பூசணிக்காய் வைத்து திருஷ்டி கழிக்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை
இந்த உலகத்தில் மோசமான சக்திகளில் இந்த கண் திருஷ்டியும் ஒன்று. சொல்லடிப்பட்டாலும் கட்டாயம் மனிதன் கண்ணடி படக்கூடாது. பொல்லாத கண் திருஷ்டியானது ஒரு நபரை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடும்.
அதிலும் நேரம் சரி இல்லை என்றால் கட்டாயம் இந்த கண் திருஷ்டி மிக மோசமான அளவில் பாதிப்பை உண்டுசெய்து விடும். அதனால் தான் நம் வீடுகளில் ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தாலும், அல்லது நாம் குடும்பத்துடன் ஒரு சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வீடு திரும்பிய பொழுது திருஷ்டி சுற்றி போடுவோம்.
அந்த வகையில் திருஷ்டி கழிப்பதற்கு மிக முக்கியமாக நாம் பயன் படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள் தான் பூசணிக்காய். திருஷ்டி கழிப்பதற்கு பயன்படுத்தும் இந்த பூசணிக்காய்க்கு பின்னால் ஒரு கதை உள்ளது. அதாவது, கூச்மாண்டன் என்ற அசுரன், தேவர்களை பல காலமாக துன்புறுத்தி வந்துள்ளான்.
அவனது துன்பங்களை தாங்கிக்கொள்ள முடியாத தேவர்கள் பெருமாளிடம் சென்று முறையிட்டனர். உடனே கூச்மாண்டனுடன் திருமால் போரிட்டு தோற்கடித்தார். அதில் வீழ்ந்து போகும் முன் திருமாலிடம் அவன் தன் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று வரம் கேட்டான். அதாவது செத்தும் பிறருக்கு உபயோகமாக வாழ்வதற்கான வரத்தை கேட்டுள்ளான்.
அதுனாலயே பூசணிக்காயாக பிறந்து, பிறரது கண்திருஷ்டியை நீக்க பயன்படுவாய் என்று வரம் தந்ததாக கூறப்படுகிறது. பூசணிக்காய்க்கு அதிகளவு பிராண சக்தி இருக்கும் என்பதால்தான், வீட்டின் கதவின் அருகில் தொங்க விடப்படுகிறது.
அதோடு பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றி போடும் பொழுது அதன் மேல்பகுதியை கத்தியால் வெட்டியெடுத்து, அதற்குள் குங்குமம், சில நாணயங்களை கொட்டி, பிறகு திருஷ்டி சுற்றுவார்கள். அவ்வாறு செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை.
பூசணிக்காயில் கத்தி பட்டு அறுபடும் பொழுதே அதனுடைய சக்தி இழந்து விடுகிறது. அப்படியாக, பூசணிக்காய் வைத்து திருஷ்டி கழிக்கும் பொழுது தரையில் வைத்து, நான்கு திசைகளிலிருந்தும் தாண்ட வேண்டும்.
வலது கால் முன்னிருந்துதான் எடுத்து வைத்து ஒவ்வொருமுறையும் தாண்ட வேண்டும். அப்போதுதான் நாலாபக்கமுள்ள திருஷ்டி முழுமையாக கழியும். பூசணிக்காயை தாண்டி விட்டு, பிறகுதான், திருஷ்டி சுற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக, அமாவாசை போன்ற நாட்களில் நாம் கட்டாயம் வீடுகளில் கட்டாயம் திருஷ்டி சுற்றி போட வேண்டும். அவை மிக பெரிய பலனைக்கொடுக்கும். மேலும், பூசணிக்காய் உடையும் பொழுது அதில் உள்ள விதைகள் வெளியேறும். அவ்வாறு வெளியேறுவது புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதை குறிப்பதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |