வாழ்க்கையில் அனைத்து நலமும் பெற திரு அன்பில் பெருமாள் தரிசனம்

By Sakthi Raj Jun 18, 2024 06:30 AM GMT
Report

பெருமாளை நம்பியவர் கை விட படார்.அதாவது எங்கு எல்லாம் தன் பக்தனுக்கு துன்பம் நேர்கிறதோ, எங்கு எல்லாம் தர்மம் தோற்கிறதோ அங்கு எல்லாம் பெருமாளின் சங்கும் சக்கரமும் வந்து நிற்கும்.

பக்தர்கள் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்துளிகளுக்கும் பெருமாள் பதில் மொழி பேசுவார்.அப்படியாக 108 திவ்யா தேசங்களில் ஒன்றான திரு அன்பில் திருச்சி கல்லனை கும்பகோணம் லால்குடிக்கு கிழக்கே எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் நடராஜபுரம் வழியாகவும் விற்றி இருக்கும் பெருமாளை பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் அனைத்து நலமும் பெற திரு அன்பில் பெருமாள் தரிசனம் | 108 Divya Desam Thiru Anbil Perumal Aayalam Koyil

திருமாலயன்துறை மண்டுகபுரி , பிரம்மபுரி என்று இந்த கோயிலுக்கு வேறு பெயர்களும் உண்டு.கொள்ளிட நதியின் வடக்குப்பக்கம் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்தக் கோயில் மூன்று நிலை இராஜ கோபுரம் கொண்டு உள்ளது.இக்கோயிலில் எல்லாமே கிழக்குப் பக்கம்தான்.

இந்த பிரகாரத்தின் கருவறையில் மூலவர் திருவடிவழகிய நம்பி பெருமான் புஜங்க சயனத்தில் பள்ளி கொண்டு அருள் பாலிக்கிறார்.

தினம் ஒரு திருவாசகம்

தினம் ஒரு திருவாசகம்


தாயார் அழகியவல்லி நாட்சியார் என்ற திருப்பெயர் கொண்டவர். இந்தக் கோயிலின் தீர்த்தம் மண்டுக புஷ்கரணியாகும். விமானம் கொள்ளிடக் கரைக்கேயுரிய விசேஷ தாரக விமானம்.

பிரபல மண்டூக முனிவர்  ஒருசமயம் தண்ணீர்க்குள் மூழ்கி நீண்ட கால தவம் செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவரைத் தேடி துர்வாச முனிவர் வந்தார். தலத்தில் மூழ்கியிருந்த மண்டூக முனிவர் , துர்வாச முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை.

வெகு நேரம் காத்திருந்தும் மண்டுக முனிவர் தன்னைக் காணவில்லை என்ற கோபத்தால் துர்வாசர் , மண்டூக முனிவரை தவளையாக மாறும்படி சாபமிட்டு விட்டார்.

இதற்குப் பிறகு மண்டுக முனிவர் , தன் தவறை உணர்ந்து துர்வாச முனிவரிடம் சாப விமோசனம் கேட்க துர்வாச முனிவர் ” இந்த திருத்தலத்திலுள்ள பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தால் சாப விமோசனம் கிடைக்கும்.

மறுபடியும் மனிதனாக மாறலாம் என்று வழிகாட்டினார். அதன்படியே மண்டுக முனிவர் அன்பிலுள்ள திரு வடிவழகிய நம்பி பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு.

வாழ்க்கையில் அனைத்து நலமும் பெற திரு அன்பில் பெருமாள் தரிசனம் | 108 Divya Desam Thiru Anbil Perumal Aayalam Koyil

மேலும் அன்பில் நாட்டை ஆண்ட சுந்தர சோழ மன்னனுக்கு போரில் பல வெற்றிகளைத் தந்ததால் இந்தக் கோயிலுக்கு அரசன் ஏராளமான மானியத்தை வழங்கியிருக்கிறான். பிரம்மாவுக்கும் வால்மீகிக்கும் பகவான் நேரிடையாக தரிசனம் தந்த ஸ்தலம்.

இந்த கோயிலில் திருமங்கை யாழ்வார்,பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

இக்கோயிலின் சிறப்பு என்ன வென்றால் முற்பிறவியில் செய்த பாவங்களைப் நீங்க அன்பில் கோயிலுக்கு சென்று மண்டூக புஷ்கரணியில் நீராடி பெருமாளைநோக்கிப் பிரார்த்தனை செய்தால் போதும் பாவங்கள் நீங்கி புண்ணியம் பிறக்கும்.

மேலும் திரு அன்பில் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் வாழ்க்கையில் அனைத்து இன்பங்களும் நம்மை வந்து சேரும்.அத்துணைச் சிறப்புகள் இந்த அன்பில் பெருமாளுக்கு உண்டு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US