தெய்வீக அம்சம் நிறைந்த 4 வகையான திருநீறு
திருநீறு சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளமாக கருதப்படுகிறது.
பசுஞ்சாணத்தை எரியூட்டி இந்த தெய்வீகம் நிறைந்த திருநீறு கிடைக்கிறது.
திருஞானசம்பந்தர், திருநீற்றின் சிறப்பைப் பற்றி திருநீற்றுப் பதிகம் பாடல் தொகுப்பையே வழங்கியிருக்கிறார்.
அவ்வையாரும் கூட நீறில்லா நெற்றி பாழ் என்று குறிப்பிடுகிறார்.
திருநீறானது, கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம் என்று நான்கு வகைப்படும்.
1. கல்ப திருநீறு
கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன், தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தாயரிக்கப்படுவது.
2. அனுகல்ப திருநீறு
பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவது.
3. உபகல்ப திருநீறு
ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பது.
4. அகல்ப திருநீறு
வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |