நினைத்த காரியம் கைகூட காலபைரவர் துதி

By Sakthi Raj Apr 03, 2024 03:58 AM GMT
Report

சிவபெருமானின் அவதாரங்களில் காலபைரவர் அவதாரம் ஒன்று. சிவபெருமானின் அவதாரங்களை வழிபட அந்த அவதாரத்திற்கு ஏற்ப நமக்கு பலன்களும் முக்தியும் கிடைக்கும். அந்த வகையில் காலபைரவர் வழிபாடு மிக சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது.

நினைத்த காரியம் கைகூட காலபைரவர் துதி | Kalabhairavar Sivan Valipadugal

ஒருவர் காலபைரவரை வழிபட ஆரம்பித்த நாள் முதலில் இருந்து அவர்களுக்கு பயம் விலகி நினைத்த காரியம் கைகூடி வரும்.

மேலும் கால பைரவரை வழிபட பிரம்மகத்தி தோஷம் திருமண தடை விலகும் என்கின்றனர்.

நினைத்த காரியம் கைகூட காலபைரவர் துதி | Kalabhairavar Sivan Valipadugal

பைரவ மூர்த்தி என்பவர் சனியின் குருஆவார். ஆகையால் ஏழரை சனி ஜென்ம சனி அஷ்டமத்து சனி காலங்களில் பைரவரை வழிபட சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

போட்டி, பொறாமைகளில் இருந்து நம்மை காப்பாற்றி வெற்றி பெற காலபைரவர் துதி உதவியாக இருக்கும்

நினைத்த காரியம் கைகூட காலபைரவர் துதி | Kalabhairavar Sivan Valipadugal

கறையணி கண்டதத் தம்மான்

கருத்தினிலே தோணினானை

மறையணி பூணுவானை மழுவொரு

சூலத் தானை

குறையணி அகந்தையாளர்

குணத்தினை அடக்குவானை

சிறையறுவடுகன் தாளைச்

சிந்தையில் வாழ்த்துவோமே"

. திருவுறைச் சொல்லு மாகித்

தெறிமனம் பொருளு மாகி

வருபொருட் செல்வம்

ஞானம் வளர்புகழ் தானேயாகிப்

பெருவினை அகல நாளும்

பிதற்றுவார் உள்ளேதோன்றும்

திருவினை வயிரவ தேவை திருந்தடி

வாழ்த்துவோமே"

."புலரிதன் கதிர்களாகிப்

புவிக்கெலாம் ஒளியானானை

மலரினை மலர்த்துவானை

உலகெலாம் ஆகிவேறாய்

உயிருடன் ஒன்றுவானை நிலமதில்

வயிரவன்தாள்

நினைந்து நாம் வாழ்த்துவோமே".    

இதை நாம் தினம் சொல்லி வர காரிய தடை மற்றும் பயம் விலகி வெற்றிகள் வந்தடையும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US