<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-13T10:52:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/personality-traits-of-27-nakshatra-in-astrology-1786615840"></link>
            <id>https://ibcbakthi.com/article/personality-traits-of-27-nakshatra-in-astrology-1786615840</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அப்படியாக 27 நட்சத்திரக்காரர்கள் உடைய குணாதிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அப்படியாக 27 நட்சத்திரக்காரர்கள் உடைய குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
</p><h3>அஸ்வினி:</h3><p>இவர்கள் மிக செல்வந்தராகவும் புத்திசாலியாகவும் விவாதம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். </p><h3>பரணி:</h3><p> இவர்கள் நன்றி உணர்வுடன் இருக்கக்கூடியவர்கள். திறமைசாலி தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள். </p><h3>கார்த்திகை: </h3><p>ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். படிப்பு அவ்வளவு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் வாழ்கையில் நல்ல வசதிகளோடு வாழ்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8b28846-b5af-45c5-91da-9e3a1db76a21/26-6a7d9822c4e7a.webp' /></p><p> </p><h3>ரோகிணி:</h3><p>இவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஆசைக் கொண்டவர்கள். வசீகரமான தோற்றம் கொண்டிருப்பார்கள்.&nbsp;</p><h3> மிருகசீரிடம்; </h3><p>இவர்கள் தைரியமாக செயல்பட கூடியவர்கள். முன்கோபம் அதிகமாக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் உண்டு. </p><h3>திருவாதிரை: </h3><p>எளிமையாக இருப்பார்கள். சாமர்த்திய சாலியாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கக்கூடிய பொறுப்பு உண்டு.</p><p></p><p> </p><h3>ஆயில்யம்: </h3><p>செல்வந்தராக இருப்பார்கள். அதிக செலவாளியாக இருப்பார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். </p><h3>மகம்: </h3><p>இவர்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மை அதிகம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இனிமையாக பழகக் கூடியவர்கள். </p><h3>பூரம்: </h3><p>மிகவும் ஒழுக்கமானவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். விவசாயத்தில் ஆர்வம் இருக்கும். பேச்சு திறன் உள்ளவர்கள். </p><h3>உத்திரம்:</h3><p> நாணயமாக விளங்க கூடியவர்கள். பக்தி அதிகம் இருக்கும். நட்புடன் பழகக் கூடியவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e71ec4-89d8-45ac-913b-28bbb43bee3e/26-6a7d98237b04c.webp' /></p><h3> ஹஸ்தம்: </h3><p>ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் உண்டு. நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள். தாயின் மீது அதிக அன்பு இருக்கும். </p><h3>சித்திரை: </h3><p>ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் கொள்வார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். ஒருவர் மீது இரக்க குணம் அதிகம் இருக்கும். </p><h3>சுவாதி: </h3><p>புத்தி கூர்மையானவர்கள். யோசித்து செயல்பட கூடியவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள் நம்பிக்கையானவர்கள். </p><h3>விசாகம்: </h3><p>வியாபாரத்தில் அதிக ஆர்வம் இருக்கும். தற்பெருமை கொண்டவர்கள். </p><h3>அனுஷம்:</h3><p> நேர்மையானவர்கள் அரசியலில் அதிக முன்னேற்றம் உண்டு. துணிச்சலாக செயல்பட கூடியவர்கள். குறும்பு உண்டு. புகழ்மிக்கவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><h3> மூலம்: </h3><p>சுறுசுறுப்பாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீதிமானாக இருப்பார்கள்.&nbsp;</p><h3> பூராடம்: </h3><p>செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள். வாக்குவாதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். கடமை செய்வதில் ஆர்வம் உண்டு.&nbsp;</p><p></p><h3> உத்திராடம்: </h3><p>தைரியசாலி மற்றும் கலையில் சிறந்த வழங்குவார்கள். பொறுமைசாலி நினைத்ததை சாதிக்க கூடியவர்கள்.&nbsp;</p><h3> திருவோணம்: </h3><p>ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவை செய்வார்கள். பிறரை மதிக்க கூடிய தன்மை இருக்கும்.</p><h3>அவிட்டம்: </h3><p>கம்பீரமானவர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். தைரியசாலி முன்கோபம் சற்று அதிகம் வரும் .</p><h3> சதயம்: </h3><p>வசீகரமான தோற்றம் உண்டு. செல்வந்தராக இருப்பார்கள். பொறுமையுடன் செயல்படக்கூடியவர்கள். ஒழுக்கமானவர்கள். </p><h3>பூரட்டாதி:</h3><p> மனதில் தைரியம் அதிகம் இருக்கும். பழகுவதற்கு இனிமையாக இருப்பார்கள். குடும்பத்தை நேசிக்கக் கூடியவர்கள். </p><h3>உத்திரட்டாதி: </h3><p>கல்வியில் சிறந்து விளங்குபவர்கள். சாதுரியமாக பேசுபவர்கள். பக்தியில் சிறந்து விளங்குவார்கள். கடமைதவறாதவர்கள். </p><h3>ரேவதி:</h3><p> தைரியசாலியாக இருக்க கூடியவர்கள் மிகவும் நேர்மையாக செயல்படுவார்கள். எதிரியை வெல்லக்கூடியவர்கள். தற்பெருமை அதிகம் பேசக்கூடியவர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T10:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட பாட வேண்டிய முருகன் மந்திரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/murugan-mantras-to-chant-for-debt-problem-1786611558"></link>
            <id>https://ibcbakthi.com/article/murugan-mantras-to-chant-for-debt-problem-1786611558</id>
            <summary type="text">ஒரு மனிதனுக்கு கடன் தொல்லை என்பது நேரம் சரியில்லாமல் இருக்கின்றன வேளையில் அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிடும். அந்த வகையில், கடன் தொல்லை என்றால் மனிதனுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு மனிதனுக்கு கடன் தொல்லை என்பது நேரம் சரியில்லாமல் இருக்கின்றன வேளையில் அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிடும். அந்த வகையில், கடன் தொல்லை என்றால் மனிதனுக்கு நிம்மதியே இருக்காது.</p><p> அந்த வகையில், தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் அவர்களுடைய கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மன தைரியம் பெற செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. </p><p>அந்த வகையில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய இந்த எளிய பாடலை செவ்வாய்க்கிழமையன்று பாராயணம் செய்து வருகின்ற பொழுது நாம் நினைத்த காரியங்கள் கைகூடும். அதோடு நான் கடன் தொல்லையிலிருந்து நாம் விரைவில் விடப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/840d5198-77e0-4fe4-a9db-ffdfd42c11f0/26-6a7d876a77a08.webp' /></p><p></p><blockquote class="blockquote"><p> 

"செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்,<br>
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!<br>
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!<br>
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!"</p></blockquote><p></p><blockquote class="blockquote"><p>
</p></blockquote><p>இந்த மந்திரத்தை தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்ற நேரத்தில் நிச்சயம் விரைவில் கடன் தொல்லைகள் இருந்து விடுபடலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 ஆடிப்பூரம் எப்பொழுது? அன்று செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-5-things-to-get-blessings-on-aadi-puram-1786601852"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-5-things-to-get-blessings-on-aadi-puram-1786601852</id>
            <summary type="text">ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கக்கூடிய ஆண்டாளுக்கும் பார்வதியின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கக்கூடிய ஆண்டாளுக்கும் பார்வதியின் அம்சமாக இருக்கும் இருவருக்கும் உற்சவங்கள் நடைபெறுகிறது. </p><p>ஆண்டாள் மற்றும் அம்பாள் உடைய முழு அருளை பெறுவதற்கும் அவர்களுடைய அருள் நிறைந்த இந்த ஆடிப்பூரம் அன்று பெண்கள் அவர்களுடைய குடும்பத்தின் நலனுக்காக, அமைதிக்காக சிறப்பு வழிபாடு செய்வது அவசியம்.
</p><p>
அந்த வகையில், இந்த 2026 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7a36b95-f9f3-44f0-a2a4-fa4c0bce11e4/26-6a7d617d9a77d.webp' /></p><p></p><p>
</p><h3>
1. ஆண்டாள் அல்லது அம்மன் தரிசனம் செய்யுங்கள்:</h3><p>ஆடிப்பூரம் அன்று அருகில் இருக்கக்கூடிய ஆண்டாள் அல்லது அம்பாள் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வது நம்முடைய வாழ்க்கையில் உள்ள திருமண தடை குடும்பத்தில் பிரச்சினை குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தீர்க்கும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலே இருந்து ஆண்டாள் அல்லது அம்பாளுடைய திருவுருவப்படத்திற்கு மாலை சாற்றி இரண்டு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.</p><h3>

2. அம்மனுக்கு வளையல்கள் சமர்ப்பிங்கள்:
</h3><p> ஆடிப்பூரம் அன்று மிகவும் விசேஷ வழிபாடாக அம்மனுக்கு வளையல் சாற்றும் வழிபாடு இருக்கிறது. ஆதலால், உங்களால் முடிந்த எண்ணிக்கையில் கண்ணாடி வளையல்களை வாங்கி அம்மனுக்கு நீங்கள் சாற்றி வழிபாடு செய்யலாம். அலங்காரத்திற்கு பிறகு பிரசாதமாக அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொள்வதும் பிறருக்கு தானாக நீங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் ஒற்றுமை, தடைகள் எல்லாம் விலகும்.</p><h3> 

3. ஆண்டாளுக்கு துளசி மற்றும் மலர்மாலை சற்றுங்கள்:</h3><p>
 ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். ஆதலால் ஆண்டாளுக்கு துளசி, மல்லிகை, தாமரை அல்லது வாசனை மிகுந்த மலர்களால் மாலை சாற்றி கட்டாயம் வழிபாடு செய்வதால் திருமண வரன் நினைத்தது போல் கிடைக்கும். தம்பதிகள் இடையில் ஒற்றுமை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94bf635a-e67c-4931-bd7e-752023ffdfb5/26-6a7d617e52c28.webp' /></p><p></p><h3>

4. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் வெற்றிலை பாக்கு, இனிப்பு, தாம்பூலம் கொடுங்கள்:</h3><p>
இந்த நாளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், தேங்காய், வளையல், கண்ணாடி அல்லது ஆடை போன்றவற்றை தாம்பூலமாக கட்டாயம் வழங்கலாம். இதனால் செல்வ வளமும் குடும்பத்தில் அமைதியும் அதிகரிக்கும்.
</p><h3>
5. சர்க்கரைப் பொங்கல் வெல்ல பாயாசம் செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்:
</h3><p>
 பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், நெய் சேர்த்த சர்க்கரை பொங்கல் அல்லது பானகம் நீர் மோர் ஆகியவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். இதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்ற பொழுது சிறப்பான பலன்கள் கிடைக்கும்.</p><p>ஆடிப்பூரம் அன்று நீங்கள் விளக்கேற்றி வளையல் சமர்ப்பித்து வழிபாடு செய்வதும் அம்மனுடைய முழு அருள் கிடைக்கும். </p><p>
மேலும், நாம் வழிபாடு செய்கின்ற பொழுது பொருட்களுடைய எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டாம். நம்முடைய மனதினுடைய பக்தியில் கவனம் செலுத்துங்கள். தூய பக்திக்கு பொருள் தேவை இல்லை அன்பு மட்டுமே போதும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T06:17:38+00:00</updated>
        </entry>
    </feed>
