தூங்கி கொண்டு இருக்கும் குழந்தைக்கு விபூதி வைக்கலாமா?
பொதுவாக நாம் கோயிலுக்கு சென்று வீட்டுக்கு வந்தால், உடன் வராத நபருக்கு கோயில் பிரசாதம் கொடுப்பதும்,விபூதி பூசி விடுவதும் வழக்கம்.
சமயங்களில் சிறு குழந்தை வீட்டில் இருந்தால் கோயிலுக்கு கூட்டிச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அப்படியாக நாம் வீடு திரும்பிய உடன்,அக்குழந்தைக்கு ஆசையாக கோவிலில் கொடுத்த பிரசாதம் விபூதி குங்குமம் வைத்துவிடுவோம்.
அப்பொழுது குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்தாலும் சிலர் விபூதி வைப்பார்கள்.உண்மையில் அப்படி செய்யக் கூடாது.
அதாவது குழந்தை ஒரு வயதுகிற்குள் இருந்தால் நாம் தூங்கிக்கொண்டு இருக்கும் குழந்தைக்கு விபூதி வைக்கலாம்.
இல்லை விபூதி வைப்பதை தவிர்த்து விடவேண்டும்.மேலும் இரவில் தூங்க போகும் முன் வீட்டில் சூடம் சுற்றி வைப்போம்.சமயங்களில் நேரம் ஆகிவிடும்.
அப்பொழுது வீட்டில் உள்ள நபர்கள் யாரேனும் தூங்கிவிட்டால்,அவர்களுக்கு சூடம் சுற்றிவதை தவிர்த்து விடவேண்டும்.
அதே போல் தூக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு சூடம் சுற்ற கூடாது.அது வீட்டுக்கும் அக்குழந்தைக்கும் ஆகாது. இதுவரை தெரியாமல் இத்தவரை செய்திருந்தால் இனிமேல் அதை தவிர்த்து விடுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்