அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய ராமனின் 5 வீர குணங்கள்
ராமாயணம் உலகம் போற்றும் மிக பெரிய காவியம் ஆகும்.மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையில் ராமாயணம் படித்து கற்று கொள்ள ஏராளமான விஷயங்கள் ஒளிந்து இருக்கிறது.அப்படியாக ராமாயணத்தின் காவிய தலைவன் ராமபிரானின் 5 வீர குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
அதாவது ஸ்ரீ ராமனின் அந்த வீர குணத்தை பின்பற்ற ஒருவருக்கு பெரும் வீரம் தேவை.காரணம் துன்பம் மட்டும் கெட்ட காலங்களில் நல்லவர்களும் வீழ்ந்து போகும் விதி உண்டு.அதில் சிலர் தடம் புரண்டு போவதையும் காணமுடியும்.
ஆனால் ராமபிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும், தர்மத்தின் வழியையேக் கடைப்பிடித்தான். அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுகின்றனர்.அப்படியாக ராமபிரான் பின்பற்றிய அவரின் அந்த ஐந்து வீரங்கள் பற்றி பார்ப்போம்.
1. தியாக வீரம்:
கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன், தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உள்ளதோ? அப்பா, அம்மாவை எதிர்த்துப் போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.
2. தயாவீரம்:
சாதி மதம் பார்த்து பழகும் இன்றைய சூழலில் ராமபிரான் அன்றே வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் தனது சகோதரர்களாக ஏற்றுக்கொண்டார்.எல்லோரிடமும் ஸ்ரீ ராமபிரான் அன்பும் கருணையோடும் நடந்து கொண்டார்.சபரிக்கு மோட்சம் கொடுத்தான். மாபெரும் தவறு இழைத்த அகல்யைக்குச் சாப விமோசனம் அளித்தான்.
3. வித்யாவீரம்:
ராமனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். அதாவது போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொள்ளாமல் “இன்று போய் நாளை வா” என்று சொன்ன உத்தம வீரர்.அதாவது வீழ்ந்து கிடப்பவனை வீழ்த்துவதில் அழகில்லை என்பதை ஆணித்தரமாக கடைபிடித்தார்.
சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான். ஒரு சலவைத் தொழிலாளி சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலைநாட்ட அவளைப் பூக்குழி இறங்க உத்தரவிட்டான்.இராமன் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான்.
4. பராக்ரமவீரம்:
இருபத்தொரு தலைமுறை சத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலைநாட்டினான் ராமன். ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான். ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
5. தர்மவீரன்:
“இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன்” என்று புதுநெறி உருவாக்கிய நாயகன் அவன். எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, இராமன், சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவர்.தர்ம நெறி தவறாதவர்.ஆதலால் தான் பெண்கள் ராமபிரான் போல் மணமகன் வேண்டும் என்று எண்ணினார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |