உங்கள் வீட்டில் நிறைய தங்கமும் சொத்துக்களும் சேரவேண்டுமா?
மனிதனுக்கு செல்வ வளம் பெறுக வேண்டும் என்றால் கட்டாயம் அவனுக்கு லட்சுமி தேவியின் அருள் அவசியம். அதே போல், ஒருவருக்கு வீடு நிலம் என்று அதிக அளவில் சொத்துக்கள் சேரவேண்டும் என்றாலும் செவ்வாய்பகவானின் அருள் தேவை.
அப்படியாக, எவ்வளவு அதிக அளவில் பணம் சம்பாதித்தாலும் அவர்களுக்கு தங்கம் வாங்குவதிலும், சொத்துக்கள் வாங்குவதிலும் ஏதேனும் தடைகளும் தடங்கலும் ஏற்பட்டு கொண்டு இருக்கும். அப்படியானவர்கள் செய்யவேண்டிய எளிய பரிகாரத்தை பற்றிப் பார்ப்போம்.
தங்கம் சேர பரிகாரம் :
வீடுகளில் உள்ள பொருளாதார நெருக்கடிகள் விலகி, தங்கம் மற்றும் சொத்து நிலம் சேர நாம் வீடுகளில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி ஆதிசங்கரரே ஒரு நல்வழி காட்டியுள்ளார். அதாவது, செல்வம் சேர வீடுகளில் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்க வேண்டும் என்கிறார்.
அதே போல், சொந்த வீடு நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதிசங்கரர் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் மீது பாடிய சுப்ரமணிய புஜங்கம் பாடலை கேட்கலாம் என்கிறார். இந்த பாடல் தமிழில் இருந்தாலும் அதிசங்கரர் அருளிய பாடலை சமஸ்கிருதத்தில் கேட்பது மிக சிறந்த பலன் கொடுக்கும்.
மேலும், இந்த பாடல்கள் வீடுகளில் ஒலிப்பதும் கேட்பதும் நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குகிறது. இந்த பாடல்களை எல்லாம் முழு நம்பிக்கையோடு படித்து வர கட்டாயம் ஒரு சிறிய முன்னேற்றத்தை நம் வாழ்க்கையில் காணலாம்.
ஆக, தினமும் இந்த பாடல்களை கேட்க துவங்குங்கள் பாடல்களை கேட்கும் பொழுது மனதில் தங்களின் வறுமை விலகி பொன்னும் பொருளும் சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்ய நிச்சயம் 12 அமாவாசைகளுக்குள் வீடுகளில் நல்ல மாற்றத்தை காணலாம்.
மேலும், தனக்கு தங்கம் வேண்டும் என் மனதார உருகி மகாலட்சுமியை வேண்டி ஆதிசங்கரர் பாடியது தான் கனகதாரா ஸ்தோத்திரம் . அதே போல் தான் பாதிக்கப்பட்ட நோய் நீங்கியதால் திருச்செந்தூர் முருகனின் அருள் நிறைவாக கிடைக்க வேண்டும் என வேண்டி பாடியது தான் சுப்ரமண்ய புஜங்கம்.
அதனால் இதை பாடுபவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் வாழ்க்கையில் இறைவனின் அருளால் நல்வாழ்வு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |