பண கஷ்டம் விலக வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்

By Sakthi Raj Sep 20, 2024 10:00 AM GMT
Report

உலகத்தில் வாழ உடம்பில் உயிர் நல்ல ஆரோக்கியம் பணம் மற்றும் நல்ல மனநிலை மிக அவசியம்.அதிலும் பணம் இருந்தால் மட்டுமே நம்முடைய அத்யாவசிய தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.மேலும் ஒரு மனிதன் செல்வந்தராக இருந்தால் அவன் மேல் சமூகம் கொண்டுள்ள மதிப்பும் பார்வையும் வேறு.

ஆக ஒருவர் நல்ல முறையில் நல்ல பெயரோடு வாழ நல்ல வழியில் உழைத்து சம்பாதித்து பணம் சேர்த்து வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

அதற்கு உழைப்போடு சேர்த்து தெய்வ அனுகூலமும் அவசியம்.அப்படியாக வீட்டில் வந்த செல்வம் வருகின்ற செல்வம் நிலைத்து நிற்க்க என்ன பரிகாரம் செய்யேவேண்டும் என்பதை பார்ப்போம்.

பண கஷ்டம் விலக வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள் | Friday Parigarangal

செல்வத்திற்கு அதிபதியாக திகழ்பவர் மஹாலக்ஷ்மி. அவளின் பார்வை பட்டாலே நம்முடைய வாழ்க்கையில் செல்வம் பெருகி நல்ல நிலைமைக்கு வருவோம்.அப்படியாக காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம்

சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம்


மேலும் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்கும்.ஆனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள் சூரிய உதயத்தின் பொழுதாவது எழ வேண்டும்.

சூரிய உதயத்தின் பொழுது எழுந்து வாசல் கூட்டி,பச்சரிசி மாவில் கோலம் போட்டுவிட்டு, பூஜை அறையில் ஒரு சிறிய பெட்டியில் உங்களிடம் இருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை வைக்க வேண்டும்.

பண கஷ்டம் விலக வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள் | Friday Parigarangal

அதனுடன் மல்லிகைப்பூ சிறிதளவு, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் கொஞ்சம், சந்தன கட்டி ஒன்று, வில்வ இலை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக இரண்டு குத்து விளக்குகளில் ஐந்து முக திரி இட்டு நெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை எரிய விட வேண்டும்.

இவ்வாறு சூரிய உதயத்தின் பொழுது செய்து வருபவர்களுக்கு நாளடைவில் வருமான தடை நீங்கும் என்பது நம்பிக்கை.இவ்வாறு செய்வதினால் மஹாலஷ்மியின் அருள் கிடைத்து அவர்கள் வாழ்க்கையில் பண முன்னேற்றம் அடைவார்கள்.

முடிந்தவர்கள் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது வீட்டிற்கு லட்சுமி கடாக்ஷம் வளரும்.முடியாதவர்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை இதை செய்து வர வாழ்க்கையில் நல்ல மாற்றம் பெறலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US