வைகாசி வசந்த உற்சவம்: கள்ளழகர் திருக்கோலத்தில் வரதராஜப் பெருமாள்

By Yashini May 29, 2024 04:59 PM GMT
Report

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கடந்த வாரம் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த வைகாசி வசந்த விழாவினை முன்னிட்டு மே 23-ம் தேதி அன்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

பின்பு குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஊர்வலமாக வந்து பக்தர்கள், பொதுமக்களுக்கு காட்சி அளித்து வண்டியூரினை சென்றடைந்து தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

வைகாசி வசந்த உற்சவம்: கள்ளழகர் திருக்கோலத்தில் வரதராஜப் பெருமாள் | Paramakudi Varadaraja Perumal View Of Kallazhagar

இந்நிலையில், வசந்த உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இருந்து பூ பல்லக்கில் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று கோவிலுக்கு திரும்பினர்.

இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கோவிலுக்கு வரவேற்றனர்.

இதன் பின் வரதராஜப் பெருமாளுக்து சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதணை நடைபெற்றது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US