திருமணம் கைகூட குலதெய்வமாக வணங்கப்படும் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி

By Sakthi Raj Jun 07, 2024 06:30 AM GMT
Report

வாழ்க்கையில் படித்து வேலைக்கு சென்ற பிறகு அடுத்து கட்டமாக மிக பெரிய விஷயமாக எதிர்பார்ப்புகளோடு இருப்பது திருமணம்.

இது பலருக்கும் தள்ளி போவதை பார்த்திருக்கிறோம்.ஜாதகத்தில் தோஷம் தடைகள் இருப்பது உண்டு.அவர்கள் வணங்கவேண்டியவர் தான் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி.

இங்கு தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அங்கு ஸ்வாமியை சென்று வழிபாடு செய்யும் பொழுது ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.

திருமணம் கைகூட குலதெய்வமாக வணங்கப்படும் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி | Aandarkuppam Kula Deivam Murugan Thirumanam News

இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.

ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள்குல தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை வீடுகளில் நாம் செய்ய கூடாதவை

வெள்ளிக்கிழமை வீடுகளில் நாம் செய்ய கூடாதவை


அவர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லூர், சத்யவேடு, சூலூர் பேட்டை, குண்டூர், நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக குழந்தை வரம் திருமணம் வரன் விரைவில் கூடி வர நாம் அனைவரும் தரிசிப்பது முருகன்.அதில் ஆண்டார் குப்பம் ஸ்வாமியை தரிசித்து வர வரைவில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் மற்றும் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US