உங்கள் கனவில் கருடன் வருகிறதா? சாஸ்திரம் சொல்வதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய இந்து மதத்தில் பெருமாளின் வாகனமாக இருக்க கூடியவர் கருட பகவான். அதனால் கருட பகவானை கனவிலும் நேரிலும் தரிசிப்பது சிறந்த பலனை கொடுக்கும் என்கிறது சாஸ்திரங்கள். அப்படியாக, நம்முடைய கனவில் எதிர்பாராத விதமாக கருட பகவான் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
பெருமாளின் கருட வாகன தரிசனம் மிக சிறந்த மற்றும் அதிர்ஷ்டம் வாய்ந்த தரிசனமாக பார்க்கப்படுகிறது. அதாவது, பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட வாகனத்தில் பெருமாளை தரிசிக்கும் பொழுது நம்முடைய உடல் சிலிர்த்து விடும் என்று தான் சொல்ல வேண்டும்.
அதோடு எவர் ஒருவர் பெருமாளை கருட வாகனத்தில் தரிசனம் செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். அதோடு எதிரிகள் தொல்லை, நோய் மற்றும் உடல் உபாதைகளால் அவதி படுபவர்கள் கருடனை வழிபாடு செய்தால் அவர்களுக்கு கருடன் அருளால் வாழ்க்கையில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அதோடு, கருட பகவானை வழிபாடு செய்பவர்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதாக நம்பப்படுகிறது. அதனால், கருடன் கனவில் வந்தால் நமக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், கருடன் கனவில் வரும் பொழுது பெருமாள் வழிபாடு செய்ய சொல்லும் ஒரு அறிகுறி என்றும் எடுத்து கொள்ளலாம். ஆதலால், கருட பகவான் கனவில் வரும் பொழுது அவரை வழிபாடு செய்து பூஜை செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |