<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-21T14:13:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சனி வக்ர பெயர்ச்சி: துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-july-sani-vakrapeyarchi-libra-to-pisces-palan-1784632922"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-july-sani-vakrapeyarchi-libra-to-pisces-palan-1784632922</id>
            <summary type="text">&amp;nbsp;2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
</p><h3>துலாம்:</h3><p>
இந்த காலகட்டங்களில் இவர்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இடுப்பு மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். பொருளாதார ரீதியாக பெரிய அளவில் இல்லை என்றாலும் குறைவின்றி அவ்வப்போது தேவைக்கேற்ற வருமானத்தை பெறுவீர்கள். </p><h3>
விருச்சிகம்:
</h3><p>குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக கவலைகள் வரலாம். தொழில் ரீதியாக சில குழப்பங்களை சந்திக்ககூடும்.
</p><h3>தனுசு:
</h3><p>இந்த காலகட்டங்களில் நீங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. உறவுகளிடையே நம்பிக்கையோடு செயல்படுவது அவசியம். யாரையும் எளிதில் நம்பி முக்கியமான விஷயங்களை செய்யாதீர்கள். </p><h3>
மகரம்:
</h3><p>இந்த காலகட்டங்களில் உங்களுக்கு திடீர் நன்மைகளும் எதிர்பாராத முக்கிய பொறுப்புகளும் வந்து சேரும். கடந்த கால கசப்புகள் மறந்து புதிய வாழ்க்கையும் முயற்சிகளையும் எடுப்பீர்கள்.</p><p></p><h3>
கும்பம் :
</h3><p>மருத்துவர் ரீதியாக பரிசோதனைகள் மற்றும் தொழிற்சார்ந்த திடீர் மாற்றங்கள் வரலாம். சனி மற்றும் ராகு சேர்க்கையால் வேலை மற்றும் உடல் நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். </p><h3>
மீனம்:
</h3><p>இந்த காலகட்டங்களில் நமக்கு விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவசியம். பிறருக்கு உதவக்கூடிய மனப்பான்மை மற்றும் பொறுமை தேவை. அது உங்களுக்கு பின்னாளில் அதிக அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும். </p><p>

மேலும், இந்த காலகட்டங்களில் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.&nbsp;&nbsp;</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WE0RMOYe9Ko?start=38" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்." target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aishwarya</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/kodumudi-temple-in-tamil-1733117286"></link>
            <id>https://ibcbakthi.com/article/kodumudi-temple-in-tamil-1733117286</id>
            <summary type="text">ஒருவருடைய வாழ்வில் ஏழு பிறவிகள் இருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் அவனுடைய முற்பிறவியில் செய்த பாவங்களையும் இந்த பிறவியில் செய்த பாவங...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவருடைய வாழ்வில் ஏழு பிறவிகள் இருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. </p><p>ஒருவன் அவனுடைய முற்பிறவியில் செய்த பாவங்களையும் இந்த பிறவியில் செய்த பாவங்களையும் போக்கும் தலமாக ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் உள்ளது. </p><p>இந்த கோயிலானது ஈரோடு மாவட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொடுமுடியில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோயிலுக்கு மேலும் ஒர் சிறப்பம்சம் உள்ளது. அதாவது மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் இந்த கோயிலில் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd3f35cd-7e55-4d41-9776-6b16807bd878/24-674d47567fee5.webp' /></p><p>அழிக்கும் கடவுளான சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண படைக்கும் கடவுளான பிரம்மாவும் காக்கும் கடவுளான விஷ்ணுவும் இந்த தலத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p> இத்தகு சிறப்பம்சம் மிக்க கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலில் வரலாற்றையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.</p><h2>தல வரலாறு 1:&nbsp;&nbsp;</h2><p>ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களுடைய பலத்தை காண்பிக்க இந்திரன் விதித்த விதிமுறைகளின் படி போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் மேரு மலையை இறுக்கமாக பற்றிக்கொள்ள வாயு பகவான் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வேகமாக காற்றை செலுத்த, மேரு மலையின் ஒரு பகுதி சிறு சிறு துண்டுகளாக சிதறியது. அவ்வாறு சிதறி தென் திசையில் விழுந்த அனைத்து கற்களும் ஒவ்வொரு சிவலிங்கமாக மாறியதாகவும் அதுவே கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் என வரலாறு கூறுகிறது.</p><p></p><h2>தல வரலாறு 2:
</h2><p>ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவர் என்ற பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களுடைய பலத்தை காண்பிக்க இந்திரன் விதித்த விதிமுறைகளின் படி போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் மேரு மலையை இறுக்கமாக பற்றிக்கொள்ள வாயு பகவான் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி வேகமாக காற்றை செலுத்த, மேரு மலையின் ஒரு பகுதி சிறு சிறு துண்டுகளாக சிதறியது. இவ்வாறு மேரு மலை தகர்ந்தபோது, ஐந்து துண்டுகள் மணிகளாகச் சிதறி விழுந்தன. இவற்றில் சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி மலையாகவும், நீலமணி விழுந்த இடம் திருப்பொதிகை மலையாகவும் அமைந்தன. ஐந்தாவது துண்டாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாக அமைந்தது. கொடுமுடி என்பதற்கு பெரிய சிகரம் எனப்பொருள். மலைச்சிகரமே மகுடலிங்கராக அமைந்துள்ளதால், கொடுமுடி தென் கைலாயம் என்ற பெயரைப் பெற்று திகழ்கிறது.&nbsp;</p><h2>கோயில் அமைப்பு:
</h2><p>ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலானது காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 640 அடி நீளமும் 484 அடி அகலமும் கொண்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் மூன்று வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68cbcee1-b1cb-4bfa-8ca1-be2ebd02afbf/24-674d47577f1be.webp' /></p><p>கோயிலினுள் நுழைந்தவுடன் கொடிமரமும், நந்தீஸ்வரரும் காணப்படுகிறது. இந்த சன்னதியில் நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, சூரியன், 63 நாயன்மார்கள், முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். மேலும் கூடுதல் சிறப்பாக இந்த கோயிலின் மேற்கூரையில் ராசி சக்கரங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. சிவபெருமான் சன்னதியின் வலதுபுறத்தில் வடிவுடையம்மன் சன்னதி இடம்பெற்றுள்ளது. அம்பாள் சன்னதியின் உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விசுவேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இங்கு மகாலட்சுமிக்கு என தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது.
</p><h2>விநாயகர்:
</h2><p>வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழு முதற் கடவுளான விநாயகர் காட்சியளிக்கிறார். இந்த விநாயகரை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு விரைவில் மக்கட்பேறு உண்டாகும்.</p><p></p><p> </p><h2>
வன்னி மரம்: </h2><p>
மகுடேஸ்வரர் கோயிலின் தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்த மரத்தின் ஒருபுறக்கிளை முழுவதும் முட்களுடன் காணப்படும் அதே வேளையில் மறுபுறம் உள்ள மற்றொரு கிளையில் முட்கள் இல்லாமல் தெய்வீகத்துடன் திகழ்கிறது. பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தினை பிரதட்சிணம் செய்வதன் மூலம் சனி, ராகு, கேது தோஷங்களில் இருந்து விடுபடலாம். பஞ்ச பாண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்திருந்த போது அவர்களுடைய ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நான்கு கரங்களுடன் அட்சமாலை கமண்டலத்துடன் பிரம்மா இந்த வன்னி மரத்தில் காட்சியளிக்கிறார். இந்த மரத்தின் மேலும் ஒரு சிறப்புள்ளது. மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு வைத்தால் அந்த இலை பல நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce53ea17-c406-4c21-a059-558de4d694d1/24-674d4757f30fc.webp' /></p><p>
</p><h2>தலப் பெருமை:
</h2><p>ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலின் தனித்துவம் என்னவென்றால் மும்மூர்த்திகளை ஒரே நேரத்தில் தரிசப்பதுடன் மும்முகம் கொண்ட பிரம்மாவையும் இங்கே தரிசனம் செய்யலாம். இந்த தலம் உருவாக ஆதிசேஷன் காரணமாக இருந்ததால் இங்கு நாகர் வழிபாடு மிகவும் விஷேசமாகும். </p><p>
அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர்களுக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சியளித்துள்ளார். வாலில் கட்டப்பட்ட மணியுடன் ஆஞ்சநேயர் கோரப்பல்லுடன் காட்சியளிக்கிறார்.
</p><p> இத்திருத்தலத்தில் சனிபகவான் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். சனிபகவானின் சன்னதிக்கு நேரெதிராக அவருடைய வாகனமான காகம் இருக்கிறது. இந்த காகத்திற்கு முன்பு பக்தர்கள் எள் பொட்டலங்களை கொண்டு தங்களுக்கு தாங்களே தலைக்கு மேல் சுற்றி நெருப்பில் போடுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் சனி தோஷம் நிச்சயமாக நீங்கும் என மக்கள் நம்புகின்றனர்.
</p><p>பிரம்மன் வந்து வணங்கியதால் இந்த தலத்திற்கு பிரமபுரி என்றும் திருமால் பூஜித்ததால் ஹரிஹரபுரம் என்றும் கருடன் இந்த தலத்தின் இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமிர்தபுரி என்றும் பெயர் பெற்றுள்ளது.</p><p></p><p> </p><p>ஸ்ரீ மகுடேஸ்வரர் திருத்தலத்தில் காவிரி ஆறு, பிரம்ம தீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், தேவ தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன.</p><p>
இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்று நாயன்மார்களால் பாடப்பட்டுள்ளது. தேவார பாடல்களில் இடம்பெறும் 274 சிவாலயங்களில் இத்திருத்தலம் 213-வது சிவாலயமாக உள்ளது.
</p><h2>சிறப்பம்சம்:
</h2><p>ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சிவ லிங்கமானது சுயம்பு லிங்கமாகும். இங்கு அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு அகத்தியர் பூஜை செய்ததற்கு அடையாளமாக அவரது விரல் தடயங்கள் லிங்கத்தின் மீது காணப்படுகிறது. இதற்கு மற்றொரு வரலாறும் உள்ளது மறைந்திருந்த சிவலிங்கத்தை கண்டுபிடிக்கும் போது சிலையை பிடித்ததால் அந்த கை விரல்கள் பதிந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0561bfb-2d9c-49db-9e60-900f8eb731dd/24-674d475706288.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><h2>சிறப்பு பெயர்கள்: </h2><p>
கொங்கு நாட்டில் புலவர்களால் பாடப்பெற்ற ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச க்ஷேத்திரம் என பல பெயர்கள் உள்ளன.
</p><h2>கல்வெட்டு ஆதாரங்கள்:
</h2><p>ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலுக்கு பாண்டிய மன்னர்கள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய ஆதரவை அளித்துள்ளனர். அதன் காரணமாக இந்த தலம் திருப்பாண்டி கொடுமுடி என அழைக்கப்படுகிறது. இந்த கோயில் குறித்த குறிப்புகள் சுந்தர பாண்டியன் கேசரியின் ஆட்சி குறித்து கூறும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. மலையத்துவுஜ பாண்டியன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் போன்ற பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு நிலம், நகைகள் போன்றவற்றை தானமாக வழங்கியுள்ளதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோயில் என்ற பெருமையை பெற்ற இந்த தலத்திற்கு வந்து வழிபட்டால் பல மடங்கு ஆசிர்வாதங்கள் அளவில்லாமல் கிடைக்கும். இங்கு வரும் பக்தர்களின் முன் ஜென்ம பாவங்கள் கூட விலகி அவர்கள் தங்களை புது மனிதர்களாக உணர்வார்கள். நீங்களும் தமிழ்நாட்டிலோ அல்லது வெளி மாநிலங்களிலோ இருந்தால் ஒருமுறையாவது கொடுமுடி சென்று மும்மூர்த்திகளின் அருளோடு விநாயகர், சனி பகவான், மகாலட்சுமி அருளையும் பெற்று செல்லுங்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank">IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</a> இணைந்து கொள்ளுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[லக்னத்தில் சந்திரன் இருந்தால் அதிர்ஷ்டமா? தோஷமா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/characterstics-and-lifestyle-of-moon-in-laknam-1784632264"></link>
            <id>https://ibcbakthi.com/article/characterstics-and-lifestyle-of-moon-in-laknam-1784632264</id>
            <summary type="text">ஜாதகத்தில் நம்முடைய ராசி மற்றும் லக்னம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படியாக, லக்னத்தில் ஒருவருக்கு சந்திரன் அமையப்பெற்றால் அவர்களுடைய வாழ்க்கை எப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜாதகத்தில் நம்முடைய ராசி மற்றும் லக்னம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படியாக, லக்னத்தில் ஒருவருக்கு சந்திரன் அமையப்பெற்றால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
 </p><p>லக்னத்தில் சந்திரன் அமைவு பெற்றவர்கள் மிகவும் அழகானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் தாயின் மீது அதிக அன்பும் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
 இவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கிடைக்கும். ஒரு சிறந்த கற்பனைவாதியாக இருப்பார்கள்.</p><p> ஆனால், எந்த பாவ கிரகங்களும் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜாதகர் மிகுந்த குழப்பவாதியாக ஏற்பார்கள். 
அதோடு, இவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af11edbc-fb42-4235-ab28-e6b38f24b13a/26-6a5f53c9cd5ae.webp' /></p><p></p><p> </p><p>இவர்களுடைய குடும்பத்தில் மீடியா துறையில் வேலை செய்பவர்கள், உணவு தொடர்பான தொழில் செய்பவர்கள் போலீஸ் ராணுவம் போன்ற அமைப்பில் இருப்பார்கள். 
இந்த லக்னத்தில் சந்திரன் அமைப்பு கொண்டவர்கள் குடும்பத்தில் அதிக அளவிலான பெண்கள் இருப்பார்கள்.</p><p> இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 
அதேபோல், இவர்களுக்கு நண்பர்களுடைய பட்டியல் எப்பொழுது மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு படிக்கும் காலங்களில் அல்லது இவர்கள் குடும்பத்தில் வீடு கட்டும் காலங்களில் இவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aishwarya</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோஷம் விலக வேண்டுமா?ராமர் வழிபாடு செய்த இந்த கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/devipattinam-temple-in-tamil-1734171541"></link>
            <id>https://ibcbakthi.com/article/devipattinam-temple-in-tamil-1734171541</id>
            <summary type="text">உங்களுக்கு தோஷம் இருக்கா..இல்லனா ரொம்ப காலமா உங்க முன்னோர்களுக்கு நீங்க தர்ப்பணம் பண்ணாம இருக்கீங்களா.அதனால பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கா? நவபாஷாண கோயில...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்களுக்கு தோஷம் இருக்கா..இல்லனா ரொம்ப காலமா உங்க முன்னோர்களுக்கு நீங்க தர்ப்பணம் பண்ணாம இருக்கீங்களா.அதனால பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கா? நவபாஷாண கோயில் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா. </p><p>பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தேவிபட்டினம் அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயிலுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க. எல்லா தோஷமும் உங்கள விட்டு போயிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோயிலை பற்றி இப்போ நாம முழுசா தெரிஞ்சுக்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5747457-473a-4df0-9b1a-7bdfd0fab10b/24-675d5b9620e0a.webp' /></p><h3>தல அமைவிடம்:</h3><p>

நவபாஷாண நவகிரக கோயிலானது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தேவிபட்டினம் என்கிற ஊரின் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு நீங்க செல்லணும்னா ராமநாதபுரம் நகரிலிருந்து பேருந்து, வேன் மூலமா போகலாம். இந்த கோயிலானது ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
</p><h3>
தல வரலாறு:</h3><p>

ராமாயணம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் சீதை ராவணனால் கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்டு செல்ல வந்த ராம பகவானுக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கும் விதமாக தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து அங்கிருந்த மணலில் ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். </p><p>அந்த ஒன்பது கற்கள் ‘நவபாஷாணம்’ என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருக்கின்றன என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாகும்.&nbsp;</p><p></p><h3>தலத்தின் தொன்மை:
</h3><p>
தேவிப்பட்டினம் நவபாஷாண நவகிரக திருக்கோயிலில் ஸ்ரீ ராமரே வழிபட்டுள்ளதால் கோயிலின் தொன்மையை குறிப்பிட்டு சொல்ல இயலவில்லை. ஆனால் குறைந்தது 2000 வருடங்களுக்கும் மேலாக கடலினுள் இந்த நவகிரக கோவில் உள்ளது என்றும்,பல நீண்ட காலமாக பக்தர்கள் இங்கு வந்து அவர்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1513fdd9-1a92-4ba0-ada1-a7c3fe3f34fd/24-675d5b9692ee1.webp' />&nbsp;</p><p>
</p><h3>
தல சிறப்பு:
</h3><p>
கடலுக்குள் இருக்கும் நவக்கிரக மண்டபமே தேவிபட்டினம் ஆகும். நமது முன் ஜென்ம பாவங்களை நீக்கி முன்னோர்களின் ஆசியைப் பெற இந்த தலம் உதவுகிறது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் அதிக அளவிலான புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. </p><p>இந்த ஒன்பது கிரகங்களிலும் நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும் என்பது நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவரது கைகளால் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இங்கு அமைந்துள்ளன. </p><p>இவற்றிற்கு நவபாஷாண சக்தியிருப்பதால் இவை ‘நவபாஷாண நவகிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இங்கு ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதோடு சிவன், பார்வதி தேவியின் காட்சி கிடைத்துள்ளது. அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீ ராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.&nbsp;</p><p></p><h3>தல வழிபாடு:
</h3><p>
இங்கு அமைக்கப்பட்டுள்ள நவகிரகங்களுக்கும் நீங்களே உங்கள் கைகளால் அபிஷேகம், ஆராதனை செய்ய முடியும். இக்கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கும் நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களை செய்தால் “பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம்” போன்றவை நீங்கி விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598a7b00-ff83-4b38-b082-93ee68102427/24-675d5b971743e.webp' /></p><p> </p><p>தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை நீங்கள் இந்த தலத்தில் கொடுத்தால் நன்மையான பலன்களை பெற முடியும். ஆடி அமாவாசை தினத்தன்று இக்கோயிலில் பித்ரு கடன்களை செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.</p><h3>கோயில் நேரம்:
</h3><p>
கோயில் நடை திறந்திருக்கும் நேரம் எல்லா நாட்களிலும் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கடலில் நீராடி இங்கிருக்கும் நவகிரக நாயகர்களை நீங்கள் வழிபடலாம் என்பதோடு ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடங்களையும் நீங்கள் கண்டு தரிசிக்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடிப்பெருக்கு எப்பொழுது? தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-peruku-and-worship-details-1784629402"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-when-is-aadi-peruku-and-worship-details-1784629402</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு என்பது மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடக்கூடிய இந்த பண்டிகை கிராமப் பகுதிகளில் மிகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு என்பது மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடக்கூடிய இந்த பண்டிகை கிராமப் பகுதிகளில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. </p><p>மேலும், கிராமத்தில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபாடு செய்கின்றனர். ஆடிப்பெருக்கு தினத்தன்று ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் இடங்களில் இந்த கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும். </p><p>விவசாயிகள் புது வெல்ல நீரை தொழுது தங்களுடைய உழவு பணிகளை தொடங்குவார்கள்.
 அதனால் தான் முன்னோர்கள் "ஆடி பட்டம் தேடி விதை' என்கின்ற பழமொழி சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8155df-5a49-4bf4-80f2-b241511ada1a/26-6a5f489c8acb9.webp' /></p><p></p><p> அதே போல், ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள். அந்த படித்துறையில் 18 படிகள் கொண்டதாக இருக்கும். </p><p>இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் இறைவனை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எல்லா செல்வமும் கிடைக்கிறது.
</p><h3> வழிபாடு செய்யும் முறை:
</h3><p>எல்லாராலும் ஆடிப்பெருக்கென்று ஆறுதலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது. அவர்கள் கவலை கொள்ளாமல் வீட்டிலேயே வித விதமான பலகாரம் சமைத்து வீட்டு,வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை வைகையை தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் நாளன்று வழிபாடு செய்யலாம்.</p><h3>
 பலன்கள்:</h3><p>
ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் அவர்களுக்கு நல்ல கணவர் மற்றும் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. </p><p>மேலும், ஆடிப்பெருக்கு அன்று புதுமணப் பெண்கள், புதிய மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். அதை போல் சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169b54ef-d879-4e58-b47a-10d6f71ba51d/26-6a5f489bd4043.webp' /></p><p></p><p> </p><p>இவ்வாறு செய்கின்ற மூலம் கணவரின் உடைய ஆயுள் அதிகரிப்பதோடு நல்ல குழந்தை மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும் என்பது நம்பிக்கை.</p><h3> 2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு எப்போது:
</h3><p>2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் மற்றும் கயிறு மாற்றிகொள்வதற்கும் கன்னிப்பெண்கள் நல்ல கணவன் வேண்டி பூஜை செய்வதற்கும் காலை 7:45 முதல் 845 மணி வரையிலும் மாலை 3.15 மணி முதல் 4:15 மணி வரையும் மிகச் சிறப்பான நேரமாக இருக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: சனி வக்ரப் பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு சவாலாக அமையப் போகிறதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3zodiac-must-safe-on-2026-july-sani-vakra-peyarchi-1784628587"></link>
            <id>https://ibcbakthi.com/article/3zodiac-must-safe-on-2026-july-sani-vakra-peyarchi-1784628587</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி முதல் டிசம்பர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை 138 நாட்கள் சனி பகவான் மீனராசியில் வக்ர நிலையில் இருப்பார். </p><p>இதனால் ஒரு சில ராசிகளுக்கு சவாலாக அமையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9356d10-bb2b-41c2-bf88-12ec7c009b45/26-6a5f456d7e78c.webp' /></p><p></p><p>
</p><h3> மிதுனம்:
</h3><p> மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கடுமையான மன அழுத்தத்தை கொடுக்கப் போகிறது. பணி சுமை அதிகரிக்கும். இந்த காலகட்டங்களில் அதிகமான சவால்களையும் எதிர்பாராத தடைகளையும் சந்திப்பீர்கள்.</p><p> அலுவலகத்தில் சக ஊழியர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு அதில் சிக்கக் கூடிய நிலைமை வரலாம். வியாபாரத்தில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டும் சந்திக்கக்கூடிய நிலையை உருவாக்கும்.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தேவையில்லாத செலவுகளையும் நிதி நெருக்கடிகளையும் கொடுக்கப்போகிறது. வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய மன அழுத்தத்தை கொடுக்கலாம். </p><p>தொழிலில் சில சவால்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் உங்களிடமிருந்து அதிகமான வேகலையை வாங்கி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளிடம் முரண்பாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள்.</p><p></p><p>
</p><h3>
 தனுசு:</h3><p>
 இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடு அல்லது சொத்து தொடர்பான பிரச்சனையால் மன அழுத்தம் வரலாம். குடும்பத் தேவைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது பாதிப்புகளை சந்திப்பீர்கள்.</p><p> இந்த காலகட்டங்களில் உடல்நலத்தில் மிகுந்து கவனம் செலுத்த வேண்டும். நினைத்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் இந்த காலகட்டங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T10:09:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளின் மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/the-biggest-dream-of-12-zodiac-sign-1784622144"></link>
            <id>https://ibcbakthi.com/article/the-biggest-dream-of-12-zodiac-sign-1784622144</id>
            <summary type="text">மேஷம்:
 இவர்களுக்கு பெரிய வீடு சொந்த தொழில் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
 ரிஷபம்:
 இவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:</h3><p>
 இவர்களுக்கு பெரிய வீடு சொந்த தொழில் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
</p><h3> ரிஷபம்:</h3><p>
 இவர்களுக்கு பண வசதி அமைதியான குடும்பம் மற்றும் சகல வசதியும் இருக்கக்கூடிய வசதியான வீடு வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
</p><h3> மிதுனம்:
</h3><p> அவர்கள் பணம் புதிய அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.</p><p></p><h3>
 கடகம்:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் அன்பான குடும்பம் குழந்தைகளுடன் நல்ல உறவு நிம்மதியான வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். </p><h3>
சிம்மம்:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் புகழ், அதிகாரம் எல்லோரும் அவர்களை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.</p><h3>
 கன்னி:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நல்ல வேலை அமைதியான மனம் அமைய பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
</p><h3> துலாம்:
</h3><p> இவர்களுக்கு நல்ல காதல், செல்வம், அழகான வீடு, மகிழ்ச்சியான தம்பதியராக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
</p><h3> விருச்சிகம்:
</h3><p> இவர்கள் வெற்றி அதிக செல்வம் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று எப்பொழுதும் ஆசை இருக்கும்.</p><p></p><p>
</p><h3>தனுசு:</h3><p>இவர்கள் வெளிநாட்டு வாய்ப்பு மற்றும் சுதந்திரமான வாழ்க்கை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
</p><h3> மகரம்:
</h3><p> இவர்கள் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்க்கையை பெற வேண்டும். நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
</p><h3> கும்பம்:
</h3><p> இவர்கள் புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டும், சமுதாயத்தில் தனி மரியாதையை பெற வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்கள் ஆன்மீகத்தில் நல்ல நாட்டம், குடும்பத்தில் மகிழ்ச்சி, மனதில் நிம்மதி என்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
