இன்றைய ராசி பலன்(30-05-2025)
மேஷம்:
வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகி செல்வார்கள். உடல் அசதி உண்டாகும். எதையும் துணிந்து செயல்படுவீர்கள். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
ரிஷபம்:
குடும்பத்தில் சந்தித்த சிக்கல்கள் விலகும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய பயம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சகோதரன் சகோதிரி உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்:
இன்று மனதில் கவலை உண்டாகும். தாய் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிவுடன் செயல்பட வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
கடகம்:
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான செயலிலும் பொறுமை தேவை. வேலையில் இருப்பவர்கள் நிதானமுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்:
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். தம்பதிகள் இடையே நல்ல ஒற்றுமை நிலவும். பழைய கடன்களை அடைக்கும் யோகம் உண்டாகும். வண்டி வாகனத்தில் கவனம் அவசியம்.
கன்னி:
செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. புதிய நபர்களை நம்பி எதிலும் இன்று ஈடுபட வேண்டாம். நினைத்ததை நடத்தி முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும்.
துலாம்:
திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் துணிச்சலாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இறை அருளால் மனம் தெளிவடையும்.
விருச்சிகம்:
மனக்குழப்பம் உண்டாகும். எதையோ இழந்தது போல் வருத்தமடைவீர். பண விவகாரத்தில் கவனம் தேவை. நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் பிரச்னை உங்களைத் தேடி வரும்.
தனுசு:
இன்று சிலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்துடன் நேரத்தை செலவுசெய்வீர்கள்.
மகரம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிலும் நிதானம் தேவை. சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.
கும்பம்:
உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்.
மீனம்:
உடன் வேலை செய்யும் நபர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். இறைவழிபாடு மட்டுமே நிம்மதியை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |