<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-16T12:26:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்கிடகம் மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலையில் ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-sabarimala-today-temple-reopening-1784201341</id>
            <summary type="text">சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபரிமலை ஐயப்பன் கோவிலில் கர்கிடக மாத பிறப்பை முன்னிட்டு இன்று கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு மாதாந்திர பூஜைகளுக்காக ஜூலை 16 இன்று மாலை 5 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. </p><p>இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கர்கிடக மாத பூஜைகளுடன் சேர்த்து நெய் அபிஷேகம், உஷா பூஜை, உச்ச பூஜை தீபாரதனை, மலர் அபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகளும் நடைபெற உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d6d10aa-68de-4fe2-80ba-b94180f0f3bf/26-6a58c07f5d3f4.webp' /></p><p></p><p> </p><p>கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கும் சிறப்பு பூஜைகளும், தரிசனமும் நடைபெற உள்ளது.</p><p> பிறகு ஜூலை 21 ஆம் தேதி இரவு ஹரிவராசனத்துடன் கோவில் நடை சாற்றப்படுகிறது, மாதாந்திர பூஜைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்து அருள் ஆசி பெறுவதற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T11:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>பிரபா எஸ். ராஜேஷ்</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகம்பாவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்த சிவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/thiruppattur-temple-in-tamil-1732706429"></link>
            <id>https://ibcbakthi.com/article/thiruppattur-temple-in-tamil-1732706429</id>
            <summary type="text">பிரமதேவனுக்குத் தனி சந்நிதி கொண்டுள்ள தேவார வைப்புத்தலமான திருப்பட்டூரில் பிரமனேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் திருபிடவூர் திருப்படையூர் என்றும் அழைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரமதேவனுக்குத் தனி சந்நிதி கொண்டுள்ள தேவார வைப்புத்தலமான திருப்பட்டூரில் பிரமனேஸ்வரர் கோயில் உள்ளது. இவ்வூர் திருபிடவூர் திருப்படையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
</p><h3>
பிரமரேஸ்வரர்</h3><p>
 திருப்பட்டூர் கருவறையில் சிவலிங்கத்திற்கு நாகாபரணம் உண்டு. சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள ஆவுடை இங்குச் சதுர வடிவில் உள்ளது. சிவலிங்கத்தின் மேல் தாரா பாத்திரம் இருந்து சொட்டு சொட்டாக நீர்த்துளி விழுவதால் நித்யாபிஷேக்ம் நடக்கிறது.</p><h3>பிரமநாயகி
</h3><p>பிரம்மதேவன் கௌதம் புத்தர் ஞானம்.பெற்ற போது அவர் முன் தோன்றி உலகுக்கு தர்மத்தை போதிப்பாயாக என்றார். உயர்வும் சிறப்பும் உடையவராக பிரம்ம தேவனை பௌத்தர்கள் வணங்கினர். இவருக்கு எழுப்பப்பட்ட கோயில்கள் பிரம விகார் எனப்பட்டது. </p><p>உடனிருந்த பெண் பிரம் நாயகி எனப்பட்டாள். பிரம் விஹார்கள் சிவன் கோயிலாகிய பிறகும் கூட கருவறை சிவனின் பெயர் மாறியது. ஆனால் அம்மனின் பெண் பெயர்பிரமநாயகியாகவே இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e60d866-2978-4e5c-9203-ed959e4a5e74/24-674702140bdbf.webp' /></p><h3>ஸ்தலபுராணக் கதை</h3><p>
அகம்பாவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்த சிவன் இனி நீ படைத்தல் தொழிலை செய்யக் கூடாது என்று சபித்தார். சிவபெருமானின் அருளைத் தேடி பிரம்மதேவன் இவ்வூருக்கு வந்து பிரம தீர்த்தத்தில் குளித்து 12 லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.</p><p> அவர் தவத்துக்கு மனமிரங்கிய சிவபெருமான் மகிழ மரத்தடியில் காட்சியளித்தார். மீண்டும் படைத்தல் தொழிலைச் செய்யும் படி பிரம்மனிடம் ஆணையிட்டார் எனவே இங்கு பிரம்ம தேவனுக்கு தனி சந்நிதி உண்டு. சிவபெருமானும் பிரம்மரேச்வரர் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;</p><h3>கோயில் விவரம்</h3><p>
திருப்பட்டூரில் அம்பாளின் பெயர் பிரமநாயகி. இங்கு பதஞ்சலி முனிவர், வியாக்கரபாதர், காசியப முனிவர் ஆகியோரும் உள்ளனர். திருப்பட்டூர் பிரம்மரீஸ்வரர் கோவிலுக்கு அருகே கைலாசநாதர் கோவில் கற்றளியாக விளங்குகின்றது.</p><p></p><p>
</p><h3>
தீர்த்தங்கள்</h3><p>
திருப்பட்டூரில் இரண்டு தீர்த்தங்கள் உண்டு. பிரம்மதேவன் இத்திருத்தலத்தில் தினமும் குளித்து தன் சாபம் தீர்க்க தீர்க்கும் படி சிவபெருமானிடம் வேண்டினார். அது பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. நன்னீர் குளமாக படித்துறைகளுடன் விளங்குகின்றது. </p><p> மகிழ மரத்தைத் தெலுங்கில் வகுளம் என்பர். இங்கு முன்பு மகிழ மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்த தீர்த்தம் வகுளதீர்த்தம் ஆகும். தற்போதும் இத்தீர்த்தம் சோலைகளுக்கு நடுவே நான்கு படித்துறைகளுடன் கோவிலுக்கு வடக்கு புறத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b2ec81-73db-4b1a-97f4-66ff0ffd3f2a/24-67470214872ce.webp' /></p><h3>நன்மைகள் நடக்கும்</h3><p>
திருப்பட்டூருக்கு வரும் பக்தர்கள் 36 தீபங்களை ஏற்றி கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தடை தாமதங்கள் விலகும். தொழிலில் மேன்மையும் குடும்பத்தில் அமைதியும் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி நன்மைகளைக் கொடுக்கும். குடும்ப சாபம் விலகும். பெண் சாபம் இருந்தாலும் தீரும்.</p><h3>பிரம்மனுக்குக் கோயில்</h3><p> 
மும்மூர்த்திகளில் சிவனுக்கு சைவக் கோவில்களும் பெருமாளுக்கு வைணவக் கோவில்களும் உள்ளன ஆனால் பிரம்மதேவனுக்கு மட்டும் கோவில் கிடையாது. அடிமுடி தேடிய கதையில் பொய் சொல்லியதால் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று இங்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. </p><p>வடநாட்டில் பிரம்மனுக்கு கோயில் கூடாது என்று மனைவி சபித்ததாக வேறு ஒரு காரணம் சொல்லப் படுகிறது. 

 பொதுவாக தானுமாலயன் கோவில் போன்ற சில தளங்களில் சிவலிங்கங்கள் மும்மூர்த்தியாக வழிபடப்படும். இதில் பிரமனும் இடம்பெறுவார்.</p><p> தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று முகங்கள் (நான்கு முகங்களைக்) கொண்ட சிவலிங்கங்கள் கருவறையில் காணப்படுவதுண்டு. சிவலிங்கத்தின் அபிஷேக நீர் வெளியே விழும் தூம்பின் அருகே கோஷ்ட மூர்த்தியாக பிரமன் காட்சி தருகிறார். </p><p>கோபுரத்தின் மேற்கு பகுதியில் பிரமன் காணப்படுவார். ஆனால் மும்மூர்த்திகளில் பிரம்ம தேவனுக்கு மட்டும் என்று என்டனக் கோயிலும் இல்லை. பிரமனின் சாபம் தீர்த்த சிவன் கோயில்களில் பிரமனுக்குத் தனி சந்நிதி உள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c871055-fc35-43c5-b20d-d5f12f42db73/24-6747021507491.webp' /></p><h3>பிரம்ம விஹார்
</h3><p>பிரம்ம விகாரைகள் என்று பௌத்தர்களால் பிரம்ம தேவனுக்கு கட்டப்பட்ட கோவில்கள் இன்று இல்லை. பிரம்மதேவன் பௌத்த சமயத்தில் தர்ம பாலராக கருதப்பட்டார். அவரே தர்மத்தின் காவலர் ஆவார். தர்ம காரியங்களைச் செய்ய தடையாக இருப்பவர்களை அவர் தண்டிப்பார்.</p><p> தர்மவழியில் இவ்வுலகம் செல்ல வேண்டும் என்பதை அற ஆழி என்றும் தர்மச்சக்கரம் என்றும் பௌத்த சமயம் எடுத்துரைத்தது. தாய்லாந்தில் தங்க கவசம் இட்ட பிரம்மதேவன் சிலை உள்ளது. பௌத்தம் செழித்த கிழக்காசிய நாடுகளில் பிரம்மன் முக்கியத் தெய்வமாக வணங்கப்படுகின்றார். </p><p>இங்கும் பிரம்ம விஹார்களில் பிரம்மதேவன் நான்கு முகங்களுடன் நான்கு கைகளில் உடுக்கை, தண்டம் ஏந்தி சிலை வடிக்கப்பட்டார். பிரம்மாவின் பல இயல்புகள் பின்னர் சிவபெருமானுக்கு உரியனவாக மாற்றப் பெற்றன.&nbsp;</p><p></p><h3>ராஜஸ்தானில் பிரம்மா மந்திர்
</h3><p>வட இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் என்ற ஊரில் பிரம்மதேவனுக்கு ஜகத் பிதா பிரம்ம மந்திர் என்ற பெயரில் தனிக் கோவில் உள்ளது. இக்கோவில் உலகின் முதல் 10 சம்யுத் தலங்களில் ஒன்றாகும். இதனை 14 ஆம் நூற்றாண்டில் விசுவாமித்திரர் கட்டினார் என்றும் பின்பு 16ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் புதுப்பித்தார் என்றும் கூறுவர். </p><p>750 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல 650 படிக்கட்டுகள் பளிங்கினால் கட்டப்பட்டுள்ளன. பிரம்மா நான்கு முகங்களுடன் நான்கு கைகளுடன் சௌமூர்த்தியாக குறுக்குக் காலிட்டு (ஐயப்பன் ரூபத்தில்) அமர்ந்திருக்கின்றார். இவருக்கு இருபுறமும் சாவித்திரி, காயத்ரி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர்.&nbsp;</p><p>ராஜஸ்தான் புஷ்கர் கோயில் கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று விடிய விடிய பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து அங்கு உள்ள குளத்தில் குளித்து பிரம்ம தேவனை வழிபட்டு செல்வார்கள். கார்த்திகை பௌர்ணமி இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b25d7449-bdda-4aec-a241-a0d76195a0af/24-674702157ac5b.webp' /></p><h3>பத்ம புராணம் கூறும் கதை</h3><p>
இக்கோவிலுக்கான தல வரலாறு ஒன்று உள்ளது. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பத்ம புராணத்தில் வஜ்ரநாபா என்ற அரக்கனைக் கொன்ற பாவம் தீர தான் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிரம்மதேவன் தேடினார். பிரம்மதேவனின் கையில் இருந்த தாமரை பூ விழுந்த இடமே புஷ்கர் என்ற இந்த இடமாகும்.</p><p> இங்கு அவர் அமர்ந்து யாகம் செய்ய முடிவு செய்தார். அவ்வாறு யாகம் செய்வதற்கு அவருடன் சேர்ந்து மனைவி ஸ்தானத்தில் அமர சாவித்திரி இல்லை என்பதால் உள்ளூரில் குர்ஜார் இனத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை மணந்து அவளுடன் சேர்ந்து அமர்ந்து யாகத்தை செய்து முடித்தார். பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்.
</p><h3>மனைவியின் சாபம்
</h3><p>பிரம்ம தேவன் காயத்ரியை மணந்த காரணத்தினால் சாவித்திரி
கோபம் கொண்டாள். பிரம்ம தேவனுக்கு இங்கு மட்டுமே கோவில் இருக்க வேண்டும் வேறு எங்கும் கோவில் இருக்கக் கூடாது என்று பிரம்மனின் மனைவி சாவித்திரி சாபமிட்டாள். இதனால் பிரமதேவனுக்கு வடநாட்டில் கோயில்கள் இல்லை.</p><p></p><p> </p><h3>

காஞ்சியிலும் மனைவி சாபம்
</h3><p>யாகத்துக்குத் தன்னை அழைக்காததால் பிரமதேவனை அவர் மனைவி சபித்தார் என்ற கதை 
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் புராணக் கதையிலும் உண்டு. சரஸ்வதி கடுங்கோபமுற்று தண்ணீரால் பிரமனின் யாகத் தீயை அணைத்தாள். (சரஸ் என்றால் வடமொழியில் தண்ணீர்) .</p><p> யாகசாலையை இருட்டாக்கினாள். பிரம்மதேவன் திருமாலின் உதவியை நாடினார். சரஸ்வதி கருங்காளி உருவில் வந்து திருமாலுடன் போரிட்டுத் தோற்றாள். திருமால் தீபப் பிரகாசகராக யாகசாலைக்கு ஒளி ஊட்டினார். .கருங்காளியின் கோயில் காஞ்சிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. காஞ்சி வரதராஜர் கோயில் பழைய பிரம்ம விஹார் என்பதற்குரிய ஆதாரம் இக்கதையில் பொதிந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h3>&nbsp;ஆந்திராவில் பிரமதேவன் கோயில்
</h3><p> ஆந்திராவில் ராஜாவாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர் செபரோலு என்ற இடத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய பிரம்மா சிலையைப் பிரதிஷ்டை செய்தார். இச்சிலை சதுர்முக பிரம்ம சிலையாகும். இங்குப் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcdfeb3f-73a1-44cb-a9f6-2c418f31c8e9/24-67470215efb73.webp' /></p><p>
</p><h3>
கேரளாவில்</h3><p> கேரள மாநிலத்தில் திருநாவா என்ற ஊரில் பிரம்ம தேவனுக்கு கோவில் உள்ளது. இம்மாநிலத்தின் மிக நீண்ட நதியான பாரதப்புழா நதியின் தென் கரையில் பிரம்மனுக்குக் கோவில் உள்ளது. வடகரையில் நவமுகுந்தன் கோவில் என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு கோவில் உள்ளது.</p><p> இக்கோயில்கள் பிரம்ம சத்திரியன் என்று அழைக்கப்பட்ட பரசுராமர் கட்டிய கோவில்கள் ஆகும். பரசுராமனின் குருவாக பிரம்மதேவன் விளங்கியதால் அவர் பிரம்மாவுக்கு என்று தனிக் கோவில் கட்டியுள்ளார். கோவிலில் நவ யோகிகள் இருந்ததாகவும் ஓர் வரலாறு உள்ளது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.&nbsp;</p><p></p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">பிரம்மா படைப்புக்கடவுளான கதை</span></h3><p>
 பிரம்மா படைப்புக்கடவுளாக விளங்குவதற்கு ஒரு பழங்கதை உண்டு. உலகெங்கும் உள்ள ஆதிச்சமயங்களில் உலகத்தின் தோற்றம் பற்றிய கதைகளும் ஆதி தாய், தந்தை பற்றிய கதைகள் உண்டு. அதுபோல இங்கும் ஒரு கதை வழங்குகிறது. பிரம்மா சதருபாவை விரும்பினார். </p><p>அவளைக் காண்பதற்காக நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை கொண்டிருந்தார். சத ரூபா பிரம்மாவிடம் இருந்து தப்பிக்க விலங்குகளாகவும் பறவைகளாகவும் 100 உருவங்களை எடுத்தாள். பிரம்மாவும் அதை போலவே 100 பறவைகளாகவும் விலங்குகளாகவும் ஆன் உருவம் எடுத்தார். </p><p>இப்படித்தான் உலகில் அநேக விலங்குகளும் பறவைகளும் படைக்கப்பட்டன. பின்பு இருவரும் இணைந்து பல கோடி ஆண்டுகள் இன்புற்று இருந்தனர்.&nbsp; &nbsp;</p><h3>சதருபாவால் சாபம் பெற்ற பிரம்மா</h3><p>
சத ரூபா - பிரம்மா காதல் கதை 
இந்துமதத்தில் வேறு வடிவம் பெற்றஸ்து. பிரம்மா தான் படைத்த தன் மகளான சத ரூபாவை நேசித்ததால் சிவன் பிரம்மாவின் தலையை கொய்தார். இவ்வாறு வெட்டுப்பட்ட தலை வந்து சிவனின் கையை கவ்விக்கொள்ள அந்த கையுடன் முடிவற்ற பயணத்தில் அவர் காலபைரவனாக அலைந்து கொண்டிருகிறார்.&nbsp;&nbsp;</p><h3>மது அருந்தும் பிரமனின் கபாலம்</h3><p>
உஜ்ஜயினியில் உள்ள காலபைரவர் கோவிலில் சிவலிங்கத்தின் தலை இல் உள்ள கபாலத்தில் அதிகாலை நான்கு மணி பூஜையின் போது மதுவை ஊற்றுவர். பின்பு வாய அருகிலும் மது கலசத்தை வைப்பார்கள். அதற்கு முன்பு சுடுகாட்டு சாம்பலால் இந்த சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும். </p><p>அபிஷேகம் முடிந்ததும் மதுவை வார்ப்பர். சிவலிங்கம் மதுவில் பாதியைப் பருகிவிடும். மீதி மது அப்போது பூஜையில் கலந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்&nbsp;</p><p></p><h3>பார்வதியால் தலை இழந்த பிரம்மன் </h3><p>
பிரம்மனுக்கு நான்கு தலைகள் இருப்பதற்கு சைவ சமயத்தில் இன்னொரு கதை உண்டு. இக்கதை பிரம்மனை தகுதி இழப்புச் செய்யும் சைவ சமயக் கதை ஆகும். ஒரு காலகட்டத்தில் சிவனுக்கும் ஐந்து முகம் பிரம்மனுக்கும் ஐந்து முகம் இருந்தது . பிரம்ம தேவனை சிவன் என்ற கருதி பார்வதி அவனைக் கட்டி அனைத்தாள். அதனால் சிவ பெருமான் கோபம் கொண்டார். </p><p>பிரம்மனுக்கும் தனக்கும் வேறுபாடு தெரிய வேண்டும் என்பதற்காக பிரம்மதேவனின் ஒரு தலையை வெட்டிப் போட்டார். பிரம்மனின் தலை சிவபெருமானின் கையைப் பற்றிக்கொள்ள அவர் பிரம்மஹத்தி தோஷத்தோடு அலைந்ததாகவும் பின்பு சாப விமோசனம் பெற்றதாகவும் கதைகள் உள்ளன.</p><h3>சைவத்தில் பிரமன் பொய்காரன்</h3><p>
இந்திரன், பிரமன், சந்திரன் போன்ற பௌத்த கடவுளரைப் பற்றிக் கேவலமான கதைகள் சைவப் புரட்சியின் போது பரப்பபட்டன. . சிவபெருமானின் அடிமுடி தேடிய கதையில் பிரம்மதேவன் பொய் சொல்லி ஆக்கப்பட்டான். சிவபெருமானின் திருவடிகளை வராக ரூபத்தில் திருமால் தேடிச் சென்றார். பிரம்மதேவன் அகம்பாவத்தில் சிவபெருமானின் உச்சித்தலையைக் காண விரும்பி மேலே அன்னப்பறவை ரூபத்தில் பறந்து சென்றார்.</p><p>எவ்வளவு உயரம் பறந்தாலும் அவரால் சிவபெருமானின் உச்சியைப் பார்க்க முடியவில்லை. அப்போது அவர் சிவனின் தலையில் இருந்து கீழே விழுந்து கொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்து பிரமன் தான் சிவனின் உச்சியைப் பார்த்து விட்டேன் என்று தனக்காக பொய் சாட்சி சொல்லும்படி அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் வந்தார்.
</p><p>' நான் உங்கள் உச்சி தலையை பார்த்து விட்டேன்' என்றார் 'அதற்கு சாட்சி இதோ இந்த தாழம்பூதான்' என்று சொல்லவும் சிவபெருமான் கோபம் கொண்டு 'பொய் சொன்ன உனக்கு போஜனம் கிடையாது உனக்கு எங்கேயும் கோவிலும் கிடையாது நைவேத்தியமும் கிடையாது' என்று பிரம்மனுக்கு சாபம் இட்டார். </p><p>பொய் சாட்சி சொன்ன தாழம்பூவிடம் 'வழிபடு பொருளாகும் தகுதியை நீ இழந்து விட்டாய்' என்று சாபம் கொடுத்தார்.
தாழம்பூ எந்தசிவன், விஷ்ணு கோவிலிலும் பூஜைப் பொருளாக பயன்படுத்தப்பட மாட்டாது. ஆனால் நாகதேவன் கோவிலில் மட்டும் தாழம்பூ நாகத்திற்கு பிரியமான பொருள் என்பதால் படைக்கப்படும்.</p><p></p><p>

 ஆக பௌத்தர்கள் தங்களுடைய முதன்மை தெய்வமாக வணங்கி வந்த பிரம்ம தேவனுக்கு மடாலயங்களில் பிரம்ம விகாரைகள் என்று தனி சந்நிதி. எழுப்பி இருந்தவர். சைவ சமயப் பேரெழுச்சி ஏற்பட்டபோது அதுவரை வழிபடு தெய்வங்களாக இருந்து வந்த இந்திரனை பெண் மோகம் பிடித்தவன் என்றும் பிரம்ம தேவனை பொய் காரன் என்றும் புதிய கதைகளை எழுதி அவர்களின் வழிபடு தகுதியை குறைத்து விட்டனர்.</p><p> எனவே பிரம்மதேவனுக்குத் தனி கோவில்கள் கிடையாது. மிக அரிதாக ஒரு சில ஊர்களில் மட்டும் பிரம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அங்கேயும் பிரம்மன் சபிக்கப்பட்டவனாகவும் அக்கோயில் 
 அவனுடைய சாபம் தீர்த்த தலமாகவும் சிவனே முழுமுதற் கடவுளாகவும் கருவறை தெய்வமாகவும் விளங்கி வருகின்றார். 
அத்தகைய ஒரு கோயில் தான் திருப்பட்டூரில் உள்ள பிரம்மரேஸ்வரன் கோயில்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்</u></b></a> இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T10:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 5 ராசியில் பிறந்தவர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/which-zodiac-spend-more-money-unwantedly-1784197126"></link>
            <id>https://ibcbakthi.com/article/which-zodiac-spend-more-money-unwantedly-1784197126</id>
            <summary type="text">ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியினர் பணத்தை எப்படி செலவழிப்பார்கள்/ யார் அதிகமாக செலவழிப்பார்கள்? ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, எந்த ராசியினர் பணத்தை எப்படி செலவழிப்பார்கள்/ யார் அதிகமாக செலவழிப்பார்கள்? யார் பணத்தை சிக்கனமாக சேமித்து வைத்துக் கொள்வார்கள் என்பதை பற்றி பார்ப்போம். </p><h3>
மேஷம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் யோசிக்காமல் செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> ரிஷபம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் சிக்கனமாக கவனமாக பாதுகாக்க கூடியவர்கள்.</p><p>P5E26UP</p><h3> 
மிதுனம்:
</h3><p> இவர்கள் தேவையானதை மட்டும் வாங்குவார்கள். அதற்கு மட்டுமே இவர்கள் பணம் செலவு செய்வார்கள்.
</p><h3> கடகம்:</h3><p>
 இவர்கள் குடும்பத்திற்காகவே அதிக பணத்தை செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> சிம்மம்:
</h3><p> இவர்கள் பணத்தை எப்பொழுதும் ராஜாவைப் போல் செலவழிக்க கூடியவர்கள்.
</p><h3> கன்னி:</h3><p>
 இவர்கள் செலவழிக்க கூடிய பணத்திற்கு ஒவ்வொன்றுக்கும் கணக்கு கேட்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f829998-603c-4c0d-ace4-83a7cde34763/26-6a58b0080acfb.webp' /></p><p> </p><h3>துலாம்:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் செலவிற்கும் சேமிப்பும் சரியாக செய்வார்கள்.
</p><h3>விருச்சிகம்:</h3><p>
 இவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எப்பொழுதும் பணத்தை சேமித்துக் கொண்டே இருப்பார்கள்.
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களுக்கு எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பது பிடிக்கும். அதனால் தண்ணீர் போல் இவர்கள் பணத்தை செலவழிப்பார்கள்.</p><h3> 
மகரம்:
</h3><p> இவர்கள் எப்பொழுதும் பணத்தை முதலீடு செய்வது எப்படி? அதை இரட்டிப்பாகுவது எப்படி என்பதை பற்றியே சிந்திப்பார்கள்.</p><h3>
 கும்பம்:
</h3><p> இவர்கள் பணம் கைகளில் இருந்தால் புதிய பொருட்களை வாங்கி மகிழ ஆசைப்படுவார்கள்.
</p><h3> மீனம்:
</h3><p> இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து இவர்களுடைய பணத்தை கரைத்து விடுவார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T10:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: ஆடி மாசம் வீசப்போகும் அதிரடி ஜாக்பாட்.. எந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/2026-3-zodiac-who-get-luck-in-aadi-month-1784191911"></link>
            <id>https://ibcbakthi.com/article/2026-3-zodiac-who-get-luck-in-aadi-month-1784191911</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. அந்த வகையில், ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. அந்த வகையில், ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையும் புதிய மாற்றங்களை கொண்டு வர கூடிய காலமாக பார்க்கப்படுகிறது.
</p><p>இந்த காலகட்டங்களில் கிரகங்களுடைய சஞ்சாரம் மற்றும் அவற்றின் பார்வை ஒரு சில ராசிகளுக்கு எதிர்ப்பாராத அதிர்ஷ்டம், பணவரவு, தொழிலில் வளர்ச்சி நீண்ட நாள் தடைபட்ட பணம் ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.

குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய பொற்காலம் ஆரம்பம் அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">விருச்சிகம்:</span></p><p> விருச்சிக ராசியினருக்கு ஆடி மாதம் மிகப்பெரிய அளவில் யோகத்தை பெற்றுக் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய தொகை கைகளுக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் அதிகரிப்பால் நல்ல லாபத்தை பெறுவீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டு.
</p><h3> 
ரிஷபம்:
</h3><p> ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகப்பெரிய அளவில் நன்மையை வந்து சேர போகிறது. நீண்ட நாட்கள் தடைபட்ட காரியம் மற்றும் தொழிலில் வளர்ச்சி வெளிநாட்டு தொடர்பான வருமானம் இதையெல்லாம் இவர்களுக்கு இந்த காலகட்டம் மிக சிறப்பாக வந்து சேர போகிறது. வீடு வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் உருவாகும்.</p><p></p><p>
</p><h3> 
சிம்மம்:
</h3><p> சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகச் சிறந்த அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக சந்தித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட போகிறீர்கள். நீங்கள் முயற்சி செய்யக் கூடிய காரியங்கள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். முதலீடு செய்யும் பொழுது நல்ல லாபத்தை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><u> I<b>BC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </b>இ</u></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T08:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: நாளை ஆடி முதல் வெள்ளியில் பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/8-things-women-must-do-on-aadi-first-friday-1784186540"></link>
            <id>https://ibcbakthi.com/article/8-things-women-must-do-on-aadi-first-friday-1784186540</id>
            <summary type="text">ஆடி மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. ஆடியில் வரக்கூடிய வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். அந்த வகையில், இந்த வருடம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் மிகச் சிறந்த மாதமாக இருக்கிறது. ஆடியில் வரக்கூடிய வெள்ளி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். </p><p>அந்த வகையில், இந்த வருடம் ஆடிப்பிறப்பு வெள்ளிக்கிழமை அன்று வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.</p><p></p><p>
</p><p>1. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று கட்டாயமாக பெண்கள் வீடுகளில் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
</p><p>2. ஆடி மாதம் அம்மன் மற்றும் மகாலட்சுமி தேவிக்கு உகந்த மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர் அல்லது செம்பருத்தி மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்வது அவசியம்.
</p><p>3. பிறகு பூஜை அறையில் மகாலட்சுமியின் திரு உருவ படத்திற்கு முன்பாக அமர்ந்து "ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்றுக் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31d348ce-d62e-4ee4-a7eb-89b6aecfb3d9/26-6a5886ae3fffe.webp' /></p><p>
4. இந்த நாளில் முடிந்தவர்கள் கட்டாயமாக சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.</p><p>
5. பெண்கள் இந்த நாளில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு ஆகிவற்றை பிற பெண்களுக்கு வழங்குவது மகாலட்சுமி தாயாரின் முழு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.</p><p>
6. இந்த நாளில் கட்டாயமாக வீட்டில் முன்பாக அரிசி மாவில் கோலம் போடுவது மிக மிகவும் மங்களகரமானது.</p><p></p><p>
7. அன்றைய தினம் கட்டாயமாக வீடுகளில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும்.
</p><p>8. இந்த நாளில் நம்முடைய வசதிகளுக்கு ஏற்ப தான தர்மம் செய்வது புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும்.
</p><p> ஆக, நாளைய தினமான முதல் ஆடி வெள்ளிக்கிழமையை இந்த விஷயங்களை செய்து இறைவனின் முழு ஆசீர்வாதத்தை பெற தவறாதீர்கள்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T07:22:37+00:00</updated>
        </entry>
    </feed>
