எந்த அம்மனை வேண்டினால் என்ன பலன் கிடைக்கும்?

By Yashini Jul 23, 2024 12:13 PM GMT
Report

விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.

மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மனை அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமாக தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

புதுக்கோட்டை  நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் கோவிலில் அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள். 

நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் கோவிலில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.

எந்த அம்மனை வேண்டினால் என்ன பலன் கிடைக்கும்? | Entha Ammanai Vananginaal Entha Palan Kidaikkum

ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருளும் காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.

நாமக்கல் ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவிலில் தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.

கோவையில் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.

சமயபுரம் மாரியம்மனிடம் தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

எந்த அம்மனை வேண்டினால் என்ன பலன் கிடைக்கும்? | Entha Ammanai Vananginaal Entha Palan Kidaikkum

திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி கோவிலின் வேப்பமரத்தில் கட்டி வேண்டிக்கொள்ள விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது. 

திருப்பூரில் கோட்டைமாரி அம்மனிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு.

தேனி பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை வேண்டி உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறை வேறுகிறது.

எந்த அம்மனை வேண்டினால் என்ன பலன் கிடைக்கும்? | Entha Ammanai Vananginaal Entha Palan Kidaikkum

தஞ்சை-புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். ஈரோடு பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள்.

அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

ஈரோடு கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US