கங்கையில் நீராடிய முழுப்பலனைப் பெற உதவும் தமிழக புண்ணிய தீர்த்தங்கள்
உலகில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை கரைக்க சில புண்ணிய இடங்கள் இருக்கிறது.அப்படியாக செய்த வினையை கரைக்க காசிக்கு செல்வார்கள்.காசி என்றதும் நம்மக்கு நினைவிற்கு வருவது கங்கை நதி தான். பலருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
புனித கங்கையில் நீராடினால் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் கங்கைக்கு நிகரான தீர்த்தங்களில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன்கள் கிட்டும் என ஞான நூல்கள் கூறுகின்றன அந்த வகையில் தமிழகத்தில் பல இடங்களில் கங்கைக்குச் சமமான தீர்த்தங்கள் உள்ளன.
1.ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் திருக்குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்
2.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் தென் பகுதியில் ஓடும் காவிரியில் துலா (ஐப்பசி) மாதத்தில் நீராடினாலும், கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் கங்கையில் நீராடிய முழுப்பலன் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
3.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் தலத்தில் ஸ்ரீதரஐயாவாள் மடத்தில் உள்ள கிணற்றில் கார்த்திகை அமாவாசை அன்று கங்கையாகப் பொங்கி தண்ணீர் வெளியேறும். அந்த நீர் கங்கை நதிக்கு ஒப்பாகக் கருதப்படுவதால் அன்று அதில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்
4.திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது கைச் சின்னம் எனும் திருத்தலம் அத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் ஒன்று ஆகாயகங்கை அத்தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி கிட்டும் என்பர்.
5.திருநள்ளாறு, சனிபகவான் தனிப்பெருங்கருணையுடன் அருளும் தலம் ஆலய வளாகத்துள் கங்கா தீர்த்தக் குளம் உள்ளது அதில் நீராடினால் ஏழரைச் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |