<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-16T15:16:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் 6 ஆம் பாவம்..தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6th-place-in-horoscope-and-secret-behind-it-1784203743"></link>
            <id>https://ibcbakthi.com/article/6th-place-in-horoscope-and-secret-behind-it-1784203743</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. அப்படியாக, ஆறாம் பாவம் என்பது மிகவும் முக்கியமானதாக இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் 12 கட்டங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு அமைப்பு உள்ளது. அப்படியாக, ஆறாம் பாவம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. </p><p>ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவம் வேலை செய்ய தொடங்குகிறது என்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் பிடித்தது மட்டும் கிடைப்பதில்லை நம்முடைய குண நலன்களை அவை மாற்றத்து தொடங்குகிறது. </p><p>அதாவது ஆறாம் பாவம் என்றால் ஜோதிடத்தில் எதிரி கடன், நோய் மட்டுமில்லை அவை தான் ஒழுக்கம், உழைப்பு, புதுமை, சுயகட்டுப்பாடு போன்ற குணங்களை குறிக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376da651-956b-454a-9ab1-c9dcffcc03d6/26-6a58c9e08d1e0.webp' /></p><p>ஆறாம் பாவத்தில் ஒருவருக்கு வக்கிர செவ்வாய் இருப்பவர்கள் வெளியில் இருக்கக்கூடிய எதிரிகளை ஜெயிப்பதை விட இவர்கள் உள்ளுக்குள் இருக்கின்ற கோபத்தை தான் முதலில் ஜெயிக்க கற்றுக் கொள்ள வேண்டும். </p><p>அதை போல், ஆறாம் பாவத்தில் புதன் பகவான் இருக்கிறார் என்றால் இவர்கள் எப்பொழுதும் பேசுகின்ற விதம் முடிவு எடுக்கின்ற விதத்தை கட்டாயம் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். </p><p>அதேபோல், ஆறாம் பாவத்தை வக்கிர புதன் அமைந்திருந்தால் தேவையில்லாத ஒரு விஷயத்தை எப்பொழுதும் மீண்டும் மீண்டும் போட்டு குழப்பிக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64502dc-78ba-499d-92d1-2abd1a08c5da/26-6a58c9e144820.webp' /></p><p> </p><p>ஒருவருக்கு ஆறாம் பாவத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால் அங்கு ஒழுக்கம் பொறுமை தினம் தொடர்ந்து உழைக்கிற பழக்கத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆறாம் பாவத்தில் வக்ரசனி இருக்கிறது என்றால் இவர்களுக்கு தாமதமாக வந்தாலும் மனம் தளராமல் இவர்கள் முயற்சி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஆக, ஆறாம் பாவம் நமக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய முக்கியமான பாடம் நம்முடைய ஜாதகத்தில் எதிரிகள் எப்பொழுதும் வெளியே இல்லை நம்மிடம் தான் இருக்கிறார். அதை முதலில் நாம் வென்று விட்டால் மற்ற எல்லாவற்றையும் நாம் எளிதாக வென்று விடலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகப்பெருமான் தமிழ் கடவுளா? இல்லையா? குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/is-murugar-is-tamil-god-what-history-says-about-it-1784202322"></link>
            <id>https://ibcbakthi.com/article/is-murugar-is-tamil-god-what-history-says-about-it-1784202322</id>
            <summary type="text">இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பரம்பொருள் என்பவர் ஒருவரே ஆனால் அவரே காலத்திற்கு தகுந்தார் போல் வெவ்வேறு இடங்களிலும் நேரத்திலும் அவதாரம் எடுத்து இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பரம்பொருள் என்பவர் ஒருவரே ஆனால் அவரே காலத்திற்கு தகுந்தார் போல் வெவ்வேறு இடங்களிலும் நேரத்திலும் அவதாரம் எடுத்து இருக்கிறார். ஆதலால், நாம் எப்பொழுதும் இறைவனை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் அடக்குவது தவறானது என்று சொல்லப்படுகிறது. </p><p>
மேலும், இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் மதச் சடங்குகள் என்பது வெறும் நம்பிக்கைக்கானது மட்டுமல்ல அதற்குப் பின்னால் நமக்கு நிறைய தத்துவங்களையும் உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.</p><p> மேலும், கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒரிசா, மகாராஷ்டிரா காஷ்மீர், இந்தோனேசியா போன்ற பல்வேறு இடங்களிலும் இருந்ததற்கான கல்வெட்டு மற்றும் நாணயச் சான்றுகள் இருக்கிறது.</p><p></p><p> </p><p>அதாவது படையெடுப்புகளால் பல கோவில்கள் சிதைக்கப்பட்டதால் பல ஆதாரங்கள் மறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு பக்தர்கள் எப்பொழுதும் ஆன்மீகத்தை சினிமாவில் தேடுவதை நிறுத்த வேண்டும். </p><p>முருகப்பெருமான் பிரபஞ்சத்தின் தெய்வம் என்பதால் அவரை வெறும் மனித பார்வையோடு பார்ப்பது மட்டுமல்லாமல் பக்தி மார்க்கத்தோடு உயர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் பிரபல முருக பக்தரும் ஆன்மீக பேச்சாளர் ஆன விஜயகுமார் அவர்கள்.</p><p> அவர் முருகப்பெருமான் தமிழ் கடவுளா இல்லையா என்பதை பற்றி பல்வேறு விஷயங்களை விளக்குகிறார். அதை பற்றி பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dGgLv4U4n14" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதம் ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்யவேண்டிய சமயபுரம் மாரியம்மன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/samayapuram-temple-in-tamil-1732860294"></link>
            <id>https://ibcbakthi.com/article/samayapuram-temple-in-tamil-1732860294</id>
            <summary type="text">திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சர்வ வல்லமை படைத்தவளாக நோய் தீர்க்கும் தாயாக காவல் காக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் சர்வ வல்லமை படைத்தவளாக நோய் தீர்க்கும் தாயாக காவல் காக்கும் கடவுளாக கோடிக்கணக்கான பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றாள்.</p><p> சமயபுரம் கொள்ளிடம் நதிக்கு வடக்கே பதினோரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற பல பெயர்கள் இவ்வூருக்கு உண்டு. கண்ணனூர் ஹொய்சள மன்னன் வீர சோமேஸ்வரன் ஆட்சியில் தலைநகரமாக விளங்கிற்று. </p><p> இவ்வூரில் செல்லாயி அம்மன் கோவில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், போஜிஸ்வரன் கோவில் ஆகியவை உள்ளன. இவை எல்லாவற்றையும் விட மாரியம்மன் கோவில் மிகுந்த சிறப்பும் செல்வாக்கும் பெற்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6e3915-6e92-4dc9-b6d1-b16895807c0e/24-6749598789d5e.webp' /></p><h3>பிறந்த வீட்டுச் சீர்
</h3><p>மாரியம்மன் ஆண்டுதோறும் தை பூசத்தன்று காவிரி நதிக்கரைக்குப் சென்று தன் தமையனைச் சந்திப்பாள். ஸ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் தங்கைக்கு அலங்காரச்சீர் கொண்டு வந்து கொடுப்பார். அன்றைக்கு ஸ்ரீரங்கம் ஊரில் இருக்கும் குடும்பங்கள் திருமணம் செய்து கொடுத்த தங்கள் மகள்களுக்கு சீர் கொண்டு போய் கொடுப்பார்கள். </p><p>தைப்பூசத்திற்கு முன்பு பத்து நாள் திருவிழா நடக்கும் தைப்பூசம் அன்று கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வட காவிரிக்கு வந்து திருவரங்கத்தின் ரங்கநாதரிடம் சீர் பெற்று இரவு முழுக்க அங்கேயே ஆற்றங்கரையில் தங்கியிருந்து பின்பு அதிகாலையில் தன் கோவிலுக்கு வருவாள். </p><p>விடிய விடிய அன்று மக்கள் கூட்டம் காவிரி நதிக்கரையில் அம்மனைப் பார்க்க வரும். பக்தர்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து குடும்பத்தோடு தை மாத முழு நிலா அன்று நிலவின் ஒளியை ரசித்து பக்தி மார்க்கத்தில் மூழ்கித் திளைத்து வீடு திரும்புவார்கள்.</p><p></p><h3>புலம்பெயர்ந்த அம்மன்</h3><p> 
ஆதியில் மாரியம்மன் வைஷ்ணவி தேவியாக ஸ்ரீரெங்கத்தில் இருந்தாள். அதன் உக்கிரம் தாங்க இயலாமல் அவளை அங்கிருந்து அகற்ற முடிவு செயதனர். இப்போது இனாம் மாரியம்மன் என்று அழைக்கும் இடத்தில் கொண்டு வந்து வைத்து இளைப்பாறினர். பின்பு அங்கிருந்து தற்போது கோயில் கொண்டுள்ள இடத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8f3142-8f45-4aa8-984d-3544bc5639db/24-674959880c4c2.webp' /></p><h3> 

கோயில் வரலாறு</h3><p>
விஜயநகர மன்னன் இங்கு படையெடுத்து வரும்போது கண்ணனூரில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் வணங்கி இப்போரில் வெற்றி பெற்றால் அம்மையே உனக்கு பெரிய கோவில் கட்டுவேன் என்று வேண்டிக் கொண்டான். </p><p>அவன் வெற்றி பெற்றதும் அவனது பிரதிநிதியாக திருச்சியை ஆட்சி செய்து வந்த விஜய் ரங்க சொக்கநாதனால் 1706 இல் அம்மனுக்குப் பெரிய கோவிலைக் கட்டினார். கண்ணனுர் மாரியம்மன் காலப்போக்கில் சமயபுரம் மாரியம்மன் ஆகிவிட்டாள்.&nbsp;&nbsp;</p><h3>அம்மனின் தோற்றம்
</h3><p>மாரியம்மன் சிலை சுதையினாலும் மூலிகையினாலும் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. இங்கு மாரியம்மன் எட்டு கைகளும் சர்ப்பக் குடையும் காலில் அசுரர்களை மிதித்த படியும் காட்சியளிக்கின்றாள். அம்மன் கோபமாக இல்லாமல் அமைதி தவழும் முகத்துடன் விளங்குகின்றாள்.</p><p> ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு லலிதாசனத்தில் அரசியாக வீற்றிருக்கின்றாள். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை விரித்து இருக்கின்றது. எட்டு கைகளிலும் கத்தி உடுக்கை தாமரை மலர் திரிசூலம் கபாலம் பாசம் காண்டீபம் காண்டாமணி ஆகியவற்றை ஏந்தி இருக்கின்றாள். </p><p>இச்சிலை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவ மூர்த்திக்கு அபிஷேகங்கள் உண்டு. 1991 ஆம் ஆண்டு உற்சவர் சிலையை ஜி பாலமுருகன் ஜி முரளி குமார் என்ற சகோதரர்கள் தானமாக வழங்கினர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd94ba2-7e86-419e-ae04-378d9e9becba/24-67495988821ff.webp' /></p><h3>நேர்த்திக்கடன்</h3><p>
சமயபுரத்தில் மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற அம்மனுக்குரிய நேர்த்திக்கடன்கள் அதிக எண்ணிக்கையில் நிறைவேற்றப்படுகின்றன

சிலர் பச்சை மூங்கிலில் மஞ்சள் துணியில் தூளி கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து கோவிலை மூன்று சுற்று சுற்றி வருகின்றனர். </p><p>குழந்தைக்கு நோய் சுகமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் இத்தகைய நேர்ச்சையை செய்கின்றனர். சமயபுரம் அம்மனை வேண்டிக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு விடும். நோய் குணமாகும் என்று நம்பிக்கை நெடுங்காலமாக நிலவுகின்றது.</p><p>

தலைமுடி காணிக்கை அளிப்பவர்கள் இங்கு அதிகம். ஆண், பெண் வேறுபாடின்றி அம்மனுக்குத் தங்கள் தலை முடியைக் காணிக்கை ஆக்குகின்றனர். குறிப்பிட்ட சில குடும்பத்தினர் தொடர்ந்து முடி நீக்கும் இத்திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h3>வேம்பின் சிறப்பு
</h3><p>சமயபுரத்தில் தலவிருட்சமாக வேப்பமரம் இருக்கின்றது. இவ்வேப்ப மரத்தில் பெண்கள் தங்கள் முந்தானையைக் கிழித்து ஒரு கல்லை வைத்து குழந்தை தொட்டில் போல கட்டி விடுகின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை ஒரு நேர்ச்சையாக செய்து அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.</p><p> குழந்தை பிறந்ததும் இதை நீக்கிவிடும் மரத்திலிருந்து நீக்கி விடுகின்றனர். மாங்கல்ய பெரு வேண்டுவோர் மஞ்சள் கயிறு காட்டுகின்றனர். 

தீர்த்தமாக மாரி தீர்த்தம் இருக்கின்றது. ஆடி வெள்ளிகளில் இங்கு நிறைய பக்தர்கள் வந்து இறைவியை வணங்கிச் செல்கின்றனர்.&nbsp;</p><h3>சித்திரைத் தேர்
</h3><p>சித்திரையில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. சித்திரை மாசம் தேர் திருவிழா விழாவின்போது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பிரசாதம் கொண்டு வரப்படுகின்றது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff6ac379-a1c8-4ad0-82f1-00b49dc9416c/24-6749598904673.webp' /></p><h3>

பச்சை பட்டினி விரதம்
</h3><p>சமயபுரத்தில் முக்கியமான நிகழ்வு அம்மன் உலக நன்மைக்காக பட்டினி கிடந்து விரட்ஜ்ம் இருக்கும் நிகழ்வாகும். மாசி கடைசி ஞாயிறு அன்று தொடங்கி பங்குனி கடைசி ஞாயிறு வரை அம்மன் விரதம் இருக்கும் நாட்களாகும். அந்தக் காலங்களில் அம்மனுக்கு நைவேத்தியம் கிடையாது. அவள் உலக நன்மைக்காக விரதம் இருப்பதால் அவளுக்கு இளநீர், பால் போன்றவை நைவேத்தியமாக படைக்கப்படுகின்றது.</p><h3>பூச் சொரிதல் விழா</h3><p>
மாசி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று பூச்சொரிதல் விழா நடைபெறும். அன்று முதல் அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வாள். அன்று பக்தர்கள் மேளதாளத்துடன் கூடை கூடையாகப் பூக்களைக் கொண்டு வந்து அம்மனுக்குப் படைக்கின்றனர் கருவறையில் அம்மன் கழுத்து வரை பூக்கள் குவிந்து விடும். </p><h3>
 
கோயில் திறப்பு&nbsp;</h3><p>இக்கோயில் காலை அதிகாலையில் திறக்கப்பட்டால் இரவு ஒன்பதரை மணிக்குத்தான் அடைக்கப் படுகின்றது. தினமும் நான்கு வேளை பூஜை நடைபெறுகின்றது. தொடர்ந்து பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருப்பதால் கோயிலை இடையில் பூட்டி வைப்பது கிடையாது.</p><p></p><p> </p><h3>பௌத்த கோயில்
</h3><p>சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆரம்பத்தில் பௌத்த கோவிலாக இருந்தது என்பதற்கு அங்கு முடி காணிக்கை வழங்குதல், தன்னை வருத்தும் நேர்த்திக்கடன்கள் செய்தல், சமயம் மற்றும் கண்ணனுர் என்ற பெயர்கள், நதிக்கரையில் பௌர்ணமி அன்று மக்கள் ஒன்றாக கூடி கட்டுச்சோறு உண்டு மகிழ்தல் ஆகியவை ஆதாரங்களாக உள்ளன. </p><p>சமயம் என்பது பௌத்த சமயக் கலைச் சொல்லாகும். இச்சொல் பௌத்த துறவிகள் தங்களுடைய மத நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றுள்ள ஜப்பானில் சொன்மையா என்றும் சீனாவில் சான் மேயே என்றும் இச்சொல் இன்றும் பொருள் மாறாமல் வழங்குகின்றது
 பின்னர் இச்சொல் வேறு பல மதங்களிலும் வேறு பல பொருள்களில் வழங்கியது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97f8e207-754b-4c9b-a694-303411c70fce/24-6749598972e67.webp' />&nbsp;</p><h3>பல ஊர்களில் புத்தர் கோயில்கள்</h3><p>
திருச்சி தஞ்சாவூர் பகுதிகளில் பௌத்த சமயம் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கியது. இந்திரனுக்கு கோவில் இருந்த ஊர்கள் கண்ணனூர், கண்ணபுரம், என்று தற்போது வழங்கப்படுகின்றன. சங்கமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம் ,கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பொன் பற்றி, புத்தக்குடி, உறையூர் கோட்டப்பாடி, மயூரப்பட்டணம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் இருந்த புத்தருக்கு கோவில்கள் இருந்தததை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h3>தாரா சிலைகள் வைத்தல்
</h3><p>கண்ணனூர், சங்கமங்கை, புன்னைநல்லூர், பட்டீஸ்வரம் போன்ற ஊர்களில் இருக்கும் பெண் தெய்வங்கள் ஆரம்பத்தில் பௌத்த பெண் தெய்வம் ஆகும். பௌத்த சமயத்தில் தாரா பெண் புத்தராகப் பல ஊர்களிலும் தெய்வமாக வைத்து வழிபடப்பட்டாள்</p><p>. தாராவில் தாரா வகைகள் உண்டு. கண்ணனூரில் எழுந்தருளி இருப்பவள் மஞ்சள் தாரா. இவள் அமைதியான தோற்றம் உடையவள். அரசி போல லலிதாசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறாள். பச்சை தாரா என்பவள் பச்சைக்காளி ரூபமாக உக்ர ரூபத்தில் வழிபடப்பட்டாள். வெள்ளை தாரா சரஸ்வதியாக பேர் பெற்றாள்.&nbsp;&nbsp;</p><h3>தலைமுடி காணிக்கை
</h3><p>பௌத்தர் கோவில்கள் இருந்த இடங்களில் மட்டுமே இன்றைக்கும் தலைமுடி காணிக்கையாக கொடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது . புத்த துறவிகள் தங்கள் தலையைத் தாங்களே மொட்டை அடித்துகொள்வது அவர்களின் சமய நெறியாகும். </p><p>புத்த மடாலயங்களுக்கு சிகிச்சைக்காகவும் இந்திரன், தாரா போன்ற தெய்வங்களை வணங்க வந்த பொது மக்களும் துறவிகளைப் போல முடி காணிக்கை செலுத்தி தம்மை வருத்தும் நேர்த்திக் கடன்களை மேற்கொண்டனர். 
மற்ற இந்து தெய்வக் கோவில்களில் தலைமுடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் கிடையாது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae1a470-9349-4ad2-b833-acc0ec42a7e6/24-67495989e4fde.webp' /></p><h3>கடுமையான சமயப் பயிற்சிகள்
</h3><p>பட்டினி கிடப்பது, அலகு குத்திக் கொள்வது, தீச்சட்டி எடுப்பது, பூக்குழி இறங்குவது போன்ற கடும் பயிற்சிகள் பௌத்த துறவிகளிடம் காணப்பட்டன. இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இவற்றைச் செய்வது அவர்களின் சமய நெறிமுறைகளில் ஒன்றாக இருந்தது.</p><p> பின்னர் புத்தர் மீது பக்தி கொண்ட பொதுமக்களும் இத்தகைய சடங்குகளை நேர்ச்சையாக செய்யத் தொடங்கினர். புத்தர் வழிபாடு மறைந்த பிறகும் கூட வழிபாட்டுச் சடங்குகளை பின்பற்றி வந்த மக்கள் பிடிவாதமாக அவற்றை விட்டு விடாமல் தொடர்ந்து பற்று உறுதியோடு தொடர்ந்து செய்தனர். தெய்வங்களின் பெயர் மாறினாலும் தங்கள் வழிபாட்டுச் சடங்குகளை பொது மக்கள் மாற்றிக் கொள்ளவில்லை.&nbsp;</p><p></p><h3>நோய் தீர்க்கும் காவல் தெய்வங்கள்
</h3><p>பௌத்தர்களை முதன் முதலில் பெரிய பெரிய சிலைகளைத் தங்கள் கோவில்களில் வைத்தனர் புத்தருக்கு மிகப்பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. தாராவுக்கும் அவலோகதீஸ்வரருக்கும் பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. செப்புத் திருமேனிகளும் உருவாக்கப்பட்டன.</p><p> பெரிய தங்க புத்தர் சிலையை உடைத்து ஸ்ரீரங்க கோயிலின் திருமதில் கட்டியதாக குரு பரம்பரை எடுத்துரைக்கின்றது. நாகப்பட்டினத்தில் 300க்கும் அதிகமான புத்தர் சிலைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. எனவே புத்தர் கோயிலில் தெய்வச்சிலைகள் நான்கு கைகள் ஆறு கைகள் மூன்று முகம் என்று பல உருவங்களில் இருந்தன. </p><p>தாரா சிலைகள் ஒரே முகத்துடன் பல கைகளுடன் தண்டனை கொடுக்கும் காவல் தெய்வங்களாக ஆயுதங்களை ஏந்தி இருந்தன. வசுதாரா சிலைகள் சில தாமரை மலர்களைப் பிடித்த படி காட்சியளித்தன. பௌத்த மடங்களில் மருத்துவ சேவை நடந்ததனால் இங்குள்ள பௌத்த ஆண், பெண் தெய்வங்கள் நோய் தீர்க்க வல்ல தெய்வங்களாகப் போற்றப்பட்டன. </p><p>அவ்வாறே கண்ணனூர் என்ற சமயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மக்களை நோயில் இருந்து காக்கும் கடவுளாக காவல் தெய்வமாக இருந்து வருகிறார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T12:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341</id>
            <summary type="text">சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு மாதாந்திர பூஜைகளுக்காக ஜூலை 16 இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. </p><p>இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய் அபிஷேகம், உஷா பூஜை, உச்ச பூஜை தீபாரதனை, மலர் அபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகளும் நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d6d10aa-68de-4fe2-80ba-b94180f0f3bf/26-6a58c07f5d3f4.webp' /></p><p></p><p> </p><p>கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கும் சிறப்பு பூஜைகளும், தரிசனமும் நடைபெற உள்ளது.</p><p> பிறகு ஜூலை 21 ஆம் தேதி இரவு ஹரிவராசனத்துடன் கோவில் நடை சாற்றப்படுகிறது, மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்து அருள் ஆசி பெறுவதற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகம்பாவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்த சிவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thiruppattur-temple-in-tamil-1732706429"></link>
            <id>https://ibcbakthi.com/article/thiruppattur-temple-in-tamil-1732706429</id>
            <summary type="text">பிரமதேவனுக்குத் தனி சந்நிதி கொண்டுள்ள தேவார வைப்புத்தலமான திருப்பட்டூரில் பிரமனேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் திருபிடவூர் திருப்படையூர் என்றும் அழைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரமதேவனுக்குத் தனி சந்நிதி கொண்டுள்ள தேவார வைப்புத்தலமான திருப்பட்டூரில் பிரமனேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் திருபிடவூர் திருப்படையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
</p><h3>
பிரமரேஸ்வரர்</h3><p>
 திருப்பட்டூர் கருவறையில் சிவலிங்கத்திற்கு நாகாபரணம் உண்டு. சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள ஆவுடை இங்குச் சதுர வடிவில் உள்ளது. சிவலிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் இருந்து சொட்டு சொட்டாக நீர்த்துளி விழுவதால் நித்யாபிஷேக்ம் நடக்கிறது.</p><h3>பிரமநாயகி
</h3><p>பிரம்மதேவன் கௌதம் புத்தர் ஞானம்.பெற்ற போது அவர் முன் தோன்றி உலகுக்கு தர்மத்தை போதிப்பாயாக என்றார். உயர்வும் சிறப்பும் உடையவராக பிரம்ம தேவனை பௌத்தர்கள் வணங்கினர். இவருக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் பிரம விகார் எனப்பட்டது. </p><p>உடனிருந்த பெண் பிரம் நாயகி எனப்பட்டாள். பிரம் விஹார்கள் சிவன் கோயிலாகிய பிறகும் கூட கருவறை சிவனின் பெயர் மாறியது. ஆனால் அம்மனின் பெண் பெயர்பிரமநாயகியாகவே இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e60d866-2978-4e5c-9203-ed959e4a5e74/24-674702140bdbf.webp' /></p><h3>ஸ்தலபுராணக் கதை</h3><p>
அகம்பாவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்த சிவன் இனி நீ படைத்தல் தொழிலை செய்யக் கூடாது என்று சபித்தார். சிவபெருமானின் அருளைத் தேடி பிரம்மதேவன் இவ்வூருக்கு வந்து பிரம தீர்த்தத்தில் குளித்து 12 லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.</p><p> அவர் தவத்துக்கு மனமிரங்கிய சிவபெருமான் மகிழ மரத்தடியில் காட்சியளித்தார். மீண்டும் படைத்தல் தொழிலைச் செய்யும் படி பிரம்மனிடம் ஆணையிட்டார் எனவே இங்கு பிரம்ம தேவனுக்கு தனி சந்நிதி உண்டு. சிவபெருமானும் பிரம்மரேச்வரர் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;</p><h3>கோயில் விவரம்</h3><p>
திருப்பட்டூரில் அம்பாளின் பெயர் பிரமநாயகி. இங்கு பதஞ்சலி முனிவர், வியாக்கரபாதர், காசியப முனிவர் ஆகியோரும் உள்ளனர். திருப்பட்டூர் பிரம்மரீஸ்வரர் கோவிலுக்கு அருகே கைலாசநாதர் கோவில் கற்றளியாக விளங்குகின்றது.</p><p></p><p>
</p><h3>
தீர்த்தங்கள்</h3><p>
திருப்பட்டூரில் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. பிரம்மதேவன் இத்திருத்தலத்தில் தினமும் குளித்து தன் சாபம் தீர்க்க தீர்க்கும் படி சிவபெருமானிடம் வேண்டினார். அது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. நன்னீர் குளமாக படித்துறைகளுடன் விளங்குகின்றது. </p><p> மகிழ மரத்தைத் தெலுங்கில் வகுளம் என்பர். இங்கு முன்பு மகிழ மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த தீர்த்தம் வகுளதீர்த்தம் ஆகும். தற்போதும் இத்தீர்த்தம் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கோவிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b2ec81-73db-4b1a-97f4-66ff0ffd3f2a/24-67470214872ce.webp' /></p><h3>நன்மைகள் நடக்கும்</h3><p>
திருப்பட்டூருக்கு வரும் பக்தர்கள் 36 தீபங்களை ஏற்றி கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தடை தாமதங்கள் விலகும். தொழிலில் மேன்மையும் குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி நன்மைகளைக் கொடுக்கும். குடும்ப சாபம் விலகும். பெண் சாபம் இருந்தாலும் தீரும்.</p><h3>பிரம்மனுக்குக் கோயில்</h3><p> 
மும்மூர்த்திகளில் சிவனுக்கு சைவக் கோவில்களும் பெருமாளுக்கு வைணவக் கோவில்களும் உள்ளன ஆனால் பிரம்மதேவனுக்கு மட்டும் கோவில் கிடையாது. அடிமுடி தேடிய கதையில் பொய் சொல்லியதால் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று இங்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. </p><p>வடநாட்டில் பிரம்மனுக்கு கோயில் கூடாது என்று மனைவி சபித்ததாக வேறு ஒரு காரணம் சொல்லப் படுகிறது. 

 பொதுவாக தானுமாலயன் கோவில் போன்ற சில தளங்களில் சிவலிங்கங்கள் மும்மூர்த்தியாக வழிபடப்படும். இதில் பிரமனும் இடம்பெறுவார்.</p><p> தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று முகங்கள் (நான்கு முகங்களைக்) கொண்ட சிவலிங்கங்கள் கருவறையில் காணப்படுவதுண்டு. சிவலிங்கத்தின் அபிஷேக நீர் வெளியே விழும் தூம்பின் அருகே கோஷ்ட மூர்த்தியாக பிரமன் காட்சி தருகிறார். </p><p>கோபுரத்தின் மேற்கு பகுதியில் பிரமன் காணப்படுவார். ஆனால் மும்மூர்த்திகளில் பிரம்ம தேவனுக்கு மட்டும் என்று என்டனக் கோயிலும் இல்லை. பிரமனின் சாபம் தீர்த்த சிவன் கோயில்களில் பிரமனுக்குத் தனி சந்நிதி உள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c871055-fc35-43c5-b20d-d5f12f42db73/24-6747021507491.webp' /></p><h3>பிரம்ம விஹார்
</h3><p>பிரம்ம விகாரைகள் என்று பௌத்தர்களால் பிரம்ம தேவனுக்கு கட்டப்பட்ட கோவில்கள் இன்று இல்லை. பிரம்மதேவன் பௌத்த சமயத்தில் தர்ம பாலராக கருதப்பட்டார். அவரே தர்மத்தின் காவலர் ஆவார். தர்ம காரியங்களைச் செய்ய தடையாக இருப்பவர்களை அவர் தண்டிப்பார்.</p><p> தர்மவழியில் இவ்வுலகம் செல்ல வேண்டும் என்பதை அற ஆழி என்றும் தர்மச்சக்கரம் என்றும் பௌத்த சமயம் எடுத்துரைத்தது. தாய்லாந்தில் தங்க கவசம் இட்ட பிரம்மதேவன் சிலை உள்ளது. பௌத்தம் செழித்த கிழக்காசிய நாடுகளில் பிரம்மன் முக்கியத் தெய்வமாக வணங்கப்படுகின்றார். </p><p>இங்கும் பிரம்ம விஹார்களில் பிரம்மதேவன் நான்கு முகங்களுடன் நான்கு கைகளில் உடுக்கை, தண்டம் ஏந்தி சிலை வடிக்கப்பட்டார். பிரம்மாவின் பல இயல்புகள் பின்னர் சிவபெருமானுக்கு உரியனவாக மாற்றப் பெற்றன.&nbsp;</p><p></p><h3>ராஜஸ்தானில் பிரம்மா மந்திர்
</h3><p>வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் பிரம்மதேவனுக்கு ஜகத் பிதா பிரம்ம மந்திர் என்ற பெயரில் தனிக் கோவில் உள்ளது. இக்கோவில் உலகின் முதல் 10 சம்யுத் தலங்களில் ஒன்றாகும். இதனை 14 ஆம் நூற்றாண்டில் விசுவாமித்திரர் கட்டினார் என்றும் பின்பு 16ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் புதுப்பித்தார் என்றும் கூறுவர். </p><p>750 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல 650 படிக்கட்டுகள் பளிங்கினால் கட்டப்பட்டுள்ளன. பிரம்மா நான்கு முகங்களுடன் நான்கு கைகளுடன் சௌமூர்த்தியாக குறுக்குக் காலிட்டு (ஐயப்பன் ரூபத்தில்) அமர்ந்திருக்கின்றார். இவருக்கு இருபுறமும் சாவித்திரி, காயத்ரி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர்.&nbsp;</p><p>ராஜஸ்தான் புஷ்கர் கோயில் கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று விடிய விடிய பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அங்கு உள்ள குளத்தில் குளித்து பிரம்ம தேவனை வழிபட்டு செல்வார்கள். கார்த்திகை பௌர்ணமி இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25d7449-bdda-4aec-a241-a0d76195a0af/24-674702157ac5b.webp' /></p><h3>பத்ம புராணம் கூறும் கதை</h3><p>
இக்கோவிலுக்கான தல வரலாறு ஒன்று உள்ளது. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பத்ம புராணத்தில் வஜ்ரநாபா என்ற அரக்கனைக் கொன்ற பாவம் தீர தான் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிரம்மதேவன் தேடினார். பிரம்மதேவனின் கையில் இருந்த தாமரை பூ விழுந்த இடமே புஷ்கர் என்ற இந்த இடமாகும்.</p><p> இங்கு அவர் அமர்ந்து யாகம் செய்ய முடிவு செய்தார். அவ்வாறு யாகம் செய்வதற்கு அவருடன் சேர்ந்து மனைவி ஸ்தானத்தில் அமர சாவித்திரி இல்லை என்பதால் உள்ளூரில் குர்ஜார் இனத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை மணந்து அவளுடன் சேர்ந்து அமர்ந்து யாகத்தை செய்து முடித்தார். பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்.
</p><h3>மனைவியின் சாபம்
</h3><p>பிரம்ம தேவன் காயத்ரியை மணந்த காரணத்தினால் சாவித்திரி
கோபம் கொண்டாள். பிரம்ம தேவனுக்கு இங்கு மட்டுமே கோவில் இருக்க வேண்டும் வேறு எங்கும் கோவில் இருக்கக் கூடாது என்று பிரம்மனின் மனைவி சாவித்திரி சாபமிட்டாள். இதனால் பிரமதேவனுக்கு வடநாட்டில் கோயில்கள் இல்லை.</p><p></p><p> </p><h3>

காஞ்சியிலும் மனைவி சாபம்
</h3><p>யாகத்துக்குத் தன்னை அழைக்காததால் பிரமதேவனை அவர் மனைவி சபித்தார் என்ற கதை 
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் புராணக் கதையிலும் உண்டு. சரஸ்வதி கடுங்கோபமுற்று தண்ணீரால் பிரமனின் யாகத் தீயை அணைத்தாள். (சரஸ் என்றால் வடமொழியில் தண்ணீர்) .</p><p> யாகசாலையை இருட்டாக்கினாள். பிரம்மதேவன் திருமாலின் உதவியை நாடினார். சரஸ்வதி கருங்காளி உருவில் வந்து திருமாலுடன் போரிட்டுத் தோற்றாள். திருமால் தீபப் பிரகாசகராக யாகசாலைக்கு ஒளி ஊட்டினார். .கருங்காளியின் கோயில் காஞ்சிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. காஞ்சி வரதராஜர் கோயில் பழைய பிரம்ம விஹார் என்பதற்குரிய ஆதாரம் இக்கதையில் பொதிந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h3>&nbsp;ஆந்திராவில் பிரமதேவன் கோயில்
</h3><p> ஆந்திராவில் ராஜாவாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர் செபரோலு என்ற இடத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய பிரம்மா சிலையைப் பிரதிஷ்டை செய்தார். இச்சிலை சதுர்முக பிரம்ம சிலையாகும். இங்குப் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdfeb3f-73a1-44cb-a9f6-2c418f31c8e9/24-67470215efb73.webp' /></p><p>
</p><h3>
கேரளாவில்</h3><p> கேரள மாநிலத்தில் திருநாவா என்ற ஊரில் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது. இம்மாநிலத்தின் மிக நீண்ட நதியான பாரதப்புழா நதியின் தென் கரையில் பிரம்மனுக்குக் கோவில் உள்ளது. வடகரையில் நவமுகுந்தன் கோவில் என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு கோவில் உள்ளது.</p><p> இக்கோயில்கள் பிரம்ம சத்திரியன் என்று அழைக்கப்பட்ட பரசுராமர் கட்டிய கோவில்கள் ஆகும். பரசுராமனின் குருவாக பிரம்மதேவன் விளங்கியதால் அவர் பிரம்மாவுக்கு என்று தனிக் கோவில் கட்டியுள்ளார். கோவிலில் நவ யோகிகள் இருந்ததாகவும் ஓர் வரலாறு உள்ளது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.&nbsp;</p><p></p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">பிரம்மா படைப்புக்கடவுளான கதை</span></h3><p>
 பிரம்மா படைப்புக்கடவுளாக விளங்குவதற்கு ஒரு பழங்கதை உண்டு. உலகெங்கும் உள்ள ஆதிச்சமயங்களில் உலகத்தின் தோற்றம் பற்றிய கதைகளும் ஆதி தாய், தந்தை பற்றிய கதைகள் உண்டு. அதுபோல இங்கும் ஒரு கதை வழங்குகிறது. பிரம்மா சதருபாவை விரும்பினார். </p><p>அவளைக் காண்பதற்காக நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை கொண்டிருந்தார். சத ரூபா பிரம்மாவிடம் இருந்து தப்பிக்க விலங்குகளாகவும் பறவைகளாகவும் 100 உருவங்களை எடுத்தாள். பிரம்மாவும் அதை போலவே 100 பறவைகளாகவும் விலங்குகளாகவும் ஆன் உருவம் எடுத்தார். </p><p>இப்படித்தான் உலகில் அநேக விலங்குகளும் பறவைகளும் படைக்கப்பட்டன. பின்பு இருவரும் இணைந்து பல கோடி ஆண்டுகள் இன்புற்று இருந்தனர்.&nbsp; &nbsp;</p><h3>சதருபாவால் சாபம் பெற்ற பிரம்மா</h3><p>
சத ரூபா - பிரம்மா காதல் கதை 
இந்துமதத்தில் வேறு வடிவம் பெற்றஸ்து. பிரம்மா தான் படைத்த தன் மகளான சத ரூபாவை நேசித்ததால் சிவன் பிரம்மாவின் தலையை கொய்தார். இவ்வாறு வெட்டுப்பட்ட தலை வந்து சிவனின் கையை கவ்விக்கொள்ள அந்த கையுடன் முடிவற்ற பயணத்தில் அவர் காலபைரவனாக அலைந்து கொண்டிருகிறார்.&nbsp;&nbsp;</p><h3>மது அருந்தும் பிரமனின் கபாலம்</h3><p>
உஜ்ஜயினியில் உள்ள காலபைரவர் கோவிலில் சிவலிங்கத்தின் தலை இல் உள்ள கபாலத்தில் அதிகாலை நான்கு மணி பூஜையின் போது மதுவை ஊற்றுவர். பின்பு வாய அருகிலும் மது கலசத்தை வைப்பார்கள். அதற்கு முன்பு சுடுகாட்டு சாம்பலால் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். </p><p>அபிஷேகம் முடிந்ததும் மதுவை வார்ப்பர். சிவலிங்கம் மதுவில் பாதியைப் பருகிவிடும். மீதி மது அப்போது பூஜையில் கலந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்&nbsp;</p><p></p><h3>பார்வதியால் தலை இழந்த பிரம்மன் </h3><p>
பிரம்மனுக்கு நான்கு தலைகள் இருப்பதற்கு சைவ சமயத்தில் இன்னொரு கதை உண்டு. இக்கதை பிரம்மனை தகுதி இழப்புச் செய்யும் சைவ சமயக் கதை ஆகும். ஒரு காலகட்டத்தில் சிவனுக்கும் ஐந்து முகம் பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது . பிரம்ம தேவனை சிவன் என்ற கருதி பார்வதி அவனைக் கட்டி அனைத்தாள். அதனால் சிவ பெருமான் கோபம் கொண்டார். </p><p>பிரம்மனுக்கும் தனக்கும் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காக பிரம்மதேவனின் ஒரு தலையை வெட்டிப் போட்டார். பிரம்மனின் தலை சிவபெருமானின் கையைப் பற்றிக்கொள்ள அவர் பிரம்மஹத்தி தோஷத்தோடு அலைந்ததாகவும் பின்பு சாப விமோசனம் பெற்றதாகவும் கதைகள் உள்ளன.</p><h3>சைவத்தில் பிரமன் பொய்காரன்</h3><p>
இந்திரன், பிரமன், சந்திரன் போன்ற பௌத்த கடவுளரைப் பற்றிக் கேவலமான கதைகள் சைவப் புரட்சியின் போது பரப்பபட்டன. . சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையில் பிரம்மதேவன் பொய் சொல்லி ஆக்கப்பட்டான். சிவபெருமானின் திருவடிகளை வராக ரூபத்தில் திருமால் தேடிச் சென்றார். பிரம்மதேவன் அகம்பாவத்தில் சிவபெருமானின் உச்சித்தலையைக் காண விரும்பி மேலே அன்னப்பறவை ரூபத்தில் பறந்து சென்றார்.</p><p>எவ்வளவு உயரம் பறந்தாலும் அவரால் சிவபெருமானின் உச்சியைப் பார்க்க முடியவில்லை. அப்போது அவர் சிவனின் தலையில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்து பிரமன் தான் சிவனின் உச்சியைப் பார்த்து விட்டேன் என்று தனக்காக பொய் சாட்சி சொல்லும்படி அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் வந்தார்.
</p><p>' நான் உங்கள் உச்சி தலையை பார்த்து விட்டேன்' என்றார் 'அதற்கு சாட்சி இதோ இந்த தாழம்பூதான்' என்று சொல்லவும் சிவபெருமான் கோபம் கொண்டு 'பொய் சொன்ன உனக்கு போஜனம் கிடையாது உனக்கு எங்கேயும் கோவிலும் கிடையாது நைவேத்தியமும் கிடையாது' என்று பிரம்மனுக்கு சாபம் இட்டார். </p><p>பொய் சாட்சி சொன்ன தாழம்பூவிடம் 'வழிபடு பொருளாகும் தகுதியை நீ இழந்து விட்டாய்' என்று சாபம் கொடுத்தார்.
தாழம்பூ எந்தசிவன், விஷ்ணு கோவிலிலும் பூஜைப் பொருளாக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால் நாகதேவன் கோவிலில் மட்டும் தாழம்பூ நாகத்திற்கு பிரியமான பொருள் என்பதால் படைக்கப்படும்.</p><p></p><p>

 ஆக பௌத்தர்கள் தங்களுடைய முதன்மை தெய்வமாக வணங்கி வந்த பிரம்ம தேவனுக்கு மடாலயங்களில் பிரம்ம விகாரைகள் என்று தனி சந்நிதி. எழுப்பி இருந்தவர். சைவ சமயப் பேரெழுச்சி ஏற்பட்டபோது அதுவரை வழிபடு தெய்வங்களாக இருந்து வந்த இந்திரனை பெண் மோகம் பிடித்தவன் என்றும் பிரம்ம தேவனை பொய் காரன் என்றும் புதிய கதைகளை எழுதி அவர்களின் வழிபடு தகுதியை குறைத்து விட்டனர்.</p><p> எனவே பிரம்மதேவனுக்குத் தனி கோவில்கள் கிடையாது. மிக அரிதாக ஒரு சில ஊர்களில் மட்டும் பிரம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கேயும் பிரம்மன் சபிக்கப்பட்டவனாகவும் அக்கோயில் 
 அவனுடைய சாபம் தீர்த்த தலமாகவும் சிவனே முழுமுதற் கடவுளாகவும் கருவறை தெய்வமாகவும் விளங்கி வருகின்றார். 
அத்தகைய ஒரு கோயில் தான் திருப்பட்டூரில் உள்ள பிரம்மரேஸ்வரன் கோயில்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T10:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 5 ராசியில் பிறந்தவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-zodiac-spend-more-money-unwantedly-1784197126"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-zodiac-spend-more-money-unwantedly-1784197126</id>
            <summary type="text">ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியினர் பணத்தை எப்படி செலவழிப்பார்கள்/ யார் அதிகமாக செலவழிப்பார்கள்? ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியினர் பணத்தை எப்படி செலவழிப்பார்கள்/ யார் அதிகமாக செலவழிப்பார்கள்? யார் பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்பதை பற்றி பார்ப்போம். </p><h3>
மேஷம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் யோசிக்காமல் செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் சிக்கனமாக கவனமாக பாதுகாக்க கூடியவர்கள்.</p><p>P5E26UP</p><h3> 
மிதுனம்:
</h3><p> இவர்கள் தேவையானதை மட்டும் வாங்குவார்கள். அதற்கு மட்டுமே இவர்கள் பணம் செலவு செய்வார்கள்.
</p><h3> கடகம்:</h3><p>
 இவர்கள் குடும்பத்திற்காகவே அதிக பணத்தை செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் ராஜாவைப் போல் செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> கன்னி:</h3><p>
 இவர்கள் செலவழிக்க கூடிய பணத்திற்கு ஒவ்வொன்றுக்கும் கணக்கு கேட்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f829998-603c-4c0d-ace4-83a7cde34763/26-6a58b0080acfb.webp' /></p><p> </p><h3>துலாம்:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் செலவிற்கும் சேமிப்பும் சரியாக செய்வார்கள்.
</p><h3>விருச்சிகம்:</h3><p>
 இவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எப்பொழுதும் பணத்தை சேமித்துக் கொண்டே இருப்பார்கள்.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பது பிடிக்கும். அதனால் தண்ணீர் போல் இவர்கள் பணத்தை செலவழிப்பார்கள்.</p><h3> 
மகரம்:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் பணத்தை முதலீடு செய்வது எப்படி? அதை இரட்டிப்பாகுவது எப்படி என்பதை பற்றியே சிந்திப்பார்கள்.</p><h3>
 கும்பம்:
</h3><p> இவர்கள் பணம் கைகளில் இருந்தால் புதிய பொருட்களை வாங்கி மகிழ ஆசைப்படுவார்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து இவர்களுடைய பணத்தை கரைத்து விடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:18:54+00:00</updated>
        </entry>
    </feed>
