தீராத கடன் சுமை தீர சொல்ல வேண்டிய வாராஹி அம்மனின் மந்திரம்

By Sakthi Raj May 31, 2025 06:00 AM GMT
Report

  மனிதன் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று இறைவழிபாடு ஆகும். இறைவழிபாடு எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் போகக்கூடிய சக்தி படைத்தது. மேலும், இறைவழிபாட்டில் உருவ வழிபாடுகள் கடந்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது நமக்கு கூடுதல் பலன் கொடுக்கிறது.

வாஸ்து: தலைவாசல் தவறாக அமைந்தால் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?

வாஸ்து: தலைவாசல் தவறாக அமைந்தால் சந்திக்கும் பாதிப்புகள் என்ன?

நாம் சரியான முறையில் மந்திரங்களின் வார்த்தைகளை உச்சரித்து வழிபாடு செய்யும் பொழுது நம்மை சூழ்ந்து உள்ளது எதிர்மறை ஆற்றல் விலகி நன்மை உண்டாகிறது. அதனால் தான் முனிவர்கள் மந்திர வழிபாட்டில் அதிக அளவில் ஈடுபட்டார்கள்.

அந்த வகையில் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வளர்பிறை பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை நினைத்து அம்மனுக்குரிய இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபாடு செய்தால் நம்முடைய துன்ப காலம் விலகி கடன் பிரச்சனை விரைவில் விலகும் என்பது நம்பிக்கை.

தீராத கடன் சுமை தீர சொல்ல வேண்டிய வாராஹி அம்மனின் மந்திரம் | Varahi Amman Manthirangal Worship 

இந்த வழிபாட்டை நாம் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். வீடுகளில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராஹி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியமான கிழங்கு வகைகள், மாதுளம் பழம் போன்றவை வைத்து வழிபாடு செய்யவேண்டும். பிறகு இந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி வழிபாடு செய்யவேண்டும்.

மந்திரங்கள்:

“ஓம் ஹ்ரீம் வாராஹி”

இவ்வாறு மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்த பிறகு இறுதியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும். இவ்வாறு செய்து வர நிச்சயம் நம் வாழ்க்கையில் வாராஹி அம்மனின் அருளால் நமக்கு கடன் சுமை விலகி நன்மை உண்டாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US