<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-09-17T13:42:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவக்கிரகங்கள் இல்லாத முக்கியமான 10 சிவாலயங்கள்.. எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/10-sivan-temple-without-navagragam-in-tamilnadu-1789646883"></link>
            <id>https://ibcbakthi.com/article/10-sivan-temple-without-navagragam-in-tamilnadu-1789646883</id>
            <summary type="text">&amp;nbsp; சிவாலயங்கள் என்றால் கட்டாயம் நவக்கிரக சன்னதி இடம் பெற்று இருக்கும். ஆனால், நவகிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் இருக்கிறது. அதில் முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சிவாலயங்கள் என்றால் கட்டாயம் நவக்கிரக சன்னதி இடம் பெற்று இருக்கும். ஆனால், நவகிரகங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான சிவாலயங்களை பற்றி பார்க்கலாம். அதாவது, எங்கெல்லாம் எமன் சிவபெருமானை வழிபாடு செய்தாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருப்பதில்லை.</p><p></p><p> 1. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை</p><p>2. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. </p><p>
3. ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம் உண்டு. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.</p><p>
4. திருவாவடுதுறை இங்கு எமன் சிவனை வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இங்கும் நவரகிரகம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ca2ce5-f874-4846-a55a-8c3013ea4fd1/26-6aabd824d79b0.webp' /></p><p>
</p><p>5. திருப்பைஞ்சீலி, வாழை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் இல்லை.</p><p>
6. திருக்கடையூரில் மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்கு சிவபெருமான் இங்கு மீண்டும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்
</p><p>7. திருமழபாடி திருவையாற்றுக்கு அருகே இருக்கிறது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.</p><p></p><p>
8. திருக்கடையூர் இந்த ஆலயத்தின் தலபுராணம் மிகவும் மாறுபட்டது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து தன் பக்தனை எப்படி நீ எப்படி ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.
</p><p>9. அதனை தொடர்ந்து திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விடப் பழமையானவர்.</p><p>

10. அடுத்து திருப்புரம்பியம் பஸ்தலம். இங்கும் நவக்கிரகம் இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/things-we-should-do-and-dont-on-puratasi-month-1789645778"></link>
            <id>https://ibcbakthi.com/article/things-we-should-do-and-dont-on-puratasi-month-1789645778</id>
            <summary type="text">தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் நிறைவடைந்து நாளை முதல் புரட்டாசி மாதம் துவங்குகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்த இந்த புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் நிறைவடைந்து நாளை முதல் புரட்டாசி மாதம் துவங்குகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்த இந்த புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி திருவேங்கடவனை நினைவுபடுத்தும் சிறப்பு வாய்ந்த காலமாகும். </p><p>புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதமிருந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு பெருமாளுடைய பரிபூரண அருள் கிடைக்கிறது.
அதேபோல், இந்த மாதத்தில் புதன் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்கின்ற பொழுது சனி, ராகு, கேது தொடர்பான தோஷங்கள் யாவும் விலகும்.</p><p> அதோடு, புதன் பகவான் தான் ஒருவருடைய அறிவு, கல்வி, புத்தி கூர்மைக்கு காரணியாக இருக்கிறார். அவரை வழிபாடு செய்கின்ற பொழுது அறிவு மேம்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24509e5-954d-4789-bce3-e55f9ca7c1a8/26-6aabd4c67992e.webp' /></p><p></p><p>
</p><h3> புரட்டாசி மாதத்தில் ஏன் சுபகாரியங்களை தவிர்க்கிறார்கள்:</h3><p>
புரட்டாசி மாதங்களில் நாம் பெரும்பாலும் சுப காரிய நிகழ்ச்சிகளை செய்வதில்லை. அதாவது, புதியதாக வீடு வாங்குதல், தொழில் அல்லது வியாபாரம் துவங்குதல் கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை திருவிழா நடத்துதல் ஆகியவை தவிர்க்கிறார்கள். </p><p>இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதம் அவரையே நினைத்து அவருக்காக வழிபாடு செய்து அவரை நாம் நெருங்கக் கூடிய ஒரு அற்புதமான காலம் என்பதால் இதனை நாம் தவிர்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cf62b3a-1e74-420e-80b5-fe5ac851e626/26-6aabd4c77f075.webp' /></p><p></p><p>
</p><h3> புரட்டாசியில் அசைவம் தவிர்க்க வேண்டும்:</h3><p> புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியம். காரணம், பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதம் ஒரு பக்கம் இருந்தாலும் பருவநிலை மற்றும் மழைக்காலத்தில் துவக்கம் மற்றும் உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உணவு முறைகளை எளிமையாக மாற்றுவதற்கு இது பின்பற்றப்படுகிறது.</p><h3> 
புரட்டாசி சனிக்கிழமைகள்:</h3><p>
2026 ஆம் ஆண்டு புரட்டாசி கிழமைகள் விவரங்கள் பற்றி பார்ப்போம். 
செப்டம்பர் 19, 
செப்டம்பர் 26, 
அக்டோபர் 3, 
அக்டோபர் 10 ,
அக்டோபர் 17, ஆகிய தேதிகளில் வருகிறது. இந்த இடங்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதுபிறவி பாலனைக் கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T11:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் ராசி இதுவா? இந்த குணத்திற்காக தான் உங்களை எல்லோருக்கும் பிடிக்குமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/1-trait-everyone-like-you-according-12-zodiac-1789640144"></link>
            <id>https://ibcbakthi.com/article/1-trait-everyone-like-you-according-12-zodiac-1789640144</id>
            <summary type="text">&amp;nbsp;நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் அவர்களுடைய முக்கியமான குணாதிசயங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இதைத்தான் ஜோதிட ரீதியாக அவர்களுடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நம்மை சுற்றி எல்லோரும் இருந்தாலும் அவர்களுடைய முக்கியமான குணாதிசயங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். </p><p>இதைத்தான் ஜோதிட ரீதியாக அவர்களுடைய ராசி அமைப்பு என்று நாம் சொல்கிறோம். அந்த வகையில் 12 ராசிக்காரர்களையும் ஒருவருக்கு பிடிக்கிறது என்றால் அதற்கான முக்கியமான காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eab8bbb-5e20-481c-8b26-3716cf298020/26-6aabbdd778920.webp' /></p><p></p><p> </p><h3>மேஷம்: </h3><p>இவர்களுடன் இருக்கின்ற பொழுது நமக்கு பயமே வருவதில்லை. ஆதலால், இவர்களுடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவார்கள்.</p><h3> ரிஷபம்: </h3><p>இவர்களுடன் ஒரு முறை பழகினால் போதும் வாழ்நாள் முழுவதும் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.</p><h3> மிதுனம்: </h3><p> இவர்கள் ஒரு முறை பேச ஆரம்பித்தார்கள் என்றால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. </p><h3>கடகம்: </h3><p>இவர்களுடைய உள்ளம் மிகவும் தூய்மையானதாக இருக்கும். அதனால் இவர்களை எல்லோரும் விரும்புகிறார்கள். </p><h3>சிம்மம்:</h3><p>இவர்களுடைய இனம் புரியாத பாசம் இவர்களை எல்லோருக்கும் பிடிக்கச் செய்கிறது.</p><p></p><h3> கன்னி: </h3><p>இவர்களுடன் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல் ஒரு தீர்க்கமான உணர்வு வருகிறது.</p><h3> துலாம்: </h3><p>இவர்களை வெறுப்பதற்கு நமக்கு மனமே வருவதில்லை. </p><h3>விருச்சிகம்:</h3><p> இவர்களை வர்ணிக்க முடியாத அளவு இவர்களுக்கு மிகப்பெரிய ஆளுமை இருக்கும். </p><h3>தனுசு: </h3><p>இவர்களுடன் இருந்தால் போதும் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளலாம். </p><h3>மகரம்: </h3><p>இவர்கள் உழைப்பின் சிகரம். இவர்கள் உழைப்பை விரும்பும் அளவிற்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். </p><h3>கும்பம்: </h3><p>இவர்களுடன் இருந்தால் மன அழுத்தம் குறைந்து சந்தோஷமாக இருக்கலாம். </p><h3>மீனம்:</h3><p> இவர்களைப் போல் கருணையான உள்ளம் கொண்டவர்களை நாம் இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:15:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/amazing-facts-of-madurai-meenakshi-amman-temple-1789631528"></link>
            <id>https://ibcbakthi.com/article/amazing-facts-of-madurai-meenakshi-amman-temple-1789631528</id>
            <summary type="text">இன்று உலகம் முழுவதும் பேசக்கூடிய ஒரு முக்கியமான செய்தி என்றால் 17 வருடம் கழித்து நடக்கக்கூடிய மீனாட்சியம்மன் உடைய கும்பாபிஷேகத்தை பற்றி தான். மதுரையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று உலகம் முழுவதும் பேசக்கூடிய ஒரு முக்கியமான செய்தி என்றால் 17 வருடம் கழித்து நடக்கக்கூடிய மீனாட்சியம்மன் உடைய கும்பாபிஷேகத்தை பற்றி தான். மதுரையை ஆளக்கூடிய பேரரசியாக விளங்கக்கூடிய அம்மா மீனாட்சியின் அருளாசி ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பின்னடைவு என்கின்ற ஒரு நிலையே இல்லை. </p><p>அது மட்டும் அல்லாமல் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு முதல் பூஜையும் மரியாதையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. பிறகு தான் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அப்படியாக இந்த கோயிலின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee6cebc-eacb-4e84-bafe-eff8e81cf1b7/26-6aab9c29dcbd1.webp' /></p><p></p><p> </p><h3>


திருக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி​ தல வரலாறு:</h3><h3>

புத்திர காமேஷ்டி யாகம்: </h3><p>

மலையத்துவச பாண்டிய மன்னனும் காஞ்னமாலையும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அவர்கள் நடத்திய யாகத்தின் அக்னியில் இருந்து மூன்று தனங்களுடன் தோன்றியவள் அன்னை தடாதகை பாராட்டியார். </p><p>ஆனாலும் பிறந்த குழந்தைக்கு மூன்று தனங்கள் இருக்கிறது என்று பெற்றோர்கள் வருத்தம் கொள்ள அசரீரியாக ஒரு குரல், அன்னை மீனாட்சி அம்மன்என்று ஒரு நாள் அவள் மணம் முடிக்கக்கூடிய மணமகனை பார்க்கிறாளோ அன்று இந்த தனம் மறையும் என்றது. 

​</p><h3>அரசாட்சியும் திக்விஜயமும்:
</h3><p>
அம்மா மீனாட்சி சிறுவயதில் இருந்தே போர் கலைகளிலும் நீதி சாஸ்திரங்களையும் கற்று மதுரையின் அரியணை ஏறிய அரசியாகவும் எட்டு திசைகளையும் வென்று கயிலாயத்திற்கு படை எடுத்தாள் என்பத புராணம்.</p><p> அங்கே அவள் அவளுக்குரிய கணவன் சிவபெருமானை பார்த்த கணத்தில் அவருடைய மூன்றாவது தனம் மறைந்தது. பிறகு உணர்கிறார் இவரே என்னுடைய கணவர் என்று. 

சிவபெருமான் அன்னையை மணம் முடித்துக் கொள்வதற்கு ஒரு தேதியை சொல்லி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். </p><h3>


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்:
</h3><p>
பிறகு சிவபெருமான் மதுரைக்கு சுந்தரேஸ்வரராக எழுந்தருளி அன்னை மீனாட்சி தேவியை திருக்கல்யாணம் புரிகிறார். பிறகு மதுரையை ஆளும் மன்னராகவும் அம்மனை முழுமுதற் பேரரசியாக அமைத்து திருவிளையாடல்களை நடத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea1a2260-80d7-49e4-8540-f74764094292/26-6aab9c2a9bcbd.webp' /></p><p>&nbsp;</p><p> </p><h3>


கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புகள்:
​<br>சங்க காலத் தொன்மை:</h3><p>
மீனாட்சி அம்மன் உடைய திருக்கோயில்கள் சிலப்பதிகார முதல் கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களில் இந்த கோவிலின் பெருமைகள் போற்றப்படுகிறது. 


17 ஆண்டுகளுக்குப் பிறகான கும்பாபிஷேகம் — பின்னணியும் சவால்களும்:
ஒரு கோவிலின் ஆகம சாஸ்திர விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். </p><p>ஆனால், இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வழக்கப்படி 2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும். </p><p>ஆனால், 2018 பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாகவும், தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்றுப் பொதுமுடக்கத்தாலும் தள்ளிப்போனது. ​</p><p>சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தை, பழமை மாறாமல் அரிய வகைக் கருங்கற்களைக் கொண்டு செதுக்கிப் புனரமைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது. </p><p>

பிறகு இன்று அன்னைக்கு மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாநகரத்திற்கு மட்டுமல்லாமல் உலகளாவிய இருக்க கூடிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T07:52:21+00:00</updated>
        </entry>
    </feed>
