காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும்

By Sakthi Raj Apr 08, 2024 10:10 AM GMT
Report

விளக்குகளில் பல விளக்குகள் இருந்தாலும் விளக்கு என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது காமாட்சி அம்மன் விளக்குதான்.

அனைவரது வீட்டிலும் இந்த காமாட்சிஅம்மன் விளக்கு கட்டாயமாக இருக்கும், பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

இந்த விளக்குக்கு பல சக்திகள் இருக்கிறது, இந்த காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் வைத்து நம் விளக்கேற்றும் பொழுது நம் வீட்டில் நடக்கும் அதிசயங்களும் இந்த காமாட்சி அம்மன் விளக்கின் மகிமைகளையும் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்.

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும் | Kammatchiamman Kamatchivillaku Marriage Kuladeivam

கருணையே வடிவான காமாட்சி அம்மன் பற்றி  நாம் அனைவரும் தெரிந்து இருப்போம். .சக்திகளில் மிக சக்திவாய்ந்தவள் இவள்.

தன்னுடைய உலக மக்களின் நன்மைக்காகவும் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காகவும் தவமிருந்தவள் காமாட்சியம்மன்.

அவள் அப்படி தவமிருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சியம்மனுக்குள் அடங்கியது.

அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலோ அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் ஒருவருக்கு கிடைத்துவிடுகிறது என்பது நம்பிக்கை.

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும் | Kammatchiamman Kamatchivillaku Marriage Kuladeivam

 மேலும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வணங்கும்போது காமாட்சி அம்மனுடைய அருளும் அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் எளிதாக கிடைக்கப்பெறுகிறார்கள்.

ஒருவர் தங்களுடைய குலதெய்வம் எது என தெரியாமல் தவிப்பவர்களும் காமாட்சி அம்மனையே தங்களுடைய குலதெய்வமாக நினைத்துக் கொண்டு நீயே என் குலதெய்வமாக இருந்து என் குலத்தை காக்க வேண்டும் என்று வணங்கியபடி காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடலாம். அதற்கு காமாட்சி தீபம் என்று பெயர்.

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும் | Kammatchiamman Kamatchivillaku Marriage Kuladeivam

மேலும் காமாட்சி அம்மனுக்குள் அத்தனை தெய்வ சக்திகளும் அடக்கம் என்பதால் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற வேண்டி திருமணங்களின் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வருவதும், புகுந்த வீட்டிற்கு செல்லும் மணப்பெண் அங்கு முதன் முதலில் காமாட்சிஅம்மன் விளக்கை ஏற்றுவதற்கும் சொல்கிறார்கள் .

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும் | Kammatchiamman Kamatchivillaku Marriage Kuladeivam

அதோடு காமாட்சி விளக்கு ஏற்றுவதால் குலதெய்வத்தின் அருளுடன் அவர்களின் குலம் தழைக்கும் வளரும் என்பது நம்பிக்கையாகும்.

கஜலட்சுமிக்கு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும் காமாட்சி விளக்கு மங்களப் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்பதால் அதில் பூவும் பொட்டும் வைத்து மங்களத்துடன் எப்பொழுது தீபம் ஏற்றி வழிபட நம் வீட்டில் அனைத்து செல்வங்களும் கிடைக்கக் பெறுவோம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்த வருகிறது.

காமாட்சி அம்மன் விளக்கின் அற்புதங்களும் மகிமைகளும் | Kammatchiamman Kamatchivillaku Marriage Kuladeivam

இன்னும் விசேஷமாக சிலர் குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சி அம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பது உண்டு.

அவர்கள் வீட்டில் நடக்கும்பொழுது திருமண சீர்வரிசைகளில் மணப்பெண்ணுக்கு காமாட்சியம்மன் விளக்கும் இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குகிறார்கள் இது இன்றும் நடைமுறையில் உள்ளது,

 நம்முடைய இல்லத்திலும் உள்ளத்திலும் உள்ள எல்லா பிரச்சனைகளும் நீக்கி இறைவனின் அருள் பெற அருளும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றி வழிபட்டு அனைத்து செல்வங்களையும் நம் வாழ்க்கையில் நலம் பெறுவோமாக.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US