<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-07T08:29:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பாக்கியம் இல்லை என்ற கவலை வேண்டாம்? மனம் தளராமல் இந்த பரிகாரம் செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/hindu-remedies-for-child-blessing-and-fertility-1786087978"></link>
            <id>https://ibcbakthi.com/article/hindu-remedies-for-child-blessing-and-fertility-1786087978</id>
            <summary type="text">இந்த உலகத்தில் இறைவன் எப்பொழுது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருக்கிறார். அப்படியாக, கர்ம வினைகளால் நம்முடைய வாழ்க்கையில் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் இறைவன் எப்பொழுது யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருக்கிறார். அப்படியாக, கர்ம வினைகளால் நம்முடைய வாழ்க்கையில் சில தடைகள் ஏற்பட்டு இருந்தாலும் அதை நாம் முழு இறை வழிபாட்டால் நிச்சயம் கடந்து விட முடியும். </p><p>அப்படியாக, திருமணமாகி பல ஆண்டு காலம் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருந்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு சில எளிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3938ed2b-f563-4477-9063-df64ef3cbed6/26-6a758a2d86253.webp' /></p><p></p><p>

 இவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானை தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். குரு பகவான் தான் குழந்தை செல்வத்தை கொடுக்கக் கூடியவர்.</p><p>அதனால் அவரை சரணடைவது நல்ல பலன் கொடுக்கும். அதைப்போல், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்தாலும் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77962ba3-f178-4c2a-a70d-83b710db9553/26-6a758a2cbedcf.webp' /></p><p></p><p>செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு <b>"ஓம் சரவணபவாய நமஹ"</b> என்று 108 முறை பாராயணம் செய்வதும் 108 முறை எழுதி அதை மாலையாக முருகப்பெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்வதும் நல்ல பலனை கொடுக்கும். </p><p>அதே போல் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானமாக கொடுங்கள். ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை, சந்தான கோபாலகிருஷ்ணன், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை மிகுந்த பக்தியுடன் வழிபடுவது உங்களுடைய தடைகளை அகற்றி விரைவில் குழந்தை பாக்கியத்தை பெறுவதற்கான அருள் கிடைக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T07:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒவ்வொரு மனிதனுடைய உண்மையான சொத்து என்ன தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-true-asset-of-every-human-beings-1786082350"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-true-asset-of-every-human-beings-1786082350</id>
            <summary type="text">இந்த உலகம் நிரந்தரமற்றது. மனிதர்கள் எல்லோரும் கட்டாயமாக ஒரு நாள் இறக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். சொந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகம் நிரந்தரமற்றது. மனிதர்கள் எல்லோரும் கட்டாயமாக ஒரு நாள் இறக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். சொந்தம் என்ற பந்தம் கலைந்தாக வேண்டும். உடல் என்ற அந்த மாயை கட்டாயம் ஐம்பூதங்களுடன் இணைந்தாக வேண்டும். </p><p>இதுதான் உலகத்தில் நியதி. அப்படியாக, மனிதனுக்கு நிரந்தரமற்ற ஒன்று என்று தெரிந்தும் அவனால் எதற்கு அவனை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அவனால் எதற்கு இன்னும் உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3bc2de-c521-41ad-8f5b-7b30d4a856d8/26-6a7574348515e.webp' /></p><p></p><p> </p><p>இல்லாத ஒன்றுக்காக ஓடும் தன்மையை ஏன் அவன் வளர்த்துக் கொள்கிறான். இதைத்தான் நாம் கர்ம வினை என்று சொல்கிறோம். உண்மையை தவிர்த்து பொய்களை நாடிச் செல்லும் மனிதனுடைய மனதிற்கு தெரியவில்லை எது உண்மையான சொத்து?</p><p> எந்த சொத்து உண்மையில் அவனை காப்பாற்ற போகிறது ? எந்த சொத்து அவனுக்கு சிம்மாசனம் கொடுத்து அவனை வாழ வைக்க போகிறது? எந்த சொத்து அவனுக்கு கிரீடமும் எந்த சொத்து அவனுக்கு பெயரும் புகழும் கொடுக்கப் போகிறது என்று தெரியாமலே அவன் ஒரு மாயை நோக்கி ஓடுகின்றான். அப்படியாக, மனிதனுடைய உண்மையான சொத்து என்ன என்பதை பற்றி பார்ப்போம்.</p><p>
 மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் நான் வாழும் காலத்தில் எனக்கு இத்தனை கட்டு பணம் வேண்டும். இத்தனை அடுக்குமாடிகள் கொண்ட வீடுகள் வேண்டும். இத்தனை பரப்பளவில் நிலம் வேண்டும் என்று. ஆனால் என்றாவது ஒருநாள் இறைவனே நான் இதுவரை சம்பாதித்த கர்ம வினைகள் போதும்.</p><p> மீண்டும் என் வாழ்வில் கர்ம வினைகள் சம்பாதித்து விடக்கூடாது என்று என்றாவது நாம் நினைத்தது உண்டா? இங்குதான் மனிதர்களுடைய கர்ம வினையின் கணக்குகள் இன்னும் அதிகரிக்க துவங்குகிறது. நீங்கள் உண்மையாகவே ஒரு ராஜ வாழ்க்கை வாழ வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91bcd349-8e12-4d4f-bb2f-89643200222b/26-6a7574353aff9.webp' /></p><p></p><p> நீங்கள் ஒரு மிகப்பெரிய செல்வந்தராக வாழ வேண்டும். நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயமாக இருக்கின்ற வாழ்வில் ஒருவரை தாழ்த்தி பேசாமல், ஒருவரிடம் சண்டையிடாமல், சொத்துக்களை அபகரிக்காமல் ஒருவரின் வாழ்க்கையை நாசம் செய்யாமல், எல்லா உயிர்களையும் சமமாக நினைத்து பாவிக்க கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொண்டும். </p><p>அடையாளமே நமக்கு தர முடியாது என்கின்ற வெறும் காசுகளையும் தங்கங்களையும் நிலங்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு இல்லாமல் இறந்தும் நமக்கு அடையாளம் கொடுக்கக்கூடிய இறை வழிபாட்டை நோக்கி செல்லுங்கள். </p><p>தானமும் புண்ணியமும் சேர்த்து வாழுங்கள். இந்த ஒரு நிரந்தரமான சொத்துதான் உங்களுடைய அடையாளங்களை எல்லா பிறவிகளிலும் நீங்கள் யார் என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட போகிறது. இதுவே நீங்கள் சம்பாதிக்க கூடிய நிரந்தரமான சொத்துக்கள் ஆகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T05:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீதா உபதேசம்: நிம்மதியான வாழ்க்கைக்கு கட்டாயம் இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/5-bagavat-gita-lesson-to-live-a-peaceful-life-1786076896"></link>
            <id>https://ibcbakthi.com/article/5-bagavat-gita-lesson-to-live-a-peaceful-life-1786076896</id>
            <summary type="text">&amp;nbsp; பகவத்கீதை என்பது இந்த உலகம் இருக்கும் வரை ஒருவரை வழிநடத்தக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதல் ஆகும். பகவான் கிருஷ்ணர் அருளிய இந்த பகவத்கீதை மனித ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பகவத்கீதை என்பது இந்த உலகம் இருக்கும் வரை ஒருவரை வழிநடத்தக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதல் ஆகும். பகவான் கிருஷ்ணர் அருளிய இந்த பகவத்கீதை மனித வாழ்க்கை எந்த கணக்கில் இயங்குகிறது? யார் எதை செய்தால் அவர்களுக்கு என்ன வந்து சேரும்?</p><p> யார் என்னை செய்தால் புண்ணியம் வந்து சேரும் என்று பல்வேறு விஷயங்களை நமக்கு அவர் கற்றுக்கொடுத்து வழி நடத்துகிறார். அப்படியாக, கீதா உபதேசத்தில் பகவான் கிருஷ்ணர் நமக்கு நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கு ஒரு சில வழிகளை சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72679e7f-d5e7-48e4-ad23-0ac875000031/26-6a755ee2570c3.webp' /></p><p></p><p>
</p><p>1. உங்களை சுற்றி ஒருவர் துன்பத்தில் இருக்கிறார் என்றால் உடனே அவர்களை சென்று பார்த்து விடுங்கள். ஆனால், செல்வ செழிப்போடு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்கள் அழைத்தால் மட்டுமே சென்று பாருங்கள். இல்லையென்றால் அங்கு அவமானம் மட்டுமே மிஞ்சும்.</p><p> 2.ஒருவருக்கு பணம் இருந்தால் அவர்களுக்கு அவர்களே தெரியாது. ஆனால், ஒருவரிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் இந்த உலகத்தில் யாருக்கும் தெரியாது. இதுதான் பணம் ஒரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய மதிப்பு.</p><p> 3. மனிதன் வெற்றியில் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது என்பது சுலபம். ஆனால், அவன் தோல்வி வருகின்ற பொழுது அவன் எந்த நிலையில் இருக்கின்றான் என்ன கற்றுக் கொள்கிறான் என்பது தான் அவனுடைய உண்மையான வெற்றியை தீர்மானிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0ec748-b9bf-4024-b260-47499b4882d8/26-6a755ee3122ff.webp' /></p><p></p><p> 4. பொதுவாக மனிதர்கள் உயிரோடு இருக்கும் வரை யாரும் அவர்களை மதிப்பதில்லை. பல விஷயங்கள் காலம் கடந்து தான் மனிதர்களுக்கு புரிகிறது. </p><p>5. ஒரு மனிதனுக்கு எளிமை அடக்கம் இவை இரண்டு மட்டுமே கொண்டு அவனை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுவே அவனுக்கு கை கொடுக்கக் கூடிய புண்ணியமாக இருக்கிறது. </p><p>ஆக, பகவான் கிருஷ்ணர் சொன்ன இந்த விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றினாலே பாதி துன்பத்திலிருந்து நாம் தப்பித்து விடலாம்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T04:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய ராசிபலன் (07-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/12-indraya-rasi-palan-august-07-2026-friday-1786019134"></link>
            <id>https://ibcbakthi.com/article/12-indraya-rasi-palan-august-07-2026-friday-1786019134</id>
            <summary type="text">மேஷம்:
 இன்று நீங்கள் தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திப்பீர்கள். மூன்றாவது நபரிடம் தேவையில்லாத சொந்த விஷயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p> இன்று நீங்கள் தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களை சந்திப்பீர்கள். மூன்றாவது நபரிடம் தேவையில்லாத சொந்த விஷயங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நட்புகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். </p><h3>ரிஷபம்: </h3><p>இன்று நீங்கள் தடைகளையும் தாண்டி ஒரு முக்கியமான காரியத்தை நிறைவேற்றுவீர்கள். வேலை ரீதியாக நீங்கள் நினைத்த அங்கீகாரம் உங்களை தேடி வரும். </p><h3>மிதுனம்: </h3><p>குடும்பத்தில் ஒரு சில கசப்புகள் வந்து மறையும். குடும்பத்தில் இன்று பிள்ளைகள் வாழ்க்கைக்காக ஒரு முக்கியமான விஷயம் எடுப்பதற்கான சூழல் உருவாகலாம். வேலை பளு அதிகரிக்கும். </p><h3>கடகம்: </h3><p>இன்று மனதில் ஒரு சில குழப்பங்களுக்கேற்ற பதில்களை தெரிந்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் சில ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும்.</p><p></p><p> </p><h3>சிம்மம்:
</h3><p>நீங்கள் கடந்து கால தவறுகளை நினைத்து மனம் வருந்துவீர்கள். தொழில் ரீதியாக உங்களிடம் தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும். </p><h3>
கன்னி: </h3><p>
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.</p><h3> துலாம்: </h3><p>
உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய நாள். தொழில் ரீதியாக உங்களிடம் போட்டியிட்டவர்கள் விலகி செல்வார்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும்.</p><h3> விருச்சிகம்:</h3><p> இன்று நீங்கள் கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் வரலாம். முடிந்தவரை எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.</p><h3> தனுசு: </h3><p>இன்று குழந்தைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். குழந்தைகளுக்காக ஒரு முக்கிய ஏற்பாடுகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம். </p><h3>மகரம்: </h3><p>இன்று நீங்கள் வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலனை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள்.</p><p></p><p> </p><h3>கும்பம்: </h3><p>பொழுதுபோக்கு விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தாயுடன் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். </p><h3>மீனம்:</h3><p> சொந்தங்கள் மத்தியில் இன்று நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசலாம். கடந்த கால தவறை எண்ணி வருவீர்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T03:59:43+00:00</updated>
        </entry>
    </feed>
