நாம் அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் காலம் என்று அழைக்கின்றோம். அதாவது ஜோதிட ரீதியாக சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறக்கூடிய அந்த கால கட்டத்தை தான் நாம் அக்னி நட்சத்திரம் என்று சொல்லுகின்றோம்.
புராண காலங்களில் அரசர்கள் வேள்வி நடத்துவார்களாம். அவ்வாறு வேள்வி நடத்தும் பொழுது அதில் அதிகப்படியான நெய் ஊற்றுவார்களாம்.
அதிக அளவில் நெய் ஊற்றும் பொழுது அக்னி பகவானுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு செரிமான கோளாறுகள் வந்து விடுகிறது. செய்வதறியாத அக்னி பகவான் காடுகளை சாப்பிட தொடங்குகிறார்.
அப்பொழுது காடுகளில் வாழ்ந்த விலங்குகள் இறைவனை பிராத்தனை செய்கிறார்கள். அப்பொழுது அந்த காடுகளை சாப்பிட விடாமல் தடுப்பதற்கு மழை பொழிகிறது.
ஆதலால் நாம் அக்னி நட்சத்திர காலங்களில் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது போல் நிறைய வரலாறுகளும் கதைகளும் இருக்கிறது.
மேலும், இந்த அம்னி நட்சத்திர காலங்களில் யாரும் எதிர்பாராத திருப்பமாக அரசியல் ரீதியாக ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஆக இதற்கும் அக்னி நட்சத்திரத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பதை பற்றியும் அக்னி நட்சத்திர காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றியும் பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தவத்திரு அறம்மிகு அடிகளார் அவர்கள்.
அதைப் முழுமையாக பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |