<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-19T15:56:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (20-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-raasi-palan-september-20-2026-sunday-1789818598"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-raasi-palan-september-20-2026-sunday-1789818598</id>
            <summary type="text">மேஷம்:
 இன்று திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். கலைப் பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த முடிவுக...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
 இன்று திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். கலைப் பணிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும்.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> வேலை தொடர்பாக திடீர் வெளியூர் பயணம் செல்லலாம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது அவசியம். விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.</p><h3> 
மிதுனம்: </h3><p>
உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.</p><p></p><p> </p><h3>
கடகம்:</h3><p>
 வியாபாரம் தொடர்பாக எதையும் சிந்தித்து செயல்படுவது அவசியம். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்கலாம். சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வதால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேறும். ஒரு விதமான இலக்குகளை நோக்கி நகர்வீர்கள். மனதில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பிறக்கும். </p><h3>
கன்னி:
</h3><p> வேலை செய்யும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை உயரதிகாரிகளுக்கு அதிகரிக்கும். மனதில் இருந்த கவலை விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
</p><h3> துலாம்:
</h3><p> ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பண சிக்கல் விலகும். </p><h3>விருச்சிகம்:</h3><p>
 இன்று தேவையில்லாத குழப்பங்களும் சிந்தனைகளும் வரலாம். உயர் கல்வி சார்ந்த சிந்தனை மேம்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.</p><p></p><p>
</p><h3> தனுசு:</h3><p>
 புதிய உறுப்பினர்கள் வழியாக மகிழ்ச்சியான செய்திகளை பெறுவீர்கள். மிகவும் பிரபலமான நபரின் அறிமுகம் கிடைக்கும். மேன்மையான நாள்.
</p><h3> மகரம்:
</h3><p> எதிர்பாராத செலவுகள் வரலாம். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் வரலாம். </p><h3>கும்பம்:</h3><p>
 பயணங்கள் வழியாக நல்ல பலன் உண்டு. உடல் ஆரோக்கியம் சார்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
</p><h3> மீனம்:
</h3><p> குடும்பம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெரியவர்களின் சந்திப்பால் மனமாற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மனதில் இருந்த சஞ்சலம் விலகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாளய பட்சம் காலத்தில் வரும் ஒவ்வொரு தித்திக்கும் தனி சிறப்பு உண்டு.. என்ன தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-special-about-mahalaya-paksha-worship-1789818318"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-special-about-mahalaya-paksha-worship-1789818318</id>
            <summary type="text">&amp;nbsp;2026 ஆம் ஆண்டிற்கான மகாளய பட்சம் செப்டம்பர் 26 சனிக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 10 சனிக்கிழமை அன்று நிறைவடைகிறது. பொதுவாக, மகாளய பட்ச காலத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 ஆம் ஆண்டிற்கான மகாளய பட்சம் செப்டம்பர் 26 சனிக்கிழமை அன்று தொடங்கி அக்டோபர் 10 சனிக்கிழமை அன்று நிறைவடைகிறது. பொதுவாக, மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்குமே ஒரு தனி சிறப்பு இருப்பது உண்டு. </p><p>மேலும், இந்த 15 நாட்கள் நாம் செய்யக்கூடிய வழிபாடு நம்முடைய முன்னோர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும் என்பதும் நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73cd24c3-65ec-46af-b4b0-fc73704ebdc3/26-6aae75cfdd31c.webp' /></p><p>
</p><h3>முக்கிய தேதிகள்:
</h3><p>ஆரம்ப நாள் (பௌர்ணமி ஷ்ராத்தம்): செப்டம்பர் 26, 2026 (சனி)
மகா பரணி திதி: இந்த 15 நாட்களில் வரும் பரணி நட்சத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது.
நிறைவு நாள் (மகாளய அமாவாசை / சர்வபித்ரு அமாவாசை): அக்டோபர் 10, 2026 (சனி)
இந்த மகாளய பட்சத்தில் சிறப்பு என்னவென்றால் நம்முடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் மற்றும் அன்னதானம் செய்வதற்கு மிக உகந்த காலமாகும். </p><p>மேலும், மறைந்த முன்னோர்கள் இந்த காலத்தில் நம்முடைய வீட்டிற்கு வருகை தருவதாக ஐதீகம். அதுமட்டுமல்லாமல் இறந்தவர்களுடைய திதி தெரியாதவர்களும் மற்றும் மறைந்தவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த இந்த மகாளய அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. </p><h3>
மகாளய பட்சத்தின் அரிய சிறப்புகள்
முன்னோர்களின் வருகை:
</h3><p>இந்த 15 நாட்களுமே எமதர்மராஜா பித்துரு லோகத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களை பூலோகத்திற்கு சென்று அவர்களுடைய சந்ததியினரை சந்தித்து அவர்கள் தரும் வழிபாட்டை ஏற்பதற்கு அனுமதி கொடுப்பதாக ஐதீகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063ae802-d772-4b7a-9bab-6628cef21506/26-6aae75d099878.webp' /></p><p>
</p><h3>யார் யாருக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம்?</h3><p> வழக்கமான அமாவாசைகளில் தந்தை வழி முன்னோர்களுக்கு மட்டுமே நாம் தர்ப்பணம் கொடுப்பதுண்டு. ஆனால், மகாளய பட்ச காலங்களில் நாம் தாய் வழி முன்னோர்கள் மற்றும் குருமார்கள் நண்பர்கள் மற்றும் விபத்துகளில் அல்லது வாரிசுகள் இல்லாமல் இறந்தவர்கள் என்று நமக்குத் தெரிந்த நபர்கள் இறந்திருந்தால் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கலாம்.</p><p> நம்முடைய நன்றி உணர்வை கட்டாயம் அந்த நாளில் வெளிப்படுத்தலாம். இது வெறும் சடங்காக மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அடித்தளம் போட்டு கொடுத்த நம்முடைய முன்னோர்களுக்கு செலுத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய நன்றி கடன் ஆகும். </p><h3>
என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது:
</h3><p> இந்த மகாளய பட்சம் 15 நாட்களும் தினமும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுத்தல் ஏழை எளியவர்களுக்கு மற்றும் விலங்குகளுக்கு முக்கியமாக காகத்திற்கு உணவு வழங்குதல் போன்றவை நிச்சியமாக செய்யலாம். ஆனால், இந்த 15 நாட்களும் எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சிகள் அதாவது திருமணம் காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/mahabharata-says-loss-is-not-end-but-a-new-start-1789816597"></link>
            <id>https://ibcbakthi.com/article/mahabharata-says-loss-is-not-end-but-a-new-start-1789816597</id>
            <summary type="text">மனிதர்களாகிய எல்லோருக்குமே கஷ்டமான காலங்களை கையாள்வதில் ஒரு சிரமங்களை சந்திக்கின்றோம். அந்த வகையில், மகாபாரதம் எனும் பெரும் காவியம் மனிதர்கள் எவ்வாறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதர்களாகிய எல்லோருக்குமே கஷ்டமான காலங்களை கையாள்வதில் ஒரு சிரமங்களை சந்திக்கின்றோம். அந்த வகையில், மகாபாரதம் எனும் பெரும் காவியம் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும்? இழப்பிலும் நாம் எப்படி தைரியத்தோடு இருக்க வேண்டும்? தர்மத்தை எந்த நிலையிலும் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒரு அற்புதமான ஒரு வாழ்க்கை பாடம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது.</p><p> 
அந்த வகையில், ஒருநாள் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் மிகவும் மனம் உடைந்து கேட்கிறார். "கிருஷ்ணா" என்னிடம் இருந்த எல்லாவற்றையும் நான் இழந்துவிட்டேன். </p><p>இனி என்னால் எப்படி நம்பிக்கை உடன் இருக்க முடியும்? என்று அவர் ஒரு சந்தேகத்தை கேட்கிறார். அப்பொழுது கிருஷ்ண பகவான் அமைதியாக அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்.. அர்ஜுனா! நீ இழந்தது பொருட்களை மட்டுமல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b14f1fc-bdc1-408f-8ccc-517da31f972c/26-6aae6f1694673.webp' /></p><p></p><p> </p><p>உன்னுடைய எதிர்பார்ப்புகள், உன்னுடைய கனவுகள், உன் நம்பிக்கையும் கூட உன்னிடம் இருந்து விலகி விட்டதாக நீ நினைக்கிறாய். </p><p>ஆனால், அது நிச்சயம் வாழ்க்கையின் முடிவே அல்ல.
 இதுதான் ஒரு புதிய தொடக்கம் என்கிறார் கிருஷ்ணர். பிறகு மீண்டும் அர்ஜுனன் எல்லாம் இழந்துவிட்டேன் என்று நீங்களே சொல்கின்ற பொழுது எப்படி நம்பிக்கை பெற முடியும் என்று அர்ஜுனன் கேட்க..</p><p> கிருஷ்ணர் அங்கு ஒரு அழகான பதிலை கூறுகிறார். நீ இழந்ததை நினைத்து வருந்துவதை விடவும் இன்னும் உன்னுடன் இருப்பதை நினைத்து நன்றி உடன் இரு என்கிறார்.
 எதுவாக இருந்தாலும் உன் முயற்சியை கைவிடாதே. </p><p>நம்பிக்கை என்பது எல்லாம் நம்முடைய விருப்பப்படி நடக்கும் என்பது அல்ல. எதை இழந்தாலும் மீண்டும் முயற்சி செய்வதே உண்மையான நம்பிக்கை.</p><p>ஆதலால், நீ சந்தித்த தோல்வியை நினைத்து அதே இடத்தில் நின்று விடாதே. அதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு மீண்டும் உன்னுடைய பயணத்தை நம்பிக்கையோடு தொடங்கு என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக சில கதவுகள் மூடப்படலாம்.</p><p>சில பாதைகள் முடிவிற்கு வரலாம். நம்முடைய கனவுகள் நம்மை விட்டு தூரமாக செல்லலாம். அதனால் வாழ்க்கை எப்பொழுதும் முடிவதில்லை. ஒரு மனிதனுடைய முயற்சி செய்யக் கூடிய துணிவு இருக்கும் வரை நிச்சயம் அவனுக்கான பாதைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். இழப்புகள் முடிவல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d9d0027-8841-466b-9a20-3eeb3488720a/26-6aae6f1752e7f.webp' /></p><p></p><p> </p><p>நம்பிக்கைதான் ஒரு மனிதனுடைய உண்மையான வெற்றி. ஆக, இதை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் பலருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துயரமும் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் நான் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு பெரும் போராட்டம் இருக்கலாம். வாழ்க்கை எந்த இடத்தில் நிறுத்தி வைக்கிறதோ அதை இடத்திலிருந்து நீங்கள் மீண்டும் முயற்சி செய்து தொடங்குங்கள். </p><p>அங்கிருந்து உங்களுக்கான ஒரு பாதையை நீங்களே உருவாக்குங்கள். உங்களை நேசியுங்கள். உங்களுக்காக வாழ பாதை உருவாக்குங்கள். அதில் நம்பிக்கை விதையுங்கள் ஒரு நாள் அதற்குரிய பலன் தேடி வரும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T11:37:26+00:00</updated>
        </entry>
    </feed>
