில் ஞாபக மறதி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><h3>

மீனம்:
</h3><p> இவர்கள் ஒரு பொருளை வைக்கும் இடம் ஒன்றாக இருக்கும் ஆனால் தேடுவது வேறு ஒரு இடமாக இருக்கும். காரணம், இவர்கள் எப்பொழுதும் ஏதேனும் யோசித்துக் கொண்டே இருப்பதால் பல நேரங்களில் இவர்கள் முக்கியமான விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
</p><h3>தனுசு:</h3><p>
 தனுசு ராசியிடம் ஒரு விஷயத்தை சொன்ன நிமிடத்தில் மறக்க கூடியவர்களாக இருக்கிறார். அவர்களிடம் இதை நீ ஞாபகமாக வைத்துக் கொள் என்று ஒரு விஷயத்தை சொன்னால் அதை அவர்கள் முற்றிலுமாக மறந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0965fe-e9cb-462b-aabc-fa3f5dc5147e/26-6a5b54eb8c5e1.webp' /></p><p></p><h3>
 மிதுனம்:
</h3><p> மிதுன ராசியினர் ஒரு விஷயத்தை கட்டாயம் நாம் மறந்து விடக்கூடாது என்று மனதில் வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் இவர்கள் ஒருநாள் தூங்கி எழுந்ததும் மறுநாள் அதை மறந்து விடுவார்கள். காரணம் இவர்கள் எப்பொழுதும் எதையும் முக்கியத்துவமாக எடுத்துக் கொள்வதில்லை.</p><h3>
 கடகம்:</h3><p>
 கடக ராசியை பொறுத்தவரை இவர்கள் ஒரு விஷயத்தை பேசும் பொழுதே அதை மறந்து விடக் கூடிய தன்மை கொண்டவர்கள். அதாவது மிக எளிதாக ஒரு விஷயத்தை மறக்கக் கூடிய தன்மை இந்த கடக ராசியினருக்கு உண்டு. இவர்களால் எதையும் எப்பொழுதும் நிறைய மெனக்கிடல்களோடு செய்ய பிடிப்பதில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T10:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/kuladeivam-curse-sign-in-tamil-1784365477"></link>
            <id>https://ibcbakthi.com/article/kuladeivam-curse-sign-in-tamil-1784365477</id>
            <summary type="text">நாம் இந்த உலகத்தில் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து விட்டால் நிச்சயம் நமக்கு முழு இறை அருள் கிடைத்ததில்லை. அப்படியாக, ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் இந்த உலகத்தில் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து விட்டால் நிச்சயம் நமக்கு முழு இறை அருள் கிடைத்ததில்லை. அப்படியாக, ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குலதெய்வம் கட்டாயம் இருக்கும். </p><p>அந்த வகையில், குலதெய்வத்தினுடைய சாபம் அல்லது கோபம் அந்த குடும்பத்தினர் மீது இருக்கிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் குலதெய்வம் சாபம் இருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f07696a-fc69-4998-985b-1732a73695cf/26-6a5b41a77005d.webp' /></p><p> </p><p>குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்ற பொழுது அந்த திருமணத்தில் விரிசல் உண்டாகும். அதைப்போல், குழந்தைபேறு விஷயங்களில் தாமதம் நடக்கும். குடும்பமாக சென்று குலதெய்வ வழிபாடு செய்ய முடியாது.</p><p></p><p> </p><p>குடும்பம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்களில் பிரிந்து இருப்பார்கள், ஒற்றுமையாக இருப்பதற்கான நிலையை ஏற்படாது. இதற்கெல்லாம் ஒரு சாபம் அந்த வீட்டில் ஆட்கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f13fb5f-3e6e-456e-a306-8e088cace9c9/26-6a5b41a825f73.webp' /></p><p> </p><p>இதிலிருந்து விடுபடுவதற்கு குடும்பத்தினருடைய பெண் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைப்பது அவசியமாக இருக்கிறது. அதேபோல் குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று அங்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்வதும் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. </p><p>அதேபோல், குடும்பத்தில் இறந்த முன்னோரக்ளுக்கு நாம் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வதும் அவசியமாக இருக்கிறது. இதையெல்லாம் செய்கின்ற பொழுதுதான் நமக்கு அந்த சாபம் விலகி குடும்பத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் வாழ்க்கை நல்ல முறையில் முன்னேற்றம் பெறும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T09:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ந்தாலும் மீண்டும் வருவது எப்படி? அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/how-to-become-zero-from-hero-in-life-1784360552"></link>
            <id>https://ibcbakthi.com/article/how-to-become-zero-from-hero-in-life-1784360552</id>
            <summary type="text">நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைய துன்பங்களை சந்திக்கின்றோம். அந்த துன்பத்திலிருந்து மீண்டு வருவது என்பது நம்மிடம் இருக்கக்கூடிய தன்னம்பிக்கையாக இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைய துன்பங்களை சந்திக்கின்றோம். அந்த துன்பத்திலிருந்து மீண்டு வருவது என்பது நம்மிடம் இருக்கக்கூடிய தன்னம்பிக்கையாக இருந்தாலும் பல நேரங்களில் இறை அருளால் மட்டுமே அது சாத்தியமாகிறது. </p><p>மேலும், நாம் ஒவ்வொரு ஆன்மீக கதையை உற்று நோக்குகின்ற பொழுது இறைவன் நமக்கு வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுக்கிறார். </p><p>இந்த வாழ்க்கை என்பது பெயர், புகழ், பணம் சம்பாதித்தோம் என்று மட்டுமல்லாமல் இந்த வாழ்க்கை அறத்தோடு எப்படி வாழ்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு நன்மை தீமைகள் கிடைக்கிறது.</p><p></p><p> அந்த வகையில், மகாபாரதத்தில் மிகவும் வலிமையான குணம் படைத்த அனுமன் நமக்கு பல்வேறு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கிறார். </p><p>அதாவது எந்த நிலையிலும் துவண்டு போகாமல் மனதில் தைரியம் இருந்தால் மீண்டும் எழக்கூடிய பக்குவம் கிடைக்கும் என்பதற்கு அனுமன் மிகப்பெரிய சான்று. </p><p>அந்த வகையில் ஒருவர் வீழ்ந்தாலும் மீண்டும் எப்படி எழுவது என்பதை பற்றி நமக்கு பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_0YsKRk7dYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-18T07:42:39+00:00</updated>
        </entry>
    </feed>
