<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-08T14:06:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-when-is-amavasaya-date-and-worship-benefits-1786194323"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-when-is-amavasaya-date-and-worship-benefits-1786194323</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. </p><p>அதாவது அம்மாவாசை தேதி ஆகஸ்ட் 12 அதிகாலை 2.11 மணிக்கு துவங்கி அமாவாசை திதி ஆகஸ்ட் 13 அதிகாலை 12.16 மணி அன்று முடிவடைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a1d6f75-5106-4a59-931a-0d6cfd6d19ec/26-6a77299e1b390.webp' /></p><p></p><p> </p><h3>ஆடி மாத சிறப்புகள்: </h3><p>சூரிய பகவான் ( சிவனும்) சந்திர பகவான் (சக்தியும்) ஒன்று சேர்கின்ற நாளாக இது கருதப்படுகிறது. மேலும், முன்னோர் பித்ரு உலகத்தில் இருந்து வந்து அவர்களுடைய சந்ததியினரை சந்தித்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள். </p><p>ஆதலால், இந்த நாளில் தர்ப்பணம் செய்வது என்பது குடும்பத்தில் அமைதி. பித்ரு தோஷம் சாபங்கள் எல்லாவற்றையும் நீக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ef9e6f-a820-4fe1-8e17-5b7a54474136/26-6a77299ec8ba6.webp' /></p><h3> ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்: </h3><p>இன்றைய தினம் நாம் தானம் செய்கின்ற பொழுது நமக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் சேர்கிறது. ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது மிகப்பெரிய அளவில் நமக்கு குடும்பத்தில் அமைதியை கொடுக்கிறது. காகம் மற்றும் பிற விலங்குகளுக்கு உணவு வழங்கலாம்.</p><p> இவ்வாறு செய்கின்ற பொழுது நிச்சயம் குடும்பத்தில் இருந்த தடைகள் யாவும் விலகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த நாளில் கட்டாயம் முன்னோர்களுடைய அருளாசியையும் இறைவனுடைய அருளையும் பெறுவதற்கு நாம் தவறக்கூடாது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களுடைய மனைவியை ஆனந்த கண்ணீரால் அழ வைக்கும் கணவன் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/men-born-this-zodiac-love-their-wife-a-lot-1786193486"></link>
            <id>https://ibcbakthi.com/article/men-born-this-zodiac-love-their-wife-a-lot-1786193486</id>
            <summary type="text">நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். தங்களுடைய மனைவியை தேவதை போல் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய கடமையைையும் அவர்கள் மனைவியின் மீது வைத்திருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்மை சுற்றி ஒரு சிலரை பார்த்திருப்போம். தங்களுடைய மனைவியை தேவதை போல் பார்த்துக் கொள்வார்கள். அவர்களுடைய கடமையைையும் அவர்கள் மனைவியின் மீது வைத்திருக்கக்கூடிய பாசத்தையும் அவர்கள் என்றும் குறைத்து கொள்ள மாட்டார்கள்.</p><p> இதற்கு அவர்களுடைய ராசி அதிபதியும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அந்த வகையில், 12 ராசிகளில் எந்த ராசியினர் தன்னுடைய மனைவியை ஆனந்த கண்ணீரால் அழ வைக்க கூடிய அன்பு கணவரின் ராசியினர் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24cef997-5c0c-4202-9aef-3382b58b5016/26-6a77265649180.webp' /></p><p></p><p> </p><h3>
கடகம்: </h3><p>
கடக ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய மனைவியை தாயை பார்த்து கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள். ஆதலால், இவர்களுடைய அதீத அன்பால் மனைவி பல நேரங்களில் ஆனந்த கண்ணீரால் நனைந்து போவது உண்டு. </p><h3>மீனம்: </h3><p>இவர்கள் மனைவி மீது வைக்கக்கூடிய அளவற்ற காதல் இவர்கள் மனைவியை எப்பொழுதும் ஆனந்த கண்ணீரில் மிதக்க வைக்கிறது. இவர்கள் மனைவி மீது வைத்திருக்கக்கூடிய அன்பு பலரையும் பொறாமைப்படும் அளவிற்கு செய்வது உண்டு.</p><p></p><p> </p><h3>துலாம்: </h3><p>துலாம் ராசியை பொறுத்தவரை அவர்களுடைய மனைவியை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சிறிய அணுகுமுறையும் அவர்களுடைய மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருக்கும். இந்த கவனிப்பே அவர்களுடைய மனைவியை ஆனந்த கண்ணீர் நினைத்து விடுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த தெய்வத்தை மட்டும் வழிபாடு செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-should-do-when-we-are-in-depression-1786191694"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-should-do-when-we-are-in-depression-1786191694</id>
            <summary type="text">தற்பொழுதைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிக அளவில் காணப்படுகிறது. அந்த வகையில், நாம் மன அழுத்தத்தில் இருக்கின்ற பொழுது நம்முடைய மனமானது ஆறுதல் நோக்கி ஓட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்பொழுதைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிக அளவில் காணப்படுகிறது. அந்த வகையில், நாம் மன அழுத்தத்தில் இருக்கின்ற பொழுது நம்முடைய மனமானது ஆறுதல் நோக்கி ஓடுகின்றது. செய்வதறியாத ஒரு நிலையில் நிற்கிறது.</p><p> அப்பொழுது, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு இறைவழிபாடு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஆனால், அந்த நேரங்களில் நாம் வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் நம்முடைய மனநிலை மாற்றங்களுக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a964d75a-fb20-47ef-b7d8-6f987956d280/26-6a771f54e1809.webp' /></p><p></p><p> </p><p>அப்படியாக, மன அழுத்தம் என்பது நிச்சயமாக பல நேரங்களில் இழப்பு, அவமானம், துரோகம் போன்ற ஒரு சூழ்நிலையில் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. ஏற்கனவே நம்முடைய மனம் இந்த இழப்புகளால் வாழ்க்கையின் போராட்டங்களால் மனவிரக்தி அதிக அளவில் கோபம் கொண்டிருக்கும். </p><p>அந்த நேரங்களில் முடிந்த அளவிற்கு நம்முடைய மனதை சாந்தப்படுத்துவதற்கு அமைதியை தரக்கூடிய தெய்வத்தை நாடிச் செல்வது அவசியமாக உள்ளது. அந்த நேரங்களில் நாம் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04051280-f978-407d-8b42-6b40ba8cec9f/26-6a771f5597d0e.webp' /></p><p></p><p> விநாயகர் வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வது அந்த மந்திர ஒலிகள் நம்முடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடு உதவியாக இருக்கிறது. இருப்பினும் முடிந்த அளவிற்கு மன அழுத்தத்தில் இருக்கின்ற நேரத்தில் உக்கிரமான தெய்வங்களை வழிபாடு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. </p><p>உக்கிரமான தெய்வங்கள் நமக்கு அமைதியை தர மாட்டார்கள் என்பது இல்லை நம்முடைய மனக்கோபம், மன அழுத்தம் உக்கிரமான தெய்வத்தினுடைய சக்தியை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெறுவது இல்லை. ஆதலால், ஒரு சில தடுமாற்றம் வரலாம். 

அதனை தவிர்ப்பதற்கு நாம் சாந்தமான தெய்வங்களை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T12:21:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாலட்சுமியின் அருள் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய 6 தான தர்மங்கள் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/6-donation-women-should-do-to-get-lakshmi-blessing-1786185479"></link>
            <id>https://ibcbakthi.com/article/6-donation-women-should-do-to-get-lakshmi-blessing-1786185479</id>
            <summary type="text">ஒவ்வொரு வீட்டினுடைய பெண்கள் தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றுகின்றோம். காரணம், ஒரு பெண் மனம் வைத்தால் தான் அந்த குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு வீட்டினுடைய பெண்கள் தெய்வத்திற்கு சமமாக நாம் போற்றுகின்றோம். காரணம், ஒரு பெண் மனம் வைத்தால் தான் அந்த குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். </p><p>அந்த வகையில், பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ வளம் அதிகரிக்கவும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவும் அவர்கள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் என்னவென்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadf7952-4043-470f-a6f6-1a8344390fd4/26-6a77070a4a499.webp' /></p><p></p><p>
</p><p>1. பெண்கள் அன்னதானத்திற்கு காய்கறிகள் தானம் செய்வதால் அவர்களுக்கு வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
</p><p>2. பெண்கள் அரிசி தானம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.</p><p>
3. பெண்கள் தானியங்கள் தானம் செய்தால் வீடுகளில் குடும்பத்தினருடைய நவகிரக தோஷம் விலகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ed70bf-b938-4c0c-a3c6-6b9e2aec3182/26-6a7707098094e.webp' /></p><p></p><p> </p><p>
4. பெண்கள் இயலாதவர்களுக்கு மருத்துவ செலவுக்காக தர்மம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் சேரும். ஆரோக்கிய குறைபாடு விலகும்.
</p><p>5. மேலும், வீடுகளில் அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்கின்ற பொழுது நல்ல நேரம் பார்க்காமல் கட்டாயம் அடகு வைக்க கூடாது. இது மிகப்பெரிய அளவில் ஒரு இழப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவர் செய்த பாவத்திற்கு உரிய தண்டனை எப்பொழுது கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/karma-lessons-everyone-should-know-about-it-1786180613"></link>
            <id>https://ibcbakthi.com/article/karma-lessons-everyone-should-know-about-it-1786180613</id>
            <summary type="text">ஒருவர் நமக்கு தீங்கு செய்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் நமக்கு தீங்கு செய்தவருக்கு எப்பொழுது அந்த தண்டனை வந்து சேரும் என்கின்ற ஒரு எண்ணம் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவர் நமக்கு தீங்கு செய்திருக்கிறார் என்றால் நம்மில் பலருக்கும் நமக்கு தீங்கு செய்தவருக்கு எப்பொழுது அந்த தண்டனை வந்து சேரும் என்கின்ற ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அப்படியாக, அதற்கு ஒரு தீர்வாக ஒரு கதை ஒன்று இருக்கிறது, அதை பற்றி பார்ப்போம்.</p><p>ஒரு நாள் ஒரு சீடன் அவருடைய குருவிடம் சென்று குருவே என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்தி விட்டார். அவர் எனக்கு செய்த இந்த தீமை அவருக்கு கட்டாயமாக திரும்பி செல்ல வேண்டும். அதற்குரிய தண்டனை கர்மபலன் அனுபவிக்க வேண்டும் என்று அவர் கோபமாக சொல்கிறார். குரு அமைதியாக அந்த சீடன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். </p><p>பிறகு குரு அருகில் இருக்கக்கூடிய ஒரு நெருப்பிலிருந்து ஒரு கரித்துத்துண்டை எடுத்து சீடனிடம் கொடுக்கிறார். சீடன் குரு கொடுத்த அந்த கரித்துத்துண்டை கையில் பிடிக்கிறார். சில நொடிகளில் அவருடைய கை சுடத்துவங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a17952a-8844-4bdd-9cde-8b2d658e1a78/26-6a76f40759c62.webp' /></p><p></p><p> </p><p>அந்த சூடு தாங்க முடியாமல் குருவே இது ரொம்ப சூடாக இருக்கிறது என்று கையை உதறிவிட்டார். அப்பொழுது குரு சொல்கிறார், இப்பொழுது இந்த இடத்தை நன்றாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.</p><p> "நெருப்பு உன்னை சுட வேண்டும் என்று நினைத்து தான் நீ அதை கையில் பிடித்தாயா? கட்டாயமாக இல்லை. நீ அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால் தான் அந்த நெருப்பு உன்னை சுடுகிறது.</p><p> இதை போல் தான் யாராவது நமக்கு தீங்கு செய்கின்ற வேளையில் அவர்களுக்கு அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் நாம் அனுபவித்த வலி அவர்களுக்கு சென்று சேர வேண்டும், அவர் செய்த கர்ம வினைக்கான பலன் அனுபவிக்க வேண்டும் என்று அந்த சம்பவத்தையும் நடந்த நிகழ்வுகளையும் கோபத்தையும் நம் மனதில் பிடித்துக் கொண்டே இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5388776-92d0-472f-a850-51b4dca92585/26-6a76f40813b9d.webp' /></p><p></p><p> </p><p>அவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் செய்த தவறின் நெருப்பை நாம் தான் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். அது அவர்களுக்கு சுடுகிறதா என்று தெரியாது. ஆனால், நெருப்பு நம்மை மட்டும் தான் தொடர்ந்து எரித்துக் கொண்டே இருக்கும். </p><p>ஆக, ஒருவர் செய்வதற்குரிய கர்ம பலனை அவர்கள் அனுபவித்துக் கொள்வார்கள். அது நம்முடைய வேலை அல்ல. நம்முடைய வேலை இந்த நெருப்பை மட்டும் கீழே போட்டுவிட்டு அவர்களை மன்னித்து பழக வேண்டும். </p><p>அது அவர்களுக்காக இல்லை. நம்முடைய மன அமைதிக்காக. சில நேரங்களில் காயத்திற்கான மருந்து நாம் நடந்த நிகழ்வுகளை அப்படியே விட்டுவிடுவதில் இருந்து தான் கிடைக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T09:17:05+00:00</updated>
        </entry>
    </feed>
