<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-29T13:08:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-to-remove-negative-energy-at-home-1785328949"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-to-remove-negative-energy-at-home-1785328949</id>
            <summary type="text">ஒருவருக்கு கண் திருஷ்டி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அந்த நபருக்கு கட்டாயமாக வாழ்க்கையில் நிம்மதி என்பது சுத்தமாக இருக்காது. அந்த வகையில், கண் திருஷ்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவருக்கு கண் திருஷ்டி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அந்த நபருக்கு கட்டாயமாக வாழ்க்கையில் நிம்மதி என்பது சுத்தமாக இருக்காது. அந்த வகையில், கண் திருஷ்டி கெட்ட சக்தி மற்றும் தீய சக்திகள் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்கள் பற்றி பார்ப்போம். </p><p>இந்த பரிகாரங்கள் நீங்கள் தொடரும் பொழுது குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்து வழிபாடு செய்யலாம். </p><p>பிறகு ஒரு சுத்தமான தட்டில் கல் உப்பை பரப்பி அதன் மேல் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ccc396-7ac9-4cb5-b56e-ba3cc945b797/26-6a69f5374c475.webp' /></p><p></p><p>கற்பூரம் எரியும் வரை அந்த ஒளியை பார்த்து வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டி எல்லாம் விலகி செல்ல வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.</p><p> பிறகு கற்பூரம் அணைந்த பிறகு தட்டில் இருக்கும் உப்பை தண்ணீர் இருக்கும் ஜக்கில் அல்லது பக்கத்தில் கொட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் உப்பு கரைந்து விடும். பிறகு அந்த தண்ணீரை தொடாமல் அப்படியே வீட்டிற்கு வெளியே சென்று ஊற்றி விடுங்கள். </p><p>இந்த பரிகாரத்தை வாரத்திற்கு ஒரு நாள் என்று மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வீடுகளில் உள்ள பாதிப்புகள் குறைவதற்கு கல் உப்பை தவிர சிறந்த பொருள் நிச்சயம் இல்லை. அதனால் இதை மனதார நாம் செய்யும் பொழுது நம்முடைய வீடுகளில் சூழ்ந்துள்ள தீய சக்திகள் முற்றிலுமாக விலகும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி பெருக்கு எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-things-we-should-and-dont-on-aadi-peruku-1785325573"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-things-we-should-and-dont-on-aadi-peruku-1785325573</id>
            <summary type="text">ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.&amp;nbsp;பொதுவாகவே, ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.</p><p>&nbsp;பொதுவாகவே, ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் உகந்த மாதம் என்பதாக இருக்கிறது.</p><p> இந்த மாதத்தில் பருவகால மாற்றங்கள் மற்றும் சூரிய பகவானுடைய கதிர்வீச்சு காரணமாக உடல் ஆரோக்கியத்தில் சில மாற்றம் உண்டாகும். எனவே பெரிய சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் முன்னெச்சரிக்கையாக சொல்லி இருக்கிறார்கள்.</p><p>மேலும், ஆடி பௌர்ணமி என்பது கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியான ஹயக்ரீவரின் பிறந்த நாளாகவும் சங்கரன்கோவிலில் அம்பாள் சிவனை நோக்கி தபசு செய்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் ஞாபகம் மறதி விலகி அறிவு வளர வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.</p><p></p><p> ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். குறிப்பாக ஆறு மற்றும் நீர் நிலைகளை வணங்கி விவசாய மற்றும் வாழ்வாதாரம் செழிப்பாக வளர பிரார்த்தனை செய்யக்கூடிய நாளாக அமைகிறது.</p><p> இந்த நாளில் சுமங்கலி பெண்கள் தங்களுடைய மாங்கல்யத்தில் மஞ்சள் சரடு கோர்த்து வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கோவில்களில் மாவிளக்கு ஏற்றுவதும் கூழ் ஊற்றுவதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் நாம் நினைத்த வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. </p><p>மேலும், ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zOTWhNtl838?start=49" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T11:46:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.. குபேர ஐஸ்வர்யங்களை பெறும் ராசிகள் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-8-budhan-transit-poosa-nakshtara-palan-1785322194"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-8-budhan-transit-poosa-nakshtara-palan-1785322194</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும். அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும். </p><p>அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c2bf20-5751-4bbb-8321-8b8d78f6f04c/26-6a69dad4209da.webp' /></p><p> </p><h3>

மிதுனம்:
</h3><p> மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானார். ஆதலால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் பாதியில் நின்ற வேலை இவர்களுக்கு நல்ல முடிவை கொடுக்க போகிறது. </p><p>மீடியா மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பொன்னான காலமாக அமையப் போகிறது. எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய காலமாகும். </p><h3>


கன்னி:</h3><p> பூச நட்சத்திரத்தில் புதன் பகவானுடைய சஞ்சாரம் கன்னி ராசிக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த அரசு வேலைகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.</p><p> வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.</p><p></p><h3> 


துலாம்:
</h3><p> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானுடைய பூச நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர்ந்த செல்வாக்கை அளிக்க போகிறது. </p><p>வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:50:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆகஸ்ட் மாதம் மீன ராசியினர் இந்த ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-august-month-pisces-astrology-prediction-1785315393"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-august-month-pisces-astrology-prediction-1785315393</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இந்த ஆகஸ்ட் மாதம் மீன ராசியினருக்கு உடல் பலம் அதிகரிக்க போகிறது. தீரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இந்த ஆகஸ்ட் மாதம் மீன ராசியினருக்கு உடல் பலம் அதிகரிக்க போகிறது. தீராத வியாதிகள் மற்றும் ஏதேனும் உடல் பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து குணமடைவதற்கான வழி பிறக்கும். </p><p>ஜென்ம சனி வக்கிரம் அடைவது இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறார். பணம் முதலீடுகளாக மாறக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். ஆனால், கைகளில் பணம் தங்குவது சற்று கடினமாகவே இருக்க போகிறது, வீடு வாகனம் அல்லது ஆடம்பர செலவுகள் செய்வதற்கான வசதிகள் உண்டாகும், </p><p>ஐந்தாம் இடத்தில் குரு பகவான் உச்சமாக இருப்பதால் இவர்களுக்கு நீண்ட நாட்கள் குழந்தை இல்லை என்று வருந்துபவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து பிரச்சனைகளிலிருந்து குளறுபடிகள் விடுபடும். </p><p>சுக்கிரன் நீசம் அடைவதால் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது குடும்பத்திலும் சமுதாயத்திலும் பிரச்சனையை உண்டு செய்யலாம். </p><p></p><p>இந்த காலகட்டம் நீங்கள் மிகச் சிறந்த நற்பலன்களை பெறுவதற்கு சூரியனார் கோவில் வழிபாடு சிவ வழிபாடு மற்றும் அன்னதானம் செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். </p><p>முக்கியமாக நீங்கள் வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பது சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆகஸ்ட் 15 மற்றும் 16ம் தேதிகளில் மற்றும் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டால் மிகச்சிறந்த நற்பலன்களை கொடுக்கும். </p><p>மேலும், ஆகஸ்ட் மாதம் மீன ராசிகளுக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்த தெரிந்து கொள்வோம்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/V4n_DkqqVEQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T08:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிகளும் ஆடிப் பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-for-12-zodiac-to-do-on-2026-guru-purnima-1785310182"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-for-12-zodiac-to-do-on-2026-guru-purnima-1785310182</id>
            <summary type="text">ஜோதிடத்தில் குரு பகவான் ஒருவருக்கு ஞானம், கல்வி, செல்வம், திருமனையோகம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாக இருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் குரு பகவான் ஒருவருக்கு ஞானம், கல்வி, செல்வம், திருமனையோகம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாக இருந்து விட்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். எந்த தடைகளும் இல்லாமல் அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான அருளை பெறுவார்கள். </p><p>அதனால்தான் ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி பௌர்ணமியை தான் நம் குரு பூர்ணிமா என்று சொல்கிறோம். இந்த நாளில் குரு பகவானை மனதார வழிபாடு செய்தால் நமக்கு குருவினுடைய அருளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். </p><p>மேலும், இன்றைய நாள் குரு பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான ஒரு நல்ல குருமார்களில் அருள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
குரு பூர்ணிமா நாளில் மகரிஷி வியாசரை நினைவுகூர்ந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90002d9f-56f1-4faf-ac71-eaddb78c40d2/26-6a69abe80b528.webp' /></p><p></p><p> </p><p>இந்த நாளில் செய்யப்படும் நல்ல செயல்கள் மற்றும் நேர்மறையான மாற்றங்கள் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும். </p><p>மேலும், ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு திருமண தாமதம், கல்வியில் தொடர்ந்து தடைகள் நல்ல வேலை கிடைப்பதில் தாமதம், பணம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலைமை குழந்தைகள் விஷயங்களில் கவலை பெரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் இருப்பது போன்ற நிலையில் உருவாக்கும்.</p><h3> 


குரு பூர்ணிமா நாளில் என்ன செய்யலாம்?
</h3><p>ஒருவர் ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இந்த ஆடி பௌர்ணமி என்கின்ற குரு பூர்ணிமா நாளில் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிறம் வஸ்திரம், மஞ்சள் பூ, சந்தனம், கடலைப்பருப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073eabfb-3dfb-485d-a6b7-5bdbb5f2689c/26-6a69abe8b2959.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சிவபெருமான ஆலயங்களில் இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தியை இந்த நாளில் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும். அதோடு குரு பகவானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வது சிறந்தது. </p><p>இந்த நாளில் நமக்கு குருவாக ஆசிரியராக இருந்தவர்களை நேரில் சென்று அவர்களை வணங்கி தொழுவது நமக்கு எல்லா பிறவிகளிலும் குரு பகவானின் முழு அருளை பெற்றுக் கொடுக்கும். 

இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது எண்ணற்ற பலன்களை பெற்றுக் கொடுக்கும்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T07:29:49+00:00</updated>
        </entry>
    </feed>
