வாழ்க்கை வளமாக 12 ராசிக்காரர்கள் சொல்லவேண்டிய முருகர் மந்திரங்கள்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பலரின் இஷ்டதெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருந்து வருகிறார். அப்படியாக, இந்த உலகில் நம்மை மிஞ்சிய சக்தி ஒன்று இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தினமும் வழிபாடு செய்யும் பொழுது சொல்லவேண்டிய முருகப்பெருமானின் மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
12 ராசிகளுக்கான முருகன் மந்திரங்கள் :
மேஷம் - ஓம் ஷண்முகா போற்றி
ரிஷபம் - ஓம் கதிர்வேலா போற்றி
மிதுனம் - ஓம் முருகா போற்றி
கடகம் - ஓம் குகனே போற்றி
சிம்மம் - ஓம் மயில் வாகனனே போற்றி
கன்னி - ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
துலாம் - ஓம் குமார வேலவா போற்றி
விருச்சிகம் - ஓம் சேவற்கொடியோனே போற்றி
தனுசு - ஓம் தண்டாயுதபாணியே போற்றி
மகரம் - ஓம் சுப்ரமண்யா போற்றி
கும்பம் - ஓம் திருப்புகழ் பெற்ற தெய்வமே போற்றி
மீனம் - ஓம் சூரனை வென்ற குமாரா போற்றி
பொதுவாகவே, இறைவனின் மந்திரங்களுக்கு அதீத சக்திகள் உண்டு. நாம் சாதாரணமாக வழிபாடு செய்வதை காட்டிலும் சுவாமியின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நமக்கு கூடுதல் பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், நாம் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது மந்திரங்களின் அதிர்வலைகள் நம்முடைய உடலை நேர்மறை சக்திகள் கொண்டு சூழ்ந்து மனதில் நம்பிக்கையை கொடுக்கிறது.
அதனால், 12 ராசிக்காரர்களும் தினமும் வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் உண்டான கர்மவினைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |