சிவனின் அருளை பெற கட்டாயம் இன்று(28-05-2025) செய்யவேண்டிய சந்திர தரிசனம்
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் சந்திர தரிசனம் செய்தால் நாம் சிவபெருமானையே தரிசனம் செய்த முழு பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதாவது, பூலோகத்தில் வாழும் மக்களுக்கு மூன்றாம் பிறை சந்திர ரூபத்தில், சிவபெருமான் நேரடியாக காட்சி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக, இன்று (28-05-2025) சந்திர தரிசனம் செய்ய நினைப்பவர்கள் எவ்வாறு தரிசனம் செய்யவேண்டும் என்று பார்ப்போம். இன்று சிவபெருமானின் அருளை பெற மாலை 6:30 மணிக்கு மேற்கு திசையில் உதிக்கும் மூன்றாம் பிறை நிலவை தரிசனம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான மக்கள் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை வீடுகளில் இருந்தபடியே தான் செய்வார்கள். ஆனால், வாய்ப்பு உள்ளவர்கள் இந்த தரிசனத்தை தஞ்சை பெரிய கோயில் சென்று தரிசனம் செய்தால் சிவபெருமானின் பரிபூர்ண அருள் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை ஒவ்வொரு மாதம் வரும் அமாவசையில் இருந்து மூன்றாம் நாள் நாம் தஞ்சை பெரிய கோயில் சென்று தரிசனம் செய்து வரலாம்.
மேலும், தங்கள் வாழ்க்கையில் தொடர் பிரச்சனைகள் சந்திக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக கட்டாயம் இந்த சந்திர தரிசனம் செய்வது அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
அதோடு, தற்பொழுது மழை காலமாக இருக்கிறது, அதனால் வானம் மேகமூட்டமாக இருப்பதால் சரியாக பிறை நிலவு தெரியவில்லை என்றால் மேற்கு நோக்கியவாறு நின்று கொண்டு மாலை 6:30 மணியிலிருந்து 6:45 மணி வரை, இந்த இடைப்பட்ட 15 நிமிட நேரத்தில் வேண்டுதல் வைத்தாலும், சிவன் அருளால் நமக்கு வாழ்க்கையில் தெளிவு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |