கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?- விஷ்ணு புராணத்தின் 5 கணிப்புகள்
பொதுவாக கலியுகத்தில் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விஷ்ணு புராணங்களில் பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.
விஷ்ணு புராணம், மகாபாரதம் மற்றும் பிற புராணக் கதைகளில் கலியுகம் கலி காலம் என்று அழைக்கப்படுகிறது.
பூமியில் தர்மம் அழிந்து, மக்கள் மனிதாபிமானம், கருணை மற்றும் இரக்கம் போன்றவற்றை மறந்துவிடும்போது, அது கலியுகத்தின் உச்சமாக கருதப்படுகிறது.
அந்தவகையில், விஷ்ணு புராணத்தில் கலியுகம் பற்றிய 6 கணிப்புகள் என்னவென்று பார்ப்போம்.
இளம் வயதில் நரை
12 வயதிலேயே மக்களுக்கு நரை முடி வரும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. 20 வயதிற்குள் பல நோய்கள் வந்துவிடும். இதனால், அவர்களின் ஆயுட்காலம் குறையும்.
ஆயுட்காலம் குறையும்
கலியுகத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 20 வயது வரை தான் இருக்கும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
கண்களின் அளவு சிறிதாகும்
கலியுகத்தில் மனிதர்களின் கண்களின் அளவு சிறியதாகிவிடும். சீக்கிரமே பார்வை குறைபாடு ஏற்படும். ஒருவரை ஒருவர் சரியாக பார்க்க முடியாது.
6 வயது சிறுமிகளுக்கு குழந்தை பிறக்கும்
கலியுகத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 12 முதல் 20 ஆக குறைவதால், குழந்தை பெறும் வயதும் குறைந்துவிடும். 6-7 வயது சிறுமிகளும், 8-9 வயது சிறுவர்களும் குழந்தைகளை பெறுவார்கள்.
மனிதர்களின் உயரம் குறையும்
விஷ்ணு புராணத்தின்படி, கலியுகம் உச்சத்தில் இருக்கும் போது, மனிதர்களின் சராசரி உயரம் மிகவும் குறைந்து விடும். கலியுகம் உச்சம் அடையும் போது மனிதர்கள் 4 அடியாக குறைந்துவிடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |