வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்

By Sakthi Raj Aug 13, 2024 08:42 AM GMT
Report

நாம் இந்தக் உலகத்தில் பார்க்கும் மனிதர்கள் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் இருப்பது இல்லை.போட்டி பொறாமை இவை எல்லாம் அவர்களை ஆட்கொண்டு மனிதன் என்ற தன்மையை இழக்க செய்கிறது.

நெஞ்சில் வஞ்சகம் பேச்சில் ஆணவம் போன்ற தரமற்ற செயல்களால் மனிதன் அவனுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்து வருகின்றான்.

அப்படியாக இவ்வளவு வன்மம் நிறைந்த உலகத்தில் நல்லவர்களாக மென்மையானவர்களாக வாழ்வது மிகவும் கடினம்.

மேலும் ஒரு பல மொழி இருக்கிறது நிறைகுடம் தழும்பாது என்று.அப்படியாக உண்மையின் பக்கம் நிற்பவன் அவன் எதற்கும் அஞ்சாமல் அவன் வழியே செல்வான்.

ஆனால் பொய்கள் கூடாரத்தில் வாழ்பவன் பிறரை குறை சொல்லிக்கொண்டும்,பிறரை தாழ்த்தியும் பேசிக்கொண்டு இருப்பான்.

வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் | How To Get Rid Of From Bad Eyes

இப்படி மனிதர்கள் உள்ளம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறதோ அதே நிலையில் தான் அவர்கள் கண் பார்வையும் இருக்கும்.

சிலர் சொல்லுவது உண்டு,இவன் பார்வை பட்டாலே புல்லும் கருகிவிடும் என்று,அந்த அளவிற்கு மோசமான எண்ணங்களுடன் உலா வருவார்கள்.இவர்களுடைய பார்வை பட்டாலே நன்றாக வாழும் நம் வாழ்க்கையும் எதோ ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

மேலும் ஜோதிடத்தில் இதன் பெயர் தான் கண் திருஷ்டி. கிராமங்களில் மிகவும் பிரபலமான பழமொழி உண்டு,சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று.

அந்த வகையில் ஒருவரது கண்திருஷ்டி ஒருவரது வாழ்க்கையில் மிக மோசமான நிலைக்கு கொண்டு போயிவிடும். இப்பொழுது அப்படி ஏற்படும் கண்திருஷ்டி கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

வெளியில் என்னதான் ஏதிர்மறை ஆற்றல்கள் இருந்தாலும் நம் வீட்டில் நம்முடைய எண்ணங்கள் எல்லாம் நேர்மறை ஆற்றலாக இருக்கவேண்டும்.மேலும் நம்முடைய வீட்டில் நல்ல தேவதைகள் இருப்பார்கள்.

ஞானம் அடைவது எப்படி?

ஞானம் அடைவது எப்படி?


அவர்கள் எப்பொழுதுமே சதாப்து சதாப்து என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் நன்மை தரக்கூடிய வார்த்தையாக இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் கூறினார்கள்.

இதோடு மட்டுமல்லாமல் தினமும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து நமக்குத் தெரிந்த மந்திரங்களையும் சுவாமியின் பாடல்களையோ அமர்ந்து உச்சரிக்க வேண்டும்.

மேலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும்.மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பது திருஷ்டி சுத்தி போடுவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.

வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் | How To Get Rid Of From Bad Eyes

அதனால் அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது ஒரு பாத்திரம் எடுத்து அதில் நிறைய தண்ணீரை பிடித்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வீட்டில் அரைத்த சுத்தமான மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் போட்டு உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.

அந்த தண்ணீரை யாரும் தொடக்கூடாது. அந்த அளவிற்கு பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டு நிலை வாசல் வழியாக வெளியே சென்று கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும் விலகி வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US