<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-08-03T15:56:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகார பதவிகள் அருளும் ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணியன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/andarkuppam-balasubramanya-swami-temple-1734948795"></link>
            <id>https://ibcbakthi.com/article/andarkuppam-balasubramanya-swami-temple-1734948795</id>
            <summary type="text">ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் சென்னையிலிருந்து பொன்னேரி போகும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எழும்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் சென்னையிலிருந்து பொன்னேரி போகும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எழும்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆண்டார் குப்பம் முதலில் ஆண்டியார் குப்பம் என்று அழைக்கப்பட்டது. இங்குப் பல துறவிகள் தங்கி இருந்ததால் ஆண்டிகளின் குப்போம் எனப்பட்டது.</p><h3>&nbsp;முருகனின் மூன்று நிலைகள்
</h3><p>
ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் முருகனை பாலமுருகன் என்றோ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் என்றோ தண்டாயுதபாணி என்றோ அழைக்க இயலாது. ஏனெனில் அவர் மனித வாழ்வின் மாறி வரும் மூன்று நிலைகளில் காட்சி அளிக்கின்றார். </p><p>
அதிகாலையில் பாலமுருகனை போல குழந்தை முக பாவத்துடனும் மதியம் குமரப் பருவத்தில் இருக்கும் இளைஞனின் முக பாவத்துடனும் மாலையில் வயோதிகரின் தளர்ந்த முகத்துடனும் காட்சி அளிக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1da249a-cfb0-4f39-99cb-697316e23eb5/24-676937bcebd68.webp' /></p><p>
</p><h3>
அதிகார முருகன்
</h3><p>ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி வேல், மயில், ஆறு முகங்கள் 12 கண்கள், கரங்கள் என முருகனுக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல் இங்கு இடுப்பின் இரண்டு பக்கமும் கை வைத்து அதிகார தோரணையில் காட்சியளிக்கின்றார். </p><p>எனவே இவரை அதிகார முருகன் என்று அழைக்கின்றனர். இவ்வூர் முருகன் பிரம்மனின் அகம்பாவம் தொலைந்த முருகனாக வணங்கப்படுகிறான்.</p><p></p><h3>உப சந்நிதிகள்</h3><p> 
ஆண்டார் குப்பம் பால சுப்பிரமணிய சுவாமியின் இணையர் வள்ளியும் தெய்வானையும் அவருக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். 
இக்கோவிலில் வேறு பல தெய்வங்களுக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. </p><p>காசி விஸ்வநாதன் காமாட்சியம்மனும் தனிச் சன்னதியில் காட்சி தருகின்றனர். ஆடலரசன் நடராஜர் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளார். பக்தர்களுக்கு வரம் தரும் வர சக்தி விநாயகராக அவரும் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
</p><p>
 விருட்சமும் தீர்த்தமும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை ஆகும் சரக்கொன்றை ஆகும். இம்மரம் பௌத்தர்களுக்கு உரிய விசேஷ மரமாகும். சொர்ண புஷ்பம் என்று பௌத்தர்கள் இம்மரத்தின் மலர்களைக் குறிப்பிடுவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/605365b6-3310-4f3b-90ab-c016867a3a59/24-676937bd71009.webp' /></p><p> </p><p> இம்மலர் தாய்லாந்தின் தேசிய மலராகும். பௌத்தர்கள் அதிகம் வாழ்ந்த கேரளாவின் மாநில மலர் சரக்கொன்றை என்பதால் ஆண்டு தொடக்கத்தில் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படும் விஷு அன்று எல்லோரும் பூஜையில் இம்மலரை கண்ணாடி மற்றும் சித்திரை கனி வர்க்கங்களோடு வைத்து வணங்குவர்.</p><p> ஸ்ரீலங்காவின் வலது பகுதியில் குறிப்பாக பௌத்த கோவில்களில் மடாலயங்களில் இம்மரங்கள் அதிகமாக வளர்க்கப்படும். தூய்மையையும் செல்வத்தையும் குறிக்கும் சரக்கொன்றை பௌத்த துறவிகளின் சமயச் சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. </p><p>பத்ம புத்தரும் நாரத புத்தரும் சரக்கொன்றை மரத்தின் கீழ் ஞானோதயம் பெற்றனர். எனவே இம்மரத்தை போதி மரத்துக்கு நிகராக போற்றினர். இதனை ஸ்வர்ண புஷ்பம் என்றே அழைத்தனர். (இதுவும் இக்கோயில் முதலில் பௌத்த கோயிலாக இருந்திருக்கும் என்பதை உறுதி செய்கிறது).&nbsp;</p><p></p><h3>கதை 1</h3><p>
பிரமன் குட்டுப்பட்ட கதை
சைவ சமய புரட்சி ஏற்பட்ட காலத்தில் பெயர் மாற்றப்பட்ட கோவில்களுக்குப் புதிய தலபுராணங்கள் உருவாக்கப்படும். அப்புராணக் கதைகளில் பழைய பௌத்த கடவுளரான இந்திரனும் பிரமனும் வழிபாட்டுத் தகுதியை இழப்பர். </p><p>இக்கோவிலுக்குரிய ஸ்தலபுராணத்தில் பிரம தேவன் பாலமுருகனால் குட்டுப்படுகிறார். 

கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை கண்டுகொள்ளாமல் அவரை வணங்கிச் செல்லாமல் சிறுவன் தானே என்று அலட்சியம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59f8e97-d879-477d-987e-66bb1e59b274/24-676937bded999.webp' /></p><p> </p><p>முருகன் அவரை நிறுத்தி 'பிரம்மதேவா பிரணவத்திற்கு பொருள் சொல்லுங்கள், கேட்போம்' என்றார். பிரம்ம தேவனுக்கு பிரணவத்திற்கு பொருள் சொல்லத் தெரியவில்லை. முருகன் மக்குச் சிறுவர்களுக்கு தலையில் குட்டுவது போல பிரமனின் தலையில் குட்டி அவரை சிறையில் அடைக்கச் சொன்னார்.</p><p> முருகப்பெருமான் பிரம்ம தேவனை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டபோது இரண்டு கையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அதிகார தோரணையோடு நின்றார் அந்த உருவத்தில் இக்கோவிலில் அவர் காட்சியளிக்கின்றார். இச்சம்பவம் நடைபெற்ற தலம் இத்தலம் ஆகும்.&nbsp;</p><h3>அறு உருவாய் விளங்கும் பிரமதேவன்
</h3><p>பிரம்மனுக்கு எங்குமே கோயில் கிடையாது என்ற சாபம் அவருக்கு உண்டு. பிரமதேவன் குட்டுப்பட்ட இடம் என்பதை குறிக்கும் வகையில் 
இங்கு பிரம்மதேவன் சிவன் முருகனுக்கு நேர் எதிரே கல் வடிவில் காட்சி தருகின்றார். அவருக்கு உருவம் இல்லை என்ற சாபத்தின் காரணமாக அறு உருவாக (உருவமற்ற) இருக்கின்றார்.</p><p> அவருடைய அட்சர மாலை, கமண்டலம், தாமரை மலர் ஆகியவை அந்த நீள் வட்டக் கல்லில் காணப்படுகிறது. 

(பிரமன் கல்லும் இதில் காணப்படும் பொருட்களும் யாரோ ஒரு பவுத்த துறவிக்கான நினைவுக்கல்லாகத் தோன்றுகிறது. சுல்தான் கொடுத்த நிலத்தில் கோயில் கட்டப்பட்டது. </p><p>இந்தக் கல் இங்கு வாழ்ந்த புத்த துறவியை/ ஆண்டியைக் குறிக்கின்றது. இங்குப் பவுத்தர்கள் மொட்டையடித்து துறவு மேற்கொண்டிருப்பர். துறவுக்குரிய சரக் கொன்றையும் இங்கு வளர்க்கப்பட்டுள்ளது.)&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e8aadb-c517-449d-954e-a49ed73c9e25/24-676937be6ed79.webp' /></p><h3>கதை இரண்டு </h3><p>
தீர்த்தம் உருவான கதை
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலில்
வேலாயுத தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உள்ளது. இதற்கும் ஒரு கதை உள்ளது. சம் வர்த்தனர் என்ற பக்தர் இப்பகுதிக்கு வந்து இங்கே உள்ள இறைவனைத் தரிசிக்க விரும்பினார். </p><p> அதற்கு முன்பு குளித்துவிட்டு சுத்தமாக வந்துவிடலாம் என்று நினைத்து அங்கே இருந்த ஒரு சிறுவனிடம் 'தம்பி இங்கே குளிக்க நல்ல குளம் எங்கே இருக்கின்றது? கோவில் தீர்த்தம் எங்கே இருக்கின்றது' என்று கேட்டார். அதற்கு அச்சிறுவன் 'இங்கே குளம் என்றும் தீர்த்தம் என்றும் எதுவும் இல்லை என்னுடன் வாருங்கள்' என்று சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டித் தன்னிடம் இருந்த வேலாயுதத்தை ஊன்றினான். அங்கே ஊற்றுக் கிளம்பியது. </p><p>சமவர்த்தனர் அவ் ஊற்று நீரில் குளித்துக் கோயிலுக்கு வந்தார். 

மக்கள் ஊற்று நீரை அழகான ஒரு குளம் வெட்டி சேகரித்தனர். அந்த குளத்துக்குப் பெயர் வேலாயுத தீர்த்தம் ஆகும். சிலர் இதனை பால நதி என்றும் அழைக்கின்றனர்.&nbsp;</p><p></p><h3>வரலாறு </h3><p>
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவிலுக்குப் புராண கதைகளுடன் உண்மை வரலாறும் உள்ளது. இஸ்லாமிய சுல்தான் மன்னர் தன் படை பரிவாரங்களுடன் போருக்கு புறப்பட்டு போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு இடத்தில் பாசறை அமைத்து தங்கினார். </p><p>அங்கு ஒரு சிறிய முருகன் கோவில் இருந்தது. முருகன் வீரத்தின் தெய்வம் என்பதாலும் தேவர்களின் சேனாதிபதி என்பதாலும் அவனை வணங்கிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்று படை வீரர்கள் சுல்தானிடம் எடுத்துரைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/454dad45-6aac-4a3a-8df0-5b71699e656d/24-676937bee6c2a.webp' /></p><p> </p><p>அவரும் உடன்பட்டார். 'சரி வணங்கி செல்வோம் நமக்கு வெற்றி கிடைத்தால் இந்த முருகனுக்கு கோவில் கட்ட நிலம் தருவோம்' என்று சொல்லி வணங்கிச் சென்றார். அந்தப் போரில் சுல்தான் மாமன்னருக்கு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. </p><p>உடனே அவர் சொன்ன சொல்லை காப்பாற்ற முருகன் கோவிலுக்கு நிலம் வழங்கினார். அந்த நிலத்தில் கட்டப்பட்டது தான் ஆண்டி குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இது உண்மை வரலாறாக இங்கு பெரியவர்களால் சொல்லப்படுகின்றது.</p><h3>நேர்த்திக்கடன்கள் </h3><p>
ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் 
மற்ற முருகன் கோவில்களில் இருப்பதைப் போலவே பக்தர்கள் மொட்டை அடித்து முடி காணிக்கை தருகின்றனர். காவடி எடுப்பதாகவும் நேர்ந்து கொள்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><h3>வழிபாட்டின் பலன்
</h3><p>ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோயிலில் 
பரணி நட்சத்திரத்தன்று வந்து இரவில் தங்கி மறுநாள் காலையில் கார்த்திகை பூஜையை முருகனுக்கு சிறப்பாக நடத்தி வீடு திரும்பினால் தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும்.</p><p> இக்கோயிலில் முருகனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் பாலபிஷேகமும் சிறப்பு வழிபாடுகள் ஆகும். இவற்றைச் செய்த பக்தர்களுக்குப் பழவினை, புதுவினை என இருவினையும் அண்டுவதில்லை.&nbsp;</p><h3>இழந்த அதிகாரத்தைப் பெற</h3><p>
ஆண்டார்குப்பத்தில் முருகன் இரண்டு கையையும் இடுப்பில் வைத்த படி அதிகார தோரணையுடன் நிற்பதால் இவரைத் தொடர்ந்து வணங்கி வந்தால் அதிகாரத்தை அருள்வார். நல்ல அதிகார பதவிகளை இழந்து அதிகாரமற்ற 'டம்மி போஸ்ட்களுக்கு' பதவி மாற்றம் அல்லது பதவி இறக்கம் பெற்றவர்கள் (டி பிரமோஷன்) ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்கினால் மீண்டும் பழைய அதிகாரம் உள்ள பதவியைப் பெறுவார்கள் அல்லது புதிய அதிகாரம் உள்ள பதவிகள் கிடைக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T15:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசிபலன் (04-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-2026-august-04-tuesday-1785759517"></link>
            <id>https://ibcbakthi.com/article/daily-12-rasi-palangal-2026-august-04-tuesday-1785759517</id>
            <summary type="text">&amp;nbsp;மேஷம்:
 உங்களை விட்டு விலகி சென்றவர்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கலாம். வேலையில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நினைத்த உதவிகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp;மேஷம்:</h3><p>
 உங்களை விட்டு விலகி சென்றவர்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்கலாம். வேலையில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு நினைத்த உதவிகள் கிடைக்கும் நாள். </p><h3>ரிஷபம்: </h3><p>ஆன்மீக பணிகளில் அதிகம் ஈடுபாடு செலுத்துவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். மனதில் நல்ல தெளிவு பிறக்கும். வேலையில் புதிய வாய்ப்பு உண்டாகும். </p><h3>மிதுனம்: </h3><p>வியாபாரம் தொடர்பாக கடன் உதவிகள் கிடைக்கும். சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். சில சவால்களை கடந்து செல்வீர்கள். </p><h3>கடகம்:</h3><p> தொழில் ரீதியாக பொறுமையாக இருப்பது அவசியம். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்.</p><p></p><h3>சிம்மம்: </h3><p>குடும்பத்தினரை அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்ப்பது நல்லது. நெருக்கடியான நாள். </p><h3>கன்னி:</h3><p> வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் முற்றிலும் விலகும். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள்.</p><h3> துலாம்: </h3><p>கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடைய வருகையால் சில குழப்பங்களை சந்திக்கலாம். மாற்றமான நாள். </p><h3>விருச்சிகம்: </h3><p>இன்று உங்களுக்கு ஒரு புது விதமான சிந்தனைகள் தோன்றும். வழக்கு விஷயங்களில் மிகவும் பொறுமையாக இருப்பது அவசியம். அனுபவங்கள் பெறக்கூடிய நாள். </p><h3>தனுசு: </h3><p>இவர்களுக்கு உறவினர்கள் வழியாக நற்செய்தி வந்து சேரும். விவசாயம் சார்ந்த வேலையில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். பயணங்களில் இருந்து வந்த தாமதம் விலகி நினைத்த காரியம் நிறைவேறும்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மகரம்:</span></p><p>புதிய ஒப்பந்தங்கள் கைகூடிவரும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் விலகி செல்லும். சொத்து விற்பதிலும் வாங்குவதிலும் நல்ல லாபங்களை பெறுவீர்கள். </p><h3>கும்பம்: </h3><p>குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்ல தெளிவு பிறக்கும். முடிவிற்கு வராத காரியம் நல்ல முடிவை பெறும். </p><h3>மீனம்: </h3><p>மனதிற்கு மகிழ்ச்சிக்கான செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத சில சந்திப்புகளை பெறுவீர்கள். பிடிவாத குணத்தை விட்டு விட்டால் நன்மை உண்டாகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் மாதம் கொண்டாடக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் என்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-month-important-festival-fasting-dates-1785759015"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-month-important-festival-fasting-dates-1785759015</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் ஆங்கில நாட்காட்டியின் படி எட்டாவது மாதமாக உள்ளது. தமிழில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்து வரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாதம் உள்ளது. இந்த ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் ஆங்கில நாட்காட்டியின் படி எட்டாவது மாதமாக உள்ளது. தமிழில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்து வரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாதம் உள்ளது. </p><p>இந்த மாதத்தில் நிறைய ஆன்மீக விழாக்கள், விசேஷங்கள், விரதங்கள் வர உள்ளது. இந்த மாதத்தில் தான் வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என வழிபாட்டிற்கு உரிய முக்கிய தினங்கள் வருகிறது. </p><p>அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் விசேஷ நாட்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3d4dc5-7cd4-4f02-905d-78e31df5a36d/26-6a708528be6da.webp' /></p><p></p><h3>ஆகஸ்ட் 2026 விசேஷங்கள் :
</h3><p>ஆகஸ்ட் 03	ஆடி 18	திங்கள்	ஆடிப்பெருக்கு
</p><p>ஆகஸ்ட் 12	ஆடி 27	புதன்	ஆடி அமாவாசை
</p><p>ஆகஸ்ட் 14	ஆடி 29	வெள்ளி	ஆடிப்பூரம்</p><p>
ஆகஸ்ட் 15	ஆடி 30	சனி	இந்திய சுதந்திர தினம்
</p><p>ஆகஸ்ட் 16	ஆடி 31	ஞாயிறு	நாக சதுர்த்தி</p><p>ஆகஸ்ட் 17	ஆடி 32	திங்கள்	கருட பஞ்சமி,நாக பஞ்சமி
</p><p>ஆகஸ்ட் 21	ஆவணி 04	வெள்ளி	வரலட்சுமி விரதம்
</p><p>ஆகஸ்ட் 26	ஆவணி 09	புதன்	ஓணம் பண்டிகை</p><p>ஆகஸ்ட் 27	ஆவணி 10	வியாழன்	ஆவணி அவிட்டம்
</p><p>ஆகஸ்ட் 28	ஆவணி 11	வெள்ளி	காயத்ரி ஜபம்
</p><p>ஆகஸ்ட் 31	ஆவணி 14	திங்கள்	மகா சங்கடஹர சதுர்த்தி</p><p></p><h3>ஆகஸ்ட் 2026 விரத நாட்கள் :</h3><p>அமாவாசை	ஆகஸ்ட் 12	புதன்	ஆடி 27
</p><p>பெளர்ணமி	ஆகஸ்ட் 27	வியாழன்	ஆவணி 10
</p><p>கிருத்திகை	ஆகஸ்ட் 06	வியாழன்	ஆடி 21</p><p>
திருவோணம்	ஆகஸ்ட் 26	புதன்	ஆவணி 09</p><h4>ஏகாதசி</h4><p>ஆகஸ்ட் 09,ஞாயிறு, ஆடி 24, 
</p><p>ஆகஸ்ட் 23 ஞாயிறு&nbsp; ஆவணி 06</p><h3>சஷ்டி</h3><p>ஆகஸ்ட் 04, செவ்வாய்,&nbsp;ஆடி 19, </p><p>ஆகஸ்ட் 18 செவ்வாய் ஆவணி 01</p><p>சிவராத்திரி ஆகஸ்ட் 11	செவ்வாய்	ஆடி 26</p><h3>பிரதோஷம்</h3><p>ஆகஸ்ட் 10,திங்கள்,ஆடி 25, 
</p><p>ஆகஸ்ட் 25&nbsp; செவ்வாய் ஆவணி 08</p><p>சதுர்த்தி	ஆகஸ்ட் 16	ஞாயிறு	ஆடி 31</p><h3>ஆகஸ்ட் 2026 சுப முகூர்த்த நாட்கள் :</h3><p>ஆகஸ்ட் 23	ஆவணி 06	ஞாயிறு	வளர்பிறை முகூர்த்தம்</p><p>
ஆகஸ்ட் 30	ஆவணி 13	ஞாயிறு	தேய்பிறை முகூர்த்தம்
</p><p>ஆகஸ்ட் 31	ஆவணி 14	திங்கள்	தேய்பிறை முகூர்த்தம்</p><h3>ஆகஸ்ட் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம்:</h3><p>ஆகஸ்ட் 23	ஆவணி 06	ஞாயிறு	காலை 07.23 முதல் காலை 07.59 வரை</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வதென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/can-married-women-shave-their-head-1785758017"></link>
            <id>https://ibcbakthi.com/article/can-married-women-shave-their-head-1785758017</id>
            <summary type="text">பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் தலை தூக்குகிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வேண்டுதல் செய்து கொள்வது உண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் சில சமயங்களில் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் தலை தூக்குகிறது என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கு சில வேண்டுதல் செய்து கொள்வது உண்டு.</p><p> அந்த வகையில், அவர்கள் விரத்தியால் மிகப்பெரிய அளவில் ஒரு பிரார்த்தனை ஒரு வேண்டுதலை வைத்து விடுகிறார்கள்.</p><p> அதில் முக்கியமான ஒன்று மொட்டை அடிப்பது. அப்படியாக, சுமங்கலி பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afcaded-5120-4f04-aa4b-c0a7c44dd596/26-6a708143585d7.webp' /></p><p></p><p>
</p><p> சாஸ்திரப்படி சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது. முடிந்தவரை இவ்வாறான வேண்டுதலை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.</p><p> ஒருவேளை இவ்வாறான வேண்டுதல்கள் அவர்கள் வைத்துவிட்டாலும் மொட்டை அடிப்பதற்கு பதிலாக பூ முடி அதாவது முடியை பாதியை இறைவனுக்கு சமர்ப்ப கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். </p><p>இல்லையென்றால் வேண்டுதல் நிறைவேறி விட்டு மீண்டும் இவ்வாறு வேண்டுதல் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது என்று சொல்கிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/wife-who-rule-their-husband-according-zodiac-sign-1785758465"></link>
            <id>https://ibcbakthi.com/article/wife-who-rule-their-husband-according-zodiac-sign-1785758465</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியை குறிக்கக்கூடிய கிரகமாக சந்திரன் உள்ளார். அவர் அமைந்திருக்கும் வீட்டைப் பொறுத்துதான் அந்த ஜாதகனுடைய மனநிலை மாறுகிறது. அந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசியை குறிக்கக்கூடிய கிரகமாக சந்திரன் உள்ளார். அவர் அமைந்திருக்கும் வீட்டைப் பொறுத்துதான் அந்த ஜாதகனுடைய மனநிலை மாறுகிறது. அந்த வகையில், ஒரு சில பெண்களை பார்த்திருந்தால் அவர்கள் மிகவும் ஆளுமை தன்மையோடு இருப்பார்கள். </p><p>எப்பொழுதும் கணவனை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள். அந்த வகையில், எந்த ராசியில் பிறந்த பெண்கள் கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5ed5de-0e8d-4192-9b2b-fbddf0f53ef6/26-6a7083029b688.webp' /></p><h3>
 சிம்மம்:
</h3><p> இவர்கள் கணவன் சிறியதாக தப்பு செய்தாலும் அதை அவர்களால் மன்னிக்க முடிவதில்லை. கணவனை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், கணவனுடைய ஒவ்வொரு அசைவும் தனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று ஆளுமையோடு அன்போடும் இருக்கக் கூடியவர்கள்.</p><h3>
 கன்னி:
</h3><p> கணவன் பெரிய தப்பு செய்த நேரங்களில் இவர்கள் அதை மன்னித்து விடுவார்கள். ஆனால், சிறிதாக ஒரு தப்பு செய்துவிட்டால் அதை மிகப்பெரிய அளவாக எடுத்துக் கொண்டு கணவனை ஒரு வழியாக்கி விடுகிறார்கள். மேலும், கணவன் எப்பொழுதும் தன் கண் பார்வையிலே இருக்க வேண்டும் என்று அதீத காதல் கொண்டவர்கள் என்றே சொல்லலாம்.</p><p></p><h3>
 மீனம்:</h3><p>
 இவர்களை பொருத்தவரை கணவன் தன் சொல் பேச்சை மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். தன் சொல்லை மீறி கணவன் ஏதாவது ஒரு செயலில் இறங்கி விட்டால் இவர்களால் அதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதில் தவறு நடந்துவிட்டால் நிச்சயமாக அதை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காலம் முழுவதும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T12:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் திசை நடக்கிறதா? இந்த பதிவு உங்களுக்கு தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-do-on-sevvai-dasa-puthi-in-horoscope-1785755151"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-do-on-sevvai-dasa-puthi-in-horoscope-1785755151</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக நாம் 12 கட்டங்கள் இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை வைத்து மட்டும் ஜாதகத்தை கணித்து விடமாட்டோம். தற்போது கிரகங்கள் எந்த நிலையில் இருக்கிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக நாம் 12 கட்டங்கள் இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை வைத்து மட்டும் ஜாதகத்தை கணித்து விடமாட்டோம். தற்போது கிரகங்கள் எந்த நிலையில் இருக்கிறது. மேலும், நமக்கு என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை வைத்து தான் நாம் ஜோதிடத்தை கண்டிக்கின்றோம். </p><p>அந்த வகையில், ஒருவருக்கு செவ்வாய் திசை நடக்கிறது என்றால் அவர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

 ஒருவருக்கு செவ்வாய் திசை நடக்கிறது என்றால் அவர்கள் துர்க்கை, காளி, பத்ரகாளி வனதுர்க்கை போன்ற ஆக்ரோஷமான உக்கிர தன்மையுடன் இருக்கக்கூடிய பெண் தெய்வங்களை வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4830985-851e-4ea3-a312-448192d641d2/26-6a7076113118d.webp' /></p><p></p><p> </p><p>மேலும், செவ்வாய் திசை நடப்பவர்கள் தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலம் ஆகிய 3 மணி முதல் 4.30 மணி வரை இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வது துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று கொடுக்கும்.</p><p> பொதுவாக, செவ்வாய் லக்னத்திற்கு 8ல் அமர்ந்து அவர்களுக்கு விபத்து போன்ற ஏதேனும் கண்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இவர்கள் கட்டாயம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b96f056-4435-4f8b-9227-ea0dcac4541f/26-6a707611e2eb5.webp' /></p><p></p><p> மேலும், சுவாமிக்கு அர்ச்சனை செய்த குங்குமத்தை தொடர்ந்து இவர்கள் நெற்றியில் வைத்து வர ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்கின்ற தோஷம் படிப்படியாக குறைந்து விடும்.</p><p>திருமண தடை விலகும், மங்கலமான விஷயங்கள் வீடுகளில் நடக்கும், அதனால், கட்டாயமாக உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காளியம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாடு மேற்கொண்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையும் சூரியன் ராகு.. இந்த 4 ராசிகளுக்கு சடாஷ்டக யோகத்தால் சிக்கல் வரப்போகிறதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/shadashtak-yog-2026-affects-3-zodiac-till-august17-1785749187"></link>
            <id>https://ibcbakthi.com/article/shadashtak-yog-2026-affects-3-zodiac-till-august17-1785749187</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறு மட்டும் எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது சடாஷ்டக யோகம் உருவாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறு மட்டும் எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது சடாஷ்டக யோகம் உருவாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஜூலை 16ஆம் தேதி முதல் சூரியன் மற்றும் ராகுவால் இந்த யோகம் அசுப யோகம் உருவாகியுள்ளது. </p><p>இதன் தாக்கம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒரு சில ராசிகளுக்கு இருக்க போகிறது. இந்த நேரத்தில் சூரியன் ராகு சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6920943a-197f-4217-8982-11cb204897ad/26-6a705ec521ce7.webp' /></p><p></p><p> </p><h3>
மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு வேலையில் நிலைஇல்லாத தன்மை வரலாம். இந்த காலகட்டங்களில் புதிய திட்டங்கள் துவங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் பொழுது நிதானமாக யோசித்து எடுப்பது அவசியம்.</p><h3>
 துலாம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சவாலாகவே இருக்கப்போகிறது. குடும்பத்தில் பதற்றுமான சூழ்நிலை வரலாம். உங்கள் பேச்சில் ஒரு கடுமை வெளிப்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.</p><p></p><h3>
 கும்பம்:
</h3><p> இவர்களுக்கு அடுத்த முப்பது நாட்கள் மிகவும் கடினமாகவே இருக்கப்போகிறது. இந்த காலகட்டங்களில் உடல் பிரச்சினை மற்றும் வாகனம் ஓட்டும்போது கவனமக இருக்க வேண்டும். மன அமைதிக்கு இவர்கள் யோகா போன்ற கடைபிடிப்பது ஒரு நல்ல நிவாரணத்தை கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:52:15+00:00</updated>
        </entry>
    </feed>
