<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-10T13:20:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 7 பாரம்பரிய வழிமுறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-things-women-must-follow-according-hindu-shastra-1783684893"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-things-women-must-follow-according-hindu-shastra-1783684893</id>
            <summary type="text">&amp;nbsp;ஆன்மீகம் என்பது ஒரு பெரிய கடல் இதில் நாம் நிறைய விஷயங்களை தேடி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆன்மீகம் என்பது ஒரு பெரிய கடல் இதில் நாம் நிறைய விஷயங்களை தேடி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அப்படியாக, வீடுகளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான எட்டு பாரம்பரிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
</p><p>1. வீடுகளில் பெண்கள் கோலமிடும் பொழுது தெற்கு பார்த்த நின்றவாறு கோலம் போடக்கூடாது.</p><p>
2. அதேபோல் திருமணம் ஆன பெண்கள் கால்களில் ஒரு விரல் மட்டும் மெட்டி அணிய வேண்டும். ஒரு சிலர் 3 விரல்களில் மெட்டி அணிந்து இருப்பார்கள். அவ்வாறு அணிவதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள் காரணம் அதிக அளவில் மெட்டி அணிகின்ற பொழுது கணவனின் ஆரோக்கியத்திலும் தொழில் வளர்ச்சியிலும் பாதிப்பை உண்டு செய்யும்.</p><p>3. கர்ப்பிணி பெண்கள் ஒரு பொழுதும் உக்கிரமான தெய்வங்கள் வழிபாடு செய்வது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.</p><p>4. பெண்கள் முடிந்தவரை தவறாமல் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இவை லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்வதோடு பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32f9e2b-684e-4ca6-a4f1-de54754066f0/26-6a50df1f32061.webp' /></p><p>5. முக்கியமாக வீடுகளில் அம்மாவாசை தவசம் போன்ற நாட்களில் ஒருபொழுதும் கோலம் போடக்கூடாது.
</p><p>6. கோவில்களில் கொடுக்கப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது.</p><p>
7. அதேபோல் பெண்கள் கோவிலுக்குள் செல்லும் பொழுது அல்லது வீடுகளிலும் முடிந்து வரை முந்தானையை தொங்க விட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T12:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினம் ஒரு திருமணம் செய்யும் நித்திய கல்யாணப் பெருமாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/nithya-kalyana-perumal-temple-in-tamil-1732450588"></link>
            <id>https://ibcbakthi.com/article/nithya-kalyana-perumal-temple-in-tamil-1732450588</id>
            <summary type="text">செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எம்பெருமான் நித்திய கல்யாணப் பெருமாளாக, ஆதி வராக மூர்த்தியாக எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எம்பெருமான் நித்திய கல்யாணப் பெருமாளாக, ஆதி வராக மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். இதனால் இவ்வூர் வராகபுரி என்றும் அழைக்கப்பட்டது. </p><p>இங்கு எழுந்தருளியிருக்கும் வராக பெருமாள் லட்சுமி வராக மூர்த்தியாக அன்யோன்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் அகிலவல்லி தவிர கோமளவல்லி நாச்சியார் என்னும் தாயாரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c05c74-b719-48aa-84ff-88c3f8b9ad87/24-6743191e0d214.webp' /></p><h3>பெருமாளின் திருக்கோலம்
</h3><p>நித்யகல்யாண பெருமாள் தனது இடது மடியில் அகில வல்லி என்னும் நாச்சியாரை இருத்தி வலது கையால் அவரை அனைத்து படி, இடது கையால் அன்னையின் திருப்பாதத்தைத் தாங்கிய படி காட்சி அளிக்கின்றார். பெருமாளின் வலது கால் பூமியில் பதிந்திருக்க அக்காலின் கீழே ஆதிசேஷன் காணப்படுகின்றான். </p><p>வலது மேல் கையில் சக்கரமும் இடது மேல் கையில் சங்கும் உள்ளது இத்தகைய அன்யோன்ய கோலத்துடன் ஆதி வராக மூர்த்தி காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு பிரிந்த தம்பதியர் வந்து வேண்டிக் கொண்டால் முன்பை விட பிரியமாகவும் சிநேகமாகவும் அந்யோந்யமாகவும் இருப்பார்கள்.&nbsp;</p><p></p><h3>கோஷ்டத்தில் விநாயகர்
</h3><p>நித்திய கல்யாண பெருமாள் கோவில் கோஷ்டத்தில் விநாயகரும் வைஷ்ணவியும் காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும். பொதுவாக வைணவக் கோயில்களில் விநாயகரைப் பார்ப்பது அரிது. ஓரிரு கோவில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் தூணில் இருப்பார். இக்கோவிலில் கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ளார்.இக்கோவிலில் 12 ஆழ்வார்களுக்கும் மணவாள மாமுனிகளுக்கும் ராமானுஜருக்கும் சன்னதிகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0741ce8-e007-4235-a773-0cd3f94720db/24-6743191e89f43.webp' /></p><h3>கல்யாணக் கதை
</h3><p>ஆதி வராக மூர்த்திக்கு தினமும் ஒரு கல்யாணம் நடப்பதால் நித்திய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். காலவ ரிஷி என்பவருக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர் தன்னுடைய அனைத்துப் பெண் குழந்தைகளையும் பெருமாளே மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் இருந்தார். </p><p>அவருடைய தவத்தின் உறுதியைக் கண்ட பெருமாள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். இத்தலத்தில் எழுந்தருளி காலவ ரிஷியின் மகள்களை அங்கு அழைத்து வரச் செய்து தினம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆக 360 நாட்களும் இவருக்கு இங்குத் திருமணக் கொண்டாட்டம் தான். இவர் மணமகன் கோலத்தில் இருப்பதால் அவரது தாடையில் இயற்கையிலேயே திருஷ்டி போட்டு உள்ளது. எனவே கண் திருஷ்டி உள்ளவர்கள் இங்கு வந்தால் கண் திருஷ்டி விலகும்.&nbsp;</p><p>&nbsp;</p><h3>திருமணத் தடை விலக</h3><p>கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு திருமணத்தடை உள்ளவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறும். திருமண தோஷம் உள்ளவர்கள் இரண்டு மாலைகளை வாங்கி வந்து ஒன்றைப் பெருமாளுக்கு சாத்தி வணங்கவேண்டும். </p><p>மற்றொன்றை பட்டர் பெருமாளிடம் வைத்து தோஷம் உள்ளவரின் கையில் கொடுப்பார். அவர் அந்த மாலையுடன் கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்த பின்பு கொடி மரத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின்பு மாலையுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும். </p><p>திருமணம் ஆனதும் தம்பதி சமேதராய் இங்கு வந்து அந்த மாலையை இங்கே உள்ள புன்னை மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும். கோவிலை மூன்று முறை வலம் வந்து பெருமாளையும் தாயாரையும் சேவிக்க வேண்டும்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb6563e-d89e-4edb-bda0-bdf3e39ab73f/24-6743191f0af4d.webp' /></p><h3>மணமகனுக்குப் பஞ்சம்</h3><p>
திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள வராக மூர்த்தியும் திருவிடந்தை வராக மூர்த்தியும் ஒருவரே என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. திருமலையில் பல்லவ மன்னன் ஒருவன் தினம் ஒரு ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தான். </p><p>ஒரு நாள் பெண் கிடைத்து விட்டாள். ஆனால் அவளுக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று அவன் கலங்கி நிற்கையில் எளிவந்த பிரானாகிய எம்பெருமான் இரக்கம் கொண்டு அவனுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற விரும்பி மணமகன் கோலத்தில் அங்கு வந்தார். அவனுடைய பிரார்த்தனை நிறைவேறியது.&nbsp;</p><p></p><h3>சுக்கிர தோஷம் </h3><p>நீங்கும்
திருவிடந்தையில் வராக மூர்த்திக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அபிஷேகம் செய்பவருக்கு சகல தோஷங்களும் நிவர்த்தி அடையும். இது சுக்கிர தோஷம் தீரும் தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். </p><p>வெளிப்பிரகாரத்தில் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. அங்கே ரங்கநாதன் ரங்கநாயகிக்கும் சன்னதிகள் உள்ளன. சுக்ர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்க நாதனை போல் திருவிடந்தை ரங்கநாதனும் திருமண தோஷத்தை நீக்குவார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35bcbe0-9276-4346-8726-631d23cf06b0/24-6743191f7df06.webp' /></p><h3>நாகதோஷம் நீங்கும்</h3><p>
திருவிடந்தைக்கு வந்து ரெங்கநாதனையும் வராக மூர்த்தியையும் வந்து வணங்கினால் நாகதோஷமும் நீங்கிவிடும். ஜாதகத்தில் ஏழு எட்டாம் இடங்களில் ராகு கேது இருப்பதால் நாக தோஷம் காரணமாக திருமணத் தடை ஏற்படும். இவர்களுக்கு இத்திருத்தலம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். மக நட்சத்திரமன்ற இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. அன்றைக்கு இக்கோவிலுக்கு வந்து வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பதும் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.</p><h3>புராணக்கதை 2.
</h3><p>மேகநாதன் என்ற அசுரனின் மகன் பெயர் பலி என்பதாகும். இவன் மிகச் சிறந்த நீதிமான். மாலி, மாலியவான், சோமாலி என்ற மூன்று அசுரர்களும் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தனர் ஆனால் தேவர்கள் இம்மூவரையும் போரில் தோற்கடித்து விரட்டி விட்டனர். </p><p>தோற்றுப் போன மூவரும் பலியிடம் வந்து சரணாகதி அடைந்து தேவர்களை வெற்றி கொள்ள தங்களுக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். பலியும் இவர்களோடு சேர்ந்து தேவர்களோடு போரிட்டு அவர்களை வென்றான்.</p><p> தேவர்களுடன் போரிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க பலி இத்திருத்தலத்திற்கு வந்து வராக தீர்த்தத்தில் குளித்து தினமும் எம்பெருமானுக்கு பூஜை செயதான். மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று எம்பெருமான் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சமும் அருளினார் என்பது இத்தல புராணக் கதை ஆகும்&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e337317-937e-4ebc-ad07-43e38ec44c9d/24-6743192000ca2.webp' />&nbsp;</p><h3>திருத் தலப் பெருமை</h3><p>
நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் கோவிலில் வைகாணச ஆகமப்படி நான்கு கால பூஜை நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அழகிய மணவாளதாசர் 108 திருத்தலங்களையும் போற்றும் வகையில் 108 திருப்பதி அந்தாதி பாடினார்.</p><p> அதில் 'தொண்டானேன் திருவிடை என்றைக்குமே தெரிந்து' என்று இத்தலத்திற்குத் தான் தொண்டனாகியதைக் குறிப்பிட்டுள்ளார்.

இவரைப்போல் குரவை ராமானுஜ தாசரும் 108 திருத்தலங்களைப் பற்றி 108 திருப்பதி திருப்புகழ் என்ற நூலை இயற்றினார். </p><p>இந்நூலில் 92 ஆவது பாசுரத்தில் திருவிடந்தையைக் குறிப்பிட்டுள்ளார். 'விட எந்தை பதிவாழ் மேவிய பெருமாளே' என்று பெருமாளை அழைத்து வணங்குகின்றார். 

கோவில் விழாக்கள் திருவிடந்தையில் மாதந்தோறும் ஒரு விழா நடைபெறுகின்றது.</p><p></p><p> </p><p>சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்தோற்சவம், ஆனி மாதம் கருட சேவை, ஆடிப்பூரத்தில் நாச்சியாருக்கு விழா, ஆவணியில் கஜேந்திர மோட்சம், கண்ணனின் பிறப்பைக் கொண்டாடும் போது உறி அடி திருவிழா, புரட்டாசி மாதம் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் தனுர் மாச பூசை, மாசி மாதம் மாசி மகம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் என்று 12 மாதமும் இங்குக் கோயில் விழாக் கோலம் கொண்டிருக்கும்.</p><p> இக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு வீடு கட்டுதல், மனையடி வாங்குதல் ,பதவி உயர்வு, நல்ல சம்பள உயர்வு, நல்ல வேலை கிடைத்தல், விருப்பப்பட்ட வாகனங்கள் வாங்குதல் என்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற நல்ல பலன்கள் கிடைக்கும்</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T11:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.. வீடு கார் வாங்கி மகிழப் போகும் ராசிகள் யார் ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-venus-transit-in-puram-natchiram-prediction-1783679182"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-venus-transit-in-puram-natchiram-prediction-1783679182</id>
            <summary type="text">ஜூலை 16ஆம் தேதி சுக்கிர பகவான் அவருடைய சொந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்திற்கு நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை திடீர் வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 16ஆம் தேதி சுக்கிர பகவான் அவருடைய சொந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்திற்கு நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை திடீர் வீடு, கார் வாங்கக்கூடிய யோகம், தொழிலில் முன்னேற்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம். </p><p>


ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்டு சில ராசிகள் ஒரு சில கால நேரத்தில் அவர்களுடைய ராசிகளின் இடத்தை மாற்றுவார்கள். </p><p>அந்த வகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சுக்கிர பகவான் ஜூலை 16ஆம் தேதி காலை 7.11 மணிக்கு பூர நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். பூரம் சுக்கிர பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd6b4551-3532-4274-a99e-546f788dac39/26-6a50c8d53f33e.webp' /></p><p> </p><h3>

ரிஷபம்:</h3><p>
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கொடுக்கப்போகிறது. பணவரவு எதிர்பார்த்த இடங்களில் இருந்து இவர்கள் கைகளுக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் இவர்களுடைய பெயர், புகழ் உயரும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகமும், வீடு வாங்கக்கூடிய அமைப்பு உருவாகும்.</p><h3>

 சிம்மம்:
</h3><p> இந்த காலகட்டம் நீங்கள் உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வாய்ப்புகள் வேலையில் தேடி வரும். உங்களுடைய பேச்சில் இனிமை காணப்படும். உங்களுடைய பேச்சு திறனால் முக்கிய காரியத்தை நிறைவேற்றுவீர்கள். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை சேர்க்கை உருவாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.</p><p></p><h3>துலாம்:
</h3><p> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த விஷயங்கள் கைக்கூடி வரப்போகிறது. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் பிறப்பதற்கான யோகம் உருவாகும். திருமண பலன் கைகூடிவரும், எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு உதவியும் ஆடம்பரமான வாழ்க்கையும் அமையப் போகிறது, ஒரு சிலருக்கு இந்த கா.லகட்டங்களில் கைகளுக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும்&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T10:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/characterstics-prediction-of-person-born-on-gemini-1783673351"></link>
            <id>https://ibcbakthi.com/article/characterstics-prediction-of-person-born-on-gemini-1783673351</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசி மற்றும் மிதுன லக்னக்காரர்கள் அவர்கள் வாழ்க்கை குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மிதுன ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புதன் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட மிதுன ராசி மற்றும் மிதுன லக்னக்காரர்கள் அவர்கள் வாழ்க்கை குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே காதல் மன்னர்கள் என்று சொல்லலாம். </p><p>இவர்கள் ஒரு இடத்தில் பேசுகிறார்கள் என்றால் தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்களுடைய பேச்சு அமையும். இவர்களுக்கு கவிதை, ஓவியம், கலை ஆகிவை ரசிப்பது என்றால் மிகவும் பிடித்தமானது. இவர்களுடைய பலம் இவர்களுடைய பேச்சாக இருந்தாலும் இவர்களுடைய பேச்சு இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சிக்கலை கொடுத்து விடுகிறது. </p><p>இவர்களால் நெருங்கியவர்களிடம் எதையும் அவ்வளவு எளிதாக மறைக்க முடியாது. அதைப்போல் இவர்கள் மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த சுதந்திரமான குணம் இவர்களுக்கு காதல் வாழ்க்கையில் சில குழப்பங்களை கொடுத்து விடும்.</p><p></p><p> </p><p>திருமண வாழ்க்கை இன்று வருகின்ற பொழுது இவர்களுடைய வாழ்க்கை துணைக்கு இவர்கள் மிகுந்த ஆறுதலாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை துணையின் கனவுகளை நிறைவேற்றுவதில் இவர்கள் சிறப்பானவர்களாக விளங்குவார்கள். </p><p>மேலும், இவர்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய பெருமாள் மற்றும் தாயார் வழிபாடு மற்றும் திருக்கல்யாண உற்சவங்களில் அன்னதானம் செய்வது இவர்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். </p><p>மேலும், மிதுன ராசி மற்றும் மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Muig299Ig8k" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T08:49:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான வாழ்க்கை பாடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/one-thing-we-must-learn-from-12-zodiac-sign-1783669227"></link>
            <id>https://ibcbakthi.com/article/one-thing-we-must-learn-from-12-zodiac-sign-1783669227</id>
            <summary type="text">ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் நன்மை தீமை என்று இரண்டு குணங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வாழ்க்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் நன்மை தீமை என்று இரண்டு குணங்கள் இருக்கிறது. அப்படியாக, 12 ராசிகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வாழ்க்கை பாடத்தை பற்றி பார்ப்போம்.
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்கள் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை முடிக்காமல் பின் வாங்க மாட்டார்கள். அதாவது எடுத்த வேலையை முழுமையாக முடிப்பதற்கு நாம் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> பிறரை பகைக்காமல் ஒரு காரியத்தை எப்படி சாதிக்க வேண்டும் என்று இவர்களை பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><h3>
 மிதுனம்:
</h3><p> காலம் வரும் வரை பொறுமையாக காத்திருந்து தன்னுடைய நகர்வை வைக்கக் கூடிய வித்தையை இவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.</p><p></p><p>
</p><h3> கடகம்:
</h3><p>சுற்றி உள்ளவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> எல்லோரிடமும் பகைக்காமல் நட்பாக பழகுவது எப்படி என்று இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
</p><h3> கன்னி:
</h3><p> குடும்பத்தினரை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
</p><h3> துலாம்:</h3><p> ஒருவரை எப்படி முழுமையாக நம்ப வைப்பது என்பதை இவர்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> யாரையும் முழுமையாக நம்பாமல் முதலில் அவர்களை ஆராய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும்.
</p><h3> தனுசு:</h3><p>
 ஒருவருடைய உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p></p><p>
</p><h3> மகரம்:</h3><p>
 எந்த நேரத்திற்கு எப்படி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
</p><h3> கும்பம்:
</h3><p> தன்னை நம்பியவர்களை கைவிடாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
</p><h3> மீனம்:</h3><p>
 எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று பார்ப்போம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T07:40:33+00:00</updated>
        </entry>
    </feed>
