ஜோதிடம்: பெண்கள் ஏன் தலை முடிக்கு சாம்பிராணி புகை போடவேண்டும்
பொதுவாக வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் நம் வீடுகளை சூழந்து உள்ள எதிர்மறை ஆற்றல் விலகுவதாக நம்பிக்கை. மேலும், ஆதி காலங்களில் வீடுகளில் பெண்கள் தலைக்கு குளித்தால் தவறாமல் சாம்பிராணி தூபம் காட்டுவார்கள்.
ஆனால் காலம் மாற மாற அதன் பயன்பாடு குறைந்து விட்டது. அப்படியாக, பெண்கள் தலை முடிக்கு சாம்பிராணி போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
சாம்பிராணி தூபம் எப்பேர்ப்பட்ட தீய சக்திகளையும் விரட்டும் ஆற்றல் படைத்தது. இந்துக்கள் வீடுகளில் கட்டாயம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்வார்கள்.
அவ்வாறு செய்யும் பொழுது வீடுகளில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருக்கும் எதிர்மறை சக்திகள், கிருமிகள் போன்றவை முற்றிலுமாக விலகுவதாக ஐதீகம். அது மட்டும் அல்லாமல் சாம்பிராணி வீடுகளில் தேவை இல்லாத நோய்கள் பரவுவதை தடுக்கிறது.
நாம் வீடுகளில் லட்சுமி கடாட்ஷம் பெறுக சம்பிராணியுடன் சந்தனம் கலந்து தூபம் போட்டு வரலாம். அதே போல் தொழில் செய்பவர்கள் கட்டாயம் அவர்கள் தொழிலில் நஷ்டம் மற்றும் கண் திருஷ்டிகள் ஏற்படாமல் இருக்க வாரம் மூன்று முறை கட்டாயம் சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.
அதோடு அந்த காலங்களில் பெண்கள் தலைக்கு குளித்து முடித்தவுடன் தலை முடிக்கு சாம்பிராணி தூபம் காட்டுவார்கள். இதை பிறந்த குழந்தைகளுக்கும் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் நிறைய நற்பலன்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
பெண்கள் சாம்பிராணி புகையை தலை முடிக்கு போடும் பொழுது அவர்களுக்கு கர்ப்பபை தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதுடன் அவர்களுக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகிறது.
அவர்களுக்கு ஏற்பட்ட கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளும் சாம்பிராணி புகையை தலை முடிக்கு காண்பிப்பதால் விலகுகிறது. இதை ஆண்களும் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது எதிர்மறைகளால் ஏற்பட்ட மன அழுத்தம் போன்றவை விலகி மனதில் சந்தோசம் உண்டாகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |