கண் திருஷ்டி நீங்க கல் உப்பு பரிகாரம்

By Sakthi Raj Oct 03, 2024 10:00 AM GMT
Report

மனிதன் அவனின் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றான்.அப்படியாக அது அவனுக்கு பல மனஉளைச்சலை தருகிறது.அந்த மனஉளைச்சல் மற்றும் வீட்டில் பொருளாதார மேம்பாட்டிற்கான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

நம் அனைவருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்க கூடிய முடக்கியமான பொருட்களில் உப்பு ஒன்று.உப்பு உணவிற்கு மட்டும் அல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற அது பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த உப்பில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்றாள்.பொதுவாக நமக்கு ஏதெனும் தோஷங்கள் என்றால் கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று அதில் மூழ்கி நம்முடைய தோஷத்தை கழிப்பது வழக்கம்.அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இந்த உப்பு வைத்து செய்யும் பரிகாரமும் ஆகும்.

கண் திருஷ்டி நீங்க கல் உப்பு பரிகாரம் | Salt Parigarangal

அதாவது உப்பு வைத்து சுத்தி போடுவதால் நமது உடலில் உள்ள தோஷங்கள் நீங்குகிறது என்று சொல்கின்றனர்.மேலும்,இந்த உப்பிற்கு கண் திருஷ்டியை போக்கும் அதீத சக்தி இருக்கிறது. வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி சோம்பல் நீங்கும்.

குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்கிழமைகளில்இவ்வாறு குளிக்கலாம்.மேலும் ஒரு காகிதத்தில் ஒரு கைப்பிடி கல் உப்பு,சூடம்,காய்ந்த வத்தல்,கடுகு போட்டு மடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

21 தலைமுறை தோஷங்களை போக்கும் தேங்காய் பரிகாரம்

21 தலைமுறை தோஷங்களை போக்கும் தேங்காய் பரிகாரம்


பின்பு அதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் ஒரு சேர மூன்று முறை சுத்தி போட எவ்வளவு பெரிய திருஷ்டியாக இருந்தாலும் அது நம்மை விட்டும் அகலும்.

மேலும் இதை நாம் குடும்பத்துடன் எங்கேயாவது வெளியில் சென்று வந்து உடன் சுற்றி போடா குடும்பத்தின் மீது உள்ள எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகி சந்தோசம் நிலவும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US