<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-17T06:32:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனாட்சி அம்மன் சன்னதியின் வாசலில் ஏன் கோபுரம் இல்லை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/why-no-gopuram-at-meenakshi-amman-shrine-1789625680"></link>
            <id>https://ibcbakthi.com/article/why-no-gopuram-at-meenakshi-amman-shrine-1789625680</id>
            <summary type="text">மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். மேலும், தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மிகவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். மேலும், தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மிகவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாகவும் விளங்கக் கூடியதாக உள்ளது. </p><p> 


அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய ஒவ்வொருவரும் அங்கு இருக்கக்கூடிய பிரம்மாண்டமான கோபுரங்களை பார்த்து வியப்பு உண்டு.</p><p> கோபுரங்களில் இருக்கக்கூடிய நுணுக்கமான சிற்பக்கலைகள் இவையெல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் ஒரு முக்கியமான வாசலுக்கு மட்டும் கோபுரம் இல்லை என்பதை நாம் பலரும் பார்த்திருக்க தவறி இருக்கின்றோம். அதுதான் மீனாட்சியம்மன் சன்னதியில் உள்ள பிரதான வாசல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a19772f-75a4-4b32-9e9f-986d1917b6ee/26-6aab85545393d.webp' /></p><p></p><p> </p><p>அங்கே உயரமான கோபுரத்திற்கு பதிலாக அஷ்ட சக்தி மண்டபம் இருக்கிறது.
 
இந்த மண்டபத்தை கடந்து அம்மன் சன்னதி நோக்கி செல்லும் பொழுது பக்தர்களுக்கு இருபுற தூண்களிலும் அரும்பாலிக்க கூடிய எட்டு சக்தி வடிவங்களை பார்க்கலாம். 


அவை வெறும் சாதாரண அலங்கார சிற்பங்கள் மட்டுமல்ல. </p><p>8 அம்பிகையின் திரு உருவங்கள் இங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, லட்சுமி, யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி இவ்வாறு 8 சக்தி வடிவங்களும் மண்டபத்தினுடைய இருபுற தூண்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த மண்டபம் அஷ்ட சக்தி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. </p><p>எட்டு சக்தி என்றால் தெய்வீக ஆற்றல் நிறைந்தது. அதாவது அந்த எட்டு சக்திகளின் திருவுருவங்களையும் தன்னகத்தே கொண்ட மண்டபம் இதுவாகும்.

 இந்து மண்டபத்தின் வாயிலாக அம்மனை நாம் தரிசனம் செய்கின்ற பொழுது இந்த எட்டு சக்திகளையும் கடந்து செல்கிறார்கள்.</p><p> அம்மன் சன்னதியை அடைவதற்கு முன்பாகவே நாம் சக்தியின் பல்வேறு வடிவங்களை நினைவு கூறும் வகையில் இந்த அமைப்பு இருப்பது ஒரு சிறப்பு வாய்ந்தது. </p><p>மேலும், இந்த மண்டபத்தின் சிறப்பு அதனுடைய தூண்களில் மட்டும் அல்லாமல் மேலே விதானத்தை நோக்கி பார்க்கின்ற பொழுது அங்கேயும் ஒரு தெய்வீக கதை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8562c9eb-3b24-4187-912f-6d06533cfe08/26-6aab85551a953.webp' /></p><p></p><p>
</p><p>
 சிவபெருமானும் மீனாட்சியம்மனும் மதுரையில் அரசாட்சி புரிந்த காட்சிகள் சிறப்பான வடிவில் இடம் பெற்று இருக்கிறது. </p><p>அதில் மதுரை மீனாட்சியம்மன் உடைய அரிசியாக விளங்கிய பெருமையும், சுந்தரேஸ்வரருடன் இணைந்து ஆட்சி செய்த அந்த தெய்வீக காட்சிகளும், மீனாட்சி அம்மனுடைய பட்டாபிஷேக காட்சிகளும் அவருடைய திக்குவிஜயத்துடன் தொடர்புடைய காட்சிகளும் இந்த மண்டபத்தின் விதான சிறப்புகளில் இடம் பெற்றிருக்கிறது.
</p><p>
 
இவை எல்லாம் நாம் ஒருசேர பார்க்கின்ற பொழுது மீனாட்சியம்மன் வெறும் கோவிலில் வீற்றிருக்கக்கூடிய தெய்வமாக மட்டுமல்லாமல் மதுரையின் அரசியாகவும், சக்தியின் வடிவமாகவும் போற்றப்படுகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.</p><p> மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கக்கூடிய பிரதான வாசல் வழக்கமான கோபுரம் இல்லாததை நாம் பார்க்கின்ற பொழுது ஒரு குறையாக தோன்றலாம். ஆனால் அந்த இடத்தில் அஷ்ட சக்தி மண்டபம் அமைந்திருப்பதை நாம் தெரிந்து உடன் அந்த வாசலின் தத்துவம் நமக்கு புரிய துவங்குகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T06:14:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுரை மீனாட்சி அம்மன் பற்றி பலரும் அறிந்திடாத முக்கியமான விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/madurai-meenatchi-amman-temple-1728995390"></link>
            <id>https://ibcbakthi.com/article/madurai-meenatchi-amman-temple-1728995390</id>
            <summary type="text">தமிழநாட்டில் மிக முக்கியமான ஆலயங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.மேலும் அம்மாவின் அதீத அன்பால் மதுரை சுற்றிலும் எந்த திசையை பார்த்தாலும் அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழநாட்டில் மிக முக்கியமான ஆலயங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.மேலும் அம்மாவின் அதீத அன்பால் மதுரை சுற்றிலும் எந்த திசையை பார்த்தாலும் அம்மா மீனாட்சி அம்மன் பெயராலே பலர் தொழில் தொடங்கி அவர்கள் கடைகளுக்கு அம்பாள் பெயரை வைத்திருப்பதையும் பார்க்க முடியும்.</p><p>அவ்வளவு அன்பை சம்பாதித்த அம்பாள் மதுரையை ஆளும் அரசியை பற்றி பலருக்கும் தெரியாத முக்கியமான சுவாரசிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1954dc0-8469-400e-b4ae-680b84a565bf/24-670e604160225.webp' /><br></p><p>
</p><p>
1.அம்பாளின் மேனி பச்சை நிறம் அவை முழுவதும் மரகத கற்களால் ஆன சிறப்புக்கள் பெற்றது.
</p><p>2.மேலும் அன்னையின் வலது கால் இடது கால் விட சற்று முன் நிற்பது போல் இருக்கும்.அதற்கு காரணம் பத்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு அம்பாள் ஓடி வந்து உதவுவாள் என்பதை குறிக்கிறது.
</p><p>3.இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.அது பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருப்பது முக்கிய சிறப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1d45a3-ecd9-484b-b3d3-5da80d183761/24-670e6040d8858.webp' /><br></p><p>
</p><p>4.பொதுவாக கோயில்களில் சுவாமியை வழிபாடு செய்தே அம்பாளை தரிசிக்க வேண்டும் ஆனால் மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.
</p><p>5.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.</p><p><br></p><p> </p><p>
6.இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.</p><p> 
7.தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம் என்ற அனைத்து பெருமைகளும் கொண்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேரலை: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-meenatchi-amman-kumabishegam-live-today-1789620811"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-meenatchi-amman-kumabishegam-live-today-1789620811</id>
            <summary type="text">மதுரை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். அந்த வகையில், மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரை என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். அந்த வகையில், மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. </p><p>தமிழக முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இன்று மதுரை முழுவதும் பக்தர்களின் அலை கடல் சூழ்ந்து இருக்கிறது.</p><p></p><p> </p><p>உலகத்தை காக்கக்கூடிய சிவபெருமான் அன்னை மீனாட்சி தேவியை திருமணம் செய்த அற்புத இடமான அந்த மதுரை மாநகரம் இன்று விழாக் கோலத்தால் சூழ்ந்து இருக்கிறது. பொதுவாகவே கும்பாபிஷேகத்தில் நாம் கலந்து கொள்வது என்பது நமக்கு மிகச்சிறந்த சிறப்புகளையும் மாற்றத்தையும் கொடுக்கும். </p><p>அதிலும், மதுரையை ஆளக்கூடிய அன்னை மீனாட்சி தேவியின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் பிறவி பலன் தீர்கிறது என்று சொல்கிறார்கள். மேலும், மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறக்கூடிய இந்த அற்புதமான மகா கும்பாபிஷேகத்தை நாம் நேரலையில் பார்த்து கண்டுகளிப்போம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFnzjZU1riE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:53:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோதிடம்: காதலித்து திருமணம் செய்தாலும் ஏன் விவாகரித்து வரை செல்கிறது...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-zodiac-will-face-divorce-marriage-1789620282"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-zodiac-will-face-divorce-marriage-1789620282</id>
            <summary type="text">நாம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பார்த்திருப்போம். பல வருடம் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் திடீர் என்று அவர்கள் விவாகரத்து வரை சென்று விடுவார...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் பார்த்திருப்போம். பல வருடம் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் திடீர் என்று அவர்கள் விவாகரத்து வரை சென்று விடுவார்கள். இது காதலில் மட்டும் இல்லை பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் நிகழ்வுகளும் இன்றைய சூழலில் கோர்ட் வாசல் வரை சென்று விடுகிறது. </p><p>அப்படியாக, ஜோதிட ரீதியாக யாருக்கு விவாகரத்து வரை செல்லும் அமைப்பு உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம். ஒன்பது கிரகங்களில் சுக்கிரன் தான் காதலுக்கு உரிய கிரகம் ஆகும். </p><p>அதன் நிலை மற்றும் மற்ற கிரகங்களின் நிலையானது (கேது, செவ்வாய், ராகு, புதன், சனி) எந்த அளவிற்கு பாதிப்பில் உள்ளது என்பது ஆராய்வது அவசியம்.</p><p>
விருச்சிகம்,&nbsp;கடகம்&nbsp;மற்றும்&nbsp;ரிஷபம்&nbsp;ராசிகளுக்கு ஏழாம் வீட்டு அதிபதி மற்றும் சுக்கிரன் அமைப்பு இவர்களுக்கு திருமண வாழ்வில் சில கசப்புகளை கொடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebb16d0-5f5a-4247-aedf-6708a11e036a/26-6aab703bcce2a.webp' /></p><p></p><p> </p><p>மற்ற கிரகம் பொறுத்தவரை ராகு தீவிரமான ஈர்ப்பை கொடுக்கலாம், அதோடு கேது ஒருதுவித பற்றின்மையை உருவாக்கும். குறிப்பாக செவ்வாய் திசை அல்லது அதனுடைய தாக்கமும் சட்ட ரீதியான சில முக்கிய சிக்கல்களை கொடுக்கும்.
</p><p>மேலும், ஒருவருக்கு இரண்டாது திருமணம் என்று பார்க்கும் பொழுது 11 ஆம் வீட்டை நாம் ஆராய வேண்டியது அவசியம். </p><p>அங்கு ஏதேனும் அசுப கிரகம் இருந்தாலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அதோடு, குறிப்பாக ஒருவர் ஜாதகத்தில் 3ஆம் வீடு என்பது ஒருவர் எப்படி முடிவு எடுப்பார் என்பதை பற்றி குறிக்கக்கூடியதாகும். </p><p>அங்கு சனி அல்லது செவ்வாய் இருந்தால் திருமண முடிவுகளில் நிச்சயம் முடிவு எடுக்கும் பொழுதும் சில தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
அப்படியாக, யாருக்கு திருமண வாழ்வில் சிக்கல் வரும் என்பதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.</p><p>&nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VtQ5iMbS-dI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:44:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (17-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-17-2026-1789560815"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-september-17-2026-1789560815</id>
            <summary type="text">மேஷம்:
 இன்று வேலை ரீதியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனக்குறைவால் முக்கியமான விஷயங்களை இழந்து விட நேரலாம். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
 ர...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
 இன்று வேலை ரீதியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனக்குறைவால் முக்கியமான விஷயங்களை இழந்து விட நேரலாம். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> தொழில் ரீதியாக இங்கு சந்தித்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். பொருளாதார முன்னேற்றம் உண்டு.
</p><h3> மிதுனம்:
</h3><p> எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது அவசியம். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தந்தை ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.</p><h3>
 கடகம்:
</h3><p> கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். யாரை நம்பியும் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.</p><p></p><p> </p><h3>சிம்மம்:
</h3><p> சொத்து விவகாரங்களில் மூன்றாம் நபருடைய தலையிடலை கொண்டு வராதீர்கள். அரசியலில் இருப்பவர்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.</p><h3>
 கன்னி:</h3><p> 
எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரலாம் என்பதால் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.</p><h3> துலாம்:
</h3><p>நீங்கள் நினைத்த காரியத்தை சாதித்து முடிப்பீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் வந்து சேரக்கூடிய நாள். விலகி சென்றவர்களும் உங்களிடம் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் வாழ்க்கை பற்றிய கவலைகளுக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும்.
</p><h3> தனுசு:
</h3><p> பிள்ளைகள் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விலகும். குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய யோசனை உருவாகும். மனதெளிவு பிறக்கும்.</p><p></p><h3>
 மகரம்:
</h3><p> இன்று அரசியல் தொடர்பாக நீங்கள் முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். வேலை ரீதியாக உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். காரியத்தில் வெற்றி உண்டு. </p><h3>கும்பம்:
</h3><p> கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். கவன சிதறல்கள் குறைத்துக் கொள்வது அவசியம். வெளிவட்டாரம் விரிவடையும்.
</p><h3> மீனம்:
</h3><p> உங்களுடைய கல்வியில் ஏற்பட்ட தடை விலகும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பணத்தட்டுப்பாடும் பணக்கஷ்டமும் விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T03:27:13+00:00</updated>
        </entry>
    </feed>
