நினைத்த கல்வியும் வேலையும் கிடைக்க சொல்ல வேண்டிய முருகர் மந்திரம்

By Sakthi Raj May 30, 2025 08:06 AM GMT
Report

இந்த உலகம் பல அதிசயங்கள் கொண்டு நிறைந்தது. நாம் என்ன நினைகின்றமோ அது கட்டாயம் நடந்தே தீரும். அதற்காகத்தான் முன்னோர்கள் நம்முடைய எண்ணங்களில் தெளிவாக இருக்க வேண்டும் என்றனர்.

அந்த எண்ணம் நிறைவேற கூடுதல் சக்தி கொடுக்கும் வகையில் அமைவது தான் இறைவழிபாடு. இறைவனை சரண் அடைந்தால் நாளுக்கு நாள் அவன் அருளால் உலகை உணரலாம், நினைத்ததை சாதிக்கலாம்.

புராணங்கள் கணக்குகள்படி நாம் இப்பொழுது வாழ்வது கலியுகம் ஆகும். இந்த கலியுகத்திலும் பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காப்பாற்றும் இறைவன் தான் முருகன். முருகா என்று தஞ்சம் அடைய அவன் நிச்சயம் நம்மை வாழ்க்கையில் உயர் நிலைக்கு கொண்டு செல்கின்றான்.

நினைத்த கல்வியும் வேலையும் கிடைக்க சொல்ல வேண்டிய முருகர் மந்திரம் | Murugan Manthiram To Get A Good Job And Studies 

அந்த வகையில் மனிதனுக்கு சிறந்த கல்வியும் வேலை வாய்ப்பும் மிக மிக அவசியம். இவை இரண்டும் சரியாக அமைந்து விட்டால் அவன் வாழ்க்கையே மாறி விடுகிறது.

அந்த வகையில் மாணவர்கள் தங்கள் நினைத்த கல்வி கிடைக்கவும், படிப்பை முடித்து அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கவும் முருகப்பெருமானை சரண் அடைந்து கீழ்கண்ட மந்திரங்கள் பாராயணம் செய்து வர முருகன் அருளால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை நினைத்தபடி நடக்கும்.

பாரிமுனையின் காவல் தெய்வம் - காளிகாம்பாள் கோவில் சிறப்புப் பார்வை

பாரிமுனையின் காவல் தெய்வம் - காளிகாம்பாள் கோவில் சிறப்புப் பார்வை

மந்திரங்கள்:

"ராஜராஜஸகோத் பூதம்
ராஜீவாயத லோசனம்
ரதீசகோடி ஸெளந்தர்யம்
தேஹிமே விபுலாம் ச்ரியம்"

இந்த மந்திரத்தை தினமும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதும், அல்லது தங்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்று மனம் விரக்தி நிலையில் இருக்கும் பொழுது தவறாமல் சொல்லி வர கட்டாயம் நினைத்த வேலையும் படிப்பும் அந்த அப்பன் முருகன் அருளால் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US