பிற கடவுள்களை போல் ஏன் பிரம்மாவிற்கு அதிக அளவிலான கோயில்கள் இல்லை தெரியுமா?
இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு புராணங்கள் உண்டு. அதில் பல செய்திகள் நமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அந்த வகையில் கல்விக்கு அதிபதி சரஸ்வதி தாயார் உயிர்களின் பிறப்பை எழுதும் பிரம்மாவை சபித்திருக்கிறார்.
அவர்களுக்கு இடையில் நடந்த சுவாரசிய சம்பவம் என்னவென்று பார்ப்போம். நாம் நன்றாக கவனித்து இருந்தால் இந்தியாவில் எல்லாம் தெய்வங்களுக்கும் அதிக அளவிலான கோயில்கள் இருந்தும் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன.
இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதாவது பிரம்மா நடத்தி வந்த பெரிய யாகத்திற்கு சரஸ்வதி தேவி மிகவும் தாமதமாக வந்திருக்கிறார். மேலும், சரஸ்வதி இல்லாமல் யாகம் நடத்த முடியாது என்பதால் பிரம்மா காயத்ரி தேவியை மணந்து சடங்கை தொடங்குகிறார்.
இதனால் மிகவும் மனம் உடைந்த சரஸ்வதி தேவி பிரம்மாவை சபிக்கிறார். இவ்வாறு சரஸ்வதி தேவிக்கு கொடுத்த சாபம் தான் பிரம்மாவை மிகவும் குறைந்து வழிபாடு செய்ய காரணமாக அமைந்து விட்டது.
அதனால் தான் மும்மூர்த்திகளில் சிவன், விஷ்ணுவிற்கு அதிக வழிபாட்டு தலங்கள் இருக்கும் நிலையில், பிரம்மாவுக்கு மட்டுமே 2 கோயில்கள் மட்டுமே உள்ளது. நம் தலை எழுத்தை எழுதியது பிரம்மன் என்று மக்கள் இடையே பேச்சுக்கள் நடமாட்டம் இருந்தாலும், அவரை வழிபாடு செய்பவர்கள் மிகவும் குறைந்த அளவிலே இருக்கிறார்கள்.
மேலும், சரஸ்வதி பிரம்மாவை சபித்தபோது, "நீ உலகம் முழுவதையும் ஆசையால் நிரப்பி, அனைத்து துக்கங்களுக்கும் விதையை உருவாக்கியுள்ளாய். இதனால், உன் பெயரில் சில கோயில்கள் மட்டுமே இருக்கும்," என்று கூறினார்.
இந்த காரணமாகத்தான் பிரம்மாவிற்கு இரு முக்கிய கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று ராஜஸ்தானின் புஷ்கரிலும் மற்றொன்று தமிழ்நாட்டிலும் இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |