<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-29T08:47:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளும் ஆடிப் பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-for-12-zodiac-to-do-on-2026-guru-purnima-1785310182"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-for-12-zodiac-to-do-on-2026-guru-purnima-1785310182</id>
            <summary type="text">ஜோதிடத்தில் குரு பகவான் ஒருவருக்கு ஞானம், கல்வி, செல்வம், திருமனையோகம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாக இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் குரு பகவான் ஒருவருக்கு ஞானம், கல்வி, செல்வம், திருமனையோகம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாக இருந்து விட்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். எந்த தடைகளும் இல்லாமல் அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான அருளை பெறுவார்கள். </p><p>அதனால்தான் ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி பௌர்ணமியை தான் நம் குரு பூர்ணிமா என்று சொல்கிறோம். இந்த நாளில் குரு பகவானை மனதார வழிபாடு செய்தால் நமக்கு குருவினுடைய அருளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். </p><p>மேலும், இன்றைய நாள் குரு பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான ஒரு நல்ல குருமார்களில் அருள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
குரு பூர்ணிமா நாளில் மகரிஷி வியாசரை நினைவுகூர்ந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90002d9f-56f1-4faf-ac71-eaddb78c40d2/26-6a69abe80b528.webp' /></p><p></p><p> </p><p>இந்த நாளில் செய்யப்படும் நல்ல செயல்கள் மற்றும் நேர்மறையான மாற்றங்கள் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும். </p><p>மேலும், ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு திருமண தாமதம், கல்வியில் தொடர்ந்து தடைகள் நல்ல வேலை கிடைப்பதில் தாமதம், பணம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலைமை குழந்தைகள் விஷயங்களில் கவலை பெரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் இருப்பது போன்ற நிலையில் உருவாக்கும்.</p><h3> 


குரு பூர்ணிமா நாளில் என்ன செய்யலாம்?
</h3><p>ஒருவர் ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இந்த ஆடி பௌர்ணமி என்கின்ற குரு பூர்ணிமா நாளில் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிறம் வஸ்திரம், மஞ்சள் பூ, சந்தனம், கடலைப்பருப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073eabfb-3dfb-485d-a6b7-5bdbb5f2689c/26-6a69abe8b2959.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சிவபெருமான ஆலயங்களில் இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தியை இந்த நாளில் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும். அதோடு குரு பகவானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வது சிறந்தது. </p><p>இந்த நாளில் நமக்கு குருவாக ஆசிரியராக இருந்தவர்களை நேரில் சென்று அவர்களை வணங்கி தொழுவது நமக்கு எல்லா பிறவிகளிலும் குரு பகவானின் முழு அருளை பெற்றுக் கொடுக்கும். 

இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது எண்ணற்ற பலன்களை பெற்றுக் கொடுக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-things-we-should-do-and-donts-on-aadi-pornami-1785304676"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-things-we-should-do-and-donts-on-aadi-pornami-1785304676</id>
            <summary type="text">ஆடி மாதம் முழுவதும் மிகவும் சக்தி வாய்ந்த மாதம் என்றாலும் ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாட்களில் ஆடிப் பௌர்ணமியும் ஒன்று. இந்த நாளில் தெய்வீக ஆற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் முழுவதும் மிகவும் சக்தி வாய்ந்த மாதம் என்றாலும் ஆடி மாதத்தில் மிகவும் முக்கியமான நாட்களில் ஆடிப் பௌர்ணமியும் ஒன்று. இந்த நாளில் தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்த இருப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>அதோடு, ஆடி பௌர்ணமி அன்று சந்திர பகவான் தன்னுடைய முழு ஆற்றலுடன் இருக்கக்கூடிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் அம்மனை மனதார வழிபாடு செய்வதும் பூஜைகள் செய்வதும் மிகச்சிறப்பு. </p><p>மேலும், ஆடி பௌர்ணமி அன்று சிவபெருமானையும் அம்பிகையையும் பெருமாளையும் மனதார வழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும், கர்ம வினைகளும், எதிரிகளால் ஏற்படுகின்ற தொல்லைகளும், கடன் நெருக்கடிகளும் குறையும்.</p><p> 
அதைப்போல், ஆடி பௌர்ணமி அன்று குறிப்பிட்ட சில தவறுகளை மட்டும் தெரியாமலும் செய்து விடக்கூடாது என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e76f315-d302-4bba-9098-97324391cb7a/26-6a6996665057a.webp' /></p><p></p><h3> 

ஆடி பெளர்ணமி அன்று செய்யக் கூடாத தவறுகள் :</h3><p>

ஆடி பௌர்ணமி தினத்தன்று மாலை நேரங்களில் குறிப்பாக அரிசி, உப்பு, பணம் பருப்பு போன்றவற்றை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. அதேபோல் ஆடிப் பௌர்ணமி அன்று கட்டாயமாக வீடுகளில் இருந்து நாம் விளக்கேற்றி வழிபாடு செய்வதாக அவசியம். மாலை நேரங்களில் தூங்குவதை தவிர்த்து விட வேண்டும்.</p><p> ஆடி பௌர்ணமி அன்று தவறியும் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த நாளில் முடி, நகம், வெட்டுதல், கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 
அதேபோல், இந்த நாளில் யாரிடமும் வீணாக சண்டையிடுவதோ கோபப்படுவதோ அல்லது தீய வார்த்தைகள் பயன்படுத்துவதையும் தவிர்த்து விட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b06670-f588-4397-aaad-e1a7f16a30fc/26-6a6996670cc58.webp' /></p><p></p><p> </p><h3>
ஆடி பெளர்ணமியில் செய்ய வேண்டியவை :
</h3><p> ஆடி பௌர்ணமி தினத்தன்று தெய்வீக ஆற்றல் அதிகம் நிறைந்திருப்பதால் இந்த நாளில் மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வதும் வீட்டின் வாசலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதும் மிகச்சிறந்த பலனை கொடுக்கும். </p><p>இந்த நாளில் அம்பிகை மந்திரங்களை பாராயணம் செய்வதும், அபிராமி அந்தாதி படிப்பதும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கும். அதே போல் வீடுகளில் திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு குங்குமம், அர்ச்சனை ஆகியவை செய்து வழிபாடலாம். இதனால் வீட்டில் மகாலட்சுமியின் உடைய பரிபூரண அருள் கிடைக்கும். </p><p>ஆடி பௌர்ணமி தினத்தன்று கங்கை, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடுவது மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை பெறலாம். இந்த நாளில் அன்னதானம் செய்தால் கர்ம வினைகள் விலகும். இந்த நாளில் சந்திர பகவானை மனதார வழிபாடு செய்கின்ற பொழுது மனதில் தெளிவும் செல்வமும் உருவாகும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T05:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசி பலன் (29-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/today-rasi-palan-july-29-2026-wednesday-1785298420"></link>
            <id>https://ibcbakthi.com/article/today-rasi-palan-july-29-2026-wednesday-1785298420</id>
            <summary type="text">மேஷம்:
இன்று நண்பர்களுடன் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் செல்லும...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>இன்று நண்பர்களுடன் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.</p><h3>
ரிஷபம்:
</h3><p>குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் பிரச்சனைகள் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே விட்டிக்கொடுத்து செல்வது அவசியம். வேலைபளு அதிகரிக்கும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.
</p><h3>மிதுனம்:
</h3><p>சிலருக்கு வெளிநாடு தொடர்பான விஷயங்கள் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். தாய் உடல்நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சில சங்கடம் உண்டாகும் நிலை வரலாம்.</p><p></p><p>
</p><h3>கடகம்:
</h3><p>உணர்வு ரீதியாக சில குழப்பங்கள் உண்டாகலாம். தொழிலில் ரீதியாக சில குழப்பங்கள் வந்து மறையும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் நாள்.
</p><h3>சிம்மம்:</h3><p>
இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்களுடன் தேவை இல்லாமல் வம்பு வழக்குகள் வைத்தவர்கள் விலகி செல்வார்கள்.
</p><h3>கன்னி:
</h3><p>பிள்ளைகள் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். குடும்ப விஷயங்களை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. </p><h3>
துலாம்:
</h3><p>மனதில் புது விதமான நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினருடன் மிகவும் கவனமாக பேச வேண்டும். உங்கள் நலனில் கூடுதல் செலுத்த வேண்டும். குலதெய்வ வழிபாடு சிறப்பு பலன் அளிக்கும்.</p><h3>
விருச்சிகம்:
</h3><p>வீடுகளில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.</p><p></p><p>
</p><h3>தனுசு:
</h3><p>குடும்பத்தினர் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். கால் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சகோதரன் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
</p><h3>மகரம்:
</h3><p>
வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சகோதரி வழி உறவுகளால் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
</p><h3>கும்பம்:
</h3><p>பொழுது போக்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருகையால் நல்ல முன்னேற்றம் உண்டு.
</p><h3>மீனம்:
</h3><p>மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் வந்து செல்லும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T04:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவண்ணாமலை ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்.., உகந்த நேரம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/tiruvannamalai-aadi-masam-pournami-girivalam-time-1785156572"></link>
            <id>https://ibcbakthi.com/article/tiruvannamalai-aadi-masam-pournami-girivalam-time-1785156572</id>
            <summary type="text"> ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை கிரிவலம் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவத்தலங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p> ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>திருவண்ணாமலை கிரிவலம் </h2><p>தமிழகத்தின் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் விளங்குகிறது. </p><p>

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படும் இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a11e94-32ac-4d3a-87e5-171f6be518ed/26-6a6753df15012.webp' />&nbsp;&nbsp;</p><p>

திருவண்ணாமலையில் பௌர்ணமி தோறும் நடைபெறும் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.</p><p> 

சுமார் 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.</p><p> </p><p>இந்நிலையில், ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>உகந்த நேரம் அறிவிப்பு</h2><p>ஜூலை 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.32 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, ஜூலை 29ஆம் தேதி புதன்கிழமை இரவு 8.54 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது. </p><p>

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a96db3f-e010-4d04-8098-148903ea9ebf/26-6a6753dfbb98c.webp' /></p><p>கிரிவலம் செல்லும் பக்தர்கள், பஞ்சாட்சர மந்திரமான "நமசிவாய" அல்லது "சிவாய நம" என உச்சரித்தபடி கிரிவலம் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T03:33:52+00:00</updated>
        </entry>
    </feed>
