<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-23T15:54:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகலதோஷ நிவர்த்தி ஸ்தலம்- விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/rajarishi-vishwamithrar-at-vijayapathi-temple-1734696150"></link>
            <id>https://ibcbakthi.com/article/rajarishi-vishwamithrar-at-vijayapathi-temple-1734696150</id>
            <summary type="text">திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் விஜயாபதி என்ற கடற்கரை ஊரில் விசுவாமித்திர முனிவருக்கு தனிக் கோவில் உள்ளது. அவரே இங்கு முக்கிய வழிபடு தெய்வமாவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் விஜயாபதி என்ற கடற்கரை ஊரில் விசுவாமித்திர முனிவருக்கு தனிக் கோவில் உள்ளது. அவரே இங்கு முக்கிய வழிபடு தெய்வமாவார். இக்கோவிலில் மகாலிங்கம் என்ற பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. ஓம குண்ட விநாயகர் அருள் பாலிக்கும் தனிச் சன்னதியும் உள்ளது. இக்கோயிலின் விச்வாமித்திரருக்கு இரண்டு கதைகளும் உள்ளன.</p><p></p><h3>&nbsp;சிறப்பு பூஜைகள்
</h3><p>விசுவாமித்திரர் திருத்தலத்தில் இச்சந்நிதியில் அவருக்கென்று சில சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மற்ற கோவில்களில் இவை கிடையாது. அவர் பிறந்த விசாக நட்சத்திரத்தன்று அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். </p><p>அவர் யாகம் செய்யத் தொடங்கிய சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தன்றும் தியானம் செய்யத் தொடங்கிய மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும் மாதந்தோறும் அனைத்து பௌர்ணமி திதியன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077fc94a-f377-434f-93a6-fc9225ac295f/24-67655cd820333.webp' /></p><h3>தோஷ நிவர்த்திப் பூஜை</h3><p>எந்த தோஷமுள்ளவராக இருந்தாலும் விஜயாபதி அருகில் உள்ள கடலில் குளித்துப் பின்பு ஈரத்துணியோடு கோவிலுக்கு வர வேண்டும். இங்கு வந்து ஓம குண்ட விநாயகருக்கு ஒரு சிதறு காய் உடைக்க வேண்டும். அதன் பின்பு கோவிலை மூன்று முறை சுற்றி வந்து விசுவாமித்திரருக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்ய வேண்டும். இங்குப் பல வகையான அபிஷேகங்களும் பலவகை மலர்களால் அர்ச்சனையும் செய்யப்படுகின்றது.</p><h3>பித்ரு தோஷம் </h3><p>
பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் வழியில் வரும் சாபம் ஆகும். முன்னோர் தம் வாழ்வில் யாருக்காவது தீங்கு இழைத்திருந்தால் பாதிக்கப்பட்டவர் சாபம் விட்டிருப்பார். அந்த சாபம் தீமை செய்தவரின் குடும்பத்தில் பிறந்தவர்களை ஏழேழு தலைமுறைக்கும் பாதிக்கும்.</p><p> இதனால் வம்சவிருத்தி ஏற்படுவதில் தடை உண்டாகும். திருமணத் தடை ஏற்படும். குழந்தை பெறுவதில் சிக்கல்கள் தோன்றும். பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஊனமுற்ற குழந்தைகள், மனநலம் சரியில்லாத குழந்தைகள், ஆட்டிசம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cf0fb26-4286-4da2-8283-33a1ed7de4e3/24-67655cdb8323f.webp' /></p><p> அல்லது குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடும். 18, 19 வயதிலேயே விபத்தில் சிக்கியும் நோய் தாக்கியும் இறந்து போகும். பித்ரு தோஷம் உள்ள குடும்பங்களில் இது போன்ற குழந்தைகள் இருப்பதைப் பார்க்கலாம்.</p><p> சிலருக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து திருமணம் ஆனாலும் ஆண் வாரிசோ அல்லது பெண் வாரிசு இல்லாமல் போய்விடும். இரண்டு வாரிசும் உள்ள குடும்பங்கள் தான் பாக்கியம் பெற்ற குடும்பங்கள் ஆகும். ஆண் வாரிசு / பெண் வாரிசு இல்லை என்றால் அதுவும் பாக்ய தோஷம் உள்ள குடும்பம் ஆகும்.</p><p></p><h3>தோஷ பரிகாரம்
</h3><p>முன்னோர்களின் சொத்துக்களை சுவிகரிப்பது போல அவர்களின் பாவங்களையும் ஒருவர் சுவிகரிக்கின்றார். எனவே முன்னோர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி பித்ரு தோஷம் உள்ளவர்கள் முதியவருக்கும் குழந்தைகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தான தர்மங்கள் செய்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற வேண்டும். </p><p>தான் தர்மம் பெற்ற அறிமுகம் இல்லாத ஒருவர் முன்பின் தெரியாத ஒருவர் 'நீங்க நல்லா இருக்கணும் உங்க புள்ள குட்டி எல்லாம் நல்லா இருக்கணும், நீங்க தீர்க்காயுஸா இருக்கணும், தீர்க்க சுமங்கலியா இருக்கணும்' என்று மனதார வாழ்த்தினால் முன்னோர் செய்த பாவங்கள் ஒருவருக்குத் தொலைந்து போகும்.
</p><p>
ஒருவருக்குப் பித்ரு தோஷம் நீங்க தான தர்மம் செய்வதுடன் பித்ரு தோஷ நிவர்த்திக் கோவில்களுக்கு சென்று தொடர்ந்து வழிபட்டு வருவதும் நல்ல பலனைத் தரும். ம் இக்கருத்தைத் தான் பெரியவர்கள்
நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்றனர். </p><p> ஒரு துன்பத்துக்கு மனிதர்களிடமும் நிவாரணம் தேட வேண்டும் மனிதர்கள் அல்லாத அமானுஷ்ய சக்தியான தெய்வத்திடமும் போய் முன்னோர் செய்த பாவங்களுக்காக கண்ணீர் விட்டு அழுது அந்தப் பாவம் இனி நம்மை தன்னை தொடரக்கூடாது என்று பிரார்த்திக்க வேண்டும். அவ்வாறு வேண்டிக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த கோயில் நெல்லை மாவட்டத்தில் உள்ள விஜயாபதி விசுவாமித்திரர் கோவில் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66000a92-4c8d-449d-8c13-834e2f9fae73/24-67655cda850bb.webp' /></p><h3>தோஷம் எப்படி தெரியும் ?
</h3><p> ஒருவருக்குப் பித்ரு தோஷம் இருப்பதை அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். 3, 5, 9 ஆகிய இடங்களில் ராகு கேதுக்கள் என்ற சர்ப்பக் கிரகங்கள் இருந்தால் அவருக்கு முன்னோர் வழியில் பாவங்கள் தொடர்கின்றது என்பது உறுதி. </p><p>

பெண் ராசிகளில் ராகு கேது இருந்தால் பெண்தோஷம் உள்ளது. முன்னோர்களில் யாராவது ஒருவர் பெண்ணுக்குக் கெடுதல் செய்திருந்தால், விதவைகளின் சொத்துக்களை அபகரித்திருந்தால், ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தால், ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் அவரது குடும்பத்தில் பெண் தோஷம் இருக்கும். </p><p>இதனால் அவர்களின் பெண் வாரிசுகள் விருத்தி அடையாது. அவர்கள் விதவைகளாக அல்லது எந்த சுகமும் பெற முடியாதபடி நோயாளி கணவர்களுடன் வாழ்ந்து கொண்டோ, கணவரைப் பிரிந்து தனி ஆளாகவோ, பிள்ளைப்பேறு இன்றியோ வாழ நேரிடும். </p><p> பெண் பாவம் விலக, இவர்கள், ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது ஏழைப் பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். இத்துடன் பாவ நிவர்த்தி கோயில்களுக்கும் போய்த் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df55688-7ce9-40d8-add6-e8691eed499d/24-67655cd897355.webp' /></p><h3>விசுவாமித்திரர் கதை 1</h3><p>
ராஜரிஷி என்று அழைக்கப்படும் விசுவாமித்திரர் கௌசிகன் என்ற பெயரில் மன்னராக வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் காட்டுக்குத் தன் படை பரிவாரங்களுடன் வேட்டைக்கு வந்தார். அருகில் இருந்த வசிஷ்ட ரிஷியின் குடிலுக்கு போய் அவரைச் சந்தித்து ஆசி பெற்றார். வசிஷ்டர், ' இருங்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு போகலாம்' என்றார். </p><p>அதற்கு கவுசிக மன்னர் 'இத்தனை பேருக்கும் உங்களால் சாப்பாடு ஏற்பாடு செய்ய முடியுமா? அது மிகவும் சிரமம். வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம்' என்றார். வசிஷ்டரோ 'உட்காருங்கள் அனைவருக்கும் ஒரு நொடியில் சாப்பாடு தயாராகிவிடும்' என்று சொல்லிவிட்டு உள்ளே போய் காமதேனுவை அழைத்து (காமதேனு என்பது ஒரு தெய்வப்பசு. அது கேட்டதை கொடுத்தவல்லது).</p><p> 'தேனம்மா இவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு வழங்க வேண்டும் வேண்டிய ஏற்பாடுகளை செய்' என்றார். 

காமதேனு சாப்பாடு தயார் செய்து மன்னருக்கும் அவருடன் வந்த படை பரிவாரங்களுக்கும் அறுசுவை அமுது அளித்தாள். </p><p> மன்னர் வசிஷ்டரிடம் 'இந்த காமதேனு தன்னிடமிருந்தால் மிகுந்த பலன் தரும்' என்கிறார். 'காட்டில் இருப்பதை விட நாட்டில் ஒரு மன்னரிடம் இருப்பது மக்களுக்கு மிகவும் நன்மை. எனவே என்னிடம் கொடுத்து விடுங்கள்' என்று கேட்டார். வசிஷ்டரோ 'அது இயலாது காட்டுக்குத்தான் அது மிகுந்த பலனை தரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb5b2b8b-4182-42e8-af57-8c5922bd97b2/24-67655cd918377.webp' /></p><p> </p><p>என்று கறாராகச் சொல்லிவிட்டார். 

மன்னர், வசிஷ்டரைப் பார்த்து 'காமதேனு எனக்கு வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். 'கடுமையான தவம் செய்ய வேண்டும்' என்று வசிஷ்டர் கூறினார். கடுமையான தவம் செய்வது சிரமம் என்று கருதிய கௌசிக மன்னர் காமதேனுவை பற்றி இழுத்துக் கொண்டு வரும்படி தன் படைகளிடம் உத்தரவிட்டார்.</p><p>காமதேனு அவர்களைச் சுட்டெரித்து விட்டது. அனைவரும் காமதேனுவின் கோபத்துக்கு ஆளானார்கள். கௌசிக மன்னர் அதிர்ந்து போனார். படை பரிவாரங்கள் இல்லாமல் நான் ஒற்றை ஆளாய் அரண்மனைக்குப் போய் என்ன செய்வேன்.</p><p>எனவே நான் தவம் செய்யப் போகிறேன் என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் போய் கடும் தவத்தில் மூழ்கினார்.

பல ஆண்டுகள் தவம் செய்தும் கௌசிக மன்னருக்கு இறைவன் காட்சியளிக்கவே இல்லை. தன் உடம்பையே பலிப் பொருள் ஆக்கி இறைவனுக்கு அர்ப்பணித்தார். </p><p>மிகப்பெரிய ஐந்து முக விளக்கை உருவாக்கி தன் இரண்டு கை இரண்டு கால் மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் திரியாக கொளுத்தி நெருப்பில் தன் இன்னுயிரை இறைவனுக்குத் திருப்பலியாக அர்ப்பணித்தார். </p><p>சிவபெருமானும் அம்பிகையும் காட்சி அளித்தனர். காமதேனுவை அளித்தனர். வசிஷ்டரிடம் போய் வணங்கும்படி அறிவுறுத்தினர்.

கௌசிக மன்னர் விசுவாமித்திரர் என்ற பெயரில் இவ்வுலகின் நண்பன் ஆனார். வசிஷ்டரிடம் வந்து வணங்கி நின்றதும் அவர் பிரம்மரிஷி என்று விசுவாமித்திரரை அழைத்தார். </p><p>வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். தன் இன்னுயிரை தியாகம் செய்த இடம் இது என்பதால் அவர் ஹோம குண்டம் வளர்த்த இடம் இன்றைக்கும் கிணறு போல பள்ளமாகத் தோன்றுகிறது. இதை ஓம குண்டக் கிணறு என்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a1aa3f-85ae-4c8a-800b-a116b05859e5/24-67655cd98f4e2.webp' /></p><h3>பெண் சாபம் </h3><h3>
கதை 2</h3><p>
விசுவாமித்திரர் யாகம் செய்த போது தாடகை என்பவள் அவருக்குப் பல இடையூறுகளைச் செய்தாள். அவளைக் கொன்று போட்டால் தான் தன்னுடைய யாகம் முற்றுப் பெறும் என்பதை உணர்ந்த விசுவாமித்திரர் தசரத மன்னனிடம் போய் உதவி கேட்டார். 'என்னுடைய யாகம் சிறப்பாக நடைபெறுவதற்கு மன்னராகிய நீங்கள் எனக்கு உதவ வேண்டும்' என்றார். </p><p>தசரத மன்னர் தன் மகன் இராமனை அழைத்து 'நீ போய் இவருடைய யாகம் நிறைவு பெறும் வரை உடனிருந்து உதவுக' என்றார். இராமபிரான் தன் இளவலான இலக்குவனையும் அழைத்துக் கொண்டு விசுவாமித்திரருடன் காட்டுக்குச் சென்றார். </p><p> 

விசுவாமித்திரரின் யாகசாலையைச் சுற்றி இராம, இலக்குவனர் இருவரும் காவல் இருந்தனர். அப்போது தாடகை என்ற அரக்கி நடந்து வந்ததால் பூமி அதிர்ந்தது. அவள் மரக்கிளைகளையும் பாறைகளையும் தூக்கி எறிந்துகொண்டு வந்தாள்.</p><p></p><p> </p><p> இராமனும் இலக்குவனும் தொடர்ந்து அம்பு மழை பெய்து அவளைக் கொன்றனர். அவள் தரையில் விழுந்ததும் இராமனை பார்த்து 'உன் வீரத்தை ஒரு பெண்ணிடமா நீ காட்ட வேண்டும்? கடைசி வரை உன் வீரம் ஒரு பெண்ணுக்காகவே பயன்படட்டும் போ' என்று சாபம் கொடுத்து விட்டு இறந்தாள். </p><p>இச்சாபத்தின் காரணமாகவே இராமனின் வீரம் சீதையை மீட்டுக் கொண்டு வருவதற்காக இராவணனிடம் மட்டும் பயன்பட்டது.

 தாடகையைக் கொன்ற தோஷம் விசுவாமித்திரருக்கும் வந்து சேர்ந்தது. விசுவாமித்திரர் தன் தோஷத்தை தீர்க்க இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு பெண் தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற்றார்.</p><p> எனவே இத்திருத்தலம் சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகின்றது. ஒருவர் ஜாதகத்தில் எந்தத் தோஷம் இருந்தாலும் விஜயாபதி விசுவாவித்ரர் கோவிலுக்கு வந்து இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலிங்கத்தை வணங்கிச் சென்றால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf69185c-363c-4484-9659-b61008dbd2b2/24-67655cda128a7.webp' /></p><h3>நவகலச யாகம்
</h3><p>விஜயாபதி விசுவாவித்ரர் கோவிலில் நவ கிரகங்களுக்கும் ஒன்பது கலசங்கள் / கும்பங்கள் வைத்து நவ கிரக தோஷ நிவர்த்தி யாகம் செய்யப்படுகின்றது. இந்த ஒன்பது கலசங்களில் இளநீர், மஞ்சள் பொடி, பன்னீர், வெட்டி வேர், சந்தனம், ஸ்நானப்பொடி, விபூதி, பால், குங்குமம் என்று ஒன்பது மங்கலப் பொருட்கள் நிரப்பி பூஜை செய்கின்றனர். </p><p> கோவிலின் வில்வ மரத்திற்கு அடியில் நவகலச பூஜை நடைபெறுகின்றது. பூஜை வேண்டியவர் நவ கலசங்களுக்கு முன் அமர்ந்திருப்பார். நவ கலசங்களில் உள்ள வாசனை திரவியங்கள் கலந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.</p><p> இதனால் அவரை பிடித்து இருக்கும் எந்த கிரக தோஷமாக இருந்தாலும் அவரை விட்டு விலகி விடும். தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெற்று அவர் சுத்தமாகி விடுவார். இப் பூஜை முடிந்ததும் சிவனுக்கும் அம்பாளுக்கும் அவர் தனி பூஜை செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14c2397f-3c6b-4761-bca9-9bf38f284ec0/24-67655cdb08637.webp' /></p><h3>&nbsp;நவக்கிரக தோஷம்</h3><p>
எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டு இருந்தாலும் அந்தத் தோஷம் விலகுவதற்கு விஜயாபதி விசுவாமித்ரர் கோவிலில்
வந்து நவகலச யாகம் செய்யலாம். சூரிய தோஷத்தால் தந்தை, அரசு காரியங்கள், அரசு பதவி, அதிகாரம், அரசியல் ஆகியவற்றில் பாதிப்புகள்
வரும். </p><p>சந்திர தோஷத்தால் மனநலம் பாதித்தல், தாயாருக்கு உடல் நலக் கேடு, ஆஸ்துமா, உடல் வறட்சி தோல் வறட்சி ஏற்படும். செவ்வாய் தோஷத்தால் உடல்நிலை பாதிப்பு, ரத்தம் தொடர்பான வியாதிகள், மாதவிலக்குப் பிரச்சனை, ரத்தப் புற்றுநோய், திருமணத் தடை போன்றவை உண்டாகும். </p><p>புதன் தோஷத்தால் படிப்பு மந்தம், காது கேளாமை, கணக்கில் மந்த நிலை, திக்குவாய், மூன்றாம் பாலின பிரச்சனை போன்றவை வரும். வியாழ தோஷத்தால் தாம்பத்திய குறைபாடுகள், நாத்திகம் பேசுதல், வீட்டு பெரியவர்கள் குருமார்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கருத்து முரண்பாடு கொள்ளுதல், விதண்டாவாதம் பேசுதல் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/475b6af3-2996-4943-9d31-e12eadba71aa/24-67655e166ec08.webp' /></p><p> </p><p>சுக்கிர தோஷத்தால் பெண்களால் தொல்லை, காதல் தோல்வி, விவாகரத்து, பால்வினை நோய் போன்றவை வரும். சனி தோஷத்தால் மந்த நிலை, எதையும் காலதாமதம் செய்தல், ஒத்திப் போடுதல், காலில் ஆறாத புண், தீராத ரணம், அடுத்தடுத்து காயம் படுதல், வயதில் மூத்த பெண், விதவை அல்லது நீசப் பெண்ணுடன் தகாத உறவு கொள்ளுதல், பணியாளர்களோடு முரண்படுதல், வீண் சண்டை சச்சரவு வழக்கு விவகாரம், மாற்றுத் திறனாளிகளோடு பிரச்சனை, அடிதடி, வம்பு, வழக்கு தகராறு, அடிக்கடி பொருள் களவு போதல் அல்லது காணாமல் போதல் போன்றவை ஏற்பாடும். இது பின்னரே சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வந்து நவகலச யாகம் செய்வது நலம்.</p><h3>அம்பாள் வழிபாடு
</h3><p>விஜயாபதி விசுவாமித்ரர் கோவிலில் சிவபெருமானுக்குப் பெயர் மகாலிங்கம். அம்பாளுக்கு பெயர் அகிலாண்டேஸ்வரி. வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்குச் சிவப்பு நிறப் பட்டு சார்த்தி, செவ்வரளி பூ மாலை சூட்டி வழிபட்டால் எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும். </p><p>மகாலிங்கேஸ்வரருக்கு வெள்ளைப் பட்டு, சார்த்தி, வெள்ளை மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும். விசுவாமித்திரர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய தைப்பூசம் அல்லது தை பௌர்ணமி அன்றைக்கு மூவருக்கும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வாழ்வில் குபேர சம்பத்தை கொடுக்கும்.
</p><p>
 ஓம குண்ட விநாயகர் விசுவாமித்திரர் யாகம் செய்த இடம் குளமாக விளங்குகின்றது. இதுவே திருக்கோயிலின் புனித தீர்த்தமும் ஆகும். இதற்கு அருகில் இருக்கும் விநாயகருக்கு ஓம குண்ட விநாயகர் என்று பெயர். அவருக்கு அருகில் இராமர் இலட்சுமணர் உருவங்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h3>பெண் சாபம் </h3><p>
 முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தால் அவரின் வம்சாவளியினருக்கு பெண் சாபம் பிடிக்கும். அல்லது தன் குடும்பத்தில் பிறந்த ஏதேனும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவள் வாழாமல் செத்த காரணத்தினாலும் அவள் வயிற்றெரிச்சல் தீராமல் இறந்த காரணத்தினாலும் அக்குடும்பத்தில் பிறந்த பெண் வாரிசுகள் வாழாமலும் போகும். வந்த நோய் தீராமலும் பிள்ளைப் பேறு இல்லாமலும் அவதிப்படுவார்கள். இது பெண் சாபம் ஆகும்</p><h3>பிரேத சாபம்
</h3><p>பிரேத சாபம் என்பது ஆண்கள் எவரேனும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னோர் ஒருவர் காரணமாக இருந்தால் அவருடைய வம்சாவளியில் வரும் ஆண்களுக்கு தீராத நோய், உடல் ஊனம், திருமணம் ஆகாத நிலை ,தாம்பத்திய சுகம் இன்மை, நோயாளி மனைவி, நோயாளி பிள்ளைகள் என்று சிரமங்கள் உண்டாகி வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. </p><p>இறந்தவரின் ஆவி கொலைக்கு காரணமானவரின் குடும்பத்தை ஏழேழு தலைமுறைக்கும் பிடித்துத் துன்பம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவர்களும் விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு வரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c02e685-1ca0-40c5-a8b4-391be43c9520/24-67655e170b2eb.webp' /></p><h3>குலதெய்வ சாபம் </h3><p>
குலதெய்வம் என்பது இறந்து போன முன்னோரை வழிபடுவதாகும். பொது நன்மைக்காகக் கொலையகி மாண்டவர்களை வழிபடுவதும் தமிழ்ச் சமய மரபில் இருந்து வருகிறது. அம்மை வந்து குளிர்ந்தவர்களை (இறந்தவர்களை) யாரும் வழிபடுவது கிடையாது. </p><p>ஏனெனில் அவர்கள் தெய்வமாகிவிட்டனர்.

பருவம் எய்தமல் இறந்து போன சிறு குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளைக் குலதெய்வமாக கொண்டு வணங்கும் மரபு உண்டு. ஆண்டுதோறும் அவர்களை நினைத்து குலதெய்வ பூஜை நடக்கும் மாசி அமாவாசை இரவில் அல்லது அந்தப் பெண் இறந்த திதியன்று துணிமணி, வளையல், பொட்டு, பூ வாங்கி வைத்து வணங்கவேண்டும். </p><p>காதோலை, கருகமணி வழிபாடு இத்தகையதே. ஏழைக் குழந்தைகளுக்குத் துணிமணி, வளையல், பொட்டு, பூ வாங்கிக் கொடுக்க வேண்டும். கன்னிப் பெண்கள் இறந்திருந்தால் அவர்களுக்கும் இதுபோல ஆண்டுதோறும் பூசை செய்து வர வேண்டும்.</p><p>இறந்த கன்னிப் பெண் அதே குடும்பத்தினரால் அல்லது வேறு இனத்தவரால் வன்கொலையாக கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது ஊர் நன்மைக்காக, சாதியின் நன்மைக்காக தீயில் விழுந்து, கிணற்றில் விழுந்து தன்னைத்தானே பொது நன்மைக்காக தன் உயிர்ப் பலியாகக் கொடுத்திருக்கலாம்.</p><p></p><p> </p><p>அவர் எந்த குலத்துக்காக குடிக்காக இறந்தாரோ அந்த் குலத்தின் அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் ஒரு நாள் அப்பெண்ணிற்கு துணிமணி வாங்கி வைத்து வணங்கி வர வேண்டும். அதே வயதுடைய பெண்களுக்கு அன்றைக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்ய வேண்டும். </p><p>இளம் பெண்களின் திருமணத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை அக்குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

 பொதுவாக இளம்பெண் மரணங்கள் சாதியம் சார்ந்த ஆணவ படுகொலையாகவே இருக்கும். </p><p> இந்நிலையில் அச்சாதியைச் சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இன்று வசித்தாலும் ஒரு கூடி வணங்க வேண்டும். அவ்வூரில் வாழ்ந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இப்பெண்ணைத் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.</p><h3>அம்மாச்சியார்/ அவ்வையார்
</h3><p>சில குடும்பங்களில் வயது ஒரு குடும்பத்தின் தலைவியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாட்டியரை, அம்மாச்சியார், அவ்வையார் (தெலுங்கு அவ்வா) என்ற பெயரில் வழிபடுகின்றனர். அவர்களும் தெய்வமாக இருந்து தனது குலத்தை தன் வழித்தோன்றல்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றுகின்றனர்.</p><p> அவர் இறக்கும்போது பத்து, பதினைந்து குடும்பம் இருந்திருக்கலாம், இன்றைக்கு அது 40, 50 குடும்பமாக பெருகியிருக்கும். இந்நிலையில் அம்மாச்சியாரையும் அவ்வாவையும் குல தெய்வமாக கொண்ட 40, 50 குடும்பங்களும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.&nbsp;</p><p></p><h3>குலதெய்வ பூஜை
</h3><p>குலதெய்வ பூஜை செய்யாதவர் வீட்டில் குலதெய்வத்தால் தீமை ஏற்படாது. அதே சமயத்தில் குலதெய்வத்தின் அருள் கிடைக்காது . இதனால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு குலதெய்வத்தின் துணை இருக்காது. </p><p> எனவே குலதெய்வத்தின் அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இயன்றவரை குடும்பங்களை ஒன்று சேர்த்து குலதெய்வ வழிபாடுகளை தொடர்ந்து நடத்தி வர வேண்டும். இதுவரை நடத்தவில்லை என்றால் தனிநபர் அல்லது தனி குடும்பத்தினர் விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு வந்து வணங்கி தன் அளவிற்காவது குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
</p><p>
குலதெய்வம் சாபம் என்பது குலத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வணங்கும்போது நீங்கி விடும். அனைவருக்கும் நல்ல ஏற்றமும் முன்னேற்றமும் வாழ்க்கையில் கிடைக்கும்.

சகலதோஷ நிவர்த்தி ஸ்தலமான விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று வந்து விசுவாமித்திரருக்கும் மகாலிங்கேஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்து வருவது அனைவருக்கும் நல்லது. </p><p>ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வந்து நவகலச பூஜை செய்து நவக்கிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது இன்னும் சிறப்பானதாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ரதோஷம் போக்கும் (வரலாற்றுக்கு முந்திய) வக்ரகாளியம்மன் கோயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/sri-vakra-kali-amman-temple-1734778882"></link>
            <id>https://ibcbakthi.com/article/sri-vakra-kali-amman-temple-1734778882</id>
            <summary type="text">தொண்டை மண்டலத்தின் 30 ஆவது திருத்தலமான வக்ரகாளியம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து மயிலம் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டை மண்டலத்தின் 30 ஆவது திருத்தலமான வக்ரகாளியம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து மயிலம் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.</p><p> பாண்டிச்சேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருவக்ர என்ற ஊரில் வராக நதி அல்லது சங்கராபரணி நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. </p><p>இக்கோயிலை வலப்பக்கமாக ஐந்து முறையும் இடப்பக்கமாக ஐந்து முறையும் (வக்கிரமாக) சுற்றி வர வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf59aa06-b4df-47ad-aa24-f41f969e3cef/24-6766a3c82f40b.webp' /></p><h2>தெய்வங்களின் வரலாறு</h2><p>
தமிழகத்தின் சமய வரலாற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 
ஒன்று, இயற்கை வழிபாடும் முன்னோர் வழிபாடும் இருந்த சங்ககாலம்.&nbsp; </p><p>இரண்டு, சமண பௌத்தர்கள் துறவிகள் (தெய்வங்கள்) வழிபாடு (காப்பிய காலம்)
மூன்று, சைவம்/வைணவ தெய்வ வழிபாடு. (பக்தி இலக்கிய காலம்)
இம் மூன்று காலகட்ட வரலாற்றையும் ஒரு சேர வக்ரகாளியம்மன் கோயிலில் காணலாம்.</p><p>இயற்கை வழிபாடான ஒளி வழிபாட்டின் தொடர்ச்சியாக இங்கு ஜோதி தரிசனம் நடைபெறுகின்றது. &nbsp;</p><p></p><h2>ஜோதி தரிசனம்
</h2><p>வக்ரகாளியம்மன் கோயிலில்
அமாவாசை பௌர்ணமி நாட்களில் ஒளிவழிபாடு உண்டு. பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு அமாவாசை அன்று பகல் 12 மணிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். </p><p>கோவில் கோபுரத்தில் ஜோதி ஏற்றப்படும். ஜோதி தரிசனம் காண அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள். ஆடி மாத பௌர்ணமி அன்று கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்படும்.&nbsp;</p><h2>பிடாரியம்மனும் வக்ரகாளியும்
</h2><p>தமிழ் மொழி என்ற அடையாளம் தோன்றுவதற்கு முன்னர் நாகர் என்ற அடையாளத்தோடு வாழ்ந்த மக்கள் பிடாரியைத் (பிடாரன்,பிடாரி)
தம் தாயாகக் கருதி வழிபட்டனர். பிடாரி தீயவர்களின் பிள்ளை தின்னி. ஊருக்கு வெளியே மயானத்தில் குடி கொண்டிருப்பாள். </p><p>ஊருக்கு ஒரு பிடாரியும் ஏரிக்கு ஒரு ஐயனாரும் காவலுக்கு இருந்தனர். வக்ரகாளி அம்மன் என்பது பிடாரியம்மனின் புதுப் பெயர். வக்ரகாளியம்மன் கதையிலும் பிள்ளையைக் கொன்று பிரேதமாகத் தன் காதில் குண்டலமாக தொங்கவிட்ட நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/772ac751-aa54-4858-866c-8aa7795b1155/24-6766a3c8b9063.webp' /></p><h2>சந்திர தரிசனம்</h2><p>
காப்பிய காலத்தில் தமிழ்த்தில் சமண பௌத்த சமயங்கள் பரவின. அப்போது இங்கு சமண ஆதி தேவர், ரிஷப தேவர் போன்ற
தீர்த்தங்கரர்களும் போதிசத்துவ முனிவர்களும் தாரா தேவி, சிந்தா தேவி, மணிமேகலா தெய்வம் போன்ற பௌத்தர்களும் வழிபடப்பட்டனர். பௌத்தர்கள் சந்திர தரிசனத்துக்கு முக்கியத்துவம் அளித்தனர். பௌத்தம் பரவியுள்ள ஜப்பான் நாட்டில் moon viewing என்ற பெயரை அவரவர் இருப்பிடத்தில் இருந்தே சந்திர தரிசனம் செய்கின்றனர்.&nbsp;</p><h2>பௌர்ணமி பூஜை</h2><p>
சந்திர தரிசனத்தில் பௌர்ணமி பூஜை மிகவும் முக்கியமானது. அன்றிரவில் கிரி வலம் வருவதை பௌத்தர்கள் ஊக்குவித்தனர். இதை ஜப்பானில் பௌத்தர்கள் kai hog yo என்று குறிப்பர். பௌத்தர்கள் இக்கோவிலை சுவைகரித்துக் கொண்ட போது இங்குப் புதிதாக பிரம்ம தீர்த்தம் உருவானது. போதிசத்துவர், தாரா போன்றவர்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டன. ஒளி வழிபாடு சந்திர சூரிய வழிபாடு என்று பெயர் மாற்றம் பெற்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;பௌத்தர்கள் பௌர்ணமி வழிபாட்டை தங்கள் மடாலயங்கள் இருந்த இடத்தில் சிறப்பாக நடத்தி வந்தனர். பௌர்ணமி இரவில் மக்கள் நிலவின் ஒளியில் மூழ்கி இருப்பது ஆரோக்கியமான ஆரோக்கியமானது என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.</p><h2>சைவ வைணவக் கோயில்கள்
</h2><p>மூன்றாவது கட்டமாக பக்தி இலக்கிய காலத்திலும் அதற்குப் பிறகும் இத் திருத்தலத்தில் சிவன், விஷ்ணு கோயில்கள் உருவாகின. சிவபெருமானுக்கு மூன்று முகமும் சந்திரமவுலீஸ்வரர் என்ற பெயரும் தோன்றியது.</p><p> </p><p>அடுத்ததாக விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் அவர்களின் பிரதிநிதியான நாயக்க மன்னர்களும் வைணவர்களாக இருந்த காரணத்தினால் சிவன் கோவில்களில் ஆட்சியாளர்கள் பெருமாள் சன்னதியையும் ஏற்படுத்தினர். இங்கு வரதராஜ பெருமாள் சன்னதியும் இடம்பெற்றது. &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fef4f01-748c-41b8-8317-3e41b735881a/24-6766a3c9b537f.webp' /></p><h2>நான்கு வழிபாடு சிறக்கும் கோயில்
</h2><p>வக்ரகாளியம்மன் கோயில்
மனித குல வரலாற்றின் வரலாற்றுக்கு ஏற்ப மிக நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட மிகப் பழைய கோவிலாகும். ஒளி வழிபாடு பிடாரியம்மன் வழிபாடு சிவன் வழிபாடு விஷ்ணு வழிபாடு என்று நான்கு வகையிலும் சிறப்புப் பெற்ற கோவிலாக இக்கோவில் விளங்குகின்றது. </p><p>இங்கு கல் மரங்கள் கிடைத்திருப்பதும் இக்கோயிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. மரங்கள் கல்லாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும்.&nbsp;</p><h2>வக்ரகாளி</h2><h2>
</h2><p></p><p>காளி என்றாலே கொடூரத் தோற்றம் கொண்டவள். அதுவும் வகரகாளி என்றால் மிக மிக கொடூரத் தோற்றம் கொண்டவள். வக்ரகாளியின் தலையில் ஜ்வாலா மகுடம் எனப்படும் தீப்பொறி பறக்கும் மகுடம் உண்டு. கழுத்தில் மண்டையோடுகளால் ஆன மாலை அணிந்து இருப்பாள். </p><p>வலது காது துளையில் வழியாக ஒரு குழந்தையின் பிரேதம் தொங்கும். எட்டு கைகளை உடையவள். இவளது கைகளில் பாசம், சக்கரம், வாள், கபாலம், காட்டாரி போன்ற ஆயுதங்களை ஏந்தி இருப்பாள். தலைமுண்டங்களின் மாலையையே முப்பரி நூல் போல் அணிந்திருப்பாள்.</p><p> </p><p>பத்ரகாளி சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது. அம்மனே ஆதி காலத்தில் மயான பூமியின் தெய்வமாக பிடாரியம்மனாக வணங்கப்பட்டு வந்தாள். பிடாரியம்மன் தவறு செய்பவர்களின் குழந்தைகளைப் பறித்துத் தின்பாள். மயானத்தில் திருவாள். </p><p>குழந்தைகளின் பிரேதங்கள் காதுகளில்
குண்டலங்களாக அணிவாள். வக்ரகாளியின் காதில் பிரேத குண்டலம் தொங்குவதைப் பார்க்கலாம். அம்மனுக்கு முக்கிய திருநாட்களில் சந்தனம், தயிர், இளநீர், தேன், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef88d4c8-836d-41df-85a9-6ba607623ad3/24-6766a3c93b3d0.webp' /></p><h2>சிவனும் பெருமாளும்</h2><p>வக்ரகாளியம்மன் கோயிலில் சிவன் சந்நிதியும் பெருமாள் கோவிலும் உண்டு. இங்கே உள்ள சிவபெருமானின் பெயர் சந்திரசேகரன் அல்லது சந்திர மௌலீஸ்வரர். அம்பாளின் பெயர் வடிவாம்பிகை அல்லது அமிர்தேஸ்வரி. வக்ரகாளியம்மன் கோயிலில் வக்ர லிங்கம், சந்திர மௌலீச்வரர் மற்றும் சகஸ்ர லிங்கம் என்று மூன்று லிங்கங்கள் உண்டு</p><h2>சந்திரகாந்த வக்ரலிங்கம்
</h2><p>வக்ரகாளிக்கு எதிரே இருக்கும் ஆத்மலிங்கம், வக்ரலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த லிங்கம் சந்திரகாந்தக்கல்லால் செய்யப்பட்டது என்பதனால் வெயில் காலத்தில் இக்கருவறையும் இப்பகுதியும் குளிர்ச்சியாக இருக்கும். மழைக்காலத்தில் சிவலிங்கத்தின் மீது நீர் துளித்து இருப்பதைக் காணலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">சஹஸ்ர லிங்கம்</span></h2><p>
பௌத்தர்கள் இந்திரனை லிங்க வடிவில் வணங்கினர் என்பதைக் 'கந்துடைப் பொதியில்' என்று சிலப்பதகாரம் அவனது கோயிலை வருணிப்பதில் இருந்து அறியலாம். கந்து என்றால் லிங்க உரு. அவன் தேவலோகத்தில் உள்ள அப்சரஸ்களுக்கு (மங்கையருக்கு) இந்திரிய தானம் செயதவன்என்பதால் கந்து வடிவில் பல குழிகள் அமைக்கப்பட்டன. </p><p>குழிகளுக்கு அருகில் இருந்த மேடுகளை பின்னர் கண்கள் என்று வருணித்துச் சொல்லி வேறொரு கதையும் உருவானது. பௌத்தம் அழிந்ததும் ஆயிரம் கண் உடைய கந்து அல்லது லிங்க் உருக்கள் (கண்ணாயிரம்) சஹஸ்ர (ஆயிரம்) லிங்கங்களாக மாற்றம் பெற்றன.&nbsp;&nbsp;</p><h2>சந்திரசேகரர்</h2><p>
வக்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள முக்கிய கருவறையில் உள்ள சிவலிங்கம் மூன்று முகங்களை உடையது. கிழக்கே தற்புருடம், தெற்கே அகோரம், வடக்கே வாமதேவம் என்பது மூன்று முகங்களுக்குரிய பெயராகும். மேற்கில் இருக்க வேண்டிய சத்தோயோஜாதம் என்ற முகம் காணப்படவில்லை.&nbsp;</p><p></p><h2>கதை 1</h2><h3> 
வரதராஜப் பெருமாள் கதை
</h3><p>அனைத்து சிவன் கோவில்களுக்கும் தல புராணக் கதைகள் இருப்பது போல இந்தக் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. குண்டலினி சித்தரின் பேரன் வக்ராசுரன் என்பவன் தேவர்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வந்தான். </p><p>தேவர்கள் திருமாலை சேவித்து வக்ராசுரனின் தொல்லைகளிலிருந்து தம்மை விடுவிக்கும்படி வேண்டினர். திருமால் தன் சக்ராயுதத்தை ஏவி வக்ராசுரனைக் கொன்றார். இதனால் இங்கு எழுந்தருளியிருக்கும் வரதராஜ பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் காட்சி தருகின்றார்.</p><h2>கதை 2
</h2><h3>வக்ரகாளியம்மன் கதை</h3><p>
வக்ராசரனுக்கு துன்முகி என்று ஒரு தங்கை இருந்தாள். அவளும் துர்க்குணங்கள் படைத்தவள். நல்லவர்களுக்குக் கெடுதல் பல செய்து வந்தாள். அவளை அழித்தால் மட்டுமே நல்லவர்கள் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டபோது பார்வதி தேவி அவளை அழிக்கக் கிளம்பினாள். </p><p>அப்போது துன்முகி கர்ப்பவதியாக இருந்த காரணத்தினால் கர்ப்பவதியை கொல்லக்கூடாது என்ற தர்மத்தின் படி அவள் வயிற்றைக் கிழித்து வயிற்றினில் இருந்த குழந்தையை வெளியே எடுத்து விட்டு அவளைக் கொன்றாள். இதனால் இங்கே எழுந்தருளியிருக்கும் வக்கிரகாளியின் காதில் சிசு பிரேத குண்டலமாகத் தொங்குவதை பார்க்கலாம்&nbsp; .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c9d3adf-65ed-40ef-924a-969a33ea0db9/24-6766a3ca32983.webp' /></p><h2>தீர்த்தங்கள்</h2><p>
ஒளிவழிபாட்டு சிறப்புடைய இத்தலத்தில் உள்ள தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றன. பௌத்த சமயம் வந்த பின்பு இங்கு ஒரு பிரம்ம தீர்த்தமும் தோன்றியது. </p><h2>

வக்ர சனி
</h2><h3>வக்ரகாளியம்மன் கோயிலில்
</h3><p>அருணகிரியார் பாடிய முருகனுக்கு தனி சந்நிதி உண்டு. சனிபகவான் வக்கிர நிலையில் (பின்னோக்கி) பயணிக்க தயாராக இருக்கும் வடிவில் சந்நிதி கொண்டுள்ளார். அவர் தனது வாகனமான காகத்தை இடது பக்கமாக திருப்பி நிறுத்தி இருக்கின்றார். </p><p>மற்ற கோவில்களில் காகம் வலது பக்கமாக நோக்கி நிற்கும். வலது பக்கமாக காகம் இருந்தால் அவர் நேரே பயணிக்கின்றார் என்று பொருள்.காகம் இடது பக்கமாகத் திரும்பி நின்றால் அவர் வந்த வழியே திரும்பிச் செல்கின்றார் அதாவது பின்னோக்கி வக்கிரமாகச் செல்கின்றார் என்று பொருள். இங்கு சனி வக்ரசனியாக இருக்கின்றார்.</p><h3>வக்ர தோஷ நிவர்த்தி ஸ்தலம் </h3><p>
ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரமாக இருந்தால் வக்ரகாளி அம்மன் கோயிலுக்கு வந்து சிவபெருமானையும் பெருமாளையும் ஒரு சேர வணங்கிச் செல்லலாம். வக்ர தோஷம் விலகும். சனி வக்கிரமாக இருந்தால் இங்கே உள்ள சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று வந்து சிறப்பு பூசைகள் செய்யலாம். சனி தோஷம் விலகும்&nbsp;&nbsp;</p><p></p><h3>தாலி பாக்கியம் பெற
</h3><p>ஒளி தெய்வமாக தீபத்தின் அருள்ஜோதியாக லட்சுமிகரமான அம்மன் ஒருவர் தீபலட்சுமி அம்மன் என்ற பெயரில் இக்கோவிலில் தனி சந்நிதி கொண்டுள்ளார். இவர் பழைய பௌத்த தாராவாக இருக்கக் கூடும். </p><p>திருமணத் தடை, திருமண தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்களும் தீபலட்சுமி அம்மன் கோவிலுக்கு வந்து மஞ்சள் கயிறு கட்டி எலுமிச்சை விளக்கேற்றி மனம் உருகி நின்று வேண்டிக் கொண்டால் தடைகள் விலகி திருமணம் விரைவில் நடைபெறும். மாங்கல்யம் உறுதி பெறும்.&nbsp; &nbsp;</p><h3>குறை தீர்க்கும் கோயில்
</h3><p>வக்ரகாளியம்மன் கோயிலில் தங்கள் குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி போடும் முறையும் உள்ளது. இதனாலும் மக்கள் குறைகள் நீங்குகிறது.
</p><h3>
ஜீவன்முக்தி ஸ்தலம்
</h3><p>குண்டலினி முனிவர் இங்கே தவமிருந்து ஜீவன் முக்தி அடைந்ததால் தெற்கு பிரகாரத்தில் அவருக்கு ஒரு சிலை உண்டு. அவருடைய பேரன் வக்ராசுரனுக்கும் ஒரு சிலை உள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இணைந்து கொள்ளுங்கள்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (24-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/12-daily-rasi-palangal-july-24-2026-friday-1784811089"></link>
            <id>https://ibcbakthi.com/article/12-daily-rasi-palangal-july-24-2026-friday-1784811089</id>
            <summary type="text">மேஷம்:
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளின் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் மனம் கவலை கொள்ளலாம். மதியம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளின் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் மனம் கவலை கொள்ளலாம். மதியம் நற்செய்திகள் வந்து சேரும்.</p><h3>
 ரிஷபம்:
</h3><p> மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். புதிய அனுபவங்களை பெறுவீர்கள். சில அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும்.</p><p></p><h3>
 கடகம்:
</h3><p> மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கடன் சார்ந்த குழப்பங்கள் விலகும நாள்.</p><h3>
 சிம்மம்:
</h3><p> ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவீர்கள். வீடு மனை வாங்குவதை குறித்து ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
</p><h3>கன்னி:
</h3><p>இன்று வேலையில் முக்கிய பொறுப்புகளை பெறுவீர்கள். ஒரு சில விமர்சனங்களால் மனதில் கவலை ஏற்படலாம். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது அவசியம். விவேகத்துடன் செயல்படுவீர்கள்.
</p><h3> துலாம்:
</h3><p> வருமானத்தை மேம்படுத்துவதற்கான வேலையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பாக பிரச்சனைகள் விலகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். </p><h3>
தனுசு:
</h3><p>செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலரிடம் இருந்து பிரச்சனைகளை சந்திப்பீர்கள். முடிந்து வரை அலுவலகத்தில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.</p><p></p><h3> 
 மகரம்:</h3><p>
 வழக்கு தொடர்பாக நீங்கள் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று அதிக ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மற்றும் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.
</p><h3> கும்பம்:
</h3><p> மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமான பலனையை கொடுக்கும். வெளியே தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
</p><h3> மீனம்:
</h3><p> வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான நாள். தந்தை வழியே சொத்துக்கள் மூலம் நல்ல ஆதாயம் பெறுவீர்கள். தேவை இல்லாத அலைச்சல் உண்டாகலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பாக்கியம் அருளும் ஆடி வெள்ளிக்கிழமை.. சக்தி வாய்ந்த அந்த ஒரு பரிகாரம் என்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-fasting-in-aadi-sunday-tuesday-friday-1784810830"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-fasting-in-aadi-sunday-tuesday-friday-1784810830</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக உள்ளது. அதிலும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி மிகவும் முக்கியமான மாதமாக உள்ளது. ஆடி செவ்வாயில் மண் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக உள்ளது. அதிலும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி மிகவும் முக்கியமான மாதமாக உள்ளது. ஆடி செவ்வாயில் மண் சார்ந்த வழிபாடுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>நம் முன்னோர்கள் வயல்வெளிகளில் இருந்து களிமண் எடுத்து வந்து 'சப்த கன்னி' வழிபாடு மேற்கொண்டு நம்முடைய விவசாயம் செழிக்கவும், சந்ததி விருத்தி அடையவும் பிரார்த்தனை செய்கின்றனர்.</p><p></p><p> </p><p>அதோடு ஆடி வெள்ளி சுக்கிரன் மற்றும் நாக வழிபாட்டிற்கு மிக உகந்ததாக உள்ளது. இந்த நாளில் அரச மரத்தடியில் உள்ள விநாயகர் மற்றும் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் மேற்கொண்டு பெண்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். </p><p>இதனால் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தில் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக ஆடி ஞாயிற்று கிழமையும் இன்னும் சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தின் மகிமை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1_BAPeWLUkk?start=34" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாதகத்தில் 5 ஆம் இடம் ஏன் இவ்வளவு முக்கியமானது? 5 ஆம் இடம் சொல்லும் ரகசியம் என்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-our-5-house-says-about-us-in-horoscope-1784808148"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-our-5-house-says-about-us-in-horoscope-1784808148</id>
            <summary type="text">&amp;nbsp;ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக ஐந்தாம் இடம் வலிமையாக இருந்தால் அந்த நபர் புத்திசாலியாக மட்டுமல்லாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக ஐந்தாம் இடம் வலிமையாக இருந்தால் அந்த நபர் புத்திசாலியாக மட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகளும் வெற்றிகளும் வந்து சேரலாம். </p><p>அதாவது எதற்கும் கஷ்டப்படாமல் எல்லாம் அவர்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படியாக, ஐந்தாம் இடத்தில் முக்கியத்துவமும் ஐந்தாம் இடத்தில் இருக்க கூடிய கிரகங்கள் உடைய பலன்களை பற்றியும் பார்ப்போம்.</p><p></p><p> </p><p>

1. ஒருவருக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் இருந்தால் அந்த நபர் நல்ல உயர்ந்த கல்வி, ஞானம், புத்திசாலியான குழந்தைகள், பூர்வ புண்ணிய பலன்களை பெறுகிறார்கள்.
</p><p>2. அதுவே சுக்கிர பகவான் இருந்தால் காதலில் வெற்றி, கலைதிறன், எழுத்து துறையில் சிறந்து விளங்குதல், போன்ற விஷயங்களில் சிறப்பாக இருப்பார்கள்.
</p><p>3. புதன் இருந்தால் நல்ல வேகமானசிந்தனைகள், எழுத்து திறன், வணிக துறைகள் சிறப்பாக விளங்குவார்கள்.
</p><p>4. சந்திர பகவான் இருந்தால் இவர்கள் உணவுப்பூர்வமான அறிவு மற்றும் முழு உணர்வு, குழந்தைகளின் பாசம், அன்பான குணம் ஆகியவை பெற்றிருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5ea6b76-be56-46bc-9641-cb13d176fff4/26-6a6202d57a205.webp' /></p><p> </p><p>5. ஐந்தாம் இடத்தில் சூரிய பகவான் இருந்தால் இவர்கள் தலைமைத்துவ பண்பு தன்னம்பிக்கை புகழ் திறமையால் அங்கீகாரம் ஆகியவை பெறுகிறார்கள். </p><p>
6. அதுவே செவ்வாய் இருந்தால் இவர்களுக்கு நிறைய போட்டி மனப்பான்மை இருக்கும். துணிச்சலாக செய்யக்கூடிய வேலைகளை செய்வார்கள். விளையாட்டு திறன் இருக்கும் தைரியமாக முடிவெடுப்பார்கள்.</p><p></p><p> 


7. ஐந்தாம் வீட்டில் சனிபகவான் இருந்தால் இந்த நபர் நல்ல ஒழுக்கத்துடனும் பொறுமையுடன் காதல் மற்றும் குழந்தை பாக்கியம் தாமதமாக இருந்தாலும் விரைவில் வெற்றிகள் பெறுகிறார்கள். </p><p> 
8. அதுவே ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருந்த வித்தியாசமான சிந்தனை கொண்டிருப்பார்கள். பெயர் புகழ் பெறும் வாய்ப்புகள் இருக்கும்.
</p><p>9. அதுவே ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் காதலில் பற்றின்மை, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆழமான அறிவு, ஆராய்ச்சி மனப்பான்மை போன்றவை அதிகமாக இருக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T12:02:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 3 ராசிகள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மன்னிக்கவே மாற்றங்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-zodiac-who-will-never-forgive-betrayal-1784802798"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-zodiac-who-will-never-forgive-betrayal-1784802798</id>
            <summary type="text">&amp;nbsp;நம்மை சுற்றி ஒரு சில நபர்கள் இருப்பார்கள். நன்றி உணர்வு இல்லாமல் நன்மை செய்தவர்களுக்கே துரோகம் செய்யக்கூடியவர்கள். அப்படியாக அந்த துரோகத்தையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்மை சுற்றி ஒரு சில நபர்கள் இருப்பார்கள். நன்றி உணர்வு இல்லாமல் நன்மை செய்தவர்களுக்கே துரோகம் செய்யக்கூடியவர்கள். அப்படியாக அந்த துரோகத்தையும் ஒரு சிலர் மன்னித்து விடக்கூடிய மனப்பக்குவம் பெற்று இருப்பார்கள். </p><p>ஆனால் ஒரு சிலரால் அல்லது துரோகத்தை அவர்களால் மன்னிக்கவே முடியாது. அந்த வகையில் எந்த ராசிகள் பிறந்தவர்கள் ஒருவர் நமக்கு செய்த துரோகத்தை இறுதி பயணம் வரை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><h3>
ரிஷபம்:</h3><p>
 ரிஷப ராசியை பொறுத்த வரை இவர்கள் ஒருவரை முழுமையாக நம்புவார்கள். அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அந்த காலகட்டங்களில் அந்த நெருங்கிய நபர் இவர்களுக்கு துரோகம் செய்யும் பொழுது இவர்கள் மிகவும் மனம் வேதனை அடைகிறார்கள். </p><p>அது மட்டும் இல்லாமல் அவர்களை எந்த காலத்தில் மன்னிப்பதும் இல்லை. அவர்களிடம் இவர்கள் மீண்டும் பேசக்கூடிய நிலை வந்தாலும் பேச மாட்டார்களாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/effa9a47-40b4-429d-9e8a-be23a73ecc32/26-6a61edf1bfdb0.webp' /></p><p>
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்களால் ஒருவர் தவறு செய்தாலே மன்னிக்க முடியாது. அந்த வகையில் ஒருவர் இவர்களுக்கு துரோகம் செய்தால் அதை இவர்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளவே முடியாதாம். இவர்கள் நம்முடைய வாழ்க்கையில் இனிமேல் இல்லை என்று இவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடுகிறார்கள்.</p><p></p><p>
</p><h3> மகரம்:</h3><p>
 ஒருவர் தெரிந்து தவறு செய்தால் கூட அதை அவர்கள் மன்னித்து விடுகிறார்கள். ஆனால் திட்டமிட்டு ஒருவருக்கு துரோகம் செய்வதை இவர்களால் மன்னிக்கவே முடியாது. அந்த நபர்களுடன் எவ்வளவு பெரிய இணக்கமான உறவாக இருந்தாலும் அதை உடனடியாக துண்டித்து நகர்ந்து செல்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:33:25+00:00</updated>
        </entry>
    </feed>
