வாஸ்து: வீட்டில் அமைதி நிலவ வைக்க வேண்டிய 5 விலங்குகளின் சிலைகள்

By Sakthi Raj May 29, 2025 07:01 AM GMT
Report

வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, வாஸ்து ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் தீரவும், வெளிநபர்களால் உண்டாகும் எதிர்மறை ஆற்றல் விலகவும் வீடுகளில் வைக்கவேண்டிய முக்கியமான விலங்குகளின் சிலை இருக்கிறது.

அதை வைப்பதின் வழியாக வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகி அமைதி உண்டாகுவதாக சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

51 சக்தி பீடங்கள் அமைய பெற்று இருக்கும் ஊரும் பெயரும்

51 சக்தி பீடங்கள் அமைய பெற்று இருக்கும் ஊரும் பெயரும்

 

1.யானை சிலை:

வீடுகளில் யானை சிலை வைப்பதால் மங்களகரமான யோகம் உருவாகிறது. இவை நம் வீட்டின் மகிழ்ச்சியையும், செழிப்பையும் வளரச்செய்கிறது.

2.பசு சிலை:

நம்முடைய இந்துமதத்தில் பசு தெய்வமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. நாம் வீடுகளில் பசுவின் சிலையை வைப்பதால் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைப்பதோடு, மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பசு சிலை வீடுகளில் இருக்கும் பொழுது எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து காணப்படுகிறது.

3. ஒரு ஜோடி அன்னங்களின் சிலை:

நாம் இந்த சிலையை வீடுகளில் நுழைவாயிலில் வைக்கும் பொழுது நம்முடைய நிதி நிலைமை மேம்படுகிறது. மேலும், திருமண வாழ்க்கையில் மன மகிழ்ச்சியை கொடுக்கிறது.

4. ஆமை:

நாம் வாஸ்து ரீதியாக வீடுகளில் ஆமை சிலை வைக்கும் பொழுது வீடுகளில் ஏற்பட்ட கடன் தொல்லை விலகி பொருளாதார முன்னேற்றம் கிடைக்கிறது.

5. ஒட்டகத்தின் சிலை:

வாஸ்து ரீதியாக நாம் வீடுகளில் ஒட்டகத்தின் சிலையை வைக்கும் பொழுது அவை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இவை வீடுகளில் நிலையான தன்மையை குறிக்கிறது. ஆதலால், ஒட்டகத்தின் சிலையை வீடுகளில் வைக்கும் பொழுது நம் வீடுகளில் வளர்ச்சி ஏற்பட்டு முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்குகின்றோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US