ஜோதிட பலன்களை மாற்றுமா இறைவழிபாடு?
ஜோதிடம் என்பது உண்மை என்றாலும் பல நேரங்களில் ஜோதிடத்தை கடந்து பல அதிசயங்கள் நடந்து இருக்கிறது. அதாவது, ஜாதகத்தில் கிரக அமைப்புகள் சரி இல்லாமல் இருக்கும், ஆனால் ஜாதகர் வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கல்களும் இல்லாமல் இருப்பார்.
ஏன் இந்த இரு ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் பிரிவு உண்டாகும், குழந்தை பிறப்பதில் தாமதம், என்று எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால், அந்த ஜாதகர் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமைந்து இரண்டு குழந்தைகள் பெற்று இருப்பார்கள்.
அதே போல் ஒரு சில நபருக்கு நீங்கள் நினைத்த வேலைக்கு செல்ல முடியாது, அரசாங்க பதவி கிடைக்காது என்று எல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த நபர் அரசாங்க பதவியில் மிக உயரத்தில் இருப்பார். இதற்கு எல்லாம் அந்த ஜாதகர் இறைவன் மீது வைத்த அளவு கடந்த நம்பிக்கையே ஆகும்.
ஆக, ஜாதகம் ஒன்றை பேசலாம், ஆனால் தெய்வமும் ஒன்று பேசும். அது தான் நம்மை கடந்து ஒரு தெய்வ சக்தி இருக்கின்றது என்ற தவிர்க்க முடியாத உண்மையை உணர்த்துகிறது. நாம் இந்த உலகத்தில் என்ன அனுபவிக்க வந்திருகின்றமோ அதை கட்டாயம் அனுபவித்து செல்வோம்.
அதை யாரும் தடுக்க முடியாது. அதே போல் நடக்கவே முடியாது என்ற ஒன்றையும் சிறந்த தவத்தாலும், வழிபட்டாலும் நாம் இறைவன் அருளால் பெற முடியும். தீர்க்கமான நம்பிக்கை தான் வாழ்க்கை. தீர்க்கமான நம்பிக்கை தான் மாற்றம்.
ஆக, ஜோதிடம் நம் குழப்பங்களும் சந்தேகங்களுக்கும் ஒரு வழிகாட்டுதலாக இருந்தாலும், இறைவன் தான் எல்லாம், அவனை நம்பி சரண் அடைந்தவர்கள் கெட்டு போனது இல்லை.
இதைத்தான் நாள் என்ன செய்யும், நாடி வந்த வினை என்ன செய்யும், கோள் என்ன செய்யும், கொடும் குற்றம் தான் என்ன செய்யும், என் இரு கரமும் என் வேலன் கால் பிடித்து நிற்க்க என்று அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
இறைவனை சரண் அடைவோம், அவனை மீறி ஒரு சக்தி இந்த உலகத்தில் இல்லை, அவனை மிஞ்சிய துணையும் நமக்கு இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |