வீட்டில் ஐஸ்வர்யம் பெருக செய்யவேண்டிய ஆன்மீக குறிப்புகள்
இந்து மதத்தில் நம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான இறை கடமை ஆகும்.
அதாவது நம் குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம், அமைதி இவை மூன்றும் எந்த ஒரு தடுமாற்றம் இல்லாமல் இருக்க நாம் கட்டாயம் காலை மாலையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டியது அவசியம் ஆகும்.
அப்படியாக, வீடுகளில் எதிற்மறை சக்திகள் சூழாமல் இருக்கவும் ஐஸ்வர்யம் பெருகவும் நம் வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.
தினமும் மறவாமல் வீட்டு வாசலில் கோலம் போடுவது மிக மிக அவசியமானது ஆகும். அதோடு, வெள்ளிக்கிழமை தோறும் பஞ்சு திரியில் மஞ்சள் தடவி காயவைத்து அந்த திரியால் 5 பசு நெய்விளக்கு ஏற்றி வீடுகளில் வைத்தால் லட்சுமி கடாட்ஷம் பெருகும்.
மிக முக்கியமாக நாம் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது பசும்பாலில் நாட்டுச்சக்கரை கலந்து நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்து வருவதும் நமக்கு சிறப்பான பலனைக்கொடுக்கிறது.
வீடுகளில் லட்சுமி பூஜை செய்யும் பொழுது 108 காசுகளால் ஓம் மஹாலக்ஷ்மியை நமஹ என்று அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
முடிந்த வரை வீடுகளில் தினமும் ஓம் என்ற மந்திரத்தையும் லலிதா சஹஸ்ரநாமம் ஒலிக்க செய்து வந்தால் வீடுகளை சுற்றி எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் சூழ்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும்.
குறைந்தது 10 நாட்களுக்கு ஒருமுறையாவது மாவிலை தோரணத்தை நிலை வாசலில் மற்றும் பூஜையறை வாசலில் கட்டுவது சிறந்த பலன் அளிக்கும்.
வீட்டில் அடிக்கடி ஏதேனும் பிரச்சனை என்று சந்தித்து வந்தால் 6 மாதம் ஒருமுறை கணபதி கோமம் நடத்தி வந்தால் வீட்டில் நல்ல மாற்றங்களை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |