Vastu Tips:வீட்டில் இருக்கவே கூடாத 5 பொருட்கள் - தவறியும் வைக்காதீங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு சில பொருட்களை வீட்டில் வைப்பதால் தொடர்ந்து கஷ்டம் வருவதாக கூறப்படுகின்றது.
இதன் தாக்கம் வீட்டில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் இருக்கும். முக்கியமாக குடும்ப தலைவனுக்கு இருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் ஞாபகத்திற்காக உடைந்த பொருட்களை கூட வைத்திருப்பார்கள். இப்படி செய்வதால் வீட்டிற்கு அதிகப்படியான கஷ்டம் வந்து சேரும்.
அந்த வகையில், வீட்டில் வைக்கவே கூடாத 5 பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டில் வைக்கக் கூடாத பொருட்கள்
1. பொதுவாக வீடுகளில் உடைந்த பொருட்களை வீட்டில் வைக்கக் கூடாது. உடைந்த பொருட்கள் எதிர்மறையான ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரும். அத்துடன் லட்சுமியின் வரவு முற்றிலும் குறைந்து விடும்.
உதாரணமாக உடைந்த கண்ணாடிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், புகைப்படங்கள், படுக்கை, கடிகாரம், விளக்கு, விளக்குமாறு, குவளை, கோப்பை போன்றவற்றை கூறலாம்.
2. சில வீடுகளில் பழைய துணிகளை ஒரு முட்டை முட்டையாக கட்டி வீட்டில் வைத்திருப்பார்கள். இது நேர்மறையான ஆற்றலை வீட்டிற்கு வர விடாமல் செய்கிறது.
3. எப்போதும் வீடுகளில் அன்றைய நாளுக்கான குப்பையை வீசி விட வேண்டும். குப்பையை ஒரு போதும் வீடுகளில் சேமித்து வைக்கக் கூடாது.
4. நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்களை பணப்பையில் வைத்து கொள்ள வேண்டும். ராசியான பை என்று கூறி கிழிந்த பைகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
5. சிலர் யாராவது பரிசாக கொடுத்த படங்கள், சிலைகள் வீட்டில் ஞாபகமாக வைத்திருப்பார்கள். இது முற்றிலும் தவறான செயல். வீட்டிற்குள் வருகின்ற மகாலட்சுமியை தடுக்கும் வேலையை இது செய்கிறது.
அதிலும் முக்கியமாக சாமி படங்கள் உடைந்திருந்தால் அதனை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத தோஷங்கள் உண்டாகும்.