ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை பெறும் கும்பம்... இனி ஜாக்பாட் அடிக்கும் காலம் தான்
சனி பகவான் என்றாலே எல்லோரும் பயந்து விடுவது உண்டு. அதிலும், ஏழரை சனி என்றால் வாழ்க்கையில் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று குழம்பி விடுவார்கள். அந்த வகையில், பல ஆண்டு காலமாக கும்ப ராச்சிக்கு ஏழரை சனி நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், சனி அடுத்ததாக மேஷ ராசிக்கும் செல்கின்ற பொழுது கும்ப ராசிக்கு ஏழரைச் சனியில் விடுதலை கிடைக்கிறது. சந்திர ராசியை கொண்டு பார்க்கின்ற பொழுது சனி சந்திரனுக்கு முன் இருக்கும் 12 வது ராசி மற்றும் சனிக்கு அடுத்த இரண்டாவது ராசி ஆகிய மூன்று ராசிகளில் பயணிக்க கூடிய காலமே ஏழரை சனி என சொல்கின்றோம்.

மேலும், கும்ப ராசி பொருத்தவரை சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சென்ற போது ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்கியது. தற்போது சனி பகவான் மீன ராசியில் இருப்பதால் கும்ப ராசிகளுக்கு ஏழரை சனியின் மூன்றாவது கட்டம் நடைபெற்று வருகிறது. சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு நுழைந்தார். 2026 சனி மீன ராசியிலே தொடர்ந்தார்.
கும்ப ராசிக்கு சனியின் இறுதி காலகட்டம் என்பதால் இவர்களுக்கு பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். 2026 ஜூலை இறுதியில் சனி பகவான் வக்கிர பெயர்ச்சி தொடங்கியது. 2026 டிசம்பர் வரை இவை நீட்டிக்கும்.
மேலும், ஜோதிட பார்வையில் சனி பகவானுடைய இந்த வக்கிர பார்வை நீண்ட நாட்கள் முடிவடையாமல் இருக்கக்கூடிய பிரச்சனைகள், பண விவரங்கள், குடும்ப பிரச்சினைகள் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகள் மீண்டும் பரிசீலனை செய்யக்கூடிய காலமாக கருதப்படுகிறது.

ஆதலால், இந்த காலகட்டங்களில் கும்ப ராசியினர் மீண்டும் ஒரு முடிவு எடுப்பது விட கடந்து காலங்களில் எடுத்த முடிவுகளை பரிசீலனை செய்வது அவசியம். ஜோதிடக் கணக்குப்படி, 2027 ஜூன் 3-ம் தேதி சனி மேஷ ராசிக்குள் நுழையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசி சனிபகவானுடைய நீச ராசியாக கருதப்படுகிறது. அதனால், சனிபகவான் மேஷத்திற்கு செல்லும் போது கும்ப ராசியினர் ஏழரை சனி நீண்ட கால பயணத்தில் இருந்த ஒரு முக்கிய திருப்தத்தை சந்திக்க போகிறார்கள். செலவுகள், கடன் சுமை ஆகியவற்றிலிருந்து விடுபடுவார்கள். அதனால் நீண்ட நாள் மன கஷ்டங்கள், விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |