யாருக்கு குபேர யோகம் கிடைக்கும்

By Sakthi Raj May 10, 2024 09:24 AM GMT
Report

எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லை என்ன மனம் வருந்துபவர்களா நீங்கள்? இனி அந்த புலம்பல் தீர நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு குபேர யோகம் வர வேண்டும் என்றால் அவர்கள் பெற்றோர்களை வணங்க வேண்டும்.

பெண்களை அளவிடக்கூடாது.

வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீண் பேச்சு பேசக்கூடாது.

சுவாமி படத்தை துடைத்து பூ வைத்து வழிபட வேண்டும். பணத்தில் எச்சில் தொட்டு எண்ணக்கூடாது.

யாருக்கு குபேர யோகம் கிடைக்கும் | Kubeeran Sivan Selvavalam Parigaranal Mahalakshmi

சில்லரைகளை சிதற விடக்கூடாது. ரூபாய் நோட்டை கசக்ககூடாது. பணம் பற்றி பேசினால் முரணாக பேசக்கூடாது. ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது என்னால் தான் இவனுக்கு வாழ்வு வந்தது என்று ஆணவம் கொள்ளக்கூடாது.

நேரம் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். முடிந்தவரை அன்னதானம் செய்ய வேண்டும். குரு ஹோரையில் பணத்தை புழங்குங்கள் (வியாழன் காலில் ஆறு மணி முதல் ஏழு மணி வரை மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை இரவு 8 மணி முதல் ஒன்பது மணி )வரை பணம் கையை விட்டுப் போனாலும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.

அட்சய திரிதி நாளில் இத்தனை அதிசயங்கள் நடந்திருக்கிறதா?

அட்சய திரிதி நாளில் இத்தனை அதிசயங்கள் நடந்திருக்கிறதா?


கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸ்துதி, இடரினும் தளரினும் போன்ற பதிகங்களை தினமும் கேட்க வேண்டும் பாட வேண்டும்.

அம்பிகையின் சன்னதியில் உங்கள் பிராத்தனைகளை வாய் விட்டு சொல்ல வேண்டும். அவளின் கடை கண் பார்வே கிடைக்க வேண்டும்.

இதை பின்பற்றினாலே நீங்கள் அழைக்காமலே உங்கள் வீட்டுக்கு குபேரன் வந்து அருள் புரிவார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US