சாணக்கிய நீதி: உண்மையான உறவுகளை எப்படி கண்டுப்பிடிப்பது?
சாணக்கியர் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும், யாரை நம்ப வேண்டும்? யாரை நம்பக்கூடாது என்று பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் நம்மிடம் பழகும் உறவுகளில் யார் உண்மை ஆனவர்கள் என்பதை எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்று சில விஷயங்கள் வழியாக கண்டுபிடிக்கலாம் என்று சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
1) உறவுகளில் மிகவும் உன்னதமான உருவாக கணவன் மனைவி உறவுகள் இருக்கிறது. இதில் கணவன் பொருளாதார ரீதியாக பின் தங்கும் பொழுது, மனைவி கணவனை எவ்வாறு நடத்துகின்றாள் என்பது பொறுத்து தான் அவள் கணவன் மீது உண்மையான அன்பு வைத்திருக்கின்றாளா? என்பதை தெரிந்து முடியும் என்கிறார்.
மேலும், எந்த ஒரு ஆணிற்கும் அவன் கஷ்ட காலங்களில் மனைவி துணையாக இருக்கும் பொழுது அவன் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி அடைந்து விடுவான் என்கின்றார்.
2) உறவுகளுக்கு அடுத்தபடியாக நண்பர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நல்ல நண்பர்கள் எல்லார் வாழ்க்கையிலும் தேவை. அப்படியாக, சாதரணமாக நட்பு என்று சொல்வதை காட்டிலும் ஒரு கஷ்ட காலத்தில் நட்புகள் ஒருவருக்கு எவ்வாறு உதவி செய்கிறார்கள் என்பது பொறுத்தான் அந்த நட்பு உண்மையாகிறது. உதவி என்பது பொருளாதார ரீதியாக இல்லை என்றாலும் ஆறுதல் வார்த்தைகள் ஆவது நட்புகள் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறதா? என்று நாம் பார்க்க வேண்டும்.
3) மேலும், நம்மிடம் வேலை செய்பவர்கள் காலம் காலமாக நம்மிடம் வேலை பார்த்து கொண்டு இருந்தாலும், நாம் கொஞ்சம் தடுமாறும் பொழுது அவர்கள் எந்த அளவிற்கு நம்மை மரியாதையாக வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சிலர் முதலாளி ஏதேனும் பொருளாதார சிக்கலில் இருக்கிறார் என்று தெரிந்து விட்டால் வேலை விட்டுவிட்டு வேற வேலைக்கு சென்று விடுவார்கள். அவ்வாறு இல்லாமல் நடக்கும் காலம் கஷ்ட காலம் என்றாலும் விரைவில் அவை கடந்து விடும் என்று யார் நம்பிக்கையாக இருக்கிறார்களோ அவர்களே உண்மையானவர்கள். அவர்களை நாம் பத்திரமாக பார்த்து கொள்வது மிக மிக அவசியம் என்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |