மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?
By Yashini
ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும், சிலர் மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய நபராகவும், சிலர் அதிர்ஷ்டத்துடனும் பிறந்திருப்பார்கள்.
ஆனால் ஒரு சில ராசிக்காரர்கள் பன்முகத்தன்மை நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
அந்தவகையில், மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மேஷம்
- இவர்கள் இயற்கையாகவே போர் குணமுள்ளவர்கள்.
- போட்டியாளர்களுக்கு எதிராக சவால்விட தயங்கமாட்டார்கள்.
- இவர்களுக்கு எதிராளியை எப்படி சமாளிப்பது என்று நன்கு தெரியும்.
- இவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை.
சிம்மம்
- இவர்கள் தன்னம்பிக்கை மற்றும் செல்வாக்குமிக்கவர்கள்.
- இவர்களுக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.
- எப்போதும் அழுத்தம் நிறைந்த இடத்தில் வேலை செய்ய விரும்பமாட்டார்கள்.
- இவர்கள் எப்போதும் துணிச்சலானவர்கள் மற்றும் அச்சமற்றவர்கள்.
- இவர்களை யாரேனும் பகைத்துக் கொண்டால் அவர்களை வருத்தப்பட வைப்பார்கள்.
விருச்சிகம்
- இவர்கள் கோபம் மற்றும் திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள்.
- இவர்கள் யாராலும் கணிக்க முடியாத அளவில் இருப்பார்கள்.
- வாழ்நாள் முழுவதும் எதிரியை எதிரியாகவே பார்ப்பார்கள்.
- வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள்.
மகரம்
- இவர்களுக்கு சவால் விடுபவர்களுக்கு ஆபத்தானவர்கள்.
- தங்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணக்கூடியவர்கள்.
- தன்னைக் காயப்படுத்தியவரை பழிவாங்காமல் விடமாட்டார்கள்.
- இவர்கள் எதையும் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள்.
- தந்திரமாக செயல்பட்டு எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
கும்பம்
- இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள்.
- சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள்.
- யாராவது தங்கள் வாழ்க்கையில் தலையிட்டால் அதை எளிதில் மறக்கமாட்டார்கள்.
- பகையை மனதில் நீண்ட காலம் வைத்திருப்பார்கள்.
- அதை தீர்க்க சரியான நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |