<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-18T05:19:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டாசி மாதத்தில் இந்த ஒரு வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/purattasi-month-tulasi-worship-for-good-life-1789706833"></link>
            <id>https://ibcbakthi.com/article/purattasi-month-tulasi-worship-for-good-life-1789706833</id>
            <summary type="text">புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதமாகும். இந்த புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திரமும் கூடிய திருநாளில் மகாவிஷ்ணு பூலோகத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதமாகும். இந்த புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திரமும் கூடிய திருநாளில் மகாவிஷ்ணு பூலோகத்தில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதரித்தார். </p><p>இதன் அடிப்படையில் தான் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்கிறார்கள்.

 அந்த வகையில், ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் துன்பம் என்பது அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. இன்பத்தை அவன் பல நாள் பேசுவதில்லை. ஆனால், துன்பத்தை அவன் பல காலம் எனக்கு இப்படி நடந்து விட்டது என்று புலம்புவது உண்டு.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c413e33f-b035-4767-bb63-f5008231ac3f/26-6aacc253e1fe3.webp' /></p><p> இதற்கெல்லாம் நம்முடைய கர்ம வினை ஒரு காரணம் என்று இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவது தான் மானிட வாழ்க்கையின் கடமையாகும்.

 அந்த வகையில், புரட்டாசி மாதங்களில் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்தால் நம்முடைய வாழ்க்கையை மாற்றலாம். 

துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். </p><p>இந்த துளசி என்னும் சொல்லுக்கு ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது என்று பொருள். ஆகையால் துளசியால் நாம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதும் துளசி மாலை சாற்றுவதும் மிகவும் விருப்பமானவையாக பெருமாளுக்கு இருக்கிறது.
</p><p>
 அதோடு, இந்த துளசிக்கு தோஷமே கிடையாது என்பதால் நாம் முதல் நாள் பறித்த வாடிய துளசியை கூட நாம் பூஜைக்கு பயன்படுத்தலாம். </p><p>அதே போல், சுவாமிக்கு நெய்வேத்தியம் வைக்கின்ற பொழுது அதன் மீது துளசி சேர்ப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

 நாம் ஒருவருக்கு அன்னம், ஆடை என தானம் வழங்கும்பொழுது கூட இந்த துளசி அதன் மீது வைத்துக் கொடுத்தால் நமக்கு இரட்டிப்பு பலன் வந்து சேரும் என்கிறார்கள். </p><p>
இன்னும் சொல்லப்போனால் "ஒரே ஒரு துளசி இலை கொண்டு பூஜித்தாலும் அவர்களை தன்னுடைய அடியவராக ஏற்பேன்" கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்கிறார் அதை அவர் நிரூபித்தும் காட்டிருக்கிறார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0815cfb0-b8ac-4179-ac5a-ae94d5b29c5d/26-6aacc25329711.webp' /></p><p>
</p><p>
 அதாவது ஒருமுறை சத்தியபாமாவுக்கும் ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணருக்கு துலாபாரமாக பொன் வைத்த போது அந்த தரசின் தட்டுகள் சமமாகவில்லை. இறுதியில் ருக்மணி மிகுந்த பக்தி உடன் ஒரு துளசி இலையை வைக்க அது சமநிலை அடைந்தது. 

இதுதான் துளசியின் மகிமையும் பகவான் கிருஷ்ணருடைய அருளும். </p><p>ஆக, இந்த புரட்டாசி மாதத்தில் நீங்கள் உங்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும், இறைவனை நோக்கிய பயணம் வேண்டும், அவமானங்களில் இருந்து விடுபட வேண்டும், நல்ல பொருளாதாரம் வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடைபெற வேண்டும், ஆரோக்கியம் மேம்பட வேண்டும், இழந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என்று எதுவாக இருந்தாலும் காலையில் எழுந்து துளசி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு விளக்கேற்றி<b> "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ" </b>என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வழிபாடு செய்கின்ற பொழுது நிச்சயம் புரட்டாசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய மனநிலையிலும் உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் மிக உயர்ந்த மாற்றத்தை காணலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T04:47:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசி பலன் (18-09-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-sep-18-2026-1789647112"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-sep-18-2026-1789647112</id>
            <summary type="text">மேஷம்:
இன்று வீடுகளில் பதட்டமான சூழ்நிலை குறைக்க அமைதி காப்பது அவசியம். வேலை பளு அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். கடன் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>இன்று வீடுகளில் பதட்டமான சூழ்நிலை குறைக்க அமைதி காப்பது அவசியம். வேலை பளு அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். கடன் தொல்லை விலகும்.</p><h3>

ரிஷபம்:
</h3><p>வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடை விலகும். பணம் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திடீர் மருத்துவ செலவுகளை வரலாம்.
</p><h3>மிதுனம்:
</h3><p>இன்று எதிர்காலம் வாழ்க்கை பற்றிய கவலை உண்டாகும். உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.
</p><h3>கடகம்:
</h3><p>தாய் வழி உறவுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.</p><h3>
சிம்மம்:
</h3><p>வியாபாரம் தொடர்பாக திடீர் வெளியூர் செல்ல பயணம் செல்ல நேரலாம். வருமானத்தில் இருந்த தடை விலகும். மாலை மேல் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.</p><p></p><p>
</p><h3>கன்னி:
</h3><p>படிப்பில் இருந்து வந்த தடைகளை விலகும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஒரு சிலர் சொந்த ஊருக்கு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். பண பிரச்சனை விலகும்.</p><h3>
 துலாம்:
</h3><p> இன்று காலை முதல் நெருக்கடியான சூழலை எளிதாக சமாளிப்பீர்கள். வேலையில் உங்களுக்கான மதிப்பு உயரும். எதிர்கால வாழ்க்கை பற்றிய பயம் விலகும். </p><h3>
விருச்சிகம்:
</h3><p> உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை துணையின் குடும்பத்தால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். முன்னேற்றமான நாள்.
</p><h3> தனுசு:</h3><p>
 இன்று பிள்ளைகளுக்காக சில முக்கியமான வேலைகளை செய்வீர்கள். நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.</p><p></p><h3>
 மகரம்:
</h3><p> வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இன்று முக்கியமான வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்களிடையே தேவையில்லாத கருத்து மோதல்களை தவிர்த்து விடுங்கள். செல்வாக்கு உயரும்.
</p><h3> கும்பம்:
</h3><p> வெளி வட்டாரங்களில் உங்களுக்கான மதிப்பு உயரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான செய்திகள் வந்து சேரும். நன்மையான நாள்.
</p><h3> மீனம்:
</h3><p> குழந்தைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். நீண்ட நாள் சொத்து பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். இன்று எதிர்பாராத யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்.</p>]]></content>
            <updated>2026-09-18T03:54:44+00:00</updated>
        </entry>
    </feed>
