<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">IBC Bakthi | Explore the Temples of Tamilnadu, India and Global</title>
    <subtitle type="html"><![CDATA[IBC Bakthi is a website that offers information, stories, videos, and 360 views of various temples in Tamilnadu, India and Global. You can learn about the history, architecture, festivals, and rituals of Hindu temples, as well as see the live aarti and darshan of the deities. Whether you are a devotee, a pilgrim, or a tourist, IBC Bakthi will help you discover the spiritual and cultural richness of India.]]></subtitle>
    <link href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <id>https://ibcbakthi.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://ibcbakthi.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/ib/img/logo.png</logo>
            <updated>2026-07-12T14:13:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய ராசி பலன் (13-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-13-2026-monday-1783855716"></link>
            <id>https://ibcbakthi.com/article/indraya-rasi-palan-july-13-2026-monday-1783855716</id>
            <summary type="text">மேஷம்:
சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். குழந்தைகளுடன் பிடித்த நேரத்திற்கு செல...</summary>
            <content type="html"><![CDATA[<h3>மேஷம்:
</h3><p>சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். குழந்தைகளுடன் பிடித்த நேரத்திற்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.</p><h3>
ரிஷபம்:
</h3><p>நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும். பெற்றோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். </p><h3>
மிதுனம்:
</h3><p>ஒரு சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம். வேலையில் இடமாற்றம் மற்றும் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும் நாள். இருப்பினும் மன குழப்பம் மதியம் இருக்கலாம் பிறகு சரி ஆகும்.</p><p></p><p>
</p><h3>கடகம்:
</h3><p>மனதில் புதுவித சிந்தனை தோன்றும். எதையும் சமாளித்து கொள்ளலாம் என்று தோன்றும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.</p><h3>
சிம்மம்:
</h3><p>வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும். எந்த விஷயம் செய்யும் முன் பலமுறை யோசித்து ஆலோசனை செய்து முடிவு செய்வது அவசியம்.</p><h3>
கன்னி:
</h3><p>உங்களுக்கு குடும்பத்தின் மீது வெறுப்பு உண்டாகலாம். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். உணவு விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">துலாம்:</span></p><p>இன்று வேலை பளு அதிகரிக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.</p><p></p><h3>
விருச்சிகம்:
</h3><p>வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஆரோக்கியத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவை இல்லாமல் பேசாதீர்கள்.
</p><h3>தனுசு:
</h3><p>குடும்பத்தில் நற்செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.</p><h3>
மகரம்:
</h3><p>மனசோர்வு நீங்கும். வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வழக்கு விஷயங்களில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். முக்கியமான நபரிடம் பரிசு பெறுவீர்கள்.</p><h3>
கும்பம்:
</h3><p>சினமா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு புதிய நட்புகள் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. </p><h3>
மீனம்:
</h3><p>யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று நிதானம் கடைப்பிடித்து பேசினால் நல்ல நாளாக அமையும். குடும்ப விஷயங்களை பற்றி மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குலதெய்வ வழிபாடு மனக்குழப்பம் குறைக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/what-is-brahmotsavam-in-hindu-temple-festival-1783855409"></link>
            <id>https://ibcbakthi.com/article/what-is-brahmotsavam-in-hindu-temple-festival-1783855409</id>
            <summary type="text">நாம் எல்லோருமே பிரம்மோற்சவம் என்ற வார்த்தையை கேள்விபட்டிருப்போம். ஆனால், பிரம்மோற்சவம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.  ``ஸவ’’ என்றால் வடமொழியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் எல்லோருமே பிரம்மோற்சவம் என்ற வார்த்தையை கேள்விபட்டிருப்போம். ஆனால், பிரம்மோற்சவம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். </p><p> ``ஸவ’’ என்றால் வடமொழியில் "உலக கவலைகள் அல்லது பிறவித்துயர் என்ற பொருள் கொண்டது. "உத்" என்றால் மேல் நோக்கி உயர்த்துவது, அதாவது துன்பங்களிலிருந்து நீங்குவது என்பது அர்த்தமாகும். மனிதர்கள் உலகியல் வாழ்க்கையில் கவலைகள் மற்றும் துக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுடைய மனதை ஆன்மீக பாதையில் அழைத்து செல்வதற்கு நடைபெறும் உன்னதமான நிகழ்வே உற்சவம் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5655013b-c198-456f-b501-4ad4c0ebe2a8/26-6a537932ed1fd.webp' /></p><p></p><p> </p><p>

அப்படியாக, ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமான உற்சவங்கள் நடக்கும். அதில் ஆண்டுக்கு ஒரு முறை பெரிய உற்சவமாக நடத்தக்கூடிய உற்சவத்தை தான் நாம் பிரம்மோற்சவம் என்று அழைக்கின்றோம். "பிரம்ம" என்ற சொல்லுக்கு பெரிய அல்லது முதன்மையான என்பது பொருளாகும்.</p><p> </p><p>ஒரு ஆலயத்தில் நடைபெறுகின்ற அனைத்து திருவிழாக்களிலும் தலைசிறந்த மிகப்பெரிய உற்சவத்தை குறிக்கக்கூடிய பெயர் இந்த பிரம்மோற்சவ ஆகும். இறைவனுக்கு பிரம்மம் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த பிரம்மத்தை தெரிந்து கொள்வதற்கான உற்சவம் என்றே நாம் சொல்லலாம்.</p><p> புராணங்களின் அடிப்படையில் உலக நன்மைக்காகவும் மனிதர்களின் பாவங்களை போக்குவதற்காகவும் பிரம்மதேவன் முன் நின்று முதன் முதலில் திருவெங்கடவனுக்கு நடத்திய பெருவிழா என்பதால் இது "பிரம்மோற்சவம்" என்று அழைக்கப்படுகிறது.</p><p> இன்றளவும் பெருமாள் ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடக்கும் போது பிரம்மன் அருவமாக அதாவது நம்முடைய கண்களுக்கு தெரியாமல் அந்த விழாவை நடத்துகிறார் என்பது ஐதீகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770184cd-a20f-4ef7-a1df-e6e91ca73643/26-6a537933ab507.webp' /></p><p></p><p> </p><p>ஆகம விதிகளின் அடிப்படையில் இந்த பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆலயங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெவ்வேறு மாதங்களில் நடைபெறுகிறது. அந்தந்த தல மூர்த்திகளுக்கு ஒவ்வொரு நட்சத்திர உண்டு. அந்த நட்சத்திரங்களை ஒட்டி பிரம்மோற்சவம் வைபங்கள் நடைபெறும். </p><p>உதாரணமாக, திருமலையை எடுத்துக் கொண்டால் புரட்டாசி திருகோணத்தை ஒட்டி பிரம்மோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். காரணம், புரட்டாசி திருவோணம் திருமலை அப்பன் நட்சத்திரம், ஸ்ரீமுஷ்ணத்தில் சித்திரை மாதம் நடக்கும். சில இடங்களில் பங்குனி மாதம் நடக்கும். இவ்வாறு அந்தந்த கோவில்களுக்கு ஏற்ப இந்த பிரம்மோற்சவம் மாறுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற <a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T12:00:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் பிறந்த கிழமையே உங்கள் பலம்.. உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மற்றும் பரிகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/remedies-and-lucky-color-according-born-day-1783852669"></link>
            <id>https://ibcbakthi.com/article/remedies-and-lucky-color-according-born-day-1783852669</id>
            <summary type="text">ஒவ்வொருவர் பிறந்த கிழமை அடிப்படையில் நாம் அதற்குரிய ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்கின்ற பொழுது நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக, எந்த கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொருவர் பிறந்த கிழமை அடிப்படையில் நாம் அதற்குரிய ஆன்மீக வழிபாட்டை மேற்கொள்கின்ற பொழுது நமக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கிறது. அப்படியாக, எந்த கிழமையில் பிறந்தவர்கள் என்ன பரிகாரங்கள் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
</p><h3>1. ஞாயிற்றுக்கிழமை:
</h3><p> இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது இவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை கொடுக்கும். </p><p>அதே போல் இவர்கள் இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். அரசு வழியில் வெற்றி பெற இவர்கள் சூர்ய ஹோரை காலத்தில் முயற்சிகள் செய்தால் பலன் உண்டு.</p><p></p><h3>
2. திங்கட்கிழமை:
</h3><p>இவர்கள் அதிகாலையில் தாயை வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்று வெள்ளி நிற பூக்களால் அம்பாளை வழிபாடு செய்து கற்கண்டு கலந்த நெய்வேத்தியம் படைப்பது சிறப்பு பெற்றுக் கொடுக்கும். </p><p>இவர்கள் சந்தன நிறம், வெள்ளை ஆகிய ஆடைகளை அணிவது அதிர்ஷ்ட வாய்ப்புகளை தேடி கொடுக்கும்.
</p><h3>3. செவ்வாய்:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் அரளி பூ மாலை கொண்டு முருகப் பெருமானை வழிபாடு செய்து மாலை பைரவருக்கு துவரம் பருப்பு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் கோபம், எரிச்சல், மனப்பதட்டம் குறையும். சிவப்பு, மஞ்சள், நிற ஆடைகளை இவர்கள் அணியும் பொழுது வெற்றிகள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fdc7d6e-753f-4b28-8fed-2d93140f5273/26-6a536e861e2b2.webp' /></p><p>
</p><h3>4. புதன்:
</h3><p> இந்த கிழமையில் பிறந்தவர்கள் துளசி, கற்கண்டு மற்றும் மரிக்கொழுந்து கொண்டு மகாவிஷ்ணுவை சரணடைவது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும். </p><p>இவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது வாழ்க்கையில் நல்ல உயரத்தை உருவாக்கும். இள நீலம் நிற ஆடைகள் அணிவது இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்.
</p><h3>5. வியாழன்:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.</p><p> இவர்கள் தங்க நிற ஆடைகளை அணிவது சாதகமான பலனை கொடுக்கும். இவர்கள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் முக்கியமான விஷயங்கள் தொடங்கும் பொழுது அதில் வெற்றி உண்டு.</p><p></p><p> </p><h3>
6. வெள்ளிக்கிழமை: </h3><p>
இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் மல்லிகை பூக்கள் கொண்டு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்து அம்பிகையை வழிபாடு செய்யலாம். இவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது வெற்றி வாய்ப்புகள் பெற்று கொடுக்கும்.</p><h3>
7. சனிக்கிழமை:
</h3><p>இந்த கிழமையில் பிறந்தவர்கள் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து நீல சங்குப்பூ சாற்றி சிவபெருமானை சரண் அடைவது தோஷங்களை போக்கும்.</p><p> இவர்கள் ஆலய மூலஸ்தானத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றுவது சிறப்பு. அதேபோல் இவர்கள் நீல நிற ஆடைகளை அணிவது நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u> IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் </u></b></a>இணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனிபகவானை சாந்தப்படுத்தும் எளிய முக்கிய பரிகாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibcbakthi.com/article/easy-remedies-for-ezharai-sani-and-ashtama-sani-1783846677"></link>
            <id>https://ibcbakthi.com/article/easy-remedies-for-ezharai-sani-and-ashtama-sani-1783846677</id>
            <summary type="text">சனிபகவான் ஒருவர் செய்த தவறுகளை நினைத்து அதற்கு வருந்தி திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். சனிபகவான் தான் 9 கிரகங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிபகவான் ஒருவர் செய்த தவறுகளை நினைத்து அதற்கு வருந்தி திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். சனிபகவான் தான் 9 கிரகங்களில் நீதிமானாகவும் தர்மத்தின் தலைவனாகவும் விளங்க கூடியவர்கள். </p><p>ஆகையால், ஒருவர் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு விட்டால் சனி பகவான் அவர்களுக்கு உயரத்தையே கொடுக்கிறார்.</p><p> அப்படியாக, ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த காலகட்டங்களில் பலரும் பல பரிகாரங்களை தேடிச் செல்வார்கள்.</p><p> அப்படியாக, இவ்வாறான கடின காலகட்டங்களில் நாம் அன்னதானம் செய்வது சனி பகவானுடைய மனதை குளிர் செய்கிறது. அதைப்போல் சிவ வழிபாடும் இவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.</p><p></p><p> குறிப்பாக சிவபெருமானுடைய நாமங்களை சொல்லி வழிபாடு செய்வது இவர்களுக்கு எல்லா பாதிப்புகளிலும் விடுதலையை பெற்றுக் கொடுக்கும். </p><p>

ஜாதகத்தில் சனிபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து விட்டால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருந்தால் பெண்களுக்கு களத்திர தோஷம் உண்டாகிறது. இவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு மனதார உதவி செய்கின்ற பொழுது அந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். </p><p>மேலும், சனிக்கிழமை மாலை நேரத்தில் நவகிரகங்களை வழிபாடு செய்வதும் நல்ல பலன்களை கொடுக்கும். மேலும், சனி பாதிப்பிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iMaKW-WIvUs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெ<a href="https://www.whatsapp.com/channel/0029Va4l2GgFSAt673ukuX2Z" target="_blank"><b><u>ற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இ</u></b></a>ணைந்து கொள்ளுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T08:58:03+00:00</updated>
        </entry>
    </feed>
