விரத நாட்களில் சிலர் உப்பு சேர்ப்பதில்லை ஏன்?
விரதம் என்பது இறைவனை மட்டுமே நினைத்து தியானிக்கும் ஒரு நாள்.தியானம் என்றால் எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
விரதத்தின் முக்கிய நோக்கமே ஓடும் அவசர வாழ்க்கையில் ஒரு நாள் முழுவதும் இறைவனை நினைத்து அவனுக்காக நம்மை அர்பணித்து அலைபாயும் மன ஓட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே ஆகும்.
ஆக ஒரு விரதத்தின் பொழுது சுயகட்டுப்பாடு,பசி பொருபத்தோடு மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய புலன்கள் அடக்குவது ஆகும்.
மேலும் விரதம் அன்று சிலர் சமைக்கும் உணவுகளில் உப்பு சேர்ப்பதில்லை.அதற்கு காரணம் சுவை மட்டும்மின்றி காம குரோத எண்ணத்தையும் உப்பு தரும்.இதை தவிர்க்கவே உப்பு சேர்ப்பதில்லை.
மேலும் ஒவ்வொரு கிழமை விரதமும் ஒவ்வொரு பலன்கள் தரும்.அதை பற்றி பார்ப்போம்.
ஞாயிற்று கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.
திங்கள் கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.
செவ்வாய் கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.
புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழன் கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வெள்ளி கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனி கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |