பகவத் கீதை: நிம்மதியான வாழ்விற்கு கீதை சொல்லும் 6 முக்கிய வழிகள்
பகவத் கீதை மனிதர்கள் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு மனம் தளராமல் வாழவேண்டும் என்று கீதை நமக்கு பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை எடுத்துரைக்கிறது.
அப்படியாக, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் கோபம் கொள்வது என்பது சாதாரணமான விஷயம் என்றாலும், நமக்கு உண்டாகும் கோபத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதால் நாம் சந்திக்கும் பல ஆபத்துகளில் இருந்து நாம் நம்மை காத்து கொள்ளலாம் என்கிறது கீதை.
அந்த வகையில் கோபத்தில் இருந்து விடுபடவும், சந்தோஷமாக வாழவும் கீதை சொல்லும் 6 முக்கியமான வழிகள் பற்றி பார்ப்போம்.
1. மனிதனுக்கு இருக்கவேகூடாத முக்கியமான ஒரு விஷயங்களில் முன் கோபம் ஒன்றாகும். ஆதலால், நாம் கோபம் கொள்ளும் முன் சற்று சிந்திப்பது அவசியம் ஆகும். அதனால் நாம் பல விஷயங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
2. நாம் எப்பொழுதும் நம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பழகி கொள்ள வேண்டும். அதாவது துக்கம் வந்த போதிலும், மகிழ்ச்சி வந்த போதிலும் நாம் நிலையான மனநிலை கொண்டு இருக்க நம்மை யாராலும் அசைத்து பார்க்க முடியாது.
3. மனிதன் விடவேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று அவனின் தாழ்வு மனப்பான்மை ஆகும். தாழ்வு மனப்பான்மை ஒரு மனிதனை அழித்து விடும். சமயங்களில் அதுவே அவனின் எதிரி ஆகிறது.
4. நாம் எப்பொழுதும் நம்முடைய கோபம், வார்த்தைகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இதில் கட்டுப்பாட்டை இழந்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதியையும் இழக்கிறார்கள்.
5. எவன் ஒருவன் தன்னுடைய சுக துக்க நிகழ்வுகளில் தன்னிலை இழக்காமல் இருக்கின்றானோ அவன் மிக பெரிய வெற்றி அடைகின்றான்.
6. எப்பொழுதும் நாம் வெற்றி தோல்வி என்பதில் கவனம் செலுத்தாமல் நம்முடைய கடமைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நாம் பாதி இலக்கை அடைந்து விடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |