ஆனி மாதத்தில் இந்த பொருட்களை தானம் செய்வதால் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?
தமிழ் மாதம் ஒவ்வொரு மாதமும் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு மாதமாகும். இந்த ஆனி மாதத்தில் தான் சிவபெருமானுக்கு ஆனி திருமஞ்சனமும், பெருமாள் ஆலயங்களில் ஜேஷ்டாபிஷேகமும் நடைப்பெறும். இந்த ஆண்டு ஆனி மாதம் ஜூன் 15ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது.
இந்த நாளில் தான் சூரியன் மிதுன ராசிக்கு செல்ல பெயர்ச்சி ஆவார். இந்த நாளை மிதுன சங்கராந்தி என்றும் அழைப்பது உண்டு. அப்படியாக, இந்த ஆனி மாதத்தில் நாம் குறிப்பிட்ட சில பொருட்களை தானம் செய்வதால் நம்முடைய பொருளாதரத்தில் முன்னேற்றமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகுவதாக சொல்கிறார்கள். அதை பற்றிப் பார்ப்போம்.
1) ஆனி மாதம் பிறப்பில் நாம் உணவுகள் தானம் செய்வது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று கொடுப்பதாக சொல்கிறார்கள். மேலும், தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். அதை நாம் செய்யும் பொழுது நம்முடைய பல தலைமுறையினருக்கு உணவால் பஞ்சம் உண்டாகாது. அவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள்.
2) ஆனி மாதம் கோடை காலத்தின் நிறைவாக வருகிறது. சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும். அப்படியாக, நாம் தண்ணீர் தானம் செய்வது மிக சிறந்த பலன் கொடுப்பதாக சொல்கிறார்கள். இதை "ஜல தானம்" என்று சொல்வார்கள். இது முன்னோர்களின் ஆத்மாவை சாந்திப்படுத்தும் ஒரு தானம் ஆகும்.
3) ஆனி மாதத்தில் பச்சை பயிறு தானம் செய்வது மிக சிறந்த நன்மை கொடுக்கும். இப்படி தானம் செய்தால் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவடையும். அவர்களுக்கு பேச்சு திறமை அதிகரிக்கும்.
4) இந்த மாதத்தில் நாம் இனிப்புகளை தானம் செய்யலாம். அதாவது, இந்த மாதத்தில் சர்க்கரை, வெல்லம் அல்லது இனிப்புகளை தானம் செய்யுங்கள். இதை பிராமணர்களுக்கு, குழந்தைகளுக்கு அல்லது கோவிலுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் சந்தோசம் அதிகரிக்கும். மேலும், வீட்டில் அதிர்ஷ்டத்தை தேடிக்கொடுக்கும்.
5) ஆனி மாதத்தில் தாமிரம் தானம் செய்வது சிறந்தது. சூரியபகவானுக்கு மிகவும் பிடித்த இந்த தாமிரப் பொருட்கள் அல்லது நாணயங்களை பிராமணர்களுக்கு தானம் செய்யலாம். இவ்வாறு வழங்குவது ஒருவருக்கு நல்ல மரியாதையை பெற்றுக்கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |