56 அடி உயர சிவலிங்கத்திற்குள் கோவில்-எங்கு இருக்கிறது தெரியுமா?

By Sakthi Raj Jun 04, 2025 08:09 AM GMT
Report

உலகமே பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டு நிறைந்தவை. அப்படியாக, 56 அடி உயர சிவலிங்கத்திற்குள் கோவில் ஒன்று அமைய பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த கோயில் எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.

பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த கோயில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகா வனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. அதாவது, புராண காலங்களில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து, ஆடையாக உடுத்திக் கொண்டதாக வழுவூர் தல புராணம் சொல்கிறது.

56 அடி உயர சிவலிங்கத்திற்குள் கோவில்-எங்கு இருக்கிறது தெரியுமா? | 56 Tall Shivan Feet In Mayiladuthurai In Tamilnadu

மேலும், இந்த கோயிலை பற்றி அந்த கோயில் நிர்வாகிகள் சொல்வதாவது இந்த தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அக்காலத்தில் 48 சித்தர்கள் தவமிருந்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து 56 அடி உயரம் கொண்ட சிவலிங்க கோயிலைக் கட்டியுள்ளதாக கோயிலின் நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

காளஹஸ்தி கோயில்: ஆன்மீகம், அறிவியல், வரலாறு சங்கமிக்கும் அற்புதத் தலம்

காளஹஸ்தி கோயில்: ஆன்மீகம், அறிவியல், வரலாறு சங்கமிக்கும் அற்புதத் தலம்

மேலும், கோயிலின் உட்புறம் பூமியில் இருந்து கல் எடுக்கப்பட்டு 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் 2018லிருந்து தொடங்கி பணிகள் முடிந்து இந்த 2025 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இவ்வளவு வித்யாசமான சிறப்பம்சம் கொண்ட கோயிலை தரிசிக்க பல ஊர்களில் இருந்து மக்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதோடு, தற்பொழுது கோயிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவித்து உள்ளார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US