30 ஆண்டுகளுக்கு பின் சனியின் வக்கிர நிலை- பணமழையால் மகிழ்ச்சி யாருக்கு?
சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி ஆவார். அப்படியாக, தற்பொழுது மீன ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் ஜூலை மாதம் 30 ஆண்டுகளுக்கு பிறகு வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார்.
சனி பகவானின் இந்த வக்கிர நிலை 12 ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு நல்ல மாற்றத்தை வழங்குவார். அவ்வாறு சனியின் இந்த வக்கிர நிலையால் மகிழ்ச்சி எந்த ராசிகளுக்கு என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்கு சனியின் இந்த வக்கிர நிலை வாழ்க்கையில் நல்ல தெளிவை கொடுக்கும். சிலருக்கு தொலை தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் கைகூடும். புதிய தொழில் தொடங்கும் யோசனையும் வாய்ப்புகளும் உருவாகும்.
கும்பம்:
இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு பணம் தேடி வரும். சிலருக்கு திருமணம் வரன் நினைத்தபடி அமையும். காதல் வாழ்க்கை கைக்கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாங்கிய கடனை அடைக்கும் பாக்கியம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் விலகும். நிலம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் சாதகமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |