கோயிலுக்கு சென்று வீடு திரும்பியதும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்
கோயிலுக்கு சென்று வீடு திதிரும்பியதும் நிச்சயமாக நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போதுதான் தரிசனம் செய்த முழு பலன் பெறலாம்.
அந்த வகையில், கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு நாம் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
கோயில்களுக்கு சென்று தரிசனம் முடித்த பிறகு வீடு திரும்பியதும் உடனடியாக குளிப்பது கை கால்களை கழுவி கொள்வது ஆகியவை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு நேரடியாக பூஜை அறைக்கு சென்று இறைவனை வழிபாடு செய்து சிறிது நேரம் அமர்ந்து பிறகே கை கால்களை கழுவி கொள்வது வேண்டும்.

மேலும், கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு முடிந்தவரை சண்டை போடுவதை தவிர்த்துக் கொள்ளலாம். தேவையில்லாத வாக்குவாதங்கள் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். கோவில் தரிசனம் முடிந்து வீடு திரும்பிய பிறகு முடிந்தவரை அமைதியை கடைப்பிடிப்பது அவசியம் தேவை.
எதைப் பற்றியும் ஆலோசனை செய்யாமல் குழப்பங்களை தவிர்த்து இறைவனையே மனதில் நிறுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது அந்த நல்ல அதிர்வலைகள் தொந்தரவு அடையாமலும் அந்த ஆற்றல் நம்மோடு கலந்து நமக்கு புத்துணர்ச்சியும் மனமும் உடலும் ஒரு நிலை அடைந்து செயல்பட தொடங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |