விநாயகர் சதுர்த்தி: வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய இந்த 7 பரிகாரம் செய்ய தவறாதீர்கள்
2026 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், வீடுகளில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை அவல், பொரி படைத்தது வழிபாடு செய்வோம்.
பொதுவாக, விநாயகப் பெருமான் ஒருவருடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய தடைகளை அகற்றக்கூடிய ஒரு சக்தி பெற்றவர். அதனால் நாளை நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் சிறப்பான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எட்டு பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
1. தடை நீங்க:
விநாயகருக்கு 21 நெய் தெய்வம் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது எப்பேர்பட்ட தடைபட்ட காரியமும் நிறைவேறும்.

2. மனக்குழப்பம் நீங்க:
ஒரு சிலருக்கு ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இல்லை என்றால் அவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். அவர்கள் 21 அருகம்புல் சமர்ப்பித்து மன குழப்பங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம் நல்ல பலன் உண்டு.
3. தொழில் தடைகள் அகல:
தொழில் ரீதியாக சந்திக்கக்கூடிய தடைகள் விலக 21 மோதகம் நெய்வேத்தியம் செய்து தொழில் தடைகள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்ளலாம். நிச்சயம் நல்ல லாபம் உண்டாகும்.
4. பணவரவு சீராக:
விநாயகர் முன்பாக ஒரு தேங்காய் வைத்து அதனுடன் சிறிதளவு வெல்லம் படைத்து வழிபடுவது பணவரவை பெற்றுக் கொடுக்கும்.
5. குடும்ப ஒற்றுமைக்காக:
குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் அமர்ந்து விநாயகப் பெருமானுக்கு மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நிச்சயம் குடும்பத்தில் ஏற்படக்கூடிய மனக்கசப்புகள் நீங்கும்.

6. திருமணத் தடை நீங்க:
விநாயகப் பெருமானுக்கு சிவப்பு செம்பருத்தி பூ சமர்ப்பித்து, திருமண தடைகள் யாவும் நீங்கி ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைய பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
7. குழந்தைகளின் கல்விக்காக:
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு அவர்கள் கையில் அருகம்புல் கொடுத்து விநாயகரை வழிபாடு செய்ய சொல்லலாம். பின்னர் குழந்தைகள் படிப்பதற்கு கூடிய பிரச்சனைகள் விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |