சாதுக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

By Sakthi Raj Jun 21, 2025 04:21 AM GMT
Report

  மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அதிலும் முக்கியமாக சாதுக்கள் வாழ்க்கையில் இருந்து நாம் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். சாதுக்கள் வெறும் துறவிகள் அல்ல.

அவர்கள் வாழ்க்கையை நாம் பார்க்கும் கோணத்தை தாண்டி உயர்வான நிலையில் பார்த்து கொண்டாடும் ஜீவன்கள். அதாவது தானும் யாருக்கும் சொந்தம் இல்லை, தனுக்கும் யாரும் சொந்தம் இல்லை என்ற புரிதலோடு இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றிணைய வழியை தேடுபவர்கள்.

அப்படியாக, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்களை பற்றிப்பார்ப்போம். சாதுக்கள் என்பவர்களுக்கு வீடு நிலம் இல்லாமல் இல்லை. அவர்கள் தேர்தெடுத்த வாழ்க்கை இது.

சாதுக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் | Life Of Monks In Tamil

யாரையும் வெறுக்காமல், நிலையற்ற விஷயத்திற்கு போட்டியிடாமல் எல்லாம் ஓர் உயிர் என்று அன்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்களுக்கு யாரும் அங்கீகாரம் கொடுக்கவேண்டும் என்று எண்ணத்தில் எந்த ஒரு விஷயமும் செய்யமாட்டார்கள்.

எதற்கும் அதிகம் ஆசை கொள்ளாமல், இருப்பது போதும் என்ற எண்ணமும் இல்லாமல், வருவது வரட்டும் போவது போகட்டும் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள். இவர்கள் அதிகமாக யாரிடமும் எதையும் பேசுவது இல்லை.

செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சந்திரன்... எந்தெந்த ராசியினருக்கு யோகம் தெரியுமா?

செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சந்திரன்... எந்தெந்த ராசியினருக்கு யோகம் தெரியுமா?

பேசி எதுவும் மாறப்போவதில்லை என்று இவர்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் மனிதர்களிடம் வேறுபாடுகளும் வேற்றுமைகளும் பார்ப்பது இல்லை. எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்கள்.

அவர்களுக்கு நன்றாக தெரியும், இந்த ஓரு பிறவியில் எதுவும் முடிந்து விடாது, எவ்வளவு அழுதாலும் தொழுதாலும் நடக்கவேண்டியது சரியான நேரத்தில் நடக்கும் என்று தெரிந்தவர்கள். அதனால் இறைவனை மனதில் நிறுத்தி அவனை கொண்டாடுவது மட்டுமே அவர்களின் செயல்பாடுகளாக இருக்கும்.

சாதுக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் | Life Of Monks In Tamil

காலம் போகும் முன் உண்மையை உணர்ந்து இறப்பை தழுவி விடவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் வாழ்பவர்கள். மனிதர்களாகிய நாம் சாதுக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது பொறுமை.

இன்று நாம் குடும்ப வாழ்க்கையில் இருக்கலாம், ஆனால் விதி ஒன்று தான் இறுதியில் இறப்பு. இதில் கோபம், ஆசை, பொறாமை இவை எல்லாம் மனிதனுக்கு துளியும் உதவாத ஒன்று உணர்ந்து விட்டால் வீண் மனஉளைச்சல் இருந்து விடுபட்டு விடுவோம். இன்றைய ஒரு நொடி பொழுதில் தனக்காக, நான் அடைந்து விட்டேன் என்ற மாய எண்ணத்தை கைவிட்டால் போதும் வாழ்க்கை சுகமாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US