<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-15T17:22:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகல நன்மைகள் அருளும் பச்சைமலை பாலமுருகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/pachamalai-murugan-temple-in-tamil-1732788668"></link>
            <id>https://ibcbakthi.com/article/pachamalai-murugan-temple-in-tamil-1732788668</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் கோபிசெட்டிபாளையத்தில் பச்சமலையின் உச்சியில் இருக்கும் ஞான தண்டாயுதபாணி கோவில் கோவிலில் முருகன் பாலமுருகனாகக் காட்சி தருகின்றார். இங்கு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் கோபிசெட்டிபாளையத்தில் பச்சமலையின் உச்சியில் இருக்கும் ஞான தண்டாயுதபாணி கோவில் கோவிலில் முருகன் பாலமுருகனாகக் காட்சி தருகின்றார். இங்கு உலக அதிசயமாக செந்தில் ஆண்டவருக்கு 40 அடி உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. </p><p>

பச்சை மலை பசுமையாகக் காட்சி தரக்கூடிய செடி கொடிகள் நிறைந்த மலை அல்ல. பாறையாகக் காட்சி தரும் மலை ஆகும். இக்கோயிலுக்கு ஒரு ஸ்தல வரலாறு உண்டு. பொதுவாக கொங்கு நாட்டு கோயில்களில் துர்வாசர் முக்கிய நபராக இடம்பெற்றுள்ளனர்.</p><p> துர்வாச முனிவர் ஒரு முறை சிவபூஜைக்கு இடம் தேடி அலைந்தார். அப்போது மொடச்சூர் என்ற ஊர் அவருடைய ஞானதிருஷ்டியில் சிறந்த இடமாகத் தோன்றியது. அங்கு சென்று தம் தவத்தைத் தொடங்கியதும் அவர் மனம் ஒருநிலைப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1042a24a-24a6-49dd-96e4-3fda3e77095c/24-674841be754bc.webp' />&nbsp;</p><p> </p><p>உடனே முருகனை நினைத்துத் தம் மனதுக்குள் வேண்டினார். அப்போது அவர் மனதில் பச்சை மலை தோன்றியது. அம்மலையில் முருகன் அவருக்குக் காட்சியளித்தார். அதன் பின்பு துர்வாசர் பச்சை மலைக்கு வந்து பாலமுருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார் . </p><p>

பச்சை மலை முருகன் கோயில் அதிகமான பக்தர்கள் வராத கோவிலாக ஆரம்பத்தில் இருந்தது. 1956இல் குப்புசாமி கவுண்டர் என்பவரின் கனவில் முருகன் அசரீரியாகத் தன் கோயிலை புதுப்பித்து வழிபாடுகளை தொடர்ந்து செய்யும்படி தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>அதன் பிறகு 1980 வரை குப்புசாமி கவுண்டர் அவர்கள் கோயில் திருப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இத் திருப்பணிகளுக்குப் பிறகு இக்கோவில் ஒரு முழு கோவிலாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e19ec6b-53a2-43d2-b358-e87776e3a619/24-674841bee9bb5.webp' /></p><p>
</p><p>
மரகதாசலேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மரகதவல்லி என்ற பெயரில் அம்பாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. மற்ற தெய்வங்களும் இங்கு சாந்நித்தியம் பெற்றன. வித்யா கணபதி கிழக்கு நோக்கி உள்ளார்.</p><p> தெற்கு நோக்கி முருக பக்தர் அருணகிரிநாதர் இருக்கின்றார்.

ஞான தண்டாயுதபாணி கோவில் மலை மேல் இருப்பதால் இக்கோவிலைச் சென்றடைய 181 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிகளில் வள்ளி திருமணக் காட்சிகள் சுதை சிற்பங்களாக அழகுறக் காட்சி அளிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>கோவிலின் ஐந்து நிலை கோபுரம் கோபிசெட்டி பாளையத்தின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் படி உயரமாக உள்ளது.பச்சை மலை பாலமுருகன் கோவிலில் ஏழு கால பூஜை நடைபெறுகின்றது. </p><p>பொதுவாக ஆறு கால பூஜை நடைபெறும் . இங்கு ஏழு கால பூஜை நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்குத் தங்கமயில் மீது முருகன். வலம் வருவார். அதன் பிறகு தங்கத் தேரில் திரு உலா வருவார். பின்பு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/303ba328-f845-4049-8b65-dd999b9aed95/24-674841bf70c64.webp' /></p><p> </p><p>அப்போது திருமுருகன் வெள்ளை உடை உடுத்து இருப்பார். ஒரு மணி நேரம் தமிழ் இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முதல் வேறு பல பக்தி இக்கியங்களில் இருந்து முருகன் பாடல்கள் பாடப்படும். இக்கோவிலில் தினை மாவும் ஞானப்பாலும் பிரசாதமாக வழங்கப்படும்.

 பச்சை மலை முருகன் கோயிலில் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை தோறும் சத்ரு சம்ஹார பூஜைகள் நடைபெறுகின்றன.</p><p> சஷ்டி திதி மற்றும் கிருத்திகை நடட்சத்திரஸத்தன்று சண்முகா அர்ச்சனை நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை நடைபெறும்.
பங்குனி உத்திரம் இங்கு மூன்று நாள் விழாவாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. </p><p>முதல் நாள் முருகனுக்கு சிவப்பு சாத்தி சிவ ரூபமாகவும் அடுத்த நாள் வெள்ளை உடை சார்த்தி பிரம்ம ரூபமாகவும் மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி விஷ்ணு ரூபமாகவும் முருகனைக் கொண்டாடுகின்றனர்.முருகன் இங்கு மும்மூர்த்தியாக தன் பக்தர்களுக்கு சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் உடை உடுத்தி காட்சியளிக்கின்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசி பலன் (16-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-16-2026-thursday-1784118655"></link>
            <id>https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-16-2026-thursday-1784118655</id>
            <summary type="text">மேஷம்:
வெளிநாடு தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைக்கூடி வரும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கான நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள். வ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
வெளிநாடு தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைக்கூடி வரும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கான நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள். வேலை பளு அதிகரிக்கும்.</p><h3>
ரிஷபம்:
</h3><p>இன்று தேவை இல்லாத நண்பர்களால் சில சிக்கல் வரலாம். தொழில் ரீதியாக நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது அவசியம்.</p><p></p><p>
</p><h3>மிதுனம்:</h3><p>
இன்று வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான நிலை இல்லாமல் போகலாம். மனம் காலை முதல் குழப்பமாகவும் பதட்டமாகவும் காணப்படும். மதியம்மேல் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
</p><h3>கடகம்:
</h3><p>மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். சுற்றி இருப்பவரை பற்றி புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும் நாள்.
</p><h3>சிம்மம்:
</h3><p>வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். கலை துறையில் இருபவர்காளுக்கு பொன்னான காலம் உண்டாகும்.
</p><h3>கன்னி:
</h3><p>மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்திய வேண்டிய நாள். குடும்பத்தில் முக்கிய நபரின் வருகையால் நன்மை உண்டாகும். சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
</p><h3>துலாம்:
</h3><p>இன்று காலை முதல் உடல் மனம் சோர்வாக காணப்படும். வெளிவட்டாரம் விரிவடையும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனை விலகும்.</p><h3>
விருச்சிகம்:</h3><p>
நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். வெளிநாடு செல்லும் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். கடன் தொல்லை விலகும்.</p><p></p><p>
</p><h3>தனுசு:
</h3><p>பிள்ளைகள் பற்றி பெருமை அடைவீர்கள். உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும்.</p><h3>
மகரம்:</h3><p>
உங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். </p><h3>
கும்பம்:
</h3><p>வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
</p><h3>மீனம்:
</h3><p>வாழ்க்கையின் உண்மை பற்றி புரிந்துகொள்வீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகப்புகழ் பெற்றுக்கொடுக்கும் சரஸ்வதி யோகம்.. உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-saraswati-yogam-in-horoscope-1784118371"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-saraswati-yogam-in-horoscope-1784118371</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் பல முக்கியமான அமைப்பு உள்ளது. அப்படியாக, ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம் என்ற ஒரு அற்புத அமைப்பு உள்ளது. இந்த யோகம் இருக்கும் குழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் பல முக்கியமான அமைப்பு உள்ளது. அப்படியாக, ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம் என்ற ஒரு அற்புத அமைப்பு உள்ளது. இந்த யோகம் இருக்கும் குழந்தைகள் மிகப் பெரிய புத்திசாலியாகவும் பெரிய மேதையாகவும் விளங்குவார்கள். அதைப் பற்றி பார்ப்போம். </p><p>
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களில் ராஜா என்று அழைக்கப்படும் குரு பகவானும், மந்திரி என்று அழைக்கக்கூடிய புதன் பகவானும், அசுர குரு என்று அழைக்கக்கூடிய சுக்கிர பகவானும், ஒரே வீட்டில் இணைந்து எந்த பாவ கிரகத்தின் உடைய தொடர்பும் கொள்ளாமல் இருந்து இதில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமர்வது சரஸ்வதி யோகம் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fe21f3-c7d4-4421-9198-070be3c55128/26-6a577c64c4032.webp' /></p><p></p><p> </p><p>அதிலும், இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு ஒருவர் இருக்க பெற்றால் அவர்கள் மிகச் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இந்த சரஸ்வதி யோகத்தால் அந்த ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். </p><p>இவர்களுடைய மிகச்சிறந்த தெளிவான அறிவாற்றல் உலகம் போற்றும் அளவிற்கு இருக்கும். கல்வியின் ஞானம், மேதைகள், அறிஞர்களாக இருப்பார்கள். லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருக்க அவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும் பாடகர்கள் ஆகவும் இருப்பார்கள். பல அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை நாம் பார்க்கலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளில் யாருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/12-zodiac-who-have-highest-number-of-enemy-1784116446"></link>
            <id>https://ibcbakthi.com/article/12-zodiac-who-have-highest-number-of-enemy-1784116446</id>
            <summary type="text">சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்கள் அடிப்படையில் சிலருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசிக்கு எதிரிகள் அதிகம் உண்டு என...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்கள் அடிப்படையில் சிலருக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியாக, எந்த ராசிக்கு எதிரிகள் அதிகம் உண்டு என்பதை பற்றி பார்ப்போம்.</p><h3>

 சிம்மம்: </h3><p>இவர்களுக்கு தான் என்ற எண்ணம் அதிகம் உண்டு. ஆதலால், இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு போட்டியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அதனால் இவர்கள் பலருக்கும் எதிரியாக மாறுகிறார்கள்.
</p><h3> மகரம்:
</h3><p> இவர்கள் கடின உழைப்பாளிகள் இந்த உழைப்பால் பொறாமை கொண்டு இவர்களுக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள்.</p><p></p><p>
</p><h3> விரு<span style="color: inherit; font-size: 1.5rem;">ச்சிகம்:</span></h3><p> இவர்களுக்கு தான் வாழ்க்கையில் அதிகப்படியான மறைமுக எதிரிகள் உண்டு. </p><h3>தனுசு:
</h3><p> இவர்களுக்கு எதிரிகள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள். ஆனால் வெளியே தெரியாது.</p><h3>
 துலாம்:</h3><p>
 துலாம் ராசிக்கு பொருத்தவரை இவர்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றி விடக் கூடியவர்கள்.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> இவர்களுடைய பிடிவாத குணம் தான் இவர்களுக்கு நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொடுக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமாள் பிரமசாரியாக அருள்பாலிப்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை..எங்கு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thiruvallam-parasuraman-temple-in-tamil-1732776374"></link>
            <id>https://ibcbakthi.com/article/thiruvallam-parasuraman-temple-in-tamil-1732776374</id>
            <summary type="text">கேரளாவில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் மணிமாலா நதிக்கரையில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் திருக்கோவில் உள்ளது. இப் பெருமாளுக்கு நேர் எதிரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் மணிமாலா நதிக்கரையில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் திருக்கோவில் உள்ளது. இப் பெருமாளுக்கு நேர் எதிரே கருடன் காணப்படவில்லை. 54 அடி உயர கருட ஸ்தம்பம் சற்று தொலைவில் இருக்கின்றது. </p><p>இரண்டு இறக்கைகளையும் விரித்த படி பெருமாளை ஏற்றிக் கொண்டு பறப்பதற்குத் தயாராக நிற்கும் கருட ஸ்தம்பம் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டது. இக்கோவிலில் சுதர்சன மூர்த்தி முக்கிய வழிபடு தெய்வமாக விளங்குகிறார்.

 திருவல்லா திருத்தலம் நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.</p><p></p><p> </p><p>108 வைணவ திருத்தலங்களில் திருவல்லாவும் ஒன்று. இதன் விமானம் சதுரங்க கோல விமானம் ஆகும். கண்ட கர்ண தீர்த்தம் மற்றும் பம்பை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

திருமகள் திருமாலின் மார்பில் உறைந்திருப்பதால் இறைவன் திருவாழ் மார்பன் என்றும் ஸ்ரீவல்லவன் என்றும் கோலபிரான் என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>ஸ்ரீ வல்லபப் பெருமாளை பற்றி கருட புராணத்திலும் மச்ச புராணத்திலும் குறிப்புகள் உண்டு. இங்கு செல்வத் திருக்கொழுந்து நாச்சியார் மற்றும் வாத்சல்ய தேவி என்ற பெயரில் இரண்டு நாச்சியார்கள் பெருமாள் அருகே உள்ளனர். செல்வக் கொழுந்து நாச்சியார் பெரிய பிராட்டி என்றும் அழைக்கப்படுவார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dcd65ad-b2b8-4ccc-879b-f255f872e0f9/24-674811b73ad90.webp' /></p><h3>கதகளி நேர்ச்சை </h3><p>
ஸ்ரீவல்லப பெருமாள் கோவிலில் தினமும் கதகளி நடனம் நடைபெறும். இங்குக் கதகளி நடனம் நடத்துவதாக
பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர். இங்குக் கதகளி கற்பிக்கும் கலாச்சேத்திரமும் உண்டு. இதில் நடனம் படிக்கும் மாணவர்கள் இக்கோவிலில் தினமும் கதகளி நடத்துவர்.
</p><h3>
பிரசாதம்</h3><p> 
திருவல்லபப் பெருமாள் கோவிலின் பிரசாதம் சற்று வினோதமானது. பாக்கு மட்டையில் வெண் சாதமும் உப்பு மாங்காவும் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகின்றது. பிரசாதமும் பாக்கு மட்டையில் வைத்தே வழங்கப்படுகிறது. விதவிதமான வாழைப்பழங்கள் இங்கே இறைவனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாகவும் வழங்கப்படும்.</p><p> மாசி மாதப் பூசத் திருவிழாவென்று சுமார் பன்னீராயிரம் வாழைப்பழங்கள் இங்கு வந்து குவியும்.துர்வாசர் இக் கோயிலுக்கு வந்த போது படத்தி பழம் என்ற வாழைப்பழத்தை இறைவனுக்குப் படைத்தார். அன்று முதல் இந்த வகை வாழைப்பழமே இறைவனுக்கு படைக்கப்படுகின்றது.</p><h3>மார்பு தரிசனம்</h3><p>
பொதுவாக கேரளத்துக் கோயில்களில் பெண் தெய்வங்களுக்குக் கூட மார்பை மூடி சேலை உடுத்துவது கிடையாது. திருவல்லாவில் கோயில் கொண்டுள்ள பெருமாள் பிரம்மச்சாரி என்பதால் மேலாடை உடுத்தக் கூடாது என்ற சமூக வழக்கத்தின்படி கருவறையில் அவர் திறந்த மார்புடன் தோன்றுவார். அவர் திருவாழ் மார்பன் என்பதால் அவரது திறந்த மார்பைப் பார்க்கும்போது திருமாகளையும் தரிசித்த பாக்கியம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d94a564-d525-47dd-babc-ed5f6b913020/24-674811b7b6037.webp' /></p><h3> 

பெண்களுக்கு அனுமதி இல்லை</h3><p>
திருவல்லாவில் பெருமாள் பிரமசாரியாக சேவை சாதிப்பதால் இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.</p><h3>கோவில் வரலாறு </h3><p>
மன்னன் சேரமான் பெருமாள் ஆட்சியில் இக்கோவில் பௌத்தக் கோவிலாக இருந்தது. இங்கு தர்மசக்கரம் வழிபடு பொருளாக இருந்தது. பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இங்கு ஸ்ரீ வல்லபப் பெருமாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.</p><p> சேரமான் பெருமாள் மன்னரின் மனைவி தீவிர விஷ்ணு பக்தை ஒரு நாள் அவளது கனவில் கருட வடிவில் வந்த திருமால், சுதர்சன சக்கரம் இருக்கும் இடத்தில் தன்னுடைய சிலை புதைந்திருப்பதாகக் கூறி அதனை எடுத்து கோவிலில் வைக்கும்படி கூறினார். </p><p>அரசி மன்னரிடம் இத்தகவலை தெரிவிக்கவும் எட்டடி உயர சிலை புதைந்திருப்பதைக் கண்டெடுத்து கிழக்கு நோக்கி அச்சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். இச்சிலையின் தலையைப் பார்ப்பவரால் காலை பார்க்க இயலாது காலை பார்க்கும்போது முகத்தை பார்க்க இயலாது அத்தகைய சிறப்பு அம்சமுடைய வகையில் இச்சிலையை பிரதிஷ்டை செய்தனர்.</p><p> பௌத்தர்களின் தர்மச் சக்கரம் சுதர்சன மூர்த்தியாக வணங்கப்படுகிறது. இம் மாற்றத்திற்கு ஒரு ஸ்தல புராணக் கதையும் உண்டு.&nbsp;&nbsp;</p><p></p><h3>வேத பாடசாலை </h3><p>
கேரளாவில் வடக்கே இருந்து அதிக எண்ணிக்கையில் பிராமணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பௌத்தர்களோடு வாதம் இட்டு அவர்களை வெளியேற்றினார். பல ஊர்களை அவர்களுக்கு மன்னன் பிரம்மதேயமாக (இலவசமாக) வழங்கினான். அவ்வாறு வழங்கப்பட்ட ஊர்களுள் ஒன்று சங்கரமங்கலம். இங்கு
3000 பிராமணர்கள் குடியேற்றப்பட்டதும் ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன.</p><p> நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாகப் பணி புரிந்தனர். பௌத்தர்களுடன் வாதிட்டு வென்று மன்னர் மூலமாக அவர்களுக்குக் கொலை தண்டனைபெற்றுத் தந்தனர். . மன்னரின் ஆதரவை இழந்த பௌத்தர்ர்கள் தம் செல்வாக்கு குறைந்ததால் முற்றிலுமாக இங்கிருந்து வெளியேறி விட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c37f102d-5ad6-4442-ae05-147afb268cd1/24-674811b8368b8.webp' /></p><h3>&nbsp;ஊரும் பேரும்</h3><p>
சங்கமங்கை என்பது இந்திராணியைக் குறிக்கும். எனவே இவ்வூர் முதலில் சங்க மங்கை என்று அழைக்கப்பட்டு பின்னர் வைதிக மரபுக்கு ஏற்ப சங்கர மங்கலம் ஆகியிருக்கும். துகளன் ஆட்சியின் கீழ் இருக்கும்போது இப்பெயர் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்
சங்கரமங்கலம் என்ற இந்த கிராமம் முன்பு மல்லிகா வனம் என்று அழைக்கப்பட்டது.</p><p> இங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான பிராமணர்கள் வசித்தனர். அப்போது இங்கு அரசனாக இருந்தவன் சிவ பக்தனான துகளன். அவன் திருமால் பக்தர்களுக்கு அதிக தொல்லை கொடுத்தான். இதனால் பலர் இங்கிருந்து குடி பெயர்ந்து வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். பௌத்தர்களிடம் வென்று பெற்ற ஊரை சிவபக்தனான மன்னனிட.ம் இழந்தனர்.&nbsp;</p><p></p><h3>சைவ வைணவப் பூசல் </h3><h3>
கதை 1</h3><p>
இவ்வூரில் ஏராளமான பிராமணர்கள் வந்து குடியேற்றப்பட்டதும் இங்கு ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வேதசாலைகள் நிறுவப்பட்டன நூற்றுக்கும் அதிகமானோர் வேதம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்தனர் பௌத்தர்களின் செல்வாக்கு குறைந்ததும் அவர்கள் முற்றிலுமாக வெளியேறி விட்டனர் 

சமண, பௌத்த சமயங்களுக்கும் சைவ, வைணவ சமயங்களுக்கும் இடையிலான பூசல் குறைந்ததும் சைவமும் வைணவமும் தமக்குள் சண்டையிட்டன.</p><p> நாராயண பட்டாத்திரி என்பவரும் அவர் மனைவி ஸ்ரீதேவி அந்தர்ஜனமும் தொடர்ந்து திருமால் பக்தர்களாக இருந்து கோவிலுக்குத் தினமும் போய் திருமாலைச் சேவித்து வந்தனர். ஒரு நாள் பட்டாத்திரி அவர்கள் காலமானார். </p><p> பட்டாத்திரியின் மனைவி சங்கரமங்கலத்து அம்மை (சங்கரோத்தம்மை) மட்டும் ஏகாதசி விரதம் இருந்து அதிகாலையில் பெருமாள் கோவிலுக்குப் போய் விரதம் இருந்தவர்களுக்கு துவாதசி விரதம் விட அன்னதானம் செய்வார். </p><p>பின்னர் தன் வீட்டுக்கு வந்து அவர் விரதம் விடுவார், கணவர் இறந்ததும் விதவையான இந்தப் பெண்ணிடம் உணவைப் பெற (அன்னதானம் பெற) விஷ்ணு பக்தர்கள் தயங்கினர். அப்போது ஒரு பிரம்மச்சாரி அங்கு வந்து தனக்கு உணவிடுமாறு வேண்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a11203-8846-4b45-ade2-3ad1355486e2/24-674811b8afccc.webp' /></p><h3>பிரம்மசாரிக்கு உணவிட்ட கதை
</h3><p> சங்கர மங்கலத்தன்மை உணவிடும்படி தன்னிடம் கேட்ட பிரம்மச்சாரியை அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு வா என்றாள். அந்த ஆற்றில் மன்னன் துகளன் விஷ்ணுபக்தர் எவரையும் குளிக்க விடமாட்டான். அவர்கள் குளித்துவிட்டு விஷ்ணு சேவை செய்வது அவனுக்கு பிரியம் இல்லாத செயலாகும். </p><p>ஆனால் இந்த பிரம்மச்சாரி துகளனைக் கொன்று சக்கராயுதத்தை ஆற்றில் கழுவி விட்டு வந்தான். சக்ராயுதம் இப்போது வழிபடு பொருளாயிற்று. 

பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து அவருக்கு அம்மையார் உணவு படைத்தார்.</p><p> அப்போது அவர் அம்மா 'நீங்கள் விரதம் விட வைத்திருக்கும் உப்பு மாங்காய் எனக்கு கொடுங்கள்' என்று கேட்டார். அந்த அம்மையாரும் பாக்கு மரத்து இலையில் கொஞ்சம் உப்பு மாங்காய் வைத்து கொடுத்தார். அதன் பிறகு பிரம்மச்சாரியாக வந்தவர் ஸ்ரீ வல்லபப் பெருமாளே என்பதை சங்கரமங்கலத்தம்மை உணர்ந்து கொண்டார். </p><p>அன்று முதல் சங்கரமங்கலத்தில்உள்ள ஸ்ரீவல்லப கோவிலில் பாக்கு மரத்தின் இலையில் சாதமும் உப்பு மாங்காயும் நைவேத்தியமாகப் பெருமாளுக்குப் படைக்கப்படுகின்றது&nbsp;&nbsp;</p><p></p><h3>திருநீறு பிரசாதம் </h3><p>
மார்கழி திருவாதிரை திருவிழா இங்கு நடைபெறும் போது மன்னன் துகளன் வணங்கி வந்த சிவபெருமான் இக்கோவிலுக்கு வந்தார். அன்று முதல் திருநீறு இக்கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. அத்துடன் சந்தனமும் வழங்கப்படும். </p><p>மன்னன் துகளன் வணங்கி வந்த சிவலிங்கம் மலை உச்சியில் அவனது அரண்மனை இருக்கும் துகளச்சேரிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் துகளச்சேரி மகாதேவன் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9e2eaca-b36d-4f3d-bb80-7ce256d977d7/24-674811b92bd85.webp' /></p><h3>சைவ வைணவப் பூசல்</h3><h3>
கதை 2
</h3><p>சைவ வைணவப் பூசலை உணர்த்தும் வகையில் இன்னொரு கதையும் இங்கு வழங்குகின்றது சிவபக்தனாக இருந்த கந்தகரன் என்பவன் சிவபெருமானுக்கு நரபலி கொடுக்கத் துணிந்தான். அப்போது தனக்கு நரபலி கூடாது என்று அவனுக்குக் கட்டளையிட்டு சாந்த சொரூபியாக இருக்கும் திருமாலை வணங்குமாறு கூறினார்.</p><p> சிவபெருமானின் வார்த்தையை கேட்ட அவன் திருவல்லாவுக்கு வந்து பெருமாளைத் தரிசித்து ஓம் நமோ நாராயணாய என்ற அட்டெழுத்து மந்திரத்தைத் தினமும்
சொல்லி அவரை வணங்கி வந்தான் தீவிர வைணவப் பக்தனாக மாறிவிட்ட இவன் ஓம் நமசிவாய என்ற சிவனது மந்திரம் தன் காதில் விழக்கூடாது என்பதற்காக இரண்டு காதுகளிலும் சிறிய மணிகளை கட்டிக் கொண்டான். இவ்வாறு தீவிர வைணவனாக மாறிய ஒரு சிவபக்தனின் கதையும் இங்கு வழங்குகின்றது.</p><h3>கோயில் விழாக்கள்</h3><p> 
மற்ற பெருமாள் கோவில்களில் நடைபெறுவது போல இங்கும் வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது&nbsp;</p><p></p><h3>உத்ர ஸ்ரீ பலி</h3><p> 
வடக்கே இருந்து முப்பெரும் தேவியர் உத்தர ஸ்ரீ பலி அன்று மங்களகரமான திருநாள் என்று முடிவு செய்து ஸ்ரீவல்லபரையும் சுதர்சன மூர்த்தியையும் தரிசிக்க கோவிலுக்குள் வருவர். அன்று மட்டும் வடக்கு வாசல் தேவியர் வருகைக்காக திறக்கப்படும். </p><h3>

ஏகாதசி பெருவிழா</h3><p> 
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி என்று திருவல்லா கோவிலில் சிறப்பு பூசனைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தின் கைசிக ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாகும்.
</p><h3>
மாசிப் பூச உற்சவம் 
மாசி </h3><p>மாதம் பத்து நாள் திருவிழா நடக்கும். பத்தாவது நாளான பூச நட்சத்திரத்தன்று இவ்விழா ஆராட்டுடன் நிறைவு பெறும்.</p><h3>மார்கழி திருவாதிரை
</h3><p>சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை திருநாளும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் திருவாதிரை கொண்டாடும்போதும் சித்திரை மாத முதல் நாளான விசு திருநாளின் போதும் பெண்கள் இக்கோவிலுக்குள் வந்து போகலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி கண்டு இனி பயப்படத்தேவை இல்லை.. காரணம் தெரிந்தால் வியந்துபோவீர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-must-know-about-sanibagavan-in-horoscope-1784115553"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-must-know-about-sanibagavan-in-horoscope-1784115553</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் இடம் மற்றும் அவர் அமர்ந்து இருக்கும் இடம் பொறுத்து நமக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் இடம் மற்றும் அவர் அமர்ந்து இருக்கும் இடம் பொறுத்து நமக்கு பலன் மாறுகிறது. </p><p>அந்த வகையில், ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இடம் வைத்து நாம் அவர் செயல்பாடுகள் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, சனி பகவான் எப்பொழுதும் தாமதப்படுத்துவார் ஆனால் மறுப்பதில்லை. அதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415cf3d7-e86a-4510-abbf-b992bf20c9f4/26-6a57716369981.webp' /></p><p></p><p>
 1-ம் பாவம் – சனி பகவான் ஜாதகருக்கு தன்னம்பிக்கையை தாமதமாக கொடுத்தாலும் வலிமையான ஆளுமையை கொடுக்கிறார். </p><p>
 2-ம் பாவம் – செல்வம், பொருள் சேர்க்கை தாமதமாக கிடைத்தாலும் நிலையானதாகவும், கிடைக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். </p><p>
 3-ம் பாவம் – வெற்றி தாமதமாக கிடைக்கும். ஆனால், விடாமுயற்சியும் துணிந்து போராடக்கூடிய தன்மையும் அதிகரிக்கும்.</p><p> 
 4-ம் பாவம் –குடும்பத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்கு தாமதமானாலும், காலம் கடந்தாலும் குடும்பத்தில் நல்ல புரிதல் அமையும்.
</p><p> 5-ம் பாவம் – இந்த இடத்தில் சனி பகவான் குழந்தை பாக்கியம் தாமதமானாலும் காலம் கடந்து நல்ல மகிழ்ச்சியான நல்ல குழந்தையை கொடுக்கிறார்.</p><p> 
 6-ம் பாவம் – இங்கு வெற்றிகள் மற்றும் எதிரிகளை ஜெயிப்பதற்கு கால தாமதம் ஆனாலும் எதிரிகளே இல்லாத அளவிற்கு நம்மை வாழ வைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b9c2dc-8863-4ecb-af4c-825ee7964517/26-6a577162a91a1.webp' /></p><p></p><p> 
 7-ம் பாவம் – திருமணத்தை தாமதப்படுத்தலாம். ஆனால், நல்ல புரிதல் கொண்ட உறுதியான வாழ்க்கை துணையை கொடுக்கிறார்.
</p><p> 8-ம் பாவம் – வாழ்க்கையில் மாற்றங்கள் நடப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், மன வலிமை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கும்.</p><p> 
 9-ம் பாவம் – அதிர்ஷ்ட வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். ஆனால், நல்ல அனுபவமும் ஞானமும் சேர்ந்து நம்மை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும். </p><p>
 10-ம் பாவம் – தொழில் ரீதியாக உயர்வு மற்றும் நிலைத்தன்மை தாமதம் ஆகலாம். ஆனால், நிலைத்த பெயரும் புகழையும் பெற்று கொடுக்கிறார். </p><p>
 11-ம் பாவம் – வியாபாரத்தில் லாபம் கிடைப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், நீண்ட கால செல்வத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.</p><p>12-ம் பாவம் – மன அமைதியை பெறுவதற்கு தாமதமாகலாம் ஆனால் ஆழமான ஆன்மீக வளர்ச்சியை கொடுத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T11:39:20+00:00</updated>
        </entry>
    </feed>
