கேது சனி சேர்க்கை- மிகவும் மோசமான பலனைப் பெறப்போகும் ராசிகள்

By Sakthi Raj Jun 28, 2025 05:32 AM GMT
Report

வருகின்ற ஜூன் 29 அன்று சனி மற்றும் சந்திரன் சேர்ந்து கிரகண யோகம் உருவாக உள்ளது. அதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான நிலை உருவாகலாம். கேது ஏற்கனவே இங்கே இருப்பதால், செவ்வாயின் காரகத்தால் இந்த யோகம் மேலும் கூடுதல் பலன் பெரும்.

அதோடு சனி மீன ராசியில் இருப்பதால், சந்திரன் மற்றும் கேதுவுடன் ஷடாஷ்டக யோகத்தை உருவாக்க உள்ளார். அப்படியாக, இந்த மாற்றத்தால் எந்த ராசிகள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஹனுமன் மந்திரம்

சனிக்கிழமை காலை சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஹனுமன் மந்திரம்

மேஷம்: 

இவர்கள் இந்த காலக்கட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகள் மற்றும் காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சில தடுமாற்றத்தை சாந்திக்கூடிய காலம் இது. பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

கடகம்:

சந்திரன் கிரகணத்தில் சிக்கிக்கொள்வார். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நன்மை தரும். பணியிடத்தில் தேவை இல்லாத பேச்சுக்களால் வம்பு வழக்கில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும். தண்ணீர் போன்ற விஷயங்களில் கவனம் அவசியம். தாய் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது.

சிம்மம்: 

குடும்பத்தில் பதற்றம் ஆன சூழ்நிலை உருவாகலாம். வியாபாரத்தில் சிலருக்கு பொருளாதார சிக்கல் உண்டாகலாம். கடன் வாங்கினால் சிக்கிக்கொள்ளும் காலம் இது. வழக்கு விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனம் பழுது அடைய வாய்ப்புகள் உள்ளது.

மீனம்:

ஆறாவது வீட்டில் கிரகண யோகம் உருவாகிறது. உடன் பிறந்தவர்களிடம் மிக பெரிய பதற்றமும் பயமும் உண்டாகும். குழந்தைகளால் பிரச்சனை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வாழ்க்கையில் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US