பூஜை செய்யும் பொழுது தவறாமல் செய்யவேண்டிய 7 விஷயங்கள்
நிலையற்ற வாழ்க்கையில் நமக்கு நிம்மதி கொடுப்பது இறைவழிபாடு தான். அப்படியாக, இந்துக்கள் வீடுகளில் தவறாமல் காலை மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு ஒரு வித நேர்மறை ஆற்றல் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அந்த வகையில் பூஜை செய்யும் பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான 7 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1) வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெறுக தினமும் ஹனுமான் சாலிசாவை ஒலிக்க செய்யலாம். அல்லது பாராயணம் செய்யலாம், இவ்வாறு செய்யும் பொழுது நம் மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கிறது.
2)தினமும் தவறாமல் வீடுகளில் கற்பூரம் ஏற்றுங்கள். இதை ஏறும் பொழுது வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகுவதோடு, வாஸ்து குறைபாடுகள் நீங்குகிறது.
3)வெல்லம் மற்றும் நெய்யால் தூபம் தயாரிக்கவும். இது வளிமண்டலத்தை சுத்தப்படுத்தி, தெய்வீக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
4)வாரத்தில் முக்கியமான நாளான வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கட்டாயம் சாம்பிராணி தூபம் போடுங்கள். இவை குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
5)வாரத்தில் ஒரு நாளாவது முடிந்த நைவேத்தியங்களை படைத்து பூஜை செய்து வழிபாடு செய்யுங்கள்.
6)வாரம் ஒரு முறை இல்லை என்றாலும் மாதம் ஒரு முறையாவது கோயில்களுக்கு சென்று வாருங்கள். இது மனதை அமைதியாக வைக்கிறது.
7) தேங்காய் சடங்கு செய்யுங்கள். அதாவது ஒரு புதிய தேங்காயை 21 முறை சுற்றி புனித மலை அல்லது கோயில் நெருப்பில் பலியாகக் கொடுங்கள்.
இவ்வாறு செய்யும் பொழுது நம் வீட்டில் ஆன்மீக சக்திகள் அதிகரிப்பதோடு, நேர்மறை ஆற்றல் பெருகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |