<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-27T06:39:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குலதெய்வம் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்து வீட்டில் வைக்கலாமா? கூடாதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/can-we-keep-kuladeivam-soil-at-home-1785132556"></link>
            <id>https://ibcbakthi.com/article/can-we-keep-kuladeivam-soil-at-home-1785132556</id>
            <summary type="text">நம்முடைய இந்து மத வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து நாம் வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்முடைய இந்து மத வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. </p><p>எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் குலதெய்வத்தை மறந்து நாம் வழிபாடு மேற்கொள்கின்ற பொழுது நிச்சயம் நமக்கு முழுமையான இறை அருள் கிடைப்பதில்லை. </p><p>அதனால், தான் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். பலரும் வெளியூர்களிலிருந்து குலதெய்வம் வந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர்கள் ஒருபிடி கைமண் எடுத்து வீட்டிற்கு செல்வதை நாம் பார்க்கலாம். </p><p>காரணம், அந்த மண்ணில் தெய்வத்தின் அருள் சக்தி நிறைந்து இருப்பதாலும் அதனை நாம் வீடுகளுக்கு சென்று எடுத்து வைக்கின்ற பொழுது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகி அதிர்ஷ்டம் பெருகி நல்ல மாற்றங்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86728641-e4d7-4fa9-af04-a40ef4ab5291/26-6a66f60e21b49.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீர வீட்டில் குலதெய்வ கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வரலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p>ஒருவர் வாழ்க்கையில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாமல் நீண்ட நாட்கள் அவர்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.&nbsp;</p><p> தலைக்கு மேல் கடன் சுமை தொழிலில் தடைகள் குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் என்று இருக்கின்ற வேளையில் இவர்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கோவிலுக்கு சென்று அவர்கள் வழிபாடு செய்து ஒருகைப்பிடி மண் எடுத்து வந்து ஒரு வீடுகளில் வைத்து வழிபாடு செய்தால் நிச்சயம் இறைவனுடைய அருளால் நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea812361-7564-4bc2-9ac6-f288b412469e/26-6a66f60ecb711.webp' /></p><p></p><p> 

இவ்வாறு குலதெய்வத்தின் மண்ணை வீட்டுக்கு எடுத்து வந்த பிறகு ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் வைத்து அதில் சிறிது விபூதி மற்றும் குங்குமம் சேர்த்து சிறிய கட்டாக கட்டி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.</p><p> இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்தால் அந்த மண்ணில் இருக்கக்கூடிய தெய்வீக சக்தி நம் வீட்டில் இருக்கக்கூடிய துன்பத்தை போக்கும். 

இவ்வாறு வீடுகளில் குலதெய்வ பிடி மண்ணை எடுத்து வந்து வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வீடுகளில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எப்பேர்பட்ட தீய பாதிப்புகள் இருந்தாலும் அவை உடனடியாக விலகும் என்பது நம்பிக்கை.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T06:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் கும்பம்.. ஆகஸ்ட் மாத பலன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-kumbam-month-august-astrology-prediction-1785127407"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-kumbam-month-august-astrology-prediction-1785127407</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக கிரகங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். </p><p>இவர்களுக்கு கடந்த காலங்களில் சந்தித்து வந்த பொருளாதாரம் மற்றும் பண நெருக்கடிகள் முற்றிலுமாக விலகப் போகிறது. உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பதவி உயர்வும் புதிய வேலை வாய்ப்புகளையும் இவர்கள் வரப்போகிறார்கள். இவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல மாற்றங்கள் உருவாகும்.</p><p> காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி உறவுகள் பலப்படும். மேலும், கும்ப ராசி பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை மற்றும் குடும்பத்தினர் முழு ஆதரவையும் பெறுவார்கள்.</p><p></p><p> </p><p>ஏழாம் இடத்தில் சூரிய பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் இவர்களுக்கு வெளிநாட்டு வேலை மற்றும் விசா தொடர்பான விஷயங்கள் எந்த தடையும் இன்றி கைக்கூடி வரும். ஆறாம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் கடன் தொல்லைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.</p><p> </p><p>சுக்கிர பகவான் நீசம் அடைவது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். இந்த காலகட்டங்களில் இவர்கள் குரு பகவானை வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.</p><p> குறிப்பாக ஆலங்குடி மற்றும் கும்பகோணம் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை செந்தாமரை மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பு பலன் கொடுக்கும். </p><p>இருப்பினும் இவர்களில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும், கும்ப ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jUG9EWzEvWg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T04:43:32+00:00</updated>
        </entry>
    </feed>
