<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-14T12:59:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் அதிகளவிலான துன்பத்தை அனுபவிப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/people-born-this-4-zodiac-suffered-alot-in-life-1784028804"></link>
            <id>https://ibcbakthi.com/article/people-born-this-4-zodiac-suffered-alot-in-life-1784028804</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தை பொருத்தவரையும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசியினுடைய தன்மையால் அந்த குறிப்பிட்ட நபர் வாழ்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தை பொருத்தவரையும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும், ஒவ்வொரு ராசியினுடைய தன்மையால் அந்த குறிப்பிட்ட நபர் வாழ்க்கையில் சில பிடிவாதம் மேற்கொள்வார்கள். </p><p>அந்த பிடிவாதம் ஒரு சிலருக்கு நன்மையாகவும் சிலருக்கு தீமையாகவும் அமைகிறது. அந்த வகையில், எந்த ராசியில் பிறந்தவர்கள் அதிக அளவில் துன்பத்தை அனுபவிப்பவர்கள் என்று பார்ப்போம்.</p><p></p><p>
</p><h3> ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசி பொறுத்த வரை யார் மாறினாலும் நான் இந்த ஒரு விஷயத்திற்கும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் மேற்கொள்கிறார்கள். இந்த பிடிவாதமே இவர்களுக்கு வாழ்க்கையில் அதிக அளவிலான துன்பத்தை பெற்றுக் கொடுத்து விடுகிறது.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இவர்களுடைய சுயமரியாதைக்கு தான் அதிகளவிலான சோதனையை சந்திக்கிறார்கள். அதிலும் குடும்பத்தில் இவர்களுக்கு அதிக அளவிலான சோதனைகள் வருவது உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e018400f-aed6-418c-8788-a25fec7c24fd/26-6a561e8ed082c.webp' /></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> மேஷ ராசி பொருத்தவரை இவர்கள் எல்லோருக்கும் முன் வந்து நிறைய உதவிகளை செய்யக்கூடியவர்கள். ஆனால், பல நேரங்களில் இவர்களுடைய மனதில் எனக்காக யாரும் இல்லை என்கின்ற ஒரு விரக்தி இருக்கிறது. அந்த விரக்தி இவர்களை பல நேரங்களில் துன்பத்தில் தள்ளுகிறது.</p><p>&nbsp;</p><p> </p><h3>
கன்னி:
</h3><p>கன்னி ராசியை பொறுத்தவரை எப்பொழுதும் குழப்பத்துடன் இருக்கக்கூடியவர்கள். நான் யாருக்காவது தீங்கு செய்து விட்டேனா அதனால் நான் இப்பொழுது துன்பப்படுகிறேனா என்கின்ற குழப்பம் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அந்த குழப்பமே இவர்களுக்கு பல நேரங்களில் மிகப்பெரிய வேதனையை கொடுத்து விடுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஜூலை 16 நடக்கும் சூரியன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் காவனமாக இருக்க வேண்டுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-aadi-month-suriyan-peyarchi-prediction-1784028288"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-aadi-month-suriyan-peyarchi-prediction-1784028288</id>
            <summary type="text">சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் பொழுதும் அவருடைய வீட்டை மாற்றுகிறார். அப்படியாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் பொழுதும் அவருடைய வீட்டை மாற்றுகிறார். அப்படியாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு மாறுகிறார். இந்த சூரியன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.</p><p> கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் உச்சமாக இருக்கிறார். அதனோடு சேர்ந்து சூரிய பகவான் இணைகின்ற பொழுது ஒரு சக்தி வாய்ந்த மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் சுப பலன்களை பெற போகிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10c49507-1c9a-47af-a99a-49c7698a1bdf/26-6a561c81e4ea2.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு கலவையான பலனாக இருக்க போகிறது. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் வேலை பளு இவர்களுக்கு அதிகரிக்கப் போகிறது.</p><p> முதலீடுகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவை இல்லாத நபர்களிடம் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
</p><h3>
 ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி இவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை கட்டாயம் பெற்றுக் கொடுக்கப் போகிறது. </p><p>திருமண வாழ்வில் இருந்து வந்த விரிசல் விலகி கணவன் மனைவி ஒற்றுமையாக வாழக்கூடிய யோகத்தை உருவாக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் வருகையால் வியாபாரம் செழிப்பாக வளரும்.</p><p></p><p>
</p><h3> 
துலாம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக பெயரும் புகழும் கிடைத்தாலும் வருமானத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். </p><p>இருப்பினும் கைகளில் பணம் பற்றாக்குறை இல்லாமல் இவர்கள் சம்பாதிக்கக்கூடிய நிலை உருவாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடைய முழு ஆதரவால் நீங்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை பெற போகிறீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aishwarya</name>
            </author>
            <title type="text"><![CDATA[பில்லி சூனியம் அகல ஒருமுறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/putlur-amman-temple-in-tami-1734499455"></link>
            <id>https://ibcbakthi.com/article/putlur-amman-temple-in-tami-1734499455</id>
            <summary type="text">திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ ஒருமுறை திருவள்ளூரில் அமைந்துள்ள புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. நிச்சயமாக அங...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லையா? அப்போ ஒருமுறை திருவள்ளூரில் அமைந்துள்ள புட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. நிச்சயமாக அங்காளம்மன் உங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளுவாள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய புட்லூர் அங்காளம்மன் கோயில் வரலாற்றையும் சிறப்புகளையும் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.</p><p></p><h3>&nbsp;தல அமைவிடம்: </h3><p>

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர். </p><p>சென்னையில் இருந்து இங்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் செல்லலாம். புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e399a9a-696c-4407-84ca-60a6c57686e3/24-67625c8090482.webp' /></p><h3>தல வரலாறு 1: </h3><p>

பொன்மேனி என்ற பெயருடைய விவசாயி மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். வறுமையில் இருந்து மீண்டு வர மகிசுரன் என்பவனிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். ஆனால் பொன்மேனியால் நிலத்தை திருப்பவே முடியவில்லை. </p><p>கடனை உடனே திருப்பித் தருமாறு மகிசுரன் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். பொன்மேனியால் கொடுக்க முடியாமல் போகவே மகிசுரனுக்கு கோபம் வந்தது.

இதனால் கோபமடைந்த மகிசுரன் ஊரில் இருந்த பூங்காவனத்திற்குச் சென்று, அன்றைய இரவிற்குள் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சுமாறு பொன்மேனிக்கு கட்டளையிட்டான். </p><p>ஒரே இரவில் இதை அனைத்தையும் செய்ய முடியுமா என யோசித்தவாறே பொன்மேனி பூங்காவனத்திற்கு சென்றான். அன்றைய நாள் சிவராத்திரி என்பதால் அய்யோ கோயிலுக்கு சென்று சிவனை வழிபட முடியவில்லையே என பொன்மேனி மிகவும் வருந்தினான்.</p><p></p><p> அவனுடைய இஷ்ட தெய்வமான கருமாரியை வணங்கியவாறு இரவில் நிலத்தை உழத் தொடங்கினான்.

அப்போது ஏர் கலப்பை ஏதோ ஒன்றின் மீது மோதுவது போல அவனுக்கு தோன்றியது. என்னவென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. </p><p>அங்கே ரத்தம் பீறிட்டுக்கொண்டு வழிந்துக் கொண்டிருந்தது. அதை கண்ட பொன்மேனியின் கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி விழுந்தான். அப்போது அவனுக்கு ஒரு குரல் கேட்டது. “நீ தண்ணீர் கொண்டு வந்ததும் சிவன் சென்றுவிட்டார். </p><p>நான், இங்கே உன் நிலத்தில் மண்புற்றாக மாறினேன். (அதனால் தான் இந்த ஊர் புற்றூர் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி புட்லூர் ஆகிவிட்டது). அந்தப் புற்றில்தான் நீ, உன் கலப்பையால் இடித்து என்னைக் காயப்படுத்தி விட்டாய். </p><p>அதனால்தான் அதில் ரத்தம் வழிந்தோடுகிறது. வலி தாங்காமல் நான் அப்படியே அங்கு படுத்துவிட்டேன்.” என அந்த குரல் ஒலித்தது.இவை நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பூங்காவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பொன்மேனியிடம் ஒரு ஆணும் ஒரு கர்ப்பிணியும் தண்ணீர் கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2218572e-4b98-4186-9e96-47e3c9cb1142/24-67625c810bf8e.webp' /></p><p> </p><p>தண்ணீர் எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் அங்கே இல்லை. தொடர்ந்து பொன்மேனி அவன் வேலையை பார்க்க தொடங்கி இருந்தான். அப்போது தான் மேற்கூறிய நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், “கவலைப் படாதே. இதனால் எதுவும் தவறாகி விடவில்லை. </p><p>நீ நல்லதையே செய்திருக்கிறாய். என்னை இடித்துக் காயப்படுத்தியதன் மூலம் இந்த உலகிற்கு என்னைக் காண்பித்து விட்டாய். எங்களைப் பூஜிக்கும் பேற்றையும் நீ அடைந்து விட்டாய்” என அந்த குரல் கூறியது. பொன்மேனி சுய உணர்வுக்கு வந்து, தன் காதுகளில் ஒலித்த அந்தக் குரல் பார்வதி தேவியுடைய குரல் என்பதை புரிந்து பரவசமடைந்தான். </p><p>அவனது மகிழ்விற்கு எல்லையே இல்லை என்றே கூற வேண்டும். தொடர்ந்து இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அங்கேயே சயன நிலையில் அங்காளம்மனைப் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்தனர். </p><p>அவ்வாறே அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். பூங்காவனத்தில் தோன்றிய அம்மன் என்பதால் பூங்காவனத்தம்மன் என்ற சிறப்பு பெயரும் புட்லூர் அங்காள பரமேசுவரிக்கு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>&nbsp;</p><h3>தல வரலாறு 2:</h3><p>

ஒரு தடவை சிவனும், பார்வதியும் மேல்மலையனூருக்கு புட்லூர் வனம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது களைப்படைந்த பார்வதி தேவி வேப்ப மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். தாகமாக இருப்பதாக கூறி சிவபெருமானிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார்.</p><p> அருகில் இருந்த கூவம் நதியில் இருந்து சிவபெருமான் புனித நீர் எடுத்து வந்தார். அப்போது பெய்த கனமழையால் சிவபெருமானால் உடனடியாக பார்வதியிடம் வர இயலவில்லை. பசி தாகத்துடன் இருந்த பார்வதி தேவி மயங்கி தரையில் படுத்து விட்டார்.</p><p> அவரை சுற்றி மண் குவிந்து புற்றாக மாறி விட்டது. புற்றுக்குள் இருந்த பார்வதி தேவியை கண்ட சிவபெருமான் அங்கேயே நின்று விட்டார். அங்கேயே தாண்டவமும் ஆடினார். அதனால் அங்குள்ள சிவபெருமான் தாண்டவராயன் என அழைக்கப்படுகிறார். பார்வதி தேவியை கண்டு கவலையுற்றதால் புட்லூரில் உள்ள சிவபெருமான் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27fa1025-ba2f-4da9-97ed-a634c352ac9a/24-67625c818586b.webp' /></p><h3>தலத்தின் சிறப்புகள்:
</h3><p>
புட்லூரில் இருக்கும் புற்று இன்றைய நாள் வரையிலும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தன்னை தேடி வரும் பக்தர்களில் சிலருக்கு பாம்பாகவும் சிலருக்கு மூதாட்டியாகவும் இன்னும் சிலருக்கு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மல்லாந்து படுத்திருப்பது போலவும் காட்சியளக்கிறார். </p><p>இந்த அதிசய தோற்றத்தை பக்தர்கள் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் பார்த்திருக்க முடியாது. எனவே தான் புட்லூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.&nbsp;&nbsp;</p><h3>தல அமைப்பு:</h3><p>

கோயிலின் கர்ப்பகிரகத்துக்கு நேர் எதிரில் மண்புற்றாக வானத்தை பார்த்தப்படி பூங்காவனத்தம்மன் எழுந்தருளி இருக்கிறார். சுயம்பு புற்று முழுக்க முழுக்க மஞ்சளும், குங்குமம் துலங்க அன்னை அருள்பாலிக்கிறாள். ஈசானிய மூலையில் காலை நீட்டி தென்மேற்கில் தலைவைத்தப்படி பார்வதி தேவி அருள்பாலிக்கிறார்.</p><p> அந்த சன்னதியில் கால் வைத்த அடுத்த நொடியே உடம்பில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்.மண்புற்று தேவிக்கு அப்பால், கருவறையில் சூலம் தாங்கிய அங்காள பரமேஸ்வரி, எலுமிச்சம் பழ மாலைகளுடனும் பூ அலங்காரங்களுடனும் புன்னகை துலங்க காட்சி அளிக்கிறாள்.</p><p></p><p> </p><p>சன்னதியை விட்டு வெளியே வந்தால், பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வேப்பம் மரம் இருப்பதை பார்க்கலாம். அதன்கீழ் சுயம்புவாக உயர்ந்திருக்கும் மற்றுமொரு மண்புற்று உள்ளது. அதன் உள்ளிருக்கும் அன்னைக்கு அளிப்பதற்காக எடுத்து வரப்படும் அமுதப்பால் இந்த புற்றில் அர்ப்பணம் செய்யப்படுகிறது. </p><p>இந்தப் புற்றைச் சுற்றி வரும்போதே மகளிர் தங்கள் புடவையின் முந்தானையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து வேப்ப மரக்கிளையில் கட்டி முடிச்சிடுகிறார்கள். அவ்வாறு முடிச்சிடுவதன் மூலம் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4147e7-90c0-4c43-8322-3409a38ff9bd/24-67625c820b304.webp' /></p><h3>தல அற்புதங்கள்:
</h3><p>
அம்மனின் சன்னதியில் ஒருமுறை காலடி எடுத்து வைத்தால் மனக்குறைகள் அகலும். வாழ்வில் இருக்கும் அனைத்து தடைகளும் விலகும். இத்தலத்தின் நாயகியான புட்லூர் அங்காள பரமேசுவரி நவக்கிரக தோஷங்களை நீக்கி, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தருகிறார். </p><p>தன்னை நம்பி வரும் பக்தர்களின் திருஷ்டியை விலக்கி, அவர்கள் மீது படிந்துள்ள பில்லி, சூனிய தோஷங்களையும் விரட்டுகிறார். பில்லி, ஏவல், சூனியம், பேய், பிசாசுகள் போன்ற எவை இருப்பினும் இருந்த இடம் தெரியாமல் விலகிப் புண்ணியங்கள் வந்து சேரும். </p><p>குழந்தை வரம் கிடைக்கும் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.</p><h3>கோயில் நேரம்:
</h3><p>
இத்தகைய சிறப்புடைய புட்லூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.</p><p> செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை வழிபாடு நடைபெறும். மற்ற நாட்களில் காலை 6:30 முதல் மதியம் 1:00 மணி மற்றும் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோதிடம்: சந்தோஷமாக இருந்த தம்பதிகள் பிரிய முக்கிய காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/reason-for-sudden-separation-between-couples-1784024501"></link>
            <id>https://ibcbakthi.com/article/reason-for-sudden-separation-between-couples-1784024501</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான பிரதிபலிப்பை கொடுக்கிறது. அப்படியாக, ஒரு சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவர் வாழ்க்கையில் முக்கியமான பிரதிபலிப்பை கொடுக்கிறது. அப்படியாக, ஒரு சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ஆனால், திடீர் என்று பிரிந்து விடுவார்கள். இவர்களா பிரிந்து சென்றார்கள் என்பது போல் எல்லோருக்கும் ஒரு உணர்வை கொடுக்கும். </p><p>அப்படியாக, ஜாதகத்தில் தம்பதிகள் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம். </p><p>

ஜோதிடத்தை பொருத்தவரை செவ்வாய் கணவனைக் குறிப்பவராகவும், சுக்கிரன் மனைவியை குறிக்கப்பவராகவும் இருக்கிறார்.</p><p> இந்த இரு கிரகங்களுடன் கேது நெருக்கமாக இருக்கின்ற பொழுது அவர்களை இடையே பிரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக ஏழாம் இடம் என்கின்ற களத்திர ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது அவர்களுடைய திருமண வாழ்க்கையில் சிக்கல்களை கொடுக்கிறது.</p><p></p><p> </p><p>ஒரு சில கிரக இணைப்புகள் அவர்கள் கணவன் மனைவியாக தூரத்திலிருந்து வாழக்கூடிய அமைப்பை கொடுக்கிறது. </p><p> அதாவது வேலைக்காக கணவன் மனைவி பிரிந்து வாழக்கூடிய நிலையை பெறுகிறார்கள். இவ்வாறான அமைப்பு கொண்டவர்கள் பெண்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானின் வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்வதும் மிகச்சிறந்த பரிகாரமாக அமையும். </p><p>ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவியின் மனதார வழிபாடு செய்யும்பொழுது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கிறது. </p><p>அப்படியாக, மேலும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EYMz7OLqYH4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆஷாட நவராத்திரி எப்பொழுது? 9 நாட்கள் வழிபாடு செய்யும் முறைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-how-to-worship-ashada-navratri-9-days-1784019974"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-how-to-worship-ashada-navratri-9-days-1784019974</id>
            <summary type="text">ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான நவராத்திரி என்றால் அது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த ஆஷாட நவராத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான நவராத்திரி என்றால் அது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் அன்னை வாராகிதேவியை மனம் உருகி வழிபாடு செய்தால் எல்லா பயன்களும் பெறலாம்.
</p><p>
 அன்னை வாராகிய தேவி விவசாயம் மற்றும் வெற்றியின் அடையாளமாக இருக்கிறாள். லலிதாம்பிகையின் படைகளுக்கு சேனாதிபதியாக இருப்பதால் இவர் போர் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f59bc0bd-364f-490d-b68a-4f3009a8dff3/26-6a55fc07bc1c3.webp' /></p><p></p><p> </p><p>ஆகையால், அன்னை வாராகி தேவியை மனம் உருகி வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எதிரிகள் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை எல்லாம் விலகி அமைதி கிடைக்கிறது. அந்த வகையில், ஆஷாட நவராத்திரி 9 நாட்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். </p><p>


வீடுகளில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு கலசம் வைத்தோ அல்லது வாராகி அம்மன் சிலை படத்திற்கு முன்பாக விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு பால் கலந்த நாட்டு சர்க்கரை மிகவும் பிடித்தமானது என்பதால் அதை நெய்வேத்தியமாக படைப்பது சிறப்பு. ஆஷாட நவராத்திரி தஞ்சை பெரிய கோவில் உட்பட பல இடங்களில் ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
</p><h3>
 
நாள் 1:&nbsp;</h3><p>இந்த நாளில் அம்மனுக்கு இனிப்பு படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தொழிலில் முன்னேற்றம் குடும்ப ஒற்றுமை கிடைக்கிறது. </p><h3>



நாள் 2:&nbsp;</h3><p>இந்த நாளில் வராகி அம்மனுக்கு மஞ்சள் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது திருமண யோகம் கைகூடி வருகிறது.</p><p></p><h3>
நாள் 3: </h3><p>மூன்றாம் நாள் குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் தைரியமும், உடல் நலம் தொடர்பான பிரச்சனையும் விலகுகிறது.
</p><h3>நாள் 4: </h3><p>நான்காம் நாள் சந்தனம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது மனக்குழப்பம் விலகி தெளிவான சிந்தனை கிடைக்கிறது.
</p><h3>நாள் 5:
</h3><p> ஐந்தாம் நாள் தேங்காய் பூ சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது பித்துருக்களால் ஏற்படுகின்ற தோஷம் மற்றும் ராகு தோஷம் நீங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cacef99-6334-4100-8369-7e3ee98a38e8/26-6a55fc0871d52.webp' /></p><h3>
நாள் 6:</h3><p>
ஆஷாட நவராத்திரியில் ஆறாம் நாள் மாதுளம் பழம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் தலைமைத்துவ பண்புகள் சிறப்பாக கிடைக்கிறது.</p><h3>
நாள் 7: </h3><p>ஏழாம் நாள் நாம் அம்பாளுக்கு நவதானியம் படைத்த வழிபாடு செய்கின்ற பொழுது வாழ்க்கையில் சமநிலை கிடைக்கிறது. </p><h3>
நாள் 8: </h3><p>எட்டாம் நாள் அம்மனுக்கு வெண்ணெய் சமர்ப்பித்து வழிபாடு செய்யும் பொழுது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
</p><h3>நாள் 9: </h3><p>ஒன்பதாம் நாள் காய்கனி சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவு பெறுகிறது. </p><p>அதேபோல், ஆஷாட மாதத்தில் வராகி அம்மன் வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த தினத்தை தவிர விடாமல் வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6-spiritual-things-must-buy-on-2026-aadi-1st-day-1784014795"></link>
            <id>https://ibcbakthi.com/article/6-spiritual-things-must-buy-on-2026-aadi-1st-day-1784014795</id>
            <summary type="text">ஆன்மீகத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் செய்யக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்மீகத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் செய்யக்கூடிய எல்லா வழிபாடுகளுக்கும், பல மடங்கு பலம் உண்டு என்பது நம்பிக்கை. </p><p>அதனால், இந்த ஆடி மாத துவக்கத்திலிருந்து பெண்கள் பலரும் தங்களுடைய குடும்ப நலனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் ஆடி ஒன்றாம் தேதியை நாம் வரவேற்கும் வகையிலும் வீடுகளில் இறை அருள் நிலைத்து நிற்கவும் நாம் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f28406-a55f-4107-8234-c2baac597d3c/26-6a55e7cdbc197.webp' /></p><p>
</p><p>
 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அது 17 ஆகஸ்ட் திங்கட்கிழமை அன்று முடிவடைகிறது. இந்த ஆடி மாதத்தின் முக்கியத்துவம் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. 


 &nbsp;அந்த வகையில் ஆடி மாதத்தில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம். </p><p>


1. ஆடி மாதம் முதலில் அம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக துவங்குகிறது. ஆதலால், இந்த மாத துவக்கத்தின் பொழுது வீடுகளில் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு ஆகியவை பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டு செய்யும்.</p><p></p><p>
</p><p>2. ஆடி மாதத்தில் நம்முடைய குடும்பத்தில் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கு கல் உப்பு வாங்கி வைப்பது நன்மை தரும்.
</p><p>3. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் வெற்றிலை பாக்கு வாங்கி வைத்து குலதெய்வ வழிபாடு செய்வது குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.</p><p>
4. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு வெல்லம், ஏலக்காய் வாங்கி வைப்பது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de05b228-d956-47f9-876e-3e57629e8d2c/26-6a55e7ce7c245.webp' /></p><p></p><p>
</p><p>5. ஆடி மாதத்தில் அம்மனுடைய வழிபாடு சிறந்தது என்பதால் அம்மனுக்கு ஆடி மாதத்தில் பல ஆலயங்களில் கண்ணாடி வளையல் சாற்றி வழிபாடு மேற்கொள்வார்கள்.</p><p> அந்த வகையில், ஆடி மாதம் முதல் நாளில் அம்மனுக்கு பிடித்த கண்ணாடி வளையல் வாங்கி வைத்து வழிபாடு செய்வது மிக உகந்ததாக கருதப்படுகிறது.</p><p>
6. முக்கியமாக, ஆடி மாதம் முதல் நாள் நம்முடைய வசதிக்கு ஏற்ப தானம் செய்து வழிபாடு செய்வது பெரும் புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு தோஷம் போக்கும் தென்குடி திட்டை – சூரிய, சந்திரர் வணங்கிய சிவஸ்தலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thittai-guru-bhagavan-temple-in-tamil-1732684431"></link>
            <id>https://ibcbakthi.com/article/thittai-guru-bhagavan-temple-in-tamil-1732684431</id>
            <summary type="text">தஞ்சாவூர் அருகே பத்து கிலோ மீட்டர் தோணிவில் உள்ள தென்திட்டை குடி என்று அழைக்கப்படும் தேவாரப் பாடல் பெற்ற 78ஆவது திருத்தலம் குரு பகவானுக்குரிய பரிகார ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தஞ்சாவூர் அருகே பத்து கிலோ மீட்டர் தோணிவில் உள்ள தென்திட்டை குடி என்று அழைக்கப்படும் தேவாரப் பாடல் பெற்ற 78ஆவது திருத்தலம் குரு பகவானுக்குரிய பரிகார ஸ்தலமாகும். இங்கு சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் மூலவரின் பெயர் ஸ்வயம்பேஸ்வரர் அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. தீர்த்தங்கள் மூன்று. </p><h3>

திட்டை திருத்தலத்தின் சிறப்பு
</h3><p>திட்டை என்னும் திருத்தலம் ஒரு பஞ்சலிங்க ஸ்தலமாகும். கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கம் இருக்க நடுவில் மூலவர் குரு ரூபமாக வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளி இருக்கின்றார். அவருக்குச் சற்று தொலைவில் மங்களாம்பிகை தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றாள்.</p><p> இருவருக்கும் இடையில் குரு பகவான் சந்நிதி இருப்பதனால் அவரை ஞானகுரு என்றும் ராஜகுரு என்றும் அழைக்கின்றனர். இவரை தரிசித்தால் ராஜ யோகம் கட்டும் என்பதும் ஓர் ஆழமான நம்பிக்கை.

 தென்திட்டை குடிக்கு பல ஸ்தல புராணக் கதைகள் உண்டு.</p><p> எல்லா சமயங்களிலும் இருப்பது போல சைவ சமயத்திலும் ஜலப் பிரளயம் பற்றிய ஒரு கதை உண்டு. ஜலப் பிரளயம் ஏற்பட்டபோது சிவனும் பார்வதியும் தோணியிலேறி பயணப்பட்டனர். அவர்கள் ஓம் என்னும் மந்திர ஒலி கேட்டு வந்து சேர்ந்த இடம் சீர்காழி எனப்படும் தோணிபுரம் ஆகும். அது வடமேடு எனப்பட்டது. அதற்குத் தென்பகுதியில் இருக்கும் மணல் திட்டு தென்திட்டை எனப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f45ac996-29b1-4017-aa03-3d64920d7f51/24-6746ad05a7193.webp' /></p><h3>அம்மனின் பெயர்கள்</h3><p>
திட்டையில் எழுந்தருளியிருக்கும் மங்களாம்பிகைக்கு உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, லோகநாயகி என்று பல பெயர்கள் உண்டு.
</p><h3>
சிவனின் பெயர்கள்
</h3><p> திட்டையின் மூலவராகிய சிவபெருமானுக்கு அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், வேதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர், வசிஷ்டேஸ்வரர் என்று பல பெயர்கள் உள்ளன. குருவின் பெயரால் இத்தலம் விளங்குவதால் தேவர்களின் குருவான வசிட்டரின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார்.&nbsp;&nbsp;</p><h3>சூரியனின் வழிபாடு </h3><p>
தென்குடி திட்டைக் கோயிலின் கருவறையில் உள்ள மீது சிவலிங்கத்தின் மீது ஆவணி மாதம் 15 16 17 ஆம் தேதிகளில் சூரியனுடைய ஒளி கிரணங்கள் படியும். மீண்டும் பங்குனி மாதம் 25 26 27 ஆம் நாட்களில் சூரியனின் கதிரொளி பாயும். இதனை சூரிய வழிபாடு என்போம். சிவலிங்கத்தை சூரியன் தன் கதிர்க் கரங்களால் தொட்டு வழிபடும் நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675204e0-c5c8-4fd0-b5fc-6085dc999a85/24-6746ad062acb6.webp' /></p><p>
</p><h3>
சந்திரனின் வழிபாடு</h3><p>
திட்டையின் சிவபெருமானுக்கு தினமும் இரவும் பகலும் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகப் பிரியரான சிவபெருமானை பிரதோஷக் காலங்களில் பால், தேன், தயிர், விபூதி, மஞ்சள், இளநீர் தயிர் என்று பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்வது உண்டு.</p><p> தினமும் அவரது சிவலிங்கத்திற்கு தூய்மையான மாசற்ற தூய நீரினால் துளித்துளியாக அபிஷேகம் செய்யப்படுவது இத்திருத்தலத்தில் மட்டுமே. இவ் அபிஷேகத்துக்கு எங்கிருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுவதில்லை. </p><p>காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உள்வாங்கி சிவலிங்கத்தின் உச்சியின் மீது பதினைந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை சொட்டு சொட்டாக நீர் விழுந்து விழுந்து நித்யாபிஷேகம் நடைபெறுகின்றது. தண்ணீர் கும்பம் இல்லாமல் தண்ணீரால் அபிஷேகம் செய்யப்படுவது எப்படி? என்று வினவினாள் நம்முடைய பண்டைய கட்டுமான அறிவியல் என்பதே பதில்</p><p></p><h3>சந்திரகாந்தத்தின் மகிமை</h3><p>
ரத்தினங்களில் பல பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சந்திரகாந்தக் கல் எனப்படும் மூன்ன் ஸ்டோன் ஆகும். சுற்றியுள்ள காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை சந்திரகாந்தக் கல் உள்வாங்காமல் திருப்பி கொடுக்கும். அக் கள் ஏற்கெனவே குளிர்ச்சியாக இருப்பதால் மேலும் மேலும் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ள இயலாது. வெப்பமான கற்கள் ஈரத்தை உள்வாங்கி ஜில்லென்று இருக்கும். காற்றில் உள்ள ஈரப்பதம் நீர்த் துளியாகக் கல்லில் துளிர்க்கும், கல்லிலிருந்து சிந்தும் அல்லது வடியும் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3500aad3-cd64-4ab3-a862-a888f4343767/24-6746ad06a1bfb.webp' /></p><h3>திருவிளையாடல் புராணத்தில்</h3><p> திருநகர் சிறப்பு படலத்தில் 
மதுரையில் உள்ள மாட மாளிகைகளின் மற்றும் கூட கோபுரங்களின் சுவர்கள் சந்திரகாந்தக் கற்களால் ஆனவை என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திரகாந்தக் கல்லால் ஆகிய சுவரில் நீர் துளிர்ப்பதால் அறைகள் குளிர் பதனமூட்டியவை போல குளுகுளுவென்று இருக்கும். இது ஒரு இயற்கை ஏர் கண்டிஷன் ஆகும்.
</p><p>வெப்பம் மிகுந்த மதுரை மாநகரில் வீடுகளுக்கு இயற்கையாகவே சந்திரகாந்தக் கற்கள் குளிரூட்டின. கட்டுமானத்துறை தொழில்நுட்பத்தின் தனித்தன்மையும் சிறப்புத் தகுதியும் பெற்றவர்கள் நாம் என்பதற்கு சந்திர காந்தக் கல் ஓர் உதாரணம்.&nbsp;</p><p></p><h3>சிலையிலும் தரையிலும் சந்திரகாந்தம்</h3><p>
தென்குடி திட்டையில் சந்திரகாந்தக் கல்லை கருவறையின் விதானத்தில் மேல் கூரையில் பதித்துள்ளனர். சிவலிங்கத்திற்கு நேர் மேலே சந்திரகாந்தத்தில் பதிக்கப்பட்டு இருப்பதால் அங்குத் தண்ணீர் துளித்து சொட்டு சொட்டாக சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.</p><p> இதைப்போலவே திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவிலிலும் கோவிலிலும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும் தரையில் சந்திரகாந்தாக்கல் பதிக்கப்பட்டு இருப்பதால் தரையில் தண்ணீர் கிடப்பதைப் பார்க்கலாம்.

வேறு சில ஊர்களிலும் முருகன் கோவிலிலும் மாரியம்மன் கோவிலிலும் சாமி சிலைகள் சந்திரகாந்தக் கற்களால் செய்யப்பட்டு இருப்பவை. </p><p>எனவே அச்சிலைகளின் மேல் நீர் துளிர்த்துக் காணப்படும். அவற்றை மாரியம்மன் முகத்தில் உள்ள முத்துக்கள் என்று கூறுவர். முருகனுக்கு வியர்க்கின்றது என்றும் கோயில் பூசாரி தன் வெள்ளை வஸ்திரத்தால் தொட்டு அதில் ஈரம் படிந்திருப்பதைப் பக்தர்களுக்குக் காண்பிப்பார். சந்திரகாந்த கல் பயன்பாடு தமிழகப் பண்டைய கட்டுமானக் கலை சிறப்பின் வெளிப்பாடு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e3d2022-009f-4d0c-ba1e-d7b50554ad15/24-6746ad0727085.webp' /></p><h3>கதை 1</h3><p>
சந்திரனின் நன்றியுணர்வு 
சந்திர பகவான் சிவபெருமானுக்கு 24 மணி நேரமும்
தன்னுடைய குளிர்ச்சியான நீர் துளி துளிகளால் அபிஷேகம் செய்கின்றார் என்பதால் இங்கும் சந்திர வழிபாடு நடக்கின்றது.. இதற்கென்று ஒரு புராண கதையும் இயற்றப்பட்டுள்ளது. 
 
தட்சனின் 27 மகள்களைத் திருமணம் செய்த சந்திரன் அவர்களில் ரோகினி மீது மட்டும் அதிகப் பிரியமுடன் இருந்ததனால் மீதி 26 பெண்ர்களும் தன் தந்தையிடம் முறையிட்டனர்.</p><p> அவர் சந்திரனின் ஒளி கிரணங்கள் அற்றுப் போகும்படி சபித்தார். சாபம் பெற்றதால் இருண்டு போன சந்திரன் திங்களூர் வந்து சிவபெருமானை வணங்கி தன்னுடைய ஒளிக் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் போகும் வரத்தை பெற்றான். </p><p>அதன் பின்பு அவன் இங்கு வந்து இத்லத்தில் ஞானகுருவாக விளங்கும் சுயம்பு நாதருக்கு நன்றி கூறிச் செனறான். ஏன் இங்கு வந்து நன்றி சொல்லவேண்டும் திங்களூர் சிவனுக்கே நன்றி சொல்லியிருக்கலாம் என்ற கேள்வி தோன்றுவது இயற்கை.&nbsp;</p><p></p><h3>புரட்சியும் புராணங்களும்</h3><p>
சைவப் பேரெழுச்சி தோன்றிய காலம் என்பது சமயப் புரட்சி தோன்றிய காலம் ஆகும். புரட்சியின் நோக்கம் நமது வெற்றி எதிரியின் தோல்வி. இந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் புதிய சமய இலக்கியங்கள் புனையப்பட்டன. </p><p> அவ் இலக்கிய வகைகளில் ஒரு வகை, ஸ்தல புராணங்கள் ஆகும். இவை ஊருக்கு ஊர் பழைய வழிபாட்டு மரபுகளுக்குப் புதிய கதைகளும் காரணங்களும்தெரிவித்தன. . சமயப் புரட்சியின் நோக்கம் முன்பிருந்த கடவுள் மறுப்புச் சமயங்களை வாதில் வென்று வைதிக மரபை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஆகும். எனவே பௌத்த சமயக் கடவுளர்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் வைதீகக் கடவுளரைப் பெருமைப்படுத்தும் கதைகள் புனையப்பட்டன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b949c97d-c9f7-419e-be57-b4c41de46606/24-6746ad07a13f4.webp' />&nbsp;</p><h3>கதை 2</h3><p>
சக்கர தீர்த்தம் 
தென்குடி திட்டையில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவை பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகும். சக்கர தீர்த்தத்திற்கு மட்டும் ஒரு தனிக் கதை உள்ளது. காரணம் சூல தீர்த்தம் என்பது சிவபெருமானின் சூலாயுதத்தோடு தொடர்புடையது. பசு தீர்த்தம் என்பதும் காமதேனுவுடன் தொடர்புடையது. எனவே இறைவனுக்கு இன்னொரு பெயர் தேனுபுரீச்வரர். </p><p> சக்கர தீர்த்தம் மட்டும் காரணம் இன்றி இங்குள்ளதாக தோன்றக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு ஸ்தல புராணக்கதை உருவாக்கப்பட்டது. 

சக்கர தீர்த்தம் என்பது பௌத்தர்கள் வழிபாட்டிடங்களில் காணப்படும் தீர்த்தம் ஆகும். சக்கரம் பௌத்தர்களின் முதன்மைத் தெய்வமான இந்திரனின் ஆட்சியைக் குறிக்கும் சொல்.</p><p> இந்திரனுக்கு கோவில் இருந்த ஊர்களில் எல்லாம் சக்கரம் என்ற சொல் முக்கிய இடத்தைப் பெற்றது. இக்கோவிலில் இருந்த கந்து சிவலிங்கமாகக் கொள்ளப்பட்டு இக்கோவில் சிவன் கோவிலாக மாறிய பின்பு சக்கர தீர்த்தத்திற்கு ஒரு புதிய புராணக்கதை இயற்றப்பட்டது.&nbsp;</p><p></p><p>சக்கரம் திருமாலின் கையில் உள்ள ஆயுதம் என்று மாறிவிட்ட காரணத்தினால் இக்கதை திருமாலை தொடர்பு படுத்திய கதையாக விளங்குகின்றது. மது கைடபர் என்று அரக்கர்கள் யோக நித்திரையில் இருந்த திருமாலுக்கு பல தொல்லைகள் கொடுத்து வந்தனர்.</p><p> யோக நித்திரையில் இருந்து இவர்களின் தொல்லை தாங்காமல் விழித்த திருமால் தன்னுடைய தவ வலிமை குன்றி இருப்பதை உணர்ந்தார். தன் வலிமையைத் திரும்பப் பெற வேண்டி திட்டை என்னும் இத்திருத்தலத்திற்கு வந்து தன் சக்கராயுதத்தை பூமியில் எறிந்து ஓர் தீர்த்தம் உண்டாக்கினார். </p><p> அதில் தினமும் குளித்து சிவபெருமானை வழிபட்டார். அதன் பின்பு அவருக்கு சிவயோகம் சித்தித்தது. பழைய வலிமையை திரும்பப் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb7e138-dd71-46f1-9b63-57e161ebdfe9/24-6746ad08340f7.webp' /></p><h3>கதை 3 </h3><p> 
நோய் தீரும் பதவி கிடைக்கும்
நோய் நொடியால் வாடியவர்கள், பதவி இழப்பு காரணமாக பலம் இழந்து இருப்பவர்கள், பதவி பறிபோனவர்கள், தகுதி இழப்பு செய்யப்பட்டவர்கள், தோட்டை என்னும் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கினால் அவர்களுக்குப் பழைய சிறப்புக்கள் திரும்பக் கிடைக்கும். 

திட்டை திருத்தலம் சிவபெருமானும் பார்வதியும் பிரளயத்தின் போது வந்து சேர்ந்த இடம் ஆகும்.</p><p> 
ஓம் என்னும் ஓங்காரம் ஒலித்த இடத்தில் இவர்களின் தோணி தரை தட்டி நின்றது. அவ்வூர் தோணிபுரம் எனப்பட்டது. ஆனால் ஹம் என்னும் மந்திர ஒலி கேட்ட இடம் ஞான மேடு என்று அழைக்கப்பட்ட தென்குடித்திடடை ஆகும். இங்கு மந்திர ஒலி கேட்டதனால் இறைவன் ஞான குருவாக இருக்கின்றார். மேலும் கால பைரவரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம் இத் தென்குடித்திட்டையாகும்.&nbsp;</p><h3>கருங்கல் கட்டுமானம்</h3><p>
தென்திட்டை கோவிலில் உள்ள சந்திரகாந்தக் கல் கோவிலின் கட்டுமானச் சிறப்புக்கு ஒரு சான்றாகும். இது தவிர இன்னொரு கட்டுமானச் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. 
மற்ற ஊர்களில் இருப்பது போல இக்கோயில் கட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் விமானம் கலசம் கொடிமரம் ஆகிய அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc356f39-117b-497a-8677-c9117572327e/24-6746ad08b0559.webp' /></p><p> </p><h3>

கருவறைச் சிறப்பு</h3><p>
கருங்கற்களின் நடுவே மூலஸ்தானத்தில் மட்டும் சிவபெருமானுக்கு மேல் சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் மூலஸ்தானம் எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். அம்மன் சன்னதியின் முன் விதானத்தில் 12 ராசிகளின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. 12 ராசிகளின் படம் வேறு பல கோவில்களிலும் இருப்பதை காணலாம்.&nbsp;</p><h3>நாக வழிபாடு நடந்த ஸ்தலம்
</h3><p>பௌத்த கோவில் இருந்த காலத்தில் நாக வழிபாட்டுக்குரிய தலமாகவும் இருந்திருக்கின்றது என்பதை இறைவனின் பெயர் நாகநாதர் என்றும் நாகேஸ்வரர் என்று இருப்பதால் அறியலாம்.</p><p></p><h3> 

நாக தோஷம் தீர்க்குமிடம்
</h3><p>கருவறை நாதர் நாகநாத்ர் என்பதால் நாக தோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நற்பலன் பெறலாம். திருமணத்தடை மற்றும் குழந்தை பேறின்மையால் அவதிப்படுவோர் இத்தலத்திற்கு வந்து வணங்கினால் அவர்களின் தோஷம் நீங்கி நல்ல குடும்பம் அமைந்து குழந்தைகளும் பிறக்கும்.&nbsp;</p><p>மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை</p><h3>
கதை 4</h3><p> 
திட்டையில் அம்பாளின் பெயர் மங்களாம்பிகை அல்லது சுகந்த குந்தளாம்பிகை ஆகும். சுகந்த குந்தளா என்றால் வாசனையுள்ள தலை முடியைக் கொண்டவள் என்பது பொருள். ஒரு காலத்தில் இப்பகுதியில் சோமநாதர் ஒரு என்று ஒரு செல்வர் இருந்தார் அவருக்கு அருமை பெருமையாக ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தாள் அவளுக்கு மங்களாதேவி என்று பெயர் சூட்டினார். </p><p>

ஒரு ஜோதிடர் மங்களாம்பிகையின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் 16 வயதில் விதவை ஆவாள் என்று கூறினார். அக்கால வழக்கப்படி அவளுக்கு 13 வயதில் திருமணம் ஆகியது. அவள் தினந்தோறும் இத்தலத்தில் உள்ள மங்களாம்பிகையை வணங்கித் தனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளம்படி வேண்டினாள். அவளது 16ஆம் வயதில் பௌர்ணமி அன்று கால தேவன் அவள் கணவனின் உயிரைப் பறிக்க வந்தான்.</p><p> உண்மையை அறிந்து கொண்ட மங்களா தேவி கோவிலுக்குள் சென்று அம்பிகையை நெக்குருகி வணங்கி நின்றாள். அம்பிகை காட்சி அளித்து விபூதியை எடுத்துக் கொண்டு போய் காலதேவனின் மேல் தூவு. அவன் காணாமல் போய்விடுவான் என்றாள். மங்களாவும் அவ்வாறே செய்தாள். கால தேவன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டான்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2277b82e-9a75-4b42-9e5d-949232804786/24-6746ad093daca.webp' /></p><h3>ஆயுள்தோஷம் நீங்கும்</h3><p>
காலனை வென்ற தலம் என்பதால் ஆயுள் தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகைக்கு சிறப்பு பூசனைகள் செய்தால் அவர்களின் ஆயுள் கெட்டிப்படும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அல்லது ஜாதகத்தில் விதவா யோகம் இருந்தால் இத்தலத்திற்கு தொடர்ந்து வந்து மங்களாம்பிகையை வணங்கி வர அவர்களின் மாங்கல்ய பலம் உறுதிப்படும்.&nbsp;</p><p></p><h3>காலதேவன்</h3><p> 
காலதேவன் தோற்றோடிய புராணக்கதை இக்கோவில் முன்பு கால தேவனின் கோவிலாக இருந்ததை உறுதி செய்கின்றது. காலச்சக்கரம் அல்லது தர்மசக்கரம் என்பது பௌத்தர்களின் அடையாளமாகும். பௌத்த மடாலயங்களை எழுப்பிய இடங்களில் எல்லாம், காலம் நகர்ந்து கொண்டே இருக்கும்.</p><p> ஆனால் தர்மம் நிலைபெற்று நிற்கும் என்ற தாரக மந்திரத்தை உறுதி செய்யும் பொருட்டு சூரிய சந்திரன் உருவம் பொறித்த கற்களை நிறுத்தி காலதேவனின் கால மாற்றத்தை உறுதி செய்யும் போதனைகளைப் பரப்பினர். இக்கோவிலில் இன்று காணப்படும் சூரிய சந்திர வழிபாடுகள், சக்கர தீர்த்தம், கால தேவனின் தோல்வி ஆகியன பௌத்த சமயம் தோற்றுப் போன வரலாற்றை நிலை நிறுத்துகின்றன.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T07:01:41+00:00</updated>
        </entry>
    </feed>
