கோபம் தீர்க்கும் விநாயகர்
கோபம் தான் நம் எதிரி. அத்தகைய கொடிய கோபம் நம் வீட்டில் யாராவது ஒருவரிடம் ஆவது அதிகமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அப்படியாக நம்முடைய கோபம் தவிர்க்க எத்தனை தியானங்கள் செய்தாலும் இறைவழிபாடு மிக அவசியம். நம்முடைய கோபத்தை தணித்து நமக்கு அருள்புரிய தான் திருவானைக்காவல் கோவில் உள்ள விநாயகர் உதவி செய்கிறார்.
அதாவது திருவானைக்காவலில் எழுந்தருளி உள்ள அகிலாண்டேஸ்வரி தேவி மிகவும் உக்கிரமாக இருந்திருக்கிறார்.
தேவியின் உக்கிரத்தை தணித்து மக்களுக்கு அருள் பாலிக்க ஆதிசங்கர தேவியின் சன்னதிக்கு நேர் எதிரே ஒரு விநாயகர் பெருமானின் பிரதிஷ்டை செய்தார்.
அதனால் தேவியின் உக்ரம் குறைந்து சாந்த வடிவாய் காட்சியளித்தார். எனவே இந்த விநாயகரை உக்கிரம் தகர்த்த விநாயகர் என்று அழைத்து வணங்குகின்றனர்.
இந்த விநாயகரை கோபம் உள்ளவர்கள் குடும்பத்துடன் வணங்கினால் கோபம் குறைந்து சாந்தம் பிறக்கும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |