<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-08T10:56:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாலட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய 6 தான தர்மங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6-donation-women-should-do-to-get-lakshmi-blessing-1786185479"></link>
            <id>https://ibcbakthi.com/article/6-donation-women-should-do-to-get-lakshmi-blessing-1786185479</id>
            <summary type="text">ஒவ்வொரு வீட்டினுடைய பெண்கள் தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றுகின்றோம். காரணம், ஒரு பெண் மனம் வைத்தால் தான் அந்த குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வீட்டினுடைய பெண்கள் தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றுகின்றோம். காரணம், ஒரு பெண் மனம் வைத்தால் தான் அந்த குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். </p><p>அந்த வகையில், பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவும் அவர்கள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் என்னவென்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadf7952-4043-470f-a6f6-1a8344390fd4/26-6a77070a4a499.webp' /></p><p></p><p>
</p><p>1. பெண்கள் அன்னதானத்திற்கு காய்கறிகள் தானம் செய்வதால் அவர்களுக்கு வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
</p><p>2. பெண்கள் அரிசி தானம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.</p><p>
3. பெண்கள் தானியங்கள் தானம் செய்தால் வீடுகளில் குடும்பத்தினருடைய நவகிரக தோஷம் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ed70bf-b938-4c0c-a3c6-6b9e2aec3182/26-6a7707098094e.webp' /></p><p></p><p> </p><p>
4. பெண்கள் இயலாதவர்களுக்கு மருத்துவ செலவுக்காக தர்மம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் சேரும். ஆரோக்கிய குறைபாடு விலகும்.
</p><p>5. மேலும், வீடுகளில் அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்கின்ற பொழுது நல்ல நேரம் பார்க்காமல் கட்டாயம் அடகு வைக்க கூடாது. இது மிகப்பெரிய அளவில் ஒரு இழப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் செய்த பாவத்திற்கு உரிய தண்டனை எப்பொழுது கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/karma-lessons-everyone-should-know-about-it-1786180613"></link>
            <id>https://ibcbakthi.com/article/karma-lessons-everyone-should-know-about-it-1786180613</id>
            <summary type="text">ஒருவர் நமக்கு தீங்கு செய்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் நமக்கு தீங்கு செய்தவருக்கு எப்பொழுது அந்த தண்டனை வந்து சேரும் என்கின்ற ஒரு எண்ணம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவர் நமக்கு தீங்கு செய்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் நமக்கு தீங்கு செய்தவருக்கு எப்பொழுது அந்த தண்டனை வந்து சேரும் என்கின்ற ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியாக, அதற்கு ஒரு தீர்வாக ஒரு கதை ஒன்று இருக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.</p><p>ஒரு நாள் ஒரு சீடன் அவருடைய குருவிடம் சென்று குருவே என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்தி விட்டார். அவர் எனக்கு செய்த இந்த தீமை அவருக்கு கட்டாயமாக திரும்பி செல்ல வேண்டும். அதற்குரிய தண்டனை கர்மபலன் அனுபவிக்க வேண்டும் என்று அவர் கோபமாக சொல்கிறார். குரு அமைதியாக அந்த சீடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். </p><p>பிறகு குரு அருகில் இருக்கக்கூடிய ஒரு நெருப்பிலிருந்து ஒரு கரித்துத்துண்டை எடுத்து சீடனிடம் கொடுக்கிறார். சீடன் குரு கொடுத்த அந்த கரித்துத்துண்டை கையில் பிடிக்கிறார். சில நொடிகளில் அவருடைய கை சுடத்துவங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a17952a-8844-4bdd-9cde-8b2d658e1a78/26-6a76f40759c62.webp' /></p><p></p><p> </p><p>அந்த சூடு தாங்க முடியாமல் குருவே இது ரொம்ப சூடாக இருக்கிறது என்று கையை உதறிவிட்டார். அப்பொழுது குரு சொல்கிறார், இப்பொழுது இந்த இடத்தை நன்றாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.</p><p> "நெருப்பு உன்னை சுட வேண்டும் என்று நினைத்து தான் நீ அதை கையில் பிடித்தாயா? கட்டாயமாக இல்லை. நீ அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால் தான் அந்த நெருப்பு உன்னை சுடுகிறது.</p><p> இதை போல் தான் யாராவது நமக்கு தீங்கு செய்கின்ற வேளையில் அவர்களுக்கு அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் நாம் அனுபவித்த வலி அவர்களுக்கு சென்று சேர வேண்டும், அவர் செய்த கர்ம வினைக்கான பலன் அனுபவிக்க வேண்டும் என்று அந்த சம்பவத்தையும் நடந்த நிகழ்வுகளையும் கோபத்தையும் நம் மனதில் பிடித்துக் கொண்டே இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5388776-92d0-472f-a850-51b4dca92585/26-6a76f40813b9d.webp' /></p><p></p><p> </p><p>அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் செய்த தவறின் நெருப்பை நாம் தான் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது அவர்களுக்கு சுடுகிறதா என்று தெரியாது. ஆனால், நெருப்பு நம்மை மட்டும் தான் தொடர்ந்து எரித்துக் கொண்டே இருக்கும். </p><p>ஆக, ஒருவர் செய்வதற்குரிய கர்ம பலனை அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள். அது நம்முடைய வேலை அல்ல. நம்முடைய வேலை இந்த நெருப்பை மட்டும் கீழே போட்டுவிட்டு அவர்களை மன்னித்து பழக வேண்டும். </p><p>அது அவர்களுக்காக இல்லை. நம்முடைய மன அமைதிக்காக. சில நேரங்களில் காயத்திற்கான மருந்து நாம் நடந்த நிகழ்வுகளை அப்படியே விட்டுவிடுவதில் இருந்து தான் கிடைக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் மகர ராசியா? உங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-capricorn-zodiac-should-do-and-dont-in-life-1786174063"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-capricorn-zodiac-should-do-and-dont-in-life-1786174063</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் சனிபகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மகர ராசியினர் கடும் உழைப்பாளிகள். பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை சாதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் சனிபகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மகர ராசியினர் கடும் உழைப்பாளிகள். பிடிவாத குணம் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை சாதிக்கும் வரை இவர்கள் ஓய்வதில்லை.</p><p>அப்படியாக, இவர்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்வதை தவிர்த்தால் இவர்கள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை பெறலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம். 
மகர ராசியை பொறுத்த வரை இவர்கள் புதிய காரியங்களை தொடங்குவதற்கு செவ்வாய் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர்ப்பது நல்லது. </p><p>இவர்கள் முடிந்தவரை ரியல் எஸ்டேட், பாறைகளை உடைத்தல் மற்றும் அரசு ஒப்பந்தங்கள் சார்ந்த தொழில்களை இவர்கள் தவிர்ப்பது நல்லது. மருத்துவ துறையில் பணிபுரிபவர்கள் அதை ஒரு சேவையாக மட்டும் செய்ய வேண்டும்.</p><p></p><p> </p><p>எப்பொழுதும் அதை ஒரு வணிகமாக இவர்கள் மாற்றக் கூடாது. இவர்கள் யாருக்கும் எளிதாக நான் இதை செய்து முடிக்கிறேன் என்ற ஒரு வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். அப்படி வாக்குறுதி கொடுத்து விட்டால்அதை உடனடியாக இவர்கள் செய்து முடிக்க வேண்டும். </p><p>இவர்கள் எப்போதும் தண்ணீரை வீணாக செலவழிக்க கூடாது. இது இவர்கள் செல்வத்தை இழக்க நேரிடும். இவர்கள் எப்பொழுதும் சிவப்பு மற்றும் பச்சை நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து விட வேண்டும். </p><p>அதேபோல், மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசியினர் இடையே இவர்கள் நெருக்கமான உறவுகள் வைத்திருப்பதையும் இவர்கள் தவிர்த்து விட வேண்டும். மேலும், இவர்கள் வாழ்க்கையில் என்ன விஷயங்களை செய்யலாம் செய்யக்கூடாது என்று விரிவாக இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tarKQEOUGQM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T07:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: கேது பார்வை ஆரம்பம்.. வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-17-sun-kethu-conjuction-prediction-1786169111"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-17-sun-kethu-conjuction-prediction-1786169111</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை மாற்றுகிறார்கள். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களுக்கும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் அவர்களுடைய ராசியை மாற்றுகிறார்கள். அந்த வகையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரிய பகவான் தன்னுடைய சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். </p><p>ஜோதிட ரீதியாக சூரியன் அவருடைய சொந்த ராசியில் இருப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிம்மத்தில் ஏற்கனவே கேது பகவான் உள்ளார். சூரியன் கேது சேர்க்கை திடீர் மாற்றங்களையும், திடீர் திருப்பங்களையும் ஒரு சில ராசிகளுக்கு கொடுக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c54804-e4d5-4ad9-aaee-afcb909b2ca4/26-6a76c7195b599.webp' /></p><p></p><p> </p><h3>சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு நீண்ட நாட்கள் எதிர்பாராத பணவரவு கைகளுக்கு வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் மீண்டும் துவங்கும். வியாபார ரீதியாக முக்கிய நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு தொடர்பான வியாபாரங்கள் நல்ல லாபத்தை பெற்று கொடுக்கும்.
</p><h3> கன்னி:
</h3><p> இவர்களுக்கு சிம்மம் கேது தொடர்பானது இவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக நல்ல உயரத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் சம்பள உயர்வு இல்லை வேலையில் முன்னேற்றம் இல்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு இது பொன்னான காலகட்டமாக அமையப்போகிறது. தந்தை வழியே சொத்துக்கள் தந்தை வழி முழு ஆதரவையும் பெறுவீர்கள்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> சூரியனுக்கு கேது தொடர்பானது இவர்களுக்கு இழந்த மரியாதையை மீண்டும் பெற்று கொடுக்கப்போகிறது. குடும்பத்தில் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையும் குழந்தைகள் உயர் பதவிகளுக்கு போவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்க போகிறது. சொத்துக்கள் பிரச்சனை விலகும். நீண்ட நாள் சொத்து விற்பனையாகவில்லை என்று வருந்துபவர்களுக்கு நல்ல காலமாக அமையப்போகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இ</u></b>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:05:20+00:00</updated>
        </entry>
    </feed>
