சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்

Parigarangal
By Sakthi Raj Apr 18, 2024 09:31 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

 சிவ பெருமான் அவன் நினைத்தலே முக்தி கிடைக்கும் அப்படியாக ஈசனின் அருளை பெற சில அபிஷேங்கள் செய்ய நல்ல பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறலாம்,அதை பற்றி பார்ப்போம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

விபூதி அபிஷேகம்:விபூதியால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கையும், மோட்சமும் கிடைக்கும்.

கரும்புச்சாறு அபிஷேகம்:ஈசனை கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்ய, நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்

வலம்புரி சங்கு அபிஷேகம்: வலம்புரி சங்கில் மகாலட்சுமியும், குபேரனும் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, வலம்புரி சங்கு கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

பஞ்சாமிர்த அபிஷேகம்: பல வகையான பழங்கள், தேன், கல்கண்டு ஆகியவற்றை கலந்து பஞ்சாமிர்தம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய உடலும் உள்ளமும் வளம் பெறுவதுடன் வலிமையும் பெறலாம்

தேன் அபிஷேகம்: தேன் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய, குரல் இனிமையும், இசையில் வல்லமையும் பெறலாம்.

தண்ணீரில் விழுந்த இலை: 48 நாட்களில் பாறையாகும் அதிசய கோயில்

தண்ணீரில் விழுந்த இலை: 48 நாட்களில் பாறையாகும் அதிசய கோயில்

பால் அபிஷேகம்: பால் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்ய நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

தயிர் அபிஷேகம்: தயிர் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்ய மழலைச் செல்வங்களைப் பெறலாம். 8. நெய் அபிஷேகம்: நெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முக்தி பெறலாம்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

இளநீர், எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம்: இவற்றைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய பகைவர்களின் அச்சம் நீங்கி இன்பமான வாழ்வோடு அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்.

சர்க்கரை அபிஷேகம்: சர்க்கரையால் ஈசனை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மன நிறைவு உண்டாகும்.

பசு நெய் அபிஷேகம்:பசு நெய் கொண்டு சிவனை அபிஷேகிக்க வாழ்வு இன்பமயமாக கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

 கங்கை நீர் அபிஷேகம்:தூய்மையான கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய, மனக் கவலைகள் நீங்கி, பயம் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.

சந்தனம், பன்னீர் அபிஷேகம்:சந்தனம், பன்னீர் கலந்து சிவபெருமானை அபிஷேகிக்க இறைவன் மீதான பக்தி அதிகமாகும். நற்செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US