திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
திருநள்ளாறு பிரசித்தி பெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டிற்க்கான பிரம்மோற்சவ விழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து விநாயகர் உற்சவம் சுப்பிரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்ததை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை தேரோட்டம் தொடங்கியது.
இதையடுத்து முதலாவது சொர்ண கணபதி தேர், 2வது சுப்பிரமணியர், 3வது பெரிய தேரில் செண்பக தியாகராஜர், 4வது நீலோத்பலாம்பாள், 5வது சண்டிகேஸ்வரர் தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன.
பிரம்மோற்சவ விழாவில் நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா மற்றும் நாளை மறுநாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |