வீட்டில் செல்வ வளம் பெருக சில முக்கிய ஜோதிட குறிப்புக்கள்

By Sakthi Raj Jun 16, 2024 09:30 AM GMT
Report

வாழ்க்கையில் எல்லா வளமும் மிக அவசியம்.அந்த வளம் வீட்டில் நிறைந்து இருக்கவும் நாம் சந்தோஷமாக வாழவும் சின்ன சின்ன விஷயங்களை பின் பற்றினாலே போதும் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை பார்க்கலாம்.

அதில் நம் வீட்டில் முதன்மையாகவும் கட்டாயமாகவும் பின் பற்றி வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

வீட்டில் செல்வ வளம் பெருக சில முக்கிய ஜோதிட குறிப்புக்கள் | Veetil Selva Valam Peruga Mukkiya Kuripigal News

கண்டிப்பாக வீட்டில் கல் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அது மகாலட்சுமி வாசத்தை உண்டாக்கும். கல் உப்பை வெள்ளிக்கிழமை மட்டுமே வாங்கிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.பிற நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு கிண்ணம் நீரில் கல்லுப்பை போட்டு வீட்டில் ஓரத்தில் நுழைவாயில், வராண்டா போன்ற நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்தால் வீட்டுக்கு வருகை தருபவர்கள் யாருக்கும் தீய எண்ணம் இருந்தால் அதை அந்த உப்பு உறிஞ்சி விடுவதை அனுபவபூர்வமாக உணரலாம்.

எக்காரணம் கொண்டும் கீறல் விழுந்த அல்லது உடைந்த உப்பு ஜாடியை வைத்துக் கொள்ள கூடாது. உடனே வெளியே தூக்கி எறிந்து விடுவது நன்மை தரும்.

தீபம், வலம்புரிச் சங்கு, வலம்புரி விநாயகர், ருத்ராட்சம், பூஜைக்குரிய மணி, பகவான் உடைய நாமம் எழுதப்பட்ட வேத புத்தகம் இவைகளை வெறும் தரையில் வைக்க கூடாது.

மரப்பலகை, மரத்தால் செய்யப்பட்ட புத்தகம் வைக்கும் மடக்கு,மரத்தாங்கி இவைகள் மீது தான் வைக்க வேண்டும்.

பிரம்ம முகூர்த்தத்தில் சுமங்கலிகள் ஸ்நானம் செய்து நெற்றி திலகம் இட்டு மகாலட்சுமி தாய் முன் தீபம் ஏற்றி லட்சுமி சஹஸ்ரநாமம் சொல்லி வந்தால் சகல யோகங்களும் உண்டாகும்.

வீட்டில் செல்வ வளம் பெருக சில முக்கிய ஜோதிட குறிப்புக்கள் | Veetil Selva Valam Peruga Mukkiya Kuripigal News

துளசி மாடம் கட்டி தினமும் பூஜை செய்வது மிக உத்தமம். மாலையில் துளசி மாடத்தில் மண் அகல்விளக்கேற்றி வந்தால் வற்றாத செல்வம் பெருகுவதை அனுபவத்தில் காணலாம்.

பைரவர் சன்னதியில் வெள்ளை மிளகு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாருங்கள்.

வீடு கட்ட சிறந்த நாள் எது?

வீடு கட்ட சிறந்த நாள் எது?


கடன் பிரச்சனை தீரும். பணப்பெட்டியில் சிறிது வெள்ளைத் துணியில் சிறிது ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், சிறிது சோம்பு சேர்த்து முடிஞ்சு கட்டி வைக்கவும்.

பண வசியம் ஏற்படும்.துளசி செடியில் இருந்து துளசி இலைகளை வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் பறிக்கக் கூடாது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US