சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா?

By Sakthi Raj Jun 11, 2025 09:34 AM GMT
Report

உலகத்தை அறிந்து எல்லாம் கற்று தெளிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் இறைவழிபாடு தொடங்கி உடல் ஆரோக்கியம் வரை அனைத்து சந்தேகங்களுக்கும் நல்ல தீர்வை விட்டு சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் ஆபத்தை தரக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் ஒரு மனிதனின் கர்ம வினைகளை அகற்றி அவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதலை கொடுக்கக்கூடியவர். மேலும், எவ்வளவு பலம் மிக்கவராக இருந்தாலும் சனி திசை காலங்களில் அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய சவால்களை அவர்கள் சந்திக்க வேண்டும்.

சித்தர்கள் கூறிய சனீஸ்வர தீபம்- எப்பொழுது ஏற்ற வேண்டும் தெரியுமா? | Sanibagavan Valipadum Parigarangalum

இதனை அறிந்து தான் சித்தர்கள் சனி பகவானின் தாக்கம் குறைய நாம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம். சனி பகவானுக்கு மூன்று எண்ணெய்கள் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அதாவது, நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் எடுத்துக்கொண்டு ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திசையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வர வேண்டும். இதனை சனீஸ்வர தீப வழிபாடு என்கிறார்கள் சித்தர்கள்.

எந்த லக்னக்காரர்கள் எந்த நவரத்தின கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

எந்த லக்னக்காரர்கள் எந்த நவரத்தின கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

இந்த தீபத்தை சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிபகவானுக்கு உரிய சனிக்கிழமையில் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகுநீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து பகவானின் தாக்கம் குறைய நன்றாக பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த பரிகாரத்தை எவர் ஒருவர் தாங்க முடியாத மன குழப்பங்கள் மற்றும் சனியால் தாங்க முடியாத பாதிப்பில் இருக்கிறார்களோ அவர்கள் ஏற்றி வழிபாடு செய்ய நல்லதோர் நிவாரணம் பெறலாம் என்கிறார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US