<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-01T10:42:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாஸ்து: நம்முடைய வீட்டிற்கு எதிரே கட்டாயம் இருக்கக் கூடாத 4 விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-shouldnt-keep-outside-home-according-vastu-1785577309"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-shouldnt-keep-outside-home-according-vastu-1785577309</id>
            <summary type="text">வாஸ்து என்பது நம்முடைய இந்து மத சமயத்தில் அதிகமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் இருக்கின்ற இடம் சரியில்லை என்றால் ஜாதகத்தில் கிரக நிலைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து என்பது நம்முடைய இந்து மத சமயத்தில் அதிகமாக பின்பற்றி வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் இருக்கின்ற இடம் சரியில்லை என்றால் ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்நாம் துன்பத்தையே சந்திக்க கூடும். </p><p>அந்த வகைகயில் நம்முடைய குடும்பம் அமைதியாக இருப்பதற்கு முதலில் நம்முடைய வீடு முதன்மை பங்கு வகிக்கிறது. </p><p>அப்படியாக, நம்முடைய வீட்டை சுற்றிலும் எல்லா விஷயங்களும் சரியாக இருந்தால் தான் நாம் மன நிம்மதியோடு வாழ முடியும். அந்த வகையில் நம்முடைய வீட்டிற்கு எதிரே இருக்கக் கூடாத நான்கு விஷயங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d129914-bbb2-434c-a428-9ebad0b55236/26-6a6dbf63ba526.webp' /></p><p></p><p>
</p><p>1. நம்முடைய வீட்டின் வாசலுக்கு எதிரில் குப்பை தொட்டி கட்டாயமாக இருக்கக் கூடாது. </p><p>2. நம்முடைய வீட்டில் வாசலுக்கு எதிர் குளம், கிணறு, தொட்டி ஆகியவையும் கட்டாயம் இருக்கக் கூடாது. </p><p>3. அதேபோல், நாம் வசிக்கும் வீட்டிற்கு எதிர் கறிக்கடைகள் போன்றவை இருப்பதும் கூடாது.</p><p></p><p> </p><p>4. வீடு வாசலுக்கு எதிரில் வீதி முனை இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. காரணம் நம்முடைய வீட்டிற்கு எதிரில் இருக்கின்றவை நம்முடைய வாழ்க்கையில் நன்மை தீமையை ஏற்படுத்த கூடும் என்பதால் நாம் அவை சரி பார்த்துக் கொள்வது அவசியமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T09:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகப்பெருமானை இந்த 7 நாட்களில் மட்டும் வழிபாடு செய்ய தவறி விடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/7-days-we-should-never-miss-worship-lord-murugan-1785571049"></link>
            <id>https://ibcbakthi.com/article/7-days-we-should-never-miss-worship-lord-murugan-1785571049</id>
            <summary type="text">கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானைஒரு நிமிடம் அமர்ந்து முழு மனதார அவனுடைய நாமத்தை சொல்லி வழிபாடு செய்கின்ற பொழுது உடனடியாக ஓடி வந்து நமக்கு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானைஒரு நிமிடம் அமர்ந்து முழு மனதார அவனுடைய நாமத்தை சொல்லி வழிபாடு செய்கின்ற பொழுது உடனடியாக ஓடி வந்து நமக்கு அருள் புரிபவராக இருக்கிறார்.
 அப்படியாக, முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு சிறந்த ஏழு நாட்கள் இருக்கிறது. அந்த ஏழு நாட்கள் என்னவென்றும் அதற்குரிய பலன்களை பற்றியும் பார்ப்போம்.
</p><p>1. முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை இருக்கிறது. இந்த நாளில் அவரை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தைரியம் வெற்றி, கடும் கடன் தொல்லை குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba8cc4ef-29ea-4630-98c0-040ab3c41c47/26-6a6da6ef842de.webp' /></p><p></p><p>
2. முருகப்பெருமானை கிருத்திகை நாளில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முருகப்பெருமானுடைய அருளால் நல்ல குடும்பமும், குடும்பத்தில் அமைதியும் கிடைக்கிறது.
</p><p>3. முருகப்பெருமானை பௌர்ணமி தினத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு மன அமைதி, நல்ல எண்ணங்கள், ஆன்மீகத்தில் முன்னேற்றம் கிடைக்கிறது. </p><p>4. முருகப்பெருமானை அமாவாசை தினத்தில் வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c305cf0-ff0a-4506-92a1-b278718b959f/26-6a6da6f03dcc9.webp' /></p><p></p><p> 5. முருகப்பெருமானை வைகாசி விசாக தினத்தன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு முருகப்பெருமானின் அருளால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் முன்னேற்றமும் கிடைக்கிறது. </p><p>6. முருகப்பெருமானை சஷ்டி திதி அன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு தடைகள் யாவும் நீங்கி நினைத்த காரியம் வெற்றி அடைகிறது. </p><p>7. முருகப்பெருமானை தைப்பூச தினத்தன்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு வேண்டுதல்கள் யாவும் நிறைவேறி மன உறுதி அதிகரிக்கிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T07:57:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: 71 ஆண்டிற்கு பிறகு அதிசயம்.. கடைசி சூரிய கிரகணம்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-zodiac-be-careful-on-2026-last-solar-eclipse-1785567048"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-zodiac-be-careful-on-2026-last-solar-eclipse-1785567048</id>
            <summary type="text">&amp;nbsp;2026 ஆம் ஆண்டு இரண்டாவது மற்றும் கடைசியாக நடக்கக்கூடிய சூரிய கிரகணம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று நடக்கிறது. இது இந்தியாவில் தெரியாது என்பதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2026 ஆம் ஆண்டு இரண்டாவது மற்றும் கடைசியாக நடக்கக்கூடிய சூரிய கிரகணம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று நடக்கிறது. இது இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் செல்லுபடியாகாது. </p><p>இருப்பினும், ஜோதிட ரீதியாக இந்த கிரகணம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் தாக்கம் கட்டாயமாக 12 ராசிகளுக்கும் ஏற்படும். அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைய போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2621be7c-1418-4c67-82c5-fab28609e628/26-6a6d974a48397.webp' /></p><p></p><p> </p><h3>
கடகம்:
</h3><p>இவர்கள் இந்த காலகட்டங்களில் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய அவசியமாகும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை பேசுவதையும் கோபமாக பேசுவதையும் தவிர்த்து விட வேண்டும்.</p><p> முடிந்தவரை இவர்கள் வியாபாரத்தில் இந்த காலகட்டங்களில் எந்த ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் வாங்குவது முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.</p><h3> 
சிம்மம்:
</h3><p> இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு மிகுந்த உழைப்பும் போராட்டமும் தேவைப்படுகிறது. சாதாரணமாக முடியக்கூடிய வேலை கூட இவர்களுக்கு நீண்ட நாள் ஆகக்கூடிய நிலை வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையாக இவர்கள் இருப்பது அவசியம். </p><p>உடல் ஆரோக்கியத்தில் கட்டாயமாக இவர்கள் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம்.</p><p></p><p> </p><h3>
கன்னி:
</h3><p> இந்த காலகட்டங்களில் யாரையும் நம்பி உங்களுடைய சொந்த வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் நண்பர்களிடத்திலும் தேவையில்லாத வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாதீர்கள்.</p><p> உங்களுடைய உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுது கூடுதல் எச்சரிக்கை செலுத்துவது அவசியமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/3-things-to-buy-on-aadi-peruku-to-get-good-wealth-1785563947"></link>
            <id>https://ibcbakthi.com/article/3-things-to-buy-on-aadi-peruku-to-get-good-wealth-1785563947</id>
            <summary type="text">&amp;nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய 18 வது தினத்தை நாம் ஆடிப்பெருக்கு என்று வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றோம். தமிழகம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆடி மாதத்தில் வரக்கூடிய 18 வது தினத்தை நாம் ஆடிப்பெருக்கு என்று வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றோம். தமிழகம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட பகுதி என்பதால் ஆடிப்பெருக்கு தினத்தன்று நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.</p><p> இந்த நாளில் ஆறு குளங்களை நீர் பெருக்கெடுத்து ஓடுவது பண்டைக்கால வழக்கமாகும். அதனால், அனைத்து நீர் நிலைகளையும் காவிரி தாயாக பாவித்து நீர் நிலைகளின் கரைகளில் மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.</p><p> இது பெருக்கத்திற்குரிய நாளாக கருதப்படுவதால் ஆடிப்பெருக்கு அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு, தானம் வாங்கும் பொருள், துவங்கக்கூடிய செயல்கள் எல்லாம் பல மடங்காக பெருகும் என்று நம்பிக்கை உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58219078-ba20-45f2-afd9-3e7e39c29b38/26-6a6d8b3352dce.webp' /></p><p></p><p> </p><p>மேலும், ஆடிப்பெருக்கு அன்று நாம் புதிய பொருட்கள் குறிப்பாக மங்களப் பொருட்கள், சொத்துக்கள் வாங்குவது, சுபகாரிய பேச்சுக்கள், வியாபாரம் தொழில் துவங்குவது போன்றவை மக்கள் செய்வது உண்டு. இன்னும் ஒரு சிலர் இந்த நாளில் தங்கம், புதிய வாகனம் போன்றவற்றையும் இவர்கள் வாங்குவார்கள். </p><p>ஆனால், எல்லோராலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாது என்று வருந்த வேண்டாம். ஆடிப்பெருக்கு அன்று அதை விட மிக சிறப்பான எளிய மூன்று பொருட்களை வாங்கலாம். அதைப் பற்றி பார்ப்போம். </p><h3>

ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 3 பொருட்கள் :
</h3><p>1. கல் உப்பு</p><p>2. விரலி மஞ்சள்</p><p>3. துவரம் பருப்பு
</p><p>ஆடிப்பெருக்கென்று இந்த மூன்று பொருட்களையும் நல்ல நேரத்திற்குள் வீட்டிற்கு வாங்கி வந்த பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். பிறகு அதை நாம் சமையல் அறைக்கு எடுத்துச் சென்று தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285fde17-2260-4d06-b839-b95fdac7d7fe/26-6a6d8b340b9da.webp' /></p><p></p><p> ஆடிப்பெருக்கென்று மாலை ஆறு மணிக்கு முன்பாக வீட்டிற்குள் இந்த மூன்று பொருட்களையும் வாங்கி வருவது நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமியின் பெற்றுக் கொடுக்கும். </p><p>
இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து ஆடிப்பெருக்கென்று நாம் அரிசி, துவரம் பருப்பு மஞ்சள், குங்குமம், மாங்கல்யசரடு,&nbsp;பச்சை கற்பூரம், கண்ணாடி போன்ற பொருட்களின் கட்டாயமாக வாங்கலாம். அதைப் போல், திருமணம் போன்ற மங்கள காரியங்களுக்கும் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவது மிக சிறப்பு. </p><p>அதைப் போல், திருமணம் போன்று சுபகாரியத் பேச்சுக்களுக்கான பேச்சுவார்த்தை தொடங்குவது பத்திரிக்கை அச்சிட கொடுப்பது கட்டிட கட்டுமான பணிகளை துவங்குவதும் மிகப் பெரிய அளவில் புண்ணியங்களை பெற்றுக் கொடுக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T05:59:20+00:00</updated>
        </entry>
    </feed>
