<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-17T10:06:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளின் நிறை குறைகள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/positive-and-negative-side-of-12-zodiac-sign-1784278270"></link>
            <id>https://ibcbakthi.com/article/positive-and-negative-side-of-12-zodiac-sign-1784278270</id>
            <summary type="text">&amp;nbsp;ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ராசிக்கும் நிறை, குறை என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ராசிக்கும் நிறை, குறை என்பது கட்டாயம் இருக்கும். அந்த வகையில் 12 ராசிகளுக்கு உடைய நிறை, குறைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். </p><h3>
மேஷம்: </h3><p>இவர்கள் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருந்தாலும் இவர்களுடைய பிடிவாதம் இவர்களுடைய குறையாக மாறிவிடுகிறது.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். ஆனால் பல நேரங்களில் தயக்கத்துடன் காணப்படுவார்கள்.
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு சிறந்த பண்பு இருந்தாலும் இவர்களுடைய தனிமையால் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.
</p><h3> கடகம்:
</h3><p> இவர்களுடைய எளிமை தான் இவர்களுடைய நிறை, ஆனால் தலைக்கணம் தான் இவர்களுடைய குறையாக இருக்கிறது.
</p><h3> சிம்மம்:</h3><p>
 இவர்களுடைய தன்னம்பிக்கை தான் இவர்களுடைய நிறை இவர்களுடைய அதிக முன்கோபம் குறையாக மாறுகிறது.</p><h3>
 கன்னி:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் ஒழுக்கமாக இருப்பார்கள். அது அவர்களுடைய நிறையாக இருந்தாலும், இவர்களுடைய தனிமை இவர்களுடைய குறையாக இருக்கிறது.</p><h3>
 துலாம்:
</h3><p> இவர்கள் உடைய பொறுப்புணர்வு இவர்களுடைய நிறை ஆனால் இவர்களுடைய அவசர புத்தி இவர்களுடைய குறையாக மாறுகிறது.</p><h3>
 விருச்சிகம்:</h3><p>
 இவர்களுடைய நுண்ணறிவு இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் அதிகப்படியான கோபம் இவர்களுடைய குறையாக மாறுகிறது.
</p><h3> தனுசு:</h3><p>
இவர்களுடைய நல்ல மனம் இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இல்லாமல் போவதால் அது இவர்களுடைய குறையாக மாறுகிறது.</p><h3>
 மகரம்:</h3><p>
 இவர்களுடைய கடின உழைப்பு இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் இவர்களுடைய அமைதி இவர்களுடைய குறையாக மாறுகிறது.
</p><h3> கும்பம்:
</h3><p> இவர்களுடைய புத்திசாலித்தனம் இவர்களுக்கு நிறையாக இருக்கிறது. ஆனால் மனக்குழப்பம் இவர்களுடைய குறையாக மாறுகிறது.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்களுடைய கருணை இவர்களுடைய நிறையாக இருக்கிறது. ஆனால் எதற்கும் இவர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்படக் கூடியது இவர்களுடைய குறையாக மாறுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T08:51:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி முதல்வெள்ளி விரதம் இருந்தால் எப்பேர்ப்பட்ட கிரகதோஷமும் விலகுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/benefits-of-aadi-friday-fasting-1784272318"></link>
            <id>https://ibcbakthi.com/article/benefits-of-aadi-friday-fasting-1784272318</id>
            <summary type="text">ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அதில் மாடி வெள்ளிக்கிழமை வழிபாடு மிகச்சிறந்த விசேஷத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கும்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. அதில் மாடி வெள்ளிக்கிழமை வழிபாடு மிகச்சிறந்த விசேஷத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கும். மேலும், சந்திரனும் மகாலட்சுமியும் பாற்கடலில் தோன்றியவர்கள். </p><p>ஆதலால், சந்திர சகோதரி என்று மகாலட்சுமியை அழைப்பார்கள். மேலும், சந்திர பகவான் கடக ராசிக்கு உச்சம் அடையும் மாதம் தான் ஆடி மாதமாகும். 
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மிக உகந்த நாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1193bf9-de6d-46d3-9889-75a92ac93729/26-6a59d5bfb16bf.webp' /></p><p> </p><p>அதிலும், 2026 ஆம் வருடம் ஆடி மாதம் முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும் பெண்கள் விரதம் இருந்து தங்களுடைய குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து கொள்வார்கள். மேலும், இதனை சுக்கிர வார விரதம் என்றும் சொல்வது உண்டு. </p><p>இவ்வாறு ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் நமக்கு கிரக தோஷங்கள் விலகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் நீங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68039cdd-13c5-4821-8e28-b2189bb726ef/26-6a59d5c08d0a8.webp' /></p><p></p><p> கடன் பிரச்சனை தீர்வதற்கான வழி பிறக்கும். நீண்ட நாட்கள் நம்மை வாட்டி வதைத்த நோயிலிருந்து விடுபடுவோம். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும், இன்று எல்லா பெருமாள் கோயில்களிலும் தாயார் மூலவருக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். உற்சவருக்கு மாலை நேரத்தில் கண்ணாடி அறைசேவை நடைபெறும். </p><p>பிறகு பிரகார புறப்பாடு நடந்து தாயாருக்கும் பெருமாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று தாயாருக்கு விசேஷமான ஒய்யார நடை சேவை நடைபெறுவது வழக்கம். அன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று தாயாரை தரிசிப்பதால் நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: துலாம் நவாம்சத்தில் குரு பெயர்ச்சி.. 12 ஆண்டுகள் கஷ்ட காலம் முடிவுக்கு வரப்போகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-poosam-nakshtara-guru-peyarchi-prediction-1784262592"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-poosam-nakshtara-guru-peyarchi-prediction-1784262592</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரப்படி பூச நட்சத்திரம் என்பது சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்றது. இது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நட்சத்திரமாக கருதப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரப்படி பூச நட்சத்திரம் என்பது சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்றது. இது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும், பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் என்பது துலாம் நவாம்சத்தில் சுக்கிரனுடைய வீட்டில் வருகிறது. </p><p>மேலும், குரு பகவானுடைய அறிவும் சனி பகவானுடைய ஒழுக்கம் மற்றும் சுக்கிர பகவானுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவை இணைந்து இந்த காலகட்டங்களில் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை வழங்கப்போகிறது. </p><p>அப்படியாக, இந்த குரு பெயர்ச்சியால் மிகப்பெரிய அளவில் நன்மைகளை பெறக்கூடிய முக்கியமான ராசிகள் யாரென்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2e374c-8856-4b17-93e6-28a2e8d74a75/26-6a59afc253784.webp' /></p><p></p><p> </p><h3>
கடகம்:
</h3><p>கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம் பெறுகிறார். தற்போது பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் அவர் நுழைவதால் இந்த காலகட்டம் இவர்களுக்கு மனதில் இருந்து குழப்பங்கள் விலகி நல்ல ஒரு தெளிவு பிறக்கும். </p><p>நீண்ட நாட்கள் இவர்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மன குழப்பங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். </p><h3>
கன்னி:
</h3><p>கன்னி ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்கிறார். பூச நட்சத்திர சஞ்சாரம் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக பல வழிகளில் லாபத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகிறது. </p><p>கூட்டு தொழிலில் இவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கான சாதகமான காலகட்டமாகும். இவர்களுக்கு சமூக வட்டம் விரிவடையும். முக்கிய புள்ளிகள் உடைய நட்புகள் இவர்களுக்கு இந்த காலகட்டம் கிடைக்கும்.</p><p></p><p> </p><h3>
விருச்சிகம்;
</h3><p>விருச்சிக ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் அமர்கிறார். பூச நட்சத்திர மாற்றம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்க போகிறது. </p><p>இவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என காலகட்டங்களில் வாய்ப்பு தேடி வரும். தந்தையை உடன் இருந்த அந்த கருத்து வேறுபாடுகள் விலகும், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் உண்டாகும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி முதல் வெள்ளி அன்று குலதெய்வம் அருளும் பெற செய்யவேண்டிய வழிபாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-july-17-aadi-first-worship-and-benefits-1784261936"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-july-17-aadi-first-worship-and-benefits-1784261936</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. இந்த மாதம் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வத்தின் முழு அருள் பெறுவதற்கும் சிறந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. இந்த மாதம் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வத்தின் முழு அருள் பெறுவதற்கும் சிறந்த மாதமாகும். அதேபோல், நம்முடைய முன்னோர்களின் அருள் ஆசியை பெறவும் இந்த மாதம் மிகவும் உகந்த மாதம். </p><p>இந்த ஆண்டு ஆடி முதல் நாள் வெள்ளிக்கிழமை வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. அப்படியாக, இந்த நாளில் குலதெய்வம் அருள் வீட்டில் நிலைத்து நிற்க செய்ய வேண்டிய வழிபாடு பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec655901-4bb2-4337-bb34-b879a9c09706/26-6a59ad3197030.webp' /></p><p></p><p> </p><h3>

வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு :
</h3><p>ஆடி முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று செம்பு அல்லது பித்தளை மண் கலசம் வெள்ளி செம்பினை எடுத்துக்கொண்டு அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி பிறகு மாவிலை மற்றும் சிறிது வேப்பிலை மஞ்சள் தூள், எலுமிச்சை ஒரு ரூபாய் நாணயம் சிறிது பச்சை கற்பூரம் ஆகியவற்ற இந்த தண்ணீரில் சேர்த்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். </p><p>இந்த கலசத்தை அம்பாளாக பாவித்து அதற்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரிய தடையும், குழந்தை பாக்கியம் திருமணம் விரைவில் நடக்கக்கூடிய யோகம் நமக்கு அம்மனின் பரிபூரண அருளால் கிடைக்கும், 
&nbsp;</p><h3>&nbsp;வழிபாட்டிற்கான நல்ல நேரம் :</h3><p>
காலை 04.30 - 05.30காலை 06.00 - 07.00காலை 09.00 - 10.20பகல் 01.00 - 02.00
இந்த நேரங்களில் நமக்கு வசதியான நேரம் ஒன்றில் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆடி முதல் நாள் மட்டுமின்றி ஆடி மாதம் முழுவதும் இந்த வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு. </p><p>பிறகு வாரத்திற்கு ஒரு முறை கலசத்தில் உள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து மீதமுள்ள தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு புதிதாக தண்ணீர் நிரப்பி அதற்குள் மற்ற பொருட்களை சேர்த்து வழிபாடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42cce6e-cc24-4f0d-93cf-ce94a9a39d59/26-6a59ad324ce17.webp' /></p><p></p><h3> 
ஆடி வெள்ளி வழிபாடு :
</h3><p>ஆடி மாதம் வெள்ளிக்கிழமை வருவதால் இந்த நாளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.</p><p> துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர்கள் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். எலுமிச்சை பல விளக்கேற்றி ராகு காலத்தில் வழிபாடு செய்வதால் நமக்கு துன்பங்கள் எதிரிகள் தொல்லையாகும். </p><p>
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் வீடுகளில் தினமும் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாடல் பாடி வருவது நம்முடைய குடும்பத்தில் செல்வ செழிப்பையும், மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். </p><p>தினமும் படிக்க முடியாதவர்கள் கட்டாயம் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். இந்த ஆடி மாதம் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், கூழ், ஆக இவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
